Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.


  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

வணக்கம் எல்லோருக்கும் நலமா?

சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்னாள் காதல்கள் பின்னால் காதல்கள் என்றால் அப்புறம் ஏனாம் திருமணம் முடிச்சு இன்னொருவரை ஏமாற்ற வேணும். கேள்வியின் அடிப்படையே கேள்விக்குறியா நிற்குதே..??!

திருமணத்தின் முன்னாள் உள்ளக் காதல்களைச் சொல்லினமோ இல்லையோ மன தளவில் மாறாத வடுக்களோடு திருமணம் என்ற போர்வையில் இன்னொருவரை ஏமாற்றினம் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. அல்லது மாறி மாறி ஏமாற்றினம் என்பது உண்மை. போலி மனிதர்கள்..! உறுதியற்ற இலட்சியமற்ற சுயநல மனிதர்கள். இவர்களுக்காக வாக்களிக்கும் எண்ணம் நமக்கில்லை. :P :icon_idea:

Link to comment
Share on other sites

நான் சொல்லுவன்....காதல் தோல்வியென்று எதைச் சொல்கிறீர்களென்றதைப் பொறுத்திருக்கு ரசி அக்கா. நமக்கந்த காதல் சரிவராதென்று இருவரும் பேசி முடிவெடுத்து விட்டு சில-பல வருடங்களுக்குப்பிறகு திருமணவாழ்க்கையில் இணையும்போது முன்பு எனக்கு ஒருவர் மீது காதல் இருந்தது ஆனால் எங்களுக்கே அது ஒத்து வராமல் பேசி இருவரும் எங்கட அலுவல்களைப் பார்க்கப் போயிட்டம் என்றுண்மையைச் சொல்வதில் எனக்கெந்த மாறுகருத்துமில்லை.

நெடுக்கால போறவர் என்ன சொல்றீங்கள்?? முதல்காதல்ல நிலைச்சு நிற்காதவர்கள் எல்லாம் உறுதியில்லாதவர்கள் அவர்களெல்லாம் கல்யாணமே பண்ணிக்கக்கூடாதெண்றா நினைக்கிறீங்கள்?

ரசி அக்கா இப்ப நீங்கள் காதலிக்கிறீங்கிளா இல்லாட்டிக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கிளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய கருத்து என்ன என்றால் கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஆனால் அதை சொல்ல வேண்டிய நேரத்தில், பார்த்து சொல்ல வேண்டும். அவசரப்பட்டு, அலட்டிக்கவும் கூடாது, இழுத்தடிச்சு கோபமூட்டவும் கூடாது. உண்மையை சொல்லும் போது ஏமாற்றுகின்றோமே என்ற எண்ணம் வருவதையும், எதிர்தரப்பில், ஏமாற்றப்படுகின்றோமே என்ற என்னம் வருவதையும் தவிர்த்து கொள்ளலாம். ஆனால் இவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்கும் என்பது பலருக்கு இருப்பதில்லை.

நெடுக்கால போவான் சொல்வதை கேட்டால் சத்தியமாய் உலகத்தில் நூற்றுக்கு 99 விகிதத்தினருக்கு திருமணம் என்பது நடக்க சந்தர்ப்பமே இல்லை. ஏமாற்றம் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விடையமே ஒழிய, விவாதத்துக்குள் எடுக்க முடியாதவை. நீங்கள் சொல்வது போல வைத்து கொண்டால், உங்கள் மீது ஒருவருக்கு காதல், என்று வைத்து கொள்வோம், அவரை உங்களுக்கு பிடிக்க வில்லை. அவர் தொடர்ந்து சன்னியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியான சிநத்தனைகளை பண்டைய பாலத்தில் இருந்திருக்கலாம், மறுமணம் செய்ய சொல்லி தூண்டும் இந்த காலத்தில் உங்கள் விவாதமும் கருத்தும் நகைப்புக்கும், நடைமுறைக்கு ஒத்துவராததுமாகும்

Link to comment
Share on other sites

நான் முன்பு வாசித்த கதை ஒன்று யாபகத்துக்கு வருகிறது. திருமணம் முடிந்தபின்பு சில நாட்களின் பின்பு மனைவி கணவரைப் பார்த்து ' நீங்கள் கல்யாணத்துக்கு முன்பு யாரையும் காதலித்தீர்களா? ' என்று கேட்க அதற்கு கணவர் முன்பு பல பெண்களைக் காதலித்ததினை மனைவிக்குச் சொன்னால் திட்டு வாங்க வேண்டி வரும் என்பதனால் 'இல்லை' என்று பதில் சொன்னார். பிறகு மனைவி கணவரிடம்' உங்களை யாரும் காதலித்தார்களா?' என்று கேக்க கணவர் தன்னை விரும்பிய பெண்களின் பெயரைச் சொன்னால் மனைவி கோபப்பட்டாலும் படுவா என்று நினைத்து 'இல்லை' என்று சொல்ல , அதற்கு மனைவி 'ஒருதரும் விரும்பாத உங்களை போயும் போயும் நான் கட்டினே, என்னால தான் உங்களுக்கு வாழ்க்கை கிடைச்சது' என்று சொன்னார். பிறகு கோபப் படும் போது அடிக்கடி 'என்னாலதான் உங்களுக்கு வாழ்க்கை கிடைத்தது' என்று சொல்லி திட்டுவா.

Link to comment
Share on other sites

ஹா ஹா அரவிந்தன் இது நீங்கள் வாசிச்ச கதைதானே :-)

நிதர்சன் 75 வீதமென்றது குறைவு போல இருக்கு...காதலென்றில்லை குறைந்தது ஒரு ஈர்ப்பாவது 99 வீதமானவர்களுக்கு இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கணவர்/மனைவியின் குணத்தினைப் பொருத்து சொல்ல வேண்டும். கணவர் மனைவிக்கு இடையில் ஒன்றையும் மறைக்கக்கூடாது தான் ஆனால் ஒரு குடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவரிடம் எப்படி தனது முந்தைய காதலை மனைவி சொல்லமுடியும்?. எதுக்கெடுத்தாலும் சந்தெக்கிக்கும் கணவர்/மனைவி யிடம் எப்படி சொல்ல முடியும்?.

சிலருக்கு சொல்லாவிட்டாலும் அடி விழும். சொன்னால் கூடுதலான அடி விழும்

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும் நலமா?

சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சில்லுன்னு ஒரு காதல்" யாருக்கும் ஞாபகம் வரேல்லத்தானே :-)

நெஞ்சில் ஒர் ஆலயம் தான் யாபகத்துக்கு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அந்தப்படம் நான் பார்க்கேல்லயே...அதில என்ன சிறப்பு?

அந்தப்படத்தில் தான் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பாடல் இருக்கிறது

Link to comment
Share on other sites

எங்களிடம் கேட்பதன் முன் ரசிகை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் உள்ள உங்கள் காதலை உங்கள் வருங்காலக் கணவருக்கு ரசிகை நீங்கள் சொல்வீர்களா? அவரிடமும் அவர் யாரையாவது காதலிதுள்ளாரா என்று கேட்பீர்களா?

ஓட்டெடுப்பு முடிவுகளை பார்த்தேன். ஒருவரும் சொல்லமாட்டேன் எனும் தெரிவிற்கு ஓட்டு போடவில்லை. யாழ் களத்தில் நான் ஒருவனாவது உண்மை பேச ஆசைப்படுகின்றேன். இதனால் சொல்லமாட்டேன் எனும் தெரிவுக்கு அடியேன் ஓட்டுப் போட்டு உள்ளேன்.

வாழ்க்கையில் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறோம்,இந்த நிலையில் தங்கைக்கு ஒரு கீதம் படத்தில் நளினி தனது போலிஸ்காரன் கணவன் சிவகுமாருக்கு தனது காதல் பிரச்சனைகளை கூறி பின் கஸ்டப்பட்டது போல் நம்மால் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.

எம்மிடம் திருமணத்திற்கு பின் மனுசி இந்தக் கேள்வியை கேட்டால் இப்படித்தான் சமாளிப்போம்: "சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

Link to comment
Share on other sites

ஓட்டெடுப்பு முடிவுகளை பார்த்தேன். ஒருவரும் சொல்லமாட்டேன் எனும் தெரிவிற்கு ஓட்டு போடவில்லை. யாழ் களத்தில் நான் ஒருவனாவது உண்மை பேச ஆசைப்படுகின்றேன். இதனால் சொல்லமாட்டேன் எனும் தெரிவுக்கு அடியேன் ஓட்டுப் போட்டு உள்ளேன்.

நீங்கள் உண்மை பேசுவதாக யாரால் உறுதிப்படுத்த முடியும். அனைவரும் தங்கள் தங்கள் முடிவை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் நீங்கள் மட்டும்தான் உண்மை கூறுவதாக எப்படி நம்ப முடியும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

எப்படி உங்களுக்கு தைரியம் வரும்?

Link to comment
Share on other sites

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

Link to comment
Share on other sites

நீங்கள் உண்மை பேசுவதாக யாரால் உறுதிப்படுத்த முடியும். அனைவரும் தங்கள் தங்கள் முடிவை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் நீங்கள் மட்டும்தான் உண்மை கூறுவதாக எப்படி நம்ப முடியும். :icon_idea:

நான் உண்மை பேசியுள்ளேனா என்பதை கண்டுபிடிப்பதற்கு நான் திருமணம் முடிக்கும் வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும். :D

கருத்துக் கணிப்பில் ரசிகை ஒரு தவறு செய்துள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அவர் இவ்வாறு கேள்வியை கேட்டிருக்க வேண்டும்:

ஒருவரை நீங்கள் காதலிக்கும் போது உங்களிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள விடயத்தை உங்கள் காதலருக்கு சொல்வீர்களா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்: "சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

கொஞ்சம் நாடடிபட்ட மனைவி என்றா, அதை திருப்பி சொல்லி இங்க வந்தும் அந்த பட்டிக்காட்டு கதை மாறவில்லையோ என்று கேட்டிடுவா, எதுக்கும் கதைக்கும் போது கவனம், இங்கு பலர் ஊருக்கு போய் திருமணம் செய்வார்கள் நீங்கள் அந்த வகை என்றால் தப்பித்துக்கொள்வீர்கள் ஆனாலும் சில மாதங்களுக்கு தான் அந்த அமைதியும்....

Link to comment
Share on other sites

கொஞ்சம் நாடடிபட்ட மனைவி என்றா, அதை திருப்பி சொல்லி இங்க வந்தும் அந்த பட்டிக்காட்டு கதை மாறவில்லையோ என்று கேட்டிடும் எதுக்கும் கதைக்கும் போது கவனம், இங்கு பலர் ஊருக்கு போய் திருமணம் செய்வார்கள் நீங்கள் அந்த வகை என்றால் தப்பித்துக்கொள்வீர்கள் ஆனாலும் சில மாதங்களுக்கு தான் அந்த அமைதியும்....

ஊருக்குப் போய்த் திருமணம் செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் நாட்டில் செய்யும் திருவிளையாடல்கள் தெரியவராது என்னும் நினைப்பிருந்தால் அதை மாற்றிவிடுங்கோ. இப்போதெல்லாம் ஊரில் இருந்து வருபவர்கள் தான் விபரமா வருகிறார்கள் :P

Link to comment
Share on other sites

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!

Link to comment
Share on other sites

எப்படி உங்களுக்கு தைரியம் வரும்?

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது! :icon_idea::D:D

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நீங்கள் மட்டும் பையங்களுடன் டீ போட்டு கதைப்பீங்களாக்கும்! அஜித், விஜய், தனுஷ் டீ போட்டு கதைத்தால் நன்றாக ரசித்து பார்ப்பீங்களாக்கும்! நாம மட்டும் டீ போட்டு கதைக்கக்கூடாதாக்கும்! :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நான் நல்லாய் இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?

மாப்பிள்ளையைப் பார்த்துக் கதைத்தால்.. அய்யோ சாமி

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது! :icon_idea::D:D

நீங்கள் இன்னும் திருமணம் முடிக்கவில்லை போல் இருக்குது. எந்த வீரனும் கல்யாணத்தின் பின்பு யானையாக இருந்து பூனையாக மாறுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது!

இவர்கள் எல்லாம் பரவாயில்லை. களத்தில் முகத்தார் என்று ஒருவர் இருந்தார். ( இப்பவும் இருக்கின்றார்.தாயகத்தில் எண்டதால் முன்பு போல வருவதில்லை) அவரைப் பார்த்தபின், முடிச்சுக்கட்டிக் கொண்டு காசிக்குப் போவியள். அவரின் வாழ்வு, அப்படி ஒரு பயந்த வாழ்க்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் பரவாயில்லை. களத்தில் முகத்தார் என்று ஒருவர் இருந்தார். ( இப்பவும் இருக்கின்றார்.தாயகத்தில் எண்டதால் முன்பு போல வருவதில்லை) அவரைப் பார்த்தபின், முடிச்சுக்கட்டிக் கொண்டு காசிக்குப் போவியள். அவரின் வாழ்வு, அப்படி ஒரு பயந்த வாழ்க்கை .

ஒருவேளை முகத்தார் மனைவிக்குப் பயந்துதான் யாழுக்கு வருவதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் சொல்லி ஏன் டைம் யை வேஸ்ட் பண்ணனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.