1991. 06.12 அன்று
மகிழடித்தீவு கிராமம்
இரண்டாவது படுகொலையை
எதிர் கொண்டது.
எரிகிறது வீரம் நிறைந்த மண்
உருகிறது உயிர்கள்
கருகிறது உறவுகள்
ஓடுகிறார்கள் எம் மக்கள்
கதறுகிறார்கள் வாலிபர்கள்
பாதகர்கள் கையில் யுவதிகள்
சிக்குண்டு தவிக்கிறார்கள்.
தஞ்சமடைந்தனர்
ஞானமுத்து குமாரநாயகத்தின்
அரிசி ஆலையிலே
துப்பாக்கிக்கு இரையாகி
வெந்த அனலில்
கருகிப் போகியது
எம் உறவுகள்.
தாயவள் முலைப்பால்
ஊட்டிய நிலையிலே
தான் பெற்றெடுத்த
கைக்குழந்தையுடன்
கறைபடிந்திருந்தாள்