Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/16/2019 at 2:55 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 151
 
இழப்பின் வலியை உணர்ந்தவர்கள் நாம்.....
 
பிரான்ஸ் நாட்டினுடைய இதய பகுதி என அழைக்கப்படும்
பரிஸ் நகரத்தின் 800ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை கொண்ட
Notre de Dame (நொர்த் து டம்) என அழைக்கப்படும்
மிகப்பெரிய தேவாலயம் தீக்கிரையாகி இருக்கிறது.
 
நாங்கள் பிரான்சுக்கு வந்த பொழுதுகளில்
சிவனோ முருகனோ அம்மனோ எம்மிடமில்லாத போது
எமது வலிகளை, தேவைகளை முறையிட,
நேர்த்தி வைக்க, ஆறுதலடைய
இந்த இடம் மிகவும் உன்னதமான ஆலயமாக இருந்தது.
 
அந்தவகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மட்டுமல்ல
அனைத்து இன மக்களுக்கும் மதத்தவருக்கும் இது கோயில் தான்.
 
அது இன்று விபத்துக்காரணமாக அழிந்து போயிருக்கிறது.
மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விடயமாக உள்ளது.
எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது இருந்த அதே மனநிலை இன்றும்.
 
அந்த மக்களின் சோகத்தில் மன உளைச்சலில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.
 
அதே நேரம் இது விபத்து தவிர்க்கமுடியாதது தடுக்க முடியாதது.
ஆனால் எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது
அதிலும் மக்களை அங்கே பாதுகாப்புக்கருதி ஒதுங்குங்கள் என்ற வேண்டு கோளை விட்டு விட்டு கொத்துக்கொத்தாக கொன்றொழித்த போது
அது திட்டமிட்ட கொலை இன அழிப்பு.
அது தடுத்திருக்கக்கூடியது
தடுத்திருக்கமுடியும். ஆனால் ........??????

கடவுள் தூனிலும் துரும்பிலும் இருப்பார் என்றால் எதற்காக அந்நிய வழிபாட்டுத்தலத்துக்குச் சென்று நேர்த்தியும் வழிபாடும். வீட்டிலிருந்தபடியே செய்தால் பலிக்காதா???

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடவுள் தூனிலும் துரும்பிலும் இருப்பார் என்றால் எதற்காக அந்நிய வழிபாட்டுத்தலத்துக்குச் சென்று நேர்த்தியும் வழிபாடும். வீட்டிலிருந்தபடியே செய்தால் பலிக்காதா???

இது  கேள்வி

 கொஞ்ச  நாள் தாங்க  யோசித்து எழுதுறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 153
 
வளர்ச்சியடைந்த ஈழத்து திரைப்படத்துறை
 
பிரான்சில் கலைஞர்கள் மட்டுமல்ல கலையும் தொழில் நுட்பமும் சேர்ந்து வளர்ச்சியடைந்தது. ஈழத்து சினிமாவுக்கான ஒரு தனிப்பாதையை வகுக்க முடியும் என்றளவுக்கு வளர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து குறுப்படங்களிலிருந்து பெருந்திரைப்படங்களை நாடி முயற்சிகளை செய்த போது ஈழத்து சினிமாவின் மீது நாட்டம் கொண்ட பலரும் அதற்கு உறுதுணையாக நின்றனர். அந்தவகையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் நாவலர் குறும்படப்போட்டிகளை நடாத்தியதோடு மட்டுமன்றி பணப்பரிசில்களையும் வழங்கியும் மேலும் அவர்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்து தனது நேரங்களை செலவிட்டிருந்தது அதன் அடுத்த கட்டமாக முழுநேர திரைப்படங்களை எம்மவர்கள் இயக்கும் சந்தர்ப்பங்கள் எவ்வழியில் வந்தாலும் அதை பயன்படுத்தணும் என்கின்ற ஏக்கமே ஈழத்தமிழர் அபிமானிகளை பொறுத்து தொடர்ந்து இருந்து வந்தது. அதற்கான முயற்சிகளையும் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் செய்து கொடுத்து வந்தது. அந்தவகையில் தமிழகத்திலிருந்து தரம்மிக்க தேசிய விருதுகளை பெற்ற எமது தாயக மக்கள் மீது பற்றுக்கொண்டஇயக்குநர்கள் வரவழைக்கப்பட்டு நடுவர்களாக இருந்தது மட்டுமன்றி விழாவின் அடுத்த நாள் கலந்துரையாடல் பட்டறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழக இயக்குநர்களுடன் நெருக்கங்களும் ஏற்படுத்தப்பட்டன.
 
சில முழு நீளதிரைப்படங்களை இயக்கவும் தமிழ் தமிழகம் திரைப்படத்தை தாண்டி பிரெஞ்சுப்படங்களில் கூட எம்மவர்கள் திறமை மிளிர்கிறது என மகிழ்ந்திருந்ததோடு அதன் அடுத்த கட்டங்களை எதிர் பார்த்தபடி இருந்த எம்மவர் மேல் எவர் கண் பட்டதோ அல்லது எவர் குறி வைத்தனரோ......???
 
பலரின் நேரங்கள் பணங்கள் ஏக்கங்கள் ஆசைகள் கனவுகளை உள்வாங்கி வளர்ச்சியடைந்த ஈழத்து திரைப்படத்துறை இன்று தமக்குள் கூர் பார்க்கும் நிலையில் வந்து நிற்பது வேதனை தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அமைப்பின் யாப்புக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட கோபதாபங்களை பின் தள்ளி ஈழத்து சினிமா வளர்ச்சி ஒன்றையே பிரதான நோக்கோடு கொண்டு தூர நோக்கோடு சிந்தித்து செயற்படணும் என்பதே ஈழத்து சினிமா மீதும் இங்குள்ள எமது கலைஞர்களின் வளர்ச்சியிலும் அக்கறையுடையவர்களின் வேண்டுதலாகும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 154
 
கொச்சிக்கடையும் நானும்...
 
எந்த திருவிழாவுக்கு போகின்றேனோ இல்லையோ
இந்த நாள் மட்டும் அங்கே விடிய விடிய நிற்பது வழமை.
மிகவும் அமைதியாகவும் இன மத பேதங்களை கடந்த திருவிழாக அது இருக்கும்.
இதில் கலந்து கொள்வது ஒரு வித்தியாசமான அனுபவமாகவும்
பருவ வயதுக்கோளாறுகளை கடந்த ஒரு அபூர்வ மனநிலையை தரும் நாளாக இருக்கும்.
 
101 இலக்க BUSஇல் பாடசாலை செல்வதால்
ஒவ்வொரு நாளும் இதை கடந்து போகும் போது
நெஞ்சில் கைவைத்து வணங்கி செல்வதுண்டு.
பக்கத்தில் பொன்னம்பல வாணேச்சர் கோயில் இருந்தபோதும்
இது ஒரு தனி இடத்தை என் மனதில் பிடித்திருந்தது.
 
 
1983 கலவரத்தின் உச்ச அகோரம் தாங்க முடியாது ஓடி
நாங்கள் முதல் முதலாக அகதியாக சென்ற இடம் இது தான்.
 
அந்த இடத்தையும் தாக்க பலமுறை சிங்களவர்கள் முயன்றபோதும்
அங்குள்ளவர்களால் திருப்பி தாக்கப்பட்டு ஓட விரட்டிய போதும்
எமக்குள் பிரச்சினை வேண்டாம்
தஞ்சம் பகுந்த தமிழர்களை தாருங்கள் என கேட்டு
மீண்டும் தாக்குதல்களும் இறுதியாக புலிகள் புகுந்து விட்டார்கள் என
கபட நாடகமாடி பலரை சுட்டு வீழ்த்திய போதும் எம்மை காத்து நின்ற மண் அது.
 
அப்பொழுது அங்கே வாழ்ந்தவர்கள் 90 வீதம் தமிழை பேசுபவர்களாக இருந்தனர்.
நேற்று நடந்த குண்டு வெடிப்பின் பின்
அங்குள்ள ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது
தற்பொழுது இந்நிலை 50க்கு 50 ஆகி இருப்பதாக சொன்னார்.
கண்ணுக்கு புலப்படாத சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல் இது தான்.
 
குண்டு வெடிப்பு சார்ந்து எதையும் பகிர விரும்பவில்லை.
அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக நின்று
பேசித்தீர்க்க வேண்டிய சிக்கலுக்குள்
கண்ட பேய்களையெல்லாம் இழுத்து விட்டு
தம்பிகளுக்கெதிராக வலுப்படுத்தி போதே எம்மவர் சொல்லியது தான்.
இனி எவராலும் உங்களை காப்பாற்ற முடியாத சகதிக்குள் விழுகிறீர்கள் என.
 
தம்பிகள் நல்லவர்களென்றும்
தர்ம யுத்தம் புரிந்தவர்கள் என்றும்
தாம் கொடுத்த வாக்குப்படி இன்றுவரை மௌனித்திருக்கிறார்கள் என்றும்
உங்களுக்கு புலப்பட 310 உயிர்கள் உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது.
 
நாம் என்ன செய்யும்?? சொல்லும்...???
 
ஒன்றை மட்டும் சொல்லமுடியும்
தம்பிகள் இருந்திருந்தால்
இதை  செய்தவர்களுக்கு 
செய்வதற்கு முன் பிரபாகரன் முகம் நிச்சயம் ஞாபகம் வந்திருக்கும்.
இலங்கையின் எந்த பகுதியிலும் அவர்கள் இருந்திருந்தால் இது நடந்திருக்காது
நடக்கவும் இல்லை.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 155

நான் சொன்னேன் சகோதரா
நீங்க காது கொடுத்து கேட்கலயே

பேய்களும் நரிகளும்
புத்தனின் முகம் போர்த்திய காட்டேறிகளும்
கூட்டாக நிற்குது
என் இனத்தை கூண்டோடு அழிக்குது
கொஞ்சம் உதவுங்கோ என்று
உங்கள் வீதியில் இரவு பகலாக நின்று கதறி அழுதோம் சகோதரா
நீங்க நம்பல

லட்சம் மக்களின் ரத்தம் குடித்தவை
புதைத்த இடத்தில் புத்தர் கோயிலுடன்
கோரப்பல்லுக்கு தொடர் இரை தேடியலையுது
அதை பகிரங்கப்படுத்துங்கள்
என்று பனியும் புயலும் வெயிலும் பாராது
உங்கள் மன்றத்து முன்றலில்
ஒவ்வொரு வருடமும் இருமுறை வந்து
அமைதி வழியில் தவம் செய்தோமே
அப்பவும் நீங்க காது கொடுத்து கேட்கலயே சகோ

உன்னைப்போலத்தான் நானும்
தமிழனாக பிறந்த ஒரே குற்றத்துக்காக
அனைத்தையும் பறித்து
கட்டிய சறத்துடன் இப்படித்தான் ஓட விட்டார்கள் சகோ
உன் வலி எனக்குப்புரியும்
என் வலி இப்பவாவது உனக்குப்புரிகிறதா???
என் இனம் வாழ இனியாவது வழி சொல்வீரா??

L’image contient peut-être : 9 personnes, personnes souriantes, personnes debout
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 156

இவர்களுக்கு எங்களோட என்ன பகை???

1983 யூலை 23 இனக்கலவரம் அகோர தாண்டவமாடத்தொடங்கிய நாள்.

எனது அண்ணரின் கூட்டாளிகளில் இசுலாத்தை தழுவியவர்கள் ஒரு சிலரில் அண்ணரின் தோளில் கை போட்டு கதைக்கும் அளவுக்கு நண்பர் ஒருவர். அன்றும் அவ்வாறே சிரித்துப்பேசியபடி இருப்பதை பார்க்கின்றேன்.

1983 யூலை 25 அண்ணரின் கடை முன் பக்கத்தால் எரியூட்டப்பட                                                                                   மொட்டை மாடியிலிருந்த நாம் (5ம்மாடி)                                                                                                                                       கீழிறங்கி முதலாம் மாடிக்கு வந்தால் பக்கத்திலிருக்கும் வீடுகளின் கூரைகளில் ஏறமுடியும்.

உடுத்த சறத்துடன் நானும் ஒரு பெட்டியுடன் எனது மைத்துணரும்                                                                                   (பெட்டியை கொண்டு சென்றால்                                                                                                                                                தமிழரென்று அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்பதால் நான் எதையும் எடுத்து வரவில்லை)
அந்த கூரைகளின் மீது நடக்கின்றோம்.                                                                                                                                                     சிறிது தூரத்தில் இறங்கக்கூடிய ஒரு இடம் வருகிறது.                                                                                                                       அது ஒரு வீட்டின் முற்றம். இறங்குவதற்காக காலை கீழே நீட்டுகின்றேன்.

டேய் இறங்கினா வெட்டுவன் என்ற குரல் வருகிறது கத்தி தேடி ஓடுவதும் தெரிகிறது.                                                       அவன் வேறு யாருமல்ல                                                                                                                                                                              எனது அண்ணருடன் நேற்றுவரை தோளில் கை போட்டு பழகிய                                                                                                  அதே இசுலாமிய நண்பன் தான்.

மீண்டும் சில தூரம் கூரைகளின் மீது நடந்து                                                                                                                                            இருவரும் பிரிந்து                                                                                                                                                                                                   நான் சிங்கள மகாவித்தியாலய மதிலின் ஊடாக உள்ளே இறங்கி                                                                                  சிங்களவன் போல் சறக்கட்டை மாற்றி அவர்களுடனேயே கலந்து கொச்சிக்கடையை அடைந்தேன்.

இன்றுவரை எனக்குப்புரியாத விடயம்
இவர்களுக்கு எங்களோட என்ன பகை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 157
 
இன்னொரு திரிசங்கு நிலையில் தமிழினம்....
 
 
இன்றைய இலங்கை தீவின் நிலையை உற்று நோக்கும் போது
அது தமிழருக்கு தேவையற்ற விடயம்
அல்லது ஏதோ ஒரு வகையில் எம்மை அழித்த இரு பகுதிகளும்
மோதிக்கொள்வது போலிருந்தாலும்
இதற்கும் தமிழினம் பலி கொடுக்கப்படுவதும்
முன் நிறுத்தப்பட்டு பகை மற்றும் அழிவை சந்திக்கும்
ஆபத்தான நிலையே காணப்படுகிறது.
 
தமிழின அழிப்பில் இசுலாமியர்களின் பங்கை உணர்ந்திருக்கும் தமிழினம்
அதற்கு பழி வாங்கத்துடிக்கும் என்பதை
அறிந்து வைத்திருக்கும் நரித்தந்திரமான சிங்களம்
அதற்கு தயாராக உள்ள தமிழர் தரப்பை பாவித்து
குளிர் காய தயங்கமாட்டாது.
இது இலங்கையில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழினத்தை
மேலும் மேலும் கீழிறக்கி
பேசத்தரயற்ற சனத்தொகையை கொண்ட
இனக்குழுமமாக ஈழத்தமிழினத்தை மாற்ற வழி செய்து விடும்.
 
மிகவும் அவதானமாகவும்
தலைவரால் மௌனமாக்கப்பட்ட ஆயுதங்களின் தூரநோக்கத்தன்மையையும்
தமிழினம் முழுமையாக உணர்ந்து மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலமிது.
 
ஆகக்குறைந்தது
தமிழினம் தனது மக்கள் தொகையையும் மண்ணையும் காப்பாற்றியபடி
தலையீடுகளை தவிர்த்து
எமது வாழ்வுண்டு நாமுண்டு என்றிருப்பதே
இன்றைய தேவையும் வரலாறு தரும் பாடமுமாகும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 158

தற்கொடை பற்றிய பேச்சு மீண்டும்.....?

இலங்கையில் நடந்துவரும் அசம்பாவிதங்களின் காரணமாக

தற்கொடையாளிகள் பற்றிய பேச்சு மீண்டும் மீண்டும் அடிபடுகிறது.

தற்பொழுது நடாத்தப்படும் தற்கொலைகளை புலிகளின் தற்கொடையுடன் ஒப்பிடுவதும் நடக்கிறது.

ஒருவர் ஒன்றை தான் அடைவதற்காக

அல்லது தனக்கு அது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது உயிரை மாய்ப்பது தற்கொலையாகும்.

தனக்கென்றில்லாது ஒரு சமூகம்

அல்லது தனது அடுத்த சந்ததி வாழ

அல்லது ஏற்படப்போகும் அழிவை தடுத்து மக்களை காப்பாற்ற

அல்லது தமது நண்பர்களின் இழப்பை குறைக்க

தனது உயிரை கொடுத்தல் என்பது தற்கொடையாகும்.

புலிகள் தாம் வாழவோ தனக்கு சொர்க்கம் கிடைக்கவோ

அல்லது சொர்க்கத்தில் சில சலுகைகள் கிடைக்கவோ

தமது உயிரைக்கொடுத்தவரல்லர்.

 

போங்கப்பா அதுக்கெல்லாம் மனித நேயமும்

உயிர்களை விரும்புதலும் மிக மிக முக்கியம்.

 

அழும் தனது சொந்த குழந்தையின்

அழு குரலுக்கே மனம் கசியாது தனக்கு சொர்க்கம் வேண்டி.......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 159
 
பலயீனம்...
 
இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு பலவாறும் உரிமை கோருகிறார்கள்.
நியூசிலாந்துக்காக பழி வாங்கினோம்
சிரியாவில் அழித்ததற்காக பழி வாங்கினோம்
சொர்க்கத்துக்கு போவதற்காக பழி வாங்கினோம்.
 
ஆனால் அதற்காக இலங்கையை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதை
எவரும் உணர்கிறார்களில்லை
அரசு உட்பட.
 
அரசும்
அவர்கள் சொல்லும் காரணங்களையே சொல்கிறதே தவிர
இலங்கை எதற்காக தேர்வு செய்யப்பட்டது என்பதை
சொல்லவும் இல்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.
 
ஊரில் சொல்வார்கள் இடம் கிடைச்சா எல்லோரும்
............... என்று?????
 
இது தான் நடந்தது.
இலங்கை அந்தளவுக்கு பலயீனமாக இருக்கிறது.
 
உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு இனங்கள்
ஐக்கியப்படும்வரை
இது தொடரும் போலத்தான் தெரிகிறது
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 160
 
தாயகப்பகுதிகளில் அகதிகளின் குடியேற்றமும் எம்மவர் புரிதலும்
 
நீர்கொழும்புப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளை வடக்கு மாகாணத்தில், வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
 
இதற்கு ஈழத்தவரிடையே ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஆதரவு தெரிவிப்போர் ஒரு படி மேலே சென்று
புலத்தில் எம்மவருக்கு தஞ்சம் கொடுக்கப்பட்டதே
தங்க அனுமதியளிக்கப்பட்டதே அதே போல நாமும் நடந்து கொள்ளணும் என்று சொல்கிறார்கள்.
 
உண்மையில் இதுவும் ஒருவகை அறியாமையே.
புலத்தில் அகதிகளை ஏற்றல் அல்லது தங்குமிட அனுமதி தரல் என்பது
எழுந்தமானமாக செய்யப்படுவதல்ல.
 
தத்தமது நாட்டின் குடிப்பரம்பலை மாற்றாதவகையிலும்
தத்தமது குடி மக்களின் வாக்குப்பலத்தை பாதிக்காத வகையிலும்
தத்தமது நாட்டுக்கு தேவைப்படும் மனிதவலுவைத்தரக்கூடியவர்களையும்
இதையும் தாண்டினால் நீண்ட கால அடிப்படையில் கூட தமது பொருளாதாரத்தால் சுமக்கக்கூடியவர்களையும் மட்டுமே
அந்நாடுகள் உள்ளெடுக்கின்றன.
இங்கே ஒரு ஊரில் குடி புகுவதற்கு கூட சில கட்டுப்பாடுகளும்
அனுமதிக்காக காத்திருத்தலும் உண்டு.
சில அடுக்குமாடி குடியிருப்புக்களில்
ஒரு குறிப்பிட்ட வீதப்படி தான் மக்கள் கலப்பு அனுமதிக்கப்படும்.
 
ஆனால் இவை சாதாரண பொது மக்களின் கண்களுக்கு தெரியவருவதில்லை.
அதற்கு பொறுப்பானவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
 
இவற்றைக்கொண்டு பார்த்தால்
தாயகத்தில் குடியேற்ற முயற்ச்சிக்கப்படுபவர்கள்
எமது மண்ணுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள்
தேவையற்றவர்கள்
அந்த பகுதியின் தன்மையை மாற்றக்கூடியவர்கள்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர்கள் தற்காலிகமாகவே தங்குவார்கள் என்று எண்ணுகிறேன், ஐ.நா அவர்களை வேறு நாடுகளில் புகலிட தஞ்சம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

22 minutes ago, ஏராளன் said:

ஆனால் இவர்கள் தற்காலிகமாகவே தங்குவார்கள் என்று எண்ணுகிறேன், ஐ.நா அவர்களை வேறு நாடுகளில் புகலிட தஞ்சம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாசித்தேன்.

நானும்  பிரான்சுக்கு தற்காலிகமாகத்தான்  வந்து  தங்கினேன்  சகோ.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 161

இலங்கைக்குள் பாரிய இராணுவ வாகனங்களுடன் நுளைந்தது ஐ.நா சமாதானப்படை

உண்மையில் இவர்களை உலகம் இன்னும் நம்புகிறதா??

சமாதானம்
அமைதி
இனங்களுக்கிடையே ஆன முரண்பாடுகளை தீர்த்தல்
போர்களை தவிர்த்தல்
அப்பாவி மக்களை காத்தல்

இவற்றுக்கும் இன்றைய ஐநாவுக்கும் 2009க்கு பின்னர் ஏதாவது தொடர்பு உண்டா??
இத்தகைய வாக்கியங்களை சொல்லவாவது இவர்களுக்கு  தகுதியுண்டா???

போங்கடா??
பணத்துக்காக எதுவும் செய்யும் கூட்டமே
வீதியில் நின்று வேறு எதாவது தேடுங்கள்

இவர்களை தாயகத்தில் கண்டால் காறித்துப்பிச்செல்லுங்கள் உறவுகளே......

L’image contient peut-être : plein air
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 161

இலங்கைக்குள் பாரிய இராணுவ வாகனங்களுடன் நுளைந்தது ஐ.நா சமாதானப்படை

உண்மையில் இவர்களை உலகம் இன்னும் நம்புகிறதா??

சமாதானம்
அமைதி
இனங்களுக்கிடையே ஆன முரண்பாடுகளை தீர்த்தல்
போர்களை தவிர்த்தல்
அப்பாவி மக்களை காத்தல்

இவற்றுக்கும் இன்றைய ஐநாவுக்கும் 2009க்கு பின்னர் ஏதாவது தொடர்பு உண்டா??
இத்தகைய வாக்கியங்களை சொல்லவாவது இவர்களுக்கு  தகுதியுண்டா???

போங்கடா??
பணத்துக்காக எதுவும் செய்யும் கூட்டமே
வீதியில் நின்று வேறு எதாவது தேடுங்கள்

இவர்களை தாயகத்தில் கண்டால் காறித்துப்பிச்செல்லுங்கள் உறவுகளே......

L’image contient peut-être : plein air
 

இவங்கள் மாலிக்கு போற சிறிலங்கன் இராணுவமாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 162
 
இசுலாமியர் மீதான தேசியத்தலைவரது தூரப்பார்வை
 
நான் முதன் முதலாக சோனிகள் என்ற சொல்லை கேட்டது
முரளிதரன் கருணா அம்மானாக பிரான்சுக்கு வந்திருந்த போது தான்.
பிரான்சில் அவருக்கான தங்குமிடம் போக்குவரத்து உணவு போன்றவற்றை செய்த குழுவில்
நானும் இருந்ததால் அவருடன் அதிக நேரத்தை செலவளித்தவன்.
 
அவரது வாயிலிருந்து
ஒரு நாளைக்கு பலமுறை இந்த சோனி என்ற சொல்வந்தபடியே இருக்கும்.
அந்தளவுக்கு அவர் இசுலாமியர்கள் மீது வெறுப்பாக இருந்தார்.
கிழக்கு மாகாணம் மிகவும் அவர்களால் பாதிக்கப்பட்டதால்
இவ்வெறுப்பு வந்திருக்கக்கூடும் என அப்பொழுது நினைத்தோம்.
அவர் இங்கிருந்து சென்ற பின்னர் கூட
எம்மிடமிருந்து இச்சொல் வருவதை தவிர்க்க நாங்கள் சிரமப்பட வேண்டியிருந்தது.
அதனால் தான் தலைமைக்கு துரோகமிழைத்து
இவர் ஒரு இசுலாமியரின் துணையுடன் தப்பி ஓடினார் என்பதைக்கூட
என்னால் முதலில் நம்ப முடியாதிருந்தது.
 
தற்போது தேசியத்தலைவர் அவர்கள்
இசுலாமியர்களை வெறுக்கவோ
தவறுகள் செய்தபோதும் தண்டிக்கவோ
ஒரு போதும் விரும்பியதில்லை கட்டளையிட்டதில்லை என்றிருக்கின்றார் .
முரளிதரனை பிரித்து
ஒரு இனத்தின் அழிவுக்கே வித்திட்ட போதும்
முரளிதரனை பிரித்து சென்ற தமிழர்களை தண்டித்த தலைவர்
ஒரு போதும் அதற்கு உடந்தையாக இருந்து
இறுதிக்கட்டத்தில் முரளிதரனை அழைத்துச்சென்றவர் ஒரு இசுலாமியர் என்பதால்
அவரை தலைவர் ஒன்றுமே செய்யவில்லை.
 
அது தான் தலைவரது தூரப்பார்வை
அதனால் தான் அவர் தேசியத்தலைவர்.
இன்றும் அதிகமான தமிழர்களால் மீண்டும் வருமாறு தேடி அழைக்கப்படும் தெய்வம்.
இவர் ஒரு  காலத்தில் கருணா அம்மான் என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய கழிசறை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 163
 
ஒரு தகப்பன் ????
 
ஒரு தகப்பனானவன் தனது பிள்ளையை
தோளில் வைத்து தன்னால் பார்க்கமுடியாத அடைய முடியாத இலக்கையும்
பிள்ளைக்கு காட்டுவான் என்பார்கள்.
அவ்வகையான தகப்பனே பெற்ற கடமையை செய்தவராவார்.
 
அதற்கு மாறாக
தனது பிள்ளையை தனக்கு கீழ் அல்லது வெளி உலகமே தெரியாமல்
பார்க்க விடாமல் தனது சொந்தப்பிள்ளையை வளர்க்கும் தகப்பன்கள் உண்டா??
 
இந்தக்கேள்விக்கு விடை தேடிய போது
உலகமே வியக்கும் தமிழ் இலக்கணவாதி
தமிழ் எழுத்தாளர்
தமிழ் படைப்பாளி
கவிஞர்
கலைஞர் என்ற பெயரை தனது அடைமொழியாகக்கொண்ட கலைஞர்
பெரும் கட்சியின்தலைவர்
சாணக்கிய அரசியல்வாதி
தமிழகத்தை ஆண்டமுதல்வர் கருணாநிதி
தனது பிள்ளை ஸ்டாலினை வளர்த்திருக்கும் முறை...???
 
தமிழ் தெரியாது
ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் எதுவும் தெரியாது
 
ஆனை வரும் முன்னே... மணியோசை வரும் பின்னே.
 
பூனை... மேல், மதில் மாதிரி...
 
கணக்கு கூட 86 + 9 = எவ்வளவு என்று தெரியாது
 
பணமில்லையா?
உதவ ஆட்களில்லையா?
என்ன இல்லை கலைஞரிடம் பிள்ளையை உருவாக்க??
 
அரசியலுக்கு வரப்போகும் அவருக்கு கல்வி தேவையற்றது என நினைத்தாரா கலைஞர்??
அல்லது
ஸ்டாலின் கலைஞரின் பிள்ளையே இல்லையா???
 
ஒரு தகப்பன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு கலைஞரே சாட்சியாகிறார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 164
 
தமிழகத்தில் நாம் தமிழர் மேலும் மேலும் வளர்வார்களா?
 
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து அநேகமான ஊடகங்களில் வைக்கப்படும் கேள்வி இது?
 
சாதியம் சார்ந்த கட்சிகளின் தேய்மானத்தாலும்
திமுக அதிமுக மற்றும் திராவிடம் சார்ந்த கட்சிகளின் தொடர் ஏமாற்றுக்களாலும் வரும் கேள்வி இது.
 
இரண்டு விடயங்கள் கவனிக்கப்படவேண்டியவை
 
1 - இளைஞர்கள் அல்லது புதிய வாக்காளர்கள் எதை ஆதரிக்கிறார்கள்???
 
2 - பழைய தேர்தல்களில் பெற்றோர் தமது பிள்ளைகளை வாக்களிப்பில் கலந்து கொள்ள வைத்தனர்.
இந்தமுறை அது தலைகீழாகி பிள்ளைகள் பெற்றோரை வழி நடாத்தியுள்ளதும் தெரிய வருகிறது
 
எனவே கேள்விக்கான பதில் மிக மிக சுலபமானது
 
தேய்மானமாகக்கூடிய வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் பழைய கட்சிகள் தேய்வடைவதும்
புதிய மற்றும் இளைஞர்களை உள்வாங்கி வைத்திருக்கும் நாம் தமிழர்கள் வளர்வதும் இயற்கையான நகர்வே.
அது இன்னும் ஓரிரு தேர்தல்களுடன் நிரூபணமாகும்.
 
ஒரு ஈழத்தமிழனாக இந்த இளைஞர்களது தேசியம் சார்ந்த எழுச்சி தான் நான் வேண்டி நிற்பது.
அது என் கண் முன்னே நடந்தேறுமாயின் அதைவிட மகிழ்வேது....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 165
 
வைத்தியத்துறை
 
இலங்கையில் வைத்தியத்துறை சார்ந்து வரும் செய்திகள் கிலி கொள்ளச்செய்கின்றன.
ஆயிரக்கணக்கான பெண்களுக்கு
கரு தரிக்காமலிருக்க மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டிருப்பதாக
செய்திகள் வந்தவண்ணமுள்ளன.
 
இந்த இடத்தில் 2009 யுத்த இறுதிக்காலப்பகுதியில்
அதிலும் முள்ளிவாய்க்கால் நிலப்பரப்பில்
எமது வைத்தியர்கள்
தமது உடல் உயிர் உடமைகள் அனைத்தையும் துச்சமென மதித்து
எந்தவித வைத்திய உபகரணங்களோ மருந்துகளோ அற்ற நிலையிலும்
இறுதிவரை நின்று குற்றுயிராகக்கிடந்த எமது மக்களை காக்க
போராடிய அந்த வைத்தியர்களையும்
அவர்களுக்கு உதவியாக நின்ற உதவியாளர்கள் தாதிகளையும்
இந்நேரத்தில் கனம் செய்யணும்.
 
தமிழன் எல்லாவிதத்திலும்
அத்தனை வடிவத்திலும் தனது உச்ச தியாகத்தை பதிவு செய்ய தவறியதில்லை.
 
எங்கிருந்தாலும் வாழ்க.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 166
 
விதி அல்லது அடுத்த யென்மம்
 
விதி அல்லது அடுத்த யென்மம் சார்ந்தோ நம்பிக்கையற்றவன் நான்.
ஆனாலும் எமது சக்திக்கு அப்பாற்பட்ட தீமைகள் அல்லது அநீதிகள் நடைபெறும் போது
அதை எம்மால் தடுத்து நிறுத்தமுடியாதபோது
விதி மேலோ அல்லது அதைத்தொடர்ந்த
அடுத்த யென்மத்திலாவது இதற்கு தண்டனை கிடைக்கும் என்று நம்புபவர்கள்
ஏளாளமானோர் எம்முள்ளுண்டு.
 
அதற்கான தண்டனை அல்லது அந்த தீமையை செய்தவர்களுக்கு
அதை உணர வைக்கும் சந்தர்ப்பம்
எம் கண் முன்னே நடந்தேறும் போது
இப்பொழுதெல்லாம் அடுத்த யென்மமல்ல
கண் முன்னே தீர்ப்பு நடக்கிறது என்று
எம்மவர் ஆறுதலடைவதையும் கண்ணால் காண்கின்றோம்.
 
இன்று இலங்கையில் அவ்வாறான காரியங்கள் பல தோடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன.
 
10 வருடத்துக்குள்
எமக்கு நடந்த அநீதியை பார்த்து கை கொட்டிச்சிரித்தவர்கள்
அந்த கொடூரத்துக்கு துணை போனவர்கள்
அந்த படுபாதகத்தை தமது சுயநலத்துக்கு பாவித்துக்கொண்டவர்கள்
இன்று தமக்கு அநீதி நடக்கும் தருணத்தில்
தமது பதவிகளே தம்மை காக்காத போது
எம்மை நினைக்கிறார்கள்.
எமது கருணையை எதிர்பார்க்கிறார்கள்.
எல்லாவற்றையும் மறந்து ஒன்றாவோம் என மன்றாடி நிற்கிறார்கள்.
 
காலமும் வரலாறும் தான் வழிகாட்டி.
தோல்வி என்பது மட்டும் தான்
அடுத்த படியையும்
நண்பர்களையும்
தெளிவான பாதையும் வகுத்துத்தரும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2019 at 5:35 PM, விசுகு said:
வைத்தியத்துறை
 
இலங்கையில் வைத்தியத்துறை சார்ந்து வரும் செய்திகள் கிலி கொள்ளச்செய்கின்றன.
ஆயிரக்கணக்கான பெண்களுக்கு
கரு தரிக்காமலிருக்க மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டிருப்பதாக
செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

தடுப்பிலிருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி சொன்னது நினைவுக்கு வருகிறது, ஊசி போடும்போது எதற்காக போடுகிறீர்கள் என கேட்க எச்ஐவிக்கு தடுப்பூசி போடுவதாக கூறினார்களாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் சில மகப்பேற்று நிபுணர்கள் சொல்கிறார்கள் பிரசவத்தின் போது அப் பெண்களுக்கு தெரியாமல் கருத துளையினுடாக ஊசி போடலாம்மாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 167
 
அதிகாரம் - வலிமையானது
 
இச்சொல்லை தற்பொழுது அதிகம் கேட்கக்கூடியதாக உள்ளது.
இதை அடிக்கடி தமிழகத்தில் சீமான் பாவிப்பதை கேட்க முடிகிறது
 
ஈழத்தமிழர் நாம்
இந்த அரச அதிகாரமற்ற தன்மையால்
மாறாக அவ்வதிகாரம் எமது எதிரியிடம்
அதிலும் பெரும்பான்மை
மற்றும் அதி உச்ச அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை இருந்ததால்
எம் வாழ்வில் இழந்தவை சொல்லில் எழுதமுடியாதவை.
 
ஈழத்தில் அவ்வாறான அதிகாரத்தை
எம்மால் தற்போதைக்கு எடுக்கமுடியாத போதும்
தமிழகத்தில் அதற்கான வாய்ப்புக்கள் வரத்தொடங்கி இருக்கின்றன.
அதிலும் படித்த இளைய தலைமுறையினர் அதிகாரத்துக்கு வரத்துடிப்பது தெரிகிறது
 
தமிழகம் இந்திய மத்திய அரசின் அதிகாரத்துக்கப்பால் போக முடியாது என்பவர்கள்
இந்தியாவின் மற்றைய மாநிலங்களின்
அவரவர் தனிப்பட செயற்படும் அதிகார வலுவை படிப்பது நல்லது.
 
தாராள மனதோடும்
திராவிட இணைப்போடும் இருந்து
கச்சைவரை இழந்தது போதும்
இனி நாம் தமிழராக ஒன்றிணைந்து
வலிமை பெற்று
தமிழினம் சார்ந்து நின்று
அதிகாரத்தை கைப்பற்றி
அதிகாரத்தோடு தமிழரின் உரிமை சார்ந்து வேண்டுகோளாக இல்லாது
மற்றைய மாநிலங்களைப்போல்
ஐனநாயகமுறையில் நிறைவேற்றப்பட்ட சாசனங்களூடாக
சாதித்தலே தேவையும் நடைமுறைச்சாத்தியமானதும் கூட.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 168
 
நாடு கடந்த அரசு
 
தற்பொழுதெல்லாம் ஒவ்வொரு ஊராக நாம் நாடுகடந்த அரசிலிருந்து பிரிகின்றோம் எம்மை விடுவித்துக்கொள்கின்றோம் என உண்மையாகவும் நக்கலாக பேசப்படுகிறது.
 
உண்மையில் நாடு கடந்த அரசு என்பது என்ன?
அதன் தாக்கங்கள் என்ன?
அதன் கட்டுமானங்களை சரியாக உள் வாங்கி
அல்லது செயற்படுத்தினால் எதை சாதிக்கலாம் என்கின்ற
எந்த முயற்சியும் முதிர்ச்சியுமின்றி
எல்லாவற்றையும் கவுட்டுக்கொட்டும் கொட்டும் கூட்டம் சார்ந்து
தமிழினம் கவனமாக இருக்கணும்.
 
எதையாவது செய்வோம் என விளையும் எவரையும் எதையும்
தட்டிவிடும் சில லைக்கும் அதை வைத்து பிரபலமும் தேடும் இந்தக்கூட்டம்
எதையும் சாதித்ததில்லை.
செயற்படுத்தியதில்லை.
உலகின் எந்த பகுதியிலும் எந்த அமைப்பிலும் இருந்ததில்லை.
 
 
நாடு கடந்த அரசு மீது எனக்கும் விமர்சனமுண்டு.
ஆனால் அதற்காக தமது நேரத்தை செலவளிப்போர்
எதையாவது தமிழுருக்கான குரலாக வைத்திருப்போம் என உழைப்போர் மீது
மிகுந்த மரியாதையுண்டு.
அதற்காக நேரத்தை தற்போது கொடுக்காத எனக்கு
அதன் மீது விமர்சனம் வைக்கும் உரிமை அறவே கிடையாது.
 
செய்யுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 168
 
நாடு கடந்த அரசு
 
தற்பொழுதெல்லாம் ஒவ்வொரு ஊராக நாம் நாடுகடந்த அரசிலிருந்து பிரிகின்றோம் எம்மை விடுவித்துக்கொள்கின்றோம் என உண்மையாகவும் நக்கலாக பேசப்படுகிறது.
 
உண்மையில் நாடு கடந்த அரசு என்பது என்ன?
அதன் தாக்கங்கள் என்ன?
அதன் கட்டுமானங்களை சரியாக உள் வாங்கி
அல்லது செயற்படுத்தினால் எதை சாதிக்கலாம் என்கின்ற
எந்த முயற்சியும் முதிர்ச்சியுமின்றி
எல்லாவற்றையும் கவுட்டுக்கொட்டும் கொட்டும் கூட்டம் சார்ந்து
தமிழினம் கவனமாக இருக்கணும்.
 
எதையாவது செய்வோம் என விளையும் எவரையும் எதையும்
தட்டிவிடும் சில லைக்கும் அதை வைத்து பிரபலமும் தேடும் இந்தக்கூட்டம்
எதையும் சாதித்ததில்லை.
செயற்படுத்தியதில்லை.
உலகின் எந்த பகுதியிலும் எந்த அமைப்பிலும் இருந்ததில்லை.
 
 
நாடு கடந்த அரசு மீது எனக்கும் விமர்சனமுண்டு.
ஆனால் அதற்காக தமது நேரத்தை செலவளிப்போர்
எதையாவது தமிழுருக்கான குரலாக வைத்திருப்போம் என உழைப்போர் மீது
மிகுந்த மரியாதையுண்டு.
அதற்காக நேரத்தை தற்போது கொடுக்காத எனக்கு
அதன் மீது விமர்சனம் வைக்கும் உரிமை அறவே கிடையாது.
 
செய்யுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள்.

நல்லது அண்ணா...அப்படியே ஊரில் இருந்து அரசியல் செய்ப்பவர்களை இங்கிருந்து விமர்சிக்காதீங்கோ...அங்கே இருந்து அரசியல் செய்வதன் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

நல்லது அண்ணா...அப்படியே ஊரில் இருந்து அரசியல் செய்ப்பவர்களை இங்கிருந்து விமர்சிக்காதீங்கோ...அங்கே இருந்து அரசியல் செய்வதன் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும் 

நான் எழுதியதை முழுமையாக நீங்க உள்வாங்கவில்லை சகோதரி நீங்கள் ஒன்றை எதிர்க்கணும் என்றால் அதில் நாமும் இருக்கணும் அல்லது அதற்கு பதிலாக இன்னொன்றுக்காக உழைப்பவராக இருக்கணும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.