Jump to content

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்


Recommended Posts

விற்க வீடு இருந்தா தானே............ :P

Link to comment
Share on other sites

  • Replies 764
  • Created
  • Last Reply

ப்ளஸ்- டூ-வில் நீங்க எந்த குரூப் எடுத்து படிக்க விருப்பப் படறீங்க ?

ஏ குரூப்பையும், பி குரூப்பையும் கூட்டணியா சேர்த்து வச்சிப் படிக்கலாம்னு இருக்கேன் சார்*

இராமு... நான் கொடுத்த பிரம்படி எப்படியிருந்தது ?

பாவம்... உங்க வீட்டுக்காரர் எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறhரோ ?

இந்த ஆளுக்கு பூலோகத்தில கணக்கு முடிஞ்சு போச்சே... ஏன் கொண்டு வரலை ?

சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஓட்டுப்போட வசதியாக 3 மாதம் உயிர் நீடிப்பு தந்துள்ளேன் பிரபு *

அந்த பைனான்ஸ் கம்பெனியில போட்ட பணத்தைத்திருப்பிக் கொடுத்துடுவாங்க *

அப்படியா ?

ஆமா * 15,000 ரூபா போட்டேன்... 00051ரூபா கொடுத்துட்டாங்க *

ஏண்டா, மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?

நான் சுத்தலையே... நடந்துதான் போறேன்*

ரெண்டு முறை மொய் எழுதுறீங்களே ஏன் ?

பந்தியில் நான்கு முறை சாப்பிட்டுட்டேன். அதனாலதான் *

யோவ் * எதுக்குய்யா மூட்டை துhக்குற ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கே ?

நீங்கதானே சார் சொன்னீங்க நேத்து * நிறைய ஃபைல்களை இன்டர் நெட்டில் இருந்து டவுன் லோட் பண்ண வேண்டியிருக்குன்னு *

சரத்குமாரை வச்சி மெகா சீரியல் தயார் செஞ்சா, என்ன பெயர் வைப்பாங்க தெரியுமா ?

சித்தப்பா *

ஞாபக மறதியால என் வாழ்க்கையே போயிடுச்சு *

என் மனைவி காணாமப் போனதை கம்ப்ளெயின்ட் பண்ணக் கூடாதுனு நினைச்சேன். ஞாபக மறதில கம்ப்ளெயின்ட் பண்ணிட்டேன் *

உன்கிட்டே கோவிச்சிக்கிட்டு உன்னை எரிக்கிற மாதிரி பார்த்திட்டுப் போறது யாருடி *

மை லவ்வர் சூரியன் *

ஏண்டா பாக்கெட் சாராயத்தை உடைச்சி, பானையிலே ஊத்தறீங்க ?

இன்னியோட பாக்கெட் சாராயம் ஒழிக்கப்படும்னு தலைவர் பேப்பர்லே நியூஸ் குடுத்துட்டாராம் *

சர்க்கஸ் கூண்டுலேருந்து ஒரு புலி தப்பிச்சு ஓடிடுச்சாமே...?

அப்ப விடுதலைப்புலின்னு சொல்லுங்க...*

தலைவருக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு எப்படிச் சொல்றீங்க *

சின்ன வீடு பிரிஞ்சு போனதுக்கு எதிர்க்கட்சி சதின்னு அறிக்கை விட்டிருக்காரே *

நாம மோசம் போயிட்டோமா ? என்னய்யாb சால்றே ?

கூட்டணிக் கட்சிகளுக்குச் சீட்டு கொடுத்தது போக, பாக்கி நமக்கு ரெண்டு இடம்தான் இருக்கு *

தலைவர் மாதிரியே குளோனிங்-லே ஒருத்தரைப் தயார் பண்ணணுமா...

ஏன் ?

பூகம்பப் பகுதியைப் பார்வையிடப் போக பயமா இருக்காம் *

மசாலா கதை இருக்கா...? சொல்லுங்க *

இஞ்சி வியாபாரி மகளை பூண்டு வியாபாரி மகன் காதலிக்கிறhன்...*

கலைச்சேவை செய்ய துபாய் போன நடிகை குசலா எங்கே ?

கலைச்சே ஆகணும்-னு ஆஸ்பத்திரி போயிருக்கா*

நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சா என்ன பண்ணுவீங்க ?

என்னோட ஓட்டு வீட்டை பங்களாவா மாத்திடுவேன்*

Link to comment
Share on other sites

கலைச்சேவை செய்ய துபாய் போன நடிகை குசலா எங்கே ?

கலைச்சே ஆகணும்-னு ஆஸ்பத்திரி போயிருக்கா

என்னத்தை கலைக்க வான்வில் அண்ணா............. :P

Link to comment
Share on other sites

யாருக்கு தெரியும்? :lol:

நாளைக்கு டீச்சரிட்ட கேட்போம் டவுட்டை வான்வில்.......... :lol:

இலையான் கலைக்க :P

இலையான் கலைகிறது என்றா அவ்வளவு கஷ்டமா.............அதற்காக வைத்தியசாலிக்கு எல்லாம் போக வேண்டுமா......... :lol:

Link to comment
Share on other sites

மோட்டின் ஸ்பிறே அடிச்சா சரியாகிடும் :lol:

சின்ன பிள்ளைகள் இது எல்லாம் பாவிக்ககூடாது.......... :lol:

Link to comment
Share on other sites

நிலா அக்கா என்னமோ எல்லாம் இல்லை இலையான் பற்றி கதைகிறோம்..... :P

Link to comment
Share on other sites

சிங்கத்தைப் பிடிச்சிக் கொல்றது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை நண்பர்களே. நம்பாளுங்க என்ன செய்றாங்கன்னு பாருங்களேன்.

ரஜினிகாந்த் :

சிங்கத்தின் முன்னால் நின்று கர்ஜிக்கிறார். “ஏ…ஏ…நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்…தெரியுமில்ல பாஷா….ம்ம்ம்ம்மாணிக் பாஷா”. சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட, பயந்துபோன சிங்கம் அவர் எப்போ வருவாரோ, எப்படி வருவாரோ என்ற பயத்தில் இருந்தே செத்துப்போனது. ஆனால் கடைசிவரை தலைவர் வரவேயில்லை என்பது வேறுவிஷயம்.

மணிரத்னம் :

சிங்கத்தை ஒரு இருட்டறையில் தள்ளுகிறார். அது வெளியே செல்ல முயற்சிக்கிறது. உடனே ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகிறார். அந்த வெளிச்சத்தில் மெல்ல சிங்கத்தின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் முணுமுணுக்கிறார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். டார்ச்சர் தாங்காத சிங்கம் தற்கொலை செய்து கொள்கிறது.

சாப்ட்வேர் எஞ்சினியர் :

ஒரு பூனையைப் பிடித்துக்கொண்டு வருகிறார். ப்ளாக்பாக்ஸ் டெஸ்டிங்க், ஒயிட் பாக்ஸ் டெஸ்டிங், யூனிட் டெஸ்டிங், சிஸ்டம் டெஸ்டிங் என எல்லா வகை டெஸ்டிங்கும் பண்ணிப்பார்க்கிறார். கடைசியில் தான் பிடித்துக்கொண்டுவந்தது சிங்கம்தான் என அடித்துக் கூறுகிறார். அதற்கு முன்னூத்தி சொச்சம் பக்கங்கள் உள்ள உதவிக் கையேட்டையும் கொடுக்கிறார். அது சிங்கமல்ல என ஒருவர் கம்ப்ளைண்ட் செய்ய, நம்மவர் கூலாக சொல்கிறார். “அப்படியா! அடுத்த வெர்சனில் அதை சிங்கமாக மாற்றிவிடுவோம். உங்களுக்கு ப்ரீ அப்கிரேட் செய்துதருகிறோம்”

இந்தியப்போலிஸ் :

இவர் ஒரு விலங்கைப் பிடித்துவிடுவார். அதை உருட்டி, மிரட்டி, கொன்னுடுவேன் என டார்ச்சர் செய்து, முட்டியைப் பெயர்த்தெடுத்துவிடுவார். குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடக்கும் அந்த விலங்கு இறுதியில் தான் சிங்கம் தான் என ஒத்துக்கொண்டுவிடும். வேறுவழி :-)

விஜயகாந்த் :

சிங்கத்தை உட்கார வைத்துக்கொண்டு அடுக்குகிறார் : தமிழ்நாட்டுல பதிமூணு ‘ஜூ’ இருக்கு. அதுல ஏழு கவர்மெண்டு. ஆறு தனியார். முன்னூத்தி இருபத்தெட்டு குகைங்க அதுல இருக்கு. அதுல எழுநூறு சிங்கங்கள் இருக்கு. 1996ல இருந்தது ஆயிரத்து முன்னூறு சிங்கங்கள். இப்போ 2006ல இருக்கறது…..அவர் பேசி முடிக்கவில்லை, சிங்கம் நாண்டுக்கிட்டு சாகிறது.

மேனகா காந்தி :

ஆபத்திலிருக்கும் சிங்கத்தைக் காப்பாற்றி தன் வீட்டுக்குக் கொண்டுவந்து விடுவார். அதோடு நில்லாமல் அதற்குப் பசியெடுக்கும் போது வேளாவேளைக்கு காய்கறிகளும் பழங்களும் கொடுத்து அதைக்கொல்லாமல் கொல்லுவார்.

ரவிசாஸ்திரி :

சிங்கத்தைக் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுவார். அது பவுலிங் போட இவர் பேட்டிங் செய்வார். சுமார் இருநூறு பந்துகள் போட்டபின் ஒரு ரன் எடுத்துவிடுவார். சிங்கம் இவர் காலடியில் சரண்டர் ஆகிவிடும்.

ஜார்ஜ்புஷ் :

ஒரு கிழட்டுச் சிங்கத்தைக் கொன்றுவிடுகிறார். எல்லோரையும் கடிச்சிக் குதறிக்கிட்டு இருந்த சிங்கத்தைக் கொன்னுட்டேன் என எக்காளமிடுகிறார். இறந்துபோன சிங்கத்தை டெஸ்ட் செய்கிற டாக்டர்கள், அதற்குப் பிறவியிலேயே பல் கிடையாது என அறிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

வான்வில் அண்ணா சிங்க ஜோக் சூப்பர்............

Link to comment
Share on other sites

ரஜினிகாந்த் :

சிங்கத்தின் முன்னால் நின்று கர்ஜிக்கிறார். “ஏ…ஏ…நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்…தெரியுமில்ல பாஷா….ம்ம்ம்ம்மாணிக் பாஷா”. சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட, பயந்துபோன சிங்கம் அவர் எப்போ வருவாரோ, எப்படி வருவாரோ என்ற பயத்தில் இருந்தே செத்துப்போனது. ஆனால் கடைசிவரை தலைவர் வரவேயில்லை என்பது வேறுவிஷயம்.

ஹீஹீ கூல்

Link to comment
Share on other sites

காதலன் ;_ காதலியே நீ சுவீட் ஆக 3 வார்த்தை சொல்லு. அவ்வார்த்தையில் நான் சொர்க்கத்துக்கு போவது போல இருக்கணும்.

காதலி ;- தூக்கு போட்டு செத்துடு.

காதலன்;- :lol:

Link to comment
Share on other sites

வேலைக்கான நேர்காணலில்...உண்மையைச் சொல்ல முடிந்தால்....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

Link to comment
Share on other sites

வான்வில் அண்ணா உங்க அவதார் மாறி போச்சு ஏன்?

Link to comment
Share on other sites

ஆமாம் இப்ப தான் மொண்டசூரியிற்கு வாற மாதிரி இருக்கு........... :P

Link to comment
Share on other sites

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.

அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.

பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.

ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?

மாணவன்: சார்! 54 சார்.

ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?

மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.

Link to comment
Share on other sites

:lol :): :huh::lol:

நிலா அக்கா இப்ப சிரித்தனீங்களா........ :P :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா இப்ப சிரித்தனீங்களா........ :P :P

நகைச்சுவை பகுதிக்குள் வந்து அழவா முடியும்? :angry: :P

Link to comment
Share on other sites

நகைச்சுவை பகுதிக்குள் வந்து அழவா முடியும்? :angry: :P

சிரிக்க தான் வேண்டும் என்று இல்லை அழவும் செய்யலாமே............ :P :P

Link to comment
Share on other sites

சிரிக்க தான் வேண்டும் என்று இல்லை அழவும் செய்யலாமே............ :P :P

அப்போ அழக்கூடியவாறு நகைச்சுவை போடுங்க கண்டிப்பாக அழுவேன். அதுசரி உங்க பக்கத்துவீட்டு பாட்டி எபப்டி இருக்கிறாங்க? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.