Jump to content

செய்தி இணைப்பவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்தால் என்ன..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும்  உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை..  நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும்  கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும்.

நிர்வாகம்.. இதற்கான சாத்தியப்பாட்டை பரிசீலிக்கலாமே.. சாத்தியம் என்றால். 

நன்றி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே சாரம்சம் உள்ள செய்தியை பல ஊடகங்கள் பலவிதமாக  தமது கவர்ச்சிக்காக பலகோணத்தில் எழுதி வெளியிடுவார்கள். அதையும் மீள மீள இணைப்பதாலும் வாசிப்பவர்களுக்கு  சலிப்பையும் தருகின்றது.....
ஏதோ எழுத்துப்பிழை கண்டுபிடிக்கும் போட்டிபோல் இருக்கின்றது.:grin:

Link to comment
Share on other sites

ஒரு திரியை இன்னொரு பகுதிக்கு நகர்த்துவதும், ஏற்கனவே இணைக்கப்பட்ட திரியில் ஒட்டுவதும் மட்டுறுத்தல்களிற்கு உரிய அனுமதிகள்.  ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் மட்டுறுத்தல் செய்ய அனுமதிக்கும் முறைகள் இங்கு (மென்பொருளில்) இல்லை.  ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மட்டுறுத்த ஒருவரை அனுமதிக்கும் போது அப் பகுதிக்கான அனைத்து மட்டுறுத்தல்களுக்கான அனுமதியையும் வழங்க வேண்டி வரும். இது நீண்ட கால அளவில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் இதை தவிர்க்க விரும்புகின்றோம்.

--------------------------------------------------

செய்திகளை இணைப்பவர்கள் தாம் இணைக்கும் செய்தி தொடர்பான செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என ஒரு முறை பார்த்து இணைத்தால் ஒரே செய்தி பல திரிகளில் இணைப்பது நிகழாது. உதாரணத்துக்கு ஊர்ப்புதினத்தை சேர்ந்த ஒரு செய்தியை இணைக்கும் போது அது தொடர்பாக ஏற்கனவே ஒரு திரி உள்ளதா என ஊர்ப்புதினப் பகுதியில் பார்த்து விட்டு இணைக்க வேண்டும். இதற்கு ஒரு சில நிமிடங்கள் தான் செலவழிக்க வேண்டி இருக்கும். அதே போன்று செய்தி தொடர்பான நிகழ்வு நடந்து சில மணி நேரம் கழித்து ஒருவர் செய்தியை இணைக்கும் போது அது தொடர்பான ஒரு திரி ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. அப்படி ஊகித்து அதற்கான திரியில் இணைக்கும் போது இப் பிரச்சனைகள் எழாது..

எல்லாருக்கும் நேரப்பிரச்சனை இருப்பது போலத்தான் செய்திகளை இணைப்பவர்களுக்கும் இருக்கின்றது. தமக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் தம்மால் முடிந்த அளவுக்கு செய்திகளை இணைக்கின்றனர். தம் நேரத்தையும் சொந்த வளங்களையும் பயன்படுத்தி எந்த பிரதிகூலத்தினையும் எதிர்பாராமல் யாழுக்காக செய்கின்றனர். அப்படி செய்யும் போது ஒரே செய்தியை ஏற்கனவே இணைத்து உள்ளதா என பார்க்கும் அவகாசம் சில நேரங்களில் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. அப்படியான நேரங்களில் ஒரே செய்தி வெவ்வேறு திரிகளில் காவப்படுகின்றது. நிர்வாகத்தில் உள்ள நாம் முடிந்தளவுக்கு இவற்றை ஒன்றாக இணைத்து வருகின்றோம். சில நேரங்களில் இப்படியான திரிகளை பல மணி நேரத்தின் பின் கண்ணுற்றோம் எனில் அதை ஒன்றாக்குவதை விட அப்படியே விடுவதே உசிதம் என கருதி அதை அப்படியே விட்டும் விடுகின்றோம்.

கள உறவுகளும் ஒரே செய்தி இன்னொரு திரியில் இணைக்கப்பட்டதை கண்ணுற்றால் report செய்து எமக்கு அறியத்தந்தால் இவ் விடயத்தில் இன்னும் மெருகேற்றிய விளைவுகளை காண முடியும்.

 

 

Link to comment
Share on other sites

இங்கு பிரச்சினை என்னவென்றால் ஒரு செய்தி இணைக்கபட்டு இருக்கும் அதற்க்கு ஒரு சிலர் கருத்துக்கள் வைத்திருப்பார்கள் திடிரென்று பார்த்தால் அதே செய்தி வேறு வேறு தமிழ் தளங்களில் இருந்து ஒரே நபரால் இணைக்கபட்டு இருக்கும் அதுவும் சில தளங்கள் குறிக்கபட்ட செய்திக்கு கூடுதல் சார்பு நிலையை எடுத்து போட்டுருக்கும் இப்படி அண்மைய யாழின் ஆக்கபூர்வமான திரிகள் இடையில் நின்று இருப்பதை காணலாம் அப்படி இணைப்பது பிழை என்று சொல்லவில்லை திரி கருத்தாடல் தொடங்கியபின் அப்படி ஒன்று இரண்டை இணைத்தால் பரவாயில்லை சில சமயம் ஐந்து ஆறு இணைய இணைப்புகளும் காணப்படுது இது படிப்பவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் விடயம் என்பது என் தாழ்மையான கருத்து நிர்வாகம் கருத்தில் எடுக்குமா ?

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19.5.2017 at 11:13 AM, spyder12uk said:

இங்கு பிரச்சினை என்னவென்றால் ஒரு செய்தி இணைக்கபட்டு இருக்கும் அதற்க்கு ஒரு சிலர் கருத்துக்கள் வைத்திருப்பார்கள் திடிரென்று பார்த்தால் அதே செய்தி வேறு வேறு தமிழ் தளங்களில் இருந்து ஒரே நபரால் இணைக்கபட்டு இருக்கும் அதுவும் சில தளங்கள் குறிக்கபட்ட செய்திக்கு கூடுதல் சார்பு நிலையை எடுத்து போட்டுருக்கும் இப்படி அண்மைய யாழின் ஆக்கபூர்வமான திரிகள் இடையில் நின்று இருப்பதை காணலாம் அப்படி இணைப்பது பிழை என்று சொல்லவில்லை திரி கருத்தாடல் தொடங்கியபின் அப்படி ஒன்று இரண்டை இணைத்தால் பரவாயில்லை சில சமயம் ஐந்து ஆறு இணைய இணைப்புகளும் காணப்படுது இது படிப்பவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் விடயம் என்பது என் தாழ்மையான கருத்து நிர்வாகம் கருத்தில் எடுக்குமா ?

செய்திகளும் கருத்துகளும்.................

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு,

யாழ்களத்திலே செய்தி,இணைக்கும் விதத்திலே ஒருமாற்றமொன்றைக் கொண்டுவருவது நன்றென எண்ணுகின்றேன். ஒருதலைப்பிலான செய்திகளை ஒரேதிரியில் இணைப்பது ஓரளவு நகர்கின்றபோதும்,  ஒரு செய்திக்குக் கருத்தெழுதியபின்னர்  அதேசெய்தியை வேறொரு தளத்திலிருந்து, வேறொரு வடிவில்  இணைக்கும்போது   எழுதியவரும் வாசகருமாக அடுத்து என்ன கருத்தெனப்பார்க்கும் நோக்கிலே நுளையும்போது ஏமாற்றமே மிஞ்சும். இதுகூட வாசகனைச் சற்றுத் தள்ளிச்செல்ல உந்தலாம். எனவே: 
1. கருத்துகளிற்கு முன்பாக, அதாவது செய்திகள் தொடர்ச்சியாக இருக்கும் வகையிலே அமைக்க முடியுமாயின் நன்று. இது  தொழில் நுட்பரீதியில் சாத்தியமில்லாதுவிடில்
2.கருத்தெழுதியபின்னர் செய்தியை இணைக்காது அதனது மூல இணைப்பை மட்டும் கொடுத்தவிடலாம். முதல் செய்தியை இணைத்தவரே அடுத்த செய்தியையும் இணைக்க வருபராயின்(Edit)  தொகுப்புச்சுட்டியூடாக நுளைந்து தொடராக இணைத்துவிடுதல் நல்லதென்பது எனது கருத்தாகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.