Jump to content

சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1

சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1

- சொர்ணவேல்

நான் ‘விம்பம்’ திரைப்பட விழாக்கள் மூலமாக தற்காலக் குறும்படங்களில் காணக்கிடைக்கும் உருவ, உள்ளடக்கம் சார்ந்த சில அவதாணிப்புகளைப் பகிர விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் பொதுவாகக் காணப்படும் முதிர்ச்சி என்னவென்றால், குறும்படத்துக்கான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதற்கான உருவ - உள்ளடக்கத்துக்கான தேடலைச் சொல்லலாம். முன்னர் வந்த படங்களில் ஒரு முழு நீளப் படத்துக்கான கருவை வைத்துக்கொண்டு பலர் குறும்பட உருவத்துக்குள் அதை அடைக்கச் சிரமப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாப் படங்களின் மீதும் அத்தகைய விமர்சனத்தை வைக்க முடியாது எனினும், பல படங்களில் அந்தப் போக்கைக் கண்டிருக்கிறேன்.

இந்த வருடம் வந்த குறும்படங்கள் சில நீளத்தில் பெரிதாக இருந்தபோதிலும் கால அளவில் சுருக்கமாகவும், அதே நேரத்தில் அவற்றின் குறும உள்ளடக்கத்தினால் காத்திரமான குறும்படமாக உருப்பெறக்கூடிய சாத்தியங்களையும் கொண்டிருந்தன. இன அழிப்பு எனும் சோகம் சாதாரணமானது அல்ல. அன்றைய காலத்தில் வந்த படங்களின் சாராம்சமான பேரிழப்பின் ஆதங்கத்தின் வெளிப்பாடு குறும்படச் சட்டகத்தை மீறிச்சென்றதை அன்றைய காலகட்டத்திலேயே நான் பெரிய குறையாக நினைக்கவில்லை. எடுத்துக்கொண்ட பொருளின் வீச்சு, கட்டுக்கடங்காத கதையாடலாக விரியும்போது அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று ஒரு குழுவாகப் பார்த்து, அந்த இயக்குநர்கள் / எழுத்தாளர்களுடன் உரையாடினோம். இந்த வருடம் வந்த குறும்படங்களின் தேர்ச்சி என்பது, குறும்பட உருவத்துக்கு ஏற்ற உள்ளடக்கத்தை அவை கொண்டிருந்த விதம்தான்.

1497983427a.jpg

குறும்படத்துக்கும் ஒரு சிறுகதைக்குமான தொடர்பைத் திரைக்கதையைப் பற்றி எழுதுபவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். நானும் எழுதியிருக்கிறேன். எப்படி ஒரு குறும்படம் சிறுகதைக்கான அழகியல்களான துரித அறிமுகமும், பிரச்னைக்கான காரணத்தையும், காத்திரமான முடிவையும் தனது ஆதாரமாகக் கொண்டுள்ளது என்று. எல்லாவற்றுக்கும் மேலாக அதன் உள்ளடக்கத் தேர்வு கவிதையாகவோ, நமது அன்றாட வாழ்வின் அசாதாரண அவதானிப்பாகவோ, கூர்மையான அரசியல் விமர்சனமாகவோ விரித்தெடுக்கக்கூடிய சாத்தியங்களைப் பெற்றிருந்தால், இலக்கை அடைவது சுலபமாகி விடுகிறது. சினிமாவின் தொழில்நுட்பத் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் குறும்படம் ஒரு களமாகத் திகழ்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சிறிய டிஎஸ்எல்ஆர் (DSLR) டிஜிட்டல் கேமராக்களைக்கொண்டு ஹை டெபினிஷனில் (HD- High Definition) படமெடுக்கக்கூடிய சாத்தியங்களை அளித்து, நிறைய குறும்படங்கள் தயாரிக்க உதவி புரிந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் படங்களை ஹை டெபினிஷன் வீடியோவில் எடுக்க மட்டுமல்ல; தொகுத்து யூடியூப், விமியோ போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களிடம் நாமே எடுத்துச் செல்லவும் உதவுகிறது. இது, ஊடக வெளியில் ஒரு ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நாம் எடுக்கும் படத்துக்கான செலவை இத்தகைய சமூக வலைப்பின்னல் தளங்களின் வாயிலாக மீட்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

1497983427b.jpg

உதாரணத்துக்கு, சிபிஎம் (CPM என்பது காஸ்ட் பெர் தௌசண்ட் - Cost Per 1000 என்கிற விளம்பரத்துறை சார்ந்த பதமாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. M என்பது ரோமன் நியுமெரலில் 1000-த்தைக் குறிக்கும்) என்று சொல்லப்படுகிற ஆயிரம் பேர் சுட்டியை தட்டி (1000 ஹிட்ஸ்) பார்க்கும்போது எட்டு டாலருக்குக் குறைவாக விளம்பரங்களின் மூலம் வரும் வருவாயை யூடியூபின் உரிமையாளரான கூகுள் நிறுவனம் 45/55 சதவிகிதம் என்று தனக்கும், உள்ளடக்கத்தை அளிப்பவர்/பதிவேற்றம் செய்பவருக்கான சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. ஒரு லட்சம் ஹிட்ஸுக்கு 800 டாலர்களுக்கும் குறைவாக - தோராயமாக 760 டாலர்கள் கிட்டும். 760 X 65 என்று கணக்கிட்டால், தோராயமாக 49,400 ரூபாய் கிடைக்கும். அதிலும் பிறர் காப்புரிமை பெற்ற இசையைப் பயன்படுத்தினால் அந்த வருவாய் கிட்டுவதில்லை. அப்லோடு செய்வதிலும் சிக்கலேற்படும். சில ஆயிரம் பேர் மட்டும் பார்க்கும்போது அதன் மூலமான வருவாயைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. கூகுள் யூடியூபின் மூலம் விநியோகம் மற்றும் பார்வையாளருக்கான வெளியை விஸ்தரித்திருப்பது பாராட்டுக்குரியதே.

1497983427c.jpg

ஆயினும், கூகுள் தயாரிப்பாளர்கள்/இயக்குநர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சதவிகிதமும் நாம் பதிவேற்றம் செய்பவர்கள்/நுகர்வோர்கள் என்ற தகுதியினடிப்படையில் குரல் கொடுத்தோம் என்றால் உயர வாய்ப்பிருக்கிறது. ஆறு கோடிக்கும் மேலிருக்கும் தமிழர்கள் ஒரு லட்சம் சொடுக்குகள் மூலம் அரிய ஆவணப்பட/குறும்பட/மாற்று முயற்சிகளுக்கு உதவக்கூடிய சூழலை, சமூக வலைதளங்கள் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும். நான், எனது தங்கம் (Thangam, 1995), ஐ.என்.ஏ (INA: The Indian National Army, 1996), வில்லு (Villu/ The Bow, 1997), கருகத்திருவுளமோ (Karugathiruvulamo, 1999) போன்ற படங்களைத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், வீடியோ டெக்குகளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ராயபுரம், அம்பத்தூர் போன்ற இடங்களில் அரசுப் பள்ளிகளில் போட்டுக்காட்டியது நினைவிலோடுகிறது. அன்று, ஆவணப்படங்ளுக்கான எளிய, சீரான விநியோகம் பற்றி கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. ஆயினும், இன்றைய நகர வெளிகளிலுள்ள ‘ஹாட் - ரியல் எஸ்டேட்’டாக மாறியுள்ள தியேட்டர்களில் அல்லாமல் டிஜிட்டல் டெக்னாலஜி அளிக்கும் சாத்தியங்களில் நமது மாற்றுவெளிகளுக்கான தேடுதல் அமைய வேண்டும். எப்போதும் போலவே ‘விம்பம்’ திரைப்பட விழாவில் பங்கேற்ற இளைஞர்களிடமும், இன்றைய சூட்டிப்பான இளைய தலைமுறையினரிடமும் அவர்களின் திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை உள்ளவனாகவே இருக்கிறேன். இத்தகைய சூழலில் குறும்படம் எடுப்பதன் பயனென்ன என்று ஆராய்வோம்.

ஒரு குறும்படமெடுத்துத் தயாளிப்பாளர்களிடம் காட்டி, முழு நீளப் படமெடுப்பதற்கான சாத்தியங்கள் தற்சமயமுள்ளது. இன்றைய சில முன்னணி இயக்குநர்கள் அவ்வாறு வந்தவர்கள்தான். அத்தகைய போக்கு குறும்படமெடுக்கும் இளைய தலைமுறையினர்களிடம் இருப்பது தவிர்க்க முடியாதது. குறும்படங்களுக்கென விநியோக முதலீட்டை லாபகரமாக மீட்கக்கூடிய சாத்தியங்கள் இல்லாதபட்சத்தில், அதன் மூலமாக வேறு இலக்குகளை அடைவது ப்ராக்டிக்கலான விஷயமே. முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளவெளிகள் ஆக்குபேஷன் வால் ஸ்ட்ரீட் அரப் ஸ்ப்ரிங் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற போராட்ட அரசியலுக்கு வழிவகுக்கும் அதேவேளையில், தற்கால மார்க்சீய அறிஞர்களான ரோபர்ட்டோ சிமானோவ்ஸ்கி (Prof. Roberto Simanowski, City University of Hong Kong) போன்றவர்கள் கூறுவதைப்போல, நாம் இன்று டிஜிட்டல் கேபிட்டலிசத்தின் ஊடாக வாழ்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது. அத்தகைய ஒரு சூழலில், டிஜிட்டல் வெளிகளைப் பயன்படுத்தி, மைய நீரோட்ட சினிமாவுக்கான பயிற்சிக்களமாகக் குறும்படங்களை எண்ணுவது இயல்பானதே. மேற்கேயுள்ள வணிக சினிமாவும் சரி, கிழக்கேயுள்ள மைய நீரோட்ட சினிமாவும் சரி... இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத் தேர்ச்சியையும் கதை சொல்லலில் நுண்மையான மெருகையும் எதிர்பார்க்கின்றன. அதற்கு, குறும்படமென்பது சாதகமான வெளியே.

1497983427d.jpg

உதாரணத்துக்கு இந்த விழாவில் பங்கேற்கும் அறமுற்றுகையைக் (Aramutrugai)கூறலாம். பழியை மைய கண்ணியாகக்கொண்டு, தொடர்ந்து விழும் கொலைகள் மூலம் கதாபாத்திரங்களுள் ஊடுபாவும் உறுதியற்ற தற்கால இணைப்பைச் சொல்லும் அறமுற்றுகையைச் சிவலிங்கம் சிவராஜின் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் மயன் காந்தன் இயக்கியுள்ளார்.

1497983427e.jpg

இத்தகைய படங்களுக்கு மாறாகக் குறும்படத்தை அரசியலுக்காகவும், அதனுடைய தனித்துவத்தை முன்னிறுத்தும் விதமாகவும் படமெடுப்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்தவாறுள்ளது. அவர்கள் குறும்படம் மூலமாகவே தங்களது வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கொள்கிறார்கள். தொடர்ந்து, தளராது இயங்குவதால் இவர்களின் படங்களில் தொழில்நுட்பம் மட்டுமல்லாது, சினிமொழியும் இயல்பாக உருவ - உள்ளடக்கத்துக்குத் தகுந்தவாறு உள்ளது. உதாரணத்துக்கு, பிரெஞ்சு நண்பர்களான பாஸ்கி மன்மதன், சதாபிரணவன் மற்றும் அவதாரம் அமைப்பைச் சார்ந்தவர்களையும் மற்றவர்களையும் சொல்லலாம்.

1497983427f.jpg

இண்டி கோ கோ (Indie Go Go) அல்லது கிக்ஸ்டார்ட்டர் (Kickstarter) போன்ற சமூகப்பின்னல் தளங்கள் மூலமாகச் சிறிது சிறிதாகப் பணத்தை முதலில் நண்பர்கள் மூலமும் உறவுகளின் மூலமும் ஆரம்பித்துக் கிடைக்கும் சிறிய பொருளுதவியைக் கொண்டு படத்தைச் சிறிதளவு எடுத்து, பின்னர் அதை யூடியூப் மூலமாகவோ அல்லது விமியோவில் பாஸ்வேர்ட்டுடன் பாதுகாப்பாக வெளியிட்டு, வெளியில் பொதுமக்களிடமும் எடுத்துச்சென்று கிடைக்கும் முதலீட்டை வைத்துக்கொண்டு படத்தை முடிக்கலாம். நண்பர் லெனின் சிவம் தனது புகழ்பெற்ற ‘கன் அண்ட் த ரிங்’கிற்குப்(Gun And The Ring) பிறகு அடுத்தப் படத்தை முடிக்கும் தருவாயிலுள்ளார். அவரது கன் அண்ட் த ரிங்கை ஹீரோ டாக்கீஸின் வலைதளத்தில் பார்த்து நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கலாம்.

1497983427g.jpg

அதைப்போலவே, நண்பர் சுஜீத் ஜீ தனது த லாஸ்ட் ஹால்ட் (The Last Halt / கடைசி தரிப்பிடம், 2016) எனும் முழு நீளப்படத்தை எடுக்குமுன் எடுத்த குறும்படத்துக்குப் பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறோம். அவரது லாஸ்ட் ஹால்ட்டின் லயமும் அவரைக் கதைசொல்லும் முன்னணிக் கலைஞராக அறிவிக்கிறது. யூடியூபில் அவரது படத்தைப் பார்த்து நாம் நமது பங்களிப்பை ஆற்றலாம். அதைப்போலவே கவிதாயினி/எழுத்தாளர் கலைஞர் சுமதி அவர்களின் நியோகா ஒரு புதிய களத்தில் இயங்குகிறது. பெண்ணிய நோக்கு மட்டுமல்ல, மனோதத்துவத்தை மையமாகக் கொண்டுள்ள அதன் கதையாடலும், நடிகர்களிடம் அவர் வேலைவாங்கியிருக்கும் விதமும் பாராட்டுக்குரியது.

1497983427h.jpg

தனது குறும்படங்கள்மூலம், பல பரிசுகளைப் பெற்றுள்ள சதாபிரணவனின் செரெஸ் (Cérès) அவரது கியரில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டுகிறது. அவர் இப்போது நீள்படத்துக்கான முழு தகுதியுடன் அதில் தனது முனைப்பைச் செலுத்துகிறார். ஸ்டேட் அண்ட் ரிலீஜன், அரசு மற்றும் மதம் எப்படி இதயமற்று மக்களை அழிக்கிறது என்பதை செரெஸில் (Cérès) தேனுகா கந்தராஜாவின் அருமையான நடிப்புடனும் சினிமொழியின் நுட்பத்துடனும் பதிவுசெய்துள்ளார். தம்பி பாஸ்கி தொடர்ந்து இயங்குபவர். அவரது ஆற்றலும் ஆர்வமும் சினிமாவில் நம்பிக்கையுள்ளோருக்கு உந்துதலளிப்பன.

1497983427i.jpg

தம்பி பாஸ்கி மற்றும் நிகிதா ரீகனின் அருமையான நடிப்பிலும் எம். பாஸ்கரின் இயக்கத்திலும் உருப்பெற்றுள்ள பூக்களைக் கொய்யாதீர்கள் (Pookkali Koyyatheergal)முக்கியமானது.

1497983427j.jpg

தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமும், கம்ப்யூட்டர்களின் மூலமும், கைபேசிகளின் மூலமும் பரவும் (ஆண்களின்) வக்கிரத்தன்மை, போரில் சிக்கி, இழப்புகளுக்கு ஆளான பெண்களை மீண்டும் தீவிர ஒடுக்கத்துக்கும் கொடுமைக்கும் உள்ளாக்குகிறது என்பதை மனிதம் வறட்சியடைந்து பதற்றம் நிறைந்துவரும் இன்றைய சமகால வாழ்வின் பின்னணியில் காத்திரமாகச் சித்திரித்துள்ளது.

1497983427k.jpg

குறும்படத்துக்கு ஏதுவான அரசியல் உள்ளீடுகள் நிறைந்த அழகியலில் பரிணமித்த படங்களாக இலங்கையிலிருந்து சிவலிங்கம் சிவராஜ் இயக்கத்தில் உதித்துள்ள செருக்களம் (Cherukkalam), மதி சுதாவின் பாதுகை (Paathugai) மற்றும் பூனே திரைப்பள்ளியைச் சார்ந்த பிரதீபன் செல்வரத்தினத்தின் சருகுவெளியைக் (Saruguveli/ The White Feather) கூறலாம்.

1497983427l.jpg

பிரதீபனின் காத்திரமான இயக்கத்தில், சேவா சவானின் அருமையான நடிப்பில், வெள்ளை வேன் ஒன்றில் பதினைந்து வருடத்துக்கு முன் அரசினால் கூட்டிச்சென்று, இன்றுவரை வீட்டுக்குத் திரும்பாத தனது தந்தைக்காக சதா ஏங்கும் மூதாட்டியான பாட்டியை, மரணிக்கும் தறுவாயில்கூட விட்டுப்போக மனமில்லாத பேரனின் அன்பை சித்தரிக்கும் படம் சருகுவெளி.

1497983427m.jpg

அருமையான தொகுப்பை உள்ளடக்கிய சருகுவெளி, அப்பேரனின் கவித்துவம் நிறைந்த அன்பின் ஊடாக, இன்றைய உறவுகளின் நீர்த்துப்போன தன்மையைத் தனது அழகியலின் மூலம் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. ஜெ.சரத்தின் புல்லாங்குழலும் ஒலியமைப்பும் பிரதீபனின் அருமையான படத்துக்கு வலுசேர்க்கிறது.

1497983427n.jpg

தனது பாதுகையை விட்டுச்சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பாத போராளி மகனுக்காக ஏங்கும் தாய்க்கும், போரிலிருந்து மீண்டு வந்து தனிமையில் வாடும் அப்போராளியின் நண்பனுடனான உறவையும், அந்தத் தாய் தனது மகனின் நண்பனை தனது மகனாகப் பாவிப்பதையும் தீர்க்கமான குறும்பட அழகியலுக்கு ஏற்ற திரைக்கதையின் மூலம் சொல்கிறது மதி சுதாவின் பாதுகை.

1497983427o.jpg

திரைக்கதையும், இயக்கமும் பாதுகையை உருவகமாக மென்மையாகவும் ஆழமாகவும் பதிவுசெய்துள்ளது. தாயாக நடித்திருக்கும் ஜஸ்மின் (பவுன் அம்மா) தனது பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார். அவர் படத்தின் இறுதியில் போராளி மகனின் பாதுகையைத் தனது மடியில் கட்டிச்செல்வது மனதில் நிற்கிறது.

1497983427p.jpg

சிவலிங்கம் சிவராஜின் செருக்களம் கிராமத்திலுள்ள சிறிய கிரிக்கெட் மைதானத்தை மையமாகக்கொண்டு, போரினால் பிரியும் இளம் கிரிக்கெட் நண்பர்களின் மூலம் போரின் இழப்பை அவ்விள மனதுகளில் ஏற்படும் பிரிவின் சோகத்தைக்கொண்டு பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் போர் முடிந்து, அந்த மைதானத்தில் நண்பர்கள் கூடும்போது அங்கே ஒரு வேலி போடப்பட்டு, ராணுவம் அம்மைதானத்தை வளைத்துக்கொண்டது குறும்படத்துக்கான முடிவென்பது சிறுகதையைப் போல உணர்வெழுச்சியுடன், அரசியலையும் சுட்டி மனதை வருடி நெஞ்சையடைப்பதாக அமைந்துள்ளது.

1497983427q.jpg

சிவராஜ் இலங்கைக் கிராமமொன்றில் வீசிய பந்து, மதி சுதாவின் பந்து (Panthu) எனும் குறும்படத்தின் நாயகனின் கரங்களில் நகரத்திலுள்ள பூங்கா ஒன்றில் அவன் அமர்ந்திருக்கும் வேளையில் வந்து சேர்கிறது.

1497983427r.jpg

அந்த பந்துடன் நினைவுகளின் சிறகிலேறி பந்தைச் சுற்றிய தனது பால்ய காலத்துக்கும், அதன் மையமாக இருந்த தனது ஊரின் வெளிகளுக்கும் உறவுகளுக்கும், குறிப்பாகத் தனது உயிர் நண்பனுடனும் கிரிக்கெட்டுக்கான டென்னிஸ் பந்துகளை விற்கும் கடைக்காரருடனும் பயணித்து பந்துடனேயே மீண்டும் நகரவெளிகளில் வந்து அமர்ந்திருக்கிறான்.

1497983427s.jpg

தில்லையம்பாளையம் சுதாகரனெனும் மதி சுதாவின் இயக்கத்தில் விசையுறும் பந்தின் வீச்சு நம்மை ஈர்க்கிறது.

இதைப்போலவே என்னை ஈர்த்த இந்திய - இலங்கை கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த வள அழிப்பைப் பேசும் பார்டர் (Border), ஒரு மாற்றுத்திறனாளியின் உழைப்பின் அடிப்படையாக இருக்கும் மகிழ்ச்சியைப் பேசும் அறன் (Aran), வளர்ந்துவிட்ட டெக்னாலஜியால் வழிமாறிப்போகும் தலைமுறையைத் திரும்பிப் பார்க்கவைக்கும் மறைந்திருக்கும் சந்தோஷம்(Hidden Happiness) உள்ளிட்ட பல குறும்படங்களைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

தொடரும்...

கட்டுரையாளர் குறிப்பு:

1497983427t.jpg

சொர்ணவேல், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆங்கிலம் மற்றும் ஊடகத்துறைகளில் பணியாற்றுகிறார்.

கட்டுரையாளரின் பிற கட்டுரைகள்:

டெரென்ஸ் மலிக்கின் ‘நுண்ணிய குருதிக் கோடு’ – THE THIN RED LINE

An Occurrence at Owl Creek Bridge குறும்பட திறனாய்வு!

 

https://minnambalam.com/k/2017/06/21/1497983427

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.