Jump to content

Recommended Posts

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

 

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் நடப்புக்கல்வியாண்டுக்கான முதல் பருவக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும், செலுத்தத் தவறிய மாணவர்கள் 200 முதல் 500 வரை தண்டம் செலுத்த வேண்டுமெனவும் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 6 முதல் பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி நிலையம் போலல்லாது, கடனை வசூல் செய்யும் நிறுவனம் போல் மிரட்டும் தொனியில் அரசு நடத்தும் பல்கலைக்கழகமே செயல்படுவதென்பது கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.

கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலில் உலகிலேயே இந்தியா மூன்றாம் இடத்திலும், இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுப் பரவலால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் போடப்பட்டுள்ள தொடர் ஊரடங்கால் நாடு முழுமைக்கும் தொழில்நிறுவனங்கள் முடங்கி வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் சிறு, குறு தொழில் முனைவோர், கைத்தொழில் செய்வோர், அன்றாடம் கூலிவேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, வருமானமின்மை, மருத்துவச்செலவு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருந்துயரில் சிக்கித் தவிக்கின்றனர். நியாய விலைக் கடைகளில் அனைத்து உணவுப்பொருட்களும் இலவசமாக வழங்கினால்தான் அடித்தட்டு உழைக்கும் ஏழை மக்கள் உயிர்வாழ முடியும் என்ற சூழ்நிலையில் கல்விக்கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005ன் படி 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 2019-20 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை இருந்தால் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஏதேனும் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்குத் தண்டம் வசூலிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கடந்த 21.04.2020 அன்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், உடனடியாகக் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது குறித்து மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பல்கலைகழகத்தரப்பில் எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகளுக்கே மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினைச் செலவிட வேண்டியுள்ள நிலையில் மேலும் ஆய்வகக் கட்டணம், இணையக் கட்டணம், ,கணினிக் கட்டணம், விளையாட்டுக்கட்டணம் என மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் சேர்த்துக் கட்டணம் வசூலிப்பது என்பது கட்டாயக் கட்டணக் கொள்ளையேயன்றி வேறில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கல்விக்கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையும் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருப்பது மாணவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினால் குடும்ப வறுமையைப் போக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அவர்களைக் கல்விக்கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது கட்டாய இடைநிற்றலுக்கு வழிவகுத்து அவர்களை உயர்கல்வியை விட்டே அப்புறப்படுத்தும் சமூக அநீதியாகும்.

ஆகவே, தமிழக அரசு, கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெறச் செய்ய வேண்டும் எனவும், இரண்டு ஆண்டிற்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதில் எவ்விதத் தடையும் ஏற்படாமலிருக்க அவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு உதவித்தொகையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-that-anna-university-should-stop-forcing-students-to-pay-education-fee-during-covid-19-lockdown/

 

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும்  தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை | நாம் தமிழர் கட்சி

தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை ஓராண்டாக இருந்துவந்த இந்தப் பட்டயப் பயிற்சி இப்போது இரண்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது;  2000 உரூபாயாக இருந்த மாத உதவித்தொகையினை 5000 உரூபாயாக மாற்றியதும், ஆண்டிற்கு 8 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பயிற்சினை 20 மாணவர்களுக்கென உயர்த்தியுள்ளதும் வரவேற்கதக்கதே.

ஆனால், இப்பயிற்சியில் சேர்வதற்கு உரிய தகுதியாக இதுவரை முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் மற்றும் சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு முதல் முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சேரலாம் என்று அறிவிப்பு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது;  இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இது  இந்தத் துறையில் தமிழ், வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களை அப்புறப்படுத்தி  ஆங்கில வழியில் பயின்ற அறிவியல், பொறியியல் படித்தவர்களைப் படிப்படியாகப் புகுத்தும் திட்டமிட்ட சதிச் செயலாகும்.

பொறியியல் படித்தவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் போதிய பயிற்சி மற்றும் புலமை இருக்காது என்பதால், அவர்களால் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளைச் சரியாக மேற்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்காக இந்த ஆண்டுமுதல் ஆங்கிலத்திலும் பயிற்சி நடைபெறும் என அறிவித்து, ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாகத் திட்டமிட்டுத் திணித்திருக்கிறது தமிழக தொல்லியல்துறை. இதற்காகவே 1973 முதல் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் என்றிருந்ததை இந்த ஆண்டு வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பில் தொல்லியல் நிறுவனம் என்று பெயர் மாற்றிவிட்டனர்.

ஏற்கனவே தமிழகத் தொல்லியல் துறை வெளியீடுகளில் சில, தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் துறையில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வெளியிடுவதை எப்படி ஏற்க முடியும்? இப்போதே இப்படி என்றால் ஆங்கிலவழி வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும். எப்படி அரசுப் பள்ளியில் ஆங்கில வழியும் உண்டு என்று கூறிய பின் பல பள்ளிகளில் முற்றிலுமாக தமிழ்வழி காணாமல் போய்விட்டதோ அதுபோலவே எதிர்காலத்தில் தமிழகத் தொல்லியதுறையினை விட்டே தமிழ் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிற நிலை உருவாகும்.

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் குறிப்பிட்ட சில சிறப்புத் துறைகளில் தமிழகத் தொல்லியல் துறையும் ஒன்று. தமிழில் முதுகலைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் முதுகலை பட்டயப் பயிற்சிப் வகுப்பில் சேர்ந்து பயிற்சிப்பெற்று வேலைவாய்ப்பினை பெற்றுவந்தனர். வரலாறு, தொல்லியல் துறையில் முதுகலை பெற்றவர்களும் சேரலாம் என்றபோதும் அதிலும் தமிழ்வழியில் படித்துப் பட்டம்பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மற்ற துறைகளைப் போலல்லாது தமிழகத் தொல்லியல் துறை என்பது தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும், தமிழ் வழியில் படித்து வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கும் மிக முதன்மையானத் துறையாகும்.
ஏனேனில் தொல்லியல் துறையின் பிரிவுகளாக உள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டடுகள், செப்பேடுகள், நாணயங்கள், மெய்கீர்த்திகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும், வரலாற்று ஆவணமாக உள்ள தொல்தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கும் தமிழ்மொழியில் புலமை பெற்றிருப்பது என்பது மிக மிக அடிப்படையானதாகும்.
வரலாற்றுக்கான பல அடிப்படைச் சான்றுகளில் மொழி முதன்மையான சான்று. தமிழ் மொழி மட்டுமன்று, எந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதோ அந்தப் பகுதி மொழியின் இலக்கியம், இலக்கணம்  மற்றும் உள்ளடக்கங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு என்பது  அடிப்படைத்
தேவையானது. அதுவும் தமிழில் கட்டாயத் தேவை என்பதைக் கடந்த கால ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. காரணம் தமிழ் நாட்டில் மட்டுமே தமிழ் இலக்கியம் சொல்கின்ற செய்திகள் “தொல்லியலில்” காணக் கிடைக்கின்றன. பிற உலக மொழி இலக்கியங்களின் பொருண்மைத் தொடக்கம் தொன்மத்தாலேயே அமைகின்றன. தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மட்டுமே மக்கள் வாழ்வியலை விளக்குவதாக அமைகிறது. எனவே தமிழ் நாட்டின் தொல்லியல் ஆய்வில் தமிழ்மொழி “தனிப் பெரும்” இடத்தைப் பெறுகிறது.

மேலும் தொல்லியலுக்குள் புதை விடங்கள், மரபுச் சின்னங்கள், அகழாய்வு செய்யும் நிலையிலான வாழ்விடங்கள் போன்றவையும் அமைந்துள்ளன. உலகத்திலேயே ஆகப் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளன. அவற்றை அறிந்துகொள்வதற்குத் தமிழ் மொழி, இலக்கிய, மற்றும்  தமிழ்நாட்டு வரலாற்று அறிவென்பது முதன்மைத் தேவை. அது மட்டுமன்றித் தொல்லியல் துறையின் ஒரு பிரிவான சுவடிக்கு யாப்பிலக்கண அறிவுடன் கூடிய இலக்கியம் படித்தவர்கள் தேவை. இவை எல்லாம் அறிவியலிலோ, பொறியியலிலோ இடம் பெறாது. எனவே தமிழகத் தொல்லியல்துறையின் உயிர்நாடியாக விளங்குவது தமிழ்மொழியே.

மேலும் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் சில பணி நிலைக்கான தேர்வில் இந்நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏனென்றால் பிற நிறுவனங்களின் படிப்பில் தமிழ்நாட்டு தொல்லியல் குறித்த பகுதி மிகமிகக் குறைவே. எனவே தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அந்தப்படிப்புகள் போதுமானதாக இராது. உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலேயே கல்வெட்டுக்கள் அதிக அளவில் உள்ளது என்பதால் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை தனித்து இயங்க வேண்டிய நிலை இருக்கிறது, எனவே சிறப்புக் கருதி நல்ல நோக்கத்தில் அது கட்டாயமாக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் , பன்முகத்தன்மை என்ற பெயரில் அறிவியல் மற்றும் பொறியியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையில் சேர்ப்பது மிகமிகத் தவறான முடிவாகும். அறிவியல் தொழில் நுட்பம் தேவை என்றால், இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பை இரண்டாண்டாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது களப்பணிகளைப் பயிற்சியில் இணைத்தது போல்,  தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அறிவியல் திறன்நுட்ப பயிற்சிகளையும் பாடத்திட்டமாக இணைப்பதே சரியானதாக இருக்கும். அதைவிடுத்து அறிவியல், பொறியியல் படித்தவர்களுக்கு இசைவளிப்பது பொறுத்தமானதன்று.

ஏற்கனவே தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துவக் கல்லூரியில், தமிழ்ப் படித்தவர்களுக்கென இருந்துவந்த சிறப்பு வழியை முற்றிலுமாக ஒழித்து, அறிவியல் படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது போன்று, தொல்லியல் துறையிலும் பொறியியல், அறிவியல் படித்தவர்களை நுழைத்தால் தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்கள் ஒரங்கட்டப்படுவார்கள். இந்த நிலை உருவானால் தமிழே படிக்காமல் ஆங்கில வழியில் படித்து விட்டு அறிவியல், பொறியியல் படித்தவர்கள் உள்ளே வந்து தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ள வாய்ப்பு மிகஅதிகம்.

மேலும் பொறியியல் மற்றும் அறிவியல் படித்தவர்களுக்கென இயந்திரவியல், மின்னணுவியல், கட்டிடவியல், கணிணித்துறை, தொழிநுட்பத்துறை, வாகனவியல், வணிகத்துறை, விமானம், விண்வெளி  உள்ளிட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொல்லியல் படித்தவர்களுக்கு இதைவிட்டால் வேறுதுறைகளில் பணிவாய்ப்பு இல்லை. ஏற்கனவே தொல்லியல் படித்தவர்களை வரலாற்றுத் துறையில்கூடப் பணிநியமனம் செய்யத் தடை இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்குப் பேரிடியாய் அமையும். எனவே தொல்லியல் துறை இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு  பன்னிரெண்டாம் வகுப்பில் குறிப்பிட்ட சில பாடங்களைக் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதுபோல் தொல்லியல் துறையிலும் அதைசார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருந்த அந்த விதியினை எவ்வித மாற்றமும் செய்யாமல் இனியும் தொடர வேண்டும்.

தொல்லியல்துறை என்பது வரலாற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தும் இடம். இதில் தவறு நடப்பது ஓர் இன அழிப்பிற்குச் சமமானதாகும். தொல்லியல் ஆய்விற்குத் தேவைப்படும் மிகச்சிறிய பகுதியான அறிவியல், பொறியியல் பாடங்களை இணைப்புப் பாடமாக வைத்துக் கொள்ளலாமே தவிர அவற்றைத் தகுதிக்கான முதன்மை பாடமாக வைத்தல் ஆய்வு முடிவுகளும், விளைவுகளும் தமிழுக்கும், தமிழக வரலாற்றுக்கும் எதிராகவே அமையவே வழிவகுக்கும்.

எனவே, தமிழகத் தொல்லியல் ஆய்விற்கு அடிப்படைத் தேவையான  தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையைவிட்டே  அப்புறப்படுத்தும் வஞ்சக நோக்கத்துடன் தமிழகத் தொல்லியத்துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துமெனவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் எனவும் எச்சரிக்கிறோம்.

naam-tamilar-katchi-tamil-metchi-pasarainaam-tamilar-katchi-tamil-metchi-pasarainaam-tamilar-katchi-tamil-metchi-pasarainaam-tamilar-katchi-tamil-metchi-pasarai

 Post Views: 99

 

 

https://www.naamtamilar.org/tn-archaeological-dept-should-stop-snatching-opportunities-that-are-meant-to-thamizh-graduates/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழில் ஆளுமையாக பேச கூடியவர் | நாம் தமிழர் கட்சி, தியாகத்தின் அடையாளம்|நடிகர் சௌந்தரராஜன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னாரி சர்பத்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்னாரி சர்பத்..

 

super

சேட்டனின் சேட்டைகளோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

 

இதிலே ஜெயலலிதாவை இலங்கைக்காரர் வரைந்திருக்கும் கார்டூனுக்காகவே மானம் ரோசமுள்ள நாடாக இந்தியா இருந்திருந்தால் அடித்து நொருக்கியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

 

 

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

நீட் எனும் கொடுங்கோன்மைத் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிராயுதம் ஏந்தித் தன்னுயிரை ஈந்து எதிர்ப்புணர்வைப் பற்ற வைத்த கல்வியுரிமைப்போராளி தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று. மூன்றாண்டுகளைக் கடந்தபோதிலும் தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதீதத்தாக்கமும், அளப்பெரும் ரணமும் நெஞ்சுக்குள் இன்னும் ஆழமாய்ப் பொதிந்து கிடக்கிறது. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மருத்துவப் படிப்பிற்குரிய மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் அவளை நிராகரித்து தங்கை அனிதாவின் மருத்துவக்கனவையும், அவளது உயிரையும் காவு வாங்கியது நீட் எனும் சமூக நீதிக்கு எதிரான தேர்வுமுறை. அனிதாவைத் தொடர்ந்து பல தங்கைகளும், தம்பிகளும் இன்றுவரை அதற்குப் பலியாகி, அம்மரணங்கள் நீண்டு தொடர்கதையாய் மாறிவருவது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. கல்விக்காகப் பிஞ்சுப்பிள்ளைகள் கருகிச்சாகையில் நெஞ்சம் விம்மித்துடிக்கிறது. அவர்களைப் பறிகொடுத்த பேரிழப்பு தரும் ஆற்றாமையும், எதுவும் செய்ய இயலாமைச்சூழலினால் வரும் குற்றவுணர்ச்சியும் நெஞ்சம் முழுக்க வன்மமாக உரமேறிக்கிடக்கிறது. நீட் தேர்வு முறையை அகற்றக்கோரி இன்னும் போராடிக்கொண்டிருக்கையிலே, புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் மிகப்பெரும் மோசடிக் கல்விக்கொள்கையைக் கொண்டு வந்து பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை முற்று முழுதாக மத்தியப் பட்டியலுக்கு நகர்த்தும் வேலையைத் தொடங்கியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. நவீன குலக்கல்வித் திட்டமான இப்புதிய கல்விக்கொள்கை செயற்படுத்தப்பட்டால் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நாற்றுகளான 20 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி, தங்கை அனிதாவைப் போன்று பல இளந்தளிர்களை அவர்களது கல்விக்கனவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடும் பேராபத்து உள்ளது. இச்சமூக அநீதி நிகழ்த்தப்பட்டால் இந்நாடு அறிவுலகில் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் என்பது உறுதி.

‘மாநிலத்தன்னாட்சி முழக்கம்’ என்பது அறிஞர் அண்ணாவின் உயில் என வர்ணிக்கப்பட்டது. அந்த அண்ணா தொடங்கிய கட்சியான திமுகவும், அவரைப் பெயரிலே தாங்கிய கட்சியான அதிமுகவும் கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்தும் அதனை மீட்டெடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையும் முன்வைக்காதது இரு கட்சிகளும் அண்ணாவுக்குப் செய்த பச்சைத்துரோகமாகும். மாநிலத்தன்னுரிமையும், தன்னாட்சியும் மீட்கப்பட்டுக் காக்கப்பட்டால்தான் இந்திய ஒன்றியத்தில் சங்கமித்து வாழும் தேசிய இனங்கள் பாதுகாப்பாக வாழ வாய்ப்பேற்படும். இந்தியாவின் அடையாளமாகக் காட்டப்படும் பன்மைத்துவம் பாதுகாக்கப்படும். மாறாக, மாநிலங்களின் உரிமைகள் யாவற்றையும் ஒவ்வொன்றாய் பறித்து, ஒற்றைமயப்படுத்தி அதிகாரக்குவிப்பிலும், எதேச்சதிகாரப்போக்கிலும் மத்தியில் ஆளும் அரசுகள் ஈடுபடும்போது அது இந்தியாவின் இறையாண்மைக்கே உலைவைக்கும் பேராபத்தாய் முடியும். இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் நலவாழ்வுக்கும் மாநிலங்களின் தன்னுரிமை நிலைநாட்டப்படுவதே உகந்ததாக இருக்கும்; உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர அரசியல் அழுத்தம் தந்து, அதனை மீட்டெடுக்க இந்நாளில் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/seeman-vows-to-bring-back-education-to-the-state-list-on-the-memorial-day-of-education-rights-activist-anita/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களையும் அதே மாதிரி செய்வேன் | சீமான் திட்டம் | அனிதா | நீட்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் | பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு தெளிவான பேச்சு - இந்த பையன் நல்ல பேச்சாளனாக வருவான்

சீமானின் மாணவனின் சிறப்பான கருத்தில் விளக்கம்! நாம் தமிழர் கட்சி | ஜேம்ஸ் JAMES

 

இளைஞர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் இருக்கும். நாம் மட்டும் தான் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.