Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 169
 
தமிழர்கள் நல்லவரா? கெட்டவரா??
 
அண்மையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தபோது இப்படி கேட்டக்தூண்டியது.
 
பா.இரஞ்சித் என்ற ஒரு திடீரென முளைத்த கொம்பு ஒன்று
விடுதலைப்புலிகள் மீது விமர்சனம் இருக்கு என்று
குடையை வீட்டுக்குள் பிடித்தபடி துள்ளுது.
 
இன்னொன்று இந்திய இலங்கை இனப்படுகொலையை
அப்படியே முழுமையாக விழுங்கிவிட்டு
தோசைக்கான மாவின் புளிச்சல் அளவியல் கணக்கெடுத்து வாங்கிக்கட்டுது...??
 
நாம நல்லவர்கள் தானே?
இவர்கள் மீது எமது விரல் கூட படாதிருக்கே..???
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 170
 
இலங்கையில் பட்டினியால் தற்கொலைகளும் நாம் வளர்த்த கனவு தேசமும்..
 
2003இல் 2 மாத ஓய்வில் குடும்பமாக தாயகம் சென்றிருந்தோம்.
இந்த 2 மாதத்தில் இலங்கையின்
முக்கியமாக தமிழர் தாயகத்தினை முழுமையாக என் பிள்ளைகளுக்கு காட்டினேன்.
 
இதன் காரணமாக கண்டி வீதியை அடிக்கடி கடக்க வேண்டி வந்தது.
இதற்காக இபோச தாயக வாகனச்சேவை உட்பட அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் பயன்படுத்தினோம்.
 
வாகனத்தில் ஏறியதும்
எனது கடைசி மகள் (அப்போது 3 வயது)
பிச்சைகாரர்களுக்கு போடுவதற்கென சில்லறை கேட்டு வாங்கி வைத்துக்கொள்வாள்
(வழமையாக அவர்கள் வருவதால்).
 
அன்றும் அவ்வாறு தான்
பயணம் செய்த வாகனம் தாண்டிக்குளத்தை கடந்து ஓமந்தை அடைந்த போது
அவளது கையிலிருந்த பணத்தை காட்டி
ஏனப்பா இந்த இடத்தில் ஒருத்தரும் காசு கேட்பதில்லை என்று கேட்டாள்.
அப்பொழுது தான் நாமும் அதை உணர்ந்தோம்.
தாண்டிக்குளத்துக்கும் ஓமந்தைக்குமிடையில்
பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி
சாப்பிட்டு சாமி கும்பிட்டு இளைப்பாறி சென்ற போதும் எவருமே ஏறவில்லை....
 
அப்பொழுது அவளுக்கு நான் சொன்னது :
இங்கு தான் போர் நடந்தது. (அதற்கு சாட்சியாக தலையற்ற பனைகளை காட்டினேன்)
இங்கு தான் அநாதரவானவர்கள் அங்கவீனர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அதிகம்.
ஆனால் அவர்களையெல்லாம் சுமக்க தலைவர் இங்கு தான் இருக்கிறார்.
அவர் எல்லோரையும் பார்த்துக்கொள்கிறார் என்று.
 
எவ்வாறு நாம் ஒரு தேசத்தை கனவு கண்டோமோ
அவ்வாறானதொரு கனவு தேசத்தை
தலைவர் உருவாக்கி நடாத்தியதை கண்ணால் கண்டேன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 171
 
கல்முனையும் செருப்பும் - வாக்குறுதியுடன் மீண்டும் மீண்டும் கூட்டமைப்பும்
 
உண்மையில் நான் கூட்டமைப்பின் மிகவும் ஆழமான ஆதரவாளன்.
எனக்கு தலைவர் பிரபாகரனாலேயே முடியாததை
இவர்களால் சிங்களத்திடமிருந்து எதையும் வாங்கித்தரமுடியாது என்று தெரியும்.
வரலாறும் போராட்டமும் எம் கண் முன்னே தான் நடந்தது.
 
அந்தவகையில் தலைவரால் முன் மொழியப்பட்டு
இருக்கும் அமைப்புக்களில் வலுவான அமைப்பு என்ற ரீதியில்
இன்றும் கூட்டமைப்புக்கு ஆதரவுண்டு.
 
ஆனால் அவர்கள் தம்மை தங்கள் வலுவை உணர்ந்ததாக தெரியவில்லை.
அதற்கான பதில் தான் கல்முனை செருப்படி.
 
கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாத
அடுத்தடுத்து இழுத்தடிப்பு வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு
தம்மை உணர்ந்திருந்தால்
இன்னொரு வாக்குறுதியுடன் மக்கள் முன் செல்வார்களா???
 
உன்னை உணர்......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 172
 
இந்திய பாராளுமன்றில் தமிழ் வாழ்க முழக்கம்
 
நன்றாக பாருங்கள்.
கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து
இதே கட்சிகள் தான் இந்திய பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் எடுக்கிறார்கள்.
தமிழகத்தையும் ஆழ்கிறார்கள்.
எதற்காக அப்பொழுதெல்லாம் தோன்றாத அல்லது தேடப்படாத ஒன்று
இப்பொழுது தூக்கப்படுகிறது.
 
வேறொன்றுமில்லை. பயம்.
இனி தமிழகத்தில் இது தான் மந்திரம்.
இது தான் விரும்பப்படும் கவனிக்கப்படும் விடயம்.
 
நினைத்தபடி எல்லாமே சரியாகவே நகர்கிறது.
 
இந்த பயத்தை உருவாக்கியவன் ஒருவனே. அவன் சீமான்.
நன்றி சீமானுக்கு......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 173
 
தள்ளி நின்று விளையாடுங்கள்...
 
விஜய் தொலைக்காட்சி வருடாவருடம் நடாத்தும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மட்டுமல்ல விஜய் தொலைக்காட்சியின்
பல நிகழ்ச்சிகளிலும் கால் பதிக்கும் பிரபலமாக இருந்து காணாமல் போனவர்கள்
பிரபலமாக உயர ஆசைப்படுபவர்கள்
இந்நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவதினூடாக
தம்மை மக்கள் முன் கொண்டு செல்ல முயல்கிறார்கள்.
 
அந்தவகையில் ஈழத்தமிழரும் இதில் தலை காட்டுவதை
பெரும் முன்னெடுப்பாக நினைத்து முயல்கிறார்கள்
 
இதில் ஈழத்தமிழ் சிலரும் பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முதன் முதலாக பிரேம் கோபாலும் (நானறிந்தவரை) அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்கிறார்கள்.
 
இந்தமுறை பிக்பாஸ்-3 தொடங்குமுன்னே
எமது பிரதேசவாதிகள் சிலர் கொய்யோ முறையோ என அழத்தொடங்கிவிட்டார்கள்.
 
காரணம் இருக்கு. அதில் பங்கெடுக்கும் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்.
அவர் வரும் முன்பே
தன்னை தன் நிலைப்பாடை மகிரங்கப்படுத்தும் முன்பே
கண்டதாலும் எறிதல் தொடங்கிவிட்டது.
 
ஏற்கனவே ஒரு காணொலி எடுத்தாலும்
எம் மண்ணை அவுசுடன் ஒப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ள நிலை
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்
இது போன்ற எறிதல்கள் தொடர்வது
எம்மை குறிகிற வட்டத்துக்குள் அடைக்கும் முயற்ச்சியாகவே பார்க்கப்படும்.
புங்குடுதீவாமே அதனால் நிச்சயமாக தாயகத்தை காட்டிக்கொடுப்பார்
போன்ற பதிவுகளையும் பார்க்கமுடிகிறது.
 
வேண்டாமே.
நாங்கள் நூறு தடவை எதையும் சொல்வதில்லை.
நல்லவர்களுக்கு மட்டுமே எம்மால் நல்லவர்களாக இருக்கமுடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 173
 
தள்ளி நின்று விளையாடுங்கள்...
 
விஜய் தொலைக்காட்சி வருடாவருடம் நடாத்தும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மட்டுமல்ல விஜய் தொலைக்காட்சியின்
பல நிகழ்ச்சிகளிலும் கால் பதிக்கும் பிரபலமாக இருந்து காணாமல் போனவர்கள்
பிரபலமாக உயர ஆசைப்படுபவர்கள்
இந்நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவதினூடாக
தம்மை மக்கள் முன் கொண்டு செல்ல முயல்கிறார்கள்.
 
அந்தவகையில் ஈழத்தமிழரும் இதில் தலை காட்டுவதை
பெரும் முன்னெடுப்பாக நினைத்து முயல்கிறார்கள்
 
இதில் ஈழத்தமிழ் சிலரும் பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முதன் முதலாக பிரேம் கோபாலும் (நானறிந்தவரை) அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்கிறார்கள்.
 
இந்தமுறை பிக்பாஸ்-3 தொடங்குமுன்னே
எமது பிரதேசவாதிகள் சிலர் கொய்யோ முறையோ என அழத்தொடங்கிவிட்டார்கள்.
 
காரணம் இருக்கு. அதில் பங்கெடுக்கும் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்.
அவர் வரும் முன்பே
தன்னை தன் நிலைப்பாடை மகிரங்கப்படுத்தும் முன்பே
கண்டதாலும் எறிதல் தொடங்கிவிட்டது.
 
ஏற்கனவே ஒரு காணொலி எடுத்தாலும்
எம் மண்ணை அவுசுடன் ஒப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ள நிலை
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்
இது போன்ற எறிதல்கள் தொடர்வது
எம்மை குறிகிற வட்டத்துக்குள் அடைக்கும் முயற்ச்சியாகவே பார்க்கப்படும்.
புங்குடுதீவாமே அதனால் நிச்சயமாக தாயகத்தை காட்டிக்கொடுப்பார்
போன்ற பதிவுகளையும் பார்க்கமுடிகிறது.
 
வேண்டாமே.
நாங்கள் நூறு தடவை எதையும் சொல்வதில்லை.
நல்லவர்களுக்கு மட்டுமே எம்மால் நல்லவர்களாக இருக்கமுடியும்.

யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார் 

ஆம் ஆண் புங்குடுதீவை சேர்ந்தவராம் பெண் சக்தி ரிவி அறிவிப்பாளர் திருகோணமலையை சேர்ந்தராம் வரட்டும் வாய்ப்புக்களை பெறட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரினதும் பெயர் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 174
 
வாழ்க்கை மிக அற்புதமானது - பக்கத்து வீட்டுக்காறனை பார்த்து உன் வாழ்வை நீ அமைக்காதவரை....
 
ஒருவரை பார்த்தவுடன் அவரை நாம் எடை போடமுடியாது. வாழ்வு எப்பொழுதும் இனிமையாக இராது. ஓடிக்கொண்டிருக்கும் அல்லது துரத்திக்கொண்டிருக்கும். நாம் ஓடிக்கொண்டிருப்பதால் அல்லது வாழ்வு எம்மை துரத்திக்கொண்டிருப்பதால் மற்றவர்களெல்லாம் இந்த துரத்தலற்று ஓட்டமற்று வாழ்கிறார்கள் என தப்புக்கணக்கு போடுவதும் அவரைப்போல வாழ எம்மை வாழ்வை மாற்றுவதுமே எல்லா சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
 
என் வாழ்வில் பலரை பார்த்திருக்கின்றேன். ஒருவனை அடுத்த பல வருடங்களுக்கு நடுவீதியில் நிற்கும் அளவுக்கு செய்து விட்டு தங்கள் வாழ்வை எள்ளவும் விட்டுக்கொடாது அதே பகட்டு வாழ்வை தொடர்வார்கள்.
 
அகள பாதாளத்தில் விழுவதென்பார்களே அது தான் இது.
அதற்குள் புகந்தபின் இது தான் நிலை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 175

ஒருவரைப்பார்த்தவுடன் நாம் எடுக்கும் முடிவுகள்???

இவரது திருமணத்துக்கு நான் சென்றிருந்தேன்.
மிகப்பெரிய தாடி மீசையுடன் தான் இவர் தாலி கட்டினார்.
அப்பொழுது இதை பற்றி பக்கத்தில் இருப்பவருடன் பேசினோம். அவர் பல காலமாக இப்படித்தான். தாடியை மட்டும் குறைக்கவே மாட்டார் என்றார்கள். திருமணத்தின் போதாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம். இது அதிகம் என்பதாகத்தான் எமது பேச்சிருந்தது.

இது பற்றி எனது மக்களிடமும் சொன்னேன்.
ஆனால் யாருக்குமே இவர் இந்தப்போட்டிக்காகத்தான் இந்தளவுக்கு வளர்த்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை.

இப்படித்தான் நாம் பின்னால் எதையாவது பேசி விட்டுப்போகின்றோம். ஆனால் உண்மை???

safe_image.php?w=540&h=282&url=http%3A%2
ILAKKIYAINFO.COM
 
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 176
 
கனடாவில் ஈழத்தமிழனின் ஊடக வரலாற்று பதிவு " IBC தமிழா"
 
கனடாவில் IBC தமிழின் ஊடக நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
 
இந்த நிகழ்வுக்கான செலவை தனியே செய்த ஊடகத்தின் அதிபர்
அது தனக்கு இத்தனை லட்சம் நட்டத்தை தரும் என அறிந்தே செய்திருக்கிறார்.
அவரது கணிப்புப்படி 20 லட்சம் டொலர்கள் நட்டம் வரும் என கணித்ததாக தகவல்கள் சொல்கின்றன.
 
20 லட்சம் டொலர்கள் நட்டத்தை முன் கூட்டியே அறிந்தும்
இவ்வளவு பணத்தை செலவளிக்கும் அல்லது இழக்க தயாராக உள்ள அதே அதிபர்
ஊரிலுள்ள வறுமைக்கோட்பாட்டுக்கு கீழே உள்ளவர்களை சந்தித்து
மற்றவர்களுக்கு அதை அறிவித்து வருகின்றமை தான் முரணாக உள்ளது.
 
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில்
ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அல்லது மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு
ஒரு ஈரோ அல்லது 5 ஈரோக்கள் டிக்கற் எடுக்கும்படி கேட்டாலே
தனது வீட்டில் உலை வைத்தே பல மாதம் என சினுங்கும் பல கலைஞர்கள்
விமானம் ஏறி அங்கு சென்றிருப்பது.
 
வேசம் என்பது இது தானோ????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 176
 
கனடாவில் ஈழத்தமிழனின் ஊடக வரலாற்று பதிவு " IBC தமிழா"
 
கனடாவில் IBC தமிழின் ஊடக நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
 
இந்த நிகழ்வுக்கான செலவை தனியே செய்த ஊடகத்தின் அதிபர்
அது தனக்கு இத்தனை லட்சம் நட்டத்தை தரும் என அறிந்தே செய்திருக்கிறார்.
அவரது கணிப்புப்படி 20 லட்சம் டொலர்கள் நட்டம் வரும் என கணித்ததாக தகவல்கள் சொல்கின்றன.
 
20 லட்சம் டொலர்கள் நட்டத்தை முன் கூட்டியே அறிந்தும்
இவ்வளவு பணத்தை செலவளிக்கும் அல்லது இழக்க தயாராக உள்ள அதே அதிபர்
ஊரிலுள்ள வறுமைக்கோட்பாட்டுக்கு கீழே உள்ளவர்களை சந்தித்து
மற்றவர்களுக்கு அதை அறிவித்து வருகின்றமை தான் முரணாக உள்ளது.
 
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில்
ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அல்லது மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு
ஒரு ஈரோ அல்லது 5 ஈரோக்கள் டிக்கற் எடுக்கும்படி கேட்டாலே
தனது வீட்டில் உலை வைத்தே பல மாதம் என சினுங்கும் பல கலைஞர்கள்
விமானம் ஏறி அங்கு சென்றிருப்பது.
 
வேசம் என்பது இது தானோ????

இது உண்மையா?...நட்டம் வரும் என்று தெரிந்தும் எதற்காக துணிந்து இறங்கினார்? புகழுக்காகவா?..இன்றைய கால கட்டத்தில் ஏதோ ஒரு சுய நலம் கருதியே செய்வார்கள்..இந்த காசை ஊரில் இருக்கும் வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய கொடுத்திருக்கலாமே?


கனடாக்காரர் யாராவது  இந்த விழாவுக்கு போன செலமன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 177

மகனிர் மட்டும்...

ஊரில பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆயிரம் ஆண்களை ஒரு இடத்தில் பல காலம் வைக்கமுடியும்.

ஆனால் 2 பெண்களை ஒரே இடத்தில் ஒரு நாள் வைத்திருக்கமுடியாது கூடாது என்று

சரி போலத்தான் கிடக்கு..

சத்தியமா நான்
Vijay TV பார்ப்பதில்லை.

Aucune description de photo disponible.
 
 
 
 
 

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஆனால் 2 பெண்களை ஒரே இடத்தில் ஒரு நாள் வைத்திருக்கமுடியாது கூடாது என்று

ஊரில முன்னர் வேலியில் நின்று கதைக்கிறதால வாற பிரச்சனை.சமைத்து போட்டு வேற வேலையும் இல்லைத் தானே.
இப்ப அப்படியா பெண்களெல்லாம் ரொம்ப பிஸி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில முன்னர் வேலியில் நின்று கதைக்கிறதால வாற பிரச்சனை.சமைத்து போட்டு வேற வேலையும் இல்லைத் தானே.
இப்ப அப்படியா பெண்களெல்லாம் ரொம்ப பிஸி.

ஒன்று மட்டும் தெரியுதண்ணா

என்னைப்போல  நீங்களும்

சத்தியமா
Vijay TV பார்ப்பதில்லை :grin::grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 178
 
புலிகளை அழித்தால் உங்களுக்கு தீர்வு தருவேன் - வாக்குறுதியை மறந்த அரசு
 
இவ்வாறு சம்பந்தர் ஐயா சொல்லியுள்ளார்.
2009 இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது
வீதியிலிறங்கி போராடிக்கொண்டிருந்த புலம் பெயர் மக்களுக்கு
கூட்டமைப்பு ஏன் மௌனம் சாதிக்கிறது என்ற சந்தேகமும்
கூடவே இதற்குள் பெரும் துரோகமும் இருப்பதாகவும் 
கூட்டமைப்பு தனது மௌனத்தின் மூலம் புலிகளை அழிக்க உதவுகிறது என்பதும் தெரிந்திருந்தது.
 
அதனால் தொடர்ச்சியாக தான் கூட்டமைப்பின் மீது சந்தேகங்களும்
அவர்களது அரசியல்மீது ஒருவித பயமும் வந்திருந்தது.
அதன் அடுத்த கட்டம் தான்
கூட்டமைப்பு மீதான   வெறுப்பும்
புதிய கட்சி பிறப்பும்
விக்கியரை நோக்கி புலம் பெயர் மக்கள் சென்றமையுமாகும்.
 
இப்பொழுது சம்பந்தரே
தங்களுக்கு போர் காலத்தில் புலிகளை அழித்தவுடன்
தமிழருக்கான தீர்வை தருவதாக உறுதியளித்ததாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
 
இப்போ கேள்வி என்னவென்றால்
உங்களுக்கு வாக்குறுதி தந்தது யார்??
இதை ஏன் நீங்கள் தமிழ் மக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை??
வாக்குறுதிப்படி புலிகளை அழிப்பதற்கு எவ்வாறு நீங்கள் உதவினீர்கள்??
 
கூட்டமைப்பு
தற்பொழுது பிரான்சுக்கு வருவதை தவிர்த்து வருகிறது.
வந்தால் என்னுடைய கேள்விகள் நேரே வைக்கப்படும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 96

இன்று கரும்புலிகள் நாள்

காலையில் எழும்பும் போதே ஒருவித சோர்வு ஒட்டிக்கொள்ளும் இவர்களின் தியாகங்களுக்கும் ஏதுமற்று போனதே என.

ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

உலகில் வரலாறுகளில் இப்படியானவர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிவதில்லை

இவர்கள் எம் கண் முன்னே
திகதி குறித்து
இலக்கை தேடிச்சென்று மாண்டவர்கள்
எமக்கு தடையாக இருந்தவற்றை அகற்றிச்சென்றவர்கள்

உலக வரலாற்றில் இவை அதிசயம்
தமிழருக்கு இவர்கள் பொக்கிசங்கள்

தமிழ் உள்ளவரை
உங்கள் நினைவு இருக்கும் மாவீரரே.

ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

அதை காக்க பாதுகாக்க ஒன்றாகணும் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 179

இரண்டு  தாரம்

எனது  வாழ்வில் இரண்டு  தாரம் செய்த  சிலரை  பார்த்திருக்கின்றேன்.

அவர்களது வாழ்க்கையையும் தலைமுறையையும் பார்த்திருக்கின்றேன்.

ஒரு சில   நிமிட தாகம்   அல்லது  சூழ்நிலை விபத்துக்காக

ஒரு  பரம்பரையையே பலி கொடுக்கும்  மிகப்பெரும் கொடுமை  அது. 

மனைவியை அல்லது கணவனைவிட  அவர்களது  பிள்ளைகளுக்கு

அவர்களது  தலைமுறைக்கு  பெற்றோர் விட்டுச்செல்லும் பெரும்  வடு அது.

பல  தலைமுறை  சென்ற  பின்பும்  அந்தப்பிள்ளைகள்  தமது வாழ்வில்  இந்த அவப்பெயரைக்கொண்டு  அழைக்கப்படுவதை கண்ணால் கண்டிருக்கின்றேன்.

(அப்பா  அல்லது  அம்மா  போலத்தானே நீயும்  இருப்பாய் அல்லது

தாத்தா அல்லது  பாட்டி  போலத்தானே  நீயும்  இருப்பாய் என.)

அது  மட்டுமல்ல இந்த இரு  தாரத்து  பிள்ளைகளுக்கிடையிலான மோதல்  என்பது

முடிவே இல்லாதது.

தயவு  செய்து திருமணம் செய்யுமுன் ஒன்றுக்கு  ஆயிரம் முறை  சிந்தித்து முடிவெடுங்கள்

பிள்ளை பெறுமுன்  கோடி  முறை சிந்தியுங்கள்

நீங்கள்  செய்யும் தவறுகள்

அவர்களுக்கு தலைமுறையாகவே  அவப்பெயரை  சுமக்க வைப்பதோடு

அவர்களது வாழ்வு  சார்ந்து கொடிய முடிவுகளை  எடுக்கவும்  வைக்கும் என்பதையும்

அதனை  தடுக்கும் உங்களுக்கான இடத்தை நீங்கள் இழந்து விட்டிருப்பீர்கள் என்பதையும்  மறவாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 180
 
எது நடக்கணுமோ
அது சரியாகவே நடக்கவிருக்கிறது
 
பூச்சி புழுவுக்கு கூட வலி ஏற்படுத்தாத
நடக்கும் போது புல் கூட சரிந்து விடக்கூடாதே என நினைக்கும்
ஒதுங்கி வாழும் ஒரு  இனம் எனதினம்
 
அந்த இனத்தை
தன்னிடமுள்ள சனத்தொகையையும்
அதனால் கிடைக்கும் சந்தைப்பொருளாதாரத்தையும் காட்டி சூழ்ச்சி செய்து
தன் நண்பர்கள் எதிரிகள் அத்தனை பேரையும் ஒன்றாக்கி
எம்மை பயங்கரவாதப்பட்டியலிட்டு
அதுவும் தோற்றுவிட
எமது தொடர் நட்பு அழைப்பை பாவித்து
முதுகில் குத்தி அத்தனை தர்மங்களையும் மீறி எம்மை அழித்தவர்கள் இந்தியர்கள்.
 
 
எனது வாழ்வில் எதற்காகவாவது வேண்டுதல் செய்யணும் என்றால்
நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான்.
இந்தியா உடையணும்.
அதற்கான தொடக்கத்தை காவிகள் தொடக்கி வைத்திருக்கிறார்கள்.
 
அவர்களது பாசையில் சொல்லவேண்டுமானால்
எது நடக்கணுமோ
அது சரியாகவே நடக்கவிருக்கிறது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 181
 
கூட்டமைப்பு சார்ந்த இறுதி யுத்த கால இரகசியங்கள்
 
நாமல் ராஐபக்ச
கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ந்து
தெரிவித்திருக்கும் விடயங்கள் நாம் அறிந்தவையே.
 
ஆனால் அத்துடன் நாமல் ராஐபக்ச நிறுத்தவில்லை
மேலும் சீண்டினால் நாறுவீர்கள்
தமிழ் மக்களுக்கு முன் உங்களை தோலுரிப்பேன் என மிரட்டியுள்ளார்.
 
இந்த மிரட்டலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே அமைதியாகிவிட்டதும்
சம்பந்தப்படாத அவர்களது ஆதரவாளர்கள் கொதிப்பதையும் பார்க்கும் போது
நாமலை தூண்டி விட வேண்டிய தேவை
தமிழ் மக்களுக்கு இருப்பதாகவே படுகிறது.
 
ஏனெனில் எவருக்குமே தெரியாத
மகிந்த குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த
சில அரசியல் கொடுக்கல்வாங்கல்களை
இறுதி யுத்த காலத்து துரோகங்களை
முதுகுக்குப்பின்னான குத்துக்களை நாமல் தெளிவாக அறிவார்.
 
இங்கே நாமல் நல்லவராக என்ற கேள்வி தேவையற்றது.
அவன் எதிரி.
ஆனால் துரோகி..........???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 182
 
வரலாறே வழிகாட்டி
 
தேசியத்தலைவர் அடிக்கடி பாவிக்கும் இவ்வரிகளின் ஆளத்தை நாம் புரிந்து கொள்வதில்லை.
 
கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தியிருக்கலாம்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டங்களுக்கு சென்றிருக்கலாம்.
சந்திரிகாவும் கதிர்காமரும் செய்த பொதியை ஏற்றிருக்கலாம்
என்றெல்லாம் பேசுவோர் இன்றும் எம்முள் உள்ளனர்.
 
இவர்களை ஆராய்ந்து பார்த்தால்
போராட்டத்தை வெளியில் நின்று பார்த்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
 
எம்மிடம் இத்தனை நூறு கட்டுமானங்கள் இருந்ததோ
முப்படையும் மிக மிக பலமான உறுதியோடு இருந்தமையோ
இதை விட்டால் வேறு கதியோ
வேறு சந்தர்ப்பமோ கிடைக்காது என்பதோ இவர்களுக்கு தெரியாது.
 
இதை வைத்து நிரந்தர தீர்வு ஒன்றுக்கே தலைவர் முனைந்தார்.
அடைந்தால் நிரந்தரத்தீர்வு
இல்லையென்றால் சாவு என்பது தான் புலிகளது உறுதியாக இருந்தது.
 
இதை உணராதோர் இன்று காஷ்மீர் மாநிலத்திற்கு
நடந்திருப்பதை பார்க்கவேண்டும்.
தனிப்பலத்தோடு
தனி நாடாக
தனி அரசாக
தனது வழியில் போக இருந்த காஷ்மீரை
தன்னால் பலத்தால் அதை தடுக்கமுடியாது என்பதை உணர்ந்த இந்தியா
ஆசை காட்டி
சில சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ காட்டி
ஏமாற்றி வஞ்சகமாக வளைத்துப்போட்டுவிட்டு
இன்று அவர்களது பலம்
அவர்களது நிலம் சேதமடைந்த பின்
ஒவ்வொன்றாக பறித்து
ஐனநாயக வேடமிட்டு
காஷ்மீருக்கு எந்த தொடர்புமில்லாத
தனது இந்திய பாராளுமன்றத்திலே அரிதாக கிடைத்த
மதம் சார்ந்த பெரும்பான்மையை பாவித்து
காஷ்மீர் மக்களின் மதம் மற்றும் உரிமைகள் சார்ந்து
தான் எழுதி சத்தியம் செய்த ஒப்பந்தத்தை தானே பறித்திருக்கிறது.
 
வரலாறே தன் வழிகாட்டி என்பார் தலைவர்.
அதனால் தான் அவர் இவற்றிற்குள் விழாதிருந்தார்.
தீர்க்கதரிசிகள் வலைகளுக்குள் வீழ்வதில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 183

நாங்களும் லூர்து(Lourdes) மாதாவும்

அண்மைக்காலமாக பிரான்சிலுள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு செல்வது பற்றிய நக்கலான பதிவுகளை முகநூலில் பார்க்கமுடிந்தது. அதிலும் வேறு நாடுகளில் இருந்து வரும் தமிழர்களை இங்குள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு அழைத்துச்செல்வது கேலிக்குரியதாக எழுதப்பட்டு வருகிறது. இதற்காக சிலவற்றை எழுதவேண்டியுள்ளது.

80 களில் நாங்கள் இங்கு வந்த காலங்களில் எமது சொந்த மதத்தை சேர்ந்த எந்த தெய்வங்களை கும்பிடும் எந்த நிலையும் இங்கில்லாத போது எமக்கு ஆறுதலும் அடைக்கலமும் தந்தவர் இந்த லூர்து மாதா தான்.

பிரெஞ்சு மொழியில் ஒரு சொல் கூட தெரியாமல் வந்து விழுந்த எம்மை வாட்டிய அத்தனை சுமைகளுக்கும் ஒத்தடம் தந்தவர் இந்த மாதா என்றால் அதை மிகையல்ல.

தாயக மக்களின் அவலங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், போரின் உக்கிரம், போராளிகளின் உறவுகளின் இழப்புக்கள், வேலைப்பிரச்சினை, விசா பிரச்சினை, நோய்கள், திருமணம், குழந்தைச்சிக்கல்கள் ஏன் குழந்தைகளுக்கு மொட்டையடித்தல் வரை மாதா தான்.

அந்த பழக்கம் அல்லது நன்றிக்கடன் இன்றும் தொடர்கின்றன. நானும் வருடத்தில் ஒருமுறையாவது செல்வதுண்டு. நாம் தாண்டி வந்த பாதையை சில அடிப்படை வளர்ப்பு முறைகளை அங்கிருந்தபடி எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதுண்டு. அந்தவகையில் தான் பிற நாடுகளிலிருந்து என்னிடம் வரும் உறவுகள் என்னை வழிகாட்ட முன் மொழிந்தால் அங்கு அவர்களையும் அழைத்துச்செல்வதுண்டு.

அடிப்படை தெரியாமல் பேசப்படாது தம்பிகளா....

L’image contient peut-être : une personne ou plus, arbre et plein air
L’image contient peut-être : ciel et plein air
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 183

நாங்களும் லூர்து(Lourdes) மாதாவும்

அண்மைக்காலமாக பிரான்சிலுள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு செல்வது பற்றிய நக்கலான பதிவுகளை முகநூலில் பார்க்கமுடிந்தது. அதிலும் வேறு நாடுகளில் இருந்து வரும் தமிழர்களை இங்குள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு அழைத்துச்செல்வது கேலிக்குரியதாக எழுதப்பட்டு வருகிறது. இதற்காக சிலவற்றை எழுதவேண்டியுள்ளது.

80 களில் நாங்கள் இங்கு வந்த காலங்களில் எமது சொந்த மதத்தை சேர்ந்த எந்த தெய்வங்களை கும்பிடும் எந்த நிலையும் இங்கில்லாத போது எமக்கு ஆறுதலும் அடைக்கலமும் தந்தவர் இந்த லூர்து மாதா தான்.

பிரெஞ்சு மொழியில் ஒரு சொல் கூட தெரியாமல் வந்து விழுந்த எம்மை வாட்டிய அத்தனை சுமைகளுக்கும் ஒத்தடம் தந்தவர் இந்த மாதா என்றால் அதை மிகையல்ல.

தாயக மக்களின் அவலங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், போரின் உக்கிரம், போராளிகளின் உறவுகளின் இழப்புக்கள், வேலைப்பிரச்சினை, விசா பிரச்சினை, நோய்கள், திருமணம், குழந்தைச்சிக்கல்கள் ஏன் குழந்தைகளுக்கு மொட்டையடித்தல் வரை மாதா தான்.

அந்த பழக்கம் அல்லது நன்றிக்கடன் இன்றும் தொடர்கின்றன. நானும் வருடத்தில் ஒருமுறையாவது செல்வதுண்டு. நாம் தாண்டி வந்த பாதையை சில அடிப்படை வளர்ப்பு முறைகளை அங்கிருந்தபடி எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதுண்டு. அந்தவகையில் தான் பிற நாடுகளிலிருந்து என்னிடம் வரும் உறவுகள் என்னை வழிகாட்ட முன் மொழிந்தால் அங்கு அவர்களையும் அழைத்துச்செல்வதுண்டு.

அடிப்படை தெரியாமல் பேசப்படாது தம்பிகளா....

L’image contient peut-être : une personne ou plus, arbre et plein air
L’image contient peut-être : ciel et plein air
 
 
 
 
 
 
 
 

பதிவிற்கு நன்றி விசுகர்.

Link to comment
Share on other sites

Lourdes செல்வது பற்றிய உங்கள் பகிர்விற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 184

எங்கு சென்றாலும் எமை துரத்தும் எம்மவர் தியாகங்கள்

அண்மையில் 4 நாட்கள் விடுமுறை நாட்கள் கிடைத்ததை பயன்படுத்தி மக்களுடன் சேர்ந்து ஓய்வெடுக்க பிரான்சில் ஒரு கிராமமான REIMS சென்றிருந்தேன்.

எங்கு சென்றாலும் அங்குள்ளவற்றை முடிந்தவரை அறிவது பார்ப்பது வழமை என்பதால் அந்த கிராமத்தை சுற்றி பார்வையிட்டோம்.

இரண்டு உலக யுத்தத்துக்கு முகம் கொடுத்து மீண்ட பிரெஞ்சு தேசம் தன்னை விடுவித்தவர்களை தன்னை விடுவிக்க தம்மை கொடுத்தவர்கள் மறவாதிருக்க அவர்களது பெயர்களையும் போட்டோக்களையும் ஞாபகார்த்த மண்டபங்களையும் அதில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து நூற்றாண்டு கடந்த பின்பும் அழகாக சிறப்பாக பராமரிப்பதையும் அவர்களுக்கான மரியாதையை இன்றும் அதே காலப்பகுதி போல பேணுவதையும் காணும் போது...

தோல்வி என்ற ஒன்றில்லாது நாம் வென்றிருந்தால் எமது தாயகமும் இதே நிலையில் ஒவ்வொரு மண்ணும் கல்லும் ஒவ்வொரு தியாகங்களை கூறிக்கொண்டிருக்குமே என நினைத்தவேளை என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர்.

இந்த தோல்வி எம் மண்ணில் எதிர்மாறாக விதைக்கும் விடயங்களை நினைக்கும் போது மேலும் மனம் குமுறுகிறது. இதன் தாக்கம் எமது ஆயுளை குறுக்கும் என்பது தெரிந்த போதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த வெளிச்சமும் தெரிந்தபாடில்லை...

L’image contient peut-être : 1 personne, fleur, plante, ciel et plein air
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
L’image contient peut-être : nuage, ciel et plein air
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
IMG-4898.jpg
 
IMG-4903.jpg
 
 
IMG-4904.jpg
 
IMG-4908.jpg
 
 
IMG-4912.jpg
 
 
IMG-4913.jpg
 
IMG-4914.jpg
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.