Jump to content

தமிழ் கலியாணம் - மாப்பிளை; வெள்ளையர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உது இஞ்சை ஜேர்மனியிலை நோர்மல் எண்டு வந்துட்டுது.......  போன வெள்ளிக்கிழமையும் நான் உப்புடியான கலியாண வீடு ஒண்டுக்கு போய் மொய் போட்டுட்டு வந்தனான். tw_blush:
என்னதான் வெள்ளையளை கட்டினாலும் மரக்கறி சாப்பாட்டோடைதான் நிக்கிறாங்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலைகளுக்கே... 15 ஆயிரம் ஐரோவுக்கு மேல் வந்திருக்கும் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெள்ளை வந்து உவை சேர்த்ததை எல்லாம் செலவழிக்கேக்கே.. ஒதுங்கி இருந்து மனசுக்க புளுங்கி புளுங்கி வாழுவினம்.. பாருங்க.. என்ன ஒரு அருமையான காட்சி.

ரெம்ப அதிகமா ஆடக் கூடாது. நமக்கு ஏதுவா ஆடனும். எங்களுக்கு ஏதுவான சிந்தனையோட வெள்ளை என்ன கறுப்பு..பிறவுன் எது இருந்தாலும்.. அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்த்திருமணமா? கிந்தித்திருமணமாகவே தெரிகிறது. இன்று தமிழினத்திடையேஆரோக்கியமற்ற  பாரியதொரு பண்பாட்டுமாற்றம் நுளைந்து எமது அடையாளங்களை அழித்து வருகிறது. இது திருமணம் கலை பண்பாட்டு நிகழ்வுகள் என்று எங்கும் ஊடுருவிச்செல்கிறது.  இங்கு பலர் தமிழ் என்று சொல்லிவாறு மேடைகளில் பொலிவூட்டைக் காட்சிப்படுத்தும்  நிகழ்வுகளும் நடைபெறுகின்றது. தமிழனே மதிக்காத தமிழரது பண்பாடாக ஓரம்கட்டப்படுவதும் நிகழ்கிறது. குமுகாய ஆர்வலர்கள் ஊ டகங்கள் போன்றன இவைதொடர்பிலும் உரையாடவும் எழுதவும் முன்வரவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இப்ப உது இஞ்சை ஜேர்மனியிலை நோர்மல் எண்டு வந்துட்டுது.......  போன வெள்ளிக்கிழமையும் நான் உப்புடியான கலியாண வீடு ஒண்டுக்கு போய் மொய் போட்டுட்டு வந்தனான். tw_blush:
என்னதான் வெள்ளையளை கட்டினாலும் மரக்கறி சாப்பாட்டோடைதான் நிக்கிறாங்கள்.:cool:

இந்த மனிசனுக்கு சாப்பாடு பிரச்சினை  நல்ல குவாலிட்டியான வீடியோ வாழ்த்துவோம் மனம் இணைந்தால் திருமணம்  ஆனால் என்ன நாளைக்கு வெள்ளை விட்டுட்டு போனால் அனுதாபங்கள் tw_blush:

8 hours ago, nedukkalapoovan said:

அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

நீங்கள் சொன்னால் சரிதான் சிங்கம் சிக்கினத சிம்பொலிக்கா சொல்லுது  நமக்கேன் வ் அம்பு உங்களுக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்கள்  சொல்லிக்கிறன் நெடுக்கரே:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

நீங்கள் சொன்னால் சரிதான் சிங்கம் சிக்கினத சிம்பொலிக்கா சொல்லுது  நமக்கேன் வ் அம்பு உங்களுக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்கள்  சொல்லிக்கிறன் நெடுக்கரே:10_wink:

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியன் காலில விழுந்து கும்பிடேக்குள்ள தாயும்,தகப்பனும் உதென்னடா :rolleyes: என்டு விறைச்சுப் போய் நிற்கின்ற எஸ்பிரசன் சுப்பர்:mellow:

On ‎17‎/‎06‎/‎2017 at 8:31 AM, nedukkalapoovan said:

வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெள்ளை வந்து உவை சேர்த்ததை எல்லாம் செலவழிக்கேக்கே.. ஒதுங்கி இருந்து மனசுக்க புளுங்கி புளுங்கி வாழுவினம்.. பாருங்க.. என்ன ஒரு அருமையான காட்சி.

ரெம்ப அதிகமா ஆடக் கூடாது. நமக்கு ஏதுவா ஆடனும். எங்களுக்கு ஏதுவான சிந்தனையோட வெள்ளை என்ன கறுப்பு..பிறவுன் எது இருந்தாலும்.. அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

கதையைப் பார்த்தால் இந்தத் தம்பியும் வேற நாட்டுப் பொண்ணைத் தான் கட்டியிருக்கார் போல:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

tw_blush:

ஏன் பாஸ் எனக்கு இங்கிலீசு பாட்டு போட்டு  ஏசுறீங்க  நான் என்ன தப்பா பேசிட்டன் ஆங்:10_wink:

 

1 hour ago, ரதி said:

கதையைப் பார்த்தால் இந்தத் தம்பியும் வேற நாட்டுப் பொண்ணைத் தான் கட்டியிருக்கார் போல:unsure:

ஒரே குழப்பமா கிடக்கு நெடுக்கர கூப்பிட்டு கேளுங்கோவன் உன்மை தெரிஞ்சுடும்  :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

On 2017-6-17 at 0:03 AM, தமிழ் சிறி said:

மாலைகளுக்கே... 15 ஆயிரம் ஐரோவுக்கு மேல் வந்திருக்கும் போலுள்ளது.

ம்... உந்த மாலைக்காசு இன்னொரு கலியாணம் செய்யக்காணும். பேசாமல் ஒரு மாலை பிசினஸ் தொடங்கலாமோ?

Link to comment
Share on other sites

 முதலில் கல்யாணம் கட்ட இந்த தமிழ் பிள்ளை ஒத்துக்கொண்டதுக்கு பெருமைப்படவேண்டும்.
இரண்டாவது எங்கள் தமிழ் கலாசாரத்தில் செய்ய முன் வந்ததிற்கு வாழ்த்தவேனும்.
பார்க்க பெருமையாகவும் இருக்கு. ஏன் இந்த தூற்றல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாதிரி விசயங்கள் கண்ணுக்குமுன்னாலை நடக்கேக்கை முடியை பிச்சுக்கறவங்கள்ளை நானும் ஒருவனண்ணை. சரியா பிழையா இல்லை எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா ஒண்ணும் புரியிதில்லை. என் சொந்த தெரிவா மொழி-சமயம்-நிறம்-இனம்-நாடு இதிலை எது சரி மாறியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியா எதுவித காழ்ப்புணர்ச்சியோ விரோதமோ அல்லது துவேசமோ அவங்க மேல கிடையாது. வாரிசுகள் தெரிவு செய்தால் தடைசெய்ய மாட்டேன் ஊக்கிவிக்கவும் மாட்டேன். வினை விதைச்சிட்டம் அறுவடை செய்துதானே ஆகணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vanangaamudi said:

இது மாதிரி விசயங்கள் கண்ணுக்குமுன்னாலை நடக்கேக்கை முடியை பிச்சுக்கறவங்கள்ளை நானும் ஒருவனண்ணை. சரியா பிழையா இல்லை எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா ஒண்ணும் புரியிதில்லை. என் சொந்த தெரிவா மொழி-சமயம்-நிறம்-இனம்-நாடு இதிலை எது சரி மாறியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியா எதுவித காழ்ப்புணர்ச்சியோ விரோதமோ அல்லது துவேசமோ அவங்க மேல கிடையாது. வாரிசுகள் தெரிவு செய்தால் தடைசெய்ய மாட்டேன் ஊக்கிவிக்கவும் மாட்டேன். வினை விதைச்சிட்டம் அறுவடை செய்துதானே ஆகணும்.

அப்படிச் சொல்லமுடியாது வணங்காமுடி.

மேலுலகம் ஒரு வித்தியாசமான மனவியல் கொண்டது. வாழ்க்கை குறுகியது... ஒருமுறை மட்டுமே. கண்ணதாசன் சொன்னது போல், 'இறப்புக்கு பின்னே, நடப்பது என்ன, எவருக்கும் தெரியாது' என்பதை நிதர்சனமாக வாழும் கூட்டம்.

அங்கே உறவு என்பது கன்ராக்ட் போல்... எப்படா பிள்ளைக்கு 16 முடியும், வீட்டை விட்டுக் கிளப்பலாம் என்பதே அவர்கள் வாழ்வு. தமது உழைப்பு, தமது எஞ்ஜாய்மென்ற்...

தாங்கள் இருக்கும் வரை சொத்தை கொடுக்க மாட்டார்கள். இறந்தபின் கிடைப்பதில், அரசு 40% ஆட்டயைப் போடும். 

ஆகவே வேலை செய்தாக வேண்டும். பணப்பற்றாக் குறையால், பிள்ளைகளின் தகப்பன் எஸ் ஆக, சிங்கிள் மதர் அவலம். 

இடையே உண்மையான உறவு கிடைக்கும் போது, அது முன்னரே கிடைக்காதவர்கள், நிஜமாக வாழ்கின்றனர்.

நான் பார்த்த கலப்பு மணங்களில், உறுதி கூடுதலாக இருப்பதை கவனித்தேன்.

இன்ரநெற் போய், I am marrying a Tamil / Indian / Sri Lankan என்று போட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணும் பெண்ணும் மனம் விரும்பி மணம் செய்யும்போது இனம், மொழி, மதம் கலாச்சாரம் என்று நாம் பிடிவாதமாக மறுக்க, அல்லது விலத்தி வைக்க முனைகிறோம். காதல் என்பது இத்தனை விடயங்களையும் எடுத்தாய்ந்து வருவதில்லை. எப்போது எங்கே யாரிடம் மனம் பறிபோகும் என்று யாருமே விரல் மடிக்கமுடியாது. மனம் ஒருமித்ததுதானே வாழ்க்கை. இன்றைய நாட்களும் இனிவரும் காலங்களும் திருமணங்கள் என்பதையே கேள்விக்குரியாக்கிச் செல்வதை நாம் அறியாதவர்களா? ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் துணைகளாகும் உறவுகளின் புரள்வு நிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பிறப்பால் சிலருக்கு இருக்கும் பால்சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இயற்றப்பட்ட சட்டங்கள் இயற்கையின் படைப்புக்கு அப்பால் பலரிடம் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் போக்கு இப்படி இருக்க...நாமோ ஐயோ வெள்ளையை கட்டிட்டான், ஐயோ கறுப்பனைக்கட்டிட்டாள் என்று திருமண பந்தத்தை உருவாக்கி வாழத்தலைப்படும் பிள்ளைகளை நோகலாமா? திருமணம் கட்டாமல் லிவிங் டூகெதராக வாழ்வது நாகரீகமாக இளையவர்கள் மத்தியில் கருதப்படுவதும் அவர்கள் அவ்வழியில் இணைந்திருந்தும் பிரிந்தும் திருமணங்களை எட்டாமல் விலகியும் இலக்கற்ற வெளியில் இருக்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். நான் பார்த்தவரையில் வெள்ளையைக்கட்டி விவாகரத்தாம், கறுப்பியைக்கட்டி விலகி விட்டானாம் என்று கேள்விப்பட்டதைக்காட்டிலும் நம்மவர்களைக்கட்டி விவாகரத்து பெற்றவர்களும், பிரிந்தவர்களும்தான் அதிகம்.

Link to comment
Share on other sites

11 minutes ago, வல்வை சகாறா said:

ஆணும் பெண்ணும் மனம் விரும்பி மணம் செய்யும்போது இனம், மொழி, மதம் கலாச்சாரம் என்று நாம் பிடிவாதமாக மறுக்க, அல்லது விலத்தி வைக்க முனைகிறோம். காதல் என்பது இத்தனை விடயங்களையும் எடுத்தாய்ந்து வருவதில்லை. எப்போது எங்கே யாரிடம் மனம் பறிபோகும் என்று யாருமே விரல் மடிக்கமுடியாது. மனம் ஒருமித்ததுதானே வாழ்க்கை. இன்றைய நாட்களும் இனிவரும் காலங்களும் திருமணங்கள் என்பதையே கேள்விக்குரியாக்கிச் செல்வதை நாம் அறியாதவர்களா? ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் துணைகளாகும் உறவுகளின் புரள்வு நிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பிறப்பால் சிலருக்கு இருக்கும் பால்சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இயற்றப்பட்ட சட்டங்கள் இயற்கையின் படைப்புக்கு அப்பால் பலரிடம் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் போக்கு இப்படி இருக்க...நாமோ ஐயோ வெள்ளையை கட்டிட்டான், ஐயோ கறுப்பனைக்கட்டிட்டாள் என்று திருமண பந்தத்தை உருவாக்கி வாழத்தலைப்படும் பிள்ளைகளை நோகலாமா? திருமணம் கட்டாமல் லிவிங் டூகெதராக வாழ்வது நாகரீகமாக இளையவர்கள் மத்தியில் கருதப்படுவதும் அவர்கள் அவ்வழியில் இணைந்திருந்தும் பிரிந்தும் திருமணங்களை எட்டாமல் விலகியும் இலக்கற்ற வெளியில் இருக்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். நான் பார்த்தவரையில் வெள்ளையைக்கட்டி விவாகரத்தாம், கறுப்பியைக்கட்டி விலகி விட்டானாம் என்று கேள்விப்பட்டதைக்காட்டிலும் நம்மவர்களைக்கட்டி விவாகரத்து பெற்றவர்களும், பிரிந்தவர்களும்தான் அதிகம்.

பிள்ளைகளின் உணர்வுக்கும் காதலுக்கும் சார்பாக அழகாக எழுதிவிட்டு ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை உறவுகளின் புரள்வு நிலை என்று குறிப்பிடுகின்றீர்கள். மதங்கள் விலக்கி வைத்த ஒன்று என்பதற்கு அப்பால் அவையும் மனித உணர்வுகள் தானே? அத்துடன் living together  இனையும் எட்டாடமல் இருக்கும் இலக்கற்ற வெளி என்கின்றீர்கள்.  இவ்வாறு வாழ்கின்றவர்கள் பல வருடங்களாக இணைந்தே வாழும் உதாரணங்கள் எங்கள் அயலிலேயே இருக்கின்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

பிள்ளைகளின் உணர்வுக்கும் காதலுக்கும் சார்பாக அழகாக எழுதிவிட்டு ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை உறவுகளின் புரள்வு நிலை என்று குறிப்பிடுகின்றீர்கள். மதங்கள் விலக்கி வைத்த ஒன்று என்பதற்கு அப்பால் அவையும் மனித உணர்வுகள் தானே? அத்துடன் living together  இனையும் எட்டாடமல் இருக்கும் இலக்கற்ற வெளி என்கின்றீர்கள்.  இவ்வாறு வாழ்கின்றவர்கள் பல வருடங்களாக இணைந்தே வாழும் உதாரணங்கள் எங்கள் அயலிலேயே இருக்கின்றதே

நிழலி பிறப்பால் சிலருக்கு ஏற்படும் பால் நிலை மாற்றங்களை ஒரு காலமும் தாழ்வு படுத்தவில்லை ஆனால் தற்காலத்தில் அதன் வளர்ச்சி என்பது திடுக்கிடவைப்பதாகவே இருக்கிறது. இயற்கையின் இயல்பால் பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்டுள்ள போதையால் அல்லது ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்களால் அத்தகைய நிலைக்குள் உட்பட்டோர்தான் அதிகமாகிச் செல்கிறார்கள். அதிகரித்துச்செல்லும் இந்நிலையை இயற்கை என்று பார்த்தால் ஆண் பெண் பிம்பங்களுக்குள் மாறுபட்ட பாலியல் கொண்டவர்கள் அதிகமா? அடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றிணைந்து வாழ்வது இன்றைய நிலையில் பலரால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் இந்தத் தலைப்பில் தமிழ் கல்யாணம், வெள்ளை என்றதன் பின்னால் பதியப்பட்டகருத்துகளை தொடர்ந்தே எனது கருத்தும். விரும்பினால் சேர்ந்திருக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதில் அத்தகைய வசதி உண்டு. இத்தகைய சூழலுக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. திருமணம் என்ற பந்தம் எம்மைப் பொருத்தவரையில் சமூகவெளியில் அடையாளப்படுத்தும் ஒரு குடும்பநிலை கொண்டது. திரு திருமதி என்ற வரைவிலக்கணத்திற்குரியது. எதிர்காலத்தில் திருமதிகள் குறைவாகவும் செல்விகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இங்கு நான் ஓரினச்சேர்க்கையாளர்களையோ, திருமணம் இன்றி சேர்ந்து வாழ்பவர்களையோ காயப்படுத்த எண்ணவில்லை அதே நேரம் திருமணம் என்ற பந்தத்தில் இனம் , மொழி,பண்பாடு, நிறம் கடந்து இணைகின்றவர்களைவாழ்த்தி வரவேற்போமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் கலியானம் என்பது வெறும் சடங்குதான்.அதற்க்கு அப்பால் பரவலாக இன மத நிற வேறுபாடின்றி உறவு(உடல்)கொடி கட்டி பறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனம் மதம் பழக்கவழங்கள் எல்லாவற்றையும் தாண்டி காமத்திற்காக இணைந்ததை.....

காதல் என்கிறார்கள்.

கலியாணம் என்கிறார்கள்.

உலக புதுமை என்கிறார்கள்.

மனிதம் முதுமை அடைய அடைய.........

முரண்பட்ட சிந்தனைகள் வர.....?

என்னவாகுமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வல்வை சகாறா said:

நிழலி பிறப்பால் சிலருக்கு ஏற்படும் பால் நிலை மாற்றங்களை ஒரு காலமும் தாழ்வு படுத்தவில்லை ஆனால் தற்காலத்தில் அதன் வளர்ச்சி என்பது திடுக்கிடவைப்பதாகவே இருக்கிறது. இயற்கையின் இயல்பால் பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்டுள்ள போதையால் அல்லது ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்களால் அத்தகைய நிலைக்குள் உட்பட்டோர்தான் அதிகமாகிச் செல்கிறார்கள். அதிகரித்துச்செல்லும் இந்நிலையை இயற்கை என்று பார்த்தால் ஆண் பெண் பிம்பங்களுக்குள் மாறுபட்ட பாலியல் கொண்டவர்கள் அதிகமா? அடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றிணைந்து வாழ்வது இன்றைய நிலையில் பலரால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் இந்தத் தலைப்பில் தமிழ் கல்யாணம், வெள்ளை என்றதன் பின்னால் பதியப்பட்டகருத்துகளை தொடர்ந்தே எனது கருத்தும். விரும்பினால் சேர்ந்திருக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதில் அத்தகைய வசதி உண்டு. இத்தகைய சூழலுக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. திருமணம் என்ற பந்தம் எம்மைப் பொருத்தவரையில் சமூகவெளியில் அடையாளப்படுத்தும் ஒரு குடும்பநிலை கொண்டது. திரு திருமதி என்ற வரைவிலக்கணத்திற்குரியது. எதிர்காலத்தில் திருமதிகள் குறைவாகவும் செல்விகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இங்கு நான் ஓரினச்சேர்க்கையாளர்களையோ, திருமணம் இன்றி சேர்ந்து வாழ்பவர்களையோ காயப்படுத்த எண்ணவில்லை அதே நேரம் திருமணம் என்ற பந்தத்தில் இனம் , மொழி,பண்பாடு, நிறம் கடந்து இணைகின்றவர்களைவாழ்த்தி வரவேற்போமே.

கனம் கோட்டார் அவர்கள் !
இந்த தீர்ப்பை கொஞ்சம் கூடுதலான ஆய்வின் பின் வழங்கி இருக்கலாம் 
என்று எண்ணுகிறேன்.

கொஞ்சம் சிக்கலான விடயம் என்பதால் மரியாதைக்கு உரிய நீதிமன்ற வளாகத்தில் 
எப்படி பேசுவது என்று புரியவில்லை....

தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம் ............. (எமது மதம் இதை முன்கூட்டியே சொல்லி இருக்கிறதாம் 
என்றும் எங்கோ வாசித்தேன் .... சைவ கோவில்களின் வெளி சுவர் ஏன் சிவப்பு வெள்ளை வர்ணத்தில் இருக்கிறது? உள்ளே கருவறை இருப்பதால்தான் அப்படி இருப்பதாக சொல்கிறார்கள். எமது கோவில் வடிவைப்பு  பூசை முறைமைகள் எல்லாம் நிறையவே காமத்துடன் கலந்து இருக்கிறது. நந்தியும் லிங்க வழிபாடு இப்போதும்  உண்டு. முன்னைய கோவில் சிலைகளில் நிறையவே ஓரின சேர்க்கை சம்மந்தமான சிற்பங்கள் நிறைய உண்டு) 

இதை எமது மதம் சார்ந்தும் எமது பூசை முறைமைகள் சார்ந்தும் சிந்தித்துக்கொண்டு தொடர்ந்து  வாசியுங்கள்   ............
(சிவன் + சக்தி) கருவில் ஆண் பெண் இல்லை அது ஒரு முழுமை நிலையில் இருக்கிறது பின் 60 நாட்கள் கழிந்து அது ஒரு ஆண் ஆகிறது ஆரம்பத்தில் பிறப்பு உறுப்பு ஒரே மாதிரியே இருக்கிறது 7-8 வாரங்கள் 
பின்பு ஆண்கரு  மேல் நோக்கி வளர்கிறது ... அதுவே பெண் கருவிட்கு அப்படியே இருந்து விடுகிறது. இப்போதான் சிக்கல் வருகிறது ........ ஒரு முழுமை பாதியாக பிரிகிறது. ஆண் கரு தன்னோடு இருந்த பெண் நிலையை பிரிகிறது ........ பெண் கரு தன்னோடு இருந்த ஆண் நிலையை  பிரிகிறது. ஒரு ஆண் முழுமை இல்லை ... ஒரு பெண்ணும் முழுமை இல்லை........ தான் இழந்த பாதியை தானகவே தேடுவதால்தான் பால் மயக்கம்  வருகிறது. 
இப்போதான் இங்கே ஒரு சிக்கல் வருகிறது மருத்துவ ரீதியாக பார்க்கும்போது (இதை தலைவர் நெடுக்கு அவர்கள் விரிவாக கூறுவார்) 
க்ஸ் வை க்ரோஸொம்தான் ஆண்  பெண்ணை நிர்ணயிக்கறது இப்போ சொல்கிறார்கள் 
சரியான சம அளவு க்ஸ் வை க்ரோசம் என்பது அரிதாகவே நடப்பதாக. 
ஒரே மாதிரியான இரட்டை பிள்ளைகளும்  ....... வேறு வேறு மாதிரி இரட்டை பிள்ளைகளையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் இந்த க்ரோசோம் கோன்பியூஷன்தான் இவற்றுக்கு காரணம்.
இப்போ உங்கள் கருத்து நோக்கி வருவோம் ...... ஆய்வாளர்கள் கொஞ்சம் அதிர்ச்சியான 
தகவல் ஒன்றரை சொல்கிறார்கள் ... 80 வீதமான பெண்களுக்கு பெண்களுடன் உறவு கொள்ள பிடிக்குமாம்.
சமூகம் சார்ந்தும் இன்ன பிற மைண்ட் செட் காரணமாகவே அதை கண்டும் காணாமலும் வாழ்கிறார்களாம்.
அதுக்கு காரணம்  ஆண்களுக்கு ஒரு வை க்ரோசமும் ஒரு க்ஸ் க்ரோசமும் உண்டு. ஆனால் பெண்ணை நிர்ணயிப்பது  இரண்டு க்ஸ் க்ரோஸம்களே. ஆண்களுக்கு பெண் சார்ந்த உணர்வும் கூடவே உண்டு ஆதலால் 
பின்னாளில் சமூகம் சார்ந்தும் சிந்திக்கிறார்கள் இல்லையா? பெண்கருவை இரண்டு க்ஸ் க்ரோஸம்களே உருவாக்குகிறது. 
இந்த காலத்தில் வரும் சிறிய தவறால்தான் .... சில ஆண்களுக்கு ஆண்களையும் ... பல பெண்களுக்கு பெண்களையும்  பிடிக்கிறது. இது ஒரு உள் உணர்வு ... வெளி தோற்றம் ஆணாக இருந்தாலும் அவர்கள் உள் 
எண்ணபாடுகள் பெண்ணாகவே கருவிலேயே அமைந்துவிடுகிறது.

இப்போதைய காலத்தில் நீங்கள் அதிகம் கான்பதட்கும் ... பெருகி வருவதுபோல் 
உணர்வதட்கும் காரணம் ........... இப்போ ஒளிவு மறைவின்றி ... சமூகம் சார்ந்த அச்சம் இன்றி 
அவர்களால் வெளி வர முடிவதால்தான். முன்பு இருட்டில் இருந்ததை இப்போ வெளிச்சத்தில் பார்க்கிறோம் 
அதன் பொருள் முன்பு இருக்கவில்லை என்பது அல்ல. 

(சிவன் வேறு சக்தி வேறு இரண்டும் இணைவதே ஒரு ஒரு செயல்பாடு ஆகும்) 

 

YChromShowingSRY2.png

Alternative text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.