Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

 

1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.

2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Swastik symbol pics. 60 Top Nazi Swastika Pictures, Photos, & Images -  Getty Images  

 

Hagekors png 4 » PNG Image

 

4 minutes ago, Nathamuni said:

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

நீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.😂
அவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.

2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.

தல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.

காலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....

நிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...

அம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

தல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.

காலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....

நிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...

அம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.

அப்ப சுடலை என்கின்ற தத்தியை பற்றி தெரிஞ்சு கொண்டும் என்னத்துக்கு பாஸ் கேக்கிறியள்🤣

எச்சரிக்கை கொடுத்தது கருத்துகளை மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுவோருக்கு எதிராக அல்லவே.

இந்த திரி எழுதபடும் கருத்துகளால் பூட்டபசுவதாக யாரும் சொல்லவில்லை.

இந்த திரியில் கருத்து எழுதுவோரால் இந்த திரி ஒருநாளும் பூட்டபடாது.

இந்த திரி பூட்டபட்டால் அது கருத்து எழுதாதவர்களின், கருத்து தவிர் ஏனைய நடவைக்கையால் நடந்ததாகவே இருக்கும்.

நிழலி சொன்னது என்ன?

1. நாம் தமிழர் பிரச்சார இணைப்பை தவிருங்கள்.

2. தனி மனித துதிபாடலை தவிருங்கள்.

இரெண்ட்டையும் இந்த திரியில் அல்ல என் வாழ்நாளிலேயே நான் செய்ய போவதில்லை.

ஆகவே என்னால் இந்த திரி பூட்டு படாது.

10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

சிங்கம்,

உங்கள் கருத்துகளில் அண்மையில் ஒரே தமிழ் மணக்குது🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

அடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்😁😁😁

Bluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு😜

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

Swastik symbol pics. 60 Top Nazi Swastika Pictures, Photos, & Images -  Getty Images  

 

Hagekors png 4 » PNG Image

 

நீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.😂
அவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து. 🤣

சுவாஸ்டிகா (பெயரே சமஸ்கிருதம்) ஆரியர்களின் அடையாளம். அதை ஹிட்லர் தனது ஆரிய மேலாதிக்க கொள்கைக்காக கடன் வாங்கினார் அல்லது ஹைஜாக் பண்ணினார். கிட்லருக்கு முதலே பிரம்மணியத்தின் பல ஆயிரம் ஆண்டுகால அடையாளம் சுவாஸ்டிகா. மெய்கண்டான் கலெண்டரில் இருப்பது அதனால்தான்.

ஆனால் ஹிம்லர் என்ற பெயர் நானறிய தமிழ் பெயர் இல்லை. 

ஆகவே இந்திய ஆரியர்கள் தமது ஆயிரமாண்டு கால அடையாளத்தை பயன்படுத்துவதை வைத்து அவர்கள் நாஜி அபிமானிகள் என சொல்ல முடியாது.

ஆனால் ஒரு தமிழர் ஹிம்லர் என பெயர் வைத்தால் அவர் நாஜி அபிமானியா? என்ற கேள்வி வரத்தான் செய்யும்.

ஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

அடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்😁😁😁

Bluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு😜

 

 

🤣🤣🤣

தட் என் சாவுக்கு காத்திருக்கிறார்கள் மொமெண்ட்

🤣🤣🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

அண்ணை,

வாங்கோ வன்னியரிண்ட துபாய் திரிக்கு. பயனுற பேசுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

உலக இராணுவ அரசியல் அறிஞர்கள் கூடி 
தமிழ் இனம் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா இனமும் 
எவ்வாறு வாலாவது என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள் 

"பிரயோசனமாக?

உங்களுக்கு நக்கலாக இருக்கிறதா? 

திரியை பூட்டுவதை பின்போட்டு முதலில் உங்களை போன்றவர்களை 
களத்தில் இருந்து தூக்குவதைத்தான் முதலில் பார்க்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

அத தானே சொல்லுறன்.....

தாங்களே வச்சிருக்கிற பேரே , தமிழ் பெயர் இல்லை. அதுக்கு அர்த்தமும் தெரியாது.

யாரோ ஒரு யுரியூப்காரர் வைத்திருக்கும் பெயர் ஜேர்மனிகாரர் பேராம்.

முட்டையில்... ஏதோ பிடுங்குவது எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...

இது வேலை மினக்கட்ட நாவிதர்.... பூணையை பிடித்து சிரைத்த கதை தான்.....

அதை செய்பவர்கள்.... தமது நேரத்தினையும்... அடுத்தவர் நேரத்தினையும் சேர்ந்தே நாசமாக்குகிறார்கள்.

இதை சொன்னா, நாம் இங்க வரக்கூடாதென்று தானே இப்படி சொல்கிறீர்கள் என்று வேற போட்டு தாக்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

இதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்?

ஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர் எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்?☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்?

ஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர் எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்?☺️

இதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.

எனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....

திராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.

அதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.

வெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட்டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.

நான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.

அதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.

மற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.

எனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....

திராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.

அதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.

வெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட்டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.

நான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.

அதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.

மற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.

 

 இந்த பொயின்ற்றுக்கு மேட்டுக் குடியா, யாழ்மையவாதியா என்பதெல்லாம் தேவையற்றது! ஆனால் நான் ஏனைய இடங்களில் எழுதியதை வாசித்தால் நான் அதுவா என்பது விளங்கும்!

இந்த சீமான் பின்னால் நிற்கிற அதே ஆட்கள் தான் கிழக்குத் தமிழரின் அரசியல் முடிவுகளையும் திட்டிக் கொண்டு திரியீனம் என்பது உங்களுக்கு selective ஆக விளங்காது தான்!

இந்தக் கடைசி வரிதான் உங்கள் சமூக அக்கறையின் குறிகாட்டி: நா.த அரசியலினால் தமிழருக்கு விளையப் போகும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை என்பது தெளிவு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

நீங்கள் தந்த இணைப்பில் சீமான் நேரடியாக பேசும் வீடியோ ஒன்று உள்ளது ஹிட்லர் பாணியிலேயே ஹிட்லரை புகழ்ந்து பேசுகிறார் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.

நீங்கள் சொன்னது உண்மை தான் பிரச்சனை என்ன என்றால் தங்கள் அபிமானத்துக்குரியவர் 😭 தமிழ்நாட்டில் இருந்து அதையே செய்யும் போது எல்லாம் அவர்களுக்கு அடிபட்டு போய்விடுகிறது நாசி கொள்கைகள் பசுமையாக கண்ணுக்கு காட்சி தருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

Agent provocateur = புல்லுருவி என்று சொல்லலாம்!

ஆனால் தனிப்பட்ட தாக்குதல் என்று ஆரவாரம் செய்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

உங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.

உங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.

சற்றுமுன் நான் போட்ட  கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

நாதம்,

மனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நாதம்,

மனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.

Disappointed Head Shake GIFs - Get the best GIF on GIPHY

உடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா? 

திண்ணை இருமணிநேரமும் விரயம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.

உங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.

சற்றுமுன் நான் போட்ட  கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...

நாங்கள் திண்ணையில் பேசிய ஒரு விடயம் ( உருத்திரகுமார் வெளிபடையாக பணம் தருவோம் என டீல் அறிவிக்க வேண்டும்) மட்டும்தான் இதில் கூறி உள்ளேன். மிகுதி எல்லாம் இதே திரியில் நீங்கள் கூறியதுதான்.

இத்துடன் 3ம் முறையாக இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போகிறீர்கள்.

உங்கள் நட்பை நானும் விரும்புகிறேன். உங்களுடனா சம்பாசணைகளை இழக்கவும் விரும்பவில்லை. 

ஆனால் இந்த விசயத்தை, முகமனுக்காக விட்டு விட முடியாது ஏனென்றால் இதை பாதுகாக்க 50,000 உயிரை கொடுத்துள்ளார்கள். ஆகவே சந்தேகம் வருமிடத்து அதை கேட்பது ஒரு கடமையாகிறது.

2 minutes ago, Nathamuni said:

Disappointed Head Shake GIFs - Get the best GIF on GIPHY

உடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா? 

திண்ணை இருமணிநேரமும் விரயம்....

யெஸ் ரியலி.

நான் யாரிடமும் தனி மடலில் மினக்கெடுவதில்லை என்பது என்னிடம் தனிமடலில் பேசியவர்களுக்கு தெரியும். 

அவர் கூறினால் அதை அவருடன் பேசுவதுதான் நியாயம். 

இங்கே இசை, உடையார், குசா அண்ணை, மருதர் இப்படி பலருடன் நான் சீமான் சம்பந்தமாக வெகு மோசமாக முரண்பட்டூளேன். 

ஆனால் எவர் மீதும் இந்த சந்தேகத்தை முன் வைக்கும் படியாக அவர்கள் முரண்பாடான நிலைகளை எழுதவில்லை.

இப்போதும் சொல்கிறேன் இது வெறும் சந்தேகம்தான். ஆனால் சந்தேகத்துக்கு முகாந்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம், தனிமடலிலும் தொலைபேசியிலும் பேசி ஏற்பாடு செய்து கொண்டு வருகிற அளவுக்கு முக்கியமான தலைப்பும் இல்லை நேரமும் இல்லை!

ஆனால், இங்கே நா.த கட்சி ஆதரவாளர் சிலர் "அண்ணை, நான் உங்களுக்கு போனில சொன்ன மாதிரி.." என்று உரையாடல் செய்ததைக் கண்டிருக்கிறேன். எனவே இந்த off-line ஏற்பாடு அங்காலப் பக்கம் தான் பிரபலம் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நாதம் 

ஜஸ்டின் ஐயா,

உங்களுக்கு இது மூன்றாவது தடவையாக சொல்கிறேன். இருவர் உரையாடலுக்கு இடையே, புகுந்து குலையடிக்கும் வேலையினை இனிமேலும் செய்யாதீர்கள். இது ஒரு தேவையில்லாத வேலை.

என்னுடன் பேசுவதனால் நேரடியாக பேசுங்கள்.  படித்தவர் என்றால் அது செய்கையிலும் இருக்க வேண்டும். நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.