Jump to content

வைகாசி 18. ....?


Recommended Posts

வைகாசி 18.......?

எங்கள் முகவரியை  முற்றாக 

தொலைத்த நாள். 

அகத்தினிலே  தீராத வலியை 

புதைத்த நாள். 

யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை 

இழந்த நாள். 

வைகாசி  காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல்  கண்ணீர் 

விட்டநாள்.......

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2017 at 9:27 AM, yakavi said:

வைகாசி 18.......?

எங்கள் முகவரியை  முற்றாக 

தொலைத்த நாள். 

அகத்தினிலே  தீராத வலியை 

புதைத்த நாள். 

யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை 

இழந்த நாள். 

வைகாசி  காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல்  கண்ணீர் 

விட்டநாள்.......

 

 

 

எங்கள் முகவரிகளை இழப்புகள் விழுங்கிவிடமுடியாது யாகவி விழி சொரிந்தோம். விழுந்தோம்.. எதிர்காலத்தின் வழிகள் இருள் சூழ நகரும் திசை அறியாது உறைந்தோம் என்பது உண்மை. சொந்த நிலத்தை இழந்ததென்று முற்றுமுழுதாக முடிவெடுத்துவிடல் ஆகாது. வலிகளின் முகவரிகளோடு நாளைகள் நோக்கி நகர்கிறது இன்றைய பொழுது இது கண்களுக்குப் புலப்படாது. முயல் போல வேகமில்லாவிடினும் நத்தையைப்போல, ஆமையைப்போல..... காத்திரமான பயணத்தினூடாக இனத்தின் வாழ்வு நிமிரும். 

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா. 

நீங்கள் கூறியதுஉண்மைதான் .

ஆனாலும் நாங்கள் அந்த நாளிலேயே பட்ட வேதனைகள் 

தான் கவிதையாய்  வந்தது. 

எனது கவிதையை உற்றுநோக்கியதற்தகு நன்றி. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி 18 ஒரு நல்ல கவிதை அல்லது செய்தி.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.5.2017 at 3:27 PM, yakavi said:

வைகாசி  காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல்  கண்ணீர் 

விட்டநாள்.......

எம்மால் பெருமூச்சைக்கூட விட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளையும், மாடுகளையும்...,

அந்திவேளையில் சாய்ப்பது போல...,

மீள இயலாத...,

மரணப் படுகுழிக்குள்...,

எமை அழைத்துச் சென்ற நாள்!

 

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

வைகாசி 18 ஒரு நல்ல கவிதை அல்லது செய்தி.....!  

நீங்கள் கூறுவது புரியவில்லை. 

6 hours ago, குமாரசாமி said:

எம்மால் பெருமூச்சைக்கூட விட முடியவில்லை.

எங்கே மூச்சை விடுவது அந்த நேரத்தில் நாம் ஒரு ஐடப்பொருள் 

ஆகிவிட்டோம். 

உங்களுக்கு எனது நன்றி. 

Link to comment
Share on other sites

4 hours ago, புங்கையூரன் said:

ஆடுகளையும், மாடுகளையும்...,

அந்திவேளையில் சாய்ப்பது போல...,

மீள இயலாத...,

மரணப் படுகுழிக்குள்...,

எமை அழைத்துச் சென்ற நாள்!

 

ஆடு  மாடுகள்  கூட அந்திவேளையில் தமது வயிற்றை 

நிரப்பி கொண்டு நிம்மதியாக செல்லும். நாம் அப்படியா அந்த இடத்தை விட்டு வந்தோம். ஒரு கனம் நினைத்து பாருங்கள். 

உங்களுக்கு எனது நன்றி. ..

9 hours ago, suvy said:

வைகாசி 18 ஒரு நல்ல கவிதை அல்லது செய்தி.....!  

உங்களுக்கு எனது நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, yakavi said:

நீங்கள் கூறுவது புரியவில்லை. 

 

நீங்கள் ஒரு சிறு கவிதை மூலம் கனத்த செய்தியை சொல்லிவிட்டீர்கள் என்று சொன்னேன்....!

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நீங்கள் ஒரு சிறு கவிதை மூலம் கனத்த செய்தியை சொல்லிவிட்டீர்கள் என்று சொன்னேன்....!

புரிந்து விட்டது உங்கள் கருத்து. 

நன்றி நன்றி. .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.