Jump to content

பசி பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசியும் பார்வையும்

1210935614_1024x768_scary-red-eyes.jpg

 

திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம்  தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான்

 

அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள் இருவரும் என்னை இருக்கையை பார்க்கும்படி விட்டுவிட்டுசென்றுவிட்டார்கள். நான் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றியதில் அவள் அகப்பட்டாள். ஐயோ அவளை எனக்குத் தெரியும் ஆனால் எங்கு எவ்வாறு அவள் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அவள் கறுப்பினத்துப் பெண், கட்டுக்கோப்பான உடல்வாகு, உரத்த குரலில் ஆளுமை பலமாகத் தெரிய… பக்கத்தில் இருந்தபெண்ணிடம் ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் மொழியை நான் முன்பு அவதானித்திருப்பதாக உள்ளம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிதமே இல்லாமல் நான் அவளை யார் என்று மீட்டெடுக்க மிக உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருந்தேன். ஏதேச்சையாக திரும்பிய அவள் பார்வை என்னைக் கண்டதும்  சட்டென்று நிலைத்தது.  அவளுக்குள்ளும் குழப்பம் தேங்குவதை உணர முடிந்தது. வெட்கநிலை அற்றதான ஏதோ ஒன்று மனதில் உறுத்த என் பார்வையை விலத்திக் கொண்டேன். ஆனால் விலகிய நோக்கலுக்கு அப்பால் மனம் தேடலுக்குள் இருந்து வெளிவர மறுத்தது.

 

உணவு வாங்கச் சென்ற பிள்ளைகள் உணவுடன் வர அவர்களுடன் கலகலப்பாக கதைபேசிக்கொண்டு உண்ண ஆரம்பித்தேன். ஏதோ உறுத்தியது மீள அவளைப்பார்த்தேன். என்னையே விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவள் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தாள். எனக்கு புரிந்துவிட்டது.  அவள்  பார்வை அவளை எனக்கு 23 வருடங்களுக்குப் பின்னர் மீளவும் ஞாபகப்படுத்திவிட்டது. அவளும் நானும் ஒரே செல்டரில் இருந்தோம். அவள் 3 பிள்ளைகளுடன் தனித்திருந்தாள். 30 களின் மத்தியில் நீண்ட தனிமையில் அவ்விடத்தில் நீண்ட காலமாக வாழ்ந்திருந்தாள்.  எனக்கும் அவளுக்கும் படுக்கைகள் தவிர மற்றைய அனைத்தும் ஒரே பாவனையிடங்களாயிருந்தன. பார்த்தாலே பரவிக்கொள்ளும் நெருப்புப்போல மிக விரகமாக என் அருகே அவள் இருந்தாள். அவள் வயதை அவள் உணர்வை என்னால் அப்போது விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவளைப்பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கும். அவளுக்கும் எனக்குமான குளியலறையைப்பாவிக்கும் போதெல்லாம் அருவருப்பாக இருக்கும். அவளிடம் இருந்து விலகி  ஓட செல்டரின் மேலதிகாரியிடம் முறையிட்டேன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய செயல்களை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள். எனக்கு அவை இயல்பாகபடவில்லை. அதை இயல்பென்று எடுத்துக்கொள்ள முடியாமல்  நான் செல்டரைவிட்டு வெளியேறினேன். அன்று அவ்விடம் விட்டு வெளியேறி இருக்காவிட்டால் இன்று அந்தத் தகிக்கும் பார்வைக்குள் பலியாகியிருப்பேன்.

இன்னும் 23 வருடங்கள் கடந்தபின்னும் அவளுக்குள்ளிருந்த அவன் என்னை பசியோடு பார்த்துக்கொண்டிருக்க நான் அவசர அவசரமாக உணவை விழுங்கிக் கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினேன். பின்னால் அவன் பார்வையில் இருந்த நெருப்பை மோலின் கண்ணாடிகள் என் முனனே கண் மறையும்வரை காட்டிக்கொண்டிருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வல்வை சகாறா said:

பசியும் பார்வையும்

1210935614_1024x768_scary-red-eyes.jpg

 

திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம்  தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான்

 

அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள் இருவரும் என்னை இருக்கையை பார்க்கும்படி விட்டுவிட்டுசென்றுவிட்டார்கள். நான் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றியதில் அவள் அகப்பட்டாள். ஐயோ அவளை எனக்குத் தெரியும் ஆனால் எங்கு எவ்வாறு அவள் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அவள் கறுப்பினத்துப் பெண், கட்டுக்கோப்பான உடல்வாகு, உரத்த குரலில் ஆளுமை பலமாகத் தெரிய… பக்கத்தில் இருந்தபெண்ணிடம் ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் மொழியை நான் முன்பு அவதானித்திருப்பதாக உள்ளம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிதமே இல்லாமல் நான் அவளை யார் என்று மீட்டெடுக்க மிக உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருந்தேன். ஏதேச்சையாக திரும்பிய அவள் பார்வை என்னைக் கண்டதும்  சட்டென்று நிலைத்தது.  அவளுக்குள்ளும் குழப்பம் தேங்குவதை உணர முடிந்தது. வெட்கநிலை அற்றதான ஏதோ ஒன்று மனதில் உறுத்த என் பார்வையை விலத்திக் கொண்டேன். ஆனால் விலகிய நோக்கலுக்கு அப்பால் மனம் தேடலுக்குள் இருந்து வெளிவர மறுத்தது.

 

உணவு வாங்கச் சென்ற பிள்ளைகள் உணவுடன் வர அவர்களுடன் கலகலப்பாக கதைபேசிக்கொண்டு உண்ண ஆரம்பித்தேன். ஏதோ உறுத்தியது மீள அவளைப்பார்த்தேன். என்னையே விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவள் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தாள். எனக்கு புரிந்துவிட்டது.  அவள்  பார்வை அவளை எனக்கு 23 வருடங்களுக்குப் பின்னர் மீளவும் ஞாபகப்படுத்திவிட்டது. அவளும் நானும் ஒரே செல்டரில் இருந்தோம். அவள் 3 பிள்ளைகளுடன் தனித்திருந்தாள். 30 களின் மத்தியில் நீண்ட தனிமையில் அவ்விடத்தில் நீண்ட காலமாக வாழ்ந்திருந்தாள்.  எனக்கும் அவளுக்கும் படுக்கைகள் தவிர மற்றைய அனைத்தும் ஒரே பாவனையிடங்களாயிருந்தன. பார்த்தாலே பரவிக்கொள்ளும் நெருப்புப்போல மிக விரகமாக என் அருகே அவள் இருந்தாள். அவள் வயதை அவள் உணர்வை என்னால் அப்போது விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவளைப்பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கும். அவளுக்கும் எனக்குமான குளியலறையைப்பாவிக்கும் போதெல்லாம் அருவருப்பாக இருக்கும். அவளிடம் இருந்து விலகி  ஓட செல்டரின் மேலதிகாரியிடம் முறையிட்டேன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய செயல்களை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள். எனக்கு அவை இயல்பாகபடவில்லை. அதை இயல்பென்று எடுத்துக்கொள்ள முடியாமல்  நான் செல்டரைவிட்டு வெளியேறினேன். அன்று அவ்விடம் விட்டு வெளியேறி இருக்காவிட்டால் இன்று அந்தத் தகிக்கும் பார்வைக்குள் பலியாகியிருப்பேன்.

இன்னும் 23 வருடங்கள் கடந்தபின்னும் அவளுக்குள்ளிருந்த அவன் என்னை பசியோடு பார்த்துக்கொண்டிருக்க நான் அவசர அவசரமாக உணவை விழுங்கிக் கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினேன். பின்னால் அவன் பார்வையில் இருந்த நெருப்பை மோலின் கண்ணாடிகள் என் முனனே கண் மறையும்வரை காட்டிக்கொண்டிருந்தன.

ம்ம்ம் டொரோண்டோவில் நாளை "ப்ரைட் வீக்" அதற்கு முத்தாய்ப்பாய் சகாறா அக்காவின் இந்த குறுங்கதை. 
இன்று பச்சைக்கு தட்டுப்பாடு  நாளை :)tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றதுமல்லிகை இப்பதான் நீண்ட நாட்களின் பின்பு பூக்கின்றது....பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இன்றுதான் பார்த்தேன் கதை , முற்றத்து மல்லிகை என்று ரெண்டு ஓடிக்கொண்டு இருப்பதால் சில குழப்பம் ஏற்படுகிறது எது சுய் ஆக்கம் எது அடுத்தவர் ஆக்கம் இங்க வந்தது என்ற குழப்பம்  அதான் நானும் கவனிக்கல போலும் தெரிகிறது 

 

கண்கள் வேட்டையாடும் அது  மற்ற கண்ணுக்கு மட்டுமே புலப்படும்  ஒன்றை  எதிர்பார்த்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பதான் பார்த்தேன்...., பசியை விட பார்வை கொல்லுது....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.