Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.


  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

"சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.

எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!

மூக்கியின் இந்த ஒரு கருத்தோடு உடன்படுகின்றோம். காரணம் பல கனவுகளோடு வாழும் ஆண்களிலும் காதல் என்று தன் வாழ்க்கையில் முதல் தெரிவாக வருபவரோடு மட்டுமே பல நினைவுகளால் மனதளவில் வாழ்ந்திடுவர்.(ஒரு தலையாய் நினைப்பதையோ, எட்ட இருந்து ஒருவரின் நடத்தையை அழகைக் கண்டு அவர் மீது இன்னொருவர் தான் மட்டும் காதலிப்பதையோ காதல் என்ற முடியாது. இருவரும் உடன்பட்டுக் காதலித்தலைப் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம்.) அந்த வாழ்க்கை நிலைக்காத போது நிச்சயம் அங்கு மனதில் வடுக்கள் சுமையாக இருக்கும். சொன்னால் என்ன சொல்லவிட்டால் என்ன.. அது தொடரும். அழிக்க முடியாத நினைவு வடுக்கள். அழிக்க முடியும் என்பது சுத்தப் பொய். மறைக்க முனையலாம்.

மனதில் சங்கடமில்லா வாழ்வுக்கு ஒரே காதல் ஒருவனோடு ஒருத்தி என்ற நிலையே வலுவானது நீடித்தது. அவர் நல்லவராய் இருந்து கெட்டவராய்க் கூட மாறலாம். ஆனால் புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கான அடிப்படை இருக்குமானால் முதல் தேர்வையே தக்க வைத்து வாழ்ந்து கொள்வதே மன மகிழ்வானது. விட்டுக் கொடுப்புக்கள் காத்திருப்புக்கள் கூட சுகமானது. ஆனால் மனதில் முன்னொருத்தன் அல்லது முன்னொருத்தி என்ற நினைவோடு ( அதை அழிக்க முடியும் என்பது சுத்தப் பொய்) வாழ்வது மனதில் ஏதோ ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை உறுத்தும். அதை தவறு செய்பவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.

வீட்டில் ஒரு பொய் சொல்வதே மனதை உறுத்தும் போது இவை... எப்படி அமையும்..!

நமக்கென்ன வந்திச்சப்பா. தவறு செய்யாதவன் அடுத்தவரின் தவறுக்காக தான் வருந்தவும் மாட்டான்..! ஆனால் தவறு செய்கிறார்கள் என்று மட்டும் உணர்ந்து கொள்வான். உலக அனுபவத்தில் உணர்ந்ததைச் சொல்கிறோம். நாமா தவறு செய்யப் போவதில்லை. எம்மால் அடுத்தவருக்கு உறுத்தலை வழங்கப்போவதில்லை. இந்த நிலையை ஒவ்வொருவரும் எடுக்கும் போது முதல் தேர்வே வெற்றிதான். விட்டுக் கொடுக்கவும் புரிந்துணரவும் பக்குவம் இருக்க வேண்டும். இன்றேல் எந்தத் தேர்வும் சரிவராது. சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன..!!! :D:D:icon_idea:

Link to comment
Share on other sites

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

இதை ஏன் யாரோ ஒருவருக்கௌ செய்வதாக நினைகிறிங்க? :icon_idea: உங்கள் பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், உங்களுக்கு மனைவிக்கு அடிமையாக இருப்பதா? உங்கள் மனைவியை நீங்க ஊர் சுற்றி காட்டாவிட்டால், அப்ப ஆர் காட்டுறது?..பக்கத்துவீட்டு காரனை கடன் வாங்கி கொண்டு போகலாமா? நண்பர்களுடன் போனலும் குற்றம் சொல்வீர்கள்..உங்களுக்கு பாத்ரூம் கழுவுவதில் என்ன பிரச்சனை?னீங்களும் தானே அதை உபயோக படுத்துவீங்க? கடைக்கு போய் சாமான் வாங்கிவந்தால் தேய்ந்து போய்டுவீங்களா?.. சமைத்து வைத்தால் வாய் நிறைய கொட்டிக்க தெரியுது தானே? சாமான் வாங்க்கினால் அவமானமோ?..வந்திட்டாங்கையா பேசுறதுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.

எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

ஆண்களின் கண் 1% அழுகிறது என்றால் மனசு 100% அழுகிறது என்று அர்த்தம். பெண்களின் கண் 100% அழுகிறது என்றால் மனசு வெறும் 1% மட்டுமே அழுகிறது. பெண்கள் அடுத்தவரின் துன்பத்தை நினைந்து அழுவதில்லை. தங்களின் நிலையை எண்ணி அழுவதே அதிகம். அதனால் தான் கண் மட்டும் அழுகிறது. மனதல்ல..! இந்த அடிப்படையைப் புரிஞ்சு கொள்ளனும் எல்லா ஆண்களும். அப்ப தான் தங்களின் சுயநிலையை தக்க வைக்கவும் முயல்வர். அன்பு என்பதை ஆண் மட்டும் பகர வேண்டும் என்பதல்ல. பெண்ணும் ஆண் மீது காட்ட வேண்டும். அன்புக்கு முன் தலை வணங்குங்கள். கால் தடவ வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்களும் சரி ஆண்களின் அன்புக்கு தலை வணங்குங்கள். முடிவில்லா பதில் அன்பு காட்டுங்கள். ஏற்றத்தாழ்வற்ற நிலையை உணர்வீர்கள். :D:D:icon_idea:

Link to comment
Share on other sites

இதை ஏன் யாரோ ஒருவருக்கௌ செய்வதாக நினைகிறிங்க? :icon_idea: உங்கள் பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், உங்களுக்கு மனைவிக்கு அடிமையாக இருப்பதா? உங்கள் மனைவியை நீங்க ஊர் சுற்றி காட்டாவிட்டால், அப்ப ஆர் காட்டுறது?..பக்கத்துவீட்டு காரனை கடன் வாங்கி கொண்டு போகலாமா? நண்பர்களுடன் போனலும் குற்றம் சொல்வீர்கள்..உங்களுக்கு பாத்ரூம் கழுவுவதில் என்ன பிரச்சனை?னீங்களும் தானே அதை உபயோக படுத்துவீங்க? கடைக்கு போய் சாமான் வாங்கிவந்தால் தேய்ந்து போய்டுவீங்களா?.. சமைத்து வைத்தால் வாய் நிறைய கொட்டிக்க தெரியுது தானே? சாமான் வாங்க்கினால் அவமானமோ?..வந்திட்டாங்கையா பேசுறதுக்கு!

இவற்றை செய்வதில் நமக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. இவற்றில் 50% ஐ மனைவி பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் எனக்கு நெருக்கமான ஆண்மக்கள் 75% ற்கும் மேற்பட்ட சுமையை காவுகின்றார்கள். இதுதான் நம்மட பிரச்சனை பாருங்கோ! :D:D:D

வந்திட்டாங்கையா பேசுறதுக்கு! வவ்! வவ் வவ் வவ்! வவ்! வவ் வவ் வவ்!

Link to comment
Share on other sites

ஆண்களின் கண் 1% அழுகிறது என்றால் மனசு 100% அழுகிறது என்று அர்த்தம். பெண்களின் கண் 100% அழுகிறது என்றால் மனசு வெறும் 1% மட்டுமே அழுகிறது. பெண்கள் அடுத்தவரின் துன்பத்தை நினைந்து அழுவதில்லை. தங்களின் நிலையை எண்ணி அழுவதே அதிகம். அதனால் தான் கண் மட்டும் அழுகிறது. மனதல்ல..! இந்த அடிப்படையைப் புரிஞ்சு கொள்ளனும் எல்லா ஆண்களும். அப்ப தான் தங்களின் சுயநிலையை தக்க வைக்கவும் முயல்வர். அன்பு என்பதை ஆண் மட்டும் பகர வேண்டும் என்பதல்ல. பெண்ணும் ஆண் மீது காட்ட வேண்டும். அன்புக்கு முன் தலை வணங்குங்கள். கால் தடவ வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்களும் சரி ஆண்களின் அன்புக்கு தலை வணங்குங்கள். முடிவில்லா பதில் அன்பு காட்டுங்கள். ஏற்றத்தாழ்வற்ற நிலையை உணர்வீர்கள். :D:D:icon_idea:

அப்படியா?.. :D எல்லொரும் இவரின் அட்வைசை கேடு இதையே பின் பற்றுங்கள்..வாழ்வு நன்றாக இருக்கும்...இவருக்கு இன்று எமது யாழ்கள சார்பில் குடும்பநல வைத்தியர் என்ற பட்டத்தை அழிக்கின்றேன் :D ..எல்லோரும் இனி டொக்டர் நெடுக்ஸ் என்டு தான் கூப்பிடவேண்டும்..உங்கள் குடுபங்களில் பிரச்சனை வந்தால், இவரை நாடவும்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?.. :D எல்லொரும் இவரின் அட்வைசை கேடு இதையே பின் பற்றுங்கள்..வாழ்வு நன்றாக இருக்கும்...இவருக்கு இன்று எமது யாழ்கள சார்பில் குடும்பநல வைத்தியர் என்ற பட்டத்தை அழிக்கின்றேன் :icon_idea: ..எல்லோரும் இனி டொக்டர் நெடுக்ஸ் என்டு தான் கூப்பிடவேண்டும்..உங்கள் குடுபங்களில் பிரச்சனை வந்தால், இவரை நாடவும்.. :P

உங்கள் பட்டத்தை சமருக்கு கடற்கரையில் ஏற்ற முடியாததால் நமக்கு வேணாம். அம்மா அப்பா பெரிய பட்டத்தோட மாப்பிள்ளையே வாங்கித் தருவாங்க. நமக்கல்ல உங்களுக்கு. இதை அவருக்கு கொடுங்கோ. மேலும் மகிழ்வார். :D:D

அடுத்தவர் குடும்பங்களுக்கு அட்வைஸ் கெல்ப் பண்ணுற சாமியார் வேலையெல்லாம் நமக்குக் கிடையாது. நம்ப பாடே நாய் படாப்பாடா இருக்கு இதுக்குள்ள அடுத்தவர் குடும்பத்தை எங்க தலைல கட்ட நினைக்கிறது பெண்களின் கீழ்நிலைச் சிந்தனை. அந்தந்த குடும்பங்களின் பிரச்சனையை அந்தந்த ஆண்களும் பெண்களும் பேசிப் புரிந்து தீர்த்துக்கங்க. அடுத்தவர் முன்னிலைக்கு உங்க பிரச்சனையைக் கொண்டு போக இடமளிக்கிறது உங்களுக்கே அவமானம். ஆளுமையற்ற நிலை. கொண்டு போக அட்வைஸ் பண்ணுவதும் கேவல நிலை. மூக்கி மேம் எப்பவுமே 3ம் நிலை அட்வைஸ்தான் தருவாங்க. கண்டுக்காதேங்க. :D:D

Link to comment
Share on other sites

அது எந்த கடையில் விக்குது?..என்ன ரேட் போகுது? ... :P

உங்கள் பட்டத்தை சமருக்கு கடற்கரையில் ஏற்ற முடியாததால் நமக்கு வேணாம். அம்மா அப்பா பெரிய பட்டத்தோட மாப்பிள்ளையே வாங்கித் தருவாங்க. நமக்கல்ல உங்களுக்கு. இதை அவருக்கு கொடுங்கோ. மேலும் மகிழ்வார். :icon_idea::D

ஆமா நீங்க பெரிசா கதயெல்லாம் விடுவீங்க? நீங்க அடுத்தவருக்கு சொல்வதை நீங்க பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை ஏன் நாய் படா பாடு படுது?..அது சரி நாயை ஏன் இங்க இழுகிறிங்க? நானும் தான் நாய் வைத்திருகிறேன்..அவா நல்லா தானே இருகிருகிறா..அப்புறமா எதற்க்கு கண்டதுக்கு எல்லாம் அவர்களை உதாரணதுக்கு இழுகிறிங்க? :P

அடுத்தவர் குடும்பங்களுக்கு அட்வைஸ் கெல்ப் பண்ணுற சாமியார் வேலையெல்லாம் நமக்குக் கிடையாது. நம்ப பாடே நாய் படாப்பாடா இருக்கு இதுக்குள்ள அடுத்தவர் குடும்பத்தை எங்க தலைல கட்ட நினைக்கிறது பெண்களின் கீழ்நிலைச் சிந்தனை. அந்தந்த குடும்பங்களின் பிரச்சனையை அந்தந்த ஆண்களும் பெண்களும் பேசிப் புரிந்து தீர்த்துக்கங்க. அடுத்தவர் முன்னிலைக்கு உங்க பிரச்சனையைக் கொண்டு போக இடமளிக்கிறது உங்களுக்கே அவமானம். ஆளுமையற்ற நிலை. கொண்டு போக அட்வைஸ் பண்ணுவதும் கேவல நிலை. மூக்கி மேம் எப்பவுமே 3ம் நிலை அட்வைஸ்தான் தருவாங்க. கண்டுக்காதேங்க. :D:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்னுடைய காதல் கதைகளைச் சொல்ல வெளிக்கிட ஆரம்பத்தில ஆர்வமாக் கேட்டவ.. பிறகு என்ர கதையளின்ர எண்ணிக்கையைப் பாத்து தனக்கு போரடிக்குது எண்டு வேண்டாமெண்டிட்டா..

எல்லாக்கதையளும் ஒரே கதையையும் ஒரே முடிவையும் கொண்டிருந்தால் கேட்கிறவைக்கும் அலுப்பு வரும் தானே..?

எனக்கு நெடுக்கிடம் ஒரு கேள்வி

கணவனோ மனைவியோ இறந்த பின் மறுதிருமணம் பற்றி என்ன நினைக்கிறார் அவர். அவர் கருத்துப்படி உடன்கட்டையேற வேண்டுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எந்த கடையில் விக்குது?..என்ன ரேட் போகுது? ... :P
உங்கட அப்பா அம்மாவைக் கேளுங்கோ சொல்லுவினம். நமக்குத் தெரியல்ல. நமக்கு உந்த ஆகாயத்தில பறக்கிற பட்டம் மட்டும் தான் தெரியும். மிச்சமெல்லாம் எமக்கு கிட்ட வரவே வராது. :D:icon_idea:

ஆமா நீங்க பெரிசா கதயெல்லாம் விடுவீங்க? நீங்க அடுத்தவருக்கு சொல்வதை நீங்க பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை ஏன் நாய் படா பாடு படுது?

கதை விடுறவங்களுக்கு கதை விட்டுத்தானே ஆகனும். எல்லாருல்லும் நல்லவங்களா இருந்திட்டா ஏமாளியா ஆக்கிடுறாங்க. ஏமாற்றிடுவாங்க. உலகத்தைப் பெண்கள் நீங்க அப்படி மாத்திப் போட்டிங்க.

..அது சரி நாயை ஏன் இங்க இழுகிறிங்க? நானும் தான் நாய் வைத்திருகிறேன்..அவா நல்லா தானே இருகிருகிறா..அப்புறமா எதற்க்கு கண்டதுக்கு எல்லாம் அவர்களை உதாரணதுக்கு இழுகிறிங்க? :P

நாய் வாய் பேசாது என்பதால்தான் கூட வைச்சிருக்கிறீங்க. அது வாயைத் திறந்து பேசிறதா இருந்து பெண் என்றாலும் அடிச்சு விரட்டி இருப்பீங்க. உங்களைப் பற்றி சொல்லாது என்ற துணிவில...நாயோட அலையுறீங்க. அவனவன் தன்னிலையை வெளில சொல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அதுதான் ஆண்களின் வீட்டுச் சுமைகள் கூட வெளில வராமல் தடுக்கப்படுகுதே..! அது போதாதா. பெண்களின் கொடூர மனநிலையைக் காட்ட. நாயாம் நாய். அது உங்களோட என்ன பாடு படுகுதோ பாவம். அதைப் பார்த்துத்தானே நாமே நாய் படாப்பாடு என்றம். :D:D

Link to comment
Share on other sites

உங்கட அப்பா அம்மாவைக் கேளுங்கோ சொல்லுவினம். நமக்குத் தெரியல்ல. நமக்கு உந்த ஆகாயத்தில பறக்கிற பட்டம் மட்டும் தான் தெரியும். மிச்சமெல்லாம் எமக்கு கிட்ட வரவே வராது. :D:icon_idea:

கதை விடுறவங்களுக்கு கதை விட்டுத்தானே ஆகனும். எல்லாருல்லும் நல்லவங்களா இருந்திட்டா ஏமாளியா ஆக்கிடுறாங்க. ஏமாற்றிடுவாங்க. உலகத்தைப் பெண்கள் நீங்க அப்படி மாத்திப் போட்டிங்க.

நாய் வாய் பேசாது என்பதால்தான் கூட வைச்சிருக்கிறீங்க. அது வாயைத் திறந்து பேசிறதா இருந்து பெண் என்றாலும் அடிச்சு விரட்டி இருப்பீங்க. உங்களைப் பற்றி சொல்லாது என்ற துணிவில...நாயோட அலையுறீங்க. அவனவன் தன்னிலையை வெளில சொல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அதுதான் ஆண்களின் வீட்டுச் சுமைகள் கூட வெளில வராமல் தடுக்கப்படுகுதே..! அது போதாதா. பெண்களின் கொடூர மனநிலையைக் காட்ட. நாயாம் நாய். அது உங்களோட என்ன பாடு படுகுதோ பாவம். அதைப் பார்த்துத்தானே நாமே நாய் படாப்பாடு என்றம். :D:D

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

நான் இங்கு சில வயதான தம்பதிகள், ட்ரய்னில் சில்மிஷம் பண்ணுவதை பார்த்திருகிறேன்..உண்மையாகவே கல்யாணம் செய்தவர்கள், ஏன் பப்ளிக்கில் இப்படி செய்யவேண்டும்?..கெட்டதுகளை பார்க்க கூடது என்று தான் நினைப்பேன்..இருந்தாலும் சில நேரங்களில் இதுகளின் இம்சை தாங்க முடிவதில்லை...

Link to comment
Share on other sites

எங்களிடம் கேட்பதன் முன் ரசிகை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் உள்ள உங்கள் காதலை உங்கள் வருங்காலக் கணவருக்கு ரசிகை நீங்கள் சொல்வீர்களா? அவரிடமும் அவர் யாரையாவது காதலிதுள்ளாரா என்று கேட்பீர்களா?

"

எனக்கு இப்படியான ஒரு சிக்கலான நிலமை வரலை இருந்தாலும் எனது கருத்தை சொல்லுறன். என்னைப் பொறுத்தவரை இந்த விசயம் நமக்கு அமையற துணையைப் பொறுத்தது.. கல்யாணம் ஆன முதல் நாளே சொல்வது நான் நினைக்கிறன் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று. அதே மாதிரி ஒருவாரத்தில் சொல்வது ஓரளவிற்கு முட்டாள்தனம். ஒருவருடத்திற்கு பின் நம் துணையைப் பற்றி நம்மால் தீர்மானிக்க முடியும்.. இந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம் எண்டு நினைக்கிறன். ஏனெனின் அந்தக் காலப்பகுதியில் நீங்கள் அவவையோ அல்லது அவரையோ புரிந்துகொள்ளுவீர்கள் அதே மாதிரி அவரோ அவவோ உங்களைப் புரிந்து கொள்ளுவா/ வார். ஆனால் நன்றாக சிந்தியுங்கள். வள்ளுவர் சொல்லி இருக்கிறார் "பொய்மையும் வாய்மை எனப்படும் அது நன்மை பயக்குமெனின். " உங்கள் துணையைப் பற்றி உங்களுக்குத்தான் தெரியும். அவவின் அவரின் குணத்துக்கு ஏற்ப நடவுங்க.

ரசி அக்கா இப்ப நீங்கள் காதலிக்கிறீங்கிளா இல்லாட்டிக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கிளா?

இரண்டும் இல்லைத்தாயே எல்லாம் ஒரு ஜென்ரல் நொளேட்ஜுக்கு கேட்டனப்பா. :D

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

ஆகா நம்ம அருவியா?? அப்ப யாழ்ல அரவாசி பேர் மாட்டுப்பட்டுடாங்க போல :D:D:lol:

Link to comment
Share on other sites

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

அப்படி போடுங்கோ தூயா? ஆமா நீங்கள் சொல்லுவீங்களா இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய காதல் கதைகளைச் சொல்ல வெளிக்கிட ஆரம்பத்தில ஆர்வமாக் கேட்டவ.. பிறகு என்ர கதையளின்ர எண்ணிக்கையைப் பாத்து தனக்கு போரடிக்குது எண்டு வேண்டாமெண்டிட்டா..

எல்லாக்கதையளும் ஒரே கதையையும் ஒரே முடிவையும் கொண்டிருந்தால் கேட்கிறவைக்கும் அலுப்பு வரும் தானே..?

என்னப்பா! காதல் ஒருக்கால் தான் வரும். ஒரு தடவை தான் வரும். புனிதமானது என்று என்றால் சொல்கின்றார்கள். உங்களின் நிலமையைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே!

ஆகா நம்ம அருவியா?? அப்ப யாழ்ல அரவாசி பேர் மாட்டுப்பட்டுடாங்க போல

என்ன அருவியைப் பார்த்தால் போச்சிக் பையன் போலவா கிடக்குது? உருவத்தை வைத்து ஆளை எடை போடாதீர்கள். :angry: :angry:

Link to comment
Share on other sites

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன்பு காதல் இருந்தால் தவறில்லை..எதிர்ப்பால் மீதான ஈர்ப்பு (சிலருக்கு ஒத்தபால் மீதும் இருக்கலாம், சபேசன் வேறு "அவளும் அவளும்" என்று கதை வேறு எழுதியுள்ளார்) பதின்ம வயதில் பலருக்கு வருவது இயல்பு.. எனினும் இதில் பல முதிராக் காதலாகவே இருக்கும்.. சிலர் "உனக்கு நான்; எனக்கு நீ" என்று ஆழமான காதலில் வீழ்வதும் உண்டு.. இப்படியான காதல் வயப்படுவோர் காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள் காரணமாகவோ, குடும்பச் சூழல் காரணமாகவோ, அல்லது அவர்களயும் மீறிய வேறு காரணங்களாலோ திருமணத்தில் சேராமால் போகக்கூடும்.. காலப்போக்கில் வேறு ஒருவருடன் காதல் வரச் சாத்தியம் உண்டு (சாத்தியமில்லாதவர்கள் என்போர் மனவலிமையற்றோர் என்பது எனது தனிப்பட்ட கருத்து), அல்லது பேச்சுத் திருமணத்தில் சங்கமமாகவும் சாத்தியம் உண்டு. எப்படியோ திருமண பந்தத்தில் ஒன்றிணைவோர் தமக்குள் இரசியங்களை வைத்திருப்பதை விட பக்குவான நேரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதே நல்லது.. பிறர் சொல்லித் தெரிவதைவிட (அதற்கு எமது சமூகத்தில் பலர் உள்ளனர்), தாமாகவே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் சகல விடயங்களையும் பகிர்வதுதான் தம்பதிகளின் வாழ்வுக்கு நல்லது..

அதற்காக 14 வயதில் பலரை சைக்கிளால் வெட்டி விழுத்தியதை எல்லாம் போய்ச் சொல்லிக் கொண்டிருந்தால் கேட்பவர்களை சலிக்கச் செய்யத்தான் முடியும்.. B)

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

நானும் என்ரை பழைய காதலுகளை முனிசிட்டை சொன்னன் (ஒண்டா இரண்டா அது கனக்க) மனிசி இப்ப எதுக்கெடுத்தாலும் உடம்பிலை உசார் இருக்கேக்கை ஊர் மேஞ்சிட்டு இப்ப கடைசி காலத்திலை என்னை செய்து களுத்தறுக்கிறாய் எல்லாம் என்ரை விதி எண்டு தொடங்கும் அதுக்கு பிறகு நான் தயாராய் வைச்சிருக்கிற பஞ்சை காதுக்கை வைச்சுடுவன் பிறகென்ன ஜாலிதான் :D:D:D

Link to comment
Share on other sites

ரசிகையின்ரை வீட்டுக்குள்ளை பூந்து புதுக் கேள்வி கேக்கிறதுக்கு சண்டைக்கு வாறாவோ தெரியேல்லை.

ஆனால் இதுவும் இந்த விசயத்தோடை சம்பந்தப்பட்டது என்பதனால் இதற்குள் சேர்க்கிறேன். காதலர் தினத்தன்று சில வானொலிகளும் தொலைக்காட்சிகளும் உங்களுடைய பழைய காதலைப் பற்றிச் சொல்லுங்கள், முதல் காதலைப் பற்றிச் சொல்லுங்கள் என்றெல்லாம் நிகழ்ச்சி வைத்தார்கள்.

ஆனால் அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள் ஆண்களாகவே இருந்தார்கள். காதல் தொடங்கியது பற்றி, பிரியவேண்டி ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றி, இன்னும் இடைக்கிடையே அவளின் ஞாபகம் வருவது பற்றியெல்லாம் பிளந்து தள்ளினார்கள். என்னுடைய கேள்வி வழமையாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொள்பவர்கள் பெண்கள் என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து பெண்கள் ஏன் கருத்துச் சொல்லவில்லை?

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

நான் இங்கு சில வயதான தம்பதிகள், ட்ரய்னில் சில்மிஷம் பண்ணுவதை பார்த்திருகிறேன்..உண்மையாகவே கல்யாணம் செய்தவர்கள், ஏன் பப்ளிக்கில் இப்படி செய்யவேண்டும்?..கெட்டதுகளை பார்க்க கூடது என்று தான் நினைப்பேன்..இருந்தாலும் சில நேரங்களில் இதுகளின் இம்சை தாங்க முடிவதில்லை...

எத்தனை வயதை எத்தனை காதல் செய்வது என்பது ஒரு பொருட்டே அல்ல. வயது என்பது மனித அடையாளம். உடல், இயக்கம், மூளை என்பதும் தான் முக்கியமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ முடியும் என்றால் வயதில் எதுவும் இல்லை. நம்மட அன்ரன் பாலசிங்கம் ஐயா அடேல் அன்ரிக்கும் இடையில கூட வயசு வித்தியாசம் இருக்கு. அவர்கள் காதலிக்கவில்லையா. வாழவில்லையா.

அரபாத் தனது 68வது வயதில் முதற் திருமணம் செய்து குழந்தை பெறவில்லையா. நம்மட தலைவர் கூட தன்னை விட குறிப்பிடத்தக்க அளவு வயது கூடிய பெண்ணைத்தானே மணம் முடித்தார். மதிவதனி அக்கா வேண்டாம் என்றிட்டாவா...??! எதிர்பார்ப்பில்லாத அன்பிருப்பின் அவை ஒரு விடயமே அல்ல.

மனிதரைத் தவிர எந்த உயிரினமாவது சாட் வயது எழுதி வைச்சு வாழ்க்கை நடத்துதா..?!

நம்ம சாள்ஸ் டயானா தம்பதிகள் கூட 13 வயது வித்தியாசம். அவர்கள் சந்தோசகாக வாழ்வில்லையா. இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் திருமணத்துக்குப் பின்னான காதல்களால் தொடர்புகளால் வந்தவை. அதை அவர்கள் தவித்திருந்தால் இன்று உலகம் போற்றும் தம்பதியராய் வாழ்ந்திருப்பர். கோல்டன் பிறவுன் தம்பதிகள் அப்படி. இப்படிப் பல்லாயிரம் தம்பதியைக் காட்டலாம். அது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால் உங்களின் கருத்தை அடுத்தவருக்கு சொல்லி அவர்கள் அதனால் குழம்பும் நிலை இருந்தால் அப்படிப்பட்ட போலி மனிதர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அன்பான உள்ளங்கள் சிதைவடைவதும் அவர்கள் வாழ்வு சீரழிவதும் தவிர்க்கப்படும் அல்லவா.

20 வயது கூடிய பெண்களைக் கூட ஆண்கள் காதலிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்தக் காதல் காமத்துக்கு அப்பாலும் அன்பாலானதாக இருக்கலாம். சிலர் காதலைத் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப குறுகிய வட்டத்துக்குள் வைத்து அடுத்தவர் வாழ்க்கையை நாசம் பண்ணுகின்றனர். அதிலும் காதலென்று செய்யாமல் இருப்பதே சிறந்தது என்பதே எமது கருத்து. அதற்காக பெரியார் போல 76 வயதில் 16 வயதைத் திருமணம் செய்வது சரியென்ற முடியாது. அதிலும் பெரியார் ஏற்கனவே திருமணமானவர்.

வயசு காசு வேலை தகுதி படிப்பு பெயர் சாதி மதம் இனம் நாடு விசா சீதனம் சாட் எல்லாம் பார்ப்பதானால் அது காதல் அல்ல. திருமணச் சந்தைக்கு போகாமல் காதல் என்ற பெயரில் ஆட் பிடித்தல் என்பதாக இருக்கலாம். திருமணச் சந்தையில் பார்க்கப்படும் மேற்கூறிய நிலைகளால் பாதிக்கப்படக் கூடியவர்கள் காதல் என்ற பெயரில் ஆட்தேர்வு செய்வது வழமை. அவற்றைக் காதல் என்பதா கலி என்பதா..??! அவரவருக்கே வெளிச்சம். ஆனால் இப்போ எல்லாம் பெற்றோர் நண்பிகள் நண்பர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் சந்தோசமாக இருப்பதே பிடிக்காமல் இடையில் புகுந்து இப்படியான தங்களின் சிந்தனைகளை விதைத்து பலவீனமான காதலர்களைப் பிரிக்கின்றனர். அண்மையில் கூட தங்களின் தகுதிக்கு ஆண் சரியில்லை என்று தங்களின் மகளின் காதலை முறித்து அப்பெண்ணை வேறுநாட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஒரு பெற்றோர். அந்தப் பெற்றோருக்கு ஐடியாக் கொடுத்ததே குறித்த பெண்ணின் நண்பி. இப்படியும் நட்புக்கள் அமைந்தால் பலவீனமானவர்களின் காதல்கள் சிதறுறுவது தவிர்க்க்க முடியாதது. உண்மையில் அவற்றைக் காதல் என்று ஏற்க முடியுமா என்பதே கேள்வி..??!

அடுத்தவர் பிறைவேசியில் தலையிட நமக்கு உரிமையில்லை. அவர்கள் புகையிரத்ததில் கொஞ்சக் கூடாது என்பது சட்டமல்ல. அப்படி ஒரு சட்டமிருந்து மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் கொஞ்சட்டன் நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்திட்டுப் போறது. அதைக் காவி நீங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி உங்கள் பலவீனங்களை அடுத்தவருக்கு கடத்துகிறீர்கள் என்பதுதான் பொருள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :lol::lol:

அப்படியென்றால் ஆண்கள் எல்லாம் 45 வயது தாண்டிய பெண்களை டிவேர்ஸ் செய்யலாம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். காரணம் பெண்கள் 45 வயதிலேயே உடற்தொழில் முதுமை அடைகின்றனர். ஆண்கள் அப்படியன்று. எதை வைச்சு ஓல்ட் என்பதை விளக்குவீர்களா..??! :D:D

20 வயது கூடிய பெண்ணைக் கூட திருமணம் செய்கின்றனர் ஆண்கள். ஓல்ட் என்று நீங்கள் குறிப்பிடுவதன் அர்த்தத்தை விளக்கினால் அப்படிப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவும் அல்லவா..??! :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது பொய்களுக்குப் பின் மறைந்திருப்பார்கள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!
<<<,

நீங்கள் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போகின்றேன். ஆனால் ஒரு வேளை கல்யாணத்தின் பின் ஏமாற்றிய காதலனை சந்திக்க நேரும் பட்சத்தில்!!...என்ன நடக்கும் யோசிச்சு ப் பாருங்கோ...விபரமா சொல்லாட்டிலும் ஓரளவுக்கு ச்ச் சும்மா சமாளிச்சு வைக்கிறது நல்லம் பாருங்கோ!!...ஆனால் காதல் என்று சொல்லி ஏமாத்துறவைக்கு பச்சை மட்டையால வெளுக்க வேணும்..!

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது மறைந்திருப்பார்கள். :D:D:D

<<<

ஆம்பிளைகளுக்கு என்னப்பா ஆயிரம் ஆட்டோகிராப் இருக்கும் அதையெல்லாம் பொம்பிளைகளும் சொல்ல வெளிக்கிட்டால்...டைவர்ஸ் ல தான் வந்து நிற்கும்!!...

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

அங்கிள் நீங்கள் சொல்லுற மாதிரி நடந்து அப்புறம் வேற ஒரு சந்தர்ப்பத்துல அவக்கோ அவருக்கோ தெரிய வந்து உதை ஏன் என்ன்ட்டை முதலே சொல்ல இல்லை என்டு கேட்டால் என்ன செய்யுறது??

நானும் என்ரை பழைய காதலுகளை முனிசிட்டை சொன்னன் (ஒண்டா இரண்டா அது கனக்க) மனிசி இப்ப எதுக்கெடுத்தாலும் உடம்பிலை உசார் இருக்கேக்கை ஊர் மேஞ்சிட்டு இப்ப கடைசி காலத்திலை என்னை செய்து களுத்தறுக்கிறாய் எல்லாம் என்ரை விதி எண்டு தொடங்கும் அதுக்கு பிறகு நான் தயாராய் வைச்சிருக்கிற பஞ்சை காதுக்கை வைச்சுடுவன் பிறகென்ன ஜாலிதான் :D:D:D

ஆகா அப்ப சாத்து பெரிய கீரோ போல :lol:

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

ம்ம் பொதுவா ஆண்களுக்குத்தான் உப்படி நிறைய காதல்கள் இருக்கிறது. பெண்களுக்கு குறைவுதான். அதோடை அவை உதைச்சொல்லப்போய் ஏன் தேவை இல்லாத பிரச்சினைகள் எண்டு நினைச்சு இருப்பினம். அப்புறம் பழசை ஏன் கிளறுவான் எண்டு பேசாமல் விட்டு இருப்பினம் எண்டு நினைக்குறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.