Jump to content

Recommended Posts

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரைமுருக‌ன் , திராவிட‌த்த‌ சாட்டை மூல‌ம் க‌த‌ற‌ விடுறார் 😁👏

 

ச‌கோத‌ர‌ன் விக்கியும் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல‌ யாரும் விம‌ர்ச‌ன‌ம் வைச்சா அவைக்கு ஆதார‌த்தோடு ப‌தில‌டி குடுக்கிறார் , நான் யாழ‌ கைபேசியில் இருந்து தான் பார்க்கிறேன் (ட‌ங்கு ) 
கைபேசியில் இருந்து யூடுப் காணொளிகல‌ யாழில் இணைக்க‌ முடிய‌ வில்லை / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

அவர் உங்களுக்கு பயந்து, இங்க ஒளிஞ்சு நிக்கிறார். இங்கயும் வந்துட்டியள் எண்டு பயப்படப்போறார், அக்கா.   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

ஒரு காலத்திலை மச்சான்......இப்ப இசையர்! வர வர எப்பிடியெல்லாம் கூப்பிடப்போறியளோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்......கலிகாலம் எண்டது கண்ணுக்கு முன்னாலையே தெரியுது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை மச்சான்......இப்ப இசையர்! வர வர எப்பிடியெல்லாம் கூப்பிடப்போறியளோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்......கலிகாலம் எண்டது கண்ணுக்கு முன்னாலையே தெரியுது :cool:

அவவுக்கு, மச்சான்... தெய்வ மச்சானாய்ப் போயிட்டார். 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை மச்சான்......இப்ப இசையர்! வர வர எப்பிடியெல்லாம் கூப்பிடப்போறியளோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்......கலிகாலம் எண்டது கண்ணுக்கு முன்னாலையே தெரியுது :cool:

ஆகா

என்னத்துக்கு  தங்கச்சி

இப்படி சுத்தி  வருகுது  என்று  நானும் யோசிச்சனான்

ஆனால்  என்  தம்பி ரொம்ப  பிடிவாதக்காரன்  மட்டமல்ல  விரதகாரனும்  

Link to comment
Share on other sites

 

On 6/10/2019 at 2:42 PM, ரதி said:

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

நேரப்பற்றாக்குறைதான் காரணம் மச்சாள். நேரப்பற்றாக்குறைதான் காரணம். 🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணு கழிவு மைய எதிர்ப்பு..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா.ரஞ்சித்துக்கு பதிலடி..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் றிப்ஸ்  ..

seeman34566-1560578302.jpg

சென்னை: வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் என அறிவுறுத்தியுள்ள சீமான், தண்ணீரை சேமிக்கவும் வழிமுறைகளை விளக்கியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீரின்றி அமையாது உலகு என்கிறார் பெரும்பாட்டன் வள்ளுவன். நீரைச் சேமிப்பது ஓர் அரசனின் தலையாயக் கடமை; அதனைச் செய்தால் அறம், பொருள், இன்பம் இவை மூன்றும் அவ்வரசனுக்குக் கிட்டும் எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

அந்நீர் சேமிப்பின் அருமையை உணர்ந்தே, அதனை அறமென செய்ய முனைந்தே நமது முன்னோர்கள் நீரைச் சேமித்து வைக்க ஏராளமான நீர்நிலைகளை உருவாக்கினார்கள்.மூவேந்தர் பெருமக்கள் நாட்டையாண்டபோது நாடெங்கிலும் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு, அவைகள் சங்கிலித்தொடர் போல இணைக்கப்பட்டு நாள்தோறும் முறையாகப் பராமரிக்கப்பட்டு மக்களின் நீர்த்தேவையும், வேளாண்மைப் பாசனத்திற்கானத் தேவையும் நிறைவு செய்யப்பட்டது. ஆனால், தற்காலத்தில் நீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீர்நிலைகள் பராமரிப்பு, நீரின் இன்றியமையாமை இவை குறித்தெல்லாம்

எவ்வித அக்கறையோ, அடிப்படைப் புரிதலோ எதுவுமற்ற திராவிட ஆட்சியாளர் பெருமக்கள் 50 ஆண்டுகாலமாகத் தமிழகத்தை ஆண்டதன் நீட்சியாகத் தமிழகம் வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்திருக்கிறது. அண்டை மாநிலங்களைவிட அதிகப்படியான மழைப்பொழிவைக் கொண்டிருக்கிறபோதிலும் தமிழகம் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. கொடிய வறட்சி மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம் எனப் பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து உட்புகுத்திவிட்டு தண்ணீர் தேவை குறித்தோ, வேளாண்மையின் அத்திவாசியம் குறித்தோ சிந்திக்காத கொடுங்கோல் ஆட்சியின் விளைவாகவே இத்தகைய கொடிய வறட்சியைச் சந்தித்து நிற்கிறோம்.

அவசியம்

இவ்வறட்சியின் பிடியிலிருந்து மீண்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், இச்சூழலுக்கு ஏற்ப நம்ம தகவமைத்துக் கொண்டு உயிர்ப்போடு வாழவும் நம்மால் முடிந்த முன்னெடுப்புகளையும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது. அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

சிக்கன முறை

பாத்திரங்களைக் கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பிக் கழுவுவோம்.

பழங்களையோ அல்லது காய்கறிகளையோ கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு அலசும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனைக் கொண்டு அலசுவோம்.

பல் துலக்கும்போதும், முகம் கழுவும்போதும் குழாயைத் திறந்துவிட்டுப் பயன்படுத்தாமல், ஒரு பாத்திரத்தில் நிரப்பிச் சிறுகசிறுகப் பயன்படுத்துவோம்.

குளிக்கும்போது நீர்த்தெளிப்பான் (ஷவர்) முறையில் குளிக்காது, வாளிகளில் நீரை நிரப்பிக் குளிப்போம். முடிந்தளவுக்கு ஒரு வாளி நீரில் குளியலை முடித்திட முயல்வோம்.

துணி துவைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தினால் இயந்திரம் முழுவதும் துணிகளை நிரம்பியப் பிறகு பயன்படுத்துவோம். அன்றாடம் துணிகளைத் துவைக்கும்போது கூடுதலான நீர் செலவாகும். அதனால், முடிந்தமட்டும் ஒரே முறையாக எல்லாத் துணிகளையும் துவைத்து நீரைச் சிக்கனப்படுத்துவோம்.

துணி துவைத்தப் பிறகு மீதமிருக்கும் நீரை வீணாக்காது அதனைக் கழிப்பறைகளில் ஊற்றப் பயன்படுத்துவோம்.

முடிந்த மட்டும் மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்தாது இந்நாட்டு முறை கழிப்பறைகளைப் பயன்படுத்துவோம். மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறபட்சத்தில், விசையின் மூலம் (FLUSH) நீரைப் பாய்ச்சாது வாளியின் மூலம் நீரை ஊற்றி சுத்தம் செய்வோம்.

ஒரு சொட்டுநீர்கூட வீணாகாது நீர்க்குழாயை நன்றாக மூடுவோம். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். நீர்க்குழாய் உபகரணங்கள் கசிந்தால் அவற்றின் பழுதை நீக்குவோம் அல்லது வேறு உபகரணத்தைப் புதிதாகப் பொருத்துவோம்.

உணவு உண்ணுவதற்கு முன்னும், பின்னும் கைகளைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது பாத்திரத்தின் உதவியுடன் கழுவுவோம்.

வாகனங்களைக் கழுவும் போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது ஈரத்துணியை வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்வோம்.

வீணாகும் நீரை மின் இயந்திரத்தின் மூலம் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றுவதாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் வரை நீரேற்றிவிட்டு மின் இயந்திரத்தை அணைத்துவிடுவோம்.

இதன்மூலம, அத்தொட்டிகளிலிருந்து நீர் கொட்டி வீணாவதைத் தடுக்கலாம். தடுப்போம் நீரின் சிக்கனத்தை மிக நன்றாக உணர்ந்திருக்கிற இத்தருணத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நமது சுற்றத்தார், உறவுகள் என யாவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலம் நீர் வீணாவதைத் தடுப்போம்.

மீண்டு வருவோம்

மேலே கூறப்பட்டிருப்பவைகளை ஒவ்வொருவரும் அவசியம் பின்பற்றுங்கள். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஒத்துழையுங்கள். அதுகுறித்த கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு போய் சேருங்கள். நிச்சயமாக, இக்கடினச் சூழலையும் நம்மால் கடக்க முடியும். ஆகையினால், நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இவ்வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் என அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-gives-idea-to-tackle-water-problem/articlecontent-pf382902-354147.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்மயுத்தம் 2.0

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்த காணோம்.. 😆😆

துரைமுருகன் , ஈழ தமிழில் ஆரம்பத்தில் & இறுதியில் கதைக்கிறார்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆத்த காணோம்.. 😆😆

துரைமுருகன் , ஈழ தமிழில் ஆரம்பத்தில் & இறுதியில் கதைக்கிறார்..👌

 

இணைப்புக்கு ந‌ன்றி ச‌கோ /
ஆர‌ம்ப‌த்தில் துறை முருக‌ண் அண்ணா கிட்டு அண்ணா கூட‌ சேர்ந்து நைய‌ப்புடையில் க‌ல‌க்கினார் / பிற‌க்கு சாட்டை  ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு துரை முருக‌ன் அண்ணா நல்லா செய்கிறார் /

ஆர‌ம்ப‌த்தில் அண்ண‌ன் துரை முருக‌னிட‌ம் இவ‌ள‌வு திற‌மை இருக்கு என்று நான் நினைச்சு கூட‌ பார்க்க‌ வில்லை / 

2010ம் ஆண்டு அண்ண‌ன் சீமானின் பேச்சை தெரு ஓர‌மாய் நின்று கேட்டு பிற‌க்கு  க‌ட்சியில் தன்னை இணைத்து கொண்டு ச‌ரியான‌ பாதையை நோக்கி ப‌ய‌ணிக்கிறார் / 

இப்போது இவ‌ர் க‌ட்சியில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள‌ சேர்த்து விட்டார் /


( திராவிட‌ போதைக்குள் இருந்த‌ என‌து ந‌ண்ப‌னை த‌மிழ் தேசிய‌த்தின் மீது ப‌ய‌ணிக்க‌ வைச்ச‌து நான் , இப்போது அவ‌ன் பல‌ நூறு பேர‌ க‌ட்சியில் இணைத்து விட்டான் அண்ணா ,
2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது இன்னும் ப‌ல‌ பேர‌ இணைத்து போடுவான் , அவ‌னின் ப‌ணி என்னை ம‌கிழ்ச்சி அடைய‌ செய்கிற‌து
மெள‌வுன‌மாய் இருந்து சாதிக்க‌
கூடிய‌வ‌ன் 💪 /


 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2019 at 8:13 PM, பையன்26 said:

இணைப்புக்கு ந‌ன்றி ச‌கோ /
ஆர‌ம்ப‌த்தில் துறை முருக‌ண் அண்ணா கிட்டு அண்ணா கூட‌ சேர்ந்து நைய‌ப்புடையில் க‌ல‌க்கினார் / பிற‌க்கு சாட்டை  ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு துரை முருக‌ன் அண்ணா நல்லா செய்கிறார் /

ஆர‌ம்ப‌த்தில் அண்ண‌ன் துரை முருக‌னிட‌ம் இவ‌ள‌வு திற‌மை இருக்கு என்று நான் நினைச்சு கூட‌ பார்க்க‌ வில்லை / 

2010ம் ஆண்டு அண்ண‌ன் சீமானின் பேச்சை தெரு ஓர‌மாய் நின்று கேட்டு பிற‌க்கு  க‌ட்சியில் தன்னை இணைத்து கொண்டு ச‌ரியான‌ பாதையை நோக்கி ப‌ய‌ணிக்கிறார் / 

இப்போது இவ‌ர் க‌ட்சியில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள‌ சேர்த்து விட்டார் /


( திராவிட‌ போதைக்குள் இருந்த‌ என‌து ந‌ண்ப‌னை த‌மிழ் தேசிய‌த்தின் மீது ப‌ய‌ணிக்க‌ வைச்ச‌து நான் , இப்போது அவ‌ன் பல‌ நூறு பேர‌ க‌ட்சியில் இணைத்து விட்டான் அண்ணா ,
2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது இன்னும் ப‌ல‌ பேர‌ இணைத்து போடுவான் , அவ‌னின் ப‌ணி என்னை ம‌கிழ்ச்சி அடைய‌ செய்கிற‌து
மெள‌வுன‌மாய் இருந்து சாதிக்க‌
கூடிய‌வ‌ன் 💪 /


 

A Comment in SAATTAI @YOUTUBE:

TV யில் இருந்து பார்வையாளர்களை youtube கவர்ந்து இழுக்கிறது. 16% தில் ஆட்களை கிளப்பிய youtube அடுத்த வருடம் 28% ஆக அதிகரிக்கப்போகின்றது. இது தெரிந்து பல முன்னணி TV நிலையங்கள் இப்பவே, youtube TV என்ற புதிய முனைவில் துண்டைப் போட்டு தமது இருப்பிணை உறுதி செய்துள்ளனர். டிவி முன் இருந்து பார்ப்பதிலும் பார்க்க, கையில் உள்ள போனில் யூடியூபில் பார்க்கும் காலம், வரும்காலம். துரைமுருகன் தலைமையில், நாம் தமிழர் கட்சி, பிரச்சார பாசறை அமைத்து, YOUTUBE TV முனைவுக்கான அடித்தளங்களை இப்பவே ஆரம்பிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

A Comment in SAATTAI @YOUTUBE:

TV யில் இருந்து பார்வையாளர்களை youtube கவர்ந்து இழுக்கிறது. 16% தில் ஆட்களை கிளப்பிய youtube அடுத்த வருடம் 28% ஆக அதிகரிக்கப்போகின்றது. இது தெரிந்து பல முன்னணி TV நிலையங்கள் இப்பவே, youtube TV என்ற புதிய முனைவில் துண்டைப் போட்டு தமது இருப்பிணை உறுதி செய்துள்ளனர். டிவி முன் இருந்து பார்ப்பதிலும் பார்க்க, கையில் உள்ள போனில் யூடியூபில் பார்க்கும் காலம், வரும்காலம். துரைமுருகன் தலைமையில், நாம் தமிழர் கட்சி, பிரச்சார பாசறை அமைத்து, YOUTUBE TV முனைவுக்கான அடித்தளங்களை இப்பவே ஆரம்பிக்கவேண்டும்.

த‌மிழ் நாட்டில் இருக்கும் ப‌ல‌ எச்ச‌ ஊட‌க‌ங்க‌ள் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போக‌னும் /

கூலிக்கு மார் அடிக்கும் கேடு கெட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் /
நான் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் பார்ப்ப‌து இல்லை கார‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌த்தில் நேர்மை இல்லை ம‌ற்றும் கூத்தாடிக‌ளுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌து
நாட்டில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளை ஒழுங்காய் ம‌க்க‌ள் இட‌த்தில் எடுத்து செல்வ‌து இல்லை /

நாம் த‌மிழ‌ர் பிள்ளைக‌ள் ப‌ல‌ யூடுப் ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அண்ணா /
ச‌கோத‌ர‌ர் விக்கியின்  யூடுப் ஊட‌க‌ம் ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாகிட்டு வ‌ருது ( அந்த‌ யூடுப் பெய‌ர் Tenttu Kottaai )

இந்த‌ யூடுப் ச‌ண‌லுக்கு போங்கோ அண்ணா , நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் யார் என்ன‌ குற்ற‌ சாட்டு வைச்சாலும் ச‌கோத‌ர‌ர் விக்கி ஆதார‌த்தோடு
விள‌க்க‌ம் குடுப்பார் / நாம் த‌மிழ் ப‌ற்றிய‌ செய்திக‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் 

என்ர‌ கை பேசியில் இருந்து தான் யாழ பார்க்கிறேன் , காணொளிக‌ள் இணைக்க‌ முடிய‌ வில்லை / 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டில் இருக்கும் ப‌ல‌ எச்ச‌ ஊட‌க‌ங்க‌ள் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போக‌னும் /

கூலிக்கு மார் அடிக்கும் கேடு கெட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் /
நான் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் பார்ப்ப‌து இல்லை கார‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌த்தில் நேர்மை இல்லை ம‌ற்றும் கூத்தாடிக‌ளுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌து
நாட்டில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளை ஒழுங்காய் ம‌க்க‌ள் இட‌த்தில் எடுத்து செல்வ‌து இல்லை /

நாம் த‌மிழ‌ர் பிள்ளைக‌ள் ப‌ல‌ யூடுப் ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அண்ணா /
ச‌கோத‌ர‌ர் விக்கியின்  யூடுப் ஊட‌க‌ம் ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாகிட்டு வ‌ருது ( அந்த‌ யூடுப் பெய‌ர் Tenttu Kottaai )

இந்த‌ யூடுப் ச‌ண‌லுக்கு போங்கோ அண்ணா , நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் யார் என்ன‌ குற்ற‌ சாட்டு வைச்சாலும் ச‌கோத‌ர‌ர் விக்கி ஆதார‌த்தோடு
விள‌க்க‌ம் குடுப்பார் / நாம் த‌மிழ் ப‌ற்றிய‌ செய்திக‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் 

என்ர‌ கை பேசியில் இருந்து தான் யாழ பார்க்கிறேன் , காணொளிக‌ள் இணைக்க‌ முடிய‌ வில்லை / 

 

இல்லையே, தாராளமாக இணைக்கலாம். முயன்று பாருங்கள்.

விக்கியின் சானல் பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு தென்னரசு - நேர்காணல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.