Jump to content

தந்தையுமானவன்.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் இறுதி  பாகத்தை      நெருக்குகிறது போல் தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாள் அதிகாலை வசந்தி டாக்டருக்கு போன் செய்து வயிறு அதிகம் நோகுறதாக சொல்கிறாள். சற்று நேரத்தில் நிவேதா அங்கு வந்து அவளை பரிசோதித்து விட்டு தேவையான உடுப்புகள் துணிகளை எடுத்துக் கொண்டு தனது காரிலேயே அவளை கிளினிக்குக்கு அழைத்துக் கொண்டு போகிறாள். கதிரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பின்னால் போகிறான். போகும்போதே இரு வீட்டாருக்கும் தகவல் போகிறது.கிளினிக்கில் வசந்தியை வராண்டாவில் மெதுவாக நடக்கும்படி சொல்லிவிட்டு நர்ஸிடம் அறையை ஆயத்தப் படுத்தும் படி சொல்கிறாள்.கதிர் ஆதுரத்துடன் அவளின் தோள் பிடித்து கூட நடக்கிறான். அங்கு வந்த நிவேதா வசந்தியிடம், உனக்கு சிரமமாய் இருந்தால் வலி தெரியாமல் இருக்க நாரியில் ஒரு ஊசி போடவா என்று கேட்க வசந்தி மறுத்து இந்த வலியை நான் ரசித்து அனுபவிக்கிறேன் டொக்டர். ஐ வில் மேனேஜ் என்கிறாள். வெரி குட்  இன்னும் சிறிது பொறுத்தால் சுகப்பிரசவமாகிவிடும்.அவள் படுக்கையில் படுக்கவும் பனிக்குடம் உடைகிறது. நீ விரும்பினால் இங்கே இருக்கலாம் என்று நிவேதா கூறவும், அவளின் வேதனை பார்க்க முடியாமல் கதிர் வெளியே வந்து விடுகிறான். அப்போது அவர்களின் பெற்றோர்களும் சகோதரங்களும் வந்து விட்டார்கள். யாராவது கொஞ்சம் வாருங்கள் என்று நிவேதா அழைக்க பார்வதியும் சிவகாமியும் உள்ளே செல்கின்றனர்.நர்ஸ் வசந்தியின் பைலை எடுத்து வந்து டொக்டரிடம் தர வசந்தி பார்க்கிறாள் அது பிங்கும் , நீலமும் இல்லாமல் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கு. வசந்தியின் பார்வையில் கேள்வி தொக்கி நிக்க நிவேதா கண்ணடிக்கிறாள். உதிரப்போக்கு அதிகமாகின்றது.ஈனஸ்வரத்தில் முனக அவளை பார்வதி அணைத்து  முந்தானையால் முக வேர்வையை துடைத்து விடுகிறாள்.

 வசந்தியின் ஒரு அலறலில் புதிய மலர் ஒன்று பூமியில் பூக்கிறது. அதன் கிளிக்குரல் கிளினிக்கில் மிதக்கிறது. அதை அப்படியே சுத்திய கொடியோடு அவளின் வெற்று மார்பில் குப்புறப் போட்டு இரு நிமிடத்தில் மீண்டும் வலியெடுக்கிறது, இன்னொரு மொட்டு முகையவிழ்ந்து வெளியே வருகின்றது. சுகப் பிரசவம். பேத்திமார் இருவருக்கும் பேரானந்தம். நர்ஸுடன் சேர்ந்து இருவரும் பிள்ளைகளை அணைத்து எடுத்துக் கொண்டு சுத்தப் படுத்த உள்ளே போகின்றனர்.நிவேதா வெளியே வந்து கதிரிடம் நீ போய் வசந்தியை பார் உன்னைத்தான் தேடுகிறாள் என்று சொல்ல அவன் உள்ளே போகிறான்.அவள் மற்றவர்களிடம் ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் என்று சொல்ல முத்துவேலரும் ராஜசேகரும் காருக்கு போய் என்ன பிள்ளை என்று தெரியாமல் வாங்கிக் கொண்டு வந்த சர்க்கரையையும் கற்கண்டையும் எடுத்து வந்து அங்கு நின்ற எல்லோருக்கும் தருகின்றனர்.கதிர் போய் வசந்தியின் காலடியில் நின்று அவளின் இரு பாதத்தையும் புறாக்குஞ்சுகளைப் பொத்திப் பிடிப்பதுபோல் பிடித்து முகத்தைப் புதைத்துக் கொண்டு கேவுகிறான்.வசந்தியும் எட்டி அவன் முடியைப்பிடித்து இழுத்து தன்னோடு அனைத்துக் கொள்கிறாள்.

கதிர்: வசந்திம்மா குழந்தை உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திப் போட்டாளா.... !

வசந்தி: குழந்தையா..., இப்ப நீ ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பாடா. பையன் என்னைப்போல சமர்த்தாய் வந்திட்டான்.... இந்தப் பெட்டைதான் உன்னைமாதிரி என்னை ஒரு வழி பண்ணிட்டாள். 

 கதிர் : நிஜமாவாடி... "ஐ லவ் யு  சோ மச்"நீ கெட்டிக்காரியடி எவ்வளவு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் சாதிச்சிட்டாய்  என்று நெற்றியில் முத்தமிடுகிறான்.கண்ணீர் ஒழுக அழுகிறான். என்னங்க இது. அழாதடா எல்லோரும் இருக்கிறார்கள்.... போடி நீ...! 

 வசந்தி: இல்லைடா நீ இவ்வளவு நாளும் மனசுக்குள் பட்ட வேதனை எனக்கு தெரியாதென்று நினைக்கிறியா. உன்னை ஒரு காட்டான் என்று நினைத்துதான் உன்னோடு வாழ வந்தன்.ஆனால் நீயும் மாமா அத்தை மற்றும் எல்லோருடைய அன்பும் என்னை நெகிழ்த்தி விட்டது. நாளாவட்டத்தில் நானே உனக்குள் உருகிப் போனேன். இந்த நிமிஷம் இந்த உலகில் உன்னைவிட எதுவுமே எனக்கு பெரிசில்ல, ஐ லவ் யு டா அவன் கன்னத்தை தடவி விடுகிறாள்.வெளியே இரு பிள்ளைகளையும் எல்லோரும் ஆசையுடன் தொட்டு தொட்டு பார்க்கினம்.மாப்பிள்ளை எங்க, சிவகாமி கேட்கிறாள். அண்ணா உள்ளே அண்ணியுடன் இருக்கிறான் என்று சௌம்யா சொல்ல பொறுங்கோ முதலில் பிள்ளைகளை தேப்பனிட்ட  காட்டிட்டு வாறன் என்று உள்ளே போகிறார்கள்.  

பிள்ளைகளை இருவரும் கொண்டுவந்து இரு பக்கத்தாலும் அவனது இரண்டு கைகளிலும் தருகின்றனர். அவன் முதன் முதலாக இந்தப் பச்சைப் பிள்ளைகளை எப்படித் தூக்குவது என்று தெரியாமல் சிலேட்டில் "அ "எழுத தடுமாறும் சிறுபிள்ளைபோல் தவிக்கிறான். வசந்தியும் அவன் தவிப்பை பார்த்து எதையோ நினைத்து சிரிக்க பையன் அவன் மார்பில் "சூ " அடிக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்....!

கதிர் தந்தையுமாகினான்....!

யாவும் கற்பனை....!

ஆக்கம் சுவி .....! tw_blush: 

 

 

Link to comment
Share on other sites

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

நான் ரெடி பாஸ்  ஐ யம் வெயிட்டிங்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

தர்சன் இதை முதலே எனக்கு சொல்லி இருந்தால், வசந்தி அப்பப்ப கதிருக்கு கரண்டியால ரெண்டு போடுறமாதிரி எழுதி இருக்கலாம். இட்ஸ் டூ லேட் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை, சுவியர்!

இன்று தான் முழுக்கதையையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்!

தொடருங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/08/2017 at 2:24 AM, suvy said:

காண்டமோ, அவற்றின் தொழிற்பாடு ஒன்றுதான்.

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் மிக அருமையான ஒரு கதையை தந்ததற்க்கு நன்றி.மிகவம் அனுபவித்து வாசித்தேன்.சரி சரி ஒரு சின்ன ஓய்வு தரலாம்.விரைவில் அடுத்த கதையுடன் வரவும்.இது வேண்டுகோள் இல்லை.அன்புக் கட்டளை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அபராஜிதன் said:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

ஆசை யாரை விட்டு வைச்சுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/07/2017 at 3:31 PM, நிலாமதி said:

 நல்ல  கதை     நன்றி.  மேலும் தொடர்க 

நன்றி சகோதரி....!  tw_blush:

On 21/07/2017 at 7:04 PM, ஜீவன் சிவா said:

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

அதுதானே....!  tw_blush:

On 21/07/2017 at 8:25 PM, சுவைப்பிரியன் said:

சுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்:)

தொடரும் போடுவது எனக்கும் இஷ்டமில்லை, என்ன செய்வது கதை தானா இளைத்து சுவை. நன்றி கருத்துக்கு....!  tw_blush:

On 21/07/2017 at 10:39 PM, தமிழ் சிறி said:

மிகவும்  ரசிக்கும்...  மறந்து போன,  யாழ்ப்பாண  எழுத்து நடை. சுவி. :110_writing_hand:
மெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய்  விட்ட, 
முன்னோர்களின்... சொற் பிரயோகங்கள். :grin:
அவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு,  நன்றிகள்...   சுவி.  :) 

நான் யாழ்ப்பாணத்தான் தானே எப்படி மறக்க முடியும் சிறியர்....நன்றி வரவுக்கும் கருத்துக்கும்....!  tw_blush:

On 23/07/2017 at 11:23 AM, putthan said:

முட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....

அந்தக் காலம் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் அதுதான் பூஸ்ட் . நன்றி புத்ஸ்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/09/2017 at 6:59 PM, நவீனன் said:

அடுத்த கதை எப்ப..:rolleyes:

சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும் தெரியாதோடி நேக்கு 

எப்போ இருந்தது இப்போ வாரத்துக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.7.2017 at 4:11 PM, suvy said:

பார்வதி: (குடித்து நிமிர்ந்தவளிடம்) பார்வதி சொல்கிறாள் வாழ்க்கையும் இப்ப நீ தண்ணி குடித்தது போலத்தான்.  அது எப்படி அத்தை....! சிறிது கவனித்து பார்த்தால் புரியும்.  "நீ குடிக்கவென்று ஆசையுடன் பார்த்து பருக வந்த நீர் உன்னைக் கடந்து போய் விட்டது. நீ பார்க்காத நீரைத்தான் இரு கைகளிலும் ஏந்திக் குடித்தாய். இப்ப அதுதான் உன் தாகத்தையும் தனித்து உடம்பிலும் உதிரத்திலும் விரவிக் கிடக்கு , உன் வாழ்க்கைபோல்".(பார்வதி எது சொன்னாலும் அதில் பல அர்த்தம் பொதிந்து இருக்கும்).

ஒரு நிமிடம் வசந்தி ஆடிப்போய் விட்டாள்.தனது மனதுக்குள் உள்ளிருந்து பார்த்ததுபோல் அனாசயமாக அந்தத் துன்ப வேரைப் பிடுங்கி எறிகிறாள் இந்தத் தாய்.ஒரு வார்த்தையில் இதைச் செய்வதற்கு ஒரு ஞ<னியால் அல்லது ஞ<னி போல் வாழ்பவர்களால்தான் முடியும். பார்வதிமீது பெரிய மரியாதையும், இனம் புரியாத பாசமும் எழுகின்றது. இந்தத் தாய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இவள் பிள்ளையை சந்தோசமாய் வைத்திருப்பதைத் தவிர.....!

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

அம்மன் கோயிலில் ஐந்து முறை சுற்றி கும்பிடுவது நல்லது என்று காஞ்சி மஹா பெரியவர் சொல்லுவார்.அதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரி.கோடாலிக் கொண்டை  என்பது காண வேலைகள் செய்யும்போது முடி தோளில் படராமல்  பின்னந் தலையில் உயர்த்திப் போடுவது.அவசரத்துக்கு அள்ளி முடிவது என்பார்களே அந்த மாதிரி...!

Résultat de recherche d'images pour "hairstyle indian village women"

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி சகோதரி........ tw_blush:

On 10/15/2017 at 9:12 PM, nochchi said:

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

நீங்கள் எல்லாம் பாராட்டும்போது மனம் மகிழ்வாக இருக்கின்றது.....நானும் பொறுமையாக இக் கதையை ஒருக்கால் வாசித்து பார்க்க வேண்டும்......!  ?

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்கு பின் இந்த கதையை பொறுமையாக வாசிக்கும்போது மனசில் ஒரு நிறைவு......!  🤔

இன்னும் இன்னும் பழைய கதைகளை தேடி வாசிக்க வேண்டும் போல் ஒரு எண்ணம்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.