Jump to content

காஷ்மீர், வழியாக.. இந்தியாவுக்குள் நுழைவோம். சீனா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவு

காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்!

இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது.

டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன.

பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா மிரட்டும் தொனியில் தொடர்ந்து கெஞ்சி வருகிறது.

இதனிடையே, இது குறித்து சீன ஆய்வாளர் லாங் ஷிங்சுன், அந்த நாட்டு மீடியாவான குளோபல் டைம்ஸ்-சில் எழுதி உள்ள கட்டுரையில், பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக் கொண்டால் அப்பகுதி பொதுவான பிரதேசமாக இருக்கும். தொல்லைதரும் பகுதியாக இருக்காது.

சீனாவின் சாலை திட்டத்தால் வடகிழக்கு மாநிலங்கள் தனி நாடாக பிரிந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியா சரியான கட்டமைப்பை செய்து தரவில்லை. அதை சீனா செய்வதால் அந்த மாநிலங்கள் தனி நாடாக பிரிந்துவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

பூடானுக்காக இந்தியா வரிந்து கட்டுவதை போல, பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் தவிர 3வது நாட்டின் ராணுவமும் (சீனா) நுழையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சீனா தரப்பில் இந்தியாவை மிரட்டும் தொனியில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தை சீனா இப்போதுதான் கிளப்ப ஆரம்பித்துள்ளது. ஏதாவது சொல்லி மிரட்டி, எப்படியாவது இந்திய படைகளை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்பதே சீனா எண்ணம். இந்தியாவுடன் ராணுவ மோதலை சீனா தவிர்க்க நினைப்பது தெளிவாகியுள்ளது.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தால்...இந்தியாவுக்குக் கோவணத் துண்டும் மிஞ்சாது போல ....கிடக்கே!:rolleyes:

இந்தியா என்று ஒரு தேசம் என்றும் இருந்ததில்லை !

அது ஒரு மாயை!

அது துண்டு படுவதை எனது வாழ் நாளுக்குள் காண வேண்டும் என்பது எனது ஆசை!

அது நிச்சயம் நடக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

.. அது துண்டு படுவதை எனது வாழ் நாளுக்குள் காண வேண்டும் என்பது எனது ஆசை!

அது நிச்சயம் நடக்கும்!

நல்ல எண்ணம்.. நிறைவேற வாழ்த்துக்கள்!  bourgeons.gif

அப்படியாவது என் கடவுச்சீட்டில் தமிழ் இடம் பெறட்டும்..!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்!

செய்தி உண்மையாக இருந்து....சொன்னது நடக்குமானால் சந்தோசம்.Bildergebnis für blumen gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ஓர் தேசம்.

சிங்கிஸ் கான் முதல் குபிளை கான் (சிங்கிஸ் கான் இந்த பேரன்) வரையான மொங்கோலியர்கள் சீன மீது படையெடுத்தனர்.

சீனாவை மொங்கோலியர் வசம் கையகப்படுத்தல் என்ற சிங்கிஸ் கான் இன் கனவை, குபிளை கான் பௌதிக அடிப்படையில் நிறைவேற்றி வைத்தார்.

ஆனால் மொங்கோலியரான குபிளை கானும் அவரது பரம்பரையும்  சீனரவாகே மாறிவிட்டனர், அல்லது சீனா அவர்களை மாற்றிவிட்டது.

இங்கே தான் தேசம் என்பதின் தன்மையும் சக்தியையும்  மிகவும் வெளிப்படையாக சீனா சிறு சஞ்சலமும் இன்றி வெளிப்படையாக அதன்  இறைமையையம் சுதந்திரத்தையும் தேசமாகவே கோலோச்சுகிறது.

ஆனால்  இந்திய ஓர் தேசம் அன்று.

ஆனால்  இந்தியா, பிரிட்டிஷ் ஆல் அவர்களது வணிக, அரசியல் மற்றும் இராணுவ நலன்கருதி,  ஏலவே  துண்டுகளாக உடைந்து சிதறியிருந்த  மனிதக் கூட்டத்தையும் நிலப்பரப்பையும் இராணுவ வலிமை என்ற பசையால் ஒட்டப்பட்ட  ஓட்டைகளும், வெடிப்பும், நீங்கலும், பாரிய இடைவெளிகளும் (fault lines), பள்ளத்தாக்குகழும், கணவாய்களும் ஆனா நிலைக்கண்ணாடி. அது பார்ப்பவர்களையும், பார்க்கப்படுவர்களையும் அவ்வாறே காட்டும்.

அதனால் தான் இந்தியா மிகவும் ஆழமாக பின்னிப் பிணைத்திருந்த பிரிட்டிஷ்ஷாரை இந்தியராக மற்ற முடியவில்லை.

ஏனெனில் பிரிட்ஷ்ஷாரை விட மொங்கோலியல் மிகவும் கொடூரமான வன்முறையைப் உபயோகித்தே சீனாவை ஆக்கிரமித்தனர்.


இதை விட மொங்கோலியர் சீன நிலப்பரப்பின் அயலவர் ஆனால் பிரிடிஷ்ஷார் தூர தேச அந்நியர்.

வணிகம் மற்றும்  ராஜதந்திரதுடன் இராணுவ பழத்தை பிரயோகித்த பிரிட்ஷ்ஷாரை இந்தியா என்ற பெருநிலப்பரப்பு அந்நிலத்தவராகக் (nativication to the soil) கூட மாற்ற முடியவில்லை.

India is at best power-transferred (by and from British), land controllling kleptocracy.

This is the reason for it India never will be or shall be a Nation nor Super power.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

நல்ல எண்ணம்.. நிறைவேற வாழ்த்துக்கள்!  bourgeons.gif

அப்படியாவது என் கடவுச்சீட்டில் தமிழ் இடம் பெறட்டும்..!! 

 

11 hours ago, புங்கையூரன் said:

போற போக்கைப் பார்த்தால்...இந்தியாவுக்குக் கோவணத் துண்டும் மிஞ்சாது போல ....கிடக்கே!:rolleyes:

இந்தியா என்று ஒரு தேசம் என்றும் இருந்ததில்லை !

அது ஒரு மாயை!

அது துண்டு படுவதை எனது வாழ் நாளுக்குள் காண வேண்டும் என்பது எனது ஆசை!

அது நிச்சயம் நடக்கும்!

இந்தியா  சிதறாது தமிழருக்கு விடிவில்லை

தமிழ்  வளர வழியில்லை

என்  வாழ்நாளில் அதைக்காண்பேனாயின் அதுவே  பேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

சீனா ஓர் தேசம்.

சிங்கிஸ் கான் முதல் குபிளை கான் (சிங்கிஸ் கான் இந்த பேரன்) வரையான மொங்கோலியர்கள் சீன மீது படையெடுத்தனர்.

சீனாவை மொங்கோலியர் வசம் கையகப்படுத்தல் என்ற சிங்கிஸ் கான் இன் கனவை, குபிளை கான் பௌதிக அடிப்படையில் நிறைவேற்றி வைத்தார்.

ஆனால் மொங்கோலியரான குபிளை கானும் அவரது பரம்பரையும்  சீனரவாகே மாறிவிட்டனர், அல்லது சீனா அவர்களை மாற்றிவிட்டது.

இங்கே தான் தேசம் என்பதின் தன்மையும் சக்தியையும்  மிகவும் வெளிப்படையாக சீனா சிறு சஞ்சலமும் இன்றி வெளிப்படையாக அதன்  இறைமையையம் சுதந்திரத்தையும் தேசமாகவே கோலோச்சுகிறது.

ஆனால்  இந்திய ஓர் தேசம் அன்று.

ஆனால்  இந்தியா, பிரிட்டிஷ் ஆல் அவர்களது வணிக, அரசியல் மற்றும் இராணுவ நலன்கருதி,  ஏலவே  துண்டுகளாக உடைந்து சிதறியிருந்த  மனிதக் கூட்டத்தையும் நிலப்பரப்பையும் இராணுவ வலிமை என்ற பசையால் ஒட்டப்பட்ட  ஓட்டைகளும், வெடிப்பும், நீங்கலும், பாரிய இடைவெளிகளும் (fault lines), பள்ளத்தாக்குகழும், கணவாய்களும் ஆனா நிலைக்கண்ணாடி. அது பார்ப்பவர்களையும், பார்க்கப்படுவர்களையும் அவ்வாறே காட்டும்.

அதனால் தான் இந்தியா மிகவும் ஆழமாக பின்னிப் பிணைத்திருந்த பிரிட்டிஷ்ஷாரை இந்தியராக மற்ற முடியவில்லை.

ஏனெனில் பிரிட்ஷ்ஷாரை விட மொங்கோலியல் மிகவும் கொடூரமான வன்முறையைப் உபயோகித்தே சீனாவை ஆக்கிரமித்தனர்.


இதை விட மொங்கோலியர் சீன நிலப்பரப்பின் அயலவர் ஆனால் பிரிடிஷ்ஷார் தூர தேச அந்நியர்.

வணிகம் மற்றும்  ராஜதந்திரதுடன் இராணுவ பழத்தை பிரயோகித்த பிரிட்ஷ்ஷாரை இந்தியா என்ற பெருநிலப்பரப்பு அந்நிலத்தவராகக் (nativication to the soil) கூட மாற்ற முடியவில்லை.

India is at best power-transferred (by and from British), land controllling kleptocracy.

This is the reason for it India never will be or shall be a Nation nor Super power.

 

உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக எல்லாத் திரியிலும் ஆங்கிலத்தில் எழுதி உங்கள் திறமையை நிருபீக்க வேண்டியதில்லை...இது தமிழர்களுக்கான தளம்...தமிழில் எழுதவும்.
 
நிர்வாகம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் பாராபட்சம் காட்டுமாக்கும்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:
உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக எல்லாத் திரியிலும் ஆங்கிலத்தில் எழுதி உங்கள் திறமையை நிருபீக்க வேண்டியதில்லை...இது தமிழர்களுக்கான தளம்...தமிழில் எழுதவும்.
 
நிர்வாகம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் பாராபட்சம் காட்டுமாக்கும்.
 
 

என்னை போல் உங்களுக்கும் ஆங்கிலம் தெரியதாக்கும்  நம்ம இனம் போல் இருக்கே:10_wink::10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:
உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக எல்லாத் திரியிலும் ஆங்கிலத்தில் எழுதி உங்கள் திறமையை நிருபீக்க வேண்டியதில்லை...இது தமிழர்களுக்கான தளம்...தமிழில் எழுதவும்.
 
நிர்வாகம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் பாராபட்சம் காட்டுமாக்கும்.
 
 

அவர் எழுதுவது சரியென்றுதான் தெரிகிறது ...........
அதுதான் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அவர் தமிழில்தான் கருத்தை எழுதுகிறார் ...
ஆங்கிலம் எக்ஸ்ட்ரா சப்போர்ட் ... அதை தமிழில் மாற்றினால் அர்த்தம் வேறு ஆகிவிடும்.
அது அப்படியே இருப்பது அன்று என்றுதான் நான் எண்ணுகிறேன்.

அவர் முக்கியமான பொயிண்ட்களையே அப்படியே 
குழப்பாமல் எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.

ரதி 
எல்லோருக்கும் எல்லா திறமையும் இல்லை.
எனக்கும் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மாற்ற தெரியாது 
ஆனால் நெடுக்கரிடம் அந்த திறமை இருப்பதை பார்த்து இருக்கிறேன்.
நாம் எழுதலாம் ஆனால் அர்த்தம் மாறிவிடும்.

காவோலையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் 
அனால் அதை காவோலைதான் என்று புரிந்துகொள்ள முடியாது.
தமிழர் நாட்டில் குளிர் இல்லை அதனால் பனி இல்லை 
எல்லா விதமான பனியையும் பனி என்றுதான் தமிழில் எழுத முடியும் 
இங்கு ஒவ்வரு நிலையிலும் ஒரு பெயர் உண்டு .... அதை எப்படி எழுதுவது ? 

3 hours ago, குமாரசாமி said:

செய்தி உண்மையாக இருந்து....சொன்னது நடக்குமானால் சந்தோசம்.Bildergebnis für blumen gif

இந்தியா ஒருபோதும் சீனாவுடன் சண்டைக்கு போகாது 
அமெரிக்க பழிதீர்க்க வேண்டுமானால் அப்போதைய 
இந்திய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி 
இந்தியாவை தூண்டி விடலாம்.

தவிர சீனா ஒரு போதும் போரை விரும்பாது சீனாவின் இராஜ தந்திரம் 
தொலைநோக்கு பார்வை கொண்டது. போரில் பொருள் இழப்பை செய்வதை 
சீனா விரும்புவதில்லை தனது ஆயுதங்களை நட்பு நாடுகளிடம் கொடுத்து 
அவர்கள் மூலமே சண்டையை செய்து வருகிறது.

அமெரிக்கவிட்கு ஒரு இஸ்ரேல் என்றால் 
சீனாவுக்கு பாகிஸ்தான் என்பது 60-70 களிலேயே 
நிரூபணமான ஒன்று.
அப்படி இருக்கும்போதே ..... பாகிஸ்தானை அமெரிக்க சார்பு நாடாக்கி 
அனைத்து அமெரிக்க உதவிகளையும் பாகிஸ்தானுக்கு பின்புலத்தில் இருந்து 
பெற்று கொடுத்தது சீனாதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

காவோலையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் 
அனால் அதை காவோலைதான் என்று புரிந்துகொள்ள முடியாது.

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

Palm tree's dried leave. 

இப்பிடித்தான் எழுதலாம். 

ஆனால் நாம் ஒரு அர்த்தத்தில்தான் அதை  காவோலை என்கிறோம்.
அந்த அர்த்தம் அதில் வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

Palm tree's dried leave. 

இப்பிடித்தான் எழுதலாம். 

ஆனால் நாம் ஒரு அர்த்தத்தில்தான் அதை  காவோலை என்கிறோம்.
அந்த அர்த்தம் அதில் வராது. 

அதுதான் எந்த மொழியிலும் இல்லாத பெருமையும் சிறப்பும் வசதியும் எமது தமிழில் நிறைந்தே இருக்கின்றது. சங்கேத மொழியாகவும் இருக்கின்றது. சுத்த தமிழில் கதைத்தால்  தன்னை சுத்ததமிழனாக காட்டிக்கொள்பவனுக்கே அந்த தமிழ் விளங்காது.

9 minutes ago, ஜீவன் சிவா said:

Kaavolai :grin:

அண்ணை இப்ப எல்லா இடங்களிலையும் உதுதானே நடக்குது......அதாவது இங்கிலிஸ் பாசையிலை எழுதி வாசிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:
உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக எல்லாத் திரியிலும் ஆங்கிலத்தில் எழுதி உங்கள் திறமையை நிருபீக்க வேண்டியதில்லை...இது தமிழர்களுக்கான தளம்...தமிழில் எழுதவும்.
 
நிர்வாகம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் பாராபட்சம் காட்டுமாக்கும்.
 
 

 

3 hours ago, தனி ஒருவன் said:

என்னை போல் உங்களுக்கும் ஆங்கிலம் தெரியதாக்கும்  நம்ம இனம் போல் இருக்கே:10_wink::10_wink:

உங்கள் கருத்தை ஆக்கபூர்வமான விமர்சனமாகவே ஏற்றுக்கொள்கிறேன்.  

முற்றாக தமிழில் எழுதிவதற்கு முயற்சிக்கிறேன்.

ஆங்கிலத்தில் எழுத்துவதற்கன காரணம், எழுதப்பட்ட கூற்றின் வலுவும் வீச்சும் தமிழில் அக்கருத்தை எழுதினால் இருக்கும் அளவிற்கு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தினாலேயேயொழிய எனது ஆங்கிலப் புலமையை பறைசாற்றுவதற்கு அன்று.

ஆனால் அக்கருத்தை அதே வலுவுடனும்  வீச்சுடனும் தமிழில் எழுதிவதற்கான சொற்களையும்  வசன அமைப்புகளையும் உணர்ந்து எழுதுவது மிக கடினமாக உள்ளது.

இதுவே ஆங்கில உபயோகிப்பதற்கன முழுமுதற்க் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

அட.....காவோலைக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கெண்டு இண்டைக்குத் தான் தெரியுது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு இனத்தின் சாபத்திற்கு உள்ளான நாடு, அதன் உடைவு மகிழ்ச்சியான செய்தியே. ஆனால் பல இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் இருக்கும் இந்து நாடு பிளவு படுவதை இப்போதைய  வல்லரசுகள் விரும்பாது. எதிர் காலத்தில் யார் வல்லரசு என்பதை பொறுத்து விளைவுகள் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர்களாக இருந்த... நேரு, இந்திரா காந்தி முதல்.... 
இதுவரை யாரும் இஸ்ரேல்  நாட்டுடன் நடப்புறவு கொள்ளவில்லை.
சென்ற கிழமை மோடி, இஸ்ரேலுக்கு பயணம் செய்ததன்  மூலம், நட்பு  புதிப்பிக்கப் பட்டுள்ளது.
அதனை வைத்து... பாகிஸ்தானின் சீண்டல்களுக்கு, போர் மூலம்  பதிலடி கொடுக்க, இந்தியா ஆயத்தப் படுத்துகின்றது  என்று கருதுகின்றேன். அந்த நேரம் பாகிஸ்தானுக்கு சார்பாக, சீனா நிச்சயம்   வரும்.

மோடிக்கும், அவரது கட்சிக்கும்... அடுத்த தேர்தலில்,  இந்திய  மக்களின் மனதை வசப்படுத்த....  
ஒரு இராணுவ வெற்றி அவசியமாக உள்ளது. அது விரைவில்... நடை பெறலாம்.

நாங்கள்... ஜாலியாக  "பொப் கோன்" Bildergebnis für popcorn smiley சாப்பிட்டுக் கொண்டு,  "பிரேக்கிங் நியூஸ்"  பார்க்கலாம்.  :grin: :D:   Bildergebnis für television smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

:grin: :grin: :grin:

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎07‎/‎2017 at 5:02 PM, தனி ஒருவன் said:

என்னை போல் உங்களுக்கும் ஆங்கிலம் தெரியதாக்கும்  நம்ம இனம் போல் இருக்கே:10_wink::10_wink:

எப்படி முனி இப்படி:cool:

On ‎11‎/‎07‎/‎2017 at 5:11 PM, Maruthankerny said:

அவர் எழுதுவது சரியென்றுதான் தெரிகிறது ...........
அதுதான் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அவர் தமிழில்தான் கருத்தை எழுதுகிறார் ...
ஆங்கிலம் எக்ஸ்ட்ரா சப்போர்ட் ... அதை தமிழில் மாற்றினால் அர்த்தம் வேறு ஆகிவிடும்.
அது அப்படியே இருப்பது அன்று என்றுதான் நான் எண்ணுகிறேன்.

அவர் முக்கியமான பொயிண்ட்களையே அப்படியே 
குழப்பாமல் எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.

ரதி 
எல்லோருக்கும் எல்லா திறமையும் இல்லை.
எனக்கும் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மாற்ற தெரியாது 
ஆனால் நெடுக்கரிடம் அந்த திறமை இருப்பதை பார்த்து இருக்கிறேன்.
நாம் எழுதலாம் ஆனால் அர்த்தம் மாறிவிடும்.

காவோலையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் 
அனால் அதை காவோலைதான் என்று புரிந்துகொள்ள முடியாது.
தமிழர் நாட்டில் குளிர் இல்லை அதனால் பனி இல்லை 
எல்லா விதமான பனியையும் பனி என்றுதான் தமிழில் எழுத முடியும் 
இங்கு ஒவ்வரு நிலையிலும் ஒரு பெயர் உண்டு .... அதை எப்படி எழுதுவது ? 

இந்தியா ஒருபோதும் சீனாவுடன் சண்டைக்கு போகாது 
அமெரிக்க பழிதீர்க்க வேண்டுமானால் அப்போதைய 
இந்திய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி 
இந்தியாவை தூண்டி விடலாம்.

தவிர சீனா ஒரு போதும் போரை விரும்பாது சீனாவின் இராஜ தந்திரம் 
தொலைநோக்கு பார்வை கொண்டது. போரில் பொருள் இழப்பை செய்வதை 
சீனா விரும்புவதில்லை தனது ஆயுதங்களை நட்பு நாடுகளிடம் கொடுத்து 
அவர்கள் மூலமே சண்டையை செய்து வருகிறது.

அமெரிக்கவிட்கு ஒரு இஸ்ரேல் என்றால் 
சீனாவுக்கு பாகிஸ்தான் என்பது 60-70 களிலேயே 
நிரூபணமான ஒன்று.
அப்படி இருக்கும்போதே ..... பாகிஸ்தானை அமெரிக்க சார்பு நாடாக்கி 
அனைத்து அமெரிக்க உதவிகளையும் பாகிஸ்தானுக்கு பின்புலத்தில் இருந்து 
பெற்று கொடுத்தது சீனாதான். 

மருதர்,எல்லோரும் இப்படி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பேசும் மொழிப் புலமையை காட்டத் தொடங்கினால் எப்படி இருக்கும்...அவருக்கு நல்லாய் தமிழ் எழுதத் தெரியும் போது பிற்கு எதற்கு இடைச் செருகலாய் ஆங்கிலம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் உள்ள விஜயகாந்தும் அர்ஜுனும் மற்றும் சில ஜெய் ஹிந்த் நடிகர்கள் இருக்கும் வரைக்கும் அது நடக்காது tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

எப்படி முனி இப்படி:cool:

மருதர்,எல்லோரும் இப்படி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பேசும் மொழிப் புலமையை காட்டத் தொடங்கினால் எப்படி இருக்கும்...அவருக்கு நல்லாய் தமிழ் எழுதத் தெரியும் போது பிற்கு எதற்கு இடைச் செருகலாய் ஆங்கிலம்?

ஆங்கிலம் பொதுவாக எல்லோருக்கும் இரண்டாம் மொழியாக 
இருக்கிறது. தமிழர்களுக்கு இரண்டாம் மொழி என்றால் அது ஆங்கிலம்தானே ?

சில விடயங்களை மொழி பெயர்க்க போனால் சிக்கல் இருக்கிறது 
அதை அப்படியே போட்டுவிட்டால் பிரச்சனை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். 

அது இடை செருக்கலாகத்தானே இருக்கிறது?
மூல கருத்து தமிழிலும் ..... ஒரு சப்போர்ட் ஆங்கிலத்திலும் இருப்பதில் 
அப்படி என்ன தவறு இருக்க போகிறது ?

சொல்லவந்த விடயத்தை நடைமுறையில் விளங்கி கொள்ள 
அது உதவியாகத்தானே இருக்க போகிறது.

தமிழில் உரையாடினால் சிறப்பு 
எமக்கு அந்த அளவில் தமிழ் அறிவும் வேண்டுமே ?

மொழிபெயர்ப்பில் நிறைய விஷயம் உண்டு ....
முன்பு தமிழ்நெட் வாசித்தீர்களோ தெரியவில்லை .... வாசித்திருந்தால் 
மற்றவர்களின் மொழி பெயர்ப்புக்கும் தமிழ்நெட்டின் மொழிபெயர்ப்புக்கு 
உள்ள வித்தியாசம் தெரியும்.

லண்டனில் ஜெகோவா காரர்களை கண்டால் அவர்கள் விழித்தெழு என்று ஒரு மாத சஞ்சிகை 
வெளியிடுவார்கள் அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் வேண்டி வாசித்து பாருங்கள் 
இரண்டிலுமே அர்த்தம் புரளாது ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பாக இருக்கும்.
நான் அதை ஆரம்ப நாட்களில் ஆங்கிலம் பயிலவே வாசித்து வந்தேன். 
உங்களுக்கு தொடர்பு வேண்டும் என்றால் ஏற்படுத்தி தருகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

லண்டனில் ஜெகோவா காரர்களை கண்டால் அவர்கள் விழித்தெழு என்று ஒரு மாத சஞ்சிகை 
வெளியிடுவார்கள் அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் வேண்டி வாசித்து பாருங்கள் 
இரண்டிலுமே அர்த்தம் புரளாது ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பாக இருக்கும்.
நான் அதை ஆரம்ப நாட்களில் ஆங்கிலம் பயிலவே வாசித்து வந்தேன். 
உங்களுக்கு தொடர்பு வேண்டும் என்றால் ஏற்படுத்தி தருகிறேன். 

அவையள் சொல்லாமலே வீட்டு வாசல்லை வந்து நிண்டு பெல் அடிப்பினம்.....இதுக்கு என்னத்துக்கு தரகர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

எப்படி முனி இப்படி:cool:

மருதர்,எல்லோரும் இப்படி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பேசும் மொழிப் புலமையை காட்டத் தொடங்கினால் எப்படி இருக்கும்...அவருக்கு நல்லாய் தமிழ் எழுதத் தெரியும் போது பிற்கு எதற்கு இடைச் செருகலாய் ஆங்கிலம்?

நிச்சயமாக நான் தமிழன். எது விதமான கேள்வியும் அதில் இல்லை.

ஆனால் தமிழை நான் நன்றாக கற்று தமிழில் நன்கு தேர்ச்சி உடையவர் என்ற முடிவை எவ்வாறு அடைந்தீர்கள்?

நீங்கள் கூறுவது சரியானால், நான் ஏன் எனது தமிழ் மதி வெளியில் சொற்களையும் வசன அமைப்புகளையும் எப்போதும் தேடி ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது?

நான் இங்கு பிரயோகித்த "தமிழ் மதி வெளியில்" என்பதன் பொருள் உங்களுக்கு உடனடியாகப் தெரிகிறதா?

தனி ஒருவனுடன் அன்று நான் குடியுரிமை பற்றி கதைப்பதத்திற்கு வேறு ஓர் பதிவு வேண்டும் என்று  கூறியிருந்தேன்.

அதற்கு காரணம் ஆங்கிலத்தில் விளம்பின்னால் தான்  குடியுரிமையின் விளக்கத்தை இலகுவாகவும் தெளிவாகவும் கூறமுடியும்.

இங்கு தனி ஒருவனுக்கு தனி ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியுமா அல்லது தெரியாத என்பது கேள்வியல்ல.  

குடியுரிமை பற்றி என்னால் தமிழில் உணர்ந்து முடியவில்லை. அதை முற்றாக ஆங்கிலத்தில் யாழில் எழுதுவது முறையல்ல என்ற உணர்வினால் நான் அதை அன்று தவிர்த்துக்கொண்டேன்.

ஏனெனில் ஐரோப்பாப்பாவில் குடி புகுந்தவர்கள்,  இதை புலம்பெயர்ந்தவர் களும்  உள்ளடக்கம், அந்தந்த நாடுகளில் உள்ள சொந்த மக்கட்தன்மையை சட்டபூர்வமாக  எடுக்கும்போதே  அந்நாடுகளின் குடியானவர்களாக சட்ட அங்கீகாரம் பெறுகிறார்கள்.

நான் மேலே எழுதிய விளக்கம் ஆங்கிலத்தில் உள்ள naturalisation என்ற சொல்லை தமிழில் விளக்கவே.

ஆயினும் naturalisation என்ற சொல்லிற்கு தமிழில் ஓர் பொருத்தமான சொல்ல இல்லை. அப்படி இருந்தால் நான் அறியவில்லை. உங்களுத் தெரிந்தால் நான் அறிய ஆவலாக இருக்கிறேன்.

சிலவேளைகளில் நீங்கள் இயைபாக்கம் என்ற தமிழ் பதம் naturalisation என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமானது  கூறலாம்.

அனால்  naturalisation என்பது  சட்ட அடிப்படையிலான செயலாக்கம், இயைபாக்கம் என்பது உயிரியல் பூர்வமான  செயலாக்கம்.

இவற்றை கூட  சிந்தித்து சிரமப்பட்டே எழுதினேன்.

ஓர் கருத்தை முற்றாக  தமிழில் சரியாகவும் தெளிவாகவும் ஏனையோருக்கு இலகுவாகப் புரியும் படியும் எழுதுவது எவ்வளவு கடினம் என்று இப்பொது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆயினும் முற்றாக தமிழில் எழுதிவதற்கு முயற்சிக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அவையள் சொல்லாமலே வீட்டு வாசல்லை வந்து நிண்டு பெல் அடிப்பினம்.....இதுக்கு என்னத்துக்கு தரகர்? :grin:

தட்டி தவறி அதனால் ஏதும் புண்ணியம் கிடைக்கும் என்றால் 
சேர்த்துவிட்ட புண்ணியம் என்னை சேரும் இல்லையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நிச்சயமாக நான் தமிழன். எது விதமான கேள்வியும் அதில் இல்லை.

ஆனால் தமிழை நான் நன்றாக கற்று தமிழில் நன்கு தேர்ச்சி உடையவர் என்ற முடிவை எவ்வாறு அடைந்தீர்கள்?

நீங்கள் கூறுவது சரியானால், நான் ஏன் எனது தமிழ் மதி வெளியில் சொற்களையும் வசன அமைப்புகளையும் எப்போதும் தேடி ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது?

நான் இங்கு பிரயோகித்த "தமிழ் மதி வெளியில்" என்பதன் பொருள் உங்களுக்கு உடனடியாகப் தெரிகிறதா?

தனி ஒருவனுடன் அன்று நான் குடியுரிமை பற்றி கதைப்பதத்திற்கு வேறு ஓர் பதிவு வேண்டும் என்று  கூறியிருந்தேன்.

அதற்கு காரணம் ஆங்கிலத்தில் விளம்பின்னால் தான்  குடியுரிமையின் விளக்கத்தை இலகுவாகவும் தெளிவாகவும் கூறமுடியும்.

இங்கு தனி ஒருவனுக்கு தனி ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியுமா அல்லது தெரியாத என்பது கேள்வியல்ல.  

குடியுரிமை பற்றி என்னால் தமிழில் உணர்ந்து முடியவில்லை. அதை முற்றாக ஆங்கிலத்தில் யாழில் எழுதுவது முறையல்ல என்ற உணர்வினால் நான் அதை அன்று தவிர்த்துக்கொண்டேன்.

ஏனெனில் ஐரோப்பாப்பாவில் குடி புகுந்தவர்கள்,  இதை புலம்பெயர்ந்தவர் களும்  உள்ளடக்கம், அந்தந்த நாடுகளில் உள்ள சொந்த மக்கட்தன்மையை சட்டபூர்வமாக  எடுக்கும்போதே  அந்நாடுகளின் குடியானவர்களாக சட்ட அங்கீகாரம் பெறுகிறார்கள்.

நான் மேலே எழுதிய விளக்கம் ஆங்கிலத்தில் உள்ள naturalisation என்ற சொல்லை தமிழில் விளக்கவே.

ஆயினும் naturalisation என்ற சொல்லிற்கு தமிழில் ஓர் பொருத்தமான சொல்ல இல்லை. அப்படி இருந்தால் நான் அறியவில்லை. உங்களுத் தெரிந்தால் நான் அறிய ஆவலாக இருக்கிறேன்.

சிலவேளைகளில் நீங்கள் இயைபாக்கம் என்ற தமிழ் பதம் naturalisation என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமானது  கூறலாம்.

அனால்  naturalisation என்பது  சட்ட அடிப்படையிலான செயலாக்கம், இயைபாக்கம் என்பது உயிரியல் பூர்வமான  செயலாக்கம்.

இவற்றை கூட  சிந்தித்து சிரமப்பட்டே எழுதினேன்.

ஓர் கருத்தை முற்றாக  தமிழில் சரியாகவும் தெளிவாகவும் ஏனையோருக்கு இலகுவாகப் புரியும் படியும் எழுதுவது எவ்வளவு கடினம் என்று இப்பொது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆயினும் முற்றாக தமிழில் எழுதிவதற்கு முயற்சிக்கிறேன்.

 

 

கடன்சா,

எண்ட அக்கா இப்படித்தான், கண்டிப்பு ஆனால் அன்பானவர். ஆனாலும் மருதர் சொல்வதே சரி.

நீங்கள் உங்கள் பாணியில் தொடருங்கள். உங்கள் ஆழமான கருத்துக்கள் நீங்கள் நன்கு வாசிக்கிறீர்கள் என புரிகிறது.

சில விடயங்களை மொழி பெயர்க்க நேரம் கிடையாது. அதனாலேயே பதிய சோம்பலாவோம். அதிலும் பார்க்க இப்படியாவது பதிவது நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.