Jump to content

Recommended Posts

நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் பட்டியல்

 

50B500A3-BEE2-40C8-A628-B359F09DC3A9.jpe

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் 40 வேட்பாளர் பட்டியலை மார்ச் 23 அன்று சீமான் அறிவித்தார். அவர்கள் விவரம்….

பெண் வேட்பாளர்கள்
“””””””””””””””””””””””””””””””

1.வட சென்னை – பி.காளியம்மாள் B.com, MBA

2.தென் சென்னை – அ.ஜெ.ஷெரின் MSC,Mphil

3.திருவள்ளூர் (தனி) –
ம.வெற்றிச்செல்வி
BA

4.காஞ்சிபுரம்(தனி) –
த.ரஞ்சனி
BCOM,MBA

5.புதுச்சேரி –
நி.ஷர்மிளாபேகம்
BA

6.வேலூர் –
தீபாலட்சுமி
BBA

7.விழுப்புரம்(தனி) –
பிரகலதா
BSc,MA,M.Ed

8.ஆரணி –
அ.தமிழரசி
MA.,Tamil

9.தருமபுரி –
ர.ருக்மணிதேவி
MSC,PHY.

10.ஈரோடு –
மா.கி.சீதாலட்சுமி
M.A.M.Phil

11.பொள்ளாச்சி –
அ.சனுஜா
MA.,M.phil

12.நீலகிரி(தனி) –
சே.மணிமேகலை
BE.

13.பெரம்பலூர் –
க.சாந்தி
MA,TAMIL,B.ED

14.கடலூர் –
சா.சித்ரா
Bcom.

15.மதுரை
க.பாண்டியம்மாள் –
MSc,Mphil,Phd

16.மயிலாடுதுறை –
கு.சுபாஷினி
BA

17.இராமநாதபுரம் –
தி.புவனேஸ்வரி
BSC

18.சிவகங்கை –
வே.சக்திப்பிரியா
MCA

19.நாகபட்டிணம்(தனி) –
பொ.மாலதி
B.Sc,B.L.

20.திருநெல்வேலி –
பா.சத்யா
Bsc

ஆண் வேட்பாளர்கள்
“”””””””””””””””””””””””””””””

1.கோவை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் M.Phil.,

2.திருப்பூர் – ப.ஜெகநாதன்
தொழிலதிபர்

3.கரூர் – மருத்துவர் கருப்பையா MBBS.,MS (ortho)mch

4.திருச்சி – வி.வினோத் Msc., Mphil

5.திண்டுக்கல் – மன்சூர் அலிகான் D.F.T.,

6.தென்காசி(தனி) – சி.ச.மதிவாணன் B.A.,

7.தேனி – சாகுல் அமீது தொழிலதிபர்

8.விருதுநகர் – கா.அருள்மொழிதேவன்L.L.M.,

9.தூத்துக்குடி – ச.கிறிஸ்டன்டைன்ராஜாசேகர் தொழிலதிபர்

10.கன்னியாகுமரி – வ.ஜெயன்றீன் DEEE.,

11.தஞ்சாவூர் –
புலவர் கிருட்டிணகுமார்
B.A

12,சிதம்பரம்(தனி) –
மு.சிவா ஜோதி
M.com

13.நாமக்கல் –
மருத்துவர் பாஸ்கர்
M.vsb.,.PHD

14.சேலம் –
ராஜாஅம்மையப்பன் இயற்கை விவசாயி

15.திருவண்ணாமலை –
மருத்துவர் ரமேஷ் பாபு
MDS

16.கள்ளக்குறிச்சி –
சர்புதீன்
B.A., L.L.B

17.அரக்கோணம் –
யு.ரா.பாவேந்தன்
M.A.,B.L.,

18.கிருட்டிணகிரி –
ந.மதுசூதனன்
M.C.A.,

19.மத்திய சென்னை –
கார்த்திகேயன்
மருத்துவர்

20 .திருப்பெரும்புதூர் –
ஈ ரா.மகேந்திரன்
B.com.,

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களுக்காக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும்: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

Published :  25 Mar 2019  12:44 IST
Updated :  25 Mar 2019  13:06 IST
D2F-sYdXcAES7w3jpg
 
மீனவ சமூகத்துக்கும், மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் எதிராக கடந்த ஐந்து வருடங்களாக வலுவாகக் குரல் கொடுத்து வருகிறார் காளியம்மாள், பி.காம்.பட்டதாரி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மாநில மீனவப் பெண் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளரரகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடசென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காளியம்மாள்.

சாமானிய மக்களின் குரலை தனது பேச்சுகளில் வெளிப்படுத்தி தமிழகத்தின் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இடையே பலரின் கவனத்தை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் காளியம்மாளிடம் ’இந்து தமிழ் திசை’ சார்பாக  நடத்திய நேர்காணல்.

வடசென்னை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட இருக்கிறீர்கள். இங்கு கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற பிரதான கட்சிகள் மக்களுக்கு செய்யத் தவறியதாக நீங்கள் பார்ப்பது? நீங்கள் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

குற்றச்சாட்டுகள் என்று ஒன்றுமில்லை. ஆனால் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களுடன் ஆலோசித்து அதற்கான தீர்வை எப்படிக் காண்பது என்பதன் அடிப்படையில்தான் வெளியிட வேண்டும். ஆனால் பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மக்களுடைய பங்களிப்பு இல்லை. மக்கள் பங்கேற்புள்ள ஒரு திட்டத்தை அமல்படுத்தினால்தான் அது சரியாக இருக்கும்.

இதை தவிர்த்துவிட்டு தன்னிச்சையாக கட்சிகளே ஒரு திட்டத்தைத் தயாரித்து அதனை மக்களிடம் திணிப்பது சரியானது அல்ல.

இவர்கள் மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளும் (எடுத்துக்காட்டுக்கு ஆர்கே நகரில் குப்பையை அகற்றுதல்) நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. மக்களின் தேவையை உணர்ந்துதான் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலே வடசென்னை பின்தங்கி இருக்காது. இங்குள்ள தொழிற்சாலைகளை எல்லாம் பார்க்கும்போது இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருந்தாலே இங்குள்ள மக்கள் வறுமையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி வடசென்னையோடு தொடர்புபடுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? இதற்முன்னர் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிடமிருந்து  நீங்கள் எவ்வாறு வேறுபடுவீர்கள்?

நாங்கள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள். வடசென்னையில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு நாகப்பட்டினத்தில் இருப்பவர்கள் வரக்கூடாது என்ற பிரிவு இருக்கும்வரைதான் மக்களை ஏமாற்ற முடியும். வேறுபாடில்லாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுகிறார்களோ அப்போது மக்களால் அவர்களை ஏமாற்ற முடியாது. இங்கிருப்பவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன்.  அதுமட்டுமில்லாது நான் களத்திலிருந்து வந்திருக்கிறேன்.

எங்கு பிரச்சினை இருக்கிறதோ அங்கிருந்து வந்திருக்கிறேன். நான் மேலோட்டமாக யாரோ கொடுத்த தேர்தல் அறிக்கையைப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை. நான் மக்கள் முன் சென்று அவர்கள் பிரச்சனையைக் கேட்கிறேன். அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று அவர்களிடம் விவாதிப்பேன். அதன் அடிப்படையிலான திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகத்தான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். மக்களுக்கு எதிராக மசோதா நிறைவேறினால் அதற்கு எதிராக என் வாதத்தை வலுவான தகவலுடன் முன் வைப்பேன். நான் மக்களுக்குள் மக்களாக இருக்கிறேன். இதிலிருந்துதான்  நான் அவர்களிடமிருந்து வேறுபடுகிறேன். எங்கள் கட்சியின் திட்டங்களும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுதான் இருக்கும்.

நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே நீங்கள் தேர்தலைத் தனித்து சந்திக்கிறீது. கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா? கடந்த தேர்தலில்  நீங்கள் அதிமுகவைத்தானே ஆதரித்தீர்கள்?

நான் முதலில்  ஒருகட்சியைப் பற்றி விமர்சிக்கிறேன்.. அதே நேரத்தில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதில் எனக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக  நான் வைத்த விமர்சனத்தை அந்தக் கட்சி மாற்றிக் கொள்வதற்கு முன்னதாகவே நான் அவர்களுடன் கூட்டணி வைப்பது முரணாகத்தானே இருக்கும். அதுமட்டுமில்லாது நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறோம். கருத்தியல் ரீதியான விமர்சனங்களை அவர்கள் மீது வைத்தோம். அதிமுகவும் பாஜகவை விமர்சித்திருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றால் இது சந்தர்ப்பவாத கூட்டணி. இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியானதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

சூழியலுக்கு கேடு விளைவிக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் பிரதானமாக வடசென்னையிலேயே ஒதுக்கப்படுவதால் இங்கு சூழல் மாசு அதிகம். இதற்கும் வடசென்னை மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர் பிரச்சினைக்கும் நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள்?

வடசென்னையில் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பல தொழிற்சாலைகள் உள்ளன. உதாரணத்துக்கு இரும்புத் தொழிற்சாலைக்குக் கூட தண்ணீர் தேவைப்படும். ஏன் அவை பெரும்பாலும் வடசென்னையின் கடலோரங்களில் அமைக்கப்படுகின்றது.இதனால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை எளிதாக கடல் தண்ணீரில் கொட்டிவிடலாம் என்ற நோக்கமும்,  தண்ணீர் தேவையும் அந்த தொழிற்சாலைகளுக்கு இருக்கிறது.

நம் நாட்டை எப்படி பிற நாடுகள் குப்பைத் தொட்டியாகப் பார்க்கிறதோ அதே மாதிரி நம் நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் கடலை குப்பைத் தொட்டியாகப் பார்க்கின்றன. இவ்வாறே மக்களுக்குத் தேவையான  நிலத்தடி நீரை உறிஞ்ச தொழிற்சாலைகள் இங்கு ஒதுக்கப்படுகின்றன. இங்கு தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. இத்தொழிற்சாலைகள் எவ்வளவு ஆழம் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துகிறார்கள்? ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இவர்கள் அளிக்கக் கூடிய ஆய்வறிக்கைகள்  எல்லாம் சரியாகச் சென்று சேர்கிறதா? அவர்களது தொழிற்சாலைகள் மாசு சார்ந்து சோதனை நடத்தி இருக்கிறார்களா?  இதன் முடிவுகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதா? இந்தத் தொழிற்சாலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அனுமதி இருக்கிறதா? என இம்மாதிரியான விஷயங்களை எல்லாம் யாரும் கவனிப்பது இல்லை. இதனுடைய விளைவுதான் நெருக்கடியான நிலையிலும் தொழிற்சாலைகள் அங்கு வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் குடிசை வாழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பெரிய முரண்பாடுதானே. இங்கு மக்களுக்கு பட்டா இல்லாததால் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்கிறார்கள். மக்கள் வாழ்வதற்கான சூழலைக் கெடுத்து தொழிற்சாலைகள் அமைக்க நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. சூழலைக் கெடுக்காத இடங்களிலேயே தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றினாலே தண்ணீர்  பிரச்சினை தீர்க்கப்படும். எங்கெங்கு குளங்கள், ஆறுகள் எல்லாம் அபகரிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும். இதைச் சொன்னால் இதுவெல்லாம் நடக்கற காரியமா என்று சிலர் சிரிப்பார்கள். ஆனால் கேரளாவில் இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.  இதனை நடைமுறைப்படுத்தும்போது நிலத்தடி நீர் நிச்சயம் பாதுகாக்கப்படும். 

வடசென்னையைப் பொறுத்தவரை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்கான தீர்வாக எதை முன்மொழிவீர்கள்?

இதுவரையில் இருந்த அரசியல் கட்சிகள் அந்தக் குப்பைக் கிடங்கை அகற்றுவதற்கான பணியைச் செய்வோம் என்றுதான் கூறியுள்ளன. ஆனால் அந்தக் குப்பைகளை மறு சுழற்சி செய்து எப்படிப் பயன்படுத்த முடியும், எதைப் பயன்படுத்த முடியாது என்று அறிவியல் தொழில்நுட்பமாகப் பார்க்கும் திட்டத்தை இதுவரை யாரும் சமர்ப்பித்ததாக நான் பார்க்கவில்லை.

நீங்கள் மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் குப்பைகளை மறுசுழற்சி செய்து அதனை உரமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால் குப்பைகளை அகற்றும் விவாதமே இங்கு வைக்கப்படுகிறது.

இங்கிருந்து குப்பைகளை அகற்றி இன்னொரு இடத்தில்தான் வைக்கப்போகிறார்கள். எனவே அந்தந்த பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய, மறுசுழற்சி மையம் அமைத்திருந்தார்கள் என்றால், இவ்வளவு குப்பை இங்கு சேர வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகாலத் திட்டத்தை வரையறை செய்வேன்.

வடசென்னையில் சிறு குறு தொழிலாளர்கள் அதிகம்.அவர்கள் பெரும்பாலும்  தனித்து இயங்குகின்றனர். அவர்கள் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன?

இன்றைக்கு தொழிலாளர் நலச் சட்டம் உள்ளது. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு உள்ளது. ஆனால் இவர்களது தரவு தமிழக அரசிடம் இருக்கிறதா? முதலில் அந்தத் தகவல் தேவை. வெறும் நல வாரியம் அமைப்பது மட்டுமே போதாது. வடசென்னையில் ஒருங்கிணைக்கப்பட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் பெரும்பாலும் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தரவுகள் இல்லாததால் உறுப்பினர்களைக் கண்டறிவது கடினமாகிறது. எனவே இவர்களைப் பற்றிய முறையான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்களது தேவையை நாம் நிறைவேற்ற முடியும்.

முதல்கட்டமாக இந்த தொழிலாளர்களை நான் ஒன்று சேர்க்க நினைக்கிறேன். அதன்பின்னர்தான் அவர்களுக்கான திட்டங்களை வரையறை செய்ய முடியும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் எண்ணிக்கை வடசென்னையில் அதிகம். இதன் காரணமாக இங்கு குற்றப் பின்னணி கொண்ட இளைய தலைமுறை காலம் காலமாக உருவாகிக் கொண்டுதான் வருகிறது? இவர்களை அரசியல் கட்சிகளும் காலம் காலமாகப் பயன்படுத்திதான் வந்திருக்கின்றன.  இப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் பார்வை என்ன?

நல்ல வீடு, பொருளாதாரச் சுமை இல்லாத வாழ்க்கை இருந்தால் யாரும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக நிச்சயம் உருவாக மாட்டார்கள். சிறையில் இருக்க வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா? இதற்கு அவர்களையே குற்றம் சொல்ல முடியாது. இந்த வாழ்க்கையைத் தராதது அரசின் குற்றம் தான். 

படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் திறன் சார்ந்த அரசு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொருவரின் தனித்திறமையைக் கண்டறிய வேண்டும். இதை நிறைவேற்றினால் அந்த இளைஞர்கள் குற்றப் பின்னணியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மீனவப் பின்னணியைச் சேர்ந்த நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் மீனவர்களுக்காக உங்கள் குரல் எவ்வாறு ஒலிக்கும்?

நிச்சயம் மீனவர்களுக்குகாக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும். 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது எனது முதல் கோரிக்கையாக இருக்கும். இரண்டாவது சாகர் மாலா திட்டம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நீக்கப்பட வேண்டும். மூன்றாவது பழங்குடி மக்கள் பட்டியலில் எங்களையும் சேர்த்து எங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

கடலோரங்களில் வாழும் பூர்வீக மக்களுக்கு அவர்கள் வாழும் இடத்துக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் மீன் பிடிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும்.

கடலோரக் காவல்படையில் 70% பேர் மீனவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். மீனவப் பெண் தொழிலாளர்களை அங்கீரித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை ஒதுக்க வலியுறுத்தப்படும் என்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன் வைப்பேன்.

நாம் தமிழர் கட்சி பொதுவாக தமிழர்களையே முன்னிறுத்துகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில்?

மொழி சாகும்போது அந்த இனமும் செத்துவிடும். தமிழ் மொழியை யார் நேசிக்கிறார்களோ அவர்களை முன் நிறுத்துவதுதான் நாம் தமிழரின் முக்கியக் கொள்கை. தமிழர் இனத்தை தமிழரே ஆள வேண்டும் என்பது நியாயம்தானே.இப்பவும் நாங்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என்றுதான் கூறுகிறோம். இங்குள்ள பிற மொழிகளுக்கான நலத்திட்டங்களையும் சேர்த்து தானே நாங்கள் குரல் கொடுக்கிறோம். இதில் சாதி, மதம், இனம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை.

இறுதியாக வடசென்னை மக்களுக்கு நீங்கள் கூறுவது?

நாம் மாற்றங்களைத் தேடுகிறோம். ஆனால் அதற்கான அடியை எடுத்து வைப்பதில்லை. நம்மிலிருந்து வரும் வேட்பாளர்களை இனம் கண்டு நமது பிரதிபலிப்பாக அவர்கள்  நாடாளுமன்றத்தில் பேசுவார்கள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வாக்களித்துது தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கான காலம் பிறக்கும். 

எனவே நிச்சயமாக வடசென்னை மக்கள் அடித்தட்டு சமூகத்திலிருந்து வந்த எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article26631563.ece

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம்

Published :  25 Mar 2019  16:31 IST
Updated :  25 Mar 2019  16:32 IST
 
download-7jpg

சீமான்: கோப்புப்படம்

 

தமிழ்ப் பெண்கள் குறித்துக் கீழ்த்தரமாகப் பதிவிட்ட ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

5452476021122618290299564008321994708746
 

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

அதில், ''பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

பாஜக குண்டர்கள் நாம் தமிழர்மீது தாக்குதல்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

 

சீமானின் சிந்திக்க வைக்கும் பேச்சு.
தமிழ்நாடே கொஞ்சம் சிந்தி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Nathamuni said:

 

இணைப்புக்கு நன்றி நாதம்.
இப்படியே ஆதரவு கூடிக் கொண்டு போனால் அதை சிதைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15 வது நிமிடத்திலிருந்து கேழுங்கள்.தமிழநாட்டை தமிழனே ஆழ வேண்டுமென்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.