Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாது என நினைக்கின்றேன்
 

ஒருவருக்கு இதுவும் விளங்கவில்லை என்றால்........

விளங்காதவர் போவார்.... விளங்க நினைப்பவன் வருவார்.... 😁

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடி ஏற்றம் நாம் தமிழர் கட்சி

 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣 EPPOTHUM THAMIZHAN நின் எதிர்பார்ப்பு எல்லாம் எமது பக்க தவறை பற்றி பேச கூடாது அடுத்தவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதே.


விசுகு உங்களிடம் கேட்ட கேள்விக்கு தகப்பனார் ஒரு பெரும் குடிகாரர் அதனால்  நாம் அழிந்தோம்   இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்?என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்?
இவர் யாழ்பாணத்து முறைபடி தனது தகப்பனாரை பற்றி போலி பெருமை எல்லாம் பேசாமல் உண்மையை சொல்கிறாரே நேர்மையானவராக இருக்கிறார் இவர் தனது தகப்பனால் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டிருப்பார் என்று நான் நினைப்பேன்.

 குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர் என்று மட்டும்தான் என்னால் நினைக்க முடியும் உங்களைப்பற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்னவாக பேசுகின்றான் இந்த பையன்👍👍👏

இப்படியொரு விழிப்புணர்வு பட்டி தொட்டியெங்கும் வருவதற்கு சீமனுக்கு தலை வணங்குகின்றேன்  🙏

சீமானின் வளர்ப்பு இளைஞர்களிடம் கருத்தில் விளக்கப் பேச்சு இருக்கும் நாம் தமிழர் கட்சி! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறதி மக்களின் இயல்பு அதை நினைவுப் படுத்துவது நாம் வேலை நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

சின்னக்கருப்பன்

.

spacer.png

விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே.

அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன்

 

 

இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால்,  அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.
1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை  
2. ஆங்கில பள்ளிகள் எத்தனை இருக்கிறதோ அதனை விட அதிகமாக தமிழ் மொழி பள்ளிகள் திறக்கப்படும்.
3. பயிற்றுமொழி தமிழ், கட்டாய பாட மொழி ஆங்கிலம். உலக மொழிகள் அனைத்தும் விருப்பமொழி. விரும்பினால் படிக்கலாம்.  இந்தி, உருது, ஜெர்மன் எல்லாம் விருப்பமொழி
4. தமிழ் மொழி படிப்பதற்கு காரணம் இனம் வாழ.
5. கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசக்கல்வி.
6. வேளாண்மை தமிழ் தேசிய தொழிலாக மாற்றுவார்கள்.
7. கல்வி வேலைவாய்ப்பு கிராமத்துக்கு கொண்டு செல்வார். அதனால் வேளாண்மையில் இருக்கும் விவசாயிகள் கிராமத்திலேயே இருக்க வேண்டும்.
8. வேர்வை உப்புப்பூர்க்க ஒருவன் உழைத்தால்தான் ஒருவேளை சோறு என்று சட்டம் போடப்படும்.
9. எல்லா படித்த இளைஞர்களையும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
10. எல்லா நிலங்களையும் ஒத்திக்கு வாங்கி அதில் எல்லா படித்த இளைஞர்களை ஈடுபடுத்தி பண்ணை நிலத்தில் உழைக்க செயல்படுத்துவார்
11. ஆடுமாடு மேய்த்தல் அரசுப்பணி. (டென்மார்க் வெறும் ஆடுமாடுதான் மேய்க்கிறது என்று கூறுகிறார்)
12. ஆந்திரா, அமெரிக்கா என்று ஆடுமாடுகளை ஏற்றுமதி செய்வார்.
13. ஆடுமாடு மேய்த்தலை மேம்படுத்தினால், பட்டுப்பூச்சி வளர்த்தல், மீன் வளர்த்தல், கோழி வளர்த்தல், விவசாயம் செய்தல் ஆகியவை முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
14. துபாயில் ஆடுமாடு மேய்ப்பதற்கு பதிலாக தமிழ்நாட்டில் ஆடுமாடு மேய்க்க அரசுப்பணி வழங்குவார்.
15. பாலில் நெய், பால்கோவா உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வார்.

இன்னொரு வீடியோவில், விவசாயத்தை அரசுவேலையாக மாற்றப்படும் என்று சீமான் கூறும் பேச்சு

 

 


சீமானின் பேச்சுக்கள் போல பல வாட்ஸப் செய்திகளை தினந்தோறும் நான் பார்க்கிறேன். அதுவும் முக்கியமாக படித்த இளைஞர்களும்,  தமிழ்நாட்டில் படித்துவிட்டு பிறகு பல வேறு நாடுகளில் வேலை செய்பவர்கள் கூட இது போன்ற தகவல்களை, பரிமாறிகொள்கிறார்கள்.

சீமான் எந்த அளவுக்கு படித்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. வீராவேசமாக பேசுபவர்களிடம் தமிழர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களுமே மயங்கிவிடுகிறார்கள். அவர்கள் உரத்து கத்தும்போது, அவர்கள் உண்மையை சொல்லுவதால்தான் அவர்கள் கோபத்துடம் பேசுகிறார்கள் என்று உள்ளார நினைத்துவிடுகிறார்கள். இந்த மனித  பலவீனத்தை பல அரசியல்வாதிகள் உபயோகப்படுத்துகொண்டுவிடுகிறார்கள்.

டென்மார்க்கின் முக்கிய தொழிலே ஆடுமாடு மேய்த்தல்தான் என்று சொல்லுகிறார் சீமான். அது தவறு.

டென்மார்க்கில் விவசாயம் சார்ந்த தொழில்கள், டென்மார்க்கின் வருமானத்தில் சுமார் 2 சதவீதமே பங்கு வகிக்கின்றன.

விக்கி இவ்வாறு கூறுகிறது.
By 2017 services contributed circa 75% of GDP, manufacturing about 15% and agriculture less than 2%.[125]
2017இல் சர்வீஸ் 75 சதவீத வருமானத்தையும், தொழில்துறை 15 சதவீதத்தையும் விவசாயம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே டென்மார்க் பொருளாதாரத்தின் பங்காக இருக்கிறது.

ஆனால் சீமான் போன்றவர்களுக்கும் சீமானின் உரைவீச்சில் மயங்குபவர்களுக்கும் ஏன் சர்வீஸஸில் 75 சதவீத வருமானம் வருகிறதே, இது என்ன? என்று தெரியாது.

விவசாயம் சார்ந்து ஒரு வாதத்தை வைப்பது எளிது. எதற்கு புல்லட் ரயிலை போடுகிறாய்? புல்லட் ரயிலையா தின்னப்போகிறாய் என்று கேட்பது ஒரு மடையனின் கேள்வி.

ஆனால் இது ஏன் கேட்கப்படுகிறது? அது ஏன் விரும்பப்படுகிறது? அது ஏன் ஆஹா என்று கைதட்ட வைக்கிறது என்பது இப்போது முக்கியமான கேள்வி.

அதனைத்தான் இங்கே பேசப்போகிறேன்.

புல்லட் ரயிலை சாப்பிட முடியாது. ஆனால் புல்லட் ரயில் போன்ற விஷயங்கள் ராஜஸ்தானில் விளையும் பொருட்களை தமிழகத்துக்கு அலுங்காமல் நலுங்காமல் கொண்டு வர வைக்கமுடியும். அதே புல்லட் ரயில், ஸ்ரீரங்கத்தில் உற்பத்தியாகும் மல்லிகையை அது வாடுவதற்குள் ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று விற்க வைக்க முடியும்.

ஆறுவழிச்சாலையை எதிர்க்கும் மடையர்களுக்கும் இதுதான் பதில். விவசாயம் செய்துவிட்டு அதனை விற்க கொண்டு செல்லவில்லை என்றால் செய்த விவசாயம் பாழ். எடுத்துச்செல்ல வேகமான தெரு இல்லை என்றால்,  உற்பத்தியான பாலை தொழுவத்தில்தான் கொட்ட வேண்டும். கன்னியாகுமரியில்  உற்பத்தியான பாலை டெல்லியில் விற்கவேண்டுமென்றால்,  logistics என்றால் என்னவென்று புரியவேண்டும்.  அதனை MBA பட்டப்படிப்பில் படிக்கிறார்கள். supply chain management என்றால் என்னவென்று புரியவேண்டும். உற்பத்தி செய்துவிட்டால் மட்டும் போதாது. அதனை சேமிக்கவும், அதனை வினியோகிக்கவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதனை பதனப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

பிரச்னை என்னவென்றால், தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் இன்னமும் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் வெகுவேகமாக விவசாய துறை வளர்ந்து வருகிறது. இதனால் முன்பு பத்து ஏக்கரில் உற்பத்தியான விவசாய பொருட்களை இன்று ஒரு ஏக்கரிலேயே உற்பத்தி செய்யமுடிகிறது. ஏராளமான பொருள் சந்தைக்கு வரும்போது உற்பத்தி செய்த பொருளின் விலை குறைகிறது.  

ஏன் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதன் அடிப்படை காரணம் இதுதான்.

உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை பார்ப்போம்.
 ஆயிரம் பேருக்கு உணவு  உற்பத்தி செய்ய 900 பேர்கள் உழைத்துகொண்டிருந்தார்கள் என்று வைத்துகொள்வோம். மீத 100 பேர்கள் விவசாயம் சம்பந்தமான இதர தொழில்கள், அதாவது ஏர் கலப்பை செய்வது, துணி துவைப்பது, போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள் என்று வைத்துகொள்வோம்.
அப்படியானால் அப்போது இந்த 900 பேர்கள் உற்பத்தி செய்துதான் அந்த ஆயிரம் பேரும் சாப்பிட முடியும். இந்த விவசாயிகள் மீத 100 பேர்கள் விவசாயம் இல்லாத தொழிலை செய்யும்போது அவர்களுக்கு கூலி என்பது இவர்கள் உற்பத்தி செய்வதில் அதிகமாக மிஞ்சுவதையே கொடுக்க இயலும்.

இதனை ஏறத்தாழ கொல்லைப்புறத்து விவசாயம் எனலாம். கொல்லைப்புறத்தில் விளைவதை வீட்டில் சாப்பிட்டு மிச்சமாக மிக கொஞ்சமே மிஞ்சும். அதுவே இந்த 100 பேர்களுக்கு உணவாக அவர்கள் செய்யும் உழைப்புக்கு கூலியாக செல்லும்.

இதுவே உற்பத்தி அதிகரிக்கிறது என்று வைத்துகொள்வோம். ஆயிரம் பேருக்கான உணவை வெறும் 50 பேர்களே உற்பத்தி செய்துவிடமுடியும் என்று வைத்துகொள்வோம். இப்போது 950 பேர்கள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்கான உணவை இந்த 50 பேர்களே கொடுத்துவிட முடியும். இப்போது மீத 950 பேர்கள் என்ன வேலை செய்வார்கள்? அவர்களாலும் உணவு உற்பத்தி செய்யமுடியும் அல்லவா? அவர்களும் உற்பத்தி செய்வார்கள். அப்போது ஏராளமான உணவு உற்பத்தியாகும்.  ஒரு பொருள் மிக அதிகமாக இருந்தால், அதன் விலை குறையும். டன் டன்னாக தக்காளி உற்பத்தியானால் தக்காளியின் விலை கடுமையாக குறையும் அல்லவா?  வருடம் முழுவதும் உழைத்து உற்பத்தி செய்த விவசாயி அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பார்க்கவியலாது.

spacer.png

இந்த வரைபடத்தில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி எவ்வாறு அதிகரித்துவருகிறது என்பதை காட்டுகிறது.
https://ourworldindata.org/crop-yields
மேலும் சில வரைபடங்களை இதில் காணலாம்.

இதில் தெரிவது என்ன?
விவசாய தொழில்நுட்பம் வளர வளர,  அதிக உற்பத்தி செய்யும் தாவரங்களையும் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, உற்பத்தி வெகுவேகமாக அதிகரிக்கிறது. இதனாலேயே உலகத்தில் முன்பு தலைவிரித்தாடிய பஞ்சங்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதுமட்டுமல்ல, அரிசி போன்ற உணவு தாவரங்களின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. (சீமான் போன்றவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி கொடுத்தார்கள், இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கவளம் கூட வாங்கமுடியாது என்று சொல்லலாம். அதை புரியவைக்க நான் பொருளாதார படிப்பு நடத்த வேண்டும் )

உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க, பொருள்களில் விலை குறைகிறது. இதனால் உற்பத்தி செய்த விவசாயி அதன் மூலம் வருமானம் பெற்று வசதியாக வாழ முடியாமல் ஆகிறது.

இதற்கு விடை என்ன?

விவசாயத்தை சார்ந்து மக்கள் இருப்பது குறைக்கப்பட வேண்டும்.

மற்ற தொழில்கள் விரிவடைய வேண்டும். விவசாயத்தை சார்ந்து மக்கள் இருப்பது குறைய குறைய ஒரு விவசாயி பெறும் வருமானம் அதிகரிக்கும். ஏனெனில், மிதமிஞ்சிய உற்பத்தி இருக்காது. மிதமிஞ்சிய உற்பத்தி இருந்தாலும் அந்த உற்பத்தியை விற்று கிடைக்கும் பணம் குறைவான விவசாயிகளுக்கே செல்லும். அந்த குறைவான விவசாயிகள் வளமையான வருமானம் பெறுவார்கள்.

உதாரணமாக 100 பேர், 1000 ரூபாய் பெருமானமுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால், அது ஆளுக்கு 10 ரூபாயாக பிரியும்.  ஆனால் 10 பேர் 1000 ரூபாய் பெருமானமுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால், அது ஆளுக்கு 100 ரூபாயாக பிரியும்.  இதனைத்தான் சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகமான ஆட்களை விவசாயத்துக்குள் தள்ளுவது என்பது முழு தமிழ்நாட்டையுமே ஓட்டாண்டியாக்கும் வேலை.   இன்று தேவை விவசாயத்தை நம்பி இருப்பவர்களை விவசாயத்திலிருந்து எடுத்து அவர்களுக்கு மாற்று தொழில்களை தருவது.

இன்று சென்னையில் கார் உற்பத்தியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு எல்லாரையும் விவசாயத்துக்கு அனுப்பினால், அவர்களுக்கு முதலில் நிலம் எங்கே இருக்கிறது?

இவரது இன்னொரு கருத்து கம்யூனிஸ்டுகளிடமிருந்து கடன் வாங்கப்பட்டது.
நிலங்களை மக்களிடமிருந்து ஒத்திக்கு எடுத்து (கம்யூனிஸ அரசாங்கத்தில் எல்லா நிலங்களும் மக்களுக்கே சொந்தம் என்ற பெயரில் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தமாகும்.)  எல்லா படித்தவர்களையும் இழுத்து வந்து அவர்களை விவசாயிகளாக கூட்டுப்பண்ணையில் ஈடுபடுத்தப் போகிறேன் என்று சொல்லுகிறார்.

கூட்டுப்பண்ணை முறையை எந்த நாட்டில் அறிமுகப்படுத்தினாலும் மிகப்பெரும் தோல்வி அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, சீனா, ரஷ்யா, கம்போடியா போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தையும் பேரழிவையும் இந்த மடத்தனமான யோசனை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் யாருக்குமே வரலாறு தெரியாது. அவர்களுக்கு அண்ணாவின் சொற்பொழிவும், பெரியாரின் இனவெறியும், சீமானின் அறிவுஜீவித்தனமுமே போதுமானது.  

இந்த கூட்டுப்பண்ணை மடத்தனத்தோடு சீமான் சொன்ன இன்னொரு விஷயத்தையும் இந்த சீன, ரஷிய, கம்போடிய சர்வாதிகாரிகள் செய்தார்கள். அதாவது, படித்தவர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் எல்லாரையும் வலுக்கட்டாயமாக பிடித்து வந்து பண்ணைகளில் வேலை செய்ய வைத்தார்கள். உடல் உழைப்பை கற்றுத்தருகிறார்களாம். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய உழைப்பால் உற்பத்தியை பெருக்கமுடியவில்லை. பெரும் பட்டினி பஞ்சத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். உக்ரைன் பஞ்சம், கம்போடிய பஞ்சம், சீன பஞ்சம் என்று சற்றே தேடினால் இந்த கம்யூனிஸ மாயைகள் விலகும்.

ஏன் சீமான் உளறுகிறார்? அவர் உளறுகிறார் என்று ஏன் எலிய தமிழ் பில்லைகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை?
இதனால்தான் தமிழ்நாட்டு கல்விமுறையை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டு கல்விமுறை தரத்தை ஆங்கிலத்தில் சொன்னால், race to the bottom என்று சொல்லலாம்.

காமராஜர் முதற்கொண்டு பலரும் கல்வியை பரந்துபட்டதாக ஆக்கி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். அதில் குறையேதுமில்லை.

பிரச்னை கல்வியின் தரம்.

எழுதப்படிக்க தெரிவது ஒன்றே குறிக்கோள் என்றால், தமிழ்நாட்டில் கல்விமுறையை பாராட்டலாம். ஆனால் இன்றைய நவீன உலகத்துக்கு எழுதப்படிக்க தெரிவது ஒரு பொருட்டே அல்ல.

தமிழ்நாட்டில் கல்வி முறையும் கல்வியின் தரமும் மிக மிக கேவலமாக இருக்கிறது.  கர்னாடகாவில் ஒரு ஆறாம் வகுப்பில் படிப்பவனின் தரம் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பின் தரமாக இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டின் கல்வியின் தரத்தை இதர இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு உலக நாடுகளின் கல்வித்தரத்தோடு ஒப்பிட வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு பொதுதேர்வும் வைப்பதற்கு கடினமான எதிர்ப்பு இருக்கிறது.
தேர்வே எழுதாமல் பாஸ் அறிவித்தால் அந்த முதலமைச்சர் மிகச்சிறந்த முதலமைச்சர் ஆகிவிடுகிறார்.
எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலினும் அவரது புத்திரரான உதயநிதி ஸ்டாலினும் , தேர்வுக்கு பணம் கட்டவில்லை என்றாலும் அவர்களை பாஸ் செய்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அடிச்சி விடுகிறார்கள்.

அதையே சீமானும் அடிக்கடி சொல்லுகிறார். எலிய தமில்பில்லைகள் எவ்வளவு சோதனைகளை தாங்கவேண்டும் என்று நினைத்தால் எனக்கு இப்பவே அடிவயிறு கலங்குகிறது.

சரி, தேர்வு வைக்க வேண்டாம். எந்த அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ப்பீர்கள்?

நீட் தேர்வை எழுதி பாஸ் செய்ய முடியாத ஒரு மாணவர், எந்த அடிப்படையில் மருத்துவ துறையில் ஐந்து வருடம் கடினமாக படித்து புரிந்துகொண்டு தேர்வு எழுதி மருத்துவராக ஆகமுடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள்?

அனிதா என்னும் மாணவி இந்த கல்வி தந்தைகளில் ஒருவர்  நடத்திய ஒரு தனியார் பள்ளியில் படித்து ”நூற்றுக்கு நூறு” வாங்கியும் நீட் தேர்வில் தோல்வியுற்றியிருந்தார். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதில் குற்றவாளிகள்,  அவரது மரணத்துக்கு காரணமான அந்த தனியார் பள்ளியும், அப்படிப்பட்ட கேவலமான ஒரு கல்வியை கொடுத்த தமிழக அரசுமே அன்றி நீட் தேர்வை கொண்டுவந்த அரசாங்கம் அல்ல.

இன்றைக்கு நீட் தேர்வு எதனால் எதிர்க்கப்படுகிறது? இங்கே கல்வித்தந்தைகள் தனியார் மருத்துவ கல்லூரிகள் நடத்துகிறார்கள். அதில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் குறைந்தது 120 மதிப்பெண் பெற்றவர்தான் சேரமுடியும் என்று கொண்டுவந்ததால், பல கோடிரூபாய்களை பணக்காரர்களிடமிருந்து பெற்று அவர்களது உருப்படாத குழந்தைகளுக்கு மருத்துவம் படிக்க வைக்கும் பிஸினஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த கல்வித்தந்தைகளும் அந்த கல்வித்தந்தைகளின் நண்பர்களும் நடத்தும் தொலைக்காட்சிகளில் ஊடகவியலாளர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டு, நீட் தேர்வால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று பிதற்றுகிறார்கள். பார்ப்பவர்கள் மனம் பதைக்கும் படி ஊளையிடுகிறார்கள்.

 இப்போது சீமானின் முதல் ஐந்து புள்ளிகளை பேசுவோம்.

இன்றைக்கு இருக்கும் ஆங்கிலப்பள்ளிகளை எல்லாம் மூடாமல் (!) தமிழ் பள்ளிகளை திறக்கப்போவதாக சொல்லுகிறார்.
ஏனெனில் அவருக்கே தெரியும். இன்று ஆங்கிலப்பள்ளிகளை மூடுவேன் என்று சொன்னால், அந்தகூட்டம் கலைந்துவிடும். ஆங்கிலத்தை எதிர்த்தால் அவருக்கு படியளக்கும் பெரிசுகள் சட்டையை கோர்த்து கேள்வி கேட்கும்.

 அவர் சொல்லுவதெல்லாம், ஆங்கிலப்பள்ளிக்கு போகாதவர்களை  தமிழை படிக்க வைப்பேன், ஏனெனில் ”தமிழ் இனம் வாழ” என்கிறார்.
ஆங்கிலப்பள்ளிகளை விட சிறப்பாக தமிழ் பள்ளிகளை நடத்தப்போவதாகவும் சொல்லுகிறார்.

ஆங்கிலம் கட்டாயப்பாடம், ஆனால் இந்தி மற்ற மொழிகள் கற்றுகொள்ள உதவி செய்வேன் என்கிறார். ஆமாம் இது ஏறத்தாழ இன்று மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் மும்மொழி கொள்கைதான்.

சீமான் நேரடியாக அந்த மும்மொழி கொள்கையை வரவேற்றுவிடலாம்.

https://en.wikipedia.org/wiki/National_Education_Policy_2020

பிரச்னை பள்ளிகள் அல்ல. பிரச்னை கல்லூரிகள். பிரச்னை பல்கலைக்கழகங்கள்.

தொழில்நுட்பம் , மருத்துவம், உயர்கல்வி, அறிவியலில் பிஹெச்டி எந்த மொழிகளில் செய்யப்படுகிறது என்பதுதான்.

சீமான் போன்றவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல், எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி உளறுவதற்கும், அதற்கு விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டுவதும் காரணம், உயர் கல்வி ஆங்கிலத்துக்கு சென்றதுதான்.

தமிழ் வளர்ப்பதாக பீலா விடும் திராவிட அரசியலின் கடந்த 60 வருட ஆட்சியில் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமே தமிழில் பொறியியல் சொல்லித்தரப்படுகிறது.  அதுவும் சமீபத்தில்தான்.

உயர்கல்வி தமிழில் இருந்தால், அந்த கல்வியை கற்றவர்களுக்கு படித்ததை பேச அதுவும் தமிழில் பேச பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகள் வருகின்றன. அந்த கல்வி, செவிவழியாகவே பல கோடி பேரை சென்றடைகிறது.  விவசாய பொருளாதாரம், நியூட்ரினோ அறிவியல், சப்ளை செயின் மேனேஜ்மண்ட் ஆகியவை எப்படியாகிலும் எல்லா தமிழர்களையும் ஒரு அடிப்படை அறிவுக்கு கொண்டு வந்திருக்கும். அவர்கள் அதனை படிக்கவில்லை என்றாலும் தமிழில் அவை பேசப்படும் பொருள்களாக ஆகியிருக்கும்.

ஆனால், உயர்கல்வி என்பது ஆங்கிலத்தில் மட்டுமே என்று ஆகிவிட்டதால், எந்த ஒரு உயர்கல்வியில் கற்ற விசயமும் பேசப்படும்போது அது தானாக ஆங்கிலத்தில் உரையாடப்படுகிறது. ஏனெனில் அந்த பொருளாதார சிக்கல்களை விளக்கும் வார்த்தைகளும், அறிவியலுக்கான வார்த்தைகளும் அதன் சொற்கட்டமைப்புகளும் தமிழில் வரவே இல்லை. அதனால் தமிழ் சவலைக்குழந்தையாக ஆகி, திமுகவின் வெற்று கூச்சலுக்கான, இந்தி போன்ற மொழிகளின் மீது வெறுப்பை தூண்டவும், அதன் மூலம் மக்களை கொந்தளிப்பு நிலையில் வைக்கவுமான விஷயமாக ஆகிவிடுகிறது.

இன்னொரு விஷயமும் இருக்கிறது.
ஆங்கிலம் என்பது அன்னிய மொழி. அன்னிய மொழி என்பதை ஆங்கிலேயர்களின் மொழி என்பதால் சொல்லவில்லை. அன்னிய மொழி என்பது, அதன் வார்த்தை கட்டமைப்புகளும், அதன் இலக்கணமும், அதன் சொற்களும் மக்களுக்கு அன்னியமானவை.  ஆகவே நீங்கள் பொருளாதாரத்தை ஆங்கிலத்தில் கற்றுகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு ஆங்கில மொழியை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை ஆங்கிலத்தில் படிக்கும்போது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியும். அது இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் எளிதில் சாத்தியமானது.

ஆனால் இந்தி,  கன்னடம், மலையாளம் போன்றவை நமக்கு அன்னிய மொழிகள் அல்ல. அவற்றின் இலக்கணம் , அவற்றின் சொற்கட்டமைப்புகள், வார்த்தைகள் போன்றவை மிகவும் நெருங்கியவை.  இதனால்தான் தமிழர் ஒருவருக்கு இந்தி கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்.

இந்தியாவிலிருந்து அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக நான் இதனைத்தான் காண்கிறேன்.

இதனை ரிச்சர்ட் பெயின்மன் தன்னுடைய நூலில் குறிக்கிறார்.

பிரேசில் சென்றிருந்தபோது அங்கே மாணவர்கள் தங்களுடைய பிராந்திய மொழியான  போர்ச்சுகீஸ் மொழியில் கற்காமல், ஆங்கிலத்தில் கற்பதையும், அது அவர்களை வெறுமே மனப்பாடம் செய்யும் மடையர்களாக ஆக்கியிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

இன்று வளர்ச்சியடைந்த எந்த நாட்டை எடுத்துகொண்டாலும், அவர்கள் தங்களுடைய பிராந்திய மொழியிலேயே (பிராந்திய மொழி, தாய்மொழி அல்ல) உயர்கல்வியை கற்றுத்தருவதை பார்க்கலாம்.  அமெரிக்கர்கள் ஆங்கிலத்திலும், ஜெர்மானியர்கள் ஜெர்மன் மொழியிலும்,  பிரான்ஸ் பிரெஞ்சிலும், இத்தாலியில் இத்தாலி மொழியிலும் கற்றுத்தருகிறார்கள், படிக்கிறார்கள்.  சீனாவில் சீன மொழி மண்டாரின் மொழியில்தான் உயர்கல்வி நடக்கிறது. ஜப்பானில் ஜப்பான் மொழியில்தான் உயர்கல்வி நடக்கிறது. கொரியாவில் கொரிய மொழியில்தான் உயர்கல்வி.  ரஷியாவில் ரஷ்ய மொழியில்தான் உயர்கல்வி.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் மிகப்பெரும் தோல்வி அடைந்து கிடந்தபோது செல்வங்கள் ஏதுமின்றி ஏழையானார்கள். அடிப்படை வசதிகள் செய்யவும், உணவுக்கும் கூட பணமில்லை. ஆனால், அவர்கள் தங்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி முழுநேர வேலையாக முக்கியமான அனைத்து அறிவியல் தொழில்நுட்ப புத்தகங்களையும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். தற்போதைய சாப்பாட்டைவிட, எதிர்கால ஜப்பான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.

இன்று ஜப்பானிலிருந்து வெளிவரும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் ஜப்பானிய மொழி கல்விதான் இருக்கிறதே தவிர ஆங்கில கல்வி அல்ல. சொல்லப்போனால் அங்கே இருக்கும் பெரும்பாலான ஜப்பானிய அறிவியலாளர்களுக்கும் பொறியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஆங்கில மொழியே தெரியாது. ஆனால் அவர்கள் குருட்டுத்தனமாக மொழிவெறி பிடித்தும் அலையவில்லை. ஆக்ஸிஜன் என்பதை ஆக்ஸிஜன் என்றே எழுதிகொண்டார்கள். கார்பண்டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்றும்  தமிழ் வெறியர்கள் அதனை ஆக்சிசன் என்று எழுதித்தள்ளி, சுய புளகாங்கிதம் அடைந்து தமிழை காப்பாற்றிவிட்டோம் என்று நிம்மதியாக தூங்க போயிருப்பார்கள். இவர்களுக்கு ஜ ஷ, ஸ ஹவை தமிழ் படுத்தினாலே தமிழை காப்பாற்றிவிட்டதாக கருதிவிடுகிறார்கள் (ஆனால் என்னவோ ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இவர்கள் எழுத்தில் இருக்கிறார். சுடாலின் ஆகவில்லை)

இன்றைய தேவை என்று நான் கருதுவது இதுதான்.
1. அனைத்து ஆங்கில, இந்தி மொழி வழி கல்வி முறையும் தமிழ்நாட்டிலிருந்து அறவே நீக்கப்பட்டு, தமிழுக்கு, அதாவது பிராந்திய மொழிக்கு, அனைத்து பள்ளிகளும் மாற்றப்படவேண்டும். ஆங்கில வழி கல்வி அறவே ஒழிக்கப்படவேண்டும்.
2. அனைத்து கல்வியும், கல்லூரி கல்வி, முதுநிலை கல்வி, பிஹெச்டி ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட வருடத்துக்குள் தமிழுக்கு மாற்றப்பட வேண்டும்.
3. இந்தியும் ஆங்கிலமும் கட்டாயமற்ற மொழியாக கற்றுத்தரப் படவேண்டும். அதாவது அதில் பாஸ் பெயில் என்று இல்லாமல் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும்.
4. தாய்மொழி கற்றுகொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமே அன்றி, உருது மீடியம், தெலுங்கு மீடியம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும்.
5. இதுவே அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும்.  உதாரணமாக கர்னாடகத்தில் கன்னடமொழியே பிரதானமாக உயர்கல்விக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

அப்படி நடந்தால், வேறு வழியின்றி, தனியாரும் அரசும், தமிழில் உயர்கல்வி நூல்களை மொழிபெயர்க்க நிர்பந்திக்கப்படும். அது முதல்முறையாக செய்யப்படும்போது கண்றாவி மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கும். ஆனால், தொடர்ந்து மூன்றாவது நான்காவது முறை மொழிபெயர்க்கப்படும்போது தமிழ் அந்த அறிவியல், தொழில்நுட்ப வார்த்தைகளை ஸ்வீகரித்துகொள்ள ஆரம்பிக்கும். (அப்படி ஏதும் நடந்தால், ஷ,ஸ,ஜ, ஹ போன்ற எழுத்துக்களை நீக்கிவிட்டு தமிழ் எழுதும் மட வெறியர்களை தயவு செய்து நாடுகடத்திவிட வேண்டுமாய் மன்றாடி கேட்டுகொள்கிறேன்)

இது சாதிக்கப்பட்டால், இன்னும் 20 வருடங்களுக்குள் அறிவியல், தொழில்நுட்பத்தில் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் சிறந்துவிளங்கும்.

இதன் மீது விவாதத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இணைப்புகளின் பகுதிEffective Speech of seeman (2019) என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்Effective Speech of seeman (2019)நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும் – சீமான் என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும் – சீமான்

 

http://puthu.thinnai.com/?p=40867

 

 

 

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிருபன் அய்யா,

எங்க இருந்து இதுகளை எடுத்துக் கொண்டு வருகிறீயளோ தெரியவில்லை.

இந்த தளத்தினை நோர்டோன் பிளாக் பண்ணுது.

Safe Web Report for:
puthu.thinnai.computhu.thinnai.com
icoWarning
WARNING
Norton Rating
Safeweb Share
The Norton rating is a result of NortonLifeLock's automated analysis system. Learn more.
The opinions of our users are reflected separately in the community rating on the right.

Community Reviews (0)
Threat Report
This is a known dangerous web page. It is highly recommended that you do NOT visit this page.


Click here to submit dispute

Safe Web Report for:

icoWarning
 
WARNING
 

Norton Rating

Safeweb Share
 
The Norton rating is a result of NortonLifeLock's automated analysis system. Learn more.
The opinions of our users are reflected separately in the community rating on the right.

Community Reviews (0)

Threat Report

This is a known dangerous web page. It is highly recommended that you do NOT visit this page.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா,

எங்க இருந்து இதுகளை எடுத்துக் கொண்டு வருகிறீயளோ தெரியவில்லை.

இந்த தளத்தினை நோர்டோன் பிளாக் பண்ணுது

திண்ணை காலம் காலமாக இருக்கும் ஒரு தளம். நோர்ரொனுக்கு இன்னுமா காசு கொடுக்கின்றீர்கள்!

கட்டுரையில் சொல்லப்பட்டதை வாசித்தேன். நாம் தமிழர் அரசியல் ஆச்சே என்பதால் இணைத்திருக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

திண்ணை காலம் காலமாக இருக்கும் ஒரு தளம். நோர்ரொனுக்கு இன்னுமா காசு கொடுக்கின்றீர்கள்!

கட்டுரையில் சொல்லப்பட்டதை வாசித்தேன். நாம் தமிழர் அரசியல் ஆச்சே என்பதால் இணைத்திருக்கின்றேன். 

இந்த கட்டுரையின் ஒரே ஒரு விசயம்  பத்தி பேசலாம். மீதி, ஒரு சோறு பதம் என்கிற கதைதான்.

1. எடப்பாடி படித்தது 5ம் வகுப்பு. கருணாநிதி, எம்ஜிஆர், காமராஜர் அப்படி லெவல் தான்.

2. டென்மார்க் குறித்து பேசலாம். தமிழகத்தின் கிராமப்புற, தெருவோர இன்னும் சொல்லப்போனால் நகர்புறத்தில் பெருமளவு மக்களுக்கு சர்விஸ் இண்டஸ்ட்ரி என்றால் என்னவென்று புரியுமா?

3. 2% மட்டுமே விவசாயம் என்கிறார். ஆனால் அந்த இரண்டு வீதம் மக்களும், மிக உயர் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் விவசாயிகள். நாட்டின் 63% நிலப்பகுதி இவர்களால் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது . உலகில், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மிக அதிக அளவு நிலம் விவாசாயத்துக்கு பயன்படுத்த்தப்படுவது டென்மார்க்கில் தான்.

4. இதனால், தன்னிறைவு அடைந்ததுடன், ஏற்றுமதி செய்யுமளவுக்கு உயர்ந்து இருக்கிறது அந்தநாடு. முக்கிய விவசாய பொருட்கள், ஆடு, மாடு, கோழி, பன்றி. உயர் தொழிநுட்பம், இயந்திர பாவனை காரணமாக, 2% மக்களே விவசாயத்துக்கு போதும். மீதமானோர் வேறு வேலைகளில்.

5. சீமான் சொல்ல வருவது, விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததுடன், ஏற்றுமதியும் செய்யும் நிலையில், அந்த நா(ட்)டு (விவசாயிகள்) உள்ள(து)னர் என்பதை. 

6. சீமான் சொல்வது, நிலம், வளம், ஆள் இருந்தும் ஏன் ஆந்திராவில் இருந்து ஆட்டு இறைச்சியும், பாலும் வரவேண்டும் என்று?

7. இனொரு விசயம் முக்கியமாக நீட் தேர்வினை கட்டுரை ஆதரிக்கின்றது. "மிழர் ஒருவருக்கு இந்தி கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்", என்று வேறு போதிக்கிறது. 😁

இதனையே மாத்தி சொல்லி பார்த்தேன், கிருபன் ஐயா:  "தமிழர் ஒருவருக்கு சிங்களம் கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்", சிரிப்பு, சிரிப்பா வருது...

இதுக்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது. இது சங்கிகள் ஆதரவு தளம் இல்லாமல் வேறென்ன? கடைசீல கிருபன் நம்மள சங்கீ ஆக்க பார்க்கிறாரோ?

தயவு செய்து இந்த தமிழ் நாட்டு அலப்பறைகளை இங்கே கொட்டாதீர்கள் என்று சொன்னால் கேட்க்கிறீர்கள் இல்லை. சீமான் உங்களுக்கு பிடிக்காமல் இருப்பது வேறு. அதுக்காக, சங்கிகள் பிரசங்கம் நாமும் பெற வேண்டும் என்று நீங்கள் கருதுவது வேறு.

இன்னும் பல அலம்பரைகளை சுட்டிக் காட்டிட  முடியும். நேரமில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

தயவு செய்து இந்த தமிழ் நாட்டு அலப்பறைகளை இங்கே கொட்டாதீர்கள் என்று சொன்னால் கேட்க்கிறீர்கள் இல்லை.

தமிழ் நாட்டில் இருந்து வரும் சீமானின் மோசமான அலப்பறைகளை கொட்டாமல் விட்டாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் நாட்டில் இருந்து வரும் சீமானின் மோசமான அலப்பறைகளை கொட்டாமல் விட்டாலே போதும்.

 

21 minutes ago, Justin said:

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

2 hours ago, கிருபன் said:

கட்டுரையில் சொல்லப்பட்டதை வாசித்தேன். நாம் தமிழர் அரசியல் ஆச்சே என்பதால் இணைத்திருக்கின்றேன். 

Smiley Face Big Smile Clipart - Full Size Clipart (#1524932) - PinClipart

No Comments !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

மோகனே எதுவும் பேசவில்லை. தாங்கள் ஏன் கொதிக்கிறேள்?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் நாட்டில் இருந்து வரும் சீமானின் மோசமான அலப்பறைகளை கொட்டாமல் விட்டாலே போதும்.

உங்களுக்கு பிடித்தது எங்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதே போல் எங்களுக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இது நியதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மோகனே எதுவும் பேசவில்லை. தாங்கள் ஏன் கொதிக்கிறேள்?

நீங்கள் மோகனை நேரே சந்தித்திருந்தால் ஏன் அவர் பேசுவதில்லை என்று புரியலாம்!

ஆனால், ஏனைய தமிழ் நாட்டு குப்பைகளை இணைத்த போது நாதம் கொதித்ததற்கே இந்தப் பதில்! மற்றபடி திரி இருக்க வேண்டும், பூட்டும் படி  விரும்பும் பாசிசம் என்னிடம் இருந்து வராது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

.இன்னும் பல அலம்பரைகளை சுட்டிக் காட்டிட  முடியும். நேரமில்லை.

நாதர்! சீமானின் ஈழகொள்கையை தவிர்த்து பார்த்தால் சர்வதேச நாடுகளில் முன்னேறி வரும் பசுமைவாத கட்சிகளின் கொள்கையே தவிர வேறொன்றுமில்லை. இந்திய பத்திரிகைகளில் எப்படி வேண்டுமானாலும் எருதுவார்கள். திண்ணை ஊடகத்திற்கு கொஞ்ச பணம் அனுப்பி சீமானுக்கு சார்பாக எழுதச்சொல்லுங்கள். புராணகாலத்திலிருந்து எழுதி சான்றுகளுடன் புகழ்வார்கள். அதையும் இங்கே இணைத்து அழகு பார்ப்பார்கள் இந்த கூட்டங்கள்.

நியாயங்கள் சாவதில்லை.அது  ஈழத்தில் இன்று தெரிகின்றதல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

நீங்கள் மோகனை நேரே சந்தித்திருந்தால் ஏன் அவர் பேசுவதில்லை என்று புரியலாம்!

ஆனால், ஏனைய தமிழ் நாட்டு குப்பைகளை இணைத்த போது நாதம் கொதித்ததற்கே இந்தப் பதில்! மற்றபடி திரி இருக்க வேண்டும், பூட்டும் படி  விரும்பும் பாசிசம் என்னிடம் இருந்து வராது!

மோகனினை நான் நேரில் சந்தித்தாலும் அவர் மன நிலையை அறியும் திறமை என்னிடம் இல்லை.

2009க்கு முன்னர் இருவகையான தமிழ் இணையத்தளங்கள் இருந்தன.
ஒன்று புலிகள் சார்ந்த ஈழவிடுதலை இணையத்தளங்கள்.
இரண்டு விடுதலைப்புலிகளை மட்டும் எதிர்க்கும் இணையத்தளங்கள்.
2009க்கு பின்னர்  புலிகள் சார்ந்த இணையத்தளங்கள் மேலும் செய்வதறியாது மூடப்பட்டன. அல்லது விடுதலைப்புலிகள் மீதான தடைகளால் முடப்பட்டன.ஆனால் விடுதலைப்புலிகளை எதிர்க்க மட்டும் வந்த இணையத்தளங்கள் சொல்லியே மூடினார்கள். அதாவது நாங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. இனி எமக்கு வேலை இல்லையென்று.....
ஜஸ்டின் நான் எழுதிய தமிழ் புரிகின்றதா? அல்லது நான் எழுதியது புரிகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, Justin said:

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

ஐயா உங்கடை கருத்து படி  பார்த்தால் பல திரிகள் இழுத்து மூடவேண்டி வரும் .icq  காலத்தில் இருந்து இன்றைய வாட்ஸாப் யுகம்  வரை  நின்று பிடிப்பதுக்கு  காரணம் மோகனின் நடுநிலைமை ஒரு செய்தியை உண்மை பொய் அறிய உலகில் உள்ள தமிழர்கள் தேடிவந்து பார்க்கும் இணையம் இது ஆனந்த விகடன் கூட கருத்து கள  முயற்சி பண்ணி தோல்வி அடைந்த விடயம் காரணம் அவர்கள் ஒரு கட்சி சார்பான அரசியல் .உங்களுக்கு இந்த சீமான்  பிடிக்கவில்லையா உங்கள் சீமானின் தவறுகளை சுட்டி காட்டுங்கள் அது அழகு அதுக்காக எப்பவும் போல் ஆமைக்கறி மோதகம் வடை என்று போகாமல் அவரின் அரசியல் பிழைகளை சுட்டி காட்டுங்கள் அது இன்னும் அழகு . ராஜீவ்  காந்தி படுகொலையுடன் தமிழ்நாட்டில் ஈழ எழுச்சி இல்லாமல் போகும் என்றார்கள்  ஆனால் தமிழ்நாட்டில் புலிகளை தூக்கி எறிந்த கட்சி ஆடசி பீடம் எற முடியாமல் தவிக்கினம் காரணம் இந்த சீமான் புரிந்து கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

 

ஐயா உங்கடை கருத்து படி  பார்த்தால் பல திரிகள் இழுத்து மூடவேண்டி வரும் .icq  காலத்தில் இருந்து இன்றைய வாட்ஸாப் யுகம்  வரை  நின்று பிடிப்பதுக்கு  காரணம் மோகனின் நடுநிலைமை ஒரு செய்தியை உண்மை பொய் அறிய உலகில் உள்ள தமிழர்கள் தேடிவந்து பார்க்கும் இணையம் இது ஆனந்த விகடன் கூட கருத்து கள  முயற்சி பண்ணி தோல்வி அடைந்த விடயம் காரணம் அவர்கள் ஒரு கட்சி சார்பான அரசியல் .உங்களுக்கு இந்த சீமான்  பிடிக்கவில்லையா உங்கள் சீமானின் தவறுகளை சுட்டி காட்டுங்கள் அது அழகு அதுக்காக எப்பவும் போல் ஆமைக்கறி மோதகம் வடை என்று போகாமல் அவரின் அரசியல் பிழைகளை சுட்டி காட்டுங்கள் அது இன்னும் அழகு . ராஜீவ்  காந்தி படுகொலையுடன் தமிழ்நாட்டில் ஈழ எழுச்சி இல்லாமல் போகும் என்றார்கள்  ஆனால் தமிழ்நாட்டில் புலிகளை தூக்கி எறிந்த கட்சி ஆடசி பீடம் எற முடியாமல் தவிக்கினம் காரணம் இந்த சீமான் புரிந்து கொள்ளுங்கள் .

பெருமாள், 40 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருப்பதை முன்கூட்டியே சொல்லக் கூடியவர் நீங்கள், கண் முன்னே இருக்கும் கருத்தைப் பார்க்க மாட்டீர்களோ? எங்கே திரியைப் பூட்டச் சொல்கிறேன்? திரி இருக்க வேன்டுமென்று தானே சொல்லியிருக்கிறேன் கு.சா வுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!
இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!

 

 

இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

இந்திய கலாச்சாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து பெரும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைச் சேர்க்காது முற்றாகப் புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. வரலாற்று ஆய்வை நடத்துவதற்காக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் வெளியிட்ட 16 பேர் கொண்ட நிபுணர்குழு பட்டியலில் இவ்வாறான புறக்கணிப்புகள் நடந்தேறியிருப்பது தற்செயலானதல்ல. இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரும் சதி என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. அக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதன் மூலம் அது தெளிவாகிறது. இத்தோடு, மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை என்பதும் அதனை மெய்ப்பிக்கிறது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 16 பேரில் 3 ஷர்மாக்கள், 2 சுக்லாக்கள், 1 சாஸ்திரி, 1 தீட்சித் மற்றும் 1 பாண்டே என 14 ஆரியப்பார்ப்பனர்கள் இடம்பெற்றுள்ளனர் எனும்போதே பாஜக அரசின் உள்நோக்கமும், சதிச்செயலும் தெளிவுபட விளங்குகிறது.

இந்தியா என்பது ஒற்றைத்தேசமல்ல. பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதைத்தான் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் முதல் உறுப்பு வரையறுக்கிறது. எனவே, குறிப்பிட்ட ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையோ அல்லது குறிப்பிட்ட ஒரு இனத்தவரையோ மட்டுமே கொண்டு இந்நாட்டின் வரலாற்றை எழுத முனைவதென்பது திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து எழுத வழிவகுக்கும் கொடுஞ்செயலின்றி வேறில்லை. குறிப்பாக இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளிலேயே கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் அதிகமான கல்வெட்டுகளையும் , அதேபோல ஓலைச்சுவடிகள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்று வாழ்விடங்கள், அரிக்கமேடு, கீழடி உள்ளிட்ட மிக மூத்த வரலாற்று தொல்லியல் களங்களையும் கொண்டுள்ள நிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், இந்தியாவின் வேறெந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு மூவாயிரம் ஆண்டுகாலப் பழமைமிக்க இலக்கண , இலக்கிய வளங்களுடைய நூல்களைக் கொண்ட மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது. வேற்று நாட்டவர்களெல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் மீது படையெடுத்து வந்த வரலாற்றுக்கிடையில், கடல் கடந்து அந்நியத் தேசங்கள் பலவற்றிற்கும் படையெடுத்துசென்று வென்ற வரலாறு தமிழர்களுக்கே உரித்தானது. தொழில்நுட்ப வசதி இல்லாத ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரியக் கப்பற்படையும், யானைப்படையும் தமிழர்களிடம் இருந்துள்ளது. எனவே, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்குடியான தமிழ்ப்பேரினத்தின் வரலாற்றை, தமிழ் மொழியின் தனித்துவமிக்கச் சிறப்பையும், அளப்பெரும் பெருமையையும், தமிழ் மண்ணின் செழுமைமிக்க மரபையும், பண்பாட்டையும் அறியாத, சிறிதும் தொடர்பற்ற ஒரு கூட்டம் வரலாற்றை எழுதுமாயின் அது தமிழர்களைச் சிறுமைப்படுத்தும் வரலாறாகவே அமையும். கீழடி வரலாற்றை மறைக்க முயன்றதுபோல, தமிழர்களின் பெருமைமிக்கத் தொல் வரலாறும் மூடி மறைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான திரிபு வரலாறு உட்புகுத்தப்படும். ஒரு நூற்றாண்டாகப் பெரிய அளவில் தொல்லியல் ஆய்வு செய்து நிறுவப்பட்ட சிந்துசமவெளி நாகரீகம் ஒரு தமிழர் நாகரீகம் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் அழிக்கப்படக்கூடும். மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் இம்மண்ணிற்கு அந்நியர்கள் எனும் தொல்லியல் முடிவுகள் இனி மாற்றி எழுதப்படும். அதற்காகவே உலகப் பிரமாணச் சங்கத்தின் தலைவராக உள்ள எம்.ஆர்.ஷர்மா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத்தின் துணைவேந்தர் பி.என்.சாஸ்திரி, உள்ளிட்டப் பெரும்பாலான வடமொழிப் பேராசியர்களை வரலாற்று ஆய்வறிஞர் போர்வையில் இந்த நிபுணர் குழுவில் உள்நுழைத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வக்குடிகள், இந்நாடு ஆரியர்களுடையது, ஆரிய மதமே இந்நாட்டின் பூர்வீக மதம், ஆரிய வேத, புராண, இதிகாசங்கள் கூறும் பண்பாடே இந்தியாவின் பண்பாடு என்பதை நிறுவவே மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்தகையப் படுபாதகச்செயலை அரங்கேற்றியுள்ளது. அவ்வாறு நிறுவுவதன் மூலம் இந்து, இந்தி, இந்தியா என்ற பாஜகவின் மனுதர்மக் கோட்பாட்டினை இந்நாடு முழுவதும் கட்டமைத்து நாட்டிலுள்ள பலவகைப்பட்ட தேசிய இனங்களின் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வரலாறு, வழிபாடு ஆகியவற்றினை முற்றாகச் சிதைக்க முற்படுகிறது. இது தேசிய இனங்கள் மீது மத்தியில் ஆளும் மோடி அரசு நிகழ்த்தப்போகும் பண்பாட்டுப்படையெடுப்பு என்றால், மிகையல்ல. ஆரியமயமாக்கலுக்கு எதிரான மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக தேசிய இனங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகிறது.

ஆகவே, இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவினை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிதாகக் குழு அமைத்து அக்குழுவில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள், பட்டியல் சமூகத்தவர், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்குமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு, வரலாற்றுச்சான்றுகள், தொல்லியல் முடிவுகள் அடிப்படையில் வரலாறு பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/naam-tamilar-seeman-condemns-union-govt-indian-historical-research-council/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வாங்கிய ரஜினிகாந்த் : பின்னணி என்ன?

 

இலவச குடிநீர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

திண்ணை ஊடகத்திற்கு கொஞ்ச பணம் அனுப்பி சீமானுக்கு சார்பாக எழுதச்சொல்லுங்கள். புராணகாலத்திலிருந்து எழுதி சான்றுகளுடன் புகழ்வார்கள். அதையும் இங்கே இணைத்து அழகு பார்ப்பார்கள் இந்த கூட்டங்கள்.

தர்க்கரீதியாக விமர்சனம் வைப்பவர்களையும் காசுக்காக எழுதுபவர்கள் என்று  எதுவித ஆதாரமும் இல்லாமல் எழுதி விமர்சனத்தை முற்றாக மறுப்பதும் இங்கு தாராளமாக நடக்கின்றது. 

9 hours ago, Nathamuni said:

இதுக்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது. இது சங்கிகள் ஆதரவு தளம் இல்லாமல் வேறென்ன? கடைசீல கிருபன் நம்மள சங்கீ ஆக்க பார்க்கிறாரோ?

நான் உங்களை சங்கி ஆக்கவில்லை. சீமான் தனது வாக்கு வீதத்தை வைத்து பாஜகவுடன் ஒரு டீலுக்கு வந்து சேரும்போது நீங்களாகவே சங்கிகள் ஆவீர்கள்.

திண்ணை 2000 ஆம் ஆண்டில் இருந்து இயங்குகின்றது. தமிழக முக்கிய அரசியல் விமர்சகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் குந்தியிருந்த இடம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

ஆகவே, இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவினை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிதாகக் குழு அமைத்து அக்குழுவில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள், பட்டியல் சமூகத்தவர், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்குமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு, வரலாற்றுச்சான்றுகள், தொல்லியல் முடிவுகள் அடிப்படையில் வரலாறு பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/naam-tamilar-seeman-condemns-union-govt-indian-historical-research-council/

இப்படி நாம் தமிழர் கட்சியின் இணையத்தளத்தில் இருந்து ஒயாமல் ஒட்டுவதும், அவர்களின் வீடியோக்களை ஒட்டுவதும், விமர்சனங்களை மூர்க்கமாக எதிர்த்து கருத்துக்களை வைக்காமல் தடுப்பதும் இந்தத் திரியில் நடப்பதால்தான் இதனை நாம் தமிழர் பிரச்சாரத் திரி என்று நானும் சொல்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இப்படி நாம் தமிழர் கட்சியின் இணையத்தளத்தில் இருந்து ஒயாமல் ஒட்டுவதும், அவர்களின் வீடியோக்களை ஒட்டுவதும், விமர்சனங்களை மூர்க்கமாக எதிர்த்து கருத்துக்களை வைக்காமல் தடுப்பதும் இந்தத் திரியில் நடப்பதால்தான் இதனை நாம் தமிழர் பிரச்சாரத் திரி என்று நானும் சொல்கின்றேன். 

எல்லோரும் ஓ போட்டு கை தட்டிவிடுங்கள் நம்ம கிருபனுக்கு 👏👏👏

 நல்லா நொந்து போய்விட்டீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

எல்லோரும் ஓ போட்டு கை தட்டிவிடுங்கள் நம்ம கிருபனுக்கு 👏👏👏

 நல்லா நொந்து போய்விட்டீர்களா

😂🤣

கருத்துக்கு பதில் எழுதத் தெரியாவிட்டால் இப்படியான பதில்கள்தான் உங்களிடம் இருந்து வரும் என்று தெரியும்😜 அதனால் நோக ஒன்றுமில்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

😂🤣

கருத்துக்கு பதில் எழுதத் தெரியாவிட்டால் இப்படியான பதில்கள்தான் உங்களிடம் இருந்து வரும் என்று தெரியும்😜 அதனால் நோக ஒன்றுமில்லை.😎

என்ன கருத்தை ஏதிர் பார்க்கின்றீர்கள். சொன்னால் எழுதிப்போடலாம் 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.