Jump to content

Recommended Posts

நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் பட்டியல்

 

50B500A3-BEE2-40C8-A628-B359F09DC3A9.jpe

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் 40 வேட்பாளர் பட்டியலை மார்ச் 23 அன்று சீமான் அறிவித்தார். அவர்கள் விவரம்….

பெண் வேட்பாளர்கள்
“””””””””””””””””””””””””””””””

1.வட சென்னை – பி.காளியம்மாள் B.com, MBA

2.தென் சென்னை – அ.ஜெ.ஷெரின் MSC,Mphil

3.திருவள்ளூர் (தனி) –
ம.வெற்றிச்செல்வி
BA

4.காஞ்சிபுரம்(தனி) –
த.ரஞ்சனி
BCOM,MBA

5.புதுச்சேரி –
நி.ஷர்மிளாபேகம்
BA

6.வேலூர் –
தீபாலட்சுமி
BBA

7.விழுப்புரம்(தனி) –
பிரகலதா
BSc,MA,M.Ed

8.ஆரணி –
அ.தமிழரசி
MA.,Tamil

9.தருமபுரி –
ர.ருக்மணிதேவி
MSC,PHY.

10.ஈரோடு –
மா.கி.சீதாலட்சுமி
M.A.M.Phil

11.பொள்ளாச்சி –
அ.சனுஜா
MA.,M.phil

12.நீலகிரி(தனி) –
சே.மணிமேகலை
BE.

13.பெரம்பலூர் –
க.சாந்தி
MA,TAMIL,B.ED

14.கடலூர் –
சா.சித்ரா
Bcom.

15.மதுரை
க.பாண்டியம்மாள் –
MSc,Mphil,Phd

16.மயிலாடுதுறை –
கு.சுபாஷினி
BA

17.இராமநாதபுரம் –
தி.புவனேஸ்வரி
BSC

18.சிவகங்கை –
வே.சக்திப்பிரியா
MCA

19.நாகபட்டிணம்(தனி) –
பொ.மாலதி
B.Sc,B.L.

20.திருநெல்வேலி –
பா.சத்யா
Bsc

ஆண் வேட்பாளர்கள்
“”””””””””””””””””””””””””””””

1.கோவை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் M.Phil.,

2.திருப்பூர் – ப.ஜெகநாதன்
தொழிலதிபர்

3.கரூர் – மருத்துவர் கருப்பையா MBBS.,MS (ortho)mch

4.திருச்சி – வி.வினோத் Msc., Mphil

5.திண்டுக்கல் – மன்சூர் அலிகான் D.F.T.,

6.தென்காசி(தனி) – சி.ச.மதிவாணன் B.A.,

7.தேனி – சாகுல் அமீது தொழிலதிபர்

8.விருதுநகர் – கா.அருள்மொழிதேவன்L.L.M.,

9.தூத்துக்குடி – ச.கிறிஸ்டன்டைன்ராஜாசேகர் தொழிலதிபர்

10.கன்னியாகுமரி – வ.ஜெயன்றீன் DEEE.,

11.தஞ்சாவூர் –
புலவர் கிருட்டிணகுமார்
B.A

12,சிதம்பரம்(தனி) –
மு.சிவா ஜோதி
M.com

13.நாமக்கல் –
மருத்துவர் பாஸ்கர்
M.vsb.,.PHD

14.சேலம் –
ராஜாஅம்மையப்பன் இயற்கை விவசாயி

15.திருவண்ணாமலை –
மருத்துவர் ரமேஷ் பாபு
MDS

16.கள்ளக்குறிச்சி –
சர்புதீன்
B.A., L.L.B

17.அரக்கோணம் –
யு.ரா.பாவேந்தன்
M.A.,B.L.,

18.கிருட்டிணகிரி –
ந.மதுசூதனன்
M.C.A.,

19.மத்திய சென்னை –
கார்த்திகேயன்
மருத்துவர்

20 .திருப்பெரும்புதூர் –
ஈ ரா.மகேந்திரன்
B.com.,

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களுக்காக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும்: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

Published :  25 Mar 2019  12:44 IST
Updated :  25 Mar 2019  13:06 IST
D2F-sYdXcAES7w3jpg
 
மீனவ சமூகத்துக்கும், மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் எதிராக கடந்த ஐந்து வருடங்களாக வலுவாகக் குரல் கொடுத்து வருகிறார் காளியம்மாள், பி.காம்.பட்டதாரி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மாநில மீனவப் பெண் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளரரகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடசென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காளியம்மாள்.

சாமானிய மக்களின் குரலை தனது பேச்சுகளில் வெளிப்படுத்தி தமிழகத்தின் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இடையே பலரின் கவனத்தை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் காளியம்மாளிடம் ’இந்து தமிழ் திசை’ சார்பாக  நடத்திய நேர்காணல்.

வடசென்னை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட இருக்கிறீர்கள். இங்கு கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற பிரதான கட்சிகள் மக்களுக்கு செய்யத் தவறியதாக நீங்கள் பார்ப்பது? நீங்கள் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

குற்றச்சாட்டுகள் என்று ஒன்றுமில்லை. ஆனால் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களுடன் ஆலோசித்து அதற்கான தீர்வை எப்படிக் காண்பது என்பதன் அடிப்படையில்தான் வெளியிட வேண்டும். ஆனால் பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மக்களுடைய பங்களிப்பு இல்லை. மக்கள் பங்கேற்புள்ள ஒரு திட்டத்தை அமல்படுத்தினால்தான் அது சரியாக இருக்கும்.

இதை தவிர்த்துவிட்டு தன்னிச்சையாக கட்சிகளே ஒரு திட்டத்தைத் தயாரித்து அதனை மக்களிடம் திணிப்பது சரியானது அல்ல.

இவர்கள் மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளும் (எடுத்துக்காட்டுக்கு ஆர்கே நகரில் குப்பையை அகற்றுதல்) நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. மக்களின் தேவையை உணர்ந்துதான் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலே வடசென்னை பின்தங்கி இருக்காது. இங்குள்ள தொழிற்சாலைகளை எல்லாம் பார்க்கும்போது இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருந்தாலே இங்குள்ள மக்கள் வறுமையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி வடசென்னையோடு தொடர்புபடுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? இதற்முன்னர் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிடமிருந்து  நீங்கள் எவ்வாறு வேறுபடுவீர்கள்?

நாங்கள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள். வடசென்னையில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு நாகப்பட்டினத்தில் இருப்பவர்கள் வரக்கூடாது என்ற பிரிவு இருக்கும்வரைதான் மக்களை ஏமாற்ற முடியும். வேறுபாடில்லாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுகிறார்களோ அப்போது மக்களால் அவர்களை ஏமாற்ற முடியாது. இங்கிருப்பவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன்.  அதுமட்டுமில்லாது நான் களத்திலிருந்து வந்திருக்கிறேன்.

எங்கு பிரச்சினை இருக்கிறதோ அங்கிருந்து வந்திருக்கிறேன். நான் மேலோட்டமாக யாரோ கொடுத்த தேர்தல் அறிக்கையைப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை. நான் மக்கள் முன் சென்று அவர்கள் பிரச்சனையைக் கேட்கிறேன். அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று அவர்களிடம் விவாதிப்பேன். அதன் அடிப்படையிலான திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகத்தான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். மக்களுக்கு எதிராக மசோதா நிறைவேறினால் அதற்கு எதிராக என் வாதத்தை வலுவான தகவலுடன் முன் வைப்பேன். நான் மக்களுக்குள் மக்களாக இருக்கிறேன். இதிலிருந்துதான்  நான் அவர்களிடமிருந்து வேறுபடுகிறேன். எங்கள் கட்சியின் திட்டங்களும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுதான் இருக்கும்.

நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே நீங்கள் தேர்தலைத் தனித்து சந்திக்கிறீது. கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா? கடந்த தேர்தலில்  நீங்கள் அதிமுகவைத்தானே ஆதரித்தீர்கள்?

நான் முதலில்  ஒருகட்சியைப் பற்றி விமர்சிக்கிறேன்.. அதே நேரத்தில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதில் எனக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக  நான் வைத்த விமர்சனத்தை அந்தக் கட்சி மாற்றிக் கொள்வதற்கு முன்னதாகவே நான் அவர்களுடன் கூட்டணி வைப்பது முரணாகத்தானே இருக்கும். அதுமட்டுமில்லாது நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறோம். கருத்தியல் ரீதியான விமர்சனங்களை அவர்கள் மீது வைத்தோம். அதிமுகவும் பாஜகவை விமர்சித்திருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றால் இது சந்தர்ப்பவாத கூட்டணி. இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியானதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

சூழியலுக்கு கேடு விளைவிக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் பிரதானமாக வடசென்னையிலேயே ஒதுக்கப்படுவதால் இங்கு சூழல் மாசு அதிகம். இதற்கும் வடசென்னை மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர் பிரச்சினைக்கும் நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள்?

வடசென்னையில் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பல தொழிற்சாலைகள் உள்ளன. உதாரணத்துக்கு இரும்புத் தொழிற்சாலைக்குக் கூட தண்ணீர் தேவைப்படும். ஏன் அவை பெரும்பாலும் வடசென்னையின் கடலோரங்களில் அமைக்கப்படுகின்றது.இதனால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை எளிதாக கடல் தண்ணீரில் கொட்டிவிடலாம் என்ற நோக்கமும்,  தண்ணீர் தேவையும் அந்த தொழிற்சாலைகளுக்கு இருக்கிறது.

நம் நாட்டை எப்படி பிற நாடுகள் குப்பைத் தொட்டியாகப் பார்க்கிறதோ அதே மாதிரி நம் நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் கடலை குப்பைத் தொட்டியாகப் பார்க்கின்றன. இவ்வாறே மக்களுக்குத் தேவையான  நிலத்தடி நீரை உறிஞ்ச தொழிற்சாலைகள் இங்கு ஒதுக்கப்படுகின்றன. இங்கு தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. இத்தொழிற்சாலைகள் எவ்வளவு ஆழம் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துகிறார்கள்? ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இவர்கள் அளிக்கக் கூடிய ஆய்வறிக்கைகள்  எல்லாம் சரியாகச் சென்று சேர்கிறதா? அவர்களது தொழிற்சாலைகள் மாசு சார்ந்து சோதனை நடத்தி இருக்கிறார்களா?  இதன் முடிவுகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதா? இந்தத் தொழிற்சாலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அனுமதி இருக்கிறதா? என இம்மாதிரியான விஷயங்களை எல்லாம் யாரும் கவனிப்பது இல்லை. இதனுடைய விளைவுதான் நெருக்கடியான நிலையிலும் தொழிற்சாலைகள் அங்கு வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் குடிசை வாழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பெரிய முரண்பாடுதானே. இங்கு மக்களுக்கு பட்டா இல்லாததால் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்கிறார்கள். மக்கள் வாழ்வதற்கான சூழலைக் கெடுத்து தொழிற்சாலைகள் அமைக்க நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. சூழலைக் கெடுக்காத இடங்களிலேயே தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றினாலே தண்ணீர்  பிரச்சினை தீர்க்கப்படும். எங்கெங்கு குளங்கள், ஆறுகள் எல்லாம் அபகரிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும். இதைச் சொன்னால் இதுவெல்லாம் நடக்கற காரியமா என்று சிலர் சிரிப்பார்கள். ஆனால் கேரளாவில் இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.  இதனை நடைமுறைப்படுத்தும்போது நிலத்தடி நீர் நிச்சயம் பாதுகாக்கப்படும். 

வடசென்னையைப் பொறுத்தவரை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்கான தீர்வாக எதை முன்மொழிவீர்கள்?

இதுவரையில் இருந்த அரசியல் கட்சிகள் அந்தக் குப்பைக் கிடங்கை அகற்றுவதற்கான பணியைச் செய்வோம் என்றுதான் கூறியுள்ளன. ஆனால் அந்தக் குப்பைகளை மறு சுழற்சி செய்து எப்படிப் பயன்படுத்த முடியும், எதைப் பயன்படுத்த முடியாது என்று அறிவியல் தொழில்நுட்பமாகப் பார்க்கும் திட்டத்தை இதுவரை யாரும் சமர்ப்பித்ததாக நான் பார்க்கவில்லை.

நீங்கள் மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் குப்பைகளை மறுசுழற்சி செய்து அதனை உரமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால் குப்பைகளை அகற்றும் விவாதமே இங்கு வைக்கப்படுகிறது.

இங்கிருந்து குப்பைகளை அகற்றி இன்னொரு இடத்தில்தான் வைக்கப்போகிறார்கள். எனவே அந்தந்த பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய, மறுசுழற்சி மையம் அமைத்திருந்தார்கள் என்றால், இவ்வளவு குப்பை இங்கு சேர வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகாலத் திட்டத்தை வரையறை செய்வேன்.

வடசென்னையில் சிறு குறு தொழிலாளர்கள் அதிகம்.அவர்கள் பெரும்பாலும்  தனித்து இயங்குகின்றனர். அவர்கள் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன?

இன்றைக்கு தொழிலாளர் நலச் சட்டம் உள்ளது. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு உள்ளது. ஆனால் இவர்களது தரவு தமிழக அரசிடம் இருக்கிறதா? முதலில் அந்தத் தகவல் தேவை. வெறும் நல வாரியம் அமைப்பது மட்டுமே போதாது. வடசென்னையில் ஒருங்கிணைக்கப்பட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் பெரும்பாலும் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தரவுகள் இல்லாததால் உறுப்பினர்களைக் கண்டறிவது கடினமாகிறது. எனவே இவர்களைப் பற்றிய முறையான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்களது தேவையை நாம் நிறைவேற்ற முடியும்.

முதல்கட்டமாக இந்த தொழிலாளர்களை நான் ஒன்று சேர்க்க நினைக்கிறேன். அதன்பின்னர்தான் அவர்களுக்கான திட்டங்களை வரையறை செய்ய முடியும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் எண்ணிக்கை வடசென்னையில் அதிகம். இதன் காரணமாக இங்கு குற்றப் பின்னணி கொண்ட இளைய தலைமுறை காலம் காலமாக உருவாகிக் கொண்டுதான் வருகிறது? இவர்களை அரசியல் கட்சிகளும் காலம் காலமாகப் பயன்படுத்திதான் வந்திருக்கின்றன.  இப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் பார்வை என்ன?

நல்ல வீடு, பொருளாதாரச் சுமை இல்லாத வாழ்க்கை இருந்தால் யாரும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக நிச்சயம் உருவாக மாட்டார்கள். சிறையில் இருக்க வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா? இதற்கு அவர்களையே குற்றம் சொல்ல முடியாது. இந்த வாழ்க்கையைத் தராதது அரசின் குற்றம் தான். 

படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் திறன் சார்ந்த அரசு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொருவரின் தனித்திறமையைக் கண்டறிய வேண்டும். இதை நிறைவேற்றினால் அந்த இளைஞர்கள் குற்றப் பின்னணியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மீனவப் பின்னணியைச் சேர்ந்த நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் மீனவர்களுக்காக உங்கள் குரல் எவ்வாறு ஒலிக்கும்?

நிச்சயம் மீனவர்களுக்குகாக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும். 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது எனது முதல் கோரிக்கையாக இருக்கும். இரண்டாவது சாகர் மாலா திட்டம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நீக்கப்பட வேண்டும். மூன்றாவது பழங்குடி மக்கள் பட்டியலில் எங்களையும் சேர்த்து எங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

கடலோரங்களில் வாழும் பூர்வீக மக்களுக்கு அவர்கள் வாழும் இடத்துக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் மீன் பிடிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும்.

கடலோரக் காவல்படையில் 70% பேர் மீனவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். மீனவப் பெண் தொழிலாளர்களை அங்கீரித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை ஒதுக்க வலியுறுத்தப்படும் என்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன் வைப்பேன்.

நாம் தமிழர் கட்சி பொதுவாக தமிழர்களையே முன்னிறுத்துகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில்?

மொழி சாகும்போது அந்த இனமும் செத்துவிடும். தமிழ் மொழியை யார் நேசிக்கிறார்களோ அவர்களை முன் நிறுத்துவதுதான் நாம் தமிழரின் முக்கியக் கொள்கை. தமிழர் இனத்தை தமிழரே ஆள வேண்டும் என்பது நியாயம்தானே.இப்பவும் நாங்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என்றுதான் கூறுகிறோம். இங்குள்ள பிற மொழிகளுக்கான நலத்திட்டங்களையும் சேர்த்து தானே நாங்கள் குரல் கொடுக்கிறோம். இதில் சாதி, மதம், இனம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை.

இறுதியாக வடசென்னை மக்களுக்கு நீங்கள் கூறுவது?

நாம் மாற்றங்களைத் தேடுகிறோம். ஆனால் அதற்கான அடியை எடுத்து வைப்பதில்லை. நம்மிலிருந்து வரும் வேட்பாளர்களை இனம் கண்டு நமது பிரதிபலிப்பாக அவர்கள்  நாடாளுமன்றத்தில் பேசுவார்கள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வாக்களித்துது தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கான காலம் பிறக்கும். 

எனவே நிச்சயமாக வடசென்னை மக்கள் அடித்தட்டு சமூகத்திலிருந்து வந்த எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article26631563.ece

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம்

Published :  25 Mar 2019  16:31 IST
Updated :  25 Mar 2019  16:32 IST
 
download-7jpg

சீமான்: கோப்புப்படம்

 

தமிழ்ப் பெண்கள் குறித்துக் கீழ்த்தரமாகப் பதிவிட்ட ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

5452476021122618290299564008321994708746
 

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

அதில், ''பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

பாஜக குண்டர்கள் நாம் தமிழர்மீது தாக்குதல்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

 

சீமானின் சிந்திக்க வைக்கும் பேச்சு.
தமிழ்நாடே கொஞ்சம் சிந்தி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Nathamuni said:

 

இணைப்புக்கு நன்றி நாதம்.
இப்படியே ஆதரவு கூடிக் கொண்டு போனால் அதை சிதைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15 வது நிமிடத்திலிருந்து கேழுங்கள்.தமிழநாட்டை தமிழனே ஆழ வேண்டுமென்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.