Jump to content

மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது?

May-18-1.jpg

அழைத்தாலா வருவாய்
யார் யாரை அழைப்பது
அறியத் தருவாயா
ஊரூராய் பிணக்காடாய்
உன் உறவும் பிணமாக
போனதந்த நாளினிலே
எதுவும் கேட்காதே
புறப்பட்டு வாவென்று
சொல்ல வேண்டுமெனில்
வினாவொன்று இருக்கிறது
நீ தமிழனா!

வெற்றியிலே பங்கேற்று
வீரமுடன் வீறுகொண்டாய்
வீழ்ச்சியிலே யாரென்று
விலகி நிற்பதென்ன
காலத்தின் நகர்வுகளோ
காட்சிகளாய் விரிகிறது
அன்னை மண்ணிருந்து
அழகாய் வளர்ந்தவனே
உன்னை உருவாக்கி
உலகில் வாழவைத்த
அன்னை மண்பட்ட
அவலம் உரைப்பதற்கு
அழைப்பு உனக்கெதற்கு
அழைப்பு வேண்டுமெனில்
வினாவொன்று இருக்கிறது
நீ தமிழனா!
நீ தமிழனா
இல்லை
மனிதனா
மனிதமொன்று
உன்னுள்ளே
மக்காதிருக்கிறதா
மக்காதிருக்குமெனில்
மக்கள் துயருரைக்க
ஒன்றுகூடும் பலரிலே
நானும் ஒருவனென
நிற்கும் உறுதியுடன்
நாளைய தலைமுறைக்கு
நாடுகாணுமுறுதிகொண்டு
வரவேண்டும் திடலுக்கு
ஒற்றிணையும் கரங்களிலே
உன் கரங்கள் இணையட்டும்!

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி

http://www.kuriyeedu.com/?p=68204

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி...
இதே.... ஏக்கத்துடன்,  மே  மாதம் தொழிலாளர் தின ம்  என்ற பதிவிலும் உங்கள் ஏக்கம் இருந்ததை  நினைவில் வைத்துள்ளேன்.
எனது நகரத்தில்... மே தினத்தை, நடத்துபவர்கள், சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று, 
தமிழ்க் கடை,  தமிழ் சலூன் என்று..... சனம்,  தாறு மாறாக... கதைப்பதை,   
காது கொடுத்து கேட்கும்...  எவருக்கும், அப்படியான நிகழ்வுகளில் பங்கெடுப்பதை.... 
தவிர்க்கவே, விரும்புவார்கள் என.. நினைக்கின்றேன்.  

தயவு செய்து... யார், எந்த ஊர்.... என்று கேட்டு என்னை, கேட்க வேண்டாம். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதியற்று நிற்கிறது தமிழினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாதியற்று நிற்கிறது தமிழினம்.

நாதியற்றவர்களாக்கப்பட்டதொன்றும் வேற்றவராலல்ல நம்மவராலேயே. இன்றும் ஒன்றாகநிற்கத் தமிழினம் துணிய மறுப்பதென்ன? யாருக்காக இந்தத்தலைமைகள். யாருக்காக இந்த அமைப்புகள். மக்கள் நலன்விரும்பா எதுவுமே எமக்குத்தேவையில்லை. துடைத்தெறிந்தவிட்டு தமிழினம் தானாக எழும்வரைதான் நாதியற்றதாக இருக்கும். சரியான உறுதிகொண்டு எழுமெனில் கீழ்திசை ஒளிபரவுவதை உலகாலும் தடுக்க முடியாது. ஏனெனில் இநந்த உலகுதான் சொல்கிறது சனனாயக வழியில் உங்கள் உரிமையைக் கோரும் உரிமை எமக்கு இருப்பதாக. ஆனால் நாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.5.2017 at 10:40 PM, தமிழ் சிறி said:

நொச்சி...
இதே.... ஏக்கத்துடன்,  மே  மாதம் தொழிலாளர் தின ம்  என்ற பதிவிலும் உங்கள் ஏக்கம் இருந்ததை  நினைவில் வைத்துள்ளேன்.
எனது நகரத்தில்... மே தினத்தை, நடத்துபவர்கள், சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று, 
தமிழ்க் கடை,  தமிழ் சலூன் என்று..... சனம்,  தாறு மாறாக... கதைப்பதை,   
காது கொடுத்து கேட்கும்...  எவருக்கும், அப்படியான நிகழ்வுகளில் பங்கெடுப்பதை.... 
தவிர்க்கவே, விரும்புவார்கள் என.. நினைக்கின்றேன்.  

தயவு செய்து... யார், எந்த ஊர்.... என்று கேட்டு என்னை, கேட்க வேண்டாம். :)

 

தமிழரது விடுதலைப்போராட்ட நகர்விலே பெரும்பாலான பின்னடைவுகளுக்குக் கரணியமாயிருப்பது இரண்டகமே. 2009வரை ஒருவெளித்தெரியும் தலைமையும் கட்டுப்படுத்தும் சக்திமையமும் கொண்ட வலைப்பின்னலூடான செயற்பாடுகளின்போது தெளிவிருந்தது உண்மை. இன்று அப்படியில்லாத சூழலில் வாழாதிருத்தலென்பதும் பாதிப்பையே தரும். இன்று யாரைநம்மபுவது நம்பாமலிருப்பது என்ற வினா பலரிடம் உள்ளபோதும் முடிந்தவரை தம்மாலானதை செய்கின்ற பலரையும் காணமுடிகிறது. கடை சலூன் போன்றவற்றுக்கு பலதரப்பட்டோரும் வருகின்ற இடமென்ற வகையிலே பலவிதமான கருத்தியலுடையோரின் உரையாடல்கள் நடைபெறுவது இயல்பானதே. நான் வாழுமிடத்திலே உள்ள கடையிலே பொதுவாகவே தேசியத்துக்கெதிரான கூட்டத்தையே காணமுடியும். அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோன்றதே மனித மனங்களின் இயல்பு. உய்தறியும் தன்மை இருந்தாலும் இன்றைய நிலை அதற்கான நிலையைத் தரவில்லை. ஆனால் என்ன செய்வது ஒரு சரியான தலைமையொன்று தோற்றம் பெறும்போதோ அல்லது இப்போதிருக்கும் சக்திகளைமேவியதானதொரு நேர்மையுடையோர் கையாளும் காலம் வரும்போதோதான் உண்மைகளைக்காணமுடியும். அதுவரை நாங்கள் கேள்விச்செவியரே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.