Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 140
 
ஈழத்தமிழரும் இந்தியா பாகிஸ்தான் போரும்...
 
ஈழத்தமிழரின் அழிவில் பாகிஸ்தானின் பங்கென்பது ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவிகள் மட்டுமே. அவை பற்றி பாகிஸ்தான் எந்த ரகசியமோ ஒழிவு மறைவோ செய்தது கிடையாது.
 
ஆனால் இந்தியா செய்தது அத்தனையும் துரோகம் வேசம் நயவஞ்சகம் முதுகில் குத்துதல் மட்டும் தான். உலகிலேயே அதிக கொடுமை என்னவெனில் நண்பனாக அல்லது அதற்கும் மேலாக தாயாக நம்ப வைத்து கழுத்தறுப்பது தான்.
அதை இந்தியா எமக்குச்செய்தது.
 
பாகிஸ்தான் ஒரு போதும் தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் கை எழுத்து வை என்று எம்மை மிரட்டியதில்லை. ஆனால் இந்தியா...???
 
அதனால் தான் இந்திரா காந்தி இறந்தபோது MGR மறைந்தபோது பல வாரங்களாக கறுப்பு நாட்களாக சுமந்த ஈழம் அதன் பின் எவருக்கும் துக்க நாளை பற்றி அலட்டிக்கவே இல்லை.
 
பாகிஸ்தானா இந்தியாவா என்றால் பரம எதிரி இந்தியா தான். ஏனெனில் எதிரியை விட துரோகியே மிக மிக ஆபத்தானவன்.

விசுகர்! உங்கள் கருத்தை பாராட்ட வார்த்தைகளில்லை.👍

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 141
 
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை
 
உண்மையில் அபிநந்தன் மேல் நிலைக்கு வருவார்
அதிலும் அரசியலில் ஈடுபட்டால் இந்தியாவையே ஆள்வார்.
 
2 நாட்களிலேயே அவர் தன்னை நிரூபித்து விடுதலையாகி வருகின்றார்
 
அவரது விடுதலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த விடயத்தையுமே
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கின்றார்.
 
அதில் முக்கியமானது தான் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னால் கொலை செய்தாலும் இந்தியா கேட்காது ஆளை அப்படியே விட்டு விடும்
 
பாகிஸ்தானும் தயக்கமற்று கொன்று விடும் என்பதை அறிந்து காய் நகர்த்தி இருக்கிறார்.
 
உண்மையில் இவ்வாறு உயிர் தப்பி வரும் முதலாவது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அபிநந்தன் பெறுகிறார்.
 
வாழ்த்துவோம்
Link to comment
Share on other sites

அபிநந்தனின் விடுதலையோடு,  காஷ்மீர் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர் விடுதலையாகிறார்களோ தெரியாது. 

பரஸ்பர விடுதலைக்கு, DEAL தேவைதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎28‎/‎2019 at 5:36 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 141
 
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை
 
உண்மையில் அபிநந்தன் மேல் நிலைக்கு வருவார்
அதிலும் அரசியலில் ஈடுபட்டால் இந்தியாவையே ஆள்வார்.
 
2 நாட்களிலேயே அவர் தன்னை நிரூபித்து விடுதலையாகி வருகின்றார்
 
அவரது விடுதலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த விடயத்தையுமே
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கின்றார்.
 
அதில் முக்கியமானது தான் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னால் கொலை செய்தாலும் இந்தியா கேட்காது ஆளை அப்படியே விட்டு விடும்
 
பாகிஸ்தானும் தயக்கமற்று கொன்று விடும் என்பதை அறிந்து காய் நகர்த்தி இருக்கிறார்.
 
உண்மையில் இவ்வாறு உயிர் தப்பி வரும் முதலாவது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அபிநந்தன் பெறுகிறார்.
 
வாழ்த்துவோம்

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

 

On 2/28/2019 at 6:11 PM, thulasie said:

அபிநந்தனின் விடுதலையோடு,  காஷ்மீர் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர் விடுதலையாகிறார்களோ தெரியாது. 

பரஸ்பர விடுதலைக்கு, DEAL தேவைதானே!

பாகிஸ்தானுக்கு தேவையானது இவரிடம் ஒன்றுமே இல்லாத போது, இவரின் முடிவு மிகச் சரியானது.

அதாவது, யுத்த விமானிகளின் நாய்ச் சண்டையில், விமானத்தை விழுத்தும் சாதுர்யத்தை எதிரி கொண்டிருந்தால், மற்ற தரப்பிடம் ஒன்றுமே இல்லை.

கிந்தியாவின், விமானப்படை, அதுவும் supersonic dog fight மாய உருவத்தை, (கிந்தியாவின் புவியியல், பொருளாதார அளவை வைத்து ஏற்படுத்திய மாய உருவத்தை, பாகிஸ்தான் தகர்த்து விட்டது.

நேற்று, கடற்படையின் நீர் மூழ்கி பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது, கிதியாவின் கடற்படையை கூட ஏனையோர் ஏளனமாக, முக்கியமாக கடடற்படையின் போரிடும் வலுவின்  பிரமையை பாகிஸ்தான் உடைத்து விட்டது.  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

இப்பொழுது  இது  போன்ற  கோழைகளுக்குத்தானே  வாழ்வு

உங்களுக்கு தெரியாததா??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 142
 
7 பேர் விடுதலையும் இந்திய அரசியலும்...
 
7 பேரை விடுதலை செய்யும்படி
அரசியல் மேடையில் மோடியிடம்
கூட்டணிக்கட்சியான பாமக கோரிக்கை. விடுதலை உறுதி - செய்தி
 
7 பேர் விடுதலையாகப்போகின்றார்கள் என்று சாந்தப்படுவதா??
 
அல்லது இந்திய அரசியல்வாதிகளின் கூட்டணிகளுக்கும்
பங்கு பிரித்தலுக்கும்
எம்மவர் எலிகளாவதை நினைத்து அழுவதா ???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றிக்காக வாக்கு பெறுவதற்காக விடுதலை செய்ய போகிறார்கள் போல!
எப்படியாயினும் 7 பேர் விடுதலையை வரவேற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

தேர்தல் வெற்றிக்காக வாக்கு பெறுவதற்காக விடுதலை செய்ய போகிறார்கள் போல!
எப்படியாயினும் 7 பேர் விடுதலையை வரவேற்போம்.

அவர்களின்  விடுதலை  சார்ந்து  சந்தோசம் சகோ

ஆனால் இந்த விடுதலைக்கு ஒரு  கூட்டணி  தேவையா?

நீதியும்

சட்டமும்

ஏன் அரசியல் அமைப்பும்  கூட செல்லுபடியற்றதாக்கப்படுவது  எவ்வாறு சரியான  வழியாகும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

எதிரியிட்டை அகப்பட்டால் தன்னைத்தானே துவக்காலை சுட்டு செத்திடணும். இல்லாட்டி அதுக்கு முதலே எதிரி வீட்டுக்கே போய் உள்ள ரகசியங்களையெல்லாம் சொல்லி காட்டிக்குடுத்து சுகபோகமாய் வாழ்ந்திடணும்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

 

பாகிஸ்தானுக்கு தேவையானது இவரிடம் ஒன்றுமே இல்லாத போது, இவரின் முடிவு மிகச் சரியானது.

அதாவது, யுத்த விமானிகளின் நாய்ச் சண்டையில், விமானத்தை விழுத்தும் சாதுர்யத்தை எதிரி கொண்டிருந்தால், மற்ற தரப்பிடம் ஒன்றுமே இல்லை.

கிந்தியாவின், விமானப்படை, அதுவும் supersonic dog fight மாய உருவத்தை, (கிந்தியாவின் புவியியல், பொருளாதார அளவை வைத்து ஏற்படுத்திய மாய உருவத்தை, பாகிஸ்தான் தகர்த்து விட்டது.

நேற்று, கடற்படையின் நீர் மூழ்கி பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது, கிதியாவின் கடற்படையை கூட ஏனையோர் ஏளனமாக, முக்கியமாக கடடற்படையின் போரிடும் வலுவின்  பிரமையை பாகிஸ்தான் உடைத்து விட்டது.  
 

 

 

பாக்கிஸ்தான் அவரை விடுவித்ததால் இம்ரான்கானுக்குத் தான் நல்ல பேர்.அவரின்ட கையில் எதோ டொக்கிமன்ஸ் இருந்ததாகவும் அதை அவர் சப்பி துப்பியதாகவும் வாசித்தேன்.அதற்குப் பிறகும் அவரை விடுவித்து இருக்கிறார்கள்...ஏன்?????????????  

 

22 minutes ago, குமாரசாமி said:

எதிரியிட்டை அகப்பட்டால் தன்னைத்தானே துவக்காலை சுட்டு செத்திடணும். இல்லாட்டி அதுக்கு முதலே எதிரி வீட்டுக்கே போய் உள்ள ரகசியங்களையெல்லாம் சொல்லி காட்டிக்குடுத்து சுகபோகமாய் வாழ்ந்திடணும்....😎

இப்படியான பதவியில் இருப்பவர்கள்,போர் வீரர்கள் ஒரு எதிரியின்ட காலில விழுந்து,கெஞ்சி தப்பி வாறது அவமானம் என்பது எனது கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேரும் விடுதலையாகி விட்டார்களா, இன்னும் இல்லைதானே .இப்படி எத்தனை முறை அவர்களின் விடுதலையை பார்த்து விட்டோம் ...இன்னும் பார்ப்போம்......!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 143
 
மன்னார் மனித எச்சங்களும் தமிழரும்
 
ஊரில் சொல்வார்கள்
நல்லபெயர் எடுப்பது மிக மிக கடினம்
கெட்ட பெயர் எடுப்பது மிக மிக சுலபம்
அதே போல் எடுத்த நல்ல பெயரை கெட்ட பெயராக்குவது மிக மிக சுலபம்
 எடுத்த கெட்ட பெயரை நல்ல பெயராக்குவது மிக மிக மிக கடினம் என்று.
 
தாயகத்தின் எந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எவர் மனதிலும் முதலில் எழும் பதில் எதுவாக இருக்கும்??
 
அவ்வாறு எல்லோரது குறிப்பாக தமிழரது மனங்களில் சந்தேகங்களையும் விரக்தியையும் நம்பிக்கையீனங்களை விதைத்தவர்கள் யார்?
அதை மாற்ற அல்லது நம்பிக்கையூட்ட இதுவரை எடுக்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட நீதி ஏதாவது???
 
நீங்க எதையும் சொல்லுங்கோ?? இது சம்பந்தமான சந்தேகங்கள் எப்பவும் எம்முடன் இருக்கவே செய்யும்??
 
ஆராய்ச்சியை சிறீலங்கா செய்தாலென்ன?
அமெரிக்கா செய்தாலென்ன?
ஏன் ஐ.நா செய்தாலென்ன??
 
கொன்றவன்
கொல்ல சொன்னவன்
அதை பார்த்துக்கொண்டு இருந்தவன்
அவனிடமிருந்து என்ன வரும்????????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 144
 
இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும்
இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும்
 
 
இந்தப்பாடலையும் பாடுபவரின் யாலங்களையும் பாருங்கள்.
இசையை அறிந்தவர்களுக்கு அல்லது பாடக்கூடியவர்களுக்கு தெரியும்
இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும்
இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும்.
 
இந்தப்பாடல் வந்த காலப்பகுதியில்
இந்தப்பாடலை மிகவும் ரசித்தும்
இசை மற்றும் சுருதி குன்றாமல் பாடக்கூடியவர்களில் நானும் ஒருவன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரை ....உங்களுக்குள் ஒரு ம துரை சோமு இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது..... அடுத்தமுறை சந்திக்கும்போது "பாரத் கஃபே " முன்னால்  நீங்கள் பாட  நான்தான் ஜால்ரா  இப்பவே சொல்லிப்போட்டன்....!   😀

அருமையான பதிவு பாராட்டுக்கள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

துரை ....உங்களுக்குள் ஒரு ம துரை சோமு இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது..... அடுத்தமுறை சந்திக்கும்போது "பாரத் கஃபே " முன்னால்  நீங்கள் பாட  நான்தான் ஜால்ரா  இப்பவே சொல்லிப்போட்டன்....!   😀

அருமையான பதிவு பாராட்டுக்கள்.....! 

அது  ஒரு  காலம் அண்ணை

சாராரண தரப்பரீட்சையில் சங்கீதத்துக்கு D (அதி  உயர்  சித்தி) எடுத்தவன் நான்

அப்புறம் பருவ  வயதும்

அது சார்ந்த  குரல் மாற்றமும்

கொழும்புக்கான  இடம் மாற்றமும்

அதனால் ஏற்பட்ட தொடர் பயிற்சி இன்மையும்  குரலை  மாற்றி  விட்டது

ஆனால் இசையும் அதன்  சுருதியும்  இன்றும்  என்னோடுண்டு

நானாடா  விட்டாலும்........

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 145
 
பொள்ளாச்சியும் ஈழமும்
 
பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசுபவர்கள் எல்லோரும்
அநேகமாக புலிகள் பற்றியும் புலிகளின் தாயக ஆட்சி பற்றியும் பேசுகிறார்கள்.
 
ஆனால் புலிகளின் ஆட்சியில் எவ்வாறு குற்றங்கள்
மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தவிர்க்கப்பட்டன என்றோ
அதனுடைய தார்ப்பரியம் பற்றியோ பேசுவதில்லை
அல்லது அது பற்றி தெரிவதில்லை போலும்.
 
புலிகளின் ஆட்சியில் குற்றங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டமைக்கு
அவர்களின் உளவுத்துறையின் ஆழுமையும்
புலிகளுக்கும் மக்களுக்குமான உறவும் தான் காரணம்.
 
சிறு குழந்தையோ பாட்டியோ
தனக்கு நடந்த வன்முறையை அல்லது அநியாயத்தை
புலிகளின் எந்த உறுப்பினரிடமும் சொல்லமுடியும்.
அந்தளவுக்கு அவர்களுக்கிடையிலான நெருக்கமும் உறவும் இருந்தது.
சொல்பவரின் விபரங்கள் இரகசியமாக்கப்படுவதுடன்
குற்றம் செய்தவர் எந்த பெரிய ஆளாக இருந்தாலும்
ஏன் சொந்த தகப்பனாக இருந்தாலும்
புலிகள் தண்டனை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை
மக்கள் மனதிலிருந்தது.
இது புலிகளின் தொடர் நடவடிக்கைகளால் வந்தது.
 
உண்மையில்
எமது பிள்ளைகளுக்கு இன்று நாம் தரவேண்டியது
இந்த நம்பிக்கையையே.
எவரிடமாவது சொல்லக்கூடிய
சொன்னால் தன்னை நம்பக்கூடிய ஒரு இடம் இல்லாத போதே
இவ்வாறான தவறுகள் தொடர்கின்றன.
 
 
எனது பிள்ளைகளுக்கு இந்த நம்பிக்கையை நான் தந்துள்ளேன்.
 
மற்றும்படி இந்த நம்பிக்கையை நாம் தராதவரை
இந்த 4 பேரோடு இது நின்று போகப்போவதில்லை
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 146
 
நியுசிலாந்து தாக்குதல்
 
எம்மில் ஒரு பழக்கமுண்டு
எந்த பிரச்சினையும் எமது கதவை தட்டும்வரை
அது பற்றி அலட்டிக்கொள்ளமாட்டோம்
அவற்றை அறிந்தாலும்
அதற்கொரு வியாக்கியானம் சொல்லி தப்பித்துக்கொள்வோம்.
 
இன்று நியுசிலாந்தில்
இசுலாமியர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை
அது இசுலாமியர்களுக்கெதிரானது என கடந்து மறந்து விடுவோம்
 
ஆனால் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தால்
அத்தாக்குதல் தமது மண்ணை விட்டு புலம் பெயர்ந்த
அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதும்
எமது அடுத்த தலைமுறையை எங்கே கொண்டு வந்து விட்டுள்ளோம் என்பதும் புரியும்.
 
அதற்காகத்தான்
இறுதி நிமிடம் வரை மண்ணுக்காக போராடினோம் என்பதும்
ஒத்துழைக்கும்படி அனைத்து தமிழ் மக்களிடமும் மன்றாடினோம் என்பதும் புரியும்.
 
இன்று மண்ணும் இல்லை புலமும் இல்லை எங்கு வாழ்ந்தாலும் பாதுகாப்பில்லை.
 
இது தான் எம் வாழ்வா இனி?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 147
 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும்
எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான
அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) சாவடைந்துள்ளார்.
 
கிட்டத்தட்ட 30 வருடங்களாக பழகிய செயற்பாட்டாளன்.
எங்கு நின்ற போதும் கண்டவுடன் ஓடிவந்து
குகதாசண்ணா எப்படி இருக்கிறியள் என்று
கை கொடுத்து நலம் விசாரிக்கும் தம்பி.
 
எத்தனையோ பிரச்சினைகள்
இழுபாடுகள் பிரிவுகள் வந்த போதும்
தௌிவாக செயற்பட்ட செயற்பட்டுக்கொண்டிருந்த தோழன்.
 
இறுதியாக கண்டபோது
நாம இப்ப எங்க நிற்கிறம் சகோ என்ற எனது கேள்விக்கு
நாம தெளிவாக நிற்கிறம் அண்ணா
தொடர்ந்து எம்மால் முடிந்ததை செய்து கொண்டிருப்பம்
நீங்களும் தொடருங்கோ
அது தான் இன்றைய தேவை என்றபடி
புன் சிரிப்போடு பதில் தந்தவன் இன்றில்லை.
 
ஒருவன் தான் உழைத்த கனவை காணாது
இறத்தல் என்பது பெருங்கொடுமை.
 
நான் அடிக்கடி எழுதுவது தான்
2009க்கு பின்னர்
நாம் வேறு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றோம்
விடை தெரியாத கெரடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக தேடிக்கொண்டிருக்கின்றோம்.
 
ஆனால் எமக்காக
தம் வாழ்வை கொடுத்த
கொடுத்துக்கொண்டிருக்கின்ற
இவர் போன்றவர்களின்
இன்றைய வாழ்க்கை முறையை பற்றி சிந்திப்பதே இல்லை.
 
அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் சாகவில்லை
சாகவிட்டிருக்கின்றோம்.
புலத்தில் இவரைப்போல பல ஆயிரம் பேரின் நிலை இது தான்.
 

இனியாவது.......??????

L’image contient peut-être : 1 personne, texte
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 148
 
புலிகளின் சர்வதேச பொறுப்பாளரின் வாழ்க்கைத்தரம்
 
அப்பொழுது புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக திலகர் அண்ணா இருந்த நேரம்.
 
அன்று நாம் எமக்கு தரப்பட்ட இடங்களுக்கு சென்று
தரப்பட்ட கடமைகளை முடித்து அலுவலகம் திரும்பும் போது
நள்ளிரவாகி இருந்தது.
சென்ற கடமையின் விபரங்களையும்
அன்றைய நடப்பு விடயங்களையும் பகிர்ந்து
அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி புறப்பட தயாரான போது (இரவு 2 மணி இருக்கலாம்)
அன்றைய பிரான்சின் பொறுப்பாளர் சொன்னார்
ஒரு சிறுஉதவி செய்யமுடியுமோ அண்ணை?
திலகர் அண்ணை வரட்டாம்
ஒருக்கா சந்திச்சு போறியளே என?
சரி போய் சந்திக்கின்றோம்
ஒருக்கா தொலைபேசி அடித்து சொல்லுங்கோ நாங்க வாறம் என்று விட்டு
நானும் என்னுடன் வந்தவரும் சென்றோம். (அப்பொழுது கைத்தொலைபேசியெல்லாம் இல்லை)
 
ஒரு பெரிய மாடிக்கட்டிடத்தின் வாசலிலே
அண்ணை ஒரு காஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு நின்றார்.
என்னண்ணை இந்த நேரம் காஸ் சிலிண்டரோட நிற்கிறியள் என்றதற்கு
காஸ் சிலிண்டர் முடிவடைந்து விட்டது.
நாளைக்கு நான் ஒரு அலுவலாக தூர இடம் போகணும்
அது தான் அடித்து கொடுத்திட்டு போயிற்றா அவாவுக்கு சிரமமிருக்காதல்லே என்றார்.
 
அந்த இரவில் காஸ் சிலிண்டர் கிடைக்கும் அடையான் கடை தேடிப்பிடித்து
காஸ் சிலிண்டரை மாத்தி வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டு வர விடிந்திருந்தது.....
 
இப்படித்தான் எமது சர்வதேச பொறுப்பாளரின் வாழ்க்கைத்தரமே இருந்தது......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 149

புலத்தில் வேலை வாய்ப்புக்கள் சார்ந்து விக்கி ஐயாவின் கருத்து

விக்கி ஐயா

புலம் பெயர்ந்தவர்களின் முதலீடுகளை எதிர்பார்த்தபடி

இவ்வாறு சொல்லி இருப்பது

அவரது எதிராளிகளால் முரணாக பார்க்கப்பட்டாலும்

எதிலுமே ஒரு நன்மையுண்டு.

இனியாவது தாயக மக்கள் புலத்தை நாடாதிருக்கட்டும்.

எமது மண் காலியாவது தடைப் படட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 150
 
வரலாற்று வெற்றியும் தோல்வியின் தொடக்கநாளும்.....
 
இன்று உலகமே அதிர்ந்து போன
உலக வல்லரசான அமெரிக்காவால் எவராலும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது என உத்தரவாதம் தரப்பட்ட ஆனையிறவு முகாமை புலிகள் தமது தியாகத்தையும் தமது மக்களையும் மட்டுமே நம்பி தகர்க்கத்தொடங்கிய நாள்.
 
எதிரிகளாக பகைவர்களாக இருந்த உலக நாடுகள் அனைத்தும் இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என முடிவெடுக்க வைத்த தாக்குதல்.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 151
 
இழப்பின் வலியை உணர்ந்தவர்கள் நாம்.....
 
பிரான்ஸ் நாட்டினுடைய இதய பகுதி என அழைக்கப்படும்
பரிஸ் நகரத்தின் 800ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை கொண்ட
Notre de Dame (நொர்த் து டம்) என அழைக்கப்படும்
மிகப்பெரிய தேவாலயம் தீக்கிரையாகி இருக்கிறது.
 
நாங்கள் பிரான்சுக்கு வந்த பொழுதுகளில்
சிவனோ முருகனோ அம்மனோ எம்மிடமில்லாத போது
எமது வலிகளை, தேவைகளை முறையிட,
நேர்த்தி வைக்க, ஆறுதலடைய
இந்த இடம் மிகவும் உன்னதமான ஆலயமாக இருந்தது.
 
அந்தவகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மட்டுமல்ல
அனைத்து இன மக்களுக்கும் மதத்தவருக்கும் இது கோயில் தான்.
 
அது இன்று விபத்துக்காரணமாக அழிந்து போயிருக்கிறது.
மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விடயமாக உள்ளது.
எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது இருந்த அதே மனநிலை இன்றும்.
 
அந்த மக்களின் சோகத்தில் மன உளைச்சலில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.
 
அதே நேரம் இது விபத்து தவிர்க்கமுடியாதது தடுக்க முடியாதது.
ஆனால் எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது
அதிலும் மக்களை அங்கே பாதுகாப்புக்கருதி ஒதுங்குங்கள் என்ற வேண்டு கோளை விட்டு விட்டு கொத்துக்கொத்தாக கொன்றொழித்த போது
அது திட்டமிட்ட கொலை இன அழிப்பு.
அது தடுத்திருக்கக்கூடியது
தடுத்திருக்கமுடியும். ஆனால் ........??????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 152
 
இந்திய நாடாளுமன்றத்தேர்தல்- 2019
 
இந்தியத்தேர்தலில் நமக்கென்ன ஈடுபாடு என்று விட்டு போய் விடக்கூடியதல்ல
இந்திய வல்லரசின் எம்மீதான அழுங்குப்பிடி.
 
இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலை
மத்திய அரசின் ஆயுளை தீர்மானிப்பவர்களாக
தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டவர்கள் வரணும்.
 
அதன்படி பார்த்தால்
முதல் தலைமுறைகளளால் மாற்றங்களை கொண்டுவர முடியாது
அது முயன்று முயன்று தோற்றுப்போன ஒன்று.
 
ஆனால் இளைய தலைமுறையால் அது முடியும்.
அவர்களை கட்டுக்கோப்போடு வழி நடாத்தவும் முடியும் என்பதை
ஐல்லிக்கட்டு போராட்டம் முதல் பலவகை போராட்டங்களின் வாயிலாக பதிவாகி வருகிறது.
 
அந்தவகையில்
இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நடந்து வரும் இன்றைய நிலையை பார்க்கும் போது
இளைஞர்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகளில் நின்று வாக்களிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த மாற்றத்தின் திரள் சக்தியை முடிவு தருமா???
 
பார்க்கலாம்.
முயற்ச்சி செய்
வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.