Jump to content

சிரித்தால் மெலியலாம்


Recommended Posts

சிரித்தால் மெலியலாம்

http://www.youtube.com/watch?v=5P6UU6m3cqk

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாய்விட்டு சிரித்தால் தொப்பை குறையும் என்பதை சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். தினசரி வயிறு வலிக்க சிரித்தால் வருடத்திற்கு 40 கிராம் கொழுப்பு கரையுமாம்.

சிரிக்கும் போது வழக்கத்திற்கும் அதிகமாக 20 சதவீத சக்தி செலவாகிறது. வாய்விட்டு சிரிப்பது 1/2கிலோ மீட்டர் நடப்பதற்கு சமமான பலன்களை கொடுக்குமாம். தினமும் 15 நிமிடம் விழுந்து விழுந்து மன்ம்விட்டு சிரிப்பதை வழக்கமாக கொண்டால் வருடத்திற்கு அரைகிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்பதையும் இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

சிரிப்பதன் மூலம் இதயத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரித்து இதயம் சிறப்பாக இயங்க உதவி புரிகிறது. அது மட்டுமன்றி சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். டி.வியில் நகைச்சுவை காட்சிகள் காட்டப்படும் போது, அதைப் பார்த்து சிரிப்பவர்களுக்கு அதிக அளவில் சக்தி எரிக்கப்படுகிறதாம். பல்வேறு நபர்களை ஆய்வு செய்து சிரிப்பின் மகத்துவத்தை கண்டறிந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தகவல்

மருத்துவ மஞ்சரி என்ற நூலில் பெறப்பட்டது

பேந்தென்ன எல்லோரும் கண் மண் தெரியாமல் விழுந்து விழுந்து சிரியுங்கோ :D:D:D:D

இப்பதானே விடயம் விழுங்குது ஏன் நம்ம சின்னா நிறைய சிரிக்கிற முகக்குறி போடுறவர் எண்டு. :icon_idea: :P :D:D:D

Link to comment
Share on other sites

வாசித்தவுடன், மெலியலாம் என்று நினைத்து அடிக்கடி சிரிக்க, பக்கத்தில் இருந்த வெள்ளக்காரன் என்னை ஒரு மாதிரிப் பாக்கிறார்

Link to comment
Share on other sites

வாசித்தவுடன், மெலியலாம் என்று நினைத்து அடிக்கடி சிரிக்க, பக்கத்தில் இருந்த வெள்ளக்காரன் என்னை ஒரு மாதிரிப் பாக்கிறார்

அவருக்கும் விசயத்தை சொல்லுங்கோவன் கந்தப்பு அப்புறம் அவரும் உங்களோட கூட்டு சேருவார் :icon_idea::D:D

Link to comment
Share on other sites

தாமரைக் கிழங்கு சாப்பிட்டாலும் மெலியலாம் என்று இன்னொருவர் இங்கே சொல்கிறார். அப்ப சிரிச்சுக்கொண்டு தாமரைக்கிழங்கினைச் சாப்பிட்டால் கெதியாக மெலியலாமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19407

Link to comment
Share on other sites

சிரிப்பது நல்லதுதான் ரசிகை ஆனால் கந்தப்பண்ணை சொன்னமாதிரியும் பக்கத்தில நிக்கிறவை

வித்தியாசமா பாப்பினம் அதனால கதவை புட்டிக்கொண்டு சிரிக்கவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கண்மண் தெரியாம சிரிச்சா நேரா கீழ்ப்பாக்கம்தான்.

Link to comment
Share on other sites

வாசித்தவுடன், மெலியலாம் என்று நினைத்து அடிக்கடி சிரிக்க, பக்கத்தில் இருந்த வெள்ளக்காரன் என்னை ஒரு மாதிரிப் பாக்கிறார்

ஏன் கந்தப்பு, இப்பவே எலும்ப்பும் தோலுமா இருகிறிங்க! இன்னும் மெலிய வேண்டும் என்டு ஆசையா?

Link to comment
Share on other sites

சிரித்தால் மெலியலாம்

அப்படியானால் இதற்கு இலகுவான வழி நீங்கள் முதலில் ஒருவரை அல்லது பலரை காதலிக்க வேண்டும்! காதலிக்க தொடங்கிவிட்டால் விரைவில் உங்கள் மேல்வீடு கழன்று விடும். இதன்பிறகு 24 மணிநேரமும் நீங்கள் சிரிப்போ சிரிப்புத்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொஞ்சச்சனம் ரோட்டுரோட்டாய் சிரிச்சுக்கொண்டு திரியப்போகுதப்பா.அதுசரி நாயோடை திரியிற ஆக்கள் கொஞ்சம் கவனம்.நீங்கள் அப்பப்ப சிரிக்க வெளிக்கிட நாய் உங்களை வித்தியாசமாக நினைக்கப்போகுது. :icon_idea:

Link to comment
Share on other sites

சிரிப்பது நல்லதுதான் ரசிகை ஆனால் கந்தப்பண்ணை சொன்னமாதிரியும் பக்கத்தில நிக்கிறவை

வித்தியாசமா பாப்பினம் அதனால கதவை புட்டிக்கொண்டு சிரிக்கவேண்டியதுதான்

சரி சிவா அப்ப கதவை பூட்டிட்டு சிரியுங்க எதுக்கும் கவனம் அப்புறம் வீட்டுக்காரங்க மகனுக்கு ஏதும் ஆச்சோ எண்டு..... :D

ஏன் கந்தப்பு, இப்பவே எலும்ப்பும் தோலுமா இருகிறிங்க! இன்னும் மெலிய வேண்டும் என்டு ஆசையா?

அதைத்தான் நானும் கேக்கணும் எண்டு நினைச்சனும் மூக்ஸ்

அப்படியானால் இதற்கு இலகுவான வழி நீங்கள் முதலில் ஒருவரை அல்லது பலரை காதலிக்க வேண்டும்! காதலிக்க தொடங்கிவிட்டால் விரைவில் உங்கள் மேல்வீடு கழன்று விடும். இதன்பிறகு 24 மணிநேரமும் நீங்கள் சிரிப்போ சிரிப்புத்தான்!

அட மாப்ஸ் அதுதானோ ஒரே சிரிக்கிறார் :o:o:D:D

இனி கொஞ்சச்சனம் ரோட்டுரோட்டாய் சிரிச்சுக்கொண்டு திரியப்போகுதப்பா.அதுசரி நாயோடை திரியிற ஆக்கள் கொஞ்சம் கவனம்.நீங்கள் அப்பப்ப சிரிக்க வெளிக்கிட நாய் உங்களை வித்தியாசமாக நினைக்கப்போகுது. :)

:D:lol::lol::lol::lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி வயிறு வலிக்க சிரித்தால் வருடத்திற்கு 40 கிராம் கொழுப்பு கரையுமாம்.

பிறகு வயிற்று வலிக்கு எங்க மருந்துக்குப் போறது?

Link to comment
Share on other sites

பிறகு வயிற்று வலிக்கு எங்க மருந்துக்குப் போறது?

தம்பி வயுத்துவலி எண்டால் வெந்தயம் விழுங்கினீர் எண்டால் நிக்கும் நிக்காட்டி சொல்லும் வேற நல்ல வலிக்கிற மருந்தா சொல்லுறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி வயுத்துவலி எண்டால் வெந்தயம் விழுங்கினீர் எண்டால் நிக்கும் நிக்காட்டி சொல்லும் வேற நல்ல வலிக்கிற மருந்தா சொல்லுறன்

எத்தனை கிலோ வெந்தயம் சாப்பிட வேணும்?

Link to comment
Share on other sites

எத்தனை கிலோ வெந்தயம் சாப்பிட வேணும்?

:angry: :angry: :angry: ஒரு கால்கிலோ சாப்பிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி விழூந்து விழுந்து சிரிப்பதால் கால் கை முறிந்தால் :D:D

Link to comment
Share on other sites

அது சரி விழூந்து விழுந்து சிரிப்பதால் கால் கை முறிந்தால் :D:lol:

நல்ல விசயம்தானே அப்படியே படுக்கைல இருந்து எல்லோரையும் ஏவலாம் அதைச் செய் இதைச் செய் எண்டு :P :P :P :D:D:lol:

Link to comment
Share on other sites

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

:D :D :lol: :lol: :lol: :lol: :o :o :):D :D :D:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :D

Link to comment
Share on other sites

உங்களது பிள்ளையா? :lol::lol::lol:

மாப்ஸ் பாவம் எண்டு சிரிப்பு வராத ஆக்களுக்கு ஒண்டை பிடிச்சு போட்டால். உந்த விடுப்பு விண்ணானம் எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறியள். :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஏன் கந்தப்பு, இப்பவே எலும்ப்பும் தோலுமா இருகிறிங்க! இன்னும் மெலிய வேண்டும் என்டு ஆசையா?

அதைத்தான் நானும் கேக்கணும் எண்டு நினைச்சனும் மூக்ஸ்
என்னைப் பார்க்க உங்களுக்கு சிரிப்பாய் இருக்குதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்தால் மெலிவினம் எண்டதில் நம்பிக்கையில்லை. தமிழ் சினிமாவில்இருக்கின்ற மதன்பாபு எப்போது பார்த்தாலும் சிரிச்சுக் கொண்டே இருப்பார்.ஆனால் நல்ல மொத்தமான ஆள் தானே! எப்போதும் முகத்தை உம் எண்டு வைச்சிருக்கின்றவர் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் கூட அவ்வளவு மொத்தமில்லை.

ஏன் அனுரா பண்டாரநாயக்கவை ஆரும் திட்டிப் பேசினால் கூட அந்த ஆள் முதலில் சிரித்த பின்னர் தான், யோசிக்கும். ஆனால் ஆள் இருந்து எழும்பு எண்டால் ஒரு தடவை கூட முடியாது.

அதனால் என் பரிசோதனை முடிவில், நான் சொல்லவாறது என்னவென்றால், சிரித்தால் மெலியமாட்டினம். மெண்டல் ஆவினம் என்பது தான். :lol::lol:

( இப்படி என் கண்டுபிடிப்பிடிப்புக்கும் ஏதாவது பதவி போட்டுத் தாங்கோ :lol: )

Link to comment
Share on other sites

:lol::lol: அக்கா இதை பார்த்து யாரும் ரூமை பூட்டிட்டு இருந்து சிரிச்சுட போறாங்க..அப்புறம் பாவம் பக்கத்து வீட்டுக்காரங்க. என்னவோ ஏதோ எண்டு பயந்துட்டா?? :P
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.