Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

விசிலடிச்சான் குஞ்சுகளும் ஐந்தாம் படையும்

thumbnail?appId=YMailNorrin

உங்கள் முயற்சி பலிக்கவில்லை. இன்னொரு தடவை முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

 

விசிலடிச்சான் குஞ்சுகளும் ஐந்தாம் படையும்

thumbnail?appId=YMailNorrin

உங்களிடமிருந்து இன்னும் இன்னும் இன்னும் கூட ஏதிர்பார்க்கின்றம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பத்தூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

event_image_1DXfdubS9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அரசியலில் ஒரு நாள் கூட தாங்கமாட்டார் சீமான்

 

 

பனைத்திருவிழா2020 - சிவகங்கை சட்டமன்றத்தொகுதி | வெற்றிக்குமரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 15:33, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

நீங்கள் முன்பு புளட் சார்பாக இருக்கும் ஒருவருடன் சேர்ந்து புலிகளை நக்கல் அடித்தது அநேகருக்கு  தெரியும். அது இரட்டை வேடமில்லையா??

மற்றவர்கள் கூட்டமாக எழுதுவதாக கூறும் நீங்கள் உங்களின் கூட்டம் பற்றி சொல்லவே இல்லை.

Link to comment
Share on other sites

 
சீமானின் மறு பக்கம் 
 
15. நா.முத்துக்குமார் எனும் பெரு நண்பன்
அண்ணன் சீமான் அறையில் கறி விருந்து
வாசிக்கத்துவங்கிய நாட்களிலிருந்தே புத்தகம் ஒரு கனவு லட்சியம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவன் முதல் புத்தகம் முதல் காதலி போல. நூறு சதவீத சிவாஜி தருணம் .
1999 செப்டம்பர் 19 ல் அப்போது காதர் நவாஸ் கான் சாலையிலிருந்த மாக்ஸ் முல்லர் பவனில் நடந்த என் பைசக்கிள் தீவ்ஸ் திரைக்கதை மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு என் வாழ்க்கையில் நடந்த வரலாற்றுப்புள்ளி.
மாக்ஸ் முல்லர் பவன் சரித்திரத்தில் அப்படி ஒரு கூட்டம் வந்ததில்லை என அப்போதைய இயக்குனர் நிகழ்ச்சி முடிந்து வெளிப்படையாக கூறினார் .
அந்த இடத்தை பிரசன்னா ராமஸ்வாமி மூலமாக பேசி ஏற்பாடு செய்து தந்ததில் மறைந்த இயக்குனர் அருண்மொழிக்கு முக்கிய பங்கு இருக்கிறது அவருடன் ஆந்திரா பேங்க் பால சுப்ரமணியனும் பல உதவிகள் செய்தார். ் இயக்குனர்கள் ஹரிஹரன், ,அம்ஷன் குமார் ஆகியோரையும் அவ்ர்கள்தான் பேசி நிகழ்வில் கலந்துகொள்ள வைத்தனர்.
நண்பர்கள் ரியாஸ் ஜார்ஜ் ஆகியோருடன் பதிப்பாளர் நிழல் திருநாவுக்கரசுவும் புத்தக உருவாக்கத்திலும் வெளியீட்டு விழாவிலும் என்னோடு பங்களித்தனர்.
ஆசான் பாலு மகேந்திரா வெளியிட தங்கர் பச்சான் பெற்றுக்கொண்டார் .நான் சென்னையில் வந்த காலம் தொட்டு எனக்கு நண்பர்களாக இருந்த பலரையும் அழைத்திருந்தேன் . என் பால்ய கால நண்பரும் எனக்கு இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தியவருமான உத்திரமேரூர் விமல் வந்திருந்தார்.
ஆசான் அன்று முன்னுரை வாங்க வீட்டுக்கு சென்ற போது பேசிய அதே வார்த்தகளை நிகழ்ச்சியிலும் பேசினார் , சினிமா குறித்த அறிவை வளர்க்கும் புத்தகங்கள் தமிழில் அன்று வெகு சொற்பம் . சினிமா கல்வி ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக்கப்படவேண்டும் என்று அன்றுதான் முதன் முதலாக சொன்னார் . அப்படி பாடமாக்கப்படும் போது அஜயன் பாலா வின் இந்த புத்தகம் அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி என் எழுத்துபாணியை இயல்பான பேச்சு தமிழில் எழுதப்பட்ட உரையடாலை குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார் .
அவர் சொன்னது போலவே கடந்த ஆண்டு தமிழக அரசு சினிமாவை 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்திய போது சினிமா மொழி குறித்த என் கட்டுரையையே வாங்கி பிரசுரித்தது . அதில் இந்த பைசைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை நூல் பற்றிய குறிப்பும் அச்சாகி லட்சக்கணக்கான் மாணவர்களை சென்றடைந்தது . ஆசான் வாக்கு 20 வருடங்கள் கழித்து பலிதமானது அந்த நிகழ்ச்சிக்கு எனது நண்பரும் எழுத்தாளருமான தமிழ் மகன் அப்போது அன்று தினமணியில் பணி செய்து வந்த காயத்ரியுடன் வந்திருந்தார் . அந்த காயத்ரி தான் என்னைப் பற்றிய முதல் செய்தியை மறுநாள் புத்தக வெளியீட்டு விழாவுடன் தினமணியில் எழுதினார். மட்டுமல்லாமல் தொடர்ந்து தினமணியில் உலக சினிமா குறித்த கட்டுரைத்தொடரை எழுதச்சொன்னார் . அப்போது அஜயன் பாலா என்ற பெயர் அடிக்கடி ஊடகங்களில் வந்தால் பிற்பாடு சினிமா இயக்குனராக அறிமுகமாகும் போது தொந்தரவு செய்யுமோ என தேவையில்லாமல் பயந்து இந்திரஜித் என்ற பெயரில் அந்த தொடரை எழுதினேன். ஆனால் காலமோ என்னை அடுத்த சில வருடங்களில் நாயகன் எனும் தொடரை ஆனந்த விகடனில் எழுத வைத்து இரண்டு வருடம் லட்சக்கணக்கான மக்களிடம் அந்த பெயரை வார வாரம் கொண்டு போய் சேர்த்துவிட்டது .
இப்படியாக என் முதல் புத்தகம் உருவானதும் வெளியீட்டு விழாவும் சினிமா இயக்குனராவதன் தோல்வியிலிருந்து என்னை மீளச்செய்தது .
இது நடந்து சில நாட்களுக்குப்பின் அறைக்கு வந்த முத்துக்குமார் முகத்திலும் கண்களிலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு மின்னியது .. பாலா அண்ணன் சீமான் அவர் இயக்கப்போற வீர நடை படத்துல பாட்டு எழுத சொல்லிருக்காரு . என உற்சாகத்துடன் கையிலிருந்த கேசட்டை காட்டி தேவ ட்யூன் கொடுத்துருக்காரு என்றான் . அவன் போராட்டத்துக்கு ஒரு வழியாக பாதை திறந்தது. உடன் பையோடு கொண்டு வந்த வாக்மேனில் கேசட்டை போட்டு காண்பித்தது மட்டுமல்லாமல் அதுவரை தன் எழுதிய சில வரிகளையும் வாசித்து காண்பித்தான்
நல்லாருக்குடா முத்து என்றுவிட்டு நான் குளிக்கப்போய்விட்டேன் அவன் மீத வரிகளையும் எழுதியிருந்தான். குளித்து விட்டு வந்தவுடன் அவன் மீத வரிகளையும். வாசிக்கட்டுமா எனகேட்க எனக்கு இவ்ளோ சீக்கிரமா என ஆச்சர்யம்
வாசித்துக் காண்பித்த போது சில வரிகள் பளிச்சென்றும் சில வரிகள் கொஞ்சம் பழசாகவும் இருந்தது . ஆனால் அவனிடம் அப்போது சொல்லவில்லை .. நட்சத்திர கால் பதிக்கும் வாத்துக்கூட்டம் புடிச்சிருக்கு என்ற வரி மட்டும் பிடித்திருந்தது . எனக்கு அப்போது வைரமுத்துவின் வானம் எனக்கு போதிமரம் நாலும் எனக்கு அது சேதி தரும் என்ற வரிகள் தான் நினைவு வந்தது முதல் பாடல் என்றால் அப்படி நச்சுனு இருக்க வேண்டும்
ஏண்டா இவ்ளோ ஃபாஸ்டா எழுதற மொத வாய்ப்பு கவனமா டயம் எடுத்து எடுத்து எழுதலாமே என கேட்க .. அவனோ இவ்ளோதான் மெட்டுக்கேத்தா மாதிரி வரிகள் இருக்கான்னு பாப்பாங்க இதுசினிமா பல நாம் லேட்பண்ணா சைக்கிள் கேப்ல இன்னொருத்தன் எழுதி குடுத்துடுவான் ‘]
இப்போது பார்த்தால் அவனுடைய ஸ்பெஷலே இந்த வேகம் தான் கண்ணிமைக்கும் நேரத்தில் வரிகளை முடிவு பண்ணிவிடுவான் . பலரும் எழுதலாம். ஆனால் முடிவெடுப்பதில் குழப்பம் வந்து காலதாமதம் செய்வார்கள் . ஆனால் முத்து அப்படியில்லை . அவன் யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை அவனுக்கு அவனே சிறந்த நீதிபதி . பல முக்கியமான விடயங்களில் சரியாக முடிவெடுத்தான் திருமணம் செல்வராகன் கூட்டணியிலிருந்து விலகல் எல்லாம் அவன் அப்போது எடுத்த துரித சரியான முடிவுகள் ..
அந்த பாட்டு இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பிடித்துப்போய் அது வெளியாகும் முன்னே தொடர்ந்து பல பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்தார் . ஒரு நாள் இனி சைக்கிளுக்கு குட்பை பல இடங்களுக்கு அலைய வேண்டி இருக்கு டிவிஎஸ் பிப்டி வாங்கலாம்னு இருக்கேன் எனச்சொல்ல நானும் அவனும் அடையார் கிளம்பினோம் .
அடையாரில் ராம்கே ஏஜென்சீஸ் நான் சென்னையில் முதன்முதலாய் வேலை செய்த இடங்களூள் ஒன்று. அது ஒரு சுவரசியமான அனுபவம் . பிற்பாடு சினிமாவுக்கு முன் நான் செய்த வேலைகள் எனும் தனித்தொடரே எழுதலாம். எல்லாமே செம காமடி சீன்ஸ்
அந்த ராம்கே ஏஜென்சிஸ் மனோகர் எனக்காக சிறப்புதள்ளுபடிகள் கொடுப்பார் ஒரு வழியாக வண்டிக்கு பணம் கட்டிவிட்டு வெளியில் வந்தோம் . அவன் முதல் பாட்டு எழுதிய வெற்றியை அந்த தள்ளுபடி பணத்தில் கொண்டாட முடிவு செய்தோம் .. அப்போது கணபதி தியேட்டர் அருகே புதிதாக ஒரு நான் வெஜ் ஓட்டல் திறந்திருந்தார்கள். அந்த ஓட்டலுக்கு சென்று வயிறு முட்ட சாப்பிட்டோம். நானும் முத்துக்குமாரும் சாப்பாட்டு பிரியர்கள் அல்ல வெறியர்கள் . அவனுக்கோ எப்படியாவது அதிகம் சாப்பிட்டு குண்டாகிவிடமாட்டோமா என கனவு இருவரும் சென்னையில் போகாத அசைவ ஓட்டல்களே இல்லை எனலாம் .
 
 
இந்த இடத்தில் முத்துவுக்கு முதல் பாட்டு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சீமான் பற்றி சொல்லியாக வேண்டும். கோடம்பாக்கத்தில் ஒரு கடல் என்றால் அது அவரது இதயம்தான் . இன்று அவர் அரசியல் சூதாட்டத்தில் சிக்கியதால் பலருக்கும் பல அபிப்ராயம் இருக்கலாம் . ஆனால் சினிமாத்துறையில் அண்ணன் அறிவுமதியும் அவரும் என்னைப்போன்ற தமிழ் ஆர்வமும் கலை ஆர்வமும் மிக்க தமிழ் தம்பிகளை கொண்டாடியவர்கள் யாரும் இருக்க முடியாது .
திரைப்படத்துறையில் மற்றவர்கள் பசியாறும் அழகை கண்டு தன் மனம் ஆறியவர்கள் இருவரைச்சொல்வார்கள் . புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் கேப்டன் விஜயகாந்த் இந்த இருவரையும் அடுத்து அப்படி ஒரு பெயர் அண்ணன் சீமானுக்கு மட்டுமே உண்டு. மேற்சொன்ன இருவரும் நடிகராகி பல லட்சம் சம்பாதித்த பின் அப்படியிருந்தவர்கள் ஆனால் அண்ணன் சீமானோ இயக்குனராக போராடிக்கொண்டிருந்த காலத்திலேயே அவர் அன்னமிட்ட அண்ணனாக பல தம்பிகளை அறையில் வாழவைத்துக்கொண்டிருந்தார்
எத்தனையோ பேரை அறிமுகப்படுத்திய முத்துக்குமார் தான் அண்ணன் சீமானையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான்.
அப்போது அண்ணன் சீமான் நடிகர் விக்ரமை சந்தித்தபோது என் பெயரை குறிப்பிட்டு விக்ரம் அப்போது சொல்லியிருக்கிறார் போல . அது விக்ரம் என் கதை பிடித்து போய் அவர் பின்னால் இரண்டு வருடம் நான் அலைந்த காலகட்டம் அது தனி கதை . அப்போது அண்ணன் சீமான் தவசி படத்துக்கு வசனம் எழுதப்போவதாக அறிவிப்பு வந்த நேரம்.
அண்ணன் சீமான் முத்துவிடம் தம்பி யாருடா அவன் அசயன் பாலா விக்ரம் கிட்ட கதை சொல்லி அசத்தியிருக்கனாம் ;.. அவனை பாக்கணுமே என சொல்லியிருக்கிறார் . முத்துக்குமார் இதை அன்றே என்னிடம் சொன்னான் .
ஒருநாள் நானும் முத்துவும் டிவிஎஸ் பிஃப்டியில் கோடம்பாக்கம் சாலையில் ட்ரஸ்ட்புரம் கோகுலம் சிக்னலில் காத்திருக்கும் போது பக்கத்தில் இன்னொரு டூவிலர் வந்து நிற்க அதில் அண்ணன் சீமான். முத்துவுக்கு ஆச்சரயம் அண்ணே இவர்தாண்ணே நீங்க கேட்டிங்களே அசயன் பலா என அறிமுகப்படுத்த அண்ணன் அப்படியே ஒரு முறை என்னை பார்த்தார் . முத்து தம்பியை ஒரு தடவை நம்ப அறைக்கு கூட்டிகிட்டு வாடா என சொல்ல சிக்னலும் பச்சைக்கு மாறியது .
அடுத்த சில நாட்களில் ஒருநாள் மதிய உணவு நேரத்தின் போது முத்து இன்னிக்கு வாங்க அண்ணன் அறைக்கு போவோம் என்றான் . சாலிக்கிராமத்திலிருந்த அண்ணனின் அறை தம்பிகளால் நிறைந்ர்திருந்தது சமையலறையில் சிக்கன் மணத்துக்கொண்டிருந்தது . முத்துவும் நானும் வெறும் கையுடன் போகமால் எங்கள் பங்குக்கும் ஏதோ வாங்கிக்கொண்டு போனோம் அண்ணன் அப்போது எங்கோ வெளியில் போயிருந்தார் . அப்போது அந்த சின்ன வீட்டில் பத்து பதினைந்து பேர் பரபரப்பாக காய்கறி வெட்டுவதும் அரிசி கழுவி உலையில் போடுவதுமாக இருந்தனர் .
இந்த சின்ன வீட்டில் இத்தனை பேரா எனக்கு ஆச்சரயம் யார் இவங்க என முத்துவிடம் கேட்க .. எனக்கே தெரியாது மதியம் வந்தா எப்பவும் இப்படிதான் அண்ணன் வீட்டுல ஒரு கூட்டமே காத்திருக்கும் . அறைக்கு அவரத்தேடி வந்துட்டா எல்லாருமே தம்பிங்கதான் . என்றவன் வாங்க இந்த பக்கம் போவோம் எனக்கூறி ஒரு அறைக்குள் நுழைந்தான்
அதுவரை எதையோ எழுதிக்கொண்டிருந்த ஒரு சிவப்பான உருவம் தலை நிமிர்ந்தது . பாலா இவர்தான் செழியன் பி.சி ஸ்ரீராம் அசிஸ்டண்ட் . கேமரா மேன் ஆக ட்ரை பண்ணிகிட்ருக்காரு என்னோட வள்ளுவர் கோட்டம் ஸ்டில்ஸ் நல்லாருக்குன்னு சொன்னீங்க இல்லை எல்லாம் இவர் எடுத்ததுதான் .
உங்க பைசைக்கிள் திவ்ஸ் படிச்சிருக்கேன் என செழியன் கை நீட்டினார்
கேமரா அசிஸ்டண்ட்னு சொல்றீங்க எழுதறதை பாத்தா டைரக்டர் மாதிரி தெரியுது என்றேன்
ஏன் நீங்க மட்டும்தான் திரைக்கதை எழுதுவீங்கள நாங்க எழுதக்கூடாதா என சிரித்துக்கொண்டே கேட்டார்
பிற்பாடு அவர் எழுதி இயக்கிய டூ லெட் படம் உலகத்திரைப்பட விழாக்களில் பல பரிசுகளை பெற்றது வேறு விஷயம்
கொஞ்ச நேரத்தில் அண்ணன் வந்தார் .
தம்பி வாங்கடா சாப்பிடலாம் என அழைப்புவிடுத்தார் ‘ மூவரும் எழுந்து ஹாலுக்கு போனோம் .ஒரே நேரத்தில் சின்ன ஹாலில் அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர் .
இவ்வளவு கூட்டம் ஒண்னா சாப்பிடறதா எப்படி என ஆச்சர்யத்துடன் தயக்கத்துடன் நின்றேன் . என்னடா தம்பி நிக்குற உட்கார கஷ்டமா இருந்தா லுங்கி கட்டிக்குடா டேய் தம்பிக்கு லுங்கி எடுத்துக்குடு அண்ணன் உடனடியாக கட்டளையிட்டார்.
இல்லண்னா பரவாயில்லை மூவரும் அமர்ந்தோம்
சின்ன அறைதான் ஆனால் அண்ணன் மனம் பெரிது
அன்று எல்லோரும் கூட்டமாக வட்டமாக அமர்ந்து உணவு உண்ட அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. எங்கோ இலக்கியத்தில் படித்த தமிழர்களின் வாழ்க்கை முறை ஞாபகத்தில் வந்து போனது. அது ஒரு கலாச்சாரம் வாழ்க்கை முறை . கம்யூன் வாழ்க்கையில் இது போல படித்திருக்கிறேன் .ஆனால் அன்றுதான் நேரடியாக அனுபவிக்கிறேன் . சட்டை அணியாத உடல்களுடன் அறையின் குறைந்த வெளிச்சத்தில் அன்பும் நெகிழ்ச்சியுமாக சாப்பிட்ட அந்த மதிய உணவால் கண்கள் கொஞ்சம் கூடுதல் காரத்தால் கலங்கியது .
 
அசயன் பாலா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதை செய்த சீமான் | சாதித்து காட்டிய சீமானின் தம்பி தங்கைகள் | தடம் | ஹிம்லர் |

 

Link to comment
Share on other sites

அண்ணம் seeman பாஜக விற்கு பிரச்சாரம் பண்ணியதையும் அவருடைய இரட்டை நிலைப்பாட்டையும் NTK தம்பிகள் முட்டுக்கொடுத்த video விற்கு u2 Brutus ன் பார்வை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசு என்பவரின் 12 வயது மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அக்கோரச்சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளி தண்டனையின்றி தப்பியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலைசெய்த கிருபானந்தன் என்பவன் கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவனை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலைசெய்திருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி விடுதலைபெற்று தப்பிக்க தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையான சனநாயகத் துரோகமாகும். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நாளை (09-10-2020) 3 இலட்சம் முடிதிருத்தும் நிலையங்களை அடைத்து மாநிலம் முழுவதும் நடத்த இருக்கும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சமூகம் குறித்தான பெருங்கவலையை‌யும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்ற சூழலில், இத்தகையக் கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டோர் சட்டத்திலுள்ள துளைகளைப் பயன்படுத்தித் தப்ப வழிவகை செய்வதும், தண்டனை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்துவதுமான அரசின் முறைகேடான செயல்கள் சமூகத்தில் இதுபோன்ற மனிதப்பேரவலங்கள் மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை சிறப்புத் தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்துத் தண்டனையளிப்பதனால் மட்டுமே இத்தகைய குற்றங்களை அடியோடு சமூகத்திலிருந்து அகற்ற இயலும்.

ஆகவே, சிறுமி கலைவாணியை வன்கொடுமை மற்றும் படுகொலை செய்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைவாக மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாகத் தடுத்து நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-demands-justice-for-dindigul-vadamadurai-kurumbapatti-kalaivani-brutal-rape-and-murder/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பலத்தை உணர்ந்த ரங்கராஜ் பாண்டே - கடைசியாக திருவாய் மலர்ந்தார் 👍

 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

சீமானின் பலத்தை உணர்ந்த ரங்கராஜ் பாண்டே - கடைசியாக திருவாய் மலர்ந்தார் 👍

 

பி ஜே பின் நேரடி முகவர் ரங்கராஜ் பாண்டே சொன்னால் சரியாய் தான் இருக்கும், சீமான் B டீம் எண்டு.
சீமானின் சாயம் இவ்வளவு விரைவில் கரையும் என ஒருத்தரும் எதிர்பார்த்திருக்கமாட்ட்டார்கள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

பி ஜே பின் நேரடி முகவர் ரங்கராஜ் பாண்டே சொன்னால் சரியாய் தான் இருக்கும், சீமான் B டீம் எண்டு.
சீமானின் சாயம் இவ்வளவு விரைவில் கரையும் என ஒருத்தரும் எதிர்பார்த்திருக்கமாட்ட்டார்கள்.👍

ஐயா நீங்கள் வெளி உலகிற்கு வர வேண்டும் 😎- ரங்கராஜ் பாண்டே சொல்வது 2 நிமிடம், அதுவும் 2 வருட பழைய காணொளின் தொகுப்பு.😁

சும்மா அரசியல் அறிவுக்கு இணைத்தால் எப்படி முடிச்சு போடுகின்றீர்கள்🤣; சாயம் வெளுப்பதற்கு ஒன்றும் சீத்தைகளில்லை - எல்லாம் தலைவரின் வழியை பின்பற்றி நிற்கும் புலி கூட்டங்கள், தமிழர்கள் 

 சாயம் எப்படா வெளுக்குமென்று நித்தா கொள்ளாமல் பார்த்துகொண்டிருக்கின்றீர்களா? 

கம்பை காத்திலதான் சுத்துகின்றீர்கள் இன்னும், காணொளி பார்த்தீர்களா, தலைப்பை வைத்து கம்பை சுத்தக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ஐயா நீங்கள் வெளி உலகிற்கு வர வேண்டும் 😎- ரங்கராஜ் பாண்டே சொல்வது 2 நிமிடம், அதுவும் 2 வருட பழைய காணொளின் தொகுப்பு.😁

சும்மா அரசியல் அறிவுக்கு இணைத்தால் எப்படி முடிச்சு போடுகின்றீர்கள்🤣; சாயம் வெளுப்பதற்கு ஒன்றும் சீத்தைகளில்லை - எல்லாம் தலைவரின் வழியை பின்பற்றி நிற்கும் புலி கூட்டங்கள், தமிழர்கள் 

 சாயம் எப்படா வெளுக்குமென்று நித்தா கொள்ளாமல் பார்த்துகொண்டிருக்கின்றீர்களா? 

கம்பை காத்திலதான் சுத்துகின்றீர்கள் இன்னும், காணொளி பார்த்தீர்களா, தலைப்பை வைத்து கம்பை சுத்தக்கூடாது

அவரின் பெயரை zuma  என்பதற்கு பதிலாக சும்மா (zumma ) என்று வைத்திருந்தால் பொருத்தமாய் இருந்திருக்குமோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் செருப்படி கேள்வி? பெண்கள் எல்லாத்தையும் பொருத்துக்கொள்வார்கள் என்று நினைக்காதீங்க...

 

திண்டுக்கல்சிறுமி கலைவாணி வழக்கில் குற்றவாளிக்கு தண்டனைபெற்றுத்தர தமிழக அரசுக்கு|சீமான் வலியுறுத்தல்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.