Jump to content

மடிசாய வரம் தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மடிசாய வரம் தா...


ஆண்டைந்து சென்றாலும்
அகலாத நினைவோடு
கண்ணுக்குள் கலையாத
கனவானாய் நிலையாக
எம் அன்புத் தாய் நீயே
எமக்கெல்லாம் வரம் நீயே
உயிரோடு உறவாடும்
உலகெல்லாம் நீதானே
மனசெல்லாம் நிறைந்திட்ட
பிரியாத வரம் நீயே


உடலாலே பிரிந்தாலும்
உணர்வோடு இணைந்தாயே
இணைகின்ற உறவெல்லாம்
இருந்தாலும் தாயே உன்
இதயத்திற் கிணையான
உணர்வாக முடியாதே
நிழலாக நீ நின்றாய்
சிறகின்றித் தவிக்கின்றோம்
பரிவோடு வருடும் உன்
பாசத்தை நினைக்கின்றோம்
இல்லாமை இருந்தாலும்
இயல்பாக எமைத்தாங்கி
சுகமாக அணைக்கின்ற
சுமைதாங்கி நீ அம்மா


எமதன்புத் தாய் இன்றி
இதயத்துள் அழுகின்றோம்
விழிநீரைத் துடைக்கின்ற
விரலின்றித் தவிக்கின்றோம்
அழுதாலும் தொழுதாலும்
ஆறாது எம் காயம்
நாளெல்லாம் உனை எண்ணி
நனைகின்றோம் அன்பாலே
மடிசாய இடமின்றி
மனசெல்லாம் வெளியாகி
துளிகூட பிரிவின்றி உன்
துணையோடு நடக்கின்றோம்
எமக்காக நீ பட்ட
இன்னல்கள் இனி வேண்டாம்
அம்மா எம் மடி சாய்ந்து
அமைதியாய் நீ தூங்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுதான் ....சொத்து சுகங்கள் ஆயிரமிருந்தாலும் தாயின் அன்புக்கும் ஆதரவுக்கும் அரவணைப்புக்கும் ஈடிணையாக எதுவுமேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை அன்னையின் அன்பு ஒன்றே போதும் என்ற கவிஞரின் வரிகள் எத்தனை உண்மை. கவிதையைப் படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் குமாரசாமி மற்றும் பச்சைப்புள்ளியிட்ட அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2017 at 9:11 AM, Kavallur Kanmani said:

மடிசாய வரம் தா...



மடிசாய இடமின்றி
மனசெல்லாம் வெளியாகி
துளிகூட பிரிவின்றி உன்
துணையோடு நடக்கின்றோம்
எமக்காக நீ பட்ட
இன்னல்கள் இனி வேண்டாம்
அம்மா எம் மடி சாய்ந்து
அமைதியாய் நீ தூங்கு!

ஏக்கங்களோடு கேட்டுவிட்டு தாயை தூங்க தாலாட்டும் பாடிவிட்டீர்கள். 10 ஆண்டுகள் எவ்வளவு வேகமாக மறைந்துவிட்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை சகோதரி .... அம்மா என்றதும் அடிவயிற்றிலிருந்து வார்த்தைகள் வருகுது போல .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா ஆண்டைந்து போனது  நீங்கள் ஆண்டுபத்தாக்கி  விட்டீர்கள். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்

மணிவயிற்றில் எமைச் சுமந்த அன்னைக்கு அடிவயிற்றிலிருந்து கவிதை வருவது இயற்கைதானே? உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.5.2017 at 3:11 PM, Kavallur Kanmani said:

மடிசாய வரம் தா...



 


உடலாலே பிரிந்தாலும்
 

உணர்வோடு இணைந்தாயே
 

இணைகின்ற உறவெல்லாம்
 

இருந்தாலும் தாயே உன்
 

இதயத்திற் கிணையான
 

உணர்வாக முடியாதே
 


 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.