Jump to content

Recommended Posts

 ஒரு தெளிவுக்காக..

”நாம் தமிழர் அரசியல்” என்பது ஒரு கட்சிக்கான திரி அல்ல. மாறாக, நாமெல்லாம் தமிழர் எனும் கருத்தியல் கொண்ட எந்தப் பதிவை வேண்டுமானாலும் இடலாம்!

குறிப்பாக, பெ.மணியரசன், மு.களஞ்சியம் போன்றவர்களின் செவ்விகள் எல்லாம் இணைக்கப்படுகின்றன. இவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லர்.

அதேபோல, ஐயா இமயவன், ஒரிசா பாலு போன்ற தனிமனித ஆளுமை கொண்டவர்களின் செவ்விகளும் இணைக்கப்படுகின்றன. காரணம் அவர்கள் நாமெல்லோரும் தமிழர்கள் எனும் கூற்றினை வழியுறுத்துவதால்..!

நாமெல்லோரும் திராவிடர்கள், இந்தியர்கள், சிறீலங்கன்ஸ், கனேடியன்ஸ். லண்டன்ஸ் என்கிற கருத்தியல்கள் இங்கே பதியப் படுவதில்லை!

”நாம் தமிழர்”

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வேளாண்மை சட்டங்களின் நகல் எரித்து அதிரடி போராட்டம்.!!" காவிரி உரிமை மீட்புக்குழு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் அறிவோ அறிவு | நல்லவன் பாஜகவில் சேர மாட்டான் - சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

உடையாரின் புரிதல் புரிந்ததுதானே. 😂

கட்டணம் செலுத்த பல சீமானின் தம்பிகள் சில்லறையோடு தயார் என்று மேலே எழுதியதைத் பார்த்தாலே தெரிகின்றது இது நாம் தமிழர் பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்குமான திரி என்று.  

 

இது தான் இந்த நடுநிலை என்று மதில் மேல் நிற்பவர்களது வேலை. கட்டணம் கட்டி எழுதுங்கள் என்பார்கள் கட்டுகிறோம் என்றால் அப்ப நீங்க அவர்களது வால் தானே என்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

எனது வசன நடைகளை ஷூமா எடுத்து கையாண்டதும் (தெரிந்தோ, தெரியாமலோ), அதற்கு predictive ஆக நாதமுனியர் கொடுத்த (இது கோசான் வேறு பெயரில் எழுதிறார் என்ற தொனிப்பட்ட) ரியாக்சனும் comedy gold🤪.  கிரேஸி மோகன் கூட இப்படி ஸ்கிரிப்ட் எழுத கஸ்டப்படுவார்.

🤣அவர்கள் நம்பிக்கை வெளிநாட்டில் உள்ள ஈழத்தவர்கள் எல்லாம் சீமான் இரசிகர்கள் தான். சீமானை எதிர்த்து எழுதினால் அது நீங்களும் Tulpen ம் வேறு வேறு பெயர்களில் வருகிறீர்கள்.🤣

11 hours ago, goshan_che said:

இந்த திரி போல் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கூட யாழில் பிரச்சார திரி இல்லை.

கவலையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

 ஒரு தெளிவுக்காக..

”நாம் தமிழர் அரசியல்” என்பது ஒரு கட்சிக்கான திரி அல்ல. மாறாக, நாமெல்லாம் தமிழர் எனும் கருத்தியல் கொண்ட எந்தப் பதிவை வேண்டுமானாலும் இடலாம்!

குறிப்பாக, பெ.மணியரசன், மு.களஞ்சியம் போன்றவர்களின் செவ்விகள் எல்லாம் இணைக்கப்படுகின்றன. இவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லர்.

அதேபோல, ஐயா இமயவன், ஒரிசா பாலு போன்ற தனிமனித ஆளுமை கொண்டவர்களின் செவ்விகளும் இணைக்கப்படுகின்றன. காரணம் அவர்கள் நாமெல்லோரும் தமிழர்கள் எனும் கூற்றினை வழியுறுத்துவதால்..!

நாமெல்லோரும் திராவிடர்கள், இந்தியர்கள், சிறீலங்கன்ஸ், கனேடியன்ஸ். லண்டன்ஸ் என்கிற கருத்தியல்கள் இங்கே பதியப் படுவதில்லை!

”நாம் தமிழர்”

"நாம் தமிழர்" என்று subjective ஆக உணர்ந்தவாறே, அந்த கோசத்தின் கீழ் இங்கே பதியப் படும் உரைகள்/காட்சிகளின் நன்மை, தீமை, ஆபத்து என எல்லாம் பதியப் படலாம் என்று நான் விளங்கிக் கொள்கிறேன்.  அது வீடியோ வடிவிலும் இருக்கலாமா, நீங்கள் சுட்டிக் காட்டியபடி நாம் தமிழர் அரசியலில் இல்லாத ஆட்களின்/குழுக்களின் வீடியோக்களாகவும் இருக்க்லாமா?

இதையெல்லாம் என்னை விட, இங்கே பொல்லோடு திரியும் bouncers விளங்கி கொள்ளக் கூடிய தேவை இருக்கிறது, எனவே தான் கேட்கிறேன்.😊

நன்றி இசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த மாசத்துக்கு... இன்னும் பத்து நாள் இருக்கே...
அது மட்டும், காக்க வைக்காதீர்கள். :grin:

பயப்படாதீங்கோ.....உங்கினை தான் நீக்கமில்லாமல் நிறைந்திருப்பார்.... நாதக ஏதும் அசுமாத்தம் நடந்தால் டபார் எண்டு வந்து குதிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

நீட்’ தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பாதை இயக்கத்தினர் மீது காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அறவழிப்போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வன்மையாக எதிர்ப்பதாகச் சொல்லும் அதிமுக அரசு, அதே நோக்கத்திற்காக அறப்போராட்டம் செய்யும் இளைஞர்களைக் குண்டாந்தடியாகக் கைதுசெய்து அப்புறப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல்தர மறுத்து, எதேச்சதிகாரப்போக்கோடு மாநிலத்தின் தன்னுரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கவோ, அரசியல் நெருக்கடி கொடுக்கவோ நெஞ்சுரமற்ற தமிழக அரசு அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்க முனைவது வெட்கக்கேடானது.

மதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தினர் நீட் தேர்வு முறைக்கெதிராக சென்னையில் அமைந்துள்ள அவ்வியக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் அணுகி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னெடுப்புகளை விரைந்து செய்கிறோம் எனும் நம்பிக்கை மொழிகளைத் தர வேண்டிய தமிழக அரசு, அதற்கு நேர்மாறாகக் கைதுசெய்து போராட்டத்தைக் குலைக்க முனைவது சனநாயகத்துரோகமாகும். தங்கை அனிதா தொடங்கி 13 பிஞ்சுகள் நீட் எனும் கொலைக்கருவிக்கு இரையாகியுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு முற்று முழுதாய் பொசுங்கிய தற்காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறப்போர் செய்ய வேண்டிய தமிழக அரசு அதிகாரமற்ற எளியப் பிள்ளைகள் மீது பாய்வது அரச நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர் நிற்கையில், அதே நோக்கத்திற்காக பட்டினிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைவது மக்களின் உணர்வுகளுக்கெதிரான படுபாதகச்செயலாகும்.

நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் முற்றாகச் சிதைக்கும் மத்திய அரசின் மனுதர்மக் கோட்பாட்டிற்கும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவோம் எனக்கூறி பல ஆண்டுகளாகத் தமிழக மாணவர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசின் ஆளுமையற்ற செயல்பாட்டுக்கும் எதிரான கோபத்தின் வெளிப்பாடே இத்தகைய போராட்டங்கள் என்பதை எவராலும் மறுக்கவியலாது. ஆகவே, அதனைப் புரிந்துகொண்டு நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டுள்ள மக்கள் பாதை அமைப்பினர் மீது எவ்வித வழக்கும் தொடராது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-condemns-tn-police-forcefully-evict-makkal-pathai-members-who-were-protested-against-neet/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்தின் வெற்றி - தேர்தல் அரசியலிலா ? இயக்க அரசியலிலா ?

 

சூர்யாவை மிரட்டும் நீங்கள் முடிந்தால் என்னை மிரட்டிப் பாருங்கள் |சீமான் |சூர்யா

 

Link to comment
Share on other sites

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தம்பி செல்வம் படுகொலை அதிமுக பிரமுகர் காவல்துறை ஆய்வாளர் இவர்களை கைது செய்ய வேண்டும்

 

36 minutes ago, zuma said:

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

ஆமா 2009 க்கு பின் அவருடைய சுயருபம் வெளிப்பட்டது உண்மையே. தன் மானமுள்ள தமிழன் 

பனை விதைகள் சேகரிப்பு ஓலைப்பட்டி சாக்கடை சுத்தம் செய்தல் காரைக்குடி நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

ஆ.... மெய்தானோ...... அண்ணை.....

விசயம் தெரியாமல் இம்மளவு நாளும் விசர்தனமா இருந்திட்டம்.... 🤔

சரி... அங்கை சரியான மழையாமே, மெய்யே? 🗯️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

 

துரோகங்களும் காட்டிக் கொடுப்புகளும் தமிழர் வரலாற்றில் புதிதல்ல

 

இவ‌ர் சொல்லுவ‌து முற்றிலும் உண்மை , உள்ள‌ பேசி தீர்க்க‌ வேண்டிய‌ பிர‌ச்ச‌னைக‌ளை த‌மிழ‌க‌த்து க‌ருணாசுந்த‌ர‌ம் பொது வெளியில் கொண்டு வ‌ந்த‌து க‌ட்சிக்கு செய்த‌ மாபெரும் துரோக‌ம் ,

(நாமே த‌மிழ‌ர்) என்ர‌ க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ போவ‌தாக‌ க‌தை அடி ப‌டுது போக‌ போக‌ க‌ருணாசுந்த‌ர‌த்தின் உண்மை முக‌ம் வெளியில் தெரிய‌ வ‌ரும் ,

க‌ருணாசுந்த‌ர‌ம் க‌ட்சியை பிடிக்காட்டி மெள‌வுன‌மாக‌ வில‌கி போய் இருக்க‌னும் , ஆனால் க‌ருணாசுந்த‌ர‌ம் அக்கா அண்ணா உங்க‌ளிட‌ம் ஊட‌க‌ம் இருக்கா நான் பேட்டி த‌ருகிறேன் என்று ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ளில் தான் நேர்மையான‌வ‌ன் போல் காட்டி ப‌ல‌ குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணி ,

இப்போது ஏதோ ஊட‌க‌ ச‌ந்துப்புக்கு ம‌றுத்து விட்டார் என்று நீங்க‌ள் இணைத்த‌ காணொளிய‌ பார்த்து தெரிந்து கொண்டேன் , 

க‌ருணாசுந்த‌ர‌த்தின் ம‌ன‌து அழுக்கு , டென்மார்க்கில் க‌ருணாசுந்த‌ர‌த்துக்கு ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் போன‌ கிழ‌மை அவைக்கும் என‌க்கும் சில‌ முர‌ன் பாடுக‌ள் வ‌ந்த‌து அவை வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌லாய் இருந்துட்டு போக‌ட்டும் ஆனால் நான் வைச்ச‌ கேள்விக்கு ப‌தில் அளிக்க‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ள் த‌டுமாறினார்க‌ள் , அவ‌ர்க‌ளின் முக‌ நூலில் நான் எழுத‌ முடியாத‌ மாதிரி செய்து வைச்சு இருக்கின‌ம் , போங்க‌டா ப‌ண்னாடைய‌ல் என்று எல்லாரையும் வுலொக் செய்து விட்டு வில‌கி விட்டேன் 😁😀

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி பதில் - பொறுமை இருந்தால் முழுவதும் பாருங்கள்👍
மேதகு பிரபாகரன் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பியை கொன்றவன் எவன்டா சீமான் தலைமையில் வெடிக்கும் போராட்டம் |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சார்பு வணிகத்தை எப்போது கையில் எடுக்க போகிறோம் ? தமிழர் மரபு மீட்சி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்தம்பி செல்வனுக்கு 23 வயதுதான் & 6 மாத கைகுழந்தை உள்ளது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இலட்சியத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம்-நாம்தமிழர் பிரித்தானியா சூளுரை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுமை புரட்சி நண்பர்கள் குழு பனை விதைகள் நடுதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுஉச்சிமேடு கிராமம்

 

சீமான் தம்பிகள் வேலையை பாருங்கள்! நாம் தமிழர் கட்சி தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.