Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி, தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, கொரோனாவால் பாதிப்பு, வைத்தியசாலையில் அனுமதி. தேவையான பணம் இல்லாததால் உதவி கோரல். 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஊட‌க‌த்தில் சொல்லுகிறார் தான் கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர் இல்லையாம் , ஆனால் க‌ட்சி பொதுகூட்ட‌ங்க‌ளுக்கு அழைத்தால் 10000ஆயிரம் ரூபாய் குடுக்க‌னுமாம் என்று க‌ட்சி வ‌ட்டார‌ம் தொட்டு என‌து ந‌ண்ப‌னும் சொல்லுகிறான் , எப்ப‌டி இப்ப‌டி ப‌ச்சையாய் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தால் பொய் சொல்ல‌ முடியுது , 

இப்ப‌ கொஞ்ச‌ நாளாக‌ என‌து ம‌ன‌சுக்குள் ஓடி கொண்டு இருப்ப‌து எங்க‌ளுக்கு த‌லைவ‌ரின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் எப்ப‌வோ அமைந்து இருந்தால் நாம் ஏன் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பின் தொட‌ர‌ போகிறோம் , எங்க‌ட‌ நாட்டை அபிவிரித்தி செய்வ‌தில் தான் எங்க‌ளின் க‌வ‌ண‌ம் இருந்து இருக்கும் 🤞🙏💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஊட‌க‌த்தில் சொல்லுகிறார் தான் கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர் இல்லையாம் , ஆனால் க‌ட்சி பொதுகூட்ட‌ங்க‌ளுக்கு அழைத்தால் 10000ஆயிரம் ரூபாய் குடுக்க‌னுமாம் என்று க‌ட்சி வ‌ட்டார‌ம் தொட்டு என‌து ந‌ண்ப‌னும் சொல்லுகிறான் , எப்ப‌டி இப்ப‌டி ப‌ச்சையாய் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தால் பொய் சொல்ல‌ முடியுது , 

இப்ப‌ கொஞ்ச‌ நாளாக‌ என‌து ம‌ன‌சுக்குள் ஓடி கொண்டு இருப்ப‌து எங்க‌ளுக்கு த‌லைவ‌ரின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் எப்ப‌வோ அமைந்து இருந்தால் நாம் ஏன் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பின் தொட‌ர‌ போகிறோம் , எங்க‌ட‌ நாட்டை அபிவிரித்தி செய்வ‌தில் தான் எங்க‌ளின் க‌வ‌ண‌ம் இருந்து இருக்கும் 🤞🙏💪

பையா, கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு.

இவர் நிணைத்தது சரியாக இருந்திருந்தால், குறைந்தது, கோவை மாவட்ட கட்சிகாரர்களாவது, அவருடன் விலகி இருகக வேண்டும்.

எம்ஜியார், வைக்கோ போகும் போதே, ஒரு படையே விலகி சென்றது.

எம்ஜியாரை எதிர்த்து விலகி, எஸ் டீ சோமசுந்தரம் தனிக்கட்சி தொடங்கி, நொந்தது போய், எம்ஜியார் இடமே போனார்.

வைக்கோ இப்ப எங்க?

இன்னும் ஒருவாரத்தில் இவர் ஓய்வு நிலைக்கு போவார். சீண்டுவார் இல்லாமல், புண்ணை சொறிவார். இறுதியில் வேறு கட்சிக்கு தாவுவார்.

இவர் வாய் பேச்சுக்காரர். ஒரு கட்சி நடத்தும் ஆளுமை இல்லாதவர்.

வீடியோ இலட்சுமி போல, பயணியோட காலம் போகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

large_NTK.jpg.3c0c199bd6b68f20ec4f176880f9c825.jpg

24.56 + 27.63 = 52.19%

பாதிப்பு இல்லை என்கிறார்கள்.

இது எந்த‌ ஊட‌க‌த்தில் ந‌ட‌த்தின‌ வாக்கெடுப்பு ,


பாதிப்பு இல்லை அதை என்னால் சொல்ல‌ முடியும் ஆனால் தேவை இல்லா பிர‌ச்ச‌னைக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் உருவாக்க‌ பார்க்கிறார் , 

தேர்த‌ல் ப‌ணிக‌ள் இப்ப‌வே தொட‌ங்கியாச்சு , க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் அதி வேக‌மாய் க‌ட்சி வேலைக‌ள் செய்வ‌து  தெரியுது , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இது எந்த‌ ஊட‌க‌த்தில் ந‌ட‌த்தின‌ வாக்கெடுப்பு ,


பாதிப்பு இல்லை அதை என்னால் சொல்ல‌ முடியும் ஆனால் தேவை இல்லா பிர‌ச்ச‌னைக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் உருவாக்க‌ பார்க்கிறார் , 

தேர்த‌ல் ப‌ணிக‌ள் இப்ப‌வே தொட‌ங்கியாச்சு , க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் அதி வேக‌மாய் க‌ட்சி வேலைக‌ள் செய்வ‌து  தெரியுது , 

thatstamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

thatstamil.com

தான் எதிர் பார்த்தது நடக்காததால், குட்டி, குட்டி சனலுக்கெல்லாம் பேட்டி குடுக்கிறார்.

 

ஆனால் இவர் யாராலோ இயக்கப்படுகிறார் என சந்தேகம் உறுதியாகிறது.

 

அதேவேளை ராஜிவ் காந்தி அமைதியாக இருக்கிறார்.

 

மீண்டும் கட்சியினுள் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

பையா, கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு.

இவர் நிணைத்தது சரியாக இருந்திருந்தால், குறைந்தது, கோவை மாவட்ட கட்சிகாரர்களாவது, அவருடன் விலகி இருகக வேண்டும்.

எம்ஜியார், வைக்கோ போகும் போதே, ஒரு படையே விலகி சென்றது.

எம்ஜியாரை எதிர்த்து விலகி, எஸ் டீ சோமசுந்தரம் தனிக்கட்சி தொடங்கி, நொந்தது போய், எம்ஜியார் இடமே போனார்.

வைக்கோ இப்ப எங்க?

இன்னும் ஒருவாரத்தில் இவர் ஓய்வு நிலைக்கு போவார். சீண்டுவார் இல்லாமல், புண்ணை சொறிவார். இறுதியில் வேறு கட்சிக்கு தாவுவார்.

இவர் வாய் பேச்சுக்காரர். ஒரு கட்சி நடத்தும் ஆளுமை இல்லாதவர்.

வீடியோ இலட்சுமி போல, பயணியோட காலம் போகும்.

 

இவ‌ர் ப‌ய‌ந்தான் பீச்சாங் கோழி நாதா ,

இவ‌ரின் முத‌லாவ‌து பொய் சிறு வ‌ய‌தில் தேர்த‌லில் ஓட்டு போட்ட‌து /

இர‌ண்டாவ‌து பொய் , தான் சுந்த‌ர‌வ‌ள்ளியை இதுவ‌ரை நேரில் பார்த‌து இல்லையாம் ஆனால் சுந்த‌ர‌வ‌ள்ளி சொல்லுது க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் த‌ன்னை க‌ண்டால் கை எடுத்து கும்பிடுவாராம் ,

மூன்றாவ‌து பொய் நாதா , இவ‌ர் கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர் கிடையாதான் ஆனால் க‌ட்சி பொது கூட்ட‌ங்க‌ளில் பேசுவில் 10000ஆயிர‌ம் ரூபாய் குடுக்க‌னும் என்று என‌து ந‌ண்ப‌ன் தொட்டு ப‌ல‌ரும் சொல்லின‌ம் , 


நான்காவ‌து பொய் ஊட‌க‌ங்க‌ளில் தான் நேர்மையான‌வ‌ன் போல் காட்டி கொள்ளுகிறார் , ஆனால் இவ‌ர் ஓட‌ ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் இவ‌ர் வைத்து ந‌ட‌த்தும் ப‌யணி யூடுப் ச‌ண‌லில் என் கூட‌ விவாதிக்கிற‌துக்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு துணிவு இருக்கா என்று க‌ட்சி தொண்ட‌ர் கேக்கிறார் அத‌ற்கு ப‌தில் அளிக்காம‌ மூடிட்டு இருக்கிறார் ,

இவ‌ரின் பேச்சை பார்க்க‌ புது க‌ட்சி ஆர‌ம்பிப்பார் போல் தான் தெரியுது , 

இவ‌ரும் குள்ள‌ ந‌ரி என்ப‌த‌ நிருபித்து கொண்டு இருக்கிறார் , 

கால‌ப் போக்கில் இவ‌ர் காணாம‌ல் போவ‌து உறுதி இவ‌ரிட‌ம் போராடும் குன‌ம் துப்ப‌ர‌வாய் இல்லை , 

சில்ல‌ரைக‌ளில் இவ‌ரும் ஒருத‌ர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

தான் எதிர் பார்த்தது நடக்காததால், குட்டி, குட்டி சனலுக்கெல்லாம் பேட்டி குடுக்கிறார்.

 

ஆனால் இவர் யாராலோ இயக்கப்படுகிறார் என சந்தேகம் உறுதியாகிறது.

 

அதேவேளை ராஜிவ் காந்தி அமைதியாக இருக்கிறார்.

 

மீண்டும் கட்சியினுள் வரலாம்.

இவ‌ரை பின்னுக்கு இருந்து ஒருசில‌ காங் இவ‌ர‌ இய‌க்கின‌ம் ,  

இவ‌ர் தொட‌ர்ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு பேட்டி குடுக்க‌ தான் ப‌ல‌ருக்கு இவ‌ர் மேல் ச‌ந்தேக‌ம் வ‌ர‌ தொட‌ங்கின‌து /

இவ‌ரின் 11வ‌ருட‌ இள‌மைக் கால‌ம் போச்சு என்று முட்டை க‌ண்ணீர் வ‌டிக்குது , ஈழ‌த்தில் 20000ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் உயிரையே தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ள் ,  

இன‌ அழிப்பில் உருவான‌ க‌ட்சி மாவீர‌ர்க‌ள் மீது உறுதிமொழி எடுத்து விட்டு தான் பொதுக் கூட்ட‌ங்க‌ளில் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் பேசுவார்க‌ள் , அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ட்சியில் இருந்து கொஞ்ச‌ம் பிர‌ம‌ப‌ல‌ம் ஆகி விட்டு த‌ன‌து 11வ‌ருட‌ இள‌மைக் கால‌ம் போச்சுதாம் , இத‌ சொல்ல‌ இவ‌ருனுக்கு நாக்கு கூச‌லையா ,
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

thatstamil.com

இந்த‌ ஊட‌க‌த்துக்கை போய் ப‌ல‌ரும் க‌ல் எறிந்து போட்டு வ‌ருவாங்க‌ள் நாதா , இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு ஆத‌ர‌வு கொடுப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் கூடுத‌லா , ச‌ரி இதில் போய் இன்னும் கூட‌ குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணி விடுவோம் என்று பாதிப்பு வ‌ட்டின‌ கிளிக் செய்து விட்டு வ‌ருவாங்க‌ள் ,  இப்ப‌ கொஞ்ச‌ நாளாக‌ திராவிட‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு முட்டுகொடுக்கின‌ம் , 
நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் சில‌ர் புரித‌ல் இல்லாம‌ க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் சொல்லுவ‌து உண்மையா இருக்குமோ என்று குழ‌ம்பி போய் இருக்கின‌ம் , 

ஜீவ‌ன் மாதிரி என்னால் முக‌ம் காட்டி யூடுப்பில் பேச‌ முடியாது , ஜீவ‌ன் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் உண்மை முக‌த்தை ப‌ல‌ருக்கு வெளி கொண்டு வ‌ந்து விட்டார் ஆனாலும் அண்ண‌ன் சீமானின் பேச்சுக்கு ம‌திப் அளித்து கொஞ்ச‌ம் பொறுமையை க‌டை பிடிக்கிறார் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு ஆத‌ர‌வு கொடுப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள்

அப்பன் ஏன் கன தூரம் போவான். இஞ்சை யாழ்களத்திலையே நாம் தமிழர் கட்சி எண்டால் ஒவ்வாமை மாதிரி திரிஞ்ச மகான்களெல்லாம் கல்யாண சுந்தரத்துக்கும் ராஜீவுக்கும் ஆதரவு குடுக்கினம் எண்டால் எப்பிடிப்பட்ட ஆக்களெண்டு ஒருக்கால் யோசிச்சு பாருங்கோவன்.

நாங்களெல்லாம் நாம் தமிழர் கொள்கைகளுக்கு ஆதரவழிக்கின்றோமே தவிர கட்சியில் இருக்கும் முகங்களை அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அப்பன் ஏன் கன தூரம் போவான். இஞ்சை யாழ்களத்திலையே நாம் தமிழர் கட்சி எண்டால் ஒவ்வாமை மாதிரி திரிஞ்ச மகான்களெல்லாம் கல்யாண சுந்தரத்துக்கும் ராஜீவுக்கும் ஆதரவு குடுக்கினம் எண்டால் எப்பிடிப்பட்ட ஆக்களெண்டு ஒருக்கால் யோசிச்சு பாருங்கோவன்.

நாங்களெல்லாம் நாம் தமிழர் கொள்கைகளுக்கு ஆதரவழிக்கின்றோமே தவிர கட்சியில் இருக்கும் முகங்களை அல்ல.

கலியாணசுந்தரம் இன்னும் ஒரு கிழமைக்கு பிறகு தூங்கு நிலைக்கு சென்று விடுவார். இவர் அநேகமாக வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் நபராகவே இருப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீர்னு இவர்கள் ஏன் விலகணும்.. "அவங்க"தான் காரணமோ.. விலகலால் பலவீனமாகுமா நாம் தமிழர்?

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் 2 முக்கிய புள்ளிகள் நாம் தமிழர் கட்சியில் இருந்து தடாலடியாக விலகி இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்? ஒருவேளை அவங்கதான் காரணமா? இவர்கள் விலகலால் கட்சிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கல்யாண சுந்தரம்... இவர் கொஞ்ச நாளாகவே கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.. ஆனால் தன் மீதான புகாருக்கு கல்யாணம் சுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில்தான், சீமான் ஒரு பேட்டியில் கல்யாணம் சுந்தரம் குறித்த தனது ஆதங்கத்தையும் மிக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.. "கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்.. சொந்த பிள்ளைகள் போன்று வளர்த்தவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை... எனக்கும் விசுவாசமாக இருந்ததில்லை.. யாராலும் கட்சியை உடைக்க முடியாது என் சாவை தான் அவங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் " என்றார்.

அறிவிப்பு

இதையடுத்துதான், கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாண சுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. சீமானுக்கு லெட்டரும் எழுதினார். சீமான் பேசியதும், கல்யாண சுந்தரம் விலகியதும் மிகப்பெரிய சலசலப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி விட்டது.. அதேபோல, ராஜீவ் காந்தியும் விலகி உள்ளார்.. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி... இப்போது 2 பெரும் புள்ளிகளின் விலகல் அக்கட்சிக்கு பாதிப்பை தருமா என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

வாசகர்கள்

அதனால் இதுகுறித்து ஒரு கருத்து கணிப்பினை வாசகர்களிடம் நடத்தினோம்.. "கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி விலகலால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு வருமா?" என்று கேள்வி கேட்கப்பட்டது. "வாய்ப்பில்லை ராஜா" 24.29 சதவீதமும், "நிச்சயம் வரும்" என்று 37.03 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "யார் அவங்க?" என்ற ஆப்ஷனுக்கு 28.27 சதவீதம் பேரும், "பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற ஆப்ஷனுக்கு 19.41 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

பேட்டிகள்

இந்த வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை "நிச்சயம் பாதிப்பு வரும்" என்று 37.03 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இதற்கு காரணம், பெரும்பாலும் இந்த கட்சி குறித்து எந்த மைனஸ் சமாச்சாரமும் வெளியே வந்ததில்லை.. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என்று யாரும் சர்ச்சைகளில், குண்டக்க மண்டக்க பேட்டிகளில் சிக்கியது இல்லை.. சோஷியல் மீடியாவில் சுத்தி சுத்தி சீமானையே விமர்சிப்பார்களே தவிர, கட்சி நபர்கள் பற்றின செய்திகள், வதந்திகள் வெளிவந்தது இல்லை.

கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம்தான் பிரகாசமாக தெரிந்த முதல் நபர்.. அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர்.. பிறகுதான் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவர்.. கிட்டத்தட்ட 11 வருடம் சீமானுடன் பயணித்து வந்துள்ளார்.. இவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருபவை.. அதேபோல, டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு லெப்ட் & ரைட் வாங்குவது ராஜீவ்காந்திதான்.

திமுக

எந்த தேர்தலாக இருந்தாலும் இவர்களின் பங்களிப்பு பெரிதாகவே இருக்கும்.. வரப்போகிற தேர்தலிலும் பலம்பொருந்திய அதிமுக, திமுகவை வீழ்த்த அல்லது வாக்குகளை சிதறடிக்க இவர்களின் பேச்சுக்களே பிரதான மூலதனமாக இருக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் மூவருக்குள் ஏற்பட்ட உரசலால் 2 பேரும் விலகியுள்ளனர்.

யார் காரணம்?

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இவர்களைப் போன்ற சிறந்த பேச்சாளர்கள், செயல்பாட்டாளர்கள் இருந்து விலகுவது கட்சிக்கு மைனஸ் என்பதைதான் இந்த வாக்கு சதவீதம் பிரதிபலிக்கிறது.. இதற்கு அடுத்தாற்போல், "வாய்ப்பில்லை ராஜா" என்ற ஆப்ஷனுக்கு 24.29 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இவர்கள் முழுக்க முழுக்க சீமானை மட்டுமே நம்புவர்கள் போல தெரிகிறது.. "நாங்கள் சீமானின் தம்பிகள்" என்று மார்தட்டி சொல்வது போலவும் நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

கோட்டை

இந்த நிலையில்தான் இந்த இருவரின் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி சீமான் என்ற பலமான அஸ்திவாரத்தின் மீது எழும்பி நிற்கும் கட்டடம் என்பதால் அந்தக் கோட்டையைக் கலகலக்க வைப்பது சாமானியமானதல்ல என்பதையும் மறுப்பதற்கில்லை.

கோட்டை

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-naam-tamilar-katchi-weaken-by-the-resigning-of-2-key-persons/articlecontent-pf486714-397554.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

‘நீட்’ தேர்வின் மூலம் விளைந்த மனநெருக்கடியினால் அடுத்தடுத்து மாணவப் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்கிற செய்தி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் மூன்று இளந்தளிர்கள் தங்களுயிரை மாய்த்துக்கொண்டு சாகிற அளவுக்கு ‘நீட்’ தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவைக் கருக்கி, உயிரைக் குடிக்கும் கொலைக்கருவியாக மாறியிருப்பதைக் கண்கூடாக உணர்ந்தும் அலட்சியப்போக்கோடு அரசுகள் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மருத்துவப்படிப்பை மாற்றி, மருத்துவத்தை சேவைக் கண்கொண்டு பார்க்கிற மனநிலையைத் தகர்த்து வணிகமாக்கி, இலாபமீட்ட முயலும் ஆளும் வர்க்கத்தின் சதிச்செயலே ‘நீட்’ தேர்வு என்பதைத் தெளிவுபட உணர்ந்து, அதற்கெதிராக மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, அத்தேர்வு முறையை அகற்றக்கோரி இன்றளவிலும் போராடி வரும் நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் ஆழ்ந்த அமைதி கொள்வது மிகப்பெரும் அரசப்பயங்கரவாதமாகும்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கும்போதும் அதனைத் தனதாக்கிக் கொண்டு, அதில் ஆதிக்கம் செலுத்துவதும், மாநிலங்களின் கல்வியுரிமையைப் பறிப்பதும், ஒற்றைமயப்படுத்தித் தேர்வு முறைகளைப் புகுத்துவதுமான மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொடர் மக்கள் விரோதச் செயல்பாடுகள் யாவும் சனநாயகத்தைச் சிதைக்கும் எதேச்சதிகாரப்போக்காகும். தமிழக மக்கள் ‘நீட்’ தேர்வுக்கெதிராக ஒருமித்துக் குரலெழுப்பிய நிலையில் விளைந்த அரசியல் நெருக்கடி காரணமாக, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தர மறுத்து வருவது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத்துரோகமாகும்.

கல்வி என்பது மாணவர்களுக்குள் பொதிந்துக் கிடக்கும் தனித்திறனை வெளிக்காட்டி, அதனை மேம்படுத்தி வளர்த்து வார்த்தெடுத்து, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான முதிர்ச்சியையும், மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுவதாக அமைய வேண்டும். கல்விக்கூடங்கள் என்பவை மாணவர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் அளிக்கக்கூடிய உளவியல் பயிற்சிக்கூடங்களாக அமைய வேண்டும். தேர்வு முறைகள் என்பவை மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை, தாங்களே அளவிடுவதற்கான கருவியாக அமைய வேண்டும். ஆனால், இன்றைய கல்வி முறையும், கல்விக்கூடங்களும், தேர்வு முறைகளும் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்டு, பணம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் உளவியலைச் சிதைத்து, மனநெருக்கடிக்குள் தள்ளி அவர்களைச் சாகடித்து வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஒரே நாளில் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் என மூவர் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டிருப்பது தமிழ்ப் பேரினத்திற்கே ஏற்பட்ட கொடும் இழப்பாகும். ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்டுள்ள இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையோடும், மனவுறுதியோடும் இருக்க வேண்டும். எச்சூழலிலும் நம்பிக்கையை இழக்காது அயர்ச்சிக்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது போராடி வெற்றிபெறும் உத்வேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும், வீரவுணர்ச்சியும், விவேகத்தோடு இயங்கும் ஆற்றலும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் மனம்தளராது இச்சூழலையும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். நாளைய உலகைப் படைக்கக் காத்திருக்கும் நவயுகச் சிற்பிகளான மாணவத் தம்பி, தங்கைகள் தன்னம்பிக்கையோடு இத்தருணத்தை எதிர்கொள்ள வேண்டும் என அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

‘நீட்’ தேர்வு எனும் மாணவர்களின் கனவைப் பொசுக்கும் சமூக அநீதிக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும். ஆகவே, நமது மாணவப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, நலவாழ்வுக்காக, கல்வியுரிமைக்காக அநீதிக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டமும் செய்து சனநாயகப்போர் புரிய வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.

 

இடும்பாவனம் கார்த்திக்

மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

 

naam-tamilar-students-wing-idumbavanam-karthick-statement-against-neet.jpg

naam-tamilar-students-wing-idumbavanam-karthick-statement-against-neet-2020.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பல்வேறு மாவட்டங்களில் களத்தில் தம்பிகள் தங்கைகள் களப்பணி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

 

களத்தில் நிற்பவனே உண்மையான போராளி / என்றும் மக்கள் களத்தில் சீமான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவன் போனாலும் போடா நான் இருக்கேன் டா சீமான் கூட முழங்கிய பாரதிராஜா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி | பனை விதை நடும் விழா | திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி | சிவகங்கை மாவட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிசம் - சீமானிசம் இரண்டும் யாதெனில் ? | முனைவர். செந்தில்நாதன் | Tamizham

பிரபாகரன் என்ற பெருந்தலைவர் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களை சிங்கள இனவெறி தொடுத்த தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய இறைவனாக எங்கள் தலைவர் பிரபாகரனின் மக்கள் காப்பு அணுகுமுறை பிரபாகரனிசம்.

அந்த மாபெரும் தலைவனை பின்தொடர்ந்து தமிழ் நிலத்தில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போரை தொடுத்து வரும் நாம்தமிழர் கட்சியை உருவாக்கி கொள்கையை வகுத்து வரும் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கை சீமானிசம்.

பிரபாகரனிசம் என்பது ஆலமரம் சீமனிசம் என்பது அதன் விழுது 

பிரபாகரனிசம் என்பது சூரியன் சீமனிசம் என்பது சூரியனில் இருந்து ஒளிபெறும் நிலவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யாவை புகழ்ந்து தள்ளிய சீமான்

 

 

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன் தான் தம்பி சூர்யா | சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன் தான் தம்பி சூர்யா | சீமான்

வெகுவிரைவில் சூரியாவை தேர்தல்களில் காணலாம்.
எந்தக்கட்சியில் இணைகிறாரோ?

யார் தமிழர் என்று எப்படி கண்டு பிடிப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்லும் போது சிரிச்சான் இப்போ நடக்குது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வித பின்னடைவும் கட்சிக்கு கிடையாது!யார் வெளியேறினாலும் சரி!-திருச்சி வினோத்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.