Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.


  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

வணக்கம் எல்லோருக்கும் நலமா?

சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்னாள் காதல்கள் பின்னால் காதல்கள் என்றால் அப்புறம் ஏனாம் திருமணம் முடிச்சு இன்னொருவரை ஏமாற்ற வேணும். கேள்வியின் அடிப்படையே கேள்விக்குறியா நிற்குதே..??!

திருமணத்தின் முன்னாள் உள்ளக் காதல்களைச் சொல்லினமோ இல்லையோ மன தளவில் மாறாத வடுக்களோடு திருமணம் என்ற போர்வையில் இன்னொருவரை ஏமாற்றினம் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. அல்லது மாறி மாறி ஏமாற்றினம் என்பது உண்மை. போலி மனிதர்கள்..! உறுதியற்ற இலட்சியமற்ற சுயநல மனிதர்கள். இவர்களுக்காக வாக்களிக்கும் எண்ணம் நமக்கில்லை. :P :icon_idea:

Link to comment
Share on other sites

நான் சொல்லுவன்....காதல் தோல்வியென்று எதைச் சொல்கிறீர்களென்றதைப் பொறுத்திருக்கு ரசி அக்கா. நமக்கந்த காதல் சரிவராதென்று இருவரும் பேசி முடிவெடுத்து விட்டு சில-பல வருடங்களுக்குப்பிறகு திருமணவாழ்க்கையில் இணையும்போது முன்பு எனக்கு ஒருவர் மீது காதல் இருந்தது ஆனால் எங்களுக்கே அது ஒத்து வராமல் பேசி இருவரும் எங்கட அலுவல்களைப் பார்க்கப் போயிட்டம் என்றுண்மையைச் சொல்வதில் எனக்கெந்த மாறுகருத்துமில்லை.

நெடுக்கால போறவர் என்ன சொல்றீங்கள்?? முதல்காதல்ல நிலைச்சு நிற்காதவர்கள் எல்லாம் உறுதியில்லாதவர்கள் அவர்களெல்லாம் கல்யாணமே பண்ணிக்கக்கூடாதெண்றா நினைக்கிறீங்கள்?

ரசி அக்கா இப்ப நீங்கள் காதலிக்கிறீங்கிளா இல்லாட்டிக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கிளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய கருத்து என்ன என்றால் கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஆனால் அதை சொல்ல வேண்டிய நேரத்தில், பார்த்து சொல்ல வேண்டும். அவசரப்பட்டு, அலட்டிக்கவும் கூடாது, இழுத்தடிச்சு கோபமூட்டவும் கூடாது. உண்மையை சொல்லும் போது ஏமாற்றுகின்றோமே என்ற எண்ணம் வருவதையும், எதிர்தரப்பில், ஏமாற்றப்படுகின்றோமே என்ற என்னம் வருவதையும் தவிர்த்து கொள்ளலாம். ஆனால் இவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்கும் என்பது பலருக்கு இருப்பதில்லை.

நெடுக்கால போவான் சொல்வதை கேட்டால் சத்தியமாய் உலகத்தில் நூற்றுக்கு 99 விகிதத்தினருக்கு திருமணம் என்பது நடக்க சந்தர்ப்பமே இல்லை. ஏமாற்றம் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விடையமே ஒழிய, விவாதத்துக்குள் எடுக்க முடியாதவை. நீங்கள் சொல்வது போல வைத்து கொண்டால், உங்கள் மீது ஒருவருக்கு காதல், என்று வைத்து கொள்வோம், அவரை உங்களுக்கு பிடிக்க வில்லை. அவர் தொடர்ந்து சன்னியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியான சிநத்தனைகளை பண்டைய பாலத்தில் இருந்திருக்கலாம், மறுமணம் செய்ய சொல்லி தூண்டும் இந்த காலத்தில் உங்கள் விவாதமும் கருத்தும் நகைப்புக்கும், நடைமுறைக்கு ஒத்துவராததுமாகும்

Link to comment
Share on other sites

நான் முன்பு வாசித்த கதை ஒன்று யாபகத்துக்கு வருகிறது. திருமணம் முடிந்தபின்பு சில நாட்களின் பின்பு மனைவி கணவரைப் பார்த்து ' நீங்கள் கல்யாணத்துக்கு முன்பு யாரையும் காதலித்தீர்களா? ' என்று கேட்க அதற்கு கணவர் முன்பு பல பெண்களைக் காதலித்ததினை மனைவிக்குச் சொன்னால் திட்டு வாங்க வேண்டி வரும் என்பதனால் 'இல்லை' என்று பதில் சொன்னார். பிறகு மனைவி கணவரிடம்' உங்களை யாரும் காதலித்தார்களா?' என்று கேக்க கணவர் தன்னை விரும்பிய பெண்களின் பெயரைச் சொன்னால் மனைவி கோபப்பட்டாலும் படுவா என்று நினைத்து 'இல்லை' என்று சொல்ல , அதற்கு மனைவி 'ஒருதரும் விரும்பாத உங்களை போயும் போயும் நான் கட்டினே, என்னால தான் உங்களுக்கு வாழ்க்கை கிடைச்சது' என்று சொன்னார். பிறகு கோபப் படும் போது அடிக்கடி 'என்னாலதான் உங்களுக்கு வாழ்க்கை கிடைத்தது' என்று சொல்லி திட்டுவா.

Link to comment
Share on other sites

ஹா ஹா அரவிந்தன் இது நீங்கள் வாசிச்ச கதைதானே :-)

நிதர்சன் 75 வீதமென்றது குறைவு போல இருக்கு...காதலென்றில்லை குறைந்தது ஒரு ஈர்ப்பாவது 99 வீதமானவர்களுக்கு இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கணவர்/மனைவியின் குணத்தினைப் பொருத்து சொல்ல வேண்டும். கணவர் மனைவிக்கு இடையில் ஒன்றையும் மறைக்கக்கூடாது தான் ஆனால் ஒரு குடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவரிடம் எப்படி தனது முந்தைய காதலை மனைவி சொல்லமுடியும்?. எதுக்கெடுத்தாலும் சந்தெக்கிக்கும் கணவர்/மனைவி யிடம் எப்படி சொல்ல முடியும்?.

சிலருக்கு சொல்லாவிட்டாலும் அடி விழும். சொன்னால் கூடுதலான அடி விழும்

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும் நலமா?

சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சில்லுன்னு ஒரு காதல்" யாருக்கும் ஞாபகம் வரேல்லத்தானே :-)

நெஞ்சில் ஒர் ஆலயம் தான் யாபகத்துக்கு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அந்தப்படம் நான் பார்க்கேல்லயே...அதில என்ன சிறப்பு?

அந்தப்படத்தில் தான் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பாடல் இருக்கிறது

Link to comment
Share on other sites

எங்களிடம் கேட்பதன் முன் ரசிகை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் உள்ள உங்கள் காதலை உங்கள் வருங்காலக் கணவருக்கு ரசிகை நீங்கள் சொல்வீர்களா? அவரிடமும் அவர் யாரையாவது காதலிதுள்ளாரா என்று கேட்பீர்களா?

ஓட்டெடுப்பு முடிவுகளை பார்த்தேன். ஒருவரும் சொல்லமாட்டேன் எனும் தெரிவிற்கு ஓட்டு போடவில்லை. யாழ் களத்தில் நான் ஒருவனாவது உண்மை பேச ஆசைப்படுகின்றேன். இதனால் சொல்லமாட்டேன் எனும் தெரிவுக்கு அடியேன் ஓட்டுப் போட்டு உள்ளேன்.

வாழ்க்கையில் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறோம்,இந்த நிலையில் தங்கைக்கு ஒரு கீதம் படத்தில் நளினி தனது போலிஸ்காரன் கணவன் சிவகுமாருக்கு தனது காதல் பிரச்சனைகளை கூறி பின் கஸ்டப்பட்டது போல் நம்மால் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.

எம்மிடம் திருமணத்திற்கு பின் மனுசி இந்தக் கேள்வியை கேட்டால் இப்படித்தான் சமாளிப்போம்: "சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

Link to comment
Share on other sites

ஓட்டெடுப்பு முடிவுகளை பார்த்தேன். ஒருவரும் சொல்லமாட்டேன் எனும் தெரிவிற்கு ஓட்டு போடவில்லை. யாழ் களத்தில் நான் ஒருவனாவது உண்மை பேச ஆசைப்படுகின்றேன். இதனால் சொல்லமாட்டேன் எனும் தெரிவுக்கு அடியேன் ஓட்டுப் போட்டு உள்ளேன்.

நீங்கள் உண்மை பேசுவதாக யாரால் உறுதிப்படுத்த முடியும். அனைவரும் தங்கள் தங்கள் முடிவை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் நீங்கள் மட்டும்தான் உண்மை கூறுவதாக எப்படி நம்ப முடியும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

எப்படி உங்களுக்கு தைரியம் வரும்?

Link to comment
Share on other sites

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

Link to comment
Share on other sites

நீங்கள் உண்மை பேசுவதாக யாரால் உறுதிப்படுத்த முடியும். அனைவரும் தங்கள் தங்கள் முடிவை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் நீங்கள் மட்டும்தான் உண்மை கூறுவதாக எப்படி நம்ப முடியும். :icon_idea:

நான் உண்மை பேசியுள்ளேனா என்பதை கண்டுபிடிப்பதற்கு நான் திருமணம் முடிக்கும் வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும். :D

கருத்துக் கணிப்பில் ரசிகை ஒரு தவறு செய்துள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அவர் இவ்வாறு கேள்வியை கேட்டிருக்க வேண்டும்:

ஒருவரை நீங்கள் காதலிக்கும் போது உங்களிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள விடயத்தை உங்கள் காதலருக்கு சொல்வீர்களா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்: "சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

கொஞ்சம் நாடடிபட்ட மனைவி என்றா, அதை திருப்பி சொல்லி இங்க வந்தும் அந்த பட்டிக்காட்டு கதை மாறவில்லையோ என்று கேட்டிடுவா, எதுக்கும் கதைக்கும் போது கவனம், இங்கு பலர் ஊருக்கு போய் திருமணம் செய்வார்கள் நீங்கள் அந்த வகை என்றால் தப்பித்துக்கொள்வீர்கள் ஆனாலும் சில மாதங்களுக்கு தான் அந்த அமைதியும்....

Link to comment
Share on other sites

கொஞ்சம் நாடடிபட்ட மனைவி என்றா, அதை திருப்பி சொல்லி இங்க வந்தும் அந்த பட்டிக்காட்டு கதை மாறவில்லையோ என்று கேட்டிடும் எதுக்கும் கதைக்கும் போது கவனம், இங்கு பலர் ஊருக்கு போய் திருமணம் செய்வார்கள் நீங்கள் அந்த வகை என்றால் தப்பித்துக்கொள்வீர்கள் ஆனாலும் சில மாதங்களுக்கு தான் அந்த அமைதியும்....

ஊருக்குப் போய்த் திருமணம் செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் நாட்டில் செய்யும் திருவிளையாடல்கள் தெரியவராது என்னும் நினைப்பிருந்தால் அதை மாற்றிவிடுங்கோ. இப்போதெல்லாம் ஊரில் இருந்து வருபவர்கள் தான் விபரமா வருகிறார்கள் :P

Link to comment
Share on other sites

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!

Link to comment
Share on other sites

எப்படி உங்களுக்கு தைரியம் வரும்?

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது! :icon_idea::D:D

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நீங்கள் மட்டும் பையங்களுடன் டீ போட்டு கதைப்பீங்களாக்கும்! அஜித், விஜய், தனுஷ் டீ போட்டு கதைத்தால் நன்றாக ரசித்து பார்ப்பீங்களாக்கும்! நாம மட்டும் டீ போட்டு கதைக்கக்கூடாதாக்கும்! :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நான் நல்லாய் இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?

மாப்பிள்ளையைப் பார்த்துக் கதைத்தால்.. அய்யோ சாமி

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது! :icon_idea::D:D

நீங்கள் இன்னும் திருமணம் முடிக்கவில்லை போல் இருக்குது. எந்த வீரனும் கல்யாணத்தின் பின்பு யானையாக இருந்து பூனையாக மாறுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது!

இவர்கள் எல்லாம் பரவாயில்லை. களத்தில் முகத்தார் என்று ஒருவர் இருந்தார். ( இப்பவும் இருக்கின்றார்.தாயகத்தில் எண்டதால் முன்பு போல வருவதில்லை) அவரைப் பார்த்தபின், முடிச்சுக்கட்டிக் கொண்டு காசிக்குப் போவியள். அவரின் வாழ்வு, அப்படி ஒரு பயந்த வாழ்க்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் பரவாயில்லை. களத்தில் முகத்தார் என்று ஒருவர் இருந்தார். ( இப்பவும் இருக்கின்றார்.தாயகத்தில் எண்டதால் முன்பு போல வருவதில்லை) அவரைப் பார்த்தபின், முடிச்சுக்கட்டிக் கொண்டு காசிக்குப் போவியள். அவரின் வாழ்வு, அப்படி ஒரு பயந்த வாழ்க்கை .

ஒருவேளை முகத்தார் மனைவிக்குப் பயந்துதான் யாழுக்கு வருவதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் சொல்லி ஏன் டைம் யை வேஸ்ட் பண்ணனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.