Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பொழுதுபோக்கு தரும் சீமான் பேச்சு!

Published :  16 Apr 2019  09:29 IST
Updated :  16 Apr 2019  09:29 IST
8018637dP2182227mrjpg
 

திமுக-அதிமுக என்ற இரு பிரதான மாநிலக் கட்சிகள், காங்கிரஸ்-பாஜக எனும் இருபெரும் தேசியக் கட்சிகள் இரண்டுக்கும் மாறாகத் தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘நாம் தமிழர்’ சீமானின் உரத்த குரல். தனியொருவராக அக்கட்சியின் 58 வேட்பாளர்களுக்கும் வாக்கு வேட்டையாடும் சீமானின் பிரச்சாரம் எப்படியிருக்கிறது?

எந்த சித்தாந்தத்தையும், எந்தக் கட்சியின் கொள்கையையும் அறிந்திராத ‘வெள்ளைக் காகிதம்’ போன்ற இளந்தலைமுறை, தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் சீமானின் பேச்சால் ஈர்க்கப்படுகிறது. ‘எந்திரன்’ சிட்டிபோல தன்னைப் போலவே சிந்திக்கிற, தன்னைப் போலவே பேசுகிற தம்பிகளை உருவாக்கியிருக்கும் சீமான், வாகனப் பிரச்சாரத்தை... மன்னிக்கவும் வாகனப் ‘பரப்புரை’யை முற்றாகத் தவிர்க்கிறார். மார்ச் 25 தொடங்கியது அவரது பரப்புரை. தினமும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள். இரண்டுமே மாலையில்தான். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6 கூட்டங்கள்.

அருவிபோல் கொட்டும் பேச்சு

தூத்துக்குடியிலும் சிவகாசியிலும் பிரச்சாரம் என்றால் தூத்துக்குடியில் அறையெடுத்துத் தங்குகிறார். மாலை 6 மணிக்கு முதல் பொதுக்கூட்டம். அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களை அருகில் நிற்க வைத்துக்கொண்டு, சீமான் ஒலிவாங்கியைப் பிடித்தால் குறைந்தது ஒன்றேகால் மணிநேரம் பேசுகிறார். அது வெறுமனே மேடைப்பேச்சல்ல; கருத்தரங்கம், ஓரங்க நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

முடித்துவிட்டு சுமார் 50 முதல் 100 கிலோ மீட்டர் காரில் பயணித்து அடுத்த பொதுக்கூட்ட மேடையை இரவு 8.30-க்குள் அடைகிறார். பிறகு, அங்கேயும் ஒன்றரை மணி நேரப் பேருரை. கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் அருவிபோல கொட்டுகிறார். இடையிடையே நகைச்சுவை சொல்லிச் சிரிப்பு மூட்டுகிறார். நகைச்சுவைக்கு இடையிலேயே அவரே ஒரு மாதிரியாகச் சிரிப்பதைப் பார்த்து கூட்டம்  மேலும் சிரிக்கிறது.

மேற்கூரையற்ற மேடை. ஒற்றைச் சுவர்போல நிற்கும் பதாகையில், ‘வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்’ என்ற வாசகம் சிறிதாகவும், ‘புதியதோர் தேசம் செய்வோம், புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற வாசகம் பெரிதாகவும் இருக்கின்றன. திருவள்ளுவர், பிரபாகரன் படங்களுடன் சீமான், அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களின் படங்களும் விவசாயி சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.

சாலையோரத்தில் சாப்பாடு

இரவுக் கூட்டம் முடிந்ததும் அவர் தனது காரில் செல்ல, கருஞ்சட்டையும் கருப்பு குளிர்க் கண்ணாடியும் அணிந்த தொண்டர் படையொன்று பாதுகாப்புக்காக சீமானைப் பின்தொடர்கிறது. கூடவே, அவரது ஊடகத் துறை (யூடியூப் சேனல், நாம் தமிழர் இணையதளம்) வாகனமும். அவரது வாகனம் புறப்படுகையிலேயே உணவுப் பொட்டலங்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். அடுத்த நாள் பேச வேண்டிய ஊரை நோக்கி இரவிலேயே கார் விரைகிறது. போகிற வழியில் ஏதாவது வெளிச்சமான இடத்தில் கார் நிற்க, சீமானும் அவரது தம்பிகளும் உணவருந்துகிறார்கள். அறையைச் சென்றடைந்து தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணியாகிவிடுகிறது.

பொதுவாக, உடல் நலத்தில் தீவிர அக்கறை எடுத்துக்கொள்பவர் சீமான். உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று, அனைத்து விதமான உபகரணங்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்வது அவரது வழக்கம். வெளியூர்ப் பயணங்களின்போது குறைந்தபட்சம் கட்சி நிர்வாகி களுடன் அருகில் உள்ள மைதானத்துக்குச் சென்று எளிய பயிற்சிகளிலாவது ஈடுபடுவார். ‘‘தொடர் பரப்புரைப் பயணங்களால் காலையில் எழுவதற்கு 8 மணியாகிவிடுவதாலும், அதற்குள்ளாக சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதாலும் உடற்பயிற்சியை முற்றாகக் கைவிட்டுவிட்டார். எனவே, அசைவ உணவுகளையும் முடிந்தவரையில் தவிர்க்கிறார். காலையில் சிறிது சிற்றுண்டி, மதியம் தம்பிகள் வீட்டிலிருந்து வருகிற எளிய உணவு, இரவில் பொட்டல உணவு’’ என்கிறார்கள் தம்பிகள்.

என்ன பேசுகிறார் சீமான்?

புகைவண்டிபோல மெல்ல ஓட ஓரம்பித்து, வேகமெடுத்து, தடதட தடதடவென ஓடி, இடையில் ஓவென்று குரலெழுப்பிக் கூட்டத்தைத் திடுக்கிட, புல்லரிக்க வைக்கும் பேச்சு பாணி சீமானுடையது. திருவள்ளுவர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவணர் போன்றோரின் கருத்தோடு பேச்சு மெல்லத் தொடங்குகிறது. “50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம், இவ்வளவு மூத்த இனத்தின் மக்கள் இன்று நாட்டை இழந்து, மொழியை இழந்து, பரந்த நிலப்பரப்பின் காலடியில் வந்து நிற்கிறார்கள். தமிழ் எழுச்சியே தமிழர் எழுச்சி. அதற்கு இறுதி வாய்ப்பு இந்தத் தேர்தல். வட இந்தியர்கள் 70 லட்சம் பேர் தமிழகத்தில் புதிதாக வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே துறையில் வட இந்தியர்களைக் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். எதிர்காலத்தில் இந்த மண்ணை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் அவர்கள் இருப்பார்கள். தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் செய்தது என்ன? முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினைக்குக் காரணமான தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. சுழற்சி முறையில் பிரதமர் பதவி. மாற்று அரசியலுக்கு வாக்களியுங்கள், மானத் தமிழினத்துக்கு வாக்களியுங்கள்” என்று பேசுகிறார் சீமான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி குறைந்தது 30 நிமிடம் பேசுவது வேறு எந்தத் தலைவரும் கடைப்பிடிக்காத நல்ல விஷயம்.

நோட்டணி சீட்டணி பெரும் பிணி

அதிமுக கூட்டணி பற்றிப் பேசுகையில், “இது கூட்டணி அல்ல, நோட்டணி, சீட்டணி, தமிழ்நாட்டிற்கான சனி, பெரும் பிணி” என்று அடுக்குமொழியில் அசத்துகிறார். தனக்கு இரட்டை மெழுகுவத்தி, காளை மாடு போன்ற சின்னங்கள் மறுக்கப்பட்ட காரணங்களை வேடிக்கையாகச் சொல்லி கவனத்தை ஈர்ப்பதோடு, ஓட்டு இயந்திரத்தில் ‘விவசாயி’ சின்னம் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். தனது வேட்பாளர்களில் 50% பேர் பெண்கள் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். மேடையில் அவர் பேசும்போது அருகே நிற்கும் அந்தத் தொகுதி வேட்பாளர்கள் மற்ற கட்சியினரைப் போல கையெடுத்துக் கும்பிடுவதில்லை; அவரைப் போலவே அடிக்கடி முழங்கையை உயர்த்திக்காட்டுகிறார்கள்.

இப்போதெல்லாம் ‘வந்தேறி’ என்ற வார்த்தைப் பயன்பாட்டையும், இனவெறிப் பேச்சையும் தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார் சீமான். “சோழ முப்பாட்டன் காலத்தில் ஒரே கப்பலில் மூவாயிரம் யானைகளை ஏற்றிக்கொண்டு போகும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது” என்று அவ்வப்போது அள்ளிவிடுவதும்கூடக் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் கூடும் கூட்டத்தைப் போல 10 மடங்கு பேர் அவரது காணொளிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். கூடுகிற கூட்டமும் இணையத்தின் ரசிகர் கூட்டமும் அவருக்கு வாக்காக மாறுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, திமுக கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்கில் சீமான் சேதத்தை விளைவிக்கக்கூடும் என்றே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

https://tamil.thehindu.com/opinion/columns/article26851282.ece?utm_source=HP&utm_medium=hp-editorial

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?- ஒரு உளவியல் பார்வை

Published :  17 Apr 2019  22:13 IST
Updated :  17 Apr 2019  22:13 IST

TamilNewslarge1696004jpg

கோப்புப் படம்

தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் உள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம் வாக்காளர்கள் 2.65 கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலாக உள்ளதால் அவர்கள் மனநிலை என்ன என்பது குறித்த ஒரு உளவியல் பார்வை.

இந்த தேர்தல் என்ன ஸ்பெஷல்? 18, 19 வயது வாக்காளர்கள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். 20 லிருந்து 29  வயதுள்ள வாக்காளர்கள்:  1 கோடியே 18.5 லட்சம் பேர், 30 லிருந்து 39  வயதுள்ள வாக்காளர்கள்: 1 கோடியே 38.5 லட்சம் பேர். மொத்தமாக இளம் வாக்காளர்கள் 2.69 கோடிபேர். இவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்கிற பதைபதைப்பை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காணமுடிகிறது.

அதற்கு முன் ஒரு தகவல், ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லாத தேர்தல். அதன் அர்த்தம் என்னவென்றால் தலைவர்கள் இல்லாமல் பிரச்சினைகள் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது என்பதே யதார்த்தம்.

முற்றிலும் புதிதாக பிரச்சினைகள் அடிப்படையில் இந்தத்தேர்தல் நடக்கிறது. புதிதாக கட்சிகள் களத்தில் சவாலாக நிற்கின்றன. ஆகவே வழக்கமான கட்சிகள், கூட்டணிகளுக்கு வாக்குகளா? பிரச்சினை அடிப்படையில் வாக்குகளா? என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் உள்ளது.

 

பொதுவான வாக்காளர்கள் 50 சதவீதத்தினர் உள்ளனர். பணத்துக்கு வாக்களிப்பது, பாரம்பரிய கட்சிக்கு வாக்களிப்பது, போன முறை இவரா இந்த முறை இவருக்கு போடலாம் என்கிற மனநிலை என இவர்களை கூறலாம். ஆனால் மறுபுறம் 45 சதவீதம் இருக்கிறார்களே இளம் வாக்காளர்கள் அவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக இருக்க போகிறார்கள்.

ஒன்று வெற்றியை தீர்மானிக்கும் வாக்காக இருக்கப்போகிறார்கள் அல்லது வாக்குகளை பிரிப்பதன்மூலம் வெற்றி பெறுபவர்களை பாதிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள். இவர்களை ஏன் குறிவைத்து எழுதவேண்டும் என்பதற்கு இரண்டு வகையில் பதில் அளிக்கலாம். ஒன்று இன்றுள்ள புறக்காரணிகள் மற்றும் உளவியல் ரீதியான அணுகு முறைகள்.

அதற்கு முன் இளம் வாக்காளர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதைப்பார்ப்போம்.

பாரம்பரியமாக குடும்பமே ஒரு கட்சி சார்ந்து இருக்கும். இவரும் அதைப்பின்பற்றி வாக்களிப்பார்.

ரசிகராக இருப்பார் தனது அபிமான நடிகருக்காக வாக்களிப்பார்.

சில அரசியல்வாதிகளை பிடிக்காது அதனால் எதிர்முகாமில் உள்ளவருக்கு வாக்களிப்பார்.

யாராவது புதிதாக சீரிய கருத்துக்களை பேசுவார் அவருக்கு வாக்களிப்பார்.

அரசியலே வேண்டாம் என வீட்டில் படுத்து தூங்குவார்.

கடந்த சில ஆண்டுகளாக நோட்டாவுக்கு போடுகிறார்கள்.

இப்போது புறக்காரணிகளுக்கு வருவோம்.

புறக்காரணிகள்:

60 களில் 70 களில் 80 களில் அப்போது இருந்த இளைஞர்களுக்கு இருந்த மிகப்பெரிய தகவல் தொடர்பே தெருவோர கூட்டம், பொதுக்கூட்டம், சினிமா, பேப்பர் செய்தி மட்டுமே.

அதன் பின்னர் வந்த காலக்கட்டங்களில் தொலைக்காட்சிகள் பிரச்சாரத்தை கொண்டுச் சேர்ப்பதிலும், கருத்தை உருவாக்குவதிலும் பங்கு வகித்தன. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் ஆளுமை செலுத்தியதும் உண்டு.

அனைத்தையும் அடுத்தடுத்த நொடியில் அலசவும், மற்ற மாநில, மற்ற நாட்டு அரசியலுடன் ஒப்பிடும் வசதிகளும் நம் பாக்கெட்டில் உள்ள செல்போனுக்குள் வந்தப்பின்னர் இன்றைய இளம் தலைமுறையினர் பார்வையும் மாறித்தான் போயுள்ளது.

எங்களுக்கு கற்றுத்தராதீர்கள் என்கிற மனோபாவத்துடன் ஆனால் அது விஷய ஞானமில்லா எண்ணமல்ல எல்லாம் அறிந்து வருகிறோம் என்கிற நிலையுடன் இருக்கும் இளம் தலைமுறை உள்ளது.

உளவியல் பார்வை:

உளவியல் ரீதியாக இன்றை இளம் வாக்காளர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

 

இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் மன நிலை எப்படி இருக்கும் உளவியல் நிபுணராக எப்படி பார்க்கிறீர்கள்?

இளம் வாக்காளர்களைப் பொருத்தவரை நிறைய விழிப்புணர்வு உள்ளது. நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கூகுள், சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமானோர் அரசியலில் தங்களை அறியாமல் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

இன்றைய இளம் வாக்காளர்கள் இன்றைய அரசியலுக்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர வாய்ப்புள்ளது. நான் பேசியவரை நிறைய இளைஞர்கள் வழக்கமான கட்சிகளைவிட புதிதாக பல கருத்துக்களை பேசும் கட்சிகளை விரும்பும் மன நிலையில் உள்ளனர். இந்த தேர்தல் இந்திய அளவில் நடக்கும் தேர்தலாக இருந்தாலும்கூட மாநில அளவில் புதிதாக கருத்துக்கூறும் கட்சிகளை ஆதரித்தால் என்ன என்கிற ரிஸ்க் எடுக்கும் மன நிலையில் உள்ளனர்.

வழக்கமாக பெற்றோர் கூறும் கட்சிக்கு வாக்களிப்பது, குடும்பமே கட்சி சார்ந்து இருப்பது இப்படிப்பட்ட மனநிலையில் தானே இருப்பார்கள்?

நீங்கள் சொல்லும் மன நிலையில் எந்த இளைஞரும் இன்று இல்லை.  தந்தை ஒருவர் நான் இந்த கட்சிக்கு ஓட்டுப்போடுகிறேன் நீயும் அதற்கு போடு என்று சொன்னால் ‘முடியாது அப்பா நான் என் மனதுக்கு உகந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன்’ என்று மறுக்கிற மன நிலையில்தான் உள்ளனர்.

அப்படிப்பட்ட இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் முன் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இல்லை. அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது. அப்படியே தந்தையின் மன நிலைக்கு ஏற்ப வாக்களிக்கும் மன நிலை வருவது 10 அல்லது 20 சதவீதம் இருந்தால் பெரிய விஷயம். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு தங்கள் எண்ணப்படி வாக்களிக்கும் மன நிலையில்தான் உள்ளனர்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம் வாக்காளர்கள் இப்போதுள்ள  இளம் வாக்காளர்கள் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?

அப்போதிருந்த இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறைவு, அறிவை விசாலப்படுத்தும் விஷயங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிரிண்ட், தொலைக்காட்சி, சோஷியல் மீடியாவிலும் சரி,  நாம் யாரை தேர்வு செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு நிறைய உள்ளது.

என்ன காரணிகளால் இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

என்ன காரணி என்றால் விழிப்புணர்வுதான் முக்கிய காரணியாக இருக்கமுடியும்.

விழிப்புணர்வு அந்த காலத்திலும் இல்லாமலா இருந்தது?

இருந்தது ஆனால் ஏற்கெனவே கூறியதுபோல் அறிவு விசாலத்துக்கான வாய்ப்புகள் குறைவு அல்லவா? அன்றைய இளம்தலைமுறையினருக்கு கிடைத்தது காலையில் பேப்பர், மாலையில் செய்தியில்மட்டுமே அல்லவா கிடைத்தது.

இன்று அப்படி அல்லவே, 24 மணி நேரமும் செல்போனிலும், நம்மைச்சுற்றியும் வாட்ஸ் அப், சமூக வலைதளம், செய்தி தளம், காட்சி ஊடகங்கள், கூகுள் தேடல்கள் என பல வகைகளிலும் அவர்களுக்கான அனைத்தையும் அவர்கள் அறியாமலே பார்த்து முடிவு செய்கிறார்களே, அந்த வாய்ப்பு அன்று இல்லை.

முன்னர் நிதானமான அணுகுமுறை இருந்தது, தற்போதுள்ள இளம் வாக்காளர்கள் அப்படி இல்லையே?

அதைத்தான் நானும் சொல்கிறேன், முன்னர் அவர்கள் மனதில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இந்த கட்சிக்குத்தான் போடப்போகிறோம் என்று. ஆனால் இன்று அப்படியல்ல நிமிடத்திற்கு நிமிடம் அனைவரின் இமேஜும் மாறுகிறது. காலையில் அவர்கள் வாக்களிக்கப்போகும் முன் ஆயிரம் மாற்றங்களை அரசியல் வாதிகள் குறித்து அறிகிறார்கள். அதை வைத்துத்தான் மன நிலையும் இருக்கும்.

நோட்டா ஒரு மாற்றமாக இருந்தது? இந்த தேர்தலில் அது எதிரொலிக்குமா?

இந்த தேர்தலில் நோட்டா பெரிதாக எதிரொலிக்காது. காரணம் அப்போது இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது அப்படியல்ல பல சிறிய கட்சிகள் கமல், சீமான் போன்றோர் எல்லாம் பல கருத்துக்களை வைக்கிறார்கள்.

இரண்டு ஆளுமைகள் இல்லாததும் இளம் தலைமுறையினர் மாற்றத்துக்கு காரணமாக அமையுமா?

அப்படி நான் நினைக்கவில்லை. இன்றுள்ள வசதிகளில் அவர்களுக்கு ஒவ்வொருவர் இமேஜும், அளவீடுகளும் தெரிகிறது, அதனால் இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்கிறேன்.

தற்போது நிறைய இளம் வாக்காளர்கள் நம் நாட்டை நமது வாக்கால் தீர்மானிக்கவேண்டும் என நினைக்கிறார்கள். முன்பு தேர்தல் நாள் என்றால் இழுத்துப்போர்த்தி தூங்குவார்கள் ஆனால் இம்முறை இளம் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள் வாக்களிக்க.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26867248.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2019 at 4:44 PM, இசைக்கலைஞன் said:

 

காவல்துறை (குறிப்பிட்ட நேர வேலை, சம்பளம்) உட்பட எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அண்ணன் சொல்வதை கேட்டிருப்பார்கள் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி, சீமான் இரு துருவ அரசியல் பிறக்குமா?" - ரவீந்திரன் துரைசாமி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.