Jump to content

பெப்ரவரி 22


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்ரவரி 22

நாளை மறுதினம் திரைக்கு வருகிறது

நாளை திரைக்கு வருகிறது பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு

பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புத்தம் புதிய திரைப்படம்

தயாரிப்பு : ஜேவிபி

இயக்கம் : ஜாதிக ஹெல உறுமய

இசை : புலம்பெயர் தமிழ் ஊடகங்கள்

ஒளிப்பதிவு : புலம்பெயர் பணியாளர்கள்

புலம்பெயர் தமிழ் மக்கள் நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்கும் புதுமையான திரைச் சித்திரம்

பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு

பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பிக்கின்ற நடு இரவு 12 மணிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களுக்கு முன்னால் கண் கொட்ட முழித்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற உணர்ச்சிமயமான காட்சி மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழுபவர்கள் அமெரிக்க நேரம் இரவு 12 மணிக்கும், ஐரோப்பாவில் வாழ்பவர்கள் ஐரோப்பிய நேரம் இரவு 12 மணிக்கும், அவுஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் அவுஸ்திரேலிய நேரம் இரவு 12 மணிக்கும் முழித்திருந்து பார்க்கின்ற நகைச்சுவைக் காட்சிகளும் உண்டு.

காணத் தவறாதீர்கள்

"பெப்ரவரி 22"

முக்கிய குறிப்பு: "பெப்ரவரி 22" திரைப்படம் முடிந்த அடுத்த நாளே புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும். அந்த திரைப்படத்திற்கும் ஒரு திகதியின் பெயரே (உதாரணம் : "ஏப்ரல் 1") வைக்கப்படும்.

தகவல்

donation: Sabeshan from webeelam.com :rolleyes:

Link to comment
Share on other sites

இந்த பெப்பிரவரி 22 சமாச்சாரம் பற்றி அதிகம் ஆத்திரப் படு முன்னர் ஒரு அடிப்படை உண்மையினை நாம் உணர வேண்டும். அதாகப்பட்டது:

தொழில் நுட்ப வழர்ச்சியினால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்று அறிவு சார் சமூகக் கட்டமைப்பின் மறைவு. அதாவது இன்னார் இன்னார் தான் இன்னின்னவற்றை இந்த இந்தத் தகைமைகளின் அடிப்படையில் செய்தல் என இருந்து வந்த வரையறையின் மறைவு. முன்னர் எல்லாம் வைத்தியர்கள் தான் ஒரு நோயின் குணாம்சங்களை வைத்து அது இன்னதாக இருக்கும் என முடிவு செய்வார்கள். நோயாளர்கள் தாங்களாகவே தங்களின் உடல்நிலையை ஆராயத் தயக்கங் காட்டினார்கள். ஆனால் இன்று மிகப் பெரும்பான்மையானவர் மனங்களில் வைத்தியரின் நினைவு வருவதற்கு முன்பு ||கூகுள்|| தான் நினைவில் வரும். தமது உடல் ரீதியான அசௌகரியங்கள் என்ன வருத்தத்தின் குணங்குறியாக இருக்கும் என்று ||கூகுளில்|| தாமாகவே ஆராய்ந்த பின்னர், அந்த ஆராய்ச்சியை ஒரு பிரதி எடுத்து அதையும் தம்மோடு கொண்டு தான் பலர் இன்று வைத்தியரின் அறைக்குச் செல்கினறார்கள். அங்கு வைத்தியரை சில சமயங்களில், தமது கத்துக்குட்டி ஆராய்ச்சியின் அடிப்படையில் விவாதத்திற்கும் இளுக்கினறார்கள்;. அது போலத் தான் வீட்டு இலத்திரனியல் உபகரணங்களைப் பழுது பார்ப்பதாயினும் சரி இதர பல விடயங்களாயினும சரி.

எனினும் பல துறைகளில் மேற்படி ஆரம்ப விசாரிப்புக்களை அடுத்து பலர் துறைசார் வல்லுனர்களின் சேவையினை நாடுகின்றார்கள்;. ஆனால் புலம் பெயர் தமிழ் ஊடகத்துறை மட்டும் இதற்கு விதி விலக்கானதாயும் பயங்கரமானதாயும் அமைகின்றது.

ஊடகத்தைப் பொறுத்த வரை, பல அடிமுட்டாள்கள் கூடத் தங்களைச் சிந்தனையாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் தமக்குத்தாமே வரித்துக் கொள்வது மட்டுமன்றி இதர முட்டாள்களையும் முட்டாள்த் தனமாய் வழி நடாத்துகின்றார்கள். இன்றைய புலம் பெயர் நாடுகளின் தமிழ் ஊடகத்துறையானது 99.9999 வீதம் அடிமுட்டாள்களின் தர்பாராகவே விளங்குகின்றது.

முன்னரெல்லாம் முட்டாள்கள் அறிவாளிகளின் ஆலொசனைகளைப் பெற்று அதனால் சற்றேனும் மேம்பட வாய்ப்பிருந்தது. ஆனால் தற்போது முட்டாள்கள் தங்களைத் ஜாம்பவான்கள் என தமக்குத் தாமே நினைத்துக் கொள்வதாலும் தங்களில் திருந்துவதற்கு இடமே இல்லை என நினைத்துக் கொள்வதனாலும் இவர்கள் முட்டாள்களாக வாழ்ந்து முட்டாள்களாகவே இறப்பதற்கான சாத்தியங்கள் தான் அதிகம் காணப் படுகின்றது

புலம்பெயர் தமிழ் சமூகத்தில் அதிகரித்த அளவில் அறிஞர்கள் மற்றும் கற்றவர்கள் தங்களை இந்த முட்டாள் குளாத்தில் இருந்து விலத்தி வாழ்ந்து வருவதனால் முட்டாள் ராச்சியம் இப்போதைக்குத் இவ்வாறு தான் இருக்கும்.

எனவே பெப்பிரவரி 22 சமாச்சாரம் மட்டுமல்ல இது போன்று இவர்கள் கூறும் இன்னோரன்ன விடயங்களையும் ஒரு வேடிக்கை விநோத பொழுதுபோக்காக மட்டும் மற்றவர்கள் பார்க்கப் பழகிக் கொள்ளுதல் உடல் நலத்திற்கு அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.