Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பொழுதுபோக்கு தரும் சீமான் பேச்சு!

Published :  16 Apr 2019  09:29 IST
Updated :  16 Apr 2019  09:29 IST
8018637dP2182227mrjpg
 

திமுக-அதிமுக என்ற இரு பிரதான மாநிலக் கட்சிகள், காங்கிரஸ்-பாஜக எனும் இருபெரும் தேசியக் கட்சிகள் இரண்டுக்கும் மாறாகத் தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘நாம் தமிழர்’ சீமானின் உரத்த குரல். தனியொருவராக அக்கட்சியின் 58 வேட்பாளர்களுக்கும் வாக்கு வேட்டையாடும் சீமானின் பிரச்சாரம் எப்படியிருக்கிறது?

எந்த சித்தாந்தத்தையும், எந்தக் கட்சியின் கொள்கையையும் அறிந்திராத ‘வெள்ளைக் காகிதம்’ போன்ற இளந்தலைமுறை, தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் சீமானின் பேச்சால் ஈர்க்கப்படுகிறது. ‘எந்திரன்’ சிட்டிபோல தன்னைப் போலவே சிந்திக்கிற, தன்னைப் போலவே பேசுகிற தம்பிகளை உருவாக்கியிருக்கும் சீமான், வாகனப் பிரச்சாரத்தை... மன்னிக்கவும் வாகனப் ‘பரப்புரை’யை முற்றாகத் தவிர்க்கிறார். மார்ச் 25 தொடங்கியது அவரது பரப்புரை. தினமும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள். இரண்டுமே மாலையில்தான். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6 கூட்டங்கள்.

அருவிபோல் கொட்டும் பேச்சு

தூத்துக்குடியிலும் சிவகாசியிலும் பிரச்சாரம் என்றால் தூத்துக்குடியில் அறையெடுத்துத் தங்குகிறார். மாலை 6 மணிக்கு முதல் பொதுக்கூட்டம். அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களை அருகில் நிற்க வைத்துக்கொண்டு, சீமான் ஒலிவாங்கியைப் பிடித்தால் குறைந்தது ஒன்றேகால் மணிநேரம் பேசுகிறார். அது வெறுமனே மேடைப்பேச்சல்ல; கருத்தரங்கம், ஓரங்க நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

முடித்துவிட்டு சுமார் 50 முதல் 100 கிலோ மீட்டர் காரில் பயணித்து அடுத்த பொதுக்கூட்ட மேடையை இரவு 8.30-க்குள் அடைகிறார். பிறகு, அங்கேயும் ஒன்றரை மணி நேரப் பேருரை. கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் அருவிபோல கொட்டுகிறார். இடையிடையே நகைச்சுவை சொல்லிச் சிரிப்பு மூட்டுகிறார். நகைச்சுவைக்கு இடையிலேயே அவரே ஒரு மாதிரியாகச் சிரிப்பதைப் பார்த்து கூட்டம்  மேலும் சிரிக்கிறது.

மேற்கூரையற்ற மேடை. ஒற்றைச் சுவர்போல நிற்கும் பதாகையில், ‘வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்’ என்ற வாசகம் சிறிதாகவும், ‘புதியதோர் தேசம் செய்வோம், புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற வாசகம் பெரிதாகவும் இருக்கின்றன. திருவள்ளுவர், பிரபாகரன் படங்களுடன் சீமான், அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களின் படங்களும் விவசாயி சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.

சாலையோரத்தில் சாப்பாடு

இரவுக் கூட்டம் முடிந்ததும் அவர் தனது காரில் செல்ல, கருஞ்சட்டையும் கருப்பு குளிர்க் கண்ணாடியும் அணிந்த தொண்டர் படையொன்று பாதுகாப்புக்காக சீமானைப் பின்தொடர்கிறது. கூடவே, அவரது ஊடகத் துறை (யூடியூப் சேனல், நாம் தமிழர் இணையதளம்) வாகனமும். அவரது வாகனம் புறப்படுகையிலேயே உணவுப் பொட்டலங்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். அடுத்த நாள் பேச வேண்டிய ஊரை நோக்கி இரவிலேயே கார் விரைகிறது. போகிற வழியில் ஏதாவது வெளிச்சமான இடத்தில் கார் நிற்க, சீமானும் அவரது தம்பிகளும் உணவருந்துகிறார்கள். அறையைச் சென்றடைந்து தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணியாகிவிடுகிறது.

பொதுவாக, உடல் நலத்தில் தீவிர அக்கறை எடுத்துக்கொள்பவர் சீமான். உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று, அனைத்து விதமான உபகரணங்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்வது அவரது வழக்கம். வெளியூர்ப் பயணங்களின்போது குறைந்தபட்சம் கட்சி நிர்வாகி களுடன் அருகில் உள்ள மைதானத்துக்குச் சென்று எளிய பயிற்சிகளிலாவது ஈடுபடுவார். ‘‘தொடர் பரப்புரைப் பயணங்களால் காலையில் எழுவதற்கு 8 மணியாகிவிடுவதாலும், அதற்குள்ளாக சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதாலும் உடற்பயிற்சியை முற்றாகக் கைவிட்டுவிட்டார். எனவே, அசைவ உணவுகளையும் முடிந்தவரையில் தவிர்க்கிறார். காலையில் சிறிது சிற்றுண்டி, மதியம் தம்பிகள் வீட்டிலிருந்து வருகிற எளிய உணவு, இரவில் பொட்டல உணவு’’ என்கிறார்கள் தம்பிகள்.

என்ன பேசுகிறார் சீமான்?

புகைவண்டிபோல மெல்ல ஓட ஓரம்பித்து, வேகமெடுத்து, தடதட தடதடவென ஓடி, இடையில் ஓவென்று குரலெழுப்பிக் கூட்டத்தைத் திடுக்கிட, புல்லரிக்க வைக்கும் பேச்சு பாணி சீமானுடையது. திருவள்ளுவர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவணர் போன்றோரின் கருத்தோடு பேச்சு மெல்லத் தொடங்குகிறது. “50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம், இவ்வளவு மூத்த இனத்தின் மக்கள் இன்று நாட்டை இழந்து, மொழியை இழந்து, பரந்த நிலப்பரப்பின் காலடியில் வந்து நிற்கிறார்கள். தமிழ் எழுச்சியே தமிழர் எழுச்சி. அதற்கு இறுதி வாய்ப்பு இந்தத் தேர்தல். வட இந்தியர்கள் 70 லட்சம் பேர் தமிழகத்தில் புதிதாக வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே துறையில் வட இந்தியர்களைக் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். எதிர்காலத்தில் இந்த மண்ணை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் அவர்கள் இருப்பார்கள். தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் செய்தது என்ன? முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினைக்குக் காரணமான தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. சுழற்சி முறையில் பிரதமர் பதவி. மாற்று அரசியலுக்கு வாக்களியுங்கள், மானத் தமிழினத்துக்கு வாக்களியுங்கள்” என்று பேசுகிறார் சீமான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி குறைந்தது 30 நிமிடம் பேசுவது வேறு எந்தத் தலைவரும் கடைப்பிடிக்காத நல்ல விஷயம்.

நோட்டணி சீட்டணி பெரும் பிணி

அதிமுக கூட்டணி பற்றிப் பேசுகையில், “இது கூட்டணி அல்ல, நோட்டணி, சீட்டணி, தமிழ்நாட்டிற்கான சனி, பெரும் பிணி” என்று அடுக்குமொழியில் அசத்துகிறார். தனக்கு இரட்டை மெழுகுவத்தி, காளை மாடு போன்ற சின்னங்கள் மறுக்கப்பட்ட காரணங்களை வேடிக்கையாகச் சொல்லி கவனத்தை ஈர்ப்பதோடு, ஓட்டு இயந்திரத்தில் ‘விவசாயி’ சின்னம் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். தனது வேட்பாளர்களில் 50% பேர் பெண்கள் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். மேடையில் அவர் பேசும்போது அருகே நிற்கும் அந்தத் தொகுதி வேட்பாளர்கள் மற்ற கட்சியினரைப் போல கையெடுத்துக் கும்பிடுவதில்லை; அவரைப் போலவே அடிக்கடி முழங்கையை உயர்த்திக்காட்டுகிறார்கள்.

இப்போதெல்லாம் ‘வந்தேறி’ என்ற வார்த்தைப் பயன்பாட்டையும், இனவெறிப் பேச்சையும் தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார் சீமான். “சோழ முப்பாட்டன் காலத்தில் ஒரே கப்பலில் மூவாயிரம் யானைகளை ஏற்றிக்கொண்டு போகும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது” என்று அவ்வப்போது அள்ளிவிடுவதும்கூடக் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் கூடும் கூட்டத்தைப் போல 10 மடங்கு பேர் அவரது காணொளிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். கூடுகிற கூட்டமும் இணையத்தின் ரசிகர் கூட்டமும் அவருக்கு வாக்காக மாறுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, திமுக கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்கில் சீமான் சேதத்தை விளைவிக்கக்கூடும் என்றே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

https://tamil.thehindu.com/opinion/columns/article26851282.ece?utm_source=HP&utm_medium=hp-editorial

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?- ஒரு உளவியல் பார்வை

Published :  17 Apr 2019  22:13 IST
Updated :  17 Apr 2019  22:13 IST

TamilNewslarge1696004jpg

கோப்புப் படம்

தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் உள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம் வாக்காளர்கள் 2.65 கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலாக உள்ளதால் அவர்கள் மனநிலை என்ன என்பது குறித்த ஒரு உளவியல் பார்வை.

இந்த தேர்தல் என்ன ஸ்பெஷல்? 18, 19 வயது வாக்காளர்கள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். 20 லிருந்து 29  வயதுள்ள வாக்காளர்கள்:  1 கோடியே 18.5 லட்சம் பேர், 30 லிருந்து 39  வயதுள்ள வாக்காளர்கள்: 1 கோடியே 38.5 லட்சம் பேர். மொத்தமாக இளம் வாக்காளர்கள் 2.69 கோடிபேர். இவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்கிற பதைபதைப்பை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காணமுடிகிறது.

அதற்கு முன் ஒரு தகவல், ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லாத தேர்தல். அதன் அர்த்தம் என்னவென்றால் தலைவர்கள் இல்லாமல் பிரச்சினைகள் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது என்பதே யதார்த்தம்.

முற்றிலும் புதிதாக பிரச்சினைகள் அடிப்படையில் இந்தத்தேர்தல் நடக்கிறது. புதிதாக கட்சிகள் களத்தில் சவாலாக நிற்கின்றன. ஆகவே வழக்கமான கட்சிகள், கூட்டணிகளுக்கு வாக்குகளா? பிரச்சினை அடிப்படையில் வாக்குகளா? என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் உள்ளது.

 

பொதுவான வாக்காளர்கள் 50 சதவீதத்தினர் உள்ளனர். பணத்துக்கு வாக்களிப்பது, பாரம்பரிய கட்சிக்கு வாக்களிப்பது, போன முறை இவரா இந்த முறை இவருக்கு போடலாம் என்கிற மனநிலை என இவர்களை கூறலாம். ஆனால் மறுபுறம் 45 சதவீதம் இருக்கிறார்களே இளம் வாக்காளர்கள் அவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக இருக்க போகிறார்கள்.

ஒன்று வெற்றியை தீர்மானிக்கும் வாக்காக இருக்கப்போகிறார்கள் அல்லது வாக்குகளை பிரிப்பதன்மூலம் வெற்றி பெறுபவர்களை பாதிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள். இவர்களை ஏன் குறிவைத்து எழுதவேண்டும் என்பதற்கு இரண்டு வகையில் பதில் அளிக்கலாம். ஒன்று இன்றுள்ள புறக்காரணிகள் மற்றும் உளவியல் ரீதியான அணுகு முறைகள்.

அதற்கு முன் இளம் வாக்காளர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதைப்பார்ப்போம்.

பாரம்பரியமாக குடும்பமே ஒரு கட்சி சார்ந்து இருக்கும். இவரும் அதைப்பின்பற்றி வாக்களிப்பார்.

ரசிகராக இருப்பார் தனது அபிமான நடிகருக்காக வாக்களிப்பார்.

சில அரசியல்வாதிகளை பிடிக்காது அதனால் எதிர்முகாமில் உள்ளவருக்கு வாக்களிப்பார்.

யாராவது புதிதாக சீரிய கருத்துக்களை பேசுவார் அவருக்கு வாக்களிப்பார்.

அரசியலே வேண்டாம் என வீட்டில் படுத்து தூங்குவார்.

கடந்த சில ஆண்டுகளாக நோட்டாவுக்கு போடுகிறார்கள்.

இப்போது புறக்காரணிகளுக்கு வருவோம்.

புறக்காரணிகள்:

60 களில் 70 களில் 80 களில் அப்போது இருந்த இளைஞர்களுக்கு இருந்த மிகப்பெரிய தகவல் தொடர்பே தெருவோர கூட்டம், பொதுக்கூட்டம், சினிமா, பேப்பர் செய்தி மட்டுமே.

அதன் பின்னர் வந்த காலக்கட்டங்களில் தொலைக்காட்சிகள் பிரச்சாரத்தை கொண்டுச் சேர்ப்பதிலும், கருத்தை உருவாக்குவதிலும் பங்கு வகித்தன. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் ஆளுமை செலுத்தியதும் உண்டு.

அனைத்தையும் அடுத்தடுத்த நொடியில் அலசவும், மற்ற மாநில, மற்ற நாட்டு அரசியலுடன் ஒப்பிடும் வசதிகளும் நம் பாக்கெட்டில் உள்ள செல்போனுக்குள் வந்தப்பின்னர் இன்றைய இளம் தலைமுறையினர் பார்வையும் மாறித்தான் போயுள்ளது.

எங்களுக்கு கற்றுத்தராதீர்கள் என்கிற மனோபாவத்துடன் ஆனால் அது விஷய ஞானமில்லா எண்ணமல்ல எல்லாம் அறிந்து வருகிறோம் என்கிற நிலையுடன் இருக்கும் இளம் தலைமுறை உள்ளது.

உளவியல் பார்வை:

உளவியல் ரீதியாக இன்றை இளம் வாக்காளர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

 

இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் மன நிலை எப்படி இருக்கும் உளவியல் நிபுணராக எப்படி பார்க்கிறீர்கள்?

இளம் வாக்காளர்களைப் பொருத்தவரை நிறைய விழிப்புணர்வு உள்ளது. நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கூகுள், சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமானோர் அரசியலில் தங்களை அறியாமல் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

இன்றைய இளம் வாக்காளர்கள் இன்றைய அரசியலுக்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர வாய்ப்புள்ளது. நான் பேசியவரை நிறைய இளைஞர்கள் வழக்கமான கட்சிகளைவிட புதிதாக பல கருத்துக்களை பேசும் கட்சிகளை விரும்பும் மன நிலையில் உள்ளனர். இந்த தேர்தல் இந்திய அளவில் நடக்கும் தேர்தலாக இருந்தாலும்கூட மாநில அளவில் புதிதாக கருத்துக்கூறும் கட்சிகளை ஆதரித்தால் என்ன என்கிற ரிஸ்க் எடுக்கும் மன நிலையில் உள்ளனர்.

வழக்கமாக பெற்றோர் கூறும் கட்சிக்கு வாக்களிப்பது, குடும்பமே கட்சி சார்ந்து இருப்பது இப்படிப்பட்ட மனநிலையில் தானே இருப்பார்கள்?

நீங்கள் சொல்லும் மன நிலையில் எந்த இளைஞரும் இன்று இல்லை.  தந்தை ஒருவர் நான் இந்த கட்சிக்கு ஓட்டுப்போடுகிறேன் நீயும் அதற்கு போடு என்று சொன்னால் ‘முடியாது அப்பா நான் என் மனதுக்கு உகந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன்’ என்று மறுக்கிற மன நிலையில்தான் உள்ளனர்.

அப்படிப்பட்ட இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் முன் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இல்லை. அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது. அப்படியே தந்தையின் மன நிலைக்கு ஏற்ப வாக்களிக்கும் மன நிலை வருவது 10 அல்லது 20 சதவீதம் இருந்தால் பெரிய விஷயம். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு தங்கள் எண்ணப்படி வாக்களிக்கும் மன நிலையில்தான் உள்ளனர்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம் வாக்காளர்கள் இப்போதுள்ள  இளம் வாக்காளர்கள் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?

அப்போதிருந்த இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறைவு, அறிவை விசாலப்படுத்தும் விஷயங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிரிண்ட், தொலைக்காட்சி, சோஷியல் மீடியாவிலும் சரி,  நாம் யாரை தேர்வு செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு நிறைய உள்ளது.

என்ன காரணிகளால் இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

என்ன காரணி என்றால் விழிப்புணர்வுதான் முக்கிய காரணியாக இருக்கமுடியும்.

விழிப்புணர்வு அந்த காலத்திலும் இல்லாமலா இருந்தது?

இருந்தது ஆனால் ஏற்கெனவே கூறியதுபோல் அறிவு விசாலத்துக்கான வாய்ப்புகள் குறைவு அல்லவா? அன்றைய இளம்தலைமுறையினருக்கு கிடைத்தது காலையில் பேப்பர், மாலையில் செய்தியில்மட்டுமே அல்லவா கிடைத்தது.

இன்று அப்படி அல்லவே, 24 மணி நேரமும் செல்போனிலும், நம்மைச்சுற்றியும் வாட்ஸ் அப், சமூக வலைதளம், செய்தி தளம், காட்சி ஊடகங்கள், கூகுள் தேடல்கள் என பல வகைகளிலும் அவர்களுக்கான அனைத்தையும் அவர்கள் அறியாமலே பார்த்து முடிவு செய்கிறார்களே, அந்த வாய்ப்பு அன்று இல்லை.

முன்னர் நிதானமான அணுகுமுறை இருந்தது, தற்போதுள்ள இளம் வாக்காளர்கள் அப்படி இல்லையே?

அதைத்தான் நானும் சொல்கிறேன், முன்னர் அவர்கள் மனதில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இந்த கட்சிக்குத்தான் போடப்போகிறோம் என்று. ஆனால் இன்று அப்படியல்ல நிமிடத்திற்கு நிமிடம் அனைவரின் இமேஜும் மாறுகிறது. காலையில் அவர்கள் வாக்களிக்கப்போகும் முன் ஆயிரம் மாற்றங்களை அரசியல் வாதிகள் குறித்து அறிகிறார்கள். அதை வைத்துத்தான் மன நிலையும் இருக்கும்.

நோட்டா ஒரு மாற்றமாக இருந்தது? இந்த தேர்தலில் அது எதிரொலிக்குமா?

இந்த தேர்தலில் நோட்டா பெரிதாக எதிரொலிக்காது. காரணம் அப்போது இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது அப்படியல்ல பல சிறிய கட்சிகள் கமல், சீமான் போன்றோர் எல்லாம் பல கருத்துக்களை வைக்கிறார்கள்.

இரண்டு ஆளுமைகள் இல்லாததும் இளம் தலைமுறையினர் மாற்றத்துக்கு காரணமாக அமையுமா?

அப்படி நான் நினைக்கவில்லை. இன்றுள்ள வசதிகளில் அவர்களுக்கு ஒவ்வொருவர் இமேஜும், அளவீடுகளும் தெரிகிறது, அதனால் இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்கிறேன்.

தற்போது நிறைய இளம் வாக்காளர்கள் நம் நாட்டை நமது வாக்கால் தீர்மானிக்கவேண்டும் என நினைக்கிறார்கள். முன்பு தேர்தல் நாள் என்றால் இழுத்துப்போர்த்தி தூங்குவார்கள் ஆனால் இம்முறை இளம் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள் வாக்களிக்க.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26867248.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2019 at 4:44 PM, இசைக்கலைஞன் said:

 

காவல்துறை (குறிப்பிட்ட நேர வேலை, சம்பளம்) உட்பட எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அண்ணன் சொல்வதை கேட்டிருப்பார்கள் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி, சீமான் இரு துருவ அரசியல் பிறக்குமா?" - ரவீந்திரன் துரைசாமி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.