Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 12
 
NEYMAR + PSG - காசு பணம் துட்டு மணி மணி
 
NEYMAR - ஒரு திறமையை பாவிப்பதைவிட வெல்வதற்காக குறுக்குவழிகளை நாடும் ஒரு விளையாட்டு வீரர்.
இவரது ஆட்டங்களின்போது இவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என தெரியாது ரசிகர்களை ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருப்பவர்.
 
PSGக்கு என்று ஒரு தரமுண்டு. அது இனிமாறும். நாறும்.
ஆனால் அதன் ஐரோப்பிய கோப்பை கனவு பலிக்கலாம். தரமா? வெற்றியா என்றால்...?
இப்பொழுதெல்லாம் வெற்றியே முன் நகர்கிறது.
 
காசு பணம் துட்டு மணி மணி...
 
19884202_1603177869714375_50858601593711
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 13
 
நேர்மை - நடிப்பு
 
எந்த ஒருவிடயத்திலும் சில அனுபவங்களையும் பாடங்களையும்  பெற்றுக்கொள்ளமுடியும்.
சிலவேளைகளில் அது பெரும் உண்மைகளை எடுத்துரைப்பதுமுண்டு.
BIGBOSS - இலிருந்து
ஓவியாவுக்கான மக்கள் ஆதரவும் ஜூலியுடனான கடுப்பும்.
கொஞ்சம் தூர நோக்கினால் பொதுவாழ்விலுள்ளவர்கள் நேர்மையாக இருக்கணும்.
நடிகைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நேர்மை தவறும் பொதுநலம்சார்ந்தவர்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு தூக்கி எறியப்படுவார்கள்.
மக்களுக்கு மேலும்மேலும் இனம் காட்டப்படுவார்கள் (அதைத்தான் கமலும் இறுதிவரை செய்தார் tw_anguished:)
நடிகைகள் மன்னிக்கப்படுவார்கள்.
அவர்களது கண்ணீர் விலை மதிப்பற்றது.
ஆட்சி அமைக்கும் தகுதி பெறும். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 14

இன்று 08-08 என் நண்பனின் பிறந்தநாள்.

அதிகம் பழகியது அதிகம் பகிர்ந்தது அதிகம் புரிந்து கொண்டது என்றால் அது என் மதி தான்.

அப்படித்தான் அவனுக்கும்.

முறையால் நான் சித்தப்பா அவன் மகன் என்ற போதும் நல்ல நண்பர்கள் நாங்கள்.

உயர்தரப்படிப்பு எம்மை பிரித்தபோதும்
விடுமுறை என்றால் ஒன்றில் அவன் கொழும்பிலிருப்பான் அல்லது நான் ஊரிலிருப்பேன்.

லீவு முடியும்வரை ஒன்றாகவே எங்களை காணலாம்.

எமது வாழ்வில்
படிப்பிலிருந்து பொறுப்புக்கள், காதல், திருமணம்........ என எல்லாமே

நாங்கள் இருவரும் பேசி எடுத்த முடிவுகளே.

இன்று முழுவதும் எனது கண்கள் கலங்கி இருக்கும்.

ஏனெனில் அவன் இன்று எம்மோடு இல்லை.

எனது 
உயிருள்ளவரை உன் நினைவிருக்கும்.

வாழ்த்துக்கள் மதி.

L’image contient peut-être : 2 personnes, fleur
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் விசுகு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 15
 
முதல் ஈழத்தமிழ் பெண் விமானி
 
இந்த சொல் தற்பொழுது அடிக்கடி அடிபடுகிறது. ஈழத்தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டும் மண் பற்றோடும் உயர்நிலை அடைவதால் இவ்வாறு ஈழத்தமிழர் எவராவது உயர்வடைவதை ஈழத்தமிழினம் தானாகவே கொண்டாடுகிறது. இந்த ஒற்றுமையும் ஒருவருக்கொருவரான போற்றுதலும் எம்மிடையே மேலும் மேலும் உயர்நிலையை அடைவதை ஊக்குவிக்கும். எனவே இது வரவேற்கத்தக்கதே.
 
அதேநேரம் அக்கறையின் பால் சில விடயங்களை சில தகவல்களை ஆராயாமல் சேர்த்துவிடுகின்றோம்.
 
ஈழத்தமிழ் மக்களைப் பெருமைப்பட வைக்கும் வகையில் அர்ச்சனா செல்லத்துரை அவர்கள் பெண்விமானியாக சாதனை படைத்துள்ளார். ஆனால் முதல் ஈழத்தமிழ்ப்பெண் விமானி என்பது தவறான முன்னுதாரணமாகும்.
 
அந்த பிள்ளைக்கு இதனை எடுத்துரைப்பதன் ஊடாக இனியும் இவ்வாறு தவறு ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 16
 
ஒரு நாள் குளிக்காது விட்டால் நாறும் உடலை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் ஆடுகிறார்கள் மனிதர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 17

சொந்த வாழ்விலும் சரி முகநூல் இணையவழிகளிலும் சரி

எனது நண்பர்களாக இருப்பதற்கு ஒரேயோரு விடயத்தை மட்டுமே நான் பார்ப்பதுண்டு.

தேசியத்தலைவரை அவர்கள் தலைவராக ஏற்கவேண்டுமென்பதில்லை.

அவரை ஒரு போராளியாகவாவது ஏற்றிருக்கணும் என்பது மட்டுமே.

இன்று எனது முகநூல் 600 நண்பர்களை அடைந்திருப்பதாக சொல்கிறது. 
அதற்காகவே இப்பதிவு.

மேலே நான் எழுதிய கருத்தில் மாறுபாடுடையவர்கள்

தவறுதலாக எவராவது சேர்க்கப்பட்டிருப்பின் அறியத்தாருங்கள்

அல்லது எனது நட்பில் இருப்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 18

ஒரு நாட்டின் சுதந்திரதினம்

ஒருவர்தனது நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுகிறார் என்றால்

அவர் எமது எதிரியானாலும் அவரது சந்தோசத்துக்கும்

அவர் வணங்கும் கொடிக்கும் மரியாதை கொடுக்கணும்.

அந்த நாளில் அவை மீதான பகை பற்றி பேசுவதோ

அந்தக்கொடியின் சரி பிழைகள் பற்றி பேசுவதோ 
அந்த நண்பரை அந்த மக்களை கோபப்படுத்துவதாகும்.

அந்தவகையில் இன்று மௌனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 19

திடீர் லீவு?

சிலர் காலையில் எழும்பியவுடன் எந்தக்காரணமும் இன்றி முடிவெடுப்பார்கள்

இன்றைக்கு வேலைக்கு போகப்போவதில்லை என்று.

நான் வேலை செய்த இடங்களில் ஒரு போதும்

எவ்வளவு தான் சுகயீனமாக இருந்தபோதும்

இது போன்று திடீர் ஓய்வு எடுத்ததில்லை.

அதிக சுகயீனமாக இருந்தால் கூட முக்கிய நேரத்தில் மட்டுமாவது

அன்று சென்று தான் பின்னர் அனுமதியோடு லீவு எடுப்பதுண்டு.

காரணம் முதலாளிக்காகவோ மேலதிகாரிகளின் கோபதாபங்களுக்காகவோ அல்ல.

நான் இவ்வாறு திடீரென ஓய்வெடுத்தால் பாதிக்கப்படப்போவது எனது சக நண்பனே.

எமது சக நண்பன் இவ்வாறு திடீரென லீவெடுத்தால்

எமக்கு எவ்வளவு கடினமாகவும் கடுப்பாகவும் இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 20
 
சீரியசாக மட்டும் தான் பேசமுடியுமா என்ன?
 
கோழியா?
முட்டையா?
முதலில் வந்தது??
 
(நன்றி தம்பி நெடுக்கு)
 
 
 
 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 21

இன்று படப்பிடிப்பு நாளாம்.

இதோ எனது சின்ன மகளின் கமராக்கைவண்ணம்.

safe_image.php?d=AQBlvWaJwh3gnLUg&w=160&
33 Followers, 28 Following, 95 Posts - See Instagram photos and videos from @okami_19
INSTAGRAM

https://www.instagram.com/okami_19/?hl=fr

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 22
 
போட்டோக்களும் நாமும்...
 
இன்று வேற்றுநாட்டவர்கள் முகநூலில் இணையங்களில் தமது குழந்தைப்பருவ படங்களிலிருந்து தமது ஒவ்வொரு பருவ வளர்ச்சிகளின் படியே தமது மற்றும் தமது குடும்ப போட்டோக்களை போடுவார்கள்.
 
சிலவேளைகளில் கண்கள் பனிப்பதுண்டு. என்னிடம் சிறுவயது மற்றும் பாடசாலைப்பருவ மற்றும் எனது குடும்பப்படங்கள் எதுவுமில்லை. எல்லாம் கலவரத்தோடு போச்சு.
 
நான் மட்டுமல்ல ஈழத்தமிழர்களது நிலையே இது தான். எத்தனை இடம்பெயர்வு???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 23
 
முதலாளி + தொழிலாளி = பேச்சுவார்த்தை (கொடுக்கல் வாங்கல்)
 
ஒரு பெரிய நிறுவனத்தில் (600 தொழிலாளர்கள்) தொழிலாளர்களின் நலன் கருதி முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் இருவரில் ஒருவராக  நானும் இருந்தேன்.
சம்பள உயர்வு கேட்கும் போது நாம் ஒரு மணித்தியாலத்துக்கு இத்தனை சதம் தானே என கணக்கு பார்ப்போம்.
ஆனால் முதலாளிகள் அதனை வேலை செய்யும் ஆட்களின் தொகையாலும்
வருடத்துக்கு எவ்வளவு எனவும் கணக்கு போடுவார்கள்.
அது மில்லியன்களை தாண்டிவிடும். எனவே அது நிறைவேறாது.
 
ஆனால் அதே நிறுவனத்துக்கும்  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நன்மை தரும்
சில சட்டங்களும் அரசகொடுப்பனவுகளும் இருக்கின்றன.
அவற்றை கேட்பதினூடாக தொழிலாளர்கள் நன்மை பெறுவதுடன் நிறுவனமும் நன்மையும்  மதிப்பும் அடையும்.
 
அவற்றையே நாங்கள் இருவரும் செய்தோம்
 
1- வீடில்லாதவர்களுக்கு வீட்டுவசதி (1% patronal et 1% logement)
2- வேலை செய்யும் காலத்துக்கு ஏற்ப சம்பள உயர்வு
3- வருட இறுதியில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கு (13வது மாத சம்பளம்)
4- மருத்துவ காப்புறுதி (Mutuelle)
5- இரவு வேலை செய்பவர்களுக்கு வாகன வசதி (Taxi)
6- குறிப்பிட்ட மணித்தியாலயத்துக்கு மேல் (5 மணித்தியாலம்) இரண்டு சாப்பாட்டுக்கு பணம்
7- தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து நிறுவனத்தின் பொருளாதாரத்தை சிதையாமல் பார்ப்பவர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு (Prime)
8- வட்டியில்லாக்கடன் வசதி
 
தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்தபடி இவ்வாறு பலவற்றை செய்த திருப்தி என்றும் உண்டு.
 
உங்கள் எவருக்காவது பயன்படலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 24
 
நல்லூர்க்கந்தன் திருவிழா
 
பார்க்க ஆசையாகவும் பெருமையாகவும் இருக்கு.
மக்கள் சந்தோசமாக கூடி ஆடி மகிழ்வதை வரவேற்கணும் ஊக்கப்படுத்தணும்.
 
ஆனால் புலம் பெயர் தமிழர்கள் இந்த விழாவுக்கு மட்டும் போவது
அந்த மக்கள் வெள்ளத்தில் கலப்பது மட்டும் ஒரு போதும் கந்தனது கருணையை தராது.
அவர்கள் வன்னிக்கும் கிழக்குக்கும் போகணும். அதுவே தர்மமும் கூட.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 25
 
ஒருவருக்கு மீனை கொடுப்பதை விட மீனை எப்படி பிடிப்பது என கற்றுக்கொடுப்பதே சரி
 
இப்படி ஒரு பழமொழியுண்டு.
இதன் அர்த்தம் பணஉதவி செய்யாமல்
பணத்தை எவ்வாறு உழைக்கலாம் என்பதை கற்றுக்கொடுத்தலாகும்.
 
இதை தெரிந்த பலரும்
தமது பிள்ளைகளுக்கு இதை சொல்லிக்கொடுத்திருக்கிறீர்களா??????
 
இல்லை என்பது தான் பதில்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 26
 
கடவுள் = நம்பிக்கை - மறுப்பு
 
கடவுள் மறுப்புக்கும் அறிவுக்கும் முடிச்சுப்போடுவதை காணக்கூடியதாக உள்ளது.
சிலர் தம்மை பகுத்தறிவாளன் என்றபடி
தாம் அறிவாளிகள் என்றும் முடிச்சு போடுகிறார்கள்.
இது தவறு.
பகுத்தறிவென்பது சில மூட நம்பிக்கைகளிலிருந்து வெளி வருவது.
அதற்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.
அவ்வாறு கடவுள் மறுப்புக்கும் அறிவுக்கும் தொடர்பிருப்பதாக சொல்பவர்கள்
உண்மையில் இன்னோரு மூடநம்பிக்கையை புகுத்துகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 27

வெளிநாட்டுப்பறப்புக்களைவிட வாழும் தேசத்தை முழுமையாக அறிதலே விருப்பமான ஒன்று எனக்கு.

அந்தவகையில் இந்தமுறை சென்ற இடம் COLMAR.

இந்த மண்ணின் கதையை நாம் படித்து வைக்கணும்.

சில தலைமுறைகளுக்கு முன்னர்வரை

சொந்த மொழி கலாச்சாரங்களுடன் வாழ்ந்த இந்தமண்ணின் மக்கள்

பின்னர் யேர்மனிய பிரெஞ்சு அரசுகளால் மாறி மாறி ஆட்கொள்ளப்பட்டு

இன்று தமது மொழி மற்றும் தேசத்தை தொலைத்து பிரெஞ்சு மக்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு இந்த சிலையை வடிவமைத்ததும்

முதன் முதலில் கல்குலேற்றரை கண்டுபிடித்ததும் இந்த மண்ணில் பிறந்தவர்களே.

அதன் ஞாபகார்த்தமாக இன்னொரு சிலை அந்த மண்ணில் இன்றும்.

மரத்தூண்களினூடே சீமெந்தால் சூழப்பட்ட அவர்களது வீடுகள்

இன்றும் அவ்வாறே காட்சி தருகின்றன. பாதுகாக்கப்படுகின்றன.

L’image contient peut-être : 1 personne, debout, herbe, plante, arbre, ciel, plein air et nature
L’image contient peut-être : 1 personne, debout, ciel et plein air
L’image contient peut-être : plein air
21432815_10209859030733546_5252597932039
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 28
 
பேனாவின் கூர்மை அறிவோமா??
 
ஆயதப்போராட்டம் மற்றும் வன்முறைக்கு எதிராக எழுதுபவர்களை கவனித்தால் ஒன்று புரியும்
இவர்களின் எழுத்துக்களில் மிகுந்த வன்முறையும் ஆத்திரப்படுத்துதலும் இருக்கும்.
 
இதனுடன் ஒப்பிடும் போது ஆயுதங்கள் சாதாரணமானவையாகிவிடும்.
 
இந்த எழுத்து வன்முறைக்கு நிகரான ஆயுதம் உலகில் எதுவுமே இல்லை எனலாம்.
 
கத்தி மட்டுமல்ல பேனாவும்இரு பக்கமும் கூர்மையானது தான்.
அதனால் தான் அது அவர்களையே பதம் பார்த்து விடுகிறது.
 
இதிலே பேனாவை ஆயுதமாகப்பாவிப்பவர்கள் கையிலே
ஆயுதமும் வந்து விட்டால்........???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 29
 
வெல்வதற்காக எதையும் செய்யும் மனநிலை.
 
நேற்று BIGBOSS நிகழ்ச்சி பார்த்தபோது சுட்டது.
 
வெல்வதற்காக
ஒரே குடும்பமாக நண்பர்களாக பழகுபவர்களில் ஒருவர்
சக நண்பரின் மேல் மிளகாய்த்தூளை கரைத்து ஊற்றுகிறார்கள்.
வெல்வதற்காக எதையும் செய்யலாம் என முடிவெடுத்திருந்தால்
கெட்ட பெயரோடு இன்று தமிழருக்கென்று ஒரு நாடு இருந்திருக்கும்.
ஆனாலும் அத்தனை அக்கிரமங்களையும்
போர்க்குற்றங்களையும் செய்து வென்ற சிங்களம்
உலகத்தால் ஒதுக்கப்பட்டா விட்டது?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 29
 
ஆறுமுக நாவலர் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
தயவு செய்து ஒருவரை விமர்சிக்க முன்னர் அவர் பற்றி முழுமையாக அறியுங்கள்.
காலம் சூழ்நிலைகளை உணருங்கள்.
 
குறும்படப்போட்டிக்கான விருதுக்கு
நாவலர் பெயரை வைத்தபோது வந்த எதிர்ப்பும் இவ்வாறானதே.
 
தமிழும் சைவமும் அழியும் நிலையிலிருந்த சூழ்நிலையில்
அதைக்காத்தவர்கள் வரிசையில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர் அவர்கள்.
 
 
நாளை ஒரு காலத்தில் பிரபாகரன் பற்றியும் இவ்வாறு விவாதங்கள் நடக்கக்கூடும்.
 
போற்றுதற்குரியதை நல்லதை எடுத்துக்கொள்வோம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 30
 
நேற்றைய BIGBOSS பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்.
தமிழகத்தின் அரசியல்நிலை இது தான்.
ஒருத்தர் நாடகம் கதை வசனம் உணர்ச்சி வயப்படுதல் மற்றும் ஏமாற்றுதல் (சினேகன்)
மற்றவர்
ஒன்றை
அடைவதற்காக எதையும் சவாலாக ஏற்று மூர்க்கத்தனமாக வெல்லும்வரை போராடுபவர் (சுயா)
 
இரண்டு பேருமே தமிழகத்துக்கு ஆபத்தானவர்கள் என்பது தான்
தமிழக அரசியல் தரும் பாடம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 31
 
பிள்ளைகளின் திருமணம்
 
இப்பொழுதெல்லாம் வளர்ந்த மக்களை வைத்திருப்பவர்களுக்கு
அவர்களது திருமணம் சார்ந்து முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
 
என்னைப்பொறுத்தவரையும்
என் பிள்ளைகளைப்பொறுத்தவரையும்
எனது இறகுகளின் கீழ் அவர்களுக்கிருக்கும் பாதுகாப்பு
சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்கப்போவதில்லை என்பதை
நானும் பிள்ளைகளும் உணர்கின்றோம்.
 
ஆனாலும் சமூகமும் காலமும் எனது ஆயுளும் உந்தி தள்ளுகின்றன.
 
இது தான் அநேகமான பெற்றோர்களின் நிலையாக உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 32
 
உண்மையான
பிரபலமான
கள்ளங்கபடமற்ற ஒருவருக்கு
விளம்பரம் தேவையில்லை என்கிறார்கள்?
 
அப்புறம் கடவுளுக்கு ஏன் இத்தனை விளம்பரம்?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 33
 
அந்த முருகனுக்கே இவர் நிகரானவர்.
அ.....ந்..... த முருகனுக்கே இவர் நிகரானவர்.........
 
நாம் எதையும் மறக்கவுமில்லை
மன்னிக்கவுமில்லை
 
அவர்களை புதைக்கவுமில்லை
விதைத்தோம்
எம்முள் விதைத்தோம்.............
 
L’image contient peut-être : 1 personne, ciel et plein air
 
 
L’image contient peut-être : 5 personnes, feu
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 34

வித்தியாவுக்கான நீதி

சொந்த பந்தம்
ஊர் உறவு 
லஞ்சம் 
பணத்திமிர் 
அரச அதிகாரம் 
அடக்குமுறை 
சட்ட ஆளுமை 
அத்தனையையும் தாண்டி.....

சில மாதங்களாக தலையை குனிந்த எனது மண் தலை நிமிர்கிறது.

நீதிக்காக வீதியில் இறங்கிய
போராடிய 
இதற்காக கடைசிவரை உழைத்த
அனைவருக்கும் நன்றிகள்

தர்மம் வாழும்
நிலைக்கும்
நீ அதற்காக  இறுதிவரை  போராடினால்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.