Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பொழுதுபோக்கு தரும் சீமான் பேச்சு!

Published :  16 Apr 2019  09:29 IST
Updated :  16 Apr 2019  09:29 IST
8018637dP2182227mrjpg
 

திமுக-அதிமுக என்ற இரு பிரதான மாநிலக் கட்சிகள், காங்கிரஸ்-பாஜக எனும் இருபெரும் தேசியக் கட்சிகள் இரண்டுக்கும் மாறாகத் தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘நாம் தமிழர்’ சீமானின் உரத்த குரல். தனியொருவராக அக்கட்சியின் 58 வேட்பாளர்களுக்கும் வாக்கு வேட்டையாடும் சீமானின் பிரச்சாரம் எப்படியிருக்கிறது?

எந்த சித்தாந்தத்தையும், எந்தக் கட்சியின் கொள்கையையும் அறிந்திராத ‘வெள்ளைக் காகிதம்’ போன்ற இளந்தலைமுறை, தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் சீமானின் பேச்சால் ஈர்க்கப்படுகிறது. ‘எந்திரன்’ சிட்டிபோல தன்னைப் போலவே சிந்திக்கிற, தன்னைப் போலவே பேசுகிற தம்பிகளை உருவாக்கியிருக்கும் சீமான், வாகனப் பிரச்சாரத்தை... மன்னிக்கவும் வாகனப் ‘பரப்புரை’யை முற்றாகத் தவிர்க்கிறார். மார்ச் 25 தொடங்கியது அவரது பரப்புரை. தினமும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள். இரண்டுமே மாலையில்தான். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6 கூட்டங்கள்.

அருவிபோல் கொட்டும் பேச்சு

தூத்துக்குடியிலும் சிவகாசியிலும் பிரச்சாரம் என்றால் தூத்துக்குடியில் அறையெடுத்துத் தங்குகிறார். மாலை 6 மணிக்கு முதல் பொதுக்கூட்டம். அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களை அருகில் நிற்க வைத்துக்கொண்டு, சீமான் ஒலிவாங்கியைப் பிடித்தால் குறைந்தது ஒன்றேகால் மணிநேரம் பேசுகிறார். அது வெறுமனே மேடைப்பேச்சல்ல; கருத்தரங்கம், ஓரங்க நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

முடித்துவிட்டு சுமார் 50 முதல் 100 கிலோ மீட்டர் காரில் பயணித்து அடுத்த பொதுக்கூட்ட மேடையை இரவு 8.30-க்குள் அடைகிறார். பிறகு, அங்கேயும் ஒன்றரை மணி நேரப் பேருரை. கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் அருவிபோல கொட்டுகிறார். இடையிடையே நகைச்சுவை சொல்லிச் சிரிப்பு மூட்டுகிறார். நகைச்சுவைக்கு இடையிலேயே அவரே ஒரு மாதிரியாகச் சிரிப்பதைப் பார்த்து கூட்டம்  மேலும் சிரிக்கிறது.

மேற்கூரையற்ற மேடை. ஒற்றைச் சுவர்போல நிற்கும் பதாகையில், ‘வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்’ என்ற வாசகம் சிறிதாகவும், ‘புதியதோர் தேசம் செய்வோம், புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற வாசகம் பெரிதாகவும் இருக்கின்றன. திருவள்ளுவர், பிரபாகரன் படங்களுடன் சீமான், அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களின் படங்களும் விவசாயி சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.

சாலையோரத்தில் சாப்பாடு

இரவுக் கூட்டம் முடிந்ததும் அவர் தனது காரில் செல்ல, கருஞ்சட்டையும் கருப்பு குளிர்க் கண்ணாடியும் அணிந்த தொண்டர் படையொன்று பாதுகாப்புக்காக சீமானைப் பின்தொடர்கிறது. கூடவே, அவரது ஊடகத் துறை (யூடியூப் சேனல், நாம் தமிழர் இணையதளம்) வாகனமும். அவரது வாகனம் புறப்படுகையிலேயே உணவுப் பொட்டலங்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். அடுத்த நாள் பேச வேண்டிய ஊரை நோக்கி இரவிலேயே கார் விரைகிறது. போகிற வழியில் ஏதாவது வெளிச்சமான இடத்தில் கார் நிற்க, சீமானும் அவரது தம்பிகளும் உணவருந்துகிறார்கள். அறையைச் சென்றடைந்து தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணியாகிவிடுகிறது.

பொதுவாக, உடல் நலத்தில் தீவிர அக்கறை எடுத்துக்கொள்பவர் சீமான். உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று, அனைத்து விதமான உபகரணங்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்வது அவரது வழக்கம். வெளியூர்ப் பயணங்களின்போது குறைந்தபட்சம் கட்சி நிர்வாகி களுடன் அருகில் உள்ள மைதானத்துக்குச் சென்று எளிய பயிற்சிகளிலாவது ஈடுபடுவார். ‘‘தொடர் பரப்புரைப் பயணங்களால் காலையில் எழுவதற்கு 8 மணியாகிவிடுவதாலும், அதற்குள்ளாக சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதாலும் உடற்பயிற்சியை முற்றாகக் கைவிட்டுவிட்டார். எனவே, அசைவ உணவுகளையும் முடிந்தவரையில் தவிர்க்கிறார். காலையில் சிறிது சிற்றுண்டி, மதியம் தம்பிகள் வீட்டிலிருந்து வருகிற எளிய உணவு, இரவில் பொட்டல உணவு’’ என்கிறார்கள் தம்பிகள்.

என்ன பேசுகிறார் சீமான்?

புகைவண்டிபோல மெல்ல ஓட ஓரம்பித்து, வேகமெடுத்து, தடதட தடதடவென ஓடி, இடையில் ஓவென்று குரலெழுப்பிக் கூட்டத்தைத் திடுக்கிட, புல்லரிக்க வைக்கும் பேச்சு பாணி சீமானுடையது. திருவள்ளுவர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவணர் போன்றோரின் கருத்தோடு பேச்சு மெல்லத் தொடங்குகிறது. “50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம், இவ்வளவு மூத்த இனத்தின் மக்கள் இன்று நாட்டை இழந்து, மொழியை இழந்து, பரந்த நிலப்பரப்பின் காலடியில் வந்து நிற்கிறார்கள். தமிழ் எழுச்சியே தமிழர் எழுச்சி. அதற்கு இறுதி வாய்ப்பு இந்தத் தேர்தல். வட இந்தியர்கள் 70 லட்சம் பேர் தமிழகத்தில் புதிதாக வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே துறையில் வட இந்தியர்களைக் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். எதிர்காலத்தில் இந்த மண்ணை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் அவர்கள் இருப்பார்கள். தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் செய்தது என்ன? முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினைக்குக் காரணமான தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. சுழற்சி முறையில் பிரதமர் பதவி. மாற்று அரசியலுக்கு வாக்களியுங்கள், மானத் தமிழினத்துக்கு வாக்களியுங்கள்” என்று பேசுகிறார் சீமான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி குறைந்தது 30 நிமிடம் பேசுவது வேறு எந்தத் தலைவரும் கடைப்பிடிக்காத நல்ல விஷயம்.

நோட்டணி சீட்டணி பெரும் பிணி

அதிமுக கூட்டணி பற்றிப் பேசுகையில், “இது கூட்டணி அல்ல, நோட்டணி, சீட்டணி, தமிழ்நாட்டிற்கான சனி, பெரும் பிணி” என்று அடுக்குமொழியில் அசத்துகிறார். தனக்கு இரட்டை மெழுகுவத்தி, காளை மாடு போன்ற சின்னங்கள் மறுக்கப்பட்ட காரணங்களை வேடிக்கையாகச் சொல்லி கவனத்தை ஈர்ப்பதோடு, ஓட்டு இயந்திரத்தில் ‘விவசாயி’ சின்னம் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். தனது வேட்பாளர்களில் 50% பேர் பெண்கள் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். மேடையில் அவர் பேசும்போது அருகே நிற்கும் அந்தத் தொகுதி வேட்பாளர்கள் மற்ற கட்சியினரைப் போல கையெடுத்துக் கும்பிடுவதில்லை; அவரைப் போலவே அடிக்கடி முழங்கையை உயர்த்திக்காட்டுகிறார்கள்.

இப்போதெல்லாம் ‘வந்தேறி’ என்ற வார்த்தைப் பயன்பாட்டையும், இனவெறிப் பேச்சையும் தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார் சீமான். “சோழ முப்பாட்டன் காலத்தில் ஒரே கப்பலில் மூவாயிரம் யானைகளை ஏற்றிக்கொண்டு போகும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது” என்று அவ்வப்போது அள்ளிவிடுவதும்கூடக் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் கூடும் கூட்டத்தைப் போல 10 மடங்கு பேர் அவரது காணொளிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். கூடுகிற கூட்டமும் இணையத்தின் ரசிகர் கூட்டமும் அவருக்கு வாக்காக மாறுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, திமுக கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்கில் சீமான் சேதத்தை விளைவிக்கக்கூடும் என்றே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

https://tamil.thehindu.com/opinion/columns/article26851282.ece?utm_source=HP&utm_medium=hp-editorial

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?- ஒரு உளவியல் பார்வை

Published :  17 Apr 2019  22:13 IST
Updated :  17 Apr 2019  22:13 IST

TamilNewslarge1696004jpg

கோப்புப் படம்

தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் உள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம் வாக்காளர்கள் 2.65 கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலாக உள்ளதால் அவர்கள் மனநிலை என்ன என்பது குறித்த ஒரு உளவியல் பார்வை.

இந்த தேர்தல் என்ன ஸ்பெஷல்? 18, 19 வயது வாக்காளர்கள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். 20 லிருந்து 29  வயதுள்ள வாக்காளர்கள்:  1 கோடியே 18.5 லட்சம் பேர், 30 லிருந்து 39  வயதுள்ள வாக்காளர்கள்: 1 கோடியே 38.5 லட்சம் பேர். மொத்தமாக இளம் வாக்காளர்கள் 2.69 கோடிபேர். இவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்கிற பதைபதைப்பை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காணமுடிகிறது.

அதற்கு முன் ஒரு தகவல், ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லாத தேர்தல். அதன் அர்த்தம் என்னவென்றால் தலைவர்கள் இல்லாமல் பிரச்சினைகள் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது என்பதே யதார்த்தம்.

முற்றிலும் புதிதாக பிரச்சினைகள் அடிப்படையில் இந்தத்தேர்தல் நடக்கிறது. புதிதாக கட்சிகள் களத்தில் சவாலாக நிற்கின்றன. ஆகவே வழக்கமான கட்சிகள், கூட்டணிகளுக்கு வாக்குகளா? பிரச்சினை அடிப்படையில் வாக்குகளா? என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் உள்ளது.

 

பொதுவான வாக்காளர்கள் 50 சதவீதத்தினர் உள்ளனர். பணத்துக்கு வாக்களிப்பது, பாரம்பரிய கட்சிக்கு வாக்களிப்பது, போன முறை இவரா இந்த முறை இவருக்கு போடலாம் என்கிற மனநிலை என இவர்களை கூறலாம். ஆனால் மறுபுறம் 45 சதவீதம் இருக்கிறார்களே இளம் வாக்காளர்கள் அவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக இருக்க போகிறார்கள்.

ஒன்று வெற்றியை தீர்மானிக்கும் வாக்காக இருக்கப்போகிறார்கள் அல்லது வாக்குகளை பிரிப்பதன்மூலம் வெற்றி பெறுபவர்களை பாதிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள். இவர்களை ஏன் குறிவைத்து எழுதவேண்டும் என்பதற்கு இரண்டு வகையில் பதில் அளிக்கலாம். ஒன்று இன்றுள்ள புறக்காரணிகள் மற்றும் உளவியல் ரீதியான அணுகு முறைகள்.

அதற்கு முன் இளம் வாக்காளர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதைப்பார்ப்போம்.

பாரம்பரியமாக குடும்பமே ஒரு கட்சி சார்ந்து இருக்கும். இவரும் அதைப்பின்பற்றி வாக்களிப்பார்.

ரசிகராக இருப்பார் தனது அபிமான நடிகருக்காக வாக்களிப்பார்.

சில அரசியல்வாதிகளை பிடிக்காது அதனால் எதிர்முகாமில் உள்ளவருக்கு வாக்களிப்பார்.

யாராவது புதிதாக சீரிய கருத்துக்களை பேசுவார் அவருக்கு வாக்களிப்பார்.

அரசியலே வேண்டாம் என வீட்டில் படுத்து தூங்குவார்.

கடந்த சில ஆண்டுகளாக நோட்டாவுக்கு போடுகிறார்கள்.

இப்போது புறக்காரணிகளுக்கு வருவோம்.

புறக்காரணிகள்:

60 களில் 70 களில் 80 களில் அப்போது இருந்த இளைஞர்களுக்கு இருந்த மிகப்பெரிய தகவல் தொடர்பே தெருவோர கூட்டம், பொதுக்கூட்டம், சினிமா, பேப்பர் செய்தி மட்டுமே.

அதன் பின்னர் வந்த காலக்கட்டங்களில் தொலைக்காட்சிகள் பிரச்சாரத்தை கொண்டுச் சேர்ப்பதிலும், கருத்தை உருவாக்குவதிலும் பங்கு வகித்தன. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் ஆளுமை செலுத்தியதும் உண்டு.

அனைத்தையும் அடுத்தடுத்த நொடியில் அலசவும், மற்ற மாநில, மற்ற நாட்டு அரசியலுடன் ஒப்பிடும் வசதிகளும் நம் பாக்கெட்டில் உள்ள செல்போனுக்குள் வந்தப்பின்னர் இன்றைய இளம் தலைமுறையினர் பார்வையும் மாறித்தான் போயுள்ளது.

எங்களுக்கு கற்றுத்தராதீர்கள் என்கிற மனோபாவத்துடன் ஆனால் அது விஷய ஞானமில்லா எண்ணமல்ல எல்லாம் அறிந்து வருகிறோம் என்கிற நிலையுடன் இருக்கும் இளம் தலைமுறை உள்ளது.

உளவியல் பார்வை:

உளவியல் ரீதியாக இன்றை இளம் வாக்காளர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

 

இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் மன நிலை எப்படி இருக்கும் உளவியல் நிபுணராக எப்படி பார்க்கிறீர்கள்?

இளம் வாக்காளர்களைப் பொருத்தவரை நிறைய விழிப்புணர்வு உள்ளது. நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கூகுள், சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமானோர் அரசியலில் தங்களை அறியாமல் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

இன்றைய இளம் வாக்காளர்கள் இன்றைய அரசியலுக்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர வாய்ப்புள்ளது. நான் பேசியவரை நிறைய இளைஞர்கள் வழக்கமான கட்சிகளைவிட புதிதாக பல கருத்துக்களை பேசும் கட்சிகளை விரும்பும் மன நிலையில் உள்ளனர். இந்த தேர்தல் இந்திய அளவில் நடக்கும் தேர்தலாக இருந்தாலும்கூட மாநில அளவில் புதிதாக கருத்துக்கூறும் கட்சிகளை ஆதரித்தால் என்ன என்கிற ரிஸ்க் எடுக்கும் மன நிலையில் உள்ளனர்.

வழக்கமாக பெற்றோர் கூறும் கட்சிக்கு வாக்களிப்பது, குடும்பமே கட்சி சார்ந்து இருப்பது இப்படிப்பட்ட மனநிலையில் தானே இருப்பார்கள்?

நீங்கள் சொல்லும் மன நிலையில் எந்த இளைஞரும் இன்று இல்லை.  தந்தை ஒருவர் நான் இந்த கட்சிக்கு ஓட்டுப்போடுகிறேன் நீயும் அதற்கு போடு என்று சொன்னால் ‘முடியாது அப்பா நான் என் மனதுக்கு உகந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன்’ என்று மறுக்கிற மன நிலையில்தான் உள்ளனர்.

அப்படிப்பட்ட இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் முன் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இல்லை. அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது. அப்படியே தந்தையின் மன நிலைக்கு ஏற்ப வாக்களிக்கும் மன நிலை வருவது 10 அல்லது 20 சதவீதம் இருந்தால் பெரிய விஷயம். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு தங்கள் எண்ணப்படி வாக்களிக்கும் மன நிலையில்தான் உள்ளனர்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம் வாக்காளர்கள் இப்போதுள்ள  இளம் வாக்காளர்கள் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?

அப்போதிருந்த இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறைவு, அறிவை விசாலப்படுத்தும் விஷயங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிரிண்ட், தொலைக்காட்சி, சோஷியல் மீடியாவிலும் சரி,  நாம் யாரை தேர்வு செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு நிறைய உள்ளது.

என்ன காரணிகளால் இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

என்ன காரணி என்றால் விழிப்புணர்வுதான் முக்கிய காரணியாக இருக்கமுடியும்.

விழிப்புணர்வு அந்த காலத்திலும் இல்லாமலா இருந்தது?

இருந்தது ஆனால் ஏற்கெனவே கூறியதுபோல் அறிவு விசாலத்துக்கான வாய்ப்புகள் குறைவு அல்லவா? அன்றைய இளம்தலைமுறையினருக்கு கிடைத்தது காலையில் பேப்பர், மாலையில் செய்தியில்மட்டுமே அல்லவா கிடைத்தது.

இன்று அப்படி அல்லவே, 24 மணி நேரமும் செல்போனிலும், நம்மைச்சுற்றியும் வாட்ஸ் அப், சமூக வலைதளம், செய்தி தளம், காட்சி ஊடகங்கள், கூகுள் தேடல்கள் என பல வகைகளிலும் அவர்களுக்கான அனைத்தையும் அவர்கள் அறியாமலே பார்த்து முடிவு செய்கிறார்களே, அந்த வாய்ப்பு அன்று இல்லை.

முன்னர் நிதானமான அணுகுமுறை இருந்தது, தற்போதுள்ள இளம் வாக்காளர்கள் அப்படி இல்லையே?

அதைத்தான் நானும் சொல்கிறேன், முன்னர் அவர்கள் மனதில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இந்த கட்சிக்குத்தான் போடப்போகிறோம் என்று. ஆனால் இன்று அப்படியல்ல நிமிடத்திற்கு நிமிடம் அனைவரின் இமேஜும் மாறுகிறது. காலையில் அவர்கள் வாக்களிக்கப்போகும் முன் ஆயிரம் மாற்றங்களை அரசியல் வாதிகள் குறித்து அறிகிறார்கள். அதை வைத்துத்தான் மன நிலையும் இருக்கும்.

நோட்டா ஒரு மாற்றமாக இருந்தது? இந்த தேர்தலில் அது எதிரொலிக்குமா?

இந்த தேர்தலில் நோட்டா பெரிதாக எதிரொலிக்காது. காரணம் அப்போது இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது அப்படியல்ல பல சிறிய கட்சிகள் கமல், சீமான் போன்றோர் எல்லாம் பல கருத்துக்களை வைக்கிறார்கள்.

இரண்டு ஆளுமைகள் இல்லாததும் இளம் தலைமுறையினர் மாற்றத்துக்கு காரணமாக அமையுமா?

அப்படி நான் நினைக்கவில்லை. இன்றுள்ள வசதிகளில் அவர்களுக்கு ஒவ்வொருவர் இமேஜும், அளவீடுகளும் தெரிகிறது, அதனால் இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்கிறேன்.

தற்போது நிறைய இளம் வாக்காளர்கள் நம் நாட்டை நமது வாக்கால் தீர்மானிக்கவேண்டும் என நினைக்கிறார்கள். முன்பு தேர்தல் நாள் என்றால் இழுத்துப்போர்த்தி தூங்குவார்கள் ஆனால் இம்முறை இளம் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள் வாக்களிக்க.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26867248.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2019 at 4:44 PM, இசைக்கலைஞன் said:

 

காவல்துறை (குறிப்பிட்ட நேர வேலை, சம்பளம்) உட்பட எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அண்ணன் சொல்வதை கேட்டிருப்பார்கள் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி, சீமான் இரு துருவ அரசியல் பிறக்குமா?" - ரவீந்திரன் துரைசாமி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.