Jump to content

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

 

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=71705

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்
 
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
 
இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள்  வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும். 
 
தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.
 
உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
 
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம்  இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது. 
 
கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.
 
 
நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். 
 
அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன. 
 
ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும். 
 
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15009&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் சிங்களவனுக்கு பதிலா நாடு நாடாய் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வார் போல் உள்ளது  அண்ணருக்கு cv இடம் வாங்கிகட்ட காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கைதானே. நாலு பணம் விதை மாத்திரம் நட்டவர் தமிழர் பகுதியுள் வேறு ஒன்றும் இதுவரை தமிழர்க்கு செய்ததா சரித்திரம் இல்லை மொத்தத்தில் இவர் ஓய்வு போனால் வடமாகாண அரசியல் ஒரு குழப்பமும் இல்லாமல் போகும் இன்று இப்படி சொல்றவர் நாளை தேர்தல் மேடையில் பல்டி அடித்து கதைப்பார் நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொல்லிவிட்டு போய் விடுவார்.  தமிழர்க்கு கிடைத்த சாபக்கேடு சுமத்திரன் அரசியலுக்கு வந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

 

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
 

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

 

அருமை
அற்புதம்
ஆழம்
நிறைந்த
ஆரோக்கியமான கருத்து

மேலும் அதிகம்
எதிர்பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

அதானே ஆரம்ப காலங்களில் அரசாங்க துணையுடன்  கடத்தியவர்கள் இன்று கதிரையிலே இருக்குறார்கள் அவர்களை இவர் கண் பார்க்க வில்லையா அல்லது அவர்கள் இவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று யோசிக்கிறாரா என்ன 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்... இருக்கும் .மட்டும்.. வாலை சுருட்டிக் கொண்டு, பதுங்கி  இருந்து விட்டு, 
பின் கதவால்.... தமிழ்  அரசியலுக்குள் நுழைந்து, 
இன்று.. தமிழ்  மக்களுக்காகவே... போராடி மடிந்த, புலிகளை விமர்சிக்க...
சுமந்திரனுக்கு... என்ன அருகதை உள்ளது.
(வாயில கனக்க  வருது, எழுத்து...  நாகரிகம் கருதி, எழுதவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் பெரிய நீதிமான் போல பேசிட்டராம்...

அப்படின்னா.. நீதிமான் அவர்களே..

தாங்கள் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்ட ஆட்பிடிப்பு பற்றியும் விசாரிக்க கேட்கலாம்..

ஏன்.. சிங்கள இளைஞர்களை கட்டாய ஆட்பிடிப்புக்கு உட்படுத்திய சொறீலங்கா இராணுவத்தையும் விசாரிக்க கேட்கலாம்..

அதுபோக.. சிங்கள இராணுவத்தின் கைக்கூலி உதிரி தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கு சொறீலங்கா இராணுவம் ஆட்பிடிக்க உதவியமை குறித்தும் விசாரிக்கலாம்..

அதுக்கு மேல.. தமிழரசுக் கட்சி ஆட்கள்.. சாராயமும்.. சோடாப் போத்தலும்.. கத்தி.. பொல்லும் கொடுத்து இளைஞர்களை... ஆட்சேர்த்தது குறித்தும் விசாரிக்கலாம்..

இதுகளை தாங்கள்.. பேச மறுப்பது ஏனோ.. நீதிமான் அவர்களே..

ஓ தங்களுக்கு புலிகள் என்றால்.. கொஞ்சம் நடுக்கம் போலும். tw_blush::rolleyes:

முடிஞ்சா.. உந்த சுமந்திரன் என்ற வகையறா.. யாழ் இணையத்தளத்தில் நேரடி கேள்வி பதிலுக்கு வருவாரா... 

ஒரு உருப்படியான.. ஈழத்தின் வரலாறே தெரியாத.. இந்த அரைகுறை.. இப்ப ஈழத்தமிழர்களின் அரசியலை தீர்மானிப்பது.. அவமானம்..!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Athavan CH said:

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

கலோ மிஸ்டர் சுமந்திரன்! 
என்ன சொல்லி வாக்கு கேட்டு பாராளுமன்றம் போனீர்கள்?
ஞாபகமிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்ப வேண்டாம் என்றது ..........?

முன்பக்கம் விசாரியுங்கோ ...
பின்பக்கம் விசாரியுங்கோ ....
சுத்தி சுத்தி விசாரியுங்கோ ....

தமிழர்களை திட்டமிட்டு கொன்ற சிங்கள அரசை யார் விசாரிப்பது ?

ஏற்கனவே இங்கு இருந்தவர் ஒருவர் மீண்டும் 
வேறு பெயரில் வந்து குழை அடிச்சுக்கொண்டு நிற்கிறார்.

சிலர் நினைக்கினம் ... முதல்வர் சி வி ஒன்றும் செய்யவில்லை என்பது 
எமக்கு தெரியாது என்று ....... அவர் ஒன்றும் செய்யவில்லை .... இனிமேலும் ஒன்றும் 
செய்யவும் மாட்ட்டார் ....... இது யாழில் இருக்கும் சாதரண மக்களுக்கும் தெரியும் 
அப்படி அவர் ஏதும் செய்தாலும் .......... சிங்களவன் விடடாலும் 
பொறுக்கிகள் விட மாட்டார்கள் என்பதும் யாவருக்கும் தெரியும். 

இருந்தாலும் எமக்கு சி வி தான் வேண்டும்.
ஒரே ஒரு காரணம் ..........

இப்படி சொந்த இனத்தை வித்து பிழைக்க அந்த மனுஷன் துணியாது 
எனும் ஒரே காரணம்தான். 

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகளை வாழவே விடமாட்டீர்களா?

 

15018.jpg
பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம்  ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும்.
 
அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள்  போல காட்டிக் கொள்ள முனைகின்றனர்.
 
நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் சரி, இன யுத்தம் சரி, அனைத்தும் பேரினவாதத்தின் கொடுமையின் விளைவுகளாகும்.
 
தமிழினத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பேரினவாத ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் அமுலாக்கிய அரசியலமைப்புகளும் திட்டமிடல்களும் சிறுபான்மைத் தமிழினத்தை மிக மோசமாகப் பாதித்தது.
 
தவிர, காலத்துக்குக் காலம் தமிழின அழிப்புகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறின. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
இந்நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை முகிழ்ந்தது.
 
ஆயுதப் போராட்ட சிந்தனைகூட தமிழனத் தலைவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட நிலையில்; தமிழ் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலையைத் தரும் என தமிழ் தலைவர்கள் மேடையேறி உசுப்பேத்திய நிலையில் ஏற்பட்டதுதான்.
 
இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம் என்ற கட்டத்தில் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை தமிழர் தாயகத்தில் தோற்றமுற்றன.
 
அவற்றின் பாதை பல வழிப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மண் மீட்புப் போரை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்பாக நின்று நிலைத்தது.
 
ஒருபுறம் இன யுத்தம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால் தீர்வை எட்டுவதற்கு எவரும் உடன்பட்டிலர். ஈற்றில் உலக நாடுகளின் உதவியோடு வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகக் கொடும் போர் நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயிற்று.
 
தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு  பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று அழித்தது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது.
 
சரணடைந்த புலிப் போராளிகள் எங்கே? என்பது இன்றுவரை தெரியவில்லை.
 
நிலைமை இதுவாக இருக்கையில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிப்பதென்றால் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்று நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் எனில், அதன் பொருள் புரியவில்லை.
 
போரில் அழிக்கப்பட்ட  ஓர் அமைப்புத் தொடர் பில் விசாரணை நடத்துவது எங்ஙனம் சாத்தியமாகும்?
 
அதேநேரம் சட்டப்படி காப்பாற்ற வேண்டிய படையினரிடம், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்து வதே பொருத்துடையதும் நியாயமானதுமாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15018&ctype=news

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுகுடுப்பைக் கும்பலுக்கு யாரோ (யார் ஹிந்திய எஜமானர்கள் தான். நக்கிறதுக்கு.. பொறுக்கிறதுக்கு.. கூனுறத்துக்கு குறுகிறதுக்கு.. போற இடமெல்லாம் எஜமானர்கள் வாய்க்கிறது... சகஜம் தானே..)     சொல்லிக்கொடுத்துள்ள ராஜதந்திரம் என்ன என்றால்.. உங்கள் சிங்கள எஜமானர்களை செல்லக் கிள்ளுப் பண்ணனுன்னா.. சொந்த இனத்துக்கு தலையில் சம்மட்டியால் அடிச்சு வீழ்த்தனும். நீங்களே உங்கள் இனத்தை அழிக்க உதவனும்.. அப்ப தான்.. நீங்கள் எங்களையும்.. உங்கள் சிங்கள எஜமானர்களையும் மகிழ்வித்து.. சுயபோக.. சுகபோகங்களை அனுபவிக்கலாம்.

இது தான் சம் சும் மாவை கும்பலின் ராஜதரித்திரம். இது தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மீள முடியாத அடிமை நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பது மட்டுமே.. யதார்த்தமாகும்.

புலிகளை அழித்ததும் இந்தா தீர்வு என்றார்கள்.. இன்று... தீர்வு.. தமிழர்களை அழி என்றாகி வந்து நிற்கிறது. இந்தக் கும்பலின் ராஜதரித்திரத்தின்.. முடிவு இது.

இந்தக் கும்பலை முதலில் தமிழ் மக்களுக்கான அரசியலை தீர்மானிக்கும்.. தளத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியது தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்கு இப்போ.. மிக முக்கியமாக அமைகிறது. இந்தக் கும்பலுக்கு வால்பிடிக்கும் அனைவரும்.. வெளியேற்றப்படனும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கு அரசியல் சமூக.. பொருண்மிய விடிவு என்பது ஈழ மண்ணில்.. எனி அமைய வாய்ப்பே இல்லை. அந்த வாய்ப்பை.. இல்லாமல் செய்வதே இந்த கும்பலின் அரசியலாகும்.  இது மிகவும் ஆபத்தானது. புலித் துவேசிகள்.. இதுக்கு விசிலடிக்கலாம்.. ஆனால்.. இல்லாத புலிகளை சம்பந்தப்படுத்தி.. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையும்.. பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு.. வழங்கப்பட வேண்டிய உரிமையையும்.. பறிப்பது.. ராஜதந்திரம் அல்ல.. ராஜதரித்திர அணுகுமுறை... இது மொத்த தமிழ் இனத்துக்குமே பாதகமான விளைவுகளையே உண்டு பண்ணும். ஒரு சிலர் சுகபோகங்களை அனுபவிக்கலாம். அவ்வளவும் தான். 

சம் சும் மாவை கும்பல்.. இதை தான் செய்யும் என்று அப்பவே சொல்லிட்டார்கள்.. நாமும் இங்கு யாழில் சொல்லி இருந்தோம். இது ஒன்றும்.. எதிர்பார்க்காதது அல்ல. ஆனால்.. மக்கள்.. இன்னும் இவர்களை நம்பும் முட்டாள்களாக இருப்பது தான் வேடிக்கை. 

இவர்களின் சிந்தனை ஓட்டம்.. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த சிந்தனை ஓட்டமாக அன்றி.. அன்று ஒப்புக்காவது சில இனத்துக்கு விசுவாசமாக சிந்திக்கச் செய்யப்பட்டார்கள்.. இன்று அந்த ஒப்பும் இழந்து.. எஜமான விசுவாச நோக்கமும்.. சுயநலமுமே இவர்களிடம் பழையபடி மண்டி இட்டுக் கிடக்கிறது. இவர்களை மக்கள் எனியும் சரியாக இனங்கண்டு.. அரசியல் தளத்தில் இருந்து விரட்டி அடிக்கவில்லை என்றால்.. சரியான பதில் பிரதியீடுகளை செய்யவில்லை என்றால்... ஈழத்தீவில் தமிழ் மக்களின் இருப்பும் அரசியலும் நிச்சயம் முற்றாக நாசம் செய்யப்படும்.. சிங்கள ஹிந்திய வல்லாதிக்க எஜமானர்களாலும்.. அவர்களுக்கு வால்பிடிக்கும் எமது இன சுயபோக.. சுகபோகத் துரோகிகளாலும். :rolleyes:tw_angry:

மக்கள் தான் இப்போ தமது தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்களாகி உள்ளனர். 

அவர்களை வழிநடத்த.. நிச்சயம்.. நல்ல சிந்தன உள்ள இளைஞர்கள் தாயகத்திலும்.. புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர்.

உலகம்.. வன்முறைக்கு எதிராக நிலை எடுத்துள்ள நிலையில்.. நாம்.. எமது மூலோபாயங்களை மாற்றி.. எமது மக்களின் அரசியல் சமூக.பொருண்மிய.. தேச விடுதலை என்பதை.. சாத்தியமாக்கும் எல்லா மாற்றுவழிகளையும் பாவிப்பதே இன்றுள்ள நல்ல தெரிவாகும். இதற்கு ஒரு குழுவாக அன்றி பல குழுவாக இயங்கினாலும்.. இலக்கை ஒன்றாக்கினால்... இன்னும் எதிரிகளை சமாளிப்பது இலகுவாகும்.  ஆனால்.. இனம்.. தேசம். என்ற கொள்கைப் பிடிப்பில் இருந்தும்.. அடைய வேண்டிய இலக்கில் இருந்தும்.. விலகாத.. நல்ல நோக்கம் அங்கு நிலையாக இருந்தால்.. வெற்றிகள் நிச்சயம் அமையும். மக்கள்  எனி இது தொடர்பில் தான் சிந்திக்கனும். பழைய பஞ்சாங்களையும்.. அவற்றை ஒட்டி உள்ள.. புதிய சந்தனம்.. குங்குமங்களையும் நம்பி.. எமது இனம்.. தேசம்.. தனது உரிமையை ஒருபோதும் அடையாது. அப்படி அடையச் செய்வதற்கான எந்த வலுவும்.. உந்தப் பஞ்சாங்கங்களிடம் இல்லை. அதையே.. கடந்த.. 8 வருடங்கள் எமக்கு உணர்த்தி உள்ளன. இதுவே காலம் கடந்தது தான். எனியும் காலம் கடத்துவதும்.. இந்த கோமாளிகளுக்கு..இனத்துரோக.. கூத்துக்காட்ட இடமளிப்பதும்.. ஆபத்தான விளைவுகளையே உண்டு பண்ணும்.

ஒன்றில்.. இந்தக் கோமாளிகள்.. தம்மை திருத்திக் கொள்ள மக்கள்.. தம்மை தம் வலுவை பாவிக்கனும்.. இல்லை.. இவர்களை.. மக்கள் தம் தீர்ப்பால்.. அரசியல் களத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். அதேவேளை.. சோரம் போகாத..சரியான பிரதியீடுகளை செய்தும் கொள்ளவும் வேண்டும்.

இது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். 

நன்றி.. நெடுக்காலபோவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2017 at 2:42 PM, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

செத்துப் போன உங்க ஆயா நடத்தை கெட்டவள் / கொலைகாரி என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? 

* முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-24 at 3:49 AM, விசுகு said:

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

உவையள் தாங்களே தங்களுக்கு ஒளிவட்டமிருக்கு என்று நினைச்சுகொண்டு கதைக்க வெளிக்கிடுற்வையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

Link to comment
Share on other sites

43 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

 

5 hours ago, nunavilan said:

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

தமிழருக்கு மறதி அதிகம் 
சுமந்திரன் ஏன் அரசிலுக்கு கொண்டு வரப்பட்டார் என்பதே மறந்து போச்சு.

கோத்தபய எல்லோரையும் கடாசிய நேரத்தில் ... தமிழ்த்தேசிய கூடடமிப்பிலும் கை வைக்கலாம் 
எனும் நடுக்கம் எல்லோருக்கும் இருந்தது. சிங்கள மூத்த பத்திரிக்கையாளர்களையே களை 
எடுத்துக்கொண்டு இருந்த நேரம் ....... சம்மந்தருக்கு ஒரு குலை நடுக்கம் இருந்தது 
தன்னையும் ஏதும் காரணம் சொல்லி உள்ளே போடடால் என்ன செய்வது என்று.

அப்போதான் கொழும்பு வாழ் மகிந்த கூட்ட்டத்துடன் ஒட்டி உறவாடி கொண்டு இருந்த 
சுமந்திரன் தட்டு பட்டார் ......... அவரை கொண்டு கோத்தபாயவிட்கு செய்தி அனுப்பினார்.
நாங்கள் தேர்தலில் வெல்ல சும்மா அப்பிடி இப்படி பேசினோமே தவிர 
மற்றும்படி ....... நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்று 
அதை சுமந்திரன் சாதகமாக்கி .........புலி இல்லை ... இனி உயிருக்கு ஆபத்தும் இல்லை 
என்று தெரிந்த பின்தான் பின் கதவால் உள்ளே வந்தார்.

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

 

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

 டி.பி. எஸ் ஜெயராஜ் கனடாவில் இலங்கைத் தூதரகத்துடன் சேர்ந்தியங்கியவர் என்றும் அவர் சுமத்திரனின் உறவினர் என்றும் , சுமத்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் எனறும் நானும் எங்கோ படித்துள்ளேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.