Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 12
 
NEYMAR + PSG - காசு பணம் துட்டு மணி மணி
 
NEYMAR - ஒரு திறமையை பாவிப்பதைவிட வெல்வதற்காக குறுக்குவழிகளை நாடும் ஒரு விளையாட்டு வீரர்.
இவரது ஆட்டங்களின்போது இவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என தெரியாது ரசிகர்களை ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருப்பவர்.
 
PSGக்கு என்று ஒரு தரமுண்டு. அது இனிமாறும். நாறும்.
ஆனால் அதன் ஐரோப்பிய கோப்பை கனவு பலிக்கலாம். தரமா? வெற்றியா என்றால்...?
இப்பொழுதெல்லாம் வெற்றியே முன் நகர்கிறது.
 
காசு பணம் துட்டு மணி மணி...
 
19884202_1603177869714375_50858601593711
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 13
 
நேர்மை - நடிப்பு
 
எந்த ஒருவிடயத்திலும் சில அனுபவங்களையும் பாடங்களையும்  பெற்றுக்கொள்ளமுடியும்.
சிலவேளைகளில் அது பெரும் உண்மைகளை எடுத்துரைப்பதுமுண்டு.
BIGBOSS - இலிருந்து
ஓவியாவுக்கான மக்கள் ஆதரவும் ஜூலியுடனான கடுப்பும்.
கொஞ்சம் தூர நோக்கினால் பொதுவாழ்விலுள்ளவர்கள் நேர்மையாக இருக்கணும்.
நடிகைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நேர்மை தவறும் பொதுநலம்சார்ந்தவர்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு தூக்கி எறியப்படுவார்கள்.
மக்களுக்கு மேலும்மேலும் இனம் காட்டப்படுவார்கள் (அதைத்தான் கமலும் இறுதிவரை செய்தார் tw_anguished:)
நடிகைகள் மன்னிக்கப்படுவார்கள்.
அவர்களது கண்ணீர் விலை மதிப்பற்றது.
ஆட்சி அமைக்கும் தகுதி பெறும். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 14

இன்று 08-08 என் நண்பனின் பிறந்தநாள்.

அதிகம் பழகியது அதிகம் பகிர்ந்தது அதிகம் புரிந்து கொண்டது என்றால் அது என் மதி தான்.

அப்படித்தான் அவனுக்கும்.

முறையால் நான் சித்தப்பா அவன் மகன் என்ற போதும் நல்ல நண்பர்கள் நாங்கள்.

உயர்தரப்படிப்பு எம்மை பிரித்தபோதும்
விடுமுறை என்றால் ஒன்றில் அவன் கொழும்பிலிருப்பான் அல்லது நான் ஊரிலிருப்பேன்.

லீவு முடியும்வரை ஒன்றாகவே எங்களை காணலாம்.

எமது வாழ்வில்
படிப்பிலிருந்து பொறுப்புக்கள், காதல், திருமணம்........ என எல்லாமே

நாங்கள் இருவரும் பேசி எடுத்த முடிவுகளே.

இன்று முழுவதும் எனது கண்கள் கலங்கி இருக்கும்.

ஏனெனில் அவன் இன்று எம்மோடு இல்லை.

எனது 
உயிருள்ளவரை உன் நினைவிருக்கும்.

வாழ்த்துக்கள் மதி.

L’image contient peut-être : 2 personnes, fleur
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் விசுகு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 15
 
முதல் ஈழத்தமிழ் பெண் விமானி
 
இந்த சொல் தற்பொழுது அடிக்கடி அடிபடுகிறது. ஈழத்தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டும் மண் பற்றோடும் உயர்நிலை அடைவதால் இவ்வாறு ஈழத்தமிழர் எவராவது உயர்வடைவதை ஈழத்தமிழினம் தானாகவே கொண்டாடுகிறது. இந்த ஒற்றுமையும் ஒருவருக்கொருவரான போற்றுதலும் எம்மிடையே மேலும் மேலும் உயர்நிலையை அடைவதை ஊக்குவிக்கும். எனவே இது வரவேற்கத்தக்கதே.
 
அதேநேரம் அக்கறையின் பால் சில விடயங்களை சில தகவல்களை ஆராயாமல் சேர்த்துவிடுகின்றோம்.
 
ஈழத்தமிழ் மக்களைப் பெருமைப்பட வைக்கும் வகையில் அர்ச்சனா செல்லத்துரை அவர்கள் பெண்விமானியாக சாதனை படைத்துள்ளார். ஆனால் முதல் ஈழத்தமிழ்ப்பெண் விமானி என்பது தவறான முன்னுதாரணமாகும்.
 
அந்த பிள்ளைக்கு இதனை எடுத்துரைப்பதன் ஊடாக இனியும் இவ்வாறு தவறு ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 16
 
ஒரு நாள் குளிக்காது விட்டால் நாறும் உடலை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் ஆடுகிறார்கள் மனிதர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 17

சொந்த வாழ்விலும் சரி முகநூல் இணையவழிகளிலும் சரி

எனது நண்பர்களாக இருப்பதற்கு ஒரேயோரு விடயத்தை மட்டுமே நான் பார்ப்பதுண்டு.

தேசியத்தலைவரை அவர்கள் தலைவராக ஏற்கவேண்டுமென்பதில்லை.

அவரை ஒரு போராளியாகவாவது ஏற்றிருக்கணும் என்பது மட்டுமே.

இன்று எனது முகநூல் 600 நண்பர்களை அடைந்திருப்பதாக சொல்கிறது. 
அதற்காகவே இப்பதிவு.

மேலே நான் எழுதிய கருத்தில் மாறுபாடுடையவர்கள்

தவறுதலாக எவராவது சேர்க்கப்பட்டிருப்பின் அறியத்தாருங்கள்

அல்லது எனது நட்பில் இருப்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 18

ஒரு நாட்டின் சுதந்திரதினம்

ஒருவர்தனது நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுகிறார் என்றால்

அவர் எமது எதிரியானாலும் அவரது சந்தோசத்துக்கும்

அவர் வணங்கும் கொடிக்கும் மரியாதை கொடுக்கணும்.

அந்த நாளில் அவை மீதான பகை பற்றி பேசுவதோ

அந்தக்கொடியின் சரி பிழைகள் பற்றி பேசுவதோ 
அந்த நண்பரை அந்த மக்களை கோபப்படுத்துவதாகும்.

அந்தவகையில் இன்று மௌனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 19

திடீர் லீவு?

சிலர் காலையில் எழும்பியவுடன் எந்தக்காரணமும் இன்றி முடிவெடுப்பார்கள்

இன்றைக்கு வேலைக்கு போகப்போவதில்லை என்று.

நான் வேலை செய்த இடங்களில் ஒரு போதும்

எவ்வளவு தான் சுகயீனமாக இருந்தபோதும்

இது போன்று திடீர் ஓய்வு எடுத்ததில்லை.

அதிக சுகயீனமாக இருந்தால் கூட முக்கிய நேரத்தில் மட்டுமாவது

அன்று சென்று தான் பின்னர் அனுமதியோடு லீவு எடுப்பதுண்டு.

காரணம் முதலாளிக்காகவோ மேலதிகாரிகளின் கோபதாபங்களுக்காகவோ அல்ல.

நான் இவ்வாறு திடீரென ஓய்வெடுத்தால் பாதிக்கப்படப்போவது எனது சக நண்பனே.

எமது சக நண்பன் இவ்வாறு திடீரென லீவெடுத்தால்

எமக்கு எவ்வளவு கடினமாகவும் கடுப்பாகவும் இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 20
 
சீரியசாக மட்டும் தான் பேசமுடியுமா என்ன?
 
கோழியா?
முட்டையா?
முதலில் வந்தது??
 
(நன்றி தம்பி நெடுக்கு)
 
 
 
 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 21

இன்று படப்பிடிப்பு நாளாம்.

இதோ எனது சின்ன மகளின் கமராக்கைவண்ணம்.

safe_image.php?d=AQBlvWaJwh3gnLUg&w=160&
33 Followers, 28 Following, 95 Posts - See Instagram photos and videos from @okami_19
INSTAGRAM

https://www.instagram.com/okami_19/?hl=fr

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 22
 
போட்டோக்களும் நாமும்...
 
இன்று வேற்றுநாட்டவர்கள் முகநூலில் இணையங்களில் தமது குழந்தைப்பருவ படங்களிலிருந்து தமது ஒவ்வொரு பருவ வளர்ச்சிகளின் படியே தமது மற்றும் தமது குடும்ப போட்டோக்களை போடுவார்கள்.
 
சிலவேளைகளில் கண்கள் பனிப்பதுண்டு. என்னிடம் சிறுவயது மற்றும் பாடசாலைப்பருவ மற்றும் எனது குடும்பப்படங்கள் எதுவுமில்லை. எல்லாம் கலவரத்தோடு போச்சு.
 
நான் மட்டுமல்ல ஈழத்தமிழர்களது நிலையே இது தான். எத்தனை இடம்பெயர்வு???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 23
 
முதலாளி + தொழிலாளி = பேச்சுவார்த்தை (கொடுக்கல் வாங்கல்)
 
ஒரு பெரிய நிறுவனத்தில் (600 தொழிலாளர்கள்) தொழிலாளர்களின் நலன் கருதி முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் இருவரில் ஒருவராக  நானும் இருந்தேன்.
சம்பள உயர்வு கேட்கும் போது நாம் ஒரு மணித்தியாலத்துக்கு இத்தனை சதம் தானே என கணக்கு பார்ப்போம்.
ஆனால் முதலாளிகள் அதனை வேலை செய்யும் ஆட்களின் தொகையாலும்
வருடத்துக்கு எவ்வளவு எனவும் கணக்கு போடுவார்கள்.
அது மில்லியன்களை தாண்டிவிடும். எனவே அது நிறைவேறாது.
 
ஆனால் அதே நிறுவனத்துக்கும்  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நன்மை தரும்
சில சட்டங்களும் அரசகொடுப்பனவுகளும் இருக்கின்றன.
அவற்றை கேட்பதினூடாக தொழிலாளர்கள் நன்மை பெறுவதுடன் நிறுவனமும் நன்மையும்  மதிப்பும் அடையும்.
 
அவற்றையே நாங்கள் இருவரும் செய்தோம்
 
1- வீடில்லாதவர்களுக்கு வீட்டுவசதி (1% patronal et 1% logement)
2- வேலை செய்யும் காலத்துக்கு ஏற்ப சம்பள உயர்வு
3- வருட இறுதியில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கு (13வது மாத சம்பளம்)
4- மருத்துவ காப்புறுதி (Mutuelle)
5- இரவு வேலை செய்பவர்களுக்கு வாகன வசதி (Taxi)
6- குறிப்பிட்ட மணித்தியாலயத்துக்கு மேல் (5 மணித்தியாலம்) இரண்டு சாப்பாட்டுக்கு பணம்
7- தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து நிறுவனத்தின் பொருளாதாரத்தை சிதையாமல் பார்ப்பவர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு (Prime)
8- வட்டியில்லாக்கடன் வசதி
 
தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்தபடி இவ்வாறு பலவற்றை செய்த திருப்தி என்றும் உண்டு.
 
உங்கள் எவருக்காவது பயன்படலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 24
 
நல்லூர்க்கந்தன் திருவிழா
 
பார்க்க ஆசையாகவும் பெருமையாகவும் இருக்கு.
மக்கள் சந்தோசமாக கூடி ஆடி மகிழ்வதை வரவேற்கணும் ஊக்கப்படுத்தணும்.
 
ஆனால் புலம் பெயர் தமிழர்கள் இந்த விழாவுக்கு மட்டும் போவது
அந்த மக்கள் வெள்ளத்தில் கலப்பது மட்டும் ஒரு போதும் கந்தனது கருணையை தராது.
அவர்கள் வன்னிக்கும் கிழக்குக்கும் போகணும். அதுவே தர்மமும் கூட.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 25
 
ஒருவருக்கு மீனை கொடுப்பதை விட மீனை எப்படி பிடிப்பது என கற்றுக்கொடுப்பதே சரி
 
இப்படி ஒரு பழமொழியுண்டு.
இதன் அர்த்தம் பணஉதவி செய்யாமல்
பணத்தை எவ்வாறு உழைக்கலாம் என்பதை கற்றுக்கொடுத்தலாகும்.
 
இதை தெரிந்த பலரும்
தமது பிள்ளைகளுக்கு இதை சொல்லிக்கொடுத்திருக்கிறீர்களா??????
 
இல்லை என்பது தான் பதில்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 26
 
கடவுள் = நம்பிக்கை - மறுப்பு
 
கடவுள் மறுப்புக்கும் அறிவுக்கும் முடிச்சுப்போடுவதை காணக்கூடியதாக உள்ளது.
சிலர் தம்மை பகுத்தறிவாளன் என்றபடி
தாம் அறிவாளிகள் என்றும் முடிச்சு போடுகிறார்கள்.
இது தவறு.
பகுத்தறிவென்பது சில மூட நம்பிக்கைகளிலிருந்து வெளி வருவது.
அதற்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.
அவ்வாறு கடவுள் மறுப்புக்கும் அறிவுக்கும் தொடர்பிருப்பதாக சொல்பவர்கள்
உண்மையில் இன்னோரு மூடநம்பிக்கையை புகுத்துகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 27

வெளிநாட்டுப்பறப்புக்களைவிட வாழும் தேசத்தை முழுமையாக அறிதலே விருப்பமான ஒன்று எனக்கு.

அந்தவகையில் இந்தமுறை சென்ற இடம் COLMAR.

இந்த மண்ணின் கதையை நாம் படித்து வைக்கணும்.

சில தலைமுறைகளுக்கு முன்னர்வரை

சொந்த மொழி கலாச்சாரங்களுடன் வாழ்ந்த இந்தமண்ணின் மக்கள்

பின்னர் யேர்மனிய பிரெஞ்சு அரசுகளால் மாறி மாறி ஆட்கொள்ளப்பட்டு

இன்று தமது மொழி மற்றும் தேசத்தை தொலைத்து பிரெஞ்சு மக்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு இந்த சிலையை வடிவமைத்ததும்

முதன் முதலில் கல்குலேற்றரை கண்டுபிடித்ததும் இந்த மண்ணில் பிறந்தவர்களே.

அதன் ஞாபகார்த்தமாக இன்னொரு சிலை அந்த மண்ணில் இன்றும்.

மரத்தூண்களினூடே சீமெந்தால் சூழப்பட்ட அவர்களது வீடுகள்

இன்றும் அவ்வாறே காட்சி தருகின்றன. பாதுகாக்கப்படுகின்றன.

L’image contient peut-être : 1 personne, debout, herbe, plante, arbre, ciel, plein air et nature
L’image contient peut-être : 1 personne, debout, ciel et plein air
L’image contient peut-être : plein air
21432815_10209859030733546_5252597932039
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 28
 
பேனாவின் கூர்மை அறிவோமா??
 
ஆயதப்போராட்டம் மற்றும் வன்முறைக்கு எதிராக எழுதுபவர்களை கவனித்தால் ஒன்று புரியும்
இவர்களின் எழுத்துக்களில் மிகுந்த வன்முறையும் ஆத்திரப்படுத்துதலும் இருக்கும்.
 
இதனுடன் ஒப்பிடும் போது ஆயுதங்கள் சாதாரணமானவையாகிவிடும்.
 
இந்த எழுத்து வன்முறைக்கு நிகரான ஆயுதம் உலகில் எதுவுமே இல்லை எனலாம்.
 
கத்தி மட்டுமல்ல பேனாவும்இரு பக்கமும் கூர்மையானது தான்.
அதனால் தான் அது அவர்களையே பதம் பார்த்து விடுகிறது.
 
இதிலே பேனாவை ஆயுதமாகப்பாவிப்பவர்கள் கையிலே
ஆயுதமும் வந்து விட்டால்........???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 29
 
வெல்வதற்காக எதையும் செய்யும் மனநிலை.
 
நேற்று BIGBOSS நிகழ்ச்சி பார்த்தபோது சுட்டது.
 
வெல்வதற்காக
ஒரே குடும்பமாக நண்பர்களாக பழகுபவர்களில் ஒருவர்
சக நண்பரின் மேல் மிளகாய்த்தூளை கரைத்து ஊற்றுகிறார்கள்.
வெல்வதற்காக எதையும் செய்யலாம் என முடிவெடுத்திருந்தால்
கெட்ட பெயரோடு இன்று தமிழருக்கென்று ஒரு நாடு இருந்திருக்கும்.
ஆனாலும் அத்தனை அக்கிரமங்களையும்
போர்க்குற்றங்களையும் செய்து வென்ற சிங்களம்
உலகத்தால் ஒதுக்கப்பட்டா விட்டது?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 29
 
ஆறுமுக நாவலர் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
தயவு செய்து ஒருவரை விமர்சிக்க முன்னர் அவர் பற்றி முழுமையாக அறியுங்கள்.
காலம் சூழ்நிலைகளை உணருங்கள்.
 
குறும்படப்போட்டிக்கான விருதுக்கு
நாவலர் பெயரை வைத்தபோது வந்த எதிர்ப்பும் இவ்வாறானதே.
 
தமிழும் சைவமும் அழியும் நிலையிலிருந்த சூழ்நிலையில்
அதைக்காத்தவர்கள் வரிசையில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர் அவர்கள்.
 
 
நாளை ஒரு காலத்தில் பிரபாகரன் பற்றியும் இவ்வாறு விவாதங்கள் நடக்கக்கூடும்.
 
போற்றுதற்குரியதை நல்லதை எடுத்துக்கொள்வோம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 30
 
நேற்றைய BIGBOSS பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்.
தமிழகத்தின் அரசியல்நிலை இது தான்.
ஒருத்தர் நாடகம் கதை வசனம் உணர்ச்சி வயப்படுதல் மற்றும் ஏமாற்றுதல் (சினேகன்)
மற்றவர்
ஒன்றை
அடைவதற்காக எதையும் சவாலாக ஏற்று மூர்க்கத்தனமாக வெல்லும்வரை போராடுபவர் (சுயா)
 
இரண்டு பேருமே தமிழகத்துக்கு ஆபத்தானவர்கள் என்பது தான்
தமிழக அரசியல் தரும் பாடம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 31
 
பிள்ளைகளின் திருமணம்
 
இப்பொழுதெல்லாம் வளர்ந்த மக்களை வைத்திருப்பவர்களுக்கு
அவர்களது திருமணம் சார்ந்து முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
 
என்னைப்பொறுத்தவரையும்
என் பிள்ளைகளைப்பொறுத்தவரையும்
எனது இறகுகளின் கீழ் அவர்களுக்கிருக்கும் பாதுகாப்பு
சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்கப்போவதில்லை என்பதை
நானும் பிள்ளைகளும் உணர்கின்றோம்.
 
ஆனாலும் சமூகமும் காலமும் எனது ஆயுளும் உந்தி தள்ளுகின்றன.
 
இது தான் அநேகமான பெற்றோர்களின் நிலையாக உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 32
 
உண்மையான
பிரபலமான
கள்ளங்கபடமற்ற ஒருவருக்கு
விளம்பரம் தேவையில்லை என்கிறார்கள்?
 
அப்புறம் கடவுளுக்கு ஏன் இத்தனை விளம்பரம்?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 33
 
அந்த முருகனுக்கே இவர் நிகரானவர்.
அ.....ந்..... த முருகனுக்கே இவர் நிகரானவர்.........
 
நாம் எதையும் மறக்கவுமில்லை
மன்னிக்கவுமில்லை
 
அவர்களை புதைக்கவுமில்லை
விதைத்தோம்
எம்முள் விதைத்தோம்.............
 
L’image contient peut-être : 1 personne, ciel et plein air
 
 
L’image contient peut-être : 5 personnes, feu
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 34

வித்தியாவுக்கான நீதி

சொந்த பந்தம்
ஊர் உறவு 
லஞ்சம் 
பணத்திமிர் 
அரச அதிகாரம் 
அடக்குமுறை 
சட்ட ஆளுமை 
அத்தனையையும் தாண்டி.....

சில மாதங்களாக தலையை குனிந்த எனது மண் தலை நிமிர்கிறது.

நீதிக்காக வீதியில் இறங்கிய
போராடிய 
இதற்காக கடைசிவரை உழைத்த
அனைவருக்கும் நன்றிகள்

தர்மம் வாழும்
நிலைக்கும்
நீ அதற்காக  இறுதிவரை  போராடினால்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.