Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 140
 
ஈழத்தமிழரும் இந்தியா பாகிஸ்தான் போரும்...
 
ஈழத்தமிழரின் அழிவில் பாகிஸ்தானின் பங்கென்பது ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவிகள் மட்டுமே. அவை பற்றி பாகிஸ்தான் எந்த ரகசியமோ ஒழிவு மறைவோ செய்தது கிடையாது.
 
ஆனால் இந்தியா செய்தது அத்தனையும் துரோகம் வேசம் நயவஞ்சகம் முதுகில் குத்துதல் மட்டும் தான். உலகிலேயே அதிக கொடுமை என்னவெனில் நண்பனாக அல்லது அதற்கும் மேலாக தாயாக நம்ப வைத்து கழுத்தறுப்பது தான்.
அதை இந்தியா எமக்குச்செய்தது.
 
பாகிஸ்தான் ஒரு போதும் தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் கை எழுத்து வை என்று எம்மை மிரட்டியதில்லை. ஆனால் இந்தியா...???
 
அதனால் தான் இந்திரா காந்தி இறந்தபோது MGR மறைந்தபோது பல வாரங்களாக கறுப்பு நாட்களாக சுமந்த ஈழம் அதன் பின் எவருக்கும் துக்க நாளை பற்றி அலட்டிக்கவே இல்லை.
 
பாகிஸ்தானா இந்தியாவா என்றால் பரம எதிரி இந்தியா தான். ஏனெனில் எதிரியை விட துரோகியே மிக மிக ஆபத்தானவன்.

விசுகர்! உங்கள் கருத்தை பாராட்ட வார்த்தைகளில்லை.👍

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 141
 
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை
 
உண்மையில் அபிநந்தன் மேல் நிலைக்கு வருவார்
அதிலும் அரசியலில் ஈடுபட்டால் இந்தியாவையே ஆள்வார்.
 
2 நாட்களிலேயே அவர் தன்னை நிரூபித்து விடுதலையாகி வருகின்றார்
 
அவரது விடுதலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த விடயத்தையுமே
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கின்றார்.
 
அதில் முக்கியமானது தான் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னால் கொலை செய்தாலும் இந்தியா கேட்காது ஆளை அப்படியே விட்டு விடும்
 
பாகிஸ்தானும் தயக்கமற்று கொன்று விடும் என்பதை அறிந்து காய் நகர்த்தி இருக்கிறார்.
 
உண்மையில் இவ்வாறு உயிர் தப்பி வரும் முதலாவது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அபிநந்தன் பெறுகிறார்.
 
வாழ்த்துவோம்
Link to comment
Share on other sites

அபிநந்தனின் விடுதலையோடு,  காஷ்மீர் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர் விடுதலையாகிறார்களோ தெரியாது. 

பரஸ்பர விடுதலைக்கு, DEAL தேவைதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎28‎/‎2019 at 5:36 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 141
 
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை
 
உண்மையில் அபிநந்தன் மேல் நிலைக்கு வருவார்
அதிலும் அரசியலில் ஈடுபட்டால் இந்தியாவையே ஆள்வார்.
 
2 நாட்களிலேயே அவர் தன்னை நிரூபித்து விடுதலையாகி வருகின்றார்
 
அவரது விடுதலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த விடயத்தையுமே
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கின்றார்.
 
அதில் முக்கியமானது தான் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னால் கொலை செய்தாலும் இந்தியா கேட்காது ஆளை அப்படியே விட்டு விடும்
 
பாகிஸ்தானும் தயக்கமற்று கொன்று விடும் என்பதை அறிந்து காய் நகர்த்தி இருக்கிறார்.
 
உண்மையில் இவ்வாறு உயிர் தப்பி வரும் முதலாவது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அபிநந்தன் பெறுகிறார்.
 
வாழ்த்துவோம்

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

 

On 2/28/2019 at 6:11 PM, thulasie said:

அபிநந்தனின் விடுதலையோடு,  காஷ்மீர் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர் விடுதலையாகிறார்களோ தெரியாது. 

பரஸ்பர விடுதலைக்கு, DEAL தேவைதானே!

பாகிஸ்தானுக்கு தேவையானது இவரிடம் ஒன்றுமே இல்லாத போது, இவரின் முடிவு மிகச் சரியானது.

அதாவது, யுத்த விமானிகளின் நாய்ச் சண்டையில், விமானத்தை விழுத்தும் சாதுர்யத்தை எதிரி கொண்டிருந்தால், மற்ற தரப்பிடம் ஒன்றுமே இல்லை.

கிந்தியாவின், விமானப்படை, அதுவும் supersonic dog fight மாய உருவத்தை, (கிந்தியாவின் புவியியல், பொருளாதார அளவை வைத்து ஏற்படுத்திய மாய உருவத்தை, பாகிஸ்தான் தகர்த்து விட்டது.

நேற்று, கடற்படையின் நீர் மூழ்கி பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது, கிதியாவின் கடற்படையை கூட ஏனையோர் ஏளனமாக, முக்கியமாக கடடற்படையின் போரிடும் வலுவின்  பிரமையை பாகிஸ்தான் உடைத்து விட்டது.  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

இப்பொழுது  இது  போன்ற  கோழைகளுக்குத்தானே  வாழ்வு

உங்களுக்கு தெரியாததா??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 142
 
7 பேர் விடுதலையும் இந்திய அரசியலும்...
 
7 பேரை விடுதலை செய்யும்படி
அரசியல் மேடையில் மோடியிடம்
கூட்டணிக்கட்சியான பாமக கோரிக்கை. விடுதலை உறுதி - செய்தி
 
7 பேர் விடுதலையாகப்போகின்றார்கள் என்று சாந்தப்படுவதா??
 
அல்லது இந்திய அரசியல்வாதிகளின் கூட்டணிகளுக்கும்
பங்கு பிரித்தலுக்கும்
எம்மவர் எலிகளாவதை நினைத்து அழுவதா ???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றிக்காக வாக்கு பெறுவதற்காக விடுதலை செய்ய போகிறார்கள் போல!
எப்படியாயினும் 7 பேர் விடுதலையை வரவேற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

தேர்தல் வெற்றிக்காக வாக்கு பெறுவதற்காக விடுதலை செய்ய போகிறார்கள் போல!
எப்படியாயினும் 7 பேர் விடுதலையை வரவேற்போம்.

அவர்களின்  விடுதலை  சார்ந்து  சந்தோசம் சகோ

ஆனால் இந்த விடுதலைக்கு ஒரு  கூட்டணி  தேவையா?

நீதியும்

சட்டமும்

ஏன் அரசியல் அமைப்பும்  கூட செல்லுபடியற்றதாக்கப்படுவது  எவ்வாறு சரியான  வழியாகும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

எதிரியிட்டை அகப்பட்டால் தன்னைத்தானே துவக்காலை சுட்டு செத்திடணும். இல்லாட்டி அதுக்கு முதலே எதிரி வீட்டுக்கே போய் உள்ள ரகசியங்களையெல்லாம் சொல்லி காட்டிக்குடுத்து சுகபோகமாய் வாழ்ந்திடணும்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

 

பாகிஸ்தானுக்கு தேவையானது இவரிடம் ஒன்றுமே இல்லாத போது, இவரின் முடிவு மிகச் சரியானது.

அதாவது, யுத்த விமானிகளின் நாய்ச் சண்டையில், விமானத்தை விழுத்தும் சாதுர்யத்தை எதிரி கொண்டிருந்தால், மற்ற தரப்பிடம் ஒன்றுமே இல்லை.

கிந்தியாவின், விமானப்படை, அதுவும் supersonic dog fight மாய உருவத்தை, (கிந்தியாவின் புவியியல், பொருளாதார அளவை வைத்து ஏற்படுத்திய மாய உருவத்தை, பாகிஸ்தான் தகர்த்து விட்டது.

நேற்று, கடற்படையின் நீர் மூழ்கி பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது, கிதியாவின் கடற்படையை கூட ஏனையோர் ஏளனமாக, முக்கியமாக கடடற்படையின் போரிடும் வலுவின்  பிரமையை பாகிஸ்தான் உடைத்து விட்டது.  
 

 

 

பாக்கிஸ்தான் அவரை விடுவித்ததால் இம்ரான்கானுக்குத் தான் நல்ல பேர்.அவரின்ட கையில் எதோ டொக்கிமன்ஸ் இருந்ததாகவும் அதை அவர் சப்பி துப்பியதாகவும் வாசித்தேன்.அதற்குப் பிறகும் அவரை விடுவித்து இருக்கிறார்கள்...ஏன்?????????????  

 

22 minutes ago, குமாரசாமி said:

எதிரியிட்டை அகப்பட்டால் தன்னைத்தானே துவக்காலை சுட்டு செத்திடணும். இல்லாட்டி அதுக்கு முதலே எதிரி வீட்டுக்கே போய் உள்ள ரகசியங்களையெல்லாம் சொல்லி காட்டிக்குடுத்து சுகபோகமாய் வாழ்ந்திடணும்....😎

இப்படியான பதவியில் இருப்பவர்கள்,போர் வீரர்கள் ஒரு எதிரியின்ட காலில விழுந்து,கெஞ்சி தப்பி வாறது அவமானம் என்பது எனது கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேரும் விடுதலையாகி விட்டார்களா, இன்னும் இல்லைதானே .இப்படி எத்தனை முறை அவர்களின் விடுதலையை பார்த்து விட்டோம் ...இன்னும் பார்ப்போம்......!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 143
 
மன்னார் மனித எச்சங்களும் தமிழரும்
 
ஊரில் சொல்வார்கள்
நல்லபெயர் எடுப்பது மிக மிக கடினம்
கெட்ட பெயர் எடுப்பது மிக மிக சுலபம்
அதே போல் எடுத்த நல்ல பெயரை கெட்ட பெயராக்குவது மிக மிக சுலபம்
 எடுத்த கெட்ட பெயரை நல்ல பெயராக்குவது மிக மிக மிக கடினம் என்று.
 
தாயகத்தின் எந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எவர் மனதிலும் முதலில் எழும் பதில் எதுவாக இருக்கும்??
 
அவ்வாறு எல்லோரது குறிப்பாக தமிழரது மனங்களில் சந்தேகங்களையும் விரக்தியையும் நம்பிக்கையீனங்களை விதைத்தவர்கள் யார்?
அதை மாற்ற அல்லது நம்பிக்கையூட்ட இதுவரை எடுக்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட நீதி ஏதாவது???
 
நீங்க எதையும் சொல்லுங்கோ?? இது சம்பந்தமான சந்தேகங்கள் எப்பவும் எம்முடன் இருக்கவே செய்யும்??
 
ஆராய்ச்சியை சிறீலங்கா செய்தாலென்ன?
அமெரிக்கா செய்தாலென்ன?
ஏன் ஐ.நா செய்தாலென்ன??
 
கொன்றவன்
கொல்ல சொன்னவன்
அதை பார்த்துக்கொண்டு இருந்தவன்
அவனிடமிருந்து என்ன வரும்????????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 144
 
இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும்
இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும்
 
 
இந்தப்பாடலையும் பாடுபவரின் யாலங்களையும் பாருங்கள்.
இசையை அறிந்தவர்களுக்கு அல்லது பாடக்கூடியவர்களுக்கு தெரியும்
இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும்
இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும்.
 
இந்தப்பாடல் வந்த காலப்பகுதியில்
இந்தப்பாடலை மிகவும் ரசித்தும்
இசை மற்றும் சுருதி குன்றாமல் பாடக்கூடியவர்களில் நானும் ஒருவன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரை ....உங்களுக்குள் ஒரு ம துரை சோமு இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது..... அடுத்தமுறை சந்திக்கும்போது "பாரத் கஃபே " முன்னால்  நீங்கள் பாட  நான்தான் ஜால்ரா  இப்பவே சொல்லிப்போட்டன்....!   😀

அருமையான பதிவு பாராட்டுக்கள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

துரை ....உங்களுக்குள் ஒரு ம துரை சோமு இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது..... அடுத்தமுறை சந்திக்கும்போது "பாரத் கஃபே " முன்னால்  நீங்கள் பாட  நான்தான் ஜால்ரா  இப்பவே சொல்லிப்போட்டன்....!   😀

அருமையான பதிவு பாராட்டுக்கள்.....! 

அது  ஒரு  காலம் அண்ணை

சாராரண தரப்பரீட்சையில் சங்கீதத்துக்கு D (அதி  உயர்  சித்தி) எடுத்தவன் நான்

அப்புறம் பருவ  வயதும்

அது சார்ந்த  குரல் மாற்றமும்

கொழும்புக்கான  இடம் மாற்றமும்

அதனால் ஏற்பட்ட தொடர் பயிற்சி இன்மையும்  குரலை  மாற்றி  விட்டது

ஆனால் இசையும் அதன்  சுருதியும்  இன்றும்  என்னோடுண்டு

நானாடா  விட்டாலும்........

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 145
 
பொள்ளாச்சியும் ஈழமும்
 
பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசுபவர்கள் எல்லோரும்
அநேகமாக புலிகள் பற்றியும் புலிகளின் தாயக ஆட்சி பற்றியும் பேசுகிறார்கள்.
 
ஆனால் புலிகளின் ஆட்சியில் எவ்வாறு குற்றங்கள்
மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தவிர்க்கப்பட்டன என்றோ
அதனுடைய தார்ப்பரியம் பற்றியோ பேசுவதில்லை
அல்லது அது பற்றி தெரிவதில்லை போலும்.
 
புலிகளின் ஆட்சியில் குற்றங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டமைக்கு
அவர்களின் உளவுத்துறையின் ஆழுமையும்
புலிகளுக்கும் மக்களுக்குமான உறவும் தான் காரணம்.
 
சிறு குழந்தையோ பாட்டியோ
தனக்கு நடந்த வன்முறையை அல்லது அநியாயத்தை
புலிகளின் எந்த உறுப்பினரிடமும் சொல்லமுடியும்.
அந்தளவுக்கு அவர்களுக்கிடையிலான நெருக்கமும் உறவும் இருந்தது.
சொல்பவரின் விபரங்கள் இரகசியமாக்கப்படுவதுடன்
குற்றம் செய்தவர் எந்த பெரிய ஆளாக இருந்தாலும்
ஏன் சொந்த தகப்பனாக இருந்தாலும்
புலிகள் தண்டனை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை
மக்கள் மனதிலிருந்தது.
இது புலிகளின் தொடர் நடவடிக்கைகளால் வந்தது.
 
உண்மையில்
எமது பிள்ளைகளுக்கு இன்று நாம் தரவேண்டியது
இந்த நம்பிக்கையையே.
எவரிடமாவது சொல்லக்கூடிய
சொன்னால் தன்னை நம்பக்கூடிய ஒரு இடம் இல்லாத போதே
இவ்வாறான தவறுகள் தொடர்கின்றன.
 
 
எனது பிள்ளைகளுக்கு இந்த நம்பிக்கையை நான் தந்துள்ளேன்.
 
மற்றும்படி இந்த நம்பிக்கையை நாம் தராதவரை
இந்த 4 பேரோடு இது நின்று போகப்போவதில்லை
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 146
 
நியுசிலாந்து தாக்குதல்
 
எம்மில் ஒரு பழக்கமுண்டு
எந்த பிரச்சினையும் எமது கதவை தட்டும்வரை
அது பற்றி அலட்டிக்கொள்ளமாட்டோம்
அவற்றை அறிந்தாலும்
அதற்கொரு வியாக்கியானம் சொல்லி தப்பித்துக்கொள்வோம்.
 
இன்று நியுசிலாந்தில்
இசுலாமியர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை
அது இசுலாமியர்களுக்கெதிரானது என கடந்து மறந்து விடுவோம்
 
ஆனால் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தால்
அத்தாக்குதல் தமது மண்ணை விட்டு புலம் பெயர்ந்த
அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதும்
எமது அடுத்த தலைமுறையை எங்கே கொண்டு வந்து விட்டுள்ளோம் என்பதும் புரியும்.
 
அதற்காகத்தான்
இறுதி நிமிடம் வரை மண்ணுக்காக போராடினோம் என்பதும்
ஒத்துழைக்கும்படி அனைத்து தமிழ் மக்களிடமும் மன்றாடினோம் என்பதும் புரியும்.
 
இன்று மண்ணும் இல்லை புலமும் இல்லை எங்கு வாழ்ந்தாலும் பாதுகாப்பில்லை.
 
இது தான் எம் வாழ்வா இனி?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 147
 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும்
எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான
அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) சாவடைந்துள்ளார்.
 
கிட்டத்தட்ட 30 வருடங்களாக பழகிய செயற்பாட்டாளன்.
எங்கு நின்ற போதும் கண்டவுடன் ஓடிவந்து
குகதாசண்ணா எப்படி இருக்கிறியள் என்று
கை கொடுத்து நலம் விசாரிக்கும் தம்பி.
 
எத்தனையோ பிரச்சினைகள்
இழுபாடுகள் பிரிவுகள் வந்த போதும்
தௌிவாக செயற்பட்ட செயற்பட்டுக்கொண்டிருந்த தோழன்.
 
இறுதியாக கண்டபோது
நாம இப்ப எங்க நிற்கிறம் சகோ என்ற எனது கேள்விக்கு
நாம தெளிவாக நிற்கிறம் அண்ணா
தொடர்ந்து எம்மால் முடிந்ததை செய்து கொண்டிருப்பம்
நீங்களும் தொடருங்கோ
அது தான் இன்றைய தேவை என்றபடி
புன் சிரிப்போடு பதில் தந்தவன் இன்றில்லை.
 
ஒருவன் தான் உழைத்த கனவை காணாது
இறத்தல் என்பது பெருங்கொடுமை.
 
நான் அடிக்கடி எழுதுவது தான்
2009க்கு பின்னர்
நாம் வேறு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றோம்
விடை தெரியாத கெரடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக தேடிக்கொண்டிருக்கின்றோம்.
 
ஆனால் எமக்காக
தம் வாழ்வை கொடுத்த
கொடுத்துக்கொண்டிருக்கின்ற
இவர் போன்றவர்களின்
இன்றைய வாழ்க்கை முறையை பற்றி சிந்திப்பதே இல்லை.
 
அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் சாகவில்லை
சாகவிட்டிருக்கின்றோம்.
புலத்தில் இவரைப்போல பல ஆயிரம் பேரின் நிலை இது தான்.
 

இனியாவது.......??????

L’image contient peut-être : 1 personne, texte
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 148
 
புலிகளின் சர்வதேச பொறுப்பாளரின் வாழ்க்கைத்தரம்
 
அப்பொழுது புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக திலகர் அண்ணா இருந்த நேரம்.
 
அன்று நாம் எமக்கு தரப்பட்ட இடங்களுக்கு சென்று
தரப்பட்ட கடமைகளை முடித்து அலுவலகம் திரும்பும் போது
நள்ளிரவாகி இருந்தது.
சென்ற கடமையின் விபரங்களையும்
அன்றைய நடப்பு விடயங்களையும் பகிர்ந்து
அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி புறப்பட தயாரான போது (இரவு 2 மணி இருக்கலாம்)
அன்றைய பிரான்சின் பொறுப்பாளர் சொன்னார்
ஒரு சிறுஉதவி செய்யமுடியுமோ அண்ணை?
திலகர் அண்ணை வரட்டாம்
ஒருக்கா சந்திச்சு போறியளே என?
சரி போய் சந்திக்கின்றோம்
ஒருக்கா தொலைபேசி அடித்து சொல்லுங்கோ நாங்க வாறம் என்று விட்டு
நானும் என்னுடன் வந்தவரும் சென்றோம். (அப்பொழுது கைத்தொலைபேசியெல்லாம் இல்லை)
 
ஒரு பெரிய மாடிக்கட்டிடத்தின் வாசலிலே
அண்ணை ஒரு காஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு நின்றார்.
என்னண்ணை இந்த நேரம் காஸ் சிலிண்டரோட நிற்கிறியள் என்றதற்கு
காஸ் சிலிண்டர் முடிவடைந்து விட்டது.
நாளைக்கு நான் ஒரு அலுவலாக தூர இடம் போகணும்
அது தான் அடித்து கொடுத்திட்டு போயிற்றா அவாவுக்கு சிரமமிருக்காதல்லே என்றார்.
 
அந்த இரவில் காஸ் சிலிண்டர் கிடைக்கும் அடையான் கடை தேடிப்பிடித்து
காஸ் சிலிண்டரை மாத்தி வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டு வர விடிந்திருந்தது.....
 
இப்படித்தான் எமது சர்வதேச பொறுப்பாளரின் வாழ்க்கைத்தரமே இருந்தது......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 149

புலத்தில் வேலை வாய்ப்புக்கள் சார்ந்து விக்கி ஐயாவின் கருத்து

விக்கி ஐயா

புலம் பெயர்ந்தவர்களின் முதலீடுகளை எதிர்பார்த்தபடி

இவ்வாறு சொல்லி இருப்பது

அவரது எதிராளிகளால் முரணாக பார்க்கப்பட்டாலும்

எதிலுமே ஒரு நன்மையுண்டு.

இனியாவது தாயக மக்கள் புலத்தை நாடாதிருக்கட்டும்.

எமது மண் காலியாவது தடைப் படட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 150
 
வரலாற்று வெற்றியும் தோல்வியின் தொடக்கநாளும்.....
 
இன்று உலகமே அதிர்ந்து போன
உலக வல்லரசான அமெரிக்காவால் எவராலும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது என உத்தரவாதம் தரப்பட்ட ஆனையிறவு முகாமை புலிகள் தமது தியாகத்தையும் தமது மக்களையும் மட்டுமே நம்பி தகர்க்கத்தொடங்கிய நாள்.
 
எதிரிகளாக பகைவர்களாக இருந்த உலக நாடுகள் அனைத்தும் இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என முடிவெடுக்க வைத்த தாக்குதல்.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 151
 
இழப்பின் வலியை உணர்ந்தவர்கள் நாம்.....
 
பிரான்ஸ் நாட்டினுடைய இதய பகுதி என அழைக்கப்படும்
பரிஸ் நகரத்தின் 800ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை கொண்ட
Notre de Dame (நொர்த் து டம்) என அழைக்கப்படும்
மிகப்பெரிய தேவாலயம் தீக்கிரையாகி இருக்கிறது.
 
நாங்கள் பிரான்சுக்கு வந்த பொழுதுகளில்
சிவனோ முருகனோ அம்மனோ எம்மிடமில்லாத போது
எமது வலிகளை, தேவைகளை முறையிட,
நேர்த்தி வைக்க, ஆறுதலடைய
இந்த இடம் மிகவும் உன்னதமான ஆலயமாக இருந்தது.
 
அந்தவகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மட்டுமல்ல
அனைத்து இன மக்களுக்கும் மதத்தவருக்கும் இது கோயில் தான்.
 
அது இன்று விபத்துக்காரணமாக அழிந்து போயிருக்கிறது.
மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விடயமாக உள்ளது.
எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது இருந்த அதே மனநிலை இன்றும்.
 
அந்த மக்களின் சோகத்தில் மன உளைச்சலில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.
 
அதே நேரம் இது விபத்து தவிர்க்கமுடியாதது தடுக்க முடியாதது.
ஆனால் எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது
அதிலும் மக்களை அங்கே பாதுகாப்புக்கருதி ஒதுங்குங்கள் என்ற வேண்டு கோளை விட்டு விட்டு கொத்துக்கொத்தாக கொன்றொழித்த போது
அது திட்டமிட்ட கொலை இன அழிப்பு.
அது தடுத்திருக்கக்கூடியது
தடுத்திருக்கமுடியும். ஆனால் ........??????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 152
 
இந்திய நாடாளுமன்றத்தேர்தல்- 2019
 
இந்தியத்தேர்தலில் நமக்கென்ன ஈடுபாடு என்று விட்டு போய் விடக்கூடியதல்ல
இந்திய வல்லரசின் எம்மீதான அழுங்குப்பிடி.
 
இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலை
மத்திய அரசின் ஆயுளை தீர்மானிப்பவர்களாக
தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டவர்கள் வரணும்.
 
அதன்படி பார்த்தால்
முதல் தலைமுறைகளளால் மாற்றங்களை கொண்டுவர முடியாது
அது முயன்று முயன்று தோற்றுப்போன ஒன்று.
 
ஆனால் இளைய தலைமுறையால் அது முடியும்.
அவர்களை கட்டுக்கோப்போடு வழி நடாத்தவும் முடியும் என்பதை
ஐல்லிக்கட்டு போராட்டம் முதல் பலவகை போராட்டங்களின் வாயிலாக பதிவாகி வருகிறது.
 
அந்தவகையில்
இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நடந்து வரும் இன்றைய நிலையை பார்க்கும் போது
இளைஞர்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகளில் நின்று வாக்களிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த மாற்றத்தின் திரள் சக்தியை முடிவு தருமா???
 
பார்க்கலாம்.
முயற்ச்சி செய்
வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.