Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 105
 
அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களது தற்போதைய நிலை சார்ந்து...
 
கலைஞர் கருணாநிதி அவர்கள்
எழுத்தாளர் கலைஞர் என்பதைவிட
அரசியல் சாணக்கியர் என்பதே அவரது பெயராகும்.
அந்த சாணக்கியர் தனது சாணக்கிய அரசியலிலிருந்து சறுக்கியது
2009 இல் ஈழத்தமிழரை காப்பாற்ற தவறிய போது தான்.
தமிழ் தமிழ் என பேசி எழுதி வந்த அவரிடம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டாலும்
தமிழ் மக்கள் அழிவை தடுப்பார் என்ற நம்பிக்கை கடைசி நிமிடம்வரை ஈழத்தவரிடமிருந்தது.
அதைச்செய்யத்தவறியது மட்டுமன்றி அதற்கு நாடகங்கள் போட்டுத்துணைபோன அன்றே
அவரும் அவரது கட்சியும் சாணக்கியமும் தூள் தூளாகிவிட்டது.
தான் மேடைகளில் பேசி உணர்ச்சியேற்றிய அதே தமிழ்
தனக்கெதிராக தமிழ்த்தேசியம் என வெடித்துக்கிளம்பும் என கருணாநிதி
ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவேமாட்டார்.
 
இன்று தோல்விகளை சந்தித்து
கூனி குறுகி கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரை
சிலர் வைகின்றனர்.
அவரது மரணத்தை வரவேற்கின்றனர்.
மரணத்தை வரவேற்பதும் அவருக்கு இந்த வயதில் ஒருவித விடுதலையே.
உண்மையில் என்னைப்பொறுத்தவரை அவர் இன்னும் வாழணும் கூனி குறுகணும்.
தன் கண் முன்னே துரோகத்துக்கான தண்டனையை அனுபவிக்கணும்.
 
அவரது பேச்சில் இன்றும் மயங்கி கிடக்கும் அவரது கட்சியின் கோடானுகோடி தமிழர்கள் மன்னிப்பார்களாக...
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 106
 
 
கருணாநிதி அவர்கள்
ஏன் ஈழத்தமிழர்களாலும் அவர்கள் பால் அன்புகொண்ட தமிழர்களாலும்
ஏன் இந்தளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்??
அல்லது அவரது இறப்புக்கூட எதற்காக வரவேற்கப்படுகிறது?
இந்தப்படம் ஒன்றே போதுமானது
 
37896607_651986355180919_727322681166266
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 107
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
 
ஒன்றுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் குறிக்கோள் மீது தான் விமர்சனம் வைக்கமுடியும்
அவர்கள் அதை ஒரு போதும் மாற்றிக்கொண்டதில்லை
எதற்காகவும் எந்தநிலையிலும் உயிர் போகினும் அதை விட்டுக்கொடுத்ததில்லை.
எனவே பாதைகள் மீது விமர்சனம் வைக்கமுடியாது.
 
தமிழ்மக்கள் மீது அளவுக்கதிகமான சுமைகளை சுமத்தியது
ஆட்சேர்ப்பு வரி போன்றவற்றை சிலர் குறிப்பிடுவார்கள்
தமிழ் மக்கள் தாய்ப்பசு என்றால் புலிகள் அதன் கன்று.
தாயிலிருந்து பால் வராவிட்டால் நாலு இடி இடிக்கும் கன்று.
அது தாய்க்கு வலிக்குமா என்ன? அப்படித்தான் பார்க்கவேண்டும்.
உண்மையில் இந்த வலியை நாம் தாங்கி பெருசு படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று சொர்க்க பூமியில் வாழ்வோம்.
 
2009க்கு பின்னர் தலைவர் ஒரு விடயத்தை தெளிவாக அறிவித்தார்.
இனி உங்களது முடிவுகளை நீங்களே எடுங்கள் என்று. அன்றிலிருந்து புலிகள் இல்லை.
இப்போது இருப்பவர்களுக்கு 3 நேரம் பசிக்கும் வயிறும் இருக்கிறது.
அதையும் தலைவர் தீர்க்கதரிசனமாக எப்பொழுதோ சொல்லிவிட்டார்
எனக்குப்பின் இயக்கத்தை உங்களுக்கேற்றாப்போல் பிரித்து பிரித்து விற்றுக்கொள்ளுங்கள் என்று.
அது தான் தற்பொழுது நடக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 108
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
இரண்டுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் வலையமைப்பை
முழுமையாக அறிந்தவர் தலைவரைத்தவிர எவருமில்லை.
இன்றுவரை இன்ரபோல் போன்ற அமைப்புக்களாலேயே
இதனை முழுமையாக அறியமுடியவில்லை.
 
தலைவர் ஒரு சுழற்சி முறை வைத்திருந்தார்.
அதன்படி பணத்தை எந்த அலுவலகத்திலும் அமைப்பிலும் இருக்க விடமாட்டார்.
உதாரணமாக 1 லட்சம் ஈரோக்கள் அலுவலகத்தில் சேர்ந்தால்
50 லட்சம் ஈரோக்களைக்கேட்பார். (தேவையும் அப்படித்தானிருந்தது)
அங்க இங்க மாறி கடனெடுத்து அனுப்பி அந்தக்கடன் முடியமுதல்
அடுத்த தொகையை கேட்பார்.
எனவே அலுவலகங்களிலோ இங்குள்ள பிரதிநிதிகளிடமோ பணம் தங்க இடமில்லை.
 
ஆனால் எங்களால் ஒரு காலத்தில் பிரமிப்பாகவும் பெருமையாகவும் பேசப்பட்ட
தலைவரின் வலையமைப்பே இன்று எமக்கு தலையிடியாக வந்துள்ளது.
அதன் அடி நுணி அறிந்தவர் யாருமில்லை?????
 
ஆனாலும் தலைவரின் வளர்ப்பில் என்றும் நம்பிக்கையுண்டு.
அந்த நம்பிக்கை வீண் போகாது என்று இன்றும் நம்புகின்றேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 109
 
கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை வரலாற்றில்
மறுக்கப்படமுடியாத தலைவராகவும்
ஈழத்தமிழினத்தைப்பொறுத்தவரை மன்னிக்கப்பட முடியாத துரோகத்தை செய்தவராகவும் செல்கின்றார்.
 
எவருடைய மரணமும் வருந்தத்தக்கதே.
செல்லுங்கள் கலைஞரே.
இனி ஒருமுறை எம் தமிழர் வாழ்வில் மீள வராதீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 110
 
விதி வலிமையானது
 
விதி மதியைவிட வலிமையானது என்பார்கள் எம்முன்னோர். .
எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை.
 
ஆனால் சில அனுபவங்களும் செயல்களும் அதை எம் வாழ்வில் உறுதிப்படுத்தியே செல்கின்றன
 
கலைஞர் அவர்கள் தலைவருடைய தாயார் என்ற ஒரு காரணத்துக்காக
தனது ஆட்சியில் அவருக்கு மருத்துவம் செய்ய மறுத்தார். அலைக்கழித்தார்.
 
ஈழத்தமிழினத்தின் அழிவில்
நாடகமாடி வேசம் போட்டு நரித்தனம் செய்து
எமது மக்களின் ரத்தத்தை வைத்து மத்தியில் பேரம் பேசி சலுகைகளைப்பெற்றார்.
 
இதனால் ஈழத்தவர்கள் அவரது மறைவை கவலையோடு பார்க்கவில்லை
ஆனால் கொண்டாடமுயலவில்லை
 
ஆனால் விதி தலைவரது தாயாரின் பிறந்தநாளில்
கலைஞரை பறித்து இத்தினத்தை கொண்டாட அனுமதிக்கிறது.
இந்தப்பிறந்தநாளை ஈழத்தமிழர் கொண்டாடும் ஒவ்வொரு வருடமும்
கலைஞரும் ......????
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 111
 
விடுமுறையில் கற்றவை
 
பொதுவாக ஆவணி மாதத்தில் எங்காவது தங்கி
அவ்விடத்தை பற்றி நேரடியாக பார்த்து கேட்டு அறிவது எனது வழமை.
இம்முறை பிரான்சின் மலையும் அது சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலப்பகுதியான LA SAVOIE வில்.
 
இதன் வரலாறு எமது தாயகத்துக்கும் ஊருக்கும் பயனுள்ளதாக அமையுமென்பதால்...
 
இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான காலப்பகுதியில்
இவ்விடத்தை விட்டு மக்கள் தொடர்ச்சியாக வெளியேறியபடி இருந்தனர்.
ஒரு காலப்பகுதியில் மக்களே இல்லாதநிலை ஏற்பட்டது. காரணங்கள்
 
வருடத்தில் அரைவாசிப்பகுதி கடும் குளிர்
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்மை
போக்குவரத்து சுகாதார வசதியின்மை
வேலை வாய்ப்பின்மை
கடும் குளிர் காலப்பகுதியில் தண்ணீர் இன்மை
 
இந்தநிலையில் தான் அரசு 1960 இல்
அவசரமாக அம்மக்களின் இடப்பெயர்ச்சியை தடுக்க ஆலோசனைகளையும் திட்டங்களையும் கோரியது.
அவ்வாறான கோரிக்கைக்கு கிடைத்த திட்டம் தான்
பனிச்சறுக்கல்களுக்கான இடமாக இருப்பதால் அதை சுற்றுலா திடலாக அறிவித்து
அது சார்ந்த தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க ஊக்குவித்தலாகும்.
 
1960 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது
1980களில் பாரீய வளர்ச்சி கண்டு இன்று பனிச்சறுக்கல் காலப்பகுதியில்
இவ்விடத்தில் பல மாதங்களுக்கு முன்பே இடங்களை பதிவு செய்தால் தான்
இடம் கிடைக்குமளவுக்கு வளர்ந்து அங்குள்ள மக்களுக்கும் அரசுக்கும்
பெரும் சுற்றுலா வருமானத்தை தரும் துறையாக வளர்ந்து
அந்த மண்ணையும் மக்களையும் வளம் படைத்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
 
இதைக்காணும் போது எனது ஊரின் இன்றைய நிலையே கண் முன் நின்றது.
அதுவும் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.
 
எமதூர் மக்கள் புலமெங்கும்
அரசுகளுக்கு பெருவாரியான வரிகளையும் நன்கொடைகளையும்
கொடுப்பவர்களாக இன்று வளர்ந்துள்ளமையை காண்கின்றோம்.
எனவே இவர்களை எமதூர் சார்ந்து திருப்பும் போது
எமது மண்ணும் ஒருநாள் வளம் படைத்த மக்களையும் மண்ணையும் கொண்டதாக வரும்.
கனவு காண்போம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 112
 
அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
 
ஒரு விடயத்தை பற்றிய அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
அந்த விடயத்தின் உண்மைத்தன்மைக்கு மேலாக ஊதிப்பெருதாக்கி
எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச்செய்து
எதை சாதித்தபோதும் அதைவிட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி
அந்த விடயத்தை சிறுமைப்படுத்தி விடும்.
அது சினிமாவாக இருந்தாலும் சரி பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி.
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 113
 
எனது தனிப்பட்ட கருத்து
 
கடந்த சில நாட்களாக சில நேரடியாகவும்
சில தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சகல தொடர்புகளாலும்
புங்குடுதீவு அமைப்புக்களின் இன்றைய சில செயற்பாடுகள் சார்ந்து
கேள்விகள் என்னிடம் முன் வைக்கப்பட்டன.
எழுதுவதில்லை என ஒதுங்கியிருக்க முடியாத விடயமிது.
 
சிறீலங்காவின் அரச பிரதிநிதிகள் எவரையும்
புலத்திலுள்ளோர் வரவேற்க ஆதரவளிக்க வேண்டுமாயின்
சிறீலங்கா அரசாங்கம் தமிழருக்கான தீர்வு ஒன்றை முன் வைக்கவேண்டும்.
அதுவே எமக்கான ஆகக்குறைந்த சலுகையும் அரவணைப்புமாகும்.
 
இதய சுத்தி இருந்தால் அதற்கு கால தாமதம் தேவையற்றது.
அவ்வாறு கால தாமதம் தேவையென்றால்
ஐனநாயகமுறையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உண்டு.
அவர்களின் புலத்தவருடனான செயற்பாடுகள் மற்றும் தொழிற்துறை சார் சந்திப்புக்களுக்கும்
புலத்தவரின் பங்களிப்புக்கள் வடமாகாண சபைக்கு கிடைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
ஆதரவளித்து ஊக்கமளிக்க வேண்டும்.
 
அதைத்தவிர்த்து அல்லது போக்கு காட்டியபடி தாயகத்தில் என்னவும் செய்யலாம். ஆனால் புலத்தில்???
 
எதையும் எவரும் மறக்கவுமில்லை.
அதை மன்னிக்க மறக்க எதுவும் முன்வைக்கப்படவுமில்லை.
அதற்கான முயற்சிகளும் கண்ணுக்கெட்டியவரை தெரியவுமில்லை.
 
ஆனால் அதை கெடுக்கும் முயற்சிகளும்
எம்முள் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னைவிட அதிகமாக...........????
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 114
 
தள்ளிவிடல்
 
போன கிழமை அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர் எனது மக்களுடன் படித்தவர் தற்பொழுது காவல்த்துறை அதிகாரியாக இருக்கிறார்.
இரவு ஒரு பெண்ணின் அவலக்குரல் தொலைபேசி அழைப்பு வந்து
அவரை காவல்த்துறை அலுவலகத்துக்கு கூட்டி வந்திருக்கின்றோம்.
அவர் உங்கள் தமிழ் மொழி மட்டுமே பேசுகின்றார்
அதனால் எனக்கு உங்களது உதவி தேவை என்றார்.
சரி அவரிடம் அந்த பெண்ணிடமிருந்து என்ன தகவல் வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு
அந்த பெண்ணிடம் தொலைபேசியை கொடுக்கச்சொன்னேன்.
 
நான் வணக்கம் என்றதும் அந்தப்பெண் ஓ என்று அழத்தொடங்கிவிட்டார்.
சிறிய அவகாசத்தின் பின் நீங்கள் எங்கே வந்திருக்கின்றீர்கள்
இதன் அடுத்த அடுத்த கட்டங்கள் உங்களையும் உங்கள் கணவரையும்
தூரமாக்கிவிடும் என்பது தெரியுமா சகோதரி என்று கேட்டேன்.
தெரியும் எல்லாம் அனுபவித்து
முடியும்வரை பொறுத்து பார்த்துத்தான் வெளியில் வந்திருக்கின்றேன்
இனி அவரை நான் பார்க்கவே மாட்டேன் என்றார்.
உங்களுக்குள் என்ன பிரச்சினை என்றேன்.
குடிக்கிறார் அத்துடன் வாயுக்குள் எதையோ வைத்து சப்புகிறார்
மிருகமாக நடக்கிறார். அடிக்கிறார் உதைக்கிறார் கத்தியால் குத்த வாறார்.
நான் என்ன செய்தாலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்
எங்கும் வெளியில் போகக்கூடாது எவருடனும் பேசக்கூடாது.
எனக்காக இல்லை எனது இரு பிள்ளைகளுக்காக (4 மற்றும் 1 வயது) நான் உயிரோடு இருக்கணும்
அதனால் தான் வெளியில் வந்தேன் என்றார் (இவ்வளவும் என்னிடம் அழுதழுது சொல்ல அரை மணித்தியாலம் தேவைப்பட்டது)
 
உங்களுக்கு பிரான்சில் யாரிருக்கிறார்கள்
- எவருமில்லை அவரைத்தவிர எனக்கு எவரையும் தெரியாது.
எப்படி பிரான்சுக்கு வந்தீர்கள்?
- ஊருக்கு வந்து அங்கேயே திருமணம் செய்து அவரே என்னை இங்கு கூட்டி வந்தார்.
 
நான் காவல்த்துறை அதிகாரியிடம் என்ன சொல்லவேண்டும்
- எனக்கு அவரிடமிருந்து பாதுகாப்பும் நிம்மதியாக நானும் பிள்ளைகளும் வாழ ஒரு வீடும் தரச்சொல்லுங்கோ.
 
சரி சொல்கின்றேன் நல்லதொரு அதிகாரியிடம் வந்திருக்கின்றீர்கள்.
நீங்கள் கேட்பதை அவரிடம் சொல்கின்றேன்.
இனியாவது இங்கு மொழியை படியுங்கள் சொந்தக்காலில் நில்லுங்கள். அழுதபடி விடை தந்தார்.
 
அதிகாரியிடம் விடயத்தை சொல்லி உதவும்படி சொன்னேன்.
கணவரை கைது செய்திருக்கின்றோம்.
முடிந்தவரை அவர் கேட்பதை செய்து கொடுக்கின்றோம் என்றவர்
என்னிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்
 
மொழி தெரியாது
நாடு திசை திக்கு எதுவுமே தெரியாது
எந்த வருமானமும் கிடையாது
ஒருவரை மட்டுமே நம்பி அவரிடம் எப்படி உங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை கொடுக்கிறார்கள்??
இந்த ஒன்றுமின்மை தான் அவரை தவறு செய்ய தூண்டுகிறது.
 
இதே கேள்வியை உங்களிடம் முக்கியமாக தாயகத்திலுள்ள எனது மக்களிடம் நான் வைக்கின்றேன்.
 
மொழி தெரியாது
நாடு திசை திக்கு எதுவுமே தெரியாது
எந்த வருமானமும் கிடையாது
ஒருவரை மட்டுமே நம்பி அவரிடம் எப்படி உங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை கொடுக்கிறார்கள்??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 115
 
ஒருவரை தொடர்ந்து ஏமாற்ற முடியுமா?
 
தமிழரை தொடந்து ஏமாற்ற முடியும் என்கிறது சிங்களம்.
தொடர்ந்து ஏமாற்றி வெற்றியும் கண்டு வருகிறது.
 
இந்தமுறை ஆப்பு தமிழருக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும்  சேர்த்து.
 
மகிந்தவே தொடர்ந்து இருக்கட்டும்
இருக்கும் சாட்சிகளை வைத்து தொடர்ந்து முயற்சிக்கலாம் என்ற போது
நல்லாட்சியை ஏற்போம் என்றவர்களுக்கும் சேர்த்து ஆப்பு இறங்கியிருக்கிறது.
 
சாணக்கியமானவர்கள் சில கோடிகளை சேர்த்ததை தவிர
தமிழர் தலையில் மீண்டும் மீண்டும் அரைத்தல் தொடர்கிறது தொடரும்.
 
இன்னொரு மொந்தையில் சாணக்கியர்கள் வலம் வர தயாராவார்கள்.
வருவார்கள் வெல்வார்கள்.
 
இனி......???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 116

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்?

நல்லாட்சியை எமது சாணக்கியத்தால் உருவாக்கியது நாங்கள் தான்.

அதை வேறு எவராலும் செய்திருக்கவே முடியாது என

இதுவரை தமிழ் மக்களுக்கு தாங்கள் செய்த பெரும் தீர்வாக

நெஞ்சை நிமிர்த்தியபடி இருந்தனர் கூட்டமைப்பினர்.

இப்பொழுது அது இல்லை எல்லாமே

மகிந்த மைத்திரியில் நரி விளையாட்டு எனத்தெரிய வருகிறது.

ஏற்கனவே பெரு நரி என்று இருந்த ரணிலுக்கே ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள்.

இப்போ எதை சொல்லப்போகிறார்கள் சாணக்கியர்கள் தமிழ் மக்களிடம்?? 
தான்தோன்றித்தனமாக இருவர் மட்டுமே                                                                                                                                                                                                                              தமிழரின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக                                                                                                                                                                                                                       இதுவரை நடந்து வந்த நிலையிலிருந்து                                                                                                                                                                                                                     கூட்டமைப்பின் எல்லா கட்சியினருடனும் கலந்தாலோசித்து முடிவு தருகின்றோம் என்பதனூடக

இவர்கள் சொல்ல வருவது பழியை எல்லோர் தலையிலும் போடப்போகின்றோம் என்பதைத்தானே??

நன்மை எமக்கு தீமை உங்களுக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 
Link to comment
Share on other sites

On 10/27/2018 at 5:10 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 

     இது உங்கள் கனவு மட்டும் இல்லை பலருடைய கனவும் இதுதான். இந்த கனவு நிறைவேற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎27‎/‎2018 at 4:10 AM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 

தலைவரும்,கருணாவும் ஒன்றாக இருந்து சாப்பிடுகின்ற மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 118
 
 
என்ர பொடி தனது முகநூலில் போட்டிருக்கு.
 
என்ர அப்பாவும் நானும் விளையாடியதை யார் படம் பிடிச்சது என எழுதியிருக்கிறார்.
(Qui nous a filmé ?)
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தலைவரும்,கருணாவும் ஒன்றாக இருந்து சாப்பிடுகின்ற மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது ?

 

உங்களது  கனவும்   பலிக்கட்டும்

அவர் இப்போ இலங்கையின் கோடிசுவரர்களின் வரிசையில்4வது  இடத்திலிருக்கிறார்

இனி  தலைவரோட எல்லாம்  சாப்பிடமாட்டார்

ஆனால் கடைசி நேரத்தில தலைவரோட அவர் போய் சாப்பிட்டிருந்தா....?

தமிழினம்  வென்றிருக்கும்

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

 தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

எதுக்கு

சுத்தி  மூக்கைத்தொடுவான்?

மகிந்தவோட கை  கொடுக்க  எனக்கு  இவர்கள் தேவையில்லை

போன  கிழமையும் ஒரு  அழைப்பு  வந்தது

நாங்க தான் புறக்கணித்தோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

எதுக்கு

சுத்தி  மூக்கைத்தொடுவான்?

மகிந்தவோட கை  கொடுக்க  எனக்கு  இவர்கள் தேவையில்லை

போன  கிழமையும் ஒரு  அழைப்பு  வந்தது

நாங்க தான் புறக்கணித்தோம்

 விசுகு ஐயா பெரிய கை என்று தெரியும்?

புறக்கணிக்காமல் மகிந்த மாத்தயாவோடும் பேசிப் பாக்கிறதுதானே. சம்சும், சைக்கிள் கோஸ்டி, விக்கி எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்து கிடக்கினம். ஏன் தமிழீழம், சமஸ்டி என்று சறுக்கிற குதிரையில ஏற்வேண்டும்? அபிவிருத்தி, பொருளாதாரம், கைதிகள் விடுதலை எல்லாம் மகிந்த மனம் வைத்தால்தானே கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

 விசுகு ஐயா பெரிய கை என்று தெரியும்?

புறக்கணிக்காமல் மகிந்த மாத்தயாவோடும் பேசிப் பாக்கிறதுதானே. சம்சும், சைக்கிள் கோஸ்டி, விக்கி எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்து கிடக்கினம். ஏன் தமிழீழம், சமஸ்டி என்று சறுக்கிற குதிரையில ஏற்வேண்டும்? அபிவிருத்தி, பொருளாதாரம், கைதிகள் விடுதலை எல்லாம் மகிந்த மனம் வைத்தால்தானே கிடைக்கும்?

கனவு  காணுங்கள்- அப்துல்  கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 119
 
படிப்பில் பிள்ளைகளின் புள்ளிகள்?
 
இந்த பெற்றோர்களுக்கு
அதிலும் தமிழ்ப்பெற்றோர்களுக்கு திருப்தி இருப்பதில்லை.
எவ்வளவு தான் புள்ளிகள் எடுத்தாலும்
அதற்கு மேல் ஏன் எடுக்கவில்லை ஏன் முயலக்கூடாது என்பார்களே தவிர
போதும் என்று ஒரு போதும் சொல்வதில்லையே அப்பா என்றாள் என் மகள்.
சரியான கேள்வி தான். இருந்தாலும் அதற்கொரு காரணம் இருக்குமல்லவா?
 
நீ குழந்தையாக இருக்கும் போது
சிறிது பாலைக்குடித்தவுடன் வேண்டாம் என்பாய்.
அப்படியே விட்டுவிடுவதில்லை நாம்.
இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என தந்து
உன்னை நிமிர்த்தி தலையில் தட்டி கைகளை மேலே குலுக்கி விடுவோம்.
சாப்பாடு ஊட்டும் போதும் இப்படித்தான்
அம்புலிமாமா கதைகள் சொல்லி இன்னும் கொஞ்சம் ஊட்டிவிடுவோம்.
அது போலத்தான் இதுவும் என ஏன் எடுக்கப்படாது?
 
அது உனது உடல் நலத்துக்கும் சக்திக்கும்
இது உனது எதிர்காலத்துக்கும் வளர்ச்சிக்கும் என்றேன் நான்.
 
சிரித்துக்கொண்டு போனாள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎29‎/‎2018 at 6:27 AM, விசுகு said:

உங்களது  கனவும்   பலிக்கட்டும்

அவர் இப்போ இலங்கையின் கோடிசுவரர்களின் வரிசையில்4வது  இடத்திலிருக்கிறார்

இனி  தலைவரோட எல்லாம்  சாப்பிடமாட்டார்

ஆனால் கடைசி நேரத்தில தலைவரோட அவர் போய் சாப்பிட்டிருந்தா....?

தமிழினம்  வென்றிருக்கும்

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

தலைவரோட இறுதி விருந்து சாப்பிடடவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் என்பது தெரியாதோ விசுகு அண்ணா 

On ‎10‎/‎29‎/‎2018 at 6:40 AM, கிருபன் said:

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

டக்லசை கொலை செய்யத் திரிந்தவர்களே மு.வாய்க்காலின் போது அவரைப் பிடித்து தப்பி வந்தார்கள்...அவர் துரோகி அவரிடம் என்ன உதவி கேட்பது என்று நினைத்திருந்தால் அவ்வளவு பேரும் சிறையிலையே  மாண்டு இருப்பார்கள்.

"தக்கன பிழைக்கும்"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

தலைவரோட இறுதி விருந்து சாப்பிடடவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் என்பது தெரியாதோ விசுகு அண்ணா 

அப்ப இங்கு புலம்பெயர் பாதி செத்து இருக்கணும் .

8 hours ago, ரதி said:

டக்லசை கொலை செய்யத் திரிந்தவர்களே மு.வாய்க்காலின் போது அவரைப் பிடித்து தப்பி வந்தார்கள்...அவர் துரோகி அவரிடம் என்ன உதவி கேட்பது என்று நினைத்திருந்தால் அவ்வளவு பேரும் சிறையிலையே  மாண்டு இருப்பார்கள்.

"தக்கன பிழைக்கும்"

நீங்கள் நினைப்பது  சின்ன பிள்ளைதனமானது    அப்ப சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள்  யார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 120

சிரிப்பே இவரிடம் தோற்றுப்போகும்.....

எம்மோடு பழகியவர்கள் அதிலும் எமக்கு நம்பிக்கை தந்தவர்கள்

கொல்லப்படுவதென்பது மிகவும் கொடுமையானது.

அப்படித்தான் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறப்பும்.

அவரது சிரித்த முகத்தை மட்டுமே நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது

எம்மனதிலிருந்த கேள்வியை நண்பர் ஒருவர் கேட்டுவிட்டார்.

அண்ணா எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்களே உங்களுக்கு கோபமே வராதா என்று?

அதே சிரித்த முகத்துடன்

ஓ நீங்கள் பார்த்ததில்லை அல்லவா என்றபடி

அவருக்கு பாதுகாப்பாக நின்ற போராளியை திரும்பிப்பார்த்தார்.

அந்த போராளியின் முகத்தில் தெரிந்த இறுக்கம் அவரது இன்னொரு பக்கத்தை எமக்கு உணர்த்தியது.

இன்று அவரது ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது.

வீரவணக்கம் அண்ணா மற்றும் அனைத்து போராளிகளுக்கும்.

L’image contient peut-être : 6 personnes, personnes souriantes, texte

 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.