Jump to content

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

 

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=71705

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்
 
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
 
இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள்  வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும். 
 
தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.
 
உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
 
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம்  இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது. 
 
கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.
 
 
நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். 
 
அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன. 
 
ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும். 
 
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15009&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் சிங்களவனுக்கு பதிலா நாடு நாடாய் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வார் போல் உள்ளது  அண்ணருக்கு cv இடம் வாங்கிகட்ட காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கைதானே. நாலு பணம் விதை மாத்திரம் நட்டவர் தமிழர் பகுதியுள் வேறு ஒன்றும் இதுவரை தமிழர்க்கு செய்ததா சரித்திரம் இல்லை மொத்தத்தில் இவர் ஓய்வு போனால் வடமாகாண அரசியல் ஒரு குழப்பமும் இல்லாமல் போகும் இன்று இப்படி சொல்றவர் நாளை தேர்தல் மேடையில் பல்டி அடித்து கதைப்பார் நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொல்லிவிட்டு போய் விடுவார்.  தமிழர்க்கு கிடைத்த சாபக்கேடு சுமத்திரன் அரசியலுக்கு வந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

 

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
 

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

 

அருமை
அற்புதம்
ஆழம்
நிறைந்த
ஆரோக்கியமான கருத்து

மேலும் அதிகம்
எதிர்பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

அதானே ஆரம்ப காலங்களில் அரசாங்க துணையுடன்  கடத்தியவர்கள் இன்று கதிரையிலே இருக்குறார்கள் அவர்களை இவர் கண் பார்க்க வில்லையா அல்லது அவர்கள் இவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று யோசிக்கிறாரா என்ன 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்... இருக்கும் .மட்டும்.. வாலை சுருட்டிக் கொண்டு, பதுங்கி  இருந்து விட்டு, 
பின் கதவால்.... தமிழ்  அரசியலுக்குள் நுழைந்து, 
இன்று.. தமிழ்  மக்களுக்காகவே... போராடி மடிந்த, புலிகளை விமர்சிக்க...
சுமந்திரனுக்கு... என்ன அருகதை உள்ளது.
(வாயில கனக்க  வருது, எழுத்து...  நாகரிகம் கருதி, எழுதவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் பெரிய நீதிமான் போல பேசிட்டராம்...

அப்படின்னா.. நீதிமான் அவர்களே..

தாங்கள் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்ட ஆட்பிடிப்பு பற்றியும் விசாரிக்க கேட்கலாம்..

ஏன்.. சிங்கள இளைஞர்களை கட்டாய ஆட்பிடிப்புக்கு உட்படுத்திய சொறீலங்கா இராணுவத்தையும் விசாரிக்க கேட்கலாம்..

அதுபோக.. சிங்கள இராணுவத்தின் கைக்கூலி உதிரி தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கு சொறீலங்கா இராணுவம் ஆட்பிடிக்க உதவியமை குறித்தும் விசாரிக்கலாம்..

அதுக்கு மேல.. தமிழரசுக் கட்சி ஆட்கள்.. சாராயமும்.. சோடாப் போத்தலும்.. கத்தி.. பொல்லும் கொடுத்து இளைஞர்களை... ஆட்சேர்த்தது குறித்தும் விசாரிக்கலாம்..

இதுகளை தாங்கள்.. பேச மறுப்பது ஏனோ.. நீதிமான் அவர்களே..

ஓ தங்களுக்கு புலிகள் என்றால்.. கொஞ்சம் நடுக்கம் போலும். tw_blush::rolleyes:

முடிஞ்சா.. உந்த சுமந்திரன் என்ற வகையறா.. யாழ் இணையத்தளத்தில் நேரடி கேள்வி பதிலுக்கு வருவாரா... 

ஒரு உருப்படியான.. ஈழத்தின் வரலாறே தெரியாத.. இந்த அரைகுறை.. இப்ப ஈழத்தமிழர்களின் அரசியலை தீர்மானிப்பது.. அவமானம்..!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Athavan CH said:

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

கலோ மிஸ்டர் சுமந்திரன்! 
என்ன சொல்லி வாக்கு கேட்டு பாராளுமன்றம் போனீர்கள்?
ஞாபகமிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்ப வேண்டாம் என்றது ..........?

முன்பக்கம் விசாரியுங்கோ ...
பின்பக்கம் விசாரியுங்கோ ....
சுத்தி சுத்தி விசாரியுங்கோ ....

தமிழர்களை திட்டமிட்டு கொன்ற சிங்கள அரசை யார் விசாரிப்பது ?

ஏற்கனவே இங்கு இருந்தவர் ஒருவர் மீண்டும் 
வேறு பெயரில் வந்து குழை அடிச்சுக்கொண்டு நிற்கிறார்.

சிலர் நினைக்கினம் ... முதல்வர் சி வி ஒன்றும் செய்யவில்லை என்பது 
எமக்கு தெரியாது என்று ....... அவர் ஒன்றும் செய்யவில்லை .... இனிமேலும் ஒன்றும் 
செய்யவும் மாட்ட்டார் ....... இது யாழில் இருக்கும் சாதரண மக்களுக்கும் தெரியும் 
அப்படி அவர் ஏதும் செய்தாலும் .......... சிங்களவன் விடடாலும் 
பொறுக்கிகள் விட மாட்டார்கள் என்பதும் யாவருக்கும் தெரியும். 

இருந்தாலும் எமக்கு சி வி தான் வேண்டும்.
ஒரே ஒரு காரணம் ..........

இப்படி சொந்த இனத்தை வித்து பிழைக்க அந்த மனுஷன் துணியாது 
எனும் ஒரே காரணம்தான். 

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகளை வாழவே விடமாட்டீர்களா?

 

15018.jpg
பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம்  ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும்.
 
அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள்  போல காட்டிக் கொள்ள முனைகின்றனர்.
 
நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் சரி, இன யுத்தம் சரி, அனைத்தும் பேரினவாதத்தின் கொடுமையின் விளைவுகளாகும்.
 
தமிழினத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பேரினவாத ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் அமுலாக்கிய அரசியலமைப்புகளும் திட்டமிடல்களும் சிறுபான்மைத் தமிழினத்தை மிக மோசமாகப் பாதித்தது.
 
தவிர, காலத்துக்குக் காலம் தமிழின அழிப்புகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறின. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
இந்நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை முகிழ்ந்தது.
 
ஆயுதப் போராட்ட சிந்தனைகூட தமிழனத் தலைவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட நிலையில்; தமிழ் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலையைத் தரும் என தமிழ் தலைவர்கள் மேடையேறி உசுப்பேத்திய நிலையில் ஏற்பட்டதுதான்.
 
இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம் என்ற கட்டத்தில் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை தமிழர் தாயகத்தில் தோற்றமுற்றன.
 
அவற்றின் பாதை பல வழிப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மண் மீட்புப் போரை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்பாக நின்று நிலைத்தது.
 
ஒருபுறம் இன யுத்தம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால் தீர்வை எட்டுவதற்கு எவரும் உடன்பட்டிலர். ஈற்றில் உலக நாடுகளின் உதவியோடு வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகக் கொடும் போர் நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயிற்று.
 
தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு  பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று அழித்தது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது.
 
சரணடைந்த புலிப் போராளிகள் எங்கே? என்பது இன்றுவரை தெரியவில்லை.
 
நிலைமை இதுவாக இருக்கையில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிப்பதென்றால் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்று நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் எனில், அதன் பொருள் புரியவில்லை.
 
போரில் அழிக்கப்பட்ட  ஓர் அமைப்புத் தொடர் பில் விசாரணை நடத்துவது எங்ஙனம் சாத்தியமாகும்?
 
அதேநேரம் சட்டப்படி காப்பாற்ற வேண்டிய படையினரிடம், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்து வதே பொருத்துடையதும் நியாயமானதுமாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15018&ctype=news

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுகுடுப்பைக் கும்பலுக்கு யாரோ (யார் ஹிந்திய எஜமானர்கள் தான். நக்கிறதுக்கு.. பொறுக்கிறதுக்கு.. கூனுறத்துக்கு குறுகிறதுக்கு.. போற இடமெல்லாம் எஜமானர்கள் வாய்க்கிறது... சகஜம் தானே..)     சொல்லிக்கொடுத்துள்ள ராஜதந்திரம் என்ன என்றால்.. உங்கள் சிங்கள எஜமானர்களை செல்லக் கிள்ளுப் பண்ணனுன்னா.. சொந்த இனத்துக்கு தலையில் சம்மட்டியால் அடிச்சு வீழ்த்தனும். நீங்களே உங்கள் இனத்தை அழிக்க உதவனும்.. அப்ப தான்.. நீங்கள் எங்களையும்.. உங்கள் சிங்கள எஜமானர்களையும் மகிழ்வித்து.. சுயபோக.. சுகபோகங்களை அனுபவிக்கலாம்.

இது தான் சம் சும் மாவை கும்பலின் ராஜதரித்திரம். இது தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மீள முடியாத அடிமை நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பது மட்டுமே.. யதார்த்தமாகும்.

புலிகளை அழித்ததும் இந்தா தீர்வு என்றார்கள்.. இன்று... தீர்வு.. தமிழர்களை அழி என்றாகி வந்து நிற்கிறது. இந்தக் கும்பலின் ராஜதரித்திரத்தின்.. முடிவு இது.

இந்தக் கும்பலை முதலில் தமிழ் மக்களுக்கான அரசியலை தீர்மானிக்கும்.. தளத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியது தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்கு இப்போ.. மிக முக்கியமாக அமைகிறது. இந்தக் கும்பலுக்கு வால்பிடிக்கும் அனைவரும்.. வெளியேற்றப்படனும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கு அரசியல் சமூக.. பொருண்மிய விடிவு என்பது ஈழ மண்ணில்.. எனி அமைய வாய்ப்பே இல்லை. அந்த வாய்ப்பை.. இல்லாமல் செய்வதே இந்த கும்பலின் அரசியலாகும்.  இது மிகவும் ஆபத்தானது. புலித் துவேசிகள்.. இதுக்கு விசிலடிக்கலாம்.. ஆனால்.. இல்லாத புலிகளை சம்பந்தப்படுத்தி.. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையும்.. பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு.. வழங்கப்பட வேண்டிய உரிமையையும்.. பறிப்பது.. ராஜதந்திரம் அல்ல.. ராஜதரித்திர அணுகுமுறை... இது மொத்த தமிழ் இனத்துக்குமே பாதகமான விளைவுகளையே உண்டு பண்ணும். ஒரு சிலர் சுகபோகங்களை அனுபவிக்கலாம். அவ்வளவும் தான். 

சம் சும் மாவை கும்பல்.. இதை தான் செய்யும் என்று அப்பவே சொல்லிட்டார்கள்.. நாமும் இங்கு யாழில் சொல்லி இருந்தோம். இது ஒன்றும்.. எதிர்பார்க்காதது அல்ல. ஆனால்.. மக்கள்.. இன்னும் இவர்களை நம்பும் முட்டாள்களாக இருப்பது தான் வேடிக்கை. 

இவர்களின் சிந்தனை ஓட்டம்.. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த சிந்தனை ஓட்டமாக அன்றி.. அன்று ஒப்புக்காவது சில இனத்துக்கு விசுவாசமாக சிந்திக்கச் செய்யப்பட்டார்கள்.. இன்று அந்த ஒப்பும் இழந்து.. எஜமான விசுவாச நோக்கமும்.. சுயநலமுமே இவர்களிடம் பழையபடி மண்டி இட்டுக் கிடக்கிறது. இவர்களை மக்கள் எனியும் சரியாக இனங்கண்டு.. அரசியல் தளத்தில் இருந்து விரட்டி அடிக்கவில்லை என்றால்.. சரியான பதில் பிரதியீடுகளை செய்யவில்லை என்றால்... ஈழத்தீவில் தமிழ் மக்களின் இருப்பும் அரசியலும் நிச்சயம் முற்றாக நாசம் செய்யப்படும்.. சிங்கள ஹிந்திய வல்லாதிக்க எஜமானர்களாலும்.. அவர்களுக்கு வால்பிடிக்கும் எமது இன சுயபோக.. சுகபோகத் துரோகிகளாலும். :rolleyes:tw_angry:

மக்கள் தான் இப்போ தமது தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்களாகி உள்ளனர். 

அவர்களை வழிநடத்த.. நிச்சயம்.. நல்ல சிந்தன உள்ள இளைஞர்கள் தாயகத்திலும்.. புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர்.

உலகம்.. வன்முறைக்கு எதிராக நிலை எடுத்துள்ள நிலையில்.. நாம்.. எமது மூலோபாயங்களை மாற்றி.. எமது மக்களின் அரசியல் சமூக.பொருண்மிய.. தேச விடுதலை என்பதை.. சாத்தியமாக்கும் எல்லா மாற்றுவழிகளையும் பாவிப்பதே இன்றுள்ள நல்ல தெரிவாகும். இதற்கு ஒரு குழுவாக அன்றி பல குழுவாக இயங்கினாலும்.. இலக்கை ஒன்றாக்கினால்... இன்னும் எதிரிகளை சமாளிப்பது இலகுவாகும்.  ஆனால்.. இனம்.. தேசம். என்ற கொள்கைப் பிடிப்பில் இருந்தும்.. அடைய வேண்டிய இலக்கில் இருந்தும்.. விலகாத.. நல்ல நோக்கம் அங்கு நிலையாக இருந்தால்.. வெற்றிகள் நிச்சயம் அமையும். மக்கள்  எனி இது தொடர்பில் தான் சிந்திக்கனும். பழைய பஞ்சாங்களையும்.. அவற்றை ஒட்டி உள்ள.. புதிய சந்தனம்.. குங்குமங்களையும் நம்பி.. எமது இனம்.. தேசம்.. தனது உரிமையை ஒருபோதும் அடையாது. அப்படி அடையச் செய்வதற்கான எந்த வலுவும்.. உந்தப் பஞ்சாங்கங்களிடம் இல்லை. அதையே.. கடந்த.. 8 வருடங்கள் எமக்கு உணர்த்தி உள்ளன. இதுவே காலம் கடந்தது தான். எனியும் காலம் கடத்துவதும்.. இந்த கோமாளிகளுக்கு..இனத்துரோக.. கூத்துக்காட்ட இடமளிப்பதும்.. ஆபத்தான விளைவுகளையே உண்டு பண்ணும்.

ஒன்றில்.. இந்தக் கோமாளிகள்.. தம்மை திருத்திக் கொள்ள மக்கள்.. தம்மை தம் வலுவை பாவிக்கனும்.. இல்லை.. இவர்களை.. மக்கள் தம் தீர்ப்பால்.. அரசியல் களத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். அதேவேளை.. சோரம் போகாத..சரியான பிரதியீடுகளை செய்தும் கொள்ளவும் வேண்டும்.

இது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். 

நன்றி.. நெடுக்காலபோவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2017 at 2:42 PM, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

செத்துப் போன உங்க ஆயா நடத்தை கெட்டவள் / கொலைகாரி என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? 

* முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-24 at 3:49 AM, விசுகு said:

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

உவையள் தாங்களே தங்களுக்கு ஒளிவட்டமிருக்கு என்று நினைச்சுகொண்டு கதைக்க வெளிக்கிடுற்வையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

Link to comment
Share on other sites

43 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

 

5 hours ago, nunavilan said:

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

தமிழருக்கு மறதி அதிகம் 
சுமந்திரன் ஏன் அரசிலுக்கு கொண்டு வரப்பட்டார் என்பதே மறந்து போச்சு.

கோத்தபய எல்லோரையும் கடாசிய நேரத்தில் ... தமிழ்த்தேசிய கூடடமிப்பிலும் கை வைக்கலாம் 
எனும் நடுக்கம் எல்லோருக்கும் இருந்தது. சிங்கள மூத்த பத்திரிக்கையாளர்களையே களை 
எடுத்துக்கொண்டு இருந்த நேரம் ....... சம்மந்தருக்கு ஒரு குலை நடுக்கம் இருந்தது 
தன்னையும் ஏதும் காரணம் சொல்லி உள்ளே போடடால் என்ன செய்வது என்று.

அப்போதான் கொழும்பு வாழ் மகிந்த கூட்ட்டத்துடன் ஒட்டி உறவாடி கொண்டு இருந்த 
சுமந்திரன் தட்டு பட்டார் ......... அவரை கொண்டு கோத்தபாயவிட்கு செய்தி அனுப்பினார்.
நாங்கள் தேர்தலில் வெல்ல சும்மா அப்பிடி இப்படி பேசினோமே தவிர 
மற்றும்படி ....... நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்று 
அதை சுமந்திரன் சாதகமாக்கி .........புலி இல்லை ... இனி உயிருக்கு ஆபத்தும் இல்லை 
என்று தெரிந்த பின்தான் பின் கதவால் உள்ளே வந்தார்.

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

 

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

 டி.பி. எஸ் ஜெயராஜ் கனடாவில் இலங்கைத் தூதரகத்துடன் சேர்ந்தியங்கியவர் என்றும் அவர் சுமத்திரனின் உறவினர் என்றும் , சுமத்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் எனறும் நானும் எங்கோ படித்துள்ளேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.