Jump to content

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம்


Recommended Posts

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம்

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

mamangam.jpg

இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்று பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜா சிவாசாரியார் பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன.

 

பல இடங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது .

http://www.virakesari.lk/article/21864

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 தீர்த்தம் கொஞ்ச வெளிநாட்டு சனத்தைப்பார்க்கலாம் இந்த வருடமும் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாங்க பிள்ளையாருக்கு அரோகரா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 

நீங்கள் தேங்காய் மோதகம் கொழுக்கட்டை கொடுக்கல போல அந்தாளுக்கு 

 

On 7/15/2017 at 5:00 AM, குமாரசாமி said:

மாமாங்க பிள்ளையாருக்கு அரோகரா..

ம்ம் அரோகரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.7.2017 at 8:25 PM, தனி ஒருவன் said:

23 தீர்த்தம் கொஞ்ச வெளிநாட்டு சனத்தைப்பார்க்கலாம் இந்த வருடமும் :10_wink:

 

1 hour ago, ரதி said:
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 

பிள்ளையார் தான் போக காணேல்லையாம் இதுக்கை இவை இரண்டு பேர்ரை கூத்தை பாருங்கோவன்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

பிள்ளையார் தான் போக காணேல்லையாம் இதுக்கை இவை இரண்டு பேர்ரை கூத்தை பாருங்கோவன்..:grin:

image.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 

பிள்ளையார் கை விட்டாரா இல்ல நீங்க விட்டீர்களா..எப்படியிருப்பினும் லண்டன் வரை  கொண்டு வந்துட்டார் அல்லவா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே எத்தினை நேர்த்திகடன் வச்சி இருப்பாவு செய்யல அந்தாள் கழட்டி விட்டுருப்பாரு பிறகு கல்லுப்பிள்ளையாரே நெல்லுப்பிள்ளையாரே என இங்க வந்து குத்தி முறிவது 

9 minutes ago, யாயினி said:

பிள்ளையார் கை விட்டாரா இல்ல நீங்க விட்டீர்களா..எப்படியிருப்பினும் லண்டன் வரை  கொண்டு வந்துட்டார் அல்லவா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

அதானே எத்தினை நேர்த்திகடன் வச்சி இருப்பாவு செய்யல அந்தாள் கழட்டி விட்டுருப்பாரு பிறகு கல்லுப்பிள்ளையாரே நெல்லுப்பிள்ளையாரே என இங்க வந்து குத்தி முறிவது 

 

இவருக்கு ஏழரைச்சனி தொடங்குது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இவருக்கு ஏழரைச்சனி தொடங்குது....

யாருட்ட நம்ம கிட்டையா  எத்தனை பேரை பார்த்திருப்பம் உன்மையை சொல்ல சொல்லுங்க லண்டனில கால் வச்சா பிள்ளையாரப்பா உனக்கு நான் பொங்குவன் எண்டு நேர்த்தி வச்சவா அது செய்யல அதான் :104_point_left::11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

யாருட்ட நம்ம கிட்டையா  எத்தனை பேரை பார்த்திருப்பம் உன்மையை சொல்ல சொல்லுங்க லண்டனில கால் வச்சா பிள்ளையாரப்பா உனக்கு நான் பொங்குவன் எண்டு நேர்த்தி வச்சவா அது செய்யல அதான் :104_point_left::11_blush:

DE-r2RnWAAYd0aV.jpg

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

DE-r2RnWAAYd0aV.jpg

:grin:

என்ன நான் சொன்னது உங்களூக்கு கேட்கலையா கு.சாமி அண்ண இல்லை கேட்காத மாதிரி நடிக்கிறியளா என்ன?

 

அது சரி ரதி வந்து பார்க்கிரதுகுள்ள நான் ஓடிட வேணும்  குளவி கலைச்சி விட்ட மாதிரி விரசி விரசி குத்தும் :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On July 18, 2017 at 7:18 PM, குமாரசாமி said:

DE-r2RnWAAYd0aV.jpg

:grin:

சோ நைஸ் தாத்தா..கையில இப்படி

imagesVIEW ALL
Related image
 
ஒன்ற தந்தால் இன்னும் நல்லாயிருக்கும் .அப்புறம் சண்டைக்கு வரக் ௯டா சரியா..?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

சோ நைஸ் தாத்தா..கையில இப்படி

imagesVIEW ALL
Related image
 
ஒன்ற தந்தால் இன்னும் நல்லாயிருக்கும் .அப்புறம் சண்டைக்கு வரக் ௯டா சரியா..?

கோபமோ? எனக்கோ? ஓ..மை...காட்.....:grin:
அது சரி கூட்டாய் இரண்டு பேர் வந்து லைக் பண்ணியிருக்கினம்....அவைக்கு  ஏதும் விளங்கியிருக்கும் எண்டுறியள்?????tw_grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனி ஒருவன் said:

 

பார்க்க சந்தோசமாய் இருக்கு, அப்படியே கேட்பதற்கும் இனிமையான பாடல். நன்றி தனி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பார்க்க சந்தோசமாய் இருக்கு, அப்படியே கேட்பதற்கும் இனிமையான பாடல். நன்றி தனி....!  tw_blush:

அண்னை நாளை  தீர்த்தம் பிதிர்கடன் நிறைவேற்றுவார்கள் நாளை நான் நாளை கதிர்காம  யாத்திரை இந்த வருடமும் அதனால் அங்கே நிற்கவில்லை  ஆரோகரா :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் இனிதே அமைய வாழ்த்துக்கள்..... படங்களுடன் வரவும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர் உற்சவம்

 

 

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர் உற்சவம்

July 22, 2017  

 
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து சுவாமி வீதியுலா வந்ததுடன் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2537&mode=head

Link to comment
Share on other sites

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

 

 

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

July 23, 2017  

 
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆடி அமாவாசையில் பிதிர்க் கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் கருதப்படுகின்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக் கொண்ட அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க தலமாக இது விளங்கி வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த பத்து தினங்களாக நடைபெற்று வந்ததுடன் நேற்று (22) தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி தம்ப பூஜை நடைபெற்று திருப்பொற் சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சிவன் பார்வதியுடன் மாமாங்கேஸ்வரர் உள்வீதியுலா வந்து எருது வாகனத்தில் தீர்த்தக்கரையினை நோக்கி சென்றார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் விசேட பூஜையுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2538&mode=head

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.