Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 185
 
தமிழர்களுக்கான பெட்டி அடிப்பு
 
ஒரு இனம் விடுதலை பெற வேண்டுமானால் அது ஒற்றுமையாக பலமானதாக இலக்கை நோக்கி பயணிக்கணும் அதற்கு அதனுள் உள்ள பிரிவுகள், பிளவுகள் களையப்படணும்.
 
ஈழத்தமிழரைப்பொறுத்தவரை
அவன் எந்த மதத்துக்கு மாறினாலும் எந்த தேசத்துக்கு புலம் பெயர்ந்தாலும்
கொண்டு திரிபவை மதமும் அது சார்ந்த சாதியமும்.
 
இந்த சாதியத்தில் மேல் சாதி கீழ்ச்சாதி என்று கூட இல்லை
ஒன்றுக்கொன்று மேல் சாதி கீழ்ச்சாதி என வகுத்து
ஒன்றுடன் ஒன்று முரண்பட்டபடியே தான் உள்ளது.
அடுத்த தலைமுறை இதிலிருந்து விலக முயன்று திருமணங்களை தமக்குள் நடாத்தினாலும்
காலப்போக்கில் தாம் உயர்ந்து விட்டதாக கொலரைத்தூக்குவதையே காணமுடிகிறது.
 
அந்தளவுக்கு தமிழரை சூழ்ச்சியால் பிரிப்பதற்கான
இந்த சாதியத்தை முதன்மைப்படுத்தி
பெரும் தந்திரத்தை வகுத்தவர்கள் வென்றிருப்பதை காணலாம்.
 
இதை உணர்ந்தவர்கள்
தலைவர் பிரபாகரனைப்பின்பற்றி
அவரை பலப்படுத்தி
தாயகத்தில் இதனை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சி கூட
இதே வலையை வகுத்தவர்களால் முறியடிக்கப்பட்டபின்........
 
தமிழரைச்சுற்றி பெட்டி அடிக்கப்பட்டுள்ளதும்
அதனை உடைக்க முயல்பவர்கள் அழிக்கப்படுவதும் அல்லது தோல்வியடைவதும்
ஒரு புறம் நடக்க
அதிலிருந்து தப்ப முயல்பவர்களுக்கு ஒரு பாதை திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் விடுதலை என
அவர்கள் அந்த வளியே சென்று
மீண்டும் மதம் சாதி பிரதேசவாதம் என சகதிக்குள் மூழ்குவதை பார்க்கும் போது
இது தான் தமிழர்களுக்கு இன்றைய உலகம் விட்டு வைத்திருக்கும்
ஒரேயொரு வாழ்வியல் என்பது புலனாகிறது.
இப்படியே வாழ்ந்து விட்டு போகவேண்டியது தானா????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 186
 
நீங்க பணக்காறரா??
 
வருடம் முழுவதும் 7 நாளும் ஓய்வில்லாத வேலை.
அதனால் 8ம் மாதம் வந்தால் தொழிலை பூட்டிவிட்டு ஓவ்வெடுக்கச்செல்வது வழமை.
இந்தமுறை உறவின் திருமணம் மலேசியாவில் நடந்ததால் மலேசியா சிங்கப்பூரில் 3 கிழமை.
 
அதன் பின்னர் பிரான்சில் ஒரு கிராமத்தில் ஒரு கிழமை என ஓய்வு கழிந்தது.
 
ஒரு தம்பி கேட்டார் அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
நீங்க பணக்காறர் தானே என.
 
அவருக்கு நான் சொன்னது:
இந்த இடங்களுக்கு நீங்கள் போகாததால் இந்தக்கேள்வி உங்களிடமிருந்து வருகிறது.
நான் பரிசிலிருப்பதை விட இந்த இடங்களில் செலவு குறைவு.
 
பணக்காறரா என்றால் ஆமாம்.
 
இரவு சாப்பாட்டுக்கு ஒரு பத்து வகை மேசையிலிருக்கு.
அதில் இரண்டையோ மூன்றையோ சாப்பிட்டு விட்டு
அது செமிக்க கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வந்து படுக்கப்போகின்றேன்.
 
தரவு : உலகத்தில் அரைவாசி மக்கள் இரவு உணவின்றி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

சிறு திருத்தம்  அண்ணா

தலைவர்  ஒரு  போதும்  தன்னை  தலைவர்  என்று  சொன்னமில்லை

நாட்டை  ஆள்வேன்  என்றும் சொன்னதில்லை

நாட்டை அடைந்ததும்

அதை  தகுதியானவர்களிடம்  ஒப்படைத்துவிட்டு

துன்பப்பட்ட  மக்களோடு  ஒதுங்கி  விடுவேன்  என்று  தான்  சொன்னார்

அவர்  ஒரு  போராளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 188
 
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் லண்டன் வருகையும் எம்மவரும்...
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்பது
ஈழத்தமிழரின் போராட்டத்தை ஆதரிக்கும் ஏராளமான இளைஞர் கூட்டத்தை
தன்னகத்தே கொண்ட கட்சியாகும்.
இக்கட்சியின் தேர்தல் கால கூட்டுக்களால்
அதன் தலமை தற்பொழுது கொள்கைகளில் பேச்சுக்களில்
நழுவல் போக்கை கடைப்பிடிப்பது அதன் தொண்டர்களுக்கே தலையிடியாக உள்ளது.
 
அந்தவகையிலே திருமாவளவனின்
தற்பொழுதைய பேச்சுக்களையும் செயல்களையும்
தொடர்ந்து பார்த்து வருவோருக்கு
தலைவர் கூற்று சம்பந்தமான திருமாவளவனின் லண்டன் பேச்சு ஆச்சரியமானதல்ல.
அதுவும் தலைவரது எதிராளிகளால் அழைக்கப்பட்ட இடத்தில்
அவர்களுக்கு முன்னால் இதை தெரிவிப்பதே
ஒருவித அரசியல் ரௌடித்தனம் தான்.
 
நசுக்கிக்கொண்டிருந்த காங்கிரசின் ஆட்சியும்
அதற்கு முண்டு கொடுத்தபடி இருந்த திமுகவும்
கொஞ்சம் ஒதுக்கப்பட்டாலும் மூச்செடுத்து விடலாம் என்பது தான்
ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுதலாக இருந்தபோது இவரின் கதை.....????
 
ஆனால் அவரவர் உண்மை முகங்களை
மக்கள் முன்னால் அவரவரே காட்டும் காலப்பகுதி இது.
அதை மக்கள் உணரும் காலப்பகுதியிது.
காட்டிவிட்டு செல்கிறார்.
அவரது கட்சி தொண்டர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மற்றும்படி தடி எடுத்தவன் எல்லாம் சண்டித்தனம் செய்வது போல
அவரை கேவலப்படுத்துவதோ
அல்லது தமிழகத்திலுள்ள கட்சி சார்ந்த தொண்டர்களின் அடிதடிகளில்
ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாவதோ தூர நோக்கில் நல்லதல்ல
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 189
 
பிரபலமாகுதல்
 
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது
மணி கட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும் என்று.
 
எமது இனம் எம் கண்முன்னால் அழிக்கப்பட்ட போது
எம்மால் முடிந்தவரை வீதிக்கு வந்து குரல் கொடுத்தோம்.
ஆனால் எமது குரலுக்கு செவிசாய்த்தார்களா???
 
எம்மவரின் சொல் எடுபடணும் என்றால் நாம் பிரபலமாகணும்.
இன்றைய தமிழரின் நிலையில் இதை நாம் கவனிக்கணும் வளர்க்கணும்
 
அது படிப்பாக இருக்கலாம்
தொழிலாக இருக்கலாம்
பணமாக இருக்கலாம்
விளையாட்டாக இருக்கலாம்
கலையாகவும் இருக்கலாம்
 
அந்தவகையில்
அதை அடைய முயலும் எம்மவரை முடிந்தவரை ஆதரிப்பதும்
ஆதரவு தேடுவதும்
எமது கடமையாகும்.
 
அதனடிப்படையில்
Bigboss இல் அநேகரின் பாராட்டுக்களையும்
பல கோடி வாக்குகளையும் பெற்று
10 கிழமைக்கும் அதிகமாக
முதலிடத்திலிருக்கும் எமதூரவன் தர்சனையும்
லொஸ்லியாவையும் நாம் மேலும் ஊக்கப்படுத்தணும் வாக்களிக்கணும்.
அவர்களது குரலுக்கு மதிப்பை உண்டாக்கணும்.
 
எம்மவர் அனைவருக்கும் செய்தியை கொண்டு செல்ல
எம்மால் முடிந்ததை செய்யணும்
 
இதுவும் காலத்தின் தேவையே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 190

காணாமல் போகுதல்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (வெள்ளிக்கிழமை) என்பதால் இங்கு நடக்கும் ஒன்று கூடலுக்கு போகணும். கறுத்த சேட்டை எடுத்து வை என்றேன் மனைவியிடம். என்னப்பா 2 நாளா கால் நடக்க முடியல என்கிறீர்கள் ஒன்று கூடலில் நிற்கமுடியுமா என்றாள் மனைவி. முள்ளிவாய்க்காலில் என் இனம் பெற்ற வலியை நினைப்போம் என்றேன் நான்.

விடிய எழும்பும் போது கால் வலி இன்னும் அதிகமாகி விட்டது. மனைவிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கடைக்கு வந்து ஒரு 3 மணிக்கு அங்கு சென்றேன்.

ஒரு 10 பேர் நின்றார்கள். மனம் உடைந்து போனது. சரி வருவார்கள் என 5 மணிவரை நின்றேன் ஒரு 20 பேர் தான். அத்தனையும் 30 வருடங்களாக நான் பார்த்த முகங்கள்.

கேள்வி 1: இந்த 20 பேருக்கும் தான் நாட்டில் காணாமல் போன உறவுகள் இருந்தார்களா?

கேள்வி 2: 2009 இறுதிப்போரிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தமிழர்கள் சொல்வது பொய்யா? (அப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருந்தால் அவர்களது உறவுகள் தானும் வராதது ஏன்????)

தரவு 1: இதே சதுக்கத்தில் 2009 இறுதிப்போரின் போது கூடிய தமிழ் மக்களின் தொகை 45ஆயிரம் என பிரெஞ்சு காவல்த்துறையின் அறிக்கை கூறுகிறது.

தரவு2 : இறுதியாக வந்த அஜித்தின் திரைப்படத்தை பிரான்சில் தியேட்டரில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம்.

அப்போ நாம் முற்றாக காணாமல் போய் விட்டோமா??😢😢😢

 
 
L’image contient peut-être : 3 personnes, personnes debout et plein air
L’image contient peut-être : 3 personnes, personnes souriantes, plein air
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 191
 
பிரபலங்கள் உதிக்கும் சொற்களின் பாய்ச்சல் வலிமை.
 
அண்மையில் பிரபலமாகுதல் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
கொஞ்சம் எதிர்ப்பை தந்த பதிவு அது.
காரணம் என்ன அண்ணை
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுபவர்களால் கூட நன்மை வரும் என்கிறார் என்று.
 
இதோ நான் எழுதியதற்கு ஒரு சான்று.
 
அமெரிக்க சீரியல் உலகத்தில்
நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும்,
அடுத்த நகைச்சுவை தொடரில்
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.
 
மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில்
முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
17 வயதான இந்த யுவதி,
பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார்.
கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே,
இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.
 
இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார்.
 
ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில்,
லங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி.
ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
“இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு.
நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம்.
கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன்,
போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
 
போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.
 
 
குறிப்பு : நான் இங்கே கத்துவது எத்தனை பேரை சென்றடைந்தது (அதுவும் தமிழருக்குள் மட்டும்)
இவரது சொல் எத்தனை மில்லியன் மக்களை (எல்லா மொழியிலும்) சென்றடைந்தது.
இவரும் ஒரு சின்னத்திரை நடிகையே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 192
 
வாழ்க்கையின் வழியே பரிசுகள்
 
காலமும் வயதும் வாழ்வும் தனது வழிகளில் ஓடிக்கொண்டிருப்பதால் எதையும் எம்மால் கணித்துவிடமுடிவதில்லை.
 
என்ன செய்தோம் எப்படி வாழ்ந்தோம் வாழ்கின்றோம் என்பதும் எமது இந்த வாழ்வு சார்ந்து இந்த சமூகம் என்ன கணிப்பு வைத்திருக்கிறது என்பது பற்றியும் அறிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் வரும்.
 
எனக்கு வந்தபோது அதுவும் அடுத்த தலைமுறையிடமிருந்து....
 
எனது மகளின் திருமணத்துக்கு எனது மகனுடன் ஒன்றாக படித்து (Ecole d’ingénieurs) பாசாகி வெளியேறி தற்பொழுது சுவிசில் வேலை பார்த்து வரும் எனது மகனின் பிரெஞ்சுக்காற நண்பனும் வந்திருந்தார்.
 
திருமணத்தை முழுமையாக பார்த்தவர் நான் இருந்த இடத்துக்கு முன்னால் வந்து இருந்தபடி இரு கை கூப்பி எனக்கு வணக்கம் சொன்னார். நலம் விசாரித்து முடிய மீண்டும் இரு கை கூப்பி நீங்க ஒரு தங்கக்குடும்பத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்றார். நான் சிரித்தேன். உங்கள் முகத்தில் இந்த சிரிப்பை இன்று தான் காண்கின்றேன் என்றார்.
 
வேறென்ன வேண்டும் வாழ்வில்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 193
 
நாய்களின் விசுவாசம்
 
நாய்கள் எப்பொழுதும் வளர்ப்பவர்களுக்கே விசுவாசமானவை.
அதன் இனம் கூட அதற்கு எதிரி தான்.
 
இந்த விசுவாசத்துக்காக மனிதர்களால் உதாரணமாக கொள்ளப்படும் நாய்கள்
அதன் இனத்துக்கு எப்பொழுதும் எதிரானவை.
தனது விசுவாசத்தை காட்ட
அவை தன் இனத்தையே கடித்துக்குதறக்கூட ஒரு போதும் பின்னிற்பதில்லை.
 
 
நாய்களில் பல வகையுண்டு.
அதிலும் சில விசமனிதர்களால்
வஞ்சக நோக்கங்களோடு
கிரிக்கட் பந்தை எறிந்து பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்படும் நாய்கள்
தாம் மிக உயர்ந்த நாய்கள் என கெத்தாக பந்தா காட்டக்கூடியவை.
அந்த கெத்தை வைத்தே அதன் இனத்துக்கு சாவு மணி அடித்துவிடக்கூடியது.
 
ஆனால் இவற்றிற்கு புரியாத
ஆனால் காலம் கடந்து புரியும் ஒரு விடயம் என்னவெனில்
அவை கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் அளவு வரையே அவை செல்லமுடியும் என்பதும்
அந்த கயிற்றின் அளவை தீர்மானிப்பது அதன் எஐமானன் என்பதும்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 194
 
அப்பா அல்லது குடும்பத்தலைவன்
 
ஒவ்வொரு அப்பாக்களும் ஒவ்வொரு தூண்கள். தனது பிள்ளைகளை தன் தோளுக்கு மேல் வளர்க்கணும் என்பதும் தனக்கு முடியாத அந்த உயரத்துக்கு அவர்களை உயர்த்தும் போது அதில் சறுக்கல் வராமல் இருக்கணும் என்பதும் மாறுபட்ட மிகச்சிரமான பணிகள். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது??? அதிலும் பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கையில்??
 
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?
 
ஒரு தகப்பனை குடும்பத்தை தலை குனிய வைக்க பெண் பிள்ளைகளைத்தானே எமது சமூகம் தெரிவு செய்கிறது?
 
இந்த நிலையை மாற்ற நான் உட்பட எல்லோரும் முயல்கிறார்கள். ஆனாலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை?????
 
குடும்பத்தின் கௌரவமா அப்பாவா என்றால் அப்பா தோற்றுப்போய் பெண் குழந்தையை கண்ணீரில் விடுவது தானே தொடர்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?

இங்கே ஒரு தமிழ்க்குடும்பம்.
மூன்று ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பொம்புளைப்பிள்ளை.அந்த பொம்புளைப்பிள்ளையை தாய் தகப்பன் என இரண்டடுக்கு பாதுகாப்பில் வளர்த்தார்கள்.அதுமட்டுமல்லாமல் அந்த பொம்பிளைப்பிள்ளை வெளியில் போய்வரும் இடமெல்லாம் அண்ணன் தம்பிகளின் பாதுகாப்பும் பலமாக இருக்கும்.ஆனால் அந்த அண்ணன் தம்பிகளோ நீந்தாத குளங்கள் இல்லை.பூசாத சேறுகள் இல்லை.போடாத வேடங்களும் இல்லை.இத்தனைக்கும் அந்த பொம்புளைப்பிள்ளையை பூ போல் பாதுகாத்தார்கள்.பாதுகாப்பின் பலனாக பொம்புளைப்பிள்ளையை நேரகாலத்திற்கு ஒருவனின் கையில் பிடித்து கொடுத்தும் விட்டார்கள்.அந்த பொம்புளைப்பிள்ளையும்  கடவுளேயெண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்.

இதில் ஒரு விடயம் என்னவென்றால் அந்த பொம்புளைப்பிள்ளையின் மூத்த அண்ணாவிற்கு வயது 40தை தட்டப்போகின்றது.தம்பிமாருக்கு கலியாண வயது நடக்கின்றது.
அவர்களுக்கு பொம்புளை யாரும்/ எங்கும் கடல்லையே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 195
 
கோபுரங்கள்
 
இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல.
 
அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா?
 
சட்டம் பாதுகாப்பு நீதி
நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும்
மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா??
 
இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும்
ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா??
 
ஊழல் லஞ்சம் செலுத்தாமல்
ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா??
 
படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி
மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா??
 
மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும்
எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா??
 
 
இவை தான் வளர்ச்சி
உயர்ச்சி
 
அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 196

இன்று திலீபன்
இலட்சிய  வேட்கை  சுமந்து
பசியால் மடிந்த நாள்

கோரிக்கை காந்திக்குத்தான்
அதே காந்தீய வழியில்..

சுதந்திரம் பற்றி தெரிந்தவனுடன்
நாம் பேசியிருக்கணும்
சுதந்திரம்
கொடுக்கப்பட்டவனுடன் பேசியதே தவறு

இது புரிந்தபோது அவனில்லை
அவன் போனதுடன்
காந்தியமும் உலகில் இல்லை

அவனது தியாகமே
அதி உச்சம் இவ்வுலகில்

இனி திலீபன் மட்டுமே உலகில் இருப்பான்
இருக்கின்றான்

L’image contient peut-être : 1 personne, texte
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 196
 
வந்தோரை வாழ வைக்கும் தமிழக மக்கள்
 
தமிழகத்தின் போக்கை
அந்த மக்களின் வரலாற்றை பார்க்கும் போது
எனக்குள் எப்பொழுதும் எழும் கேள்வி
எவ்வாறு இவர்கள் வந்தவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்கிறார்கள்
தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்
அதுக்கும் மேலே சென்று தம்மை ஆளக்கூட அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி
பலமாக பல காலமாகவே எனக்குள் உண்டு.
அநேகமாக எம்மவர் பலருக்கும் இக்கேள்வி இருக்கக்கூடும்.
 
அண்மையில் TV நிகழ்ச்சி ஒன்றை பார்க்கின்ற போது
அதில் முதலிடத்திலுள்ள 5 பேரில்
3 வெளிநாட்டுத்தமிழர்கள் ஒருவர் பிற மாநிலம் ஒரே ஒரு தமிழ்நாட்டவர்.
 
அதிலும் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளரும் (தமிழக தமிழர்கள்) சொல்கிறார்கள்
வெளிநாட்டில் சிரமப்பட்ட கொடுமைகளை அனுபவித்த தமிழர்கள் தான் வெல்லணும் என்று.
 
சாதாரணமாக பார்க்கமுடியாத பெரும் மாநிட மனிதாபிமானம் இது. இதை மிக மிக பெரும் அறிவார்ந்த ஒரு இனத்தாலே மட்டுமே தான் சிந்திக்கமுடியும் செயற்படுத்த முடியும்.
 
இவ்வாறு தான் அவர்கள் MGR, கருணாநிதி, யெயலலிதா என இடமளித்தார்கள்.
ஆனால் அவர்கள்?????
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 197
 
ஆமா நாங்க தான் போட்டோம்
 
லட்சம் தடவை சொன்னோம் நாங்க செய்யலை என்று.
நம்பவும் இல்லை குற்றம் சாட்டி கைது செய்தவர்களை விடுதலை செய்யவுமில்லை.
30 வருட சிறை வேதனை வாழ்க்கையே தொலைந்து போய் பல வருசமாச்சு.
 
ஓரு தடவை ஒரேயொரு தடவை
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் என்பது மட்டும் எப்படி காதில விழுகுது???
 
தலைவரது செவ்வியில் இந்தக்கொலை பற்றிய கேள்விக்கு
மிக பக்குவமாக மிகவும் பொறுமையுடன்
ஒரு ஆயுதப்போரை நடாத்தும் தளபதியாக
அது ஒரு துன்பவியல் சம்பவம் என்றார்.
அடுத்த கேள்வி இதற்காக உங்களை கைது செய்வார்களாம் என்பதற்கு
சிரித்துக்கொண்டே நடப்பதை பேசுவோமா என்பார். அதில் எத்தனை அர்த்தங்கள்?
 
நான் சாதாரண பொது மகன்.
அந்தக்கொலை செய்யப்படவேண்டியதே.
செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் என்னவரே.
 
தொடர்ந்து என்னைக்கோபப்படுத்திக்கேட்டால்
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் இப்ப என்ன?? என்று தான் சொல்வேன்.
அது தான் உண்மையும் கூட.
இப்ப நாங்க சொல்வதை நீங்க கேட்கும் நிலை வந்திருப்பது மட்டும் தெரிகிறது.
நல்ல வளர்ச்சி தான்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 198
 
பெற்றவர்கள் என்போர்???
 
ஒரு பிள்ளைக்கு தாய் தகப்பனாவதென்பது பெரும் பாக்கியம் மட்டுமல்ல பெரும் பொறுப்பு.
 
அந்த பாக்கியத்தை உணர்பவர்கள் அதன் பொறுப்பை பெரும்பாலும் உணராததால் தான் அநேகமான பிள்ளைகள் தவறுகின்றன.
 
ஒரு பெற்றோரிடம் அன்பும் கண்டிப்பும் இருக்கணும். எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக்கூடாது அனுமதிக்கமுடியாது என்ற தெளிவு இருக்ணும்.
 
அந்தவகையில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அனுமதித்தும் தேவையற்றவற்றை ஒதுக்கியும் வைக்க முதலில் பெற்றோர் தெரிந்திருக்கணும்.
 
இது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்கள் பாவிக்கும் வீட்டில் மட்டுமல்ல வெளியிலிருக்கும் பொருட்கள் வரை பொருந்தும்.
 
எனது வீட்டில் ஆபத்தான மருந்துகளோ விசமான திரவங்களோ தேவைக்காக வாங்கிய அன்றே மிகுதி தூர எறியப்படும். அல்லது எனக்கு நித்திரை வராது.
வீட்டில் கண்ணாடியோ கோப்பையோ உடைந்துவிட்டால் அவை முழுமையாக துப்பரவாக்கி நான் நடந்து பார்க்கும்வரை பிள்ளைகள் அவர்களது ரூமுக்குள் வைத்து பூட்டப்படுவர்.
 
அப்படியாயின் எப்படி 300 அடி பள்ளத்தை வளவுக்குள் வைத்தபடி பிள்ளைகளை வெளியில் விடமுடிந்தது????
நான் அங்கிருந்தால் பெற்றவர்களுக்குத்தான் காதாவடியில் போட்டிருப்பேன்.
 
அப்புறம் மாநிலம் காப்பாற்றும் மத்தி வரும் என்ற எதிர்பார்ப்பு வேறு?? எப்ப இவர்கள் வந்தார்கள் காப்பாற்றினார்கள் நம்புவதற்கு?? வெள்ளப்பெருக்கில்??
கடலில் தத்தளித்தபோது??
சுனாமியின் போது???
 
பக்கத்து நாட்டில் 4 சறம் கட்டிய பெடியளைக்கொண்ட இயக்கம் சுனாமி இழப்பை 3 நாளில் சர்வதேச விதிகளுக்கமைய சுகாதாரத்தை பேணி பாதிக்கப்பட்ட மக்களை பேணி நிற்க இவர்கள்???
 
ஆனால் கேட்காமல் காசு கொடுப்பார்கள் அது ரசியாவாக இருப்பினும் பிள்ளையை பாதுகாக்கத்தெரியாத பெற்றோராக இருந்தாலும்??
என்ன ஒன்று பிள்ளையை தூக்கி எங்காவது போட்டுவிட்டு படம் எடுத்து முகநூலில் போட்டால் கோடீசுவரர் ஆகலாம் என்பது முறிக்கிவிடப்பட்டிருக்கு......😢😢😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 199
 
2 பேய்களுடன் ....
 
தமிழர்கள் 2 பேய்களில் ஒன்றைத்தானே தெரிவு செய்யணும் எனும் கூற்று அடிக்கடி சொல்லப்படுகிறது.
 
திரு சுமேந்திரனும் இதையே முன் வைத்திருக்கின்றார்.
 
நமக்கு இந்த அரசியல் எல்லாம் சரி வராது.
அது இருக்கும் நண்பர்களையும் பகைத்து
ஈழத்தமிழினத்தை சின்னாபின்னமாக்கி
மேலும் மேலும் பலவீனப்படுத்த மட்டுமே உதவமுடியும்.
 
ஆனாலும் சுமேந்திரன் சொன்ன போது தான் உறைத்தது.
 
தமிழருக்கும் இந்தப்பேய்க்கூட்டமைப்பை விட்டால்....???
 
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2019 at 3:07 PM, குமாரசாமி said:

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு , சொறில‌ங்கா அர‌சிய‌லை எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை தாத்தா , 
எல்லாம் பிராடுக‌ள் என்ற‌ சொல்லுக்கு த‌குதியான‌வ‌ர்க‌ள் ,

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில்  இருக்கும் போது தான் அந்த‌ நாட்டு அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என் பார்வை த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் மேல்  ?

உண்மையை சொல்ல‌ போனால் 
நேர்மையான‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ளை சிங்க‌ள‌வ‌ன் ச‌மாதான‌ கால‌த்திலே போட்டு த‌ள்ளிட்டான் , ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா தொட்டு இன்னும் ப‌ல‌ர் ?  இப்ப‌ இருக்கும் ஆட்க‌ள் தொப்பி பிர‌ட்டிய‌ல் /

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 200
 
இலங்கை ஐனாதிபதித்தேர்தல்??
 
ஏதாவது எழுதலாமே என்றால் முடியல. இது தான் என்று எவராலும் சொல்லமுடியல. இருக்கலாம் நடக்கலாம் வரலாம் தவிர்க்கலாம் முடியலாம் முடியாமல் போகலாம் நடப்பது தான் நடக்கலாம். இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்
 
ஒன்று படமெடுத்து ஆடிநிற்கும் பாம்பு இன்னொன்று பழி வாங்குவதற்காக பதுங்கி இருக்கும் பாம்பு. இரண்டுமே நச்சுப்பாம்புகள். அவற்றுடனேயே விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்தாக வேண்டியநிலையில் தமிழர்கள்.
 
தமிழர்களின் இன்றைய சூழ்நிலையில் எவரையும் சேர்க்காது விட்டாலும் எவரையும் பகைக்காது பார்த்துக்கொள்வதே இருப்பதையாவது பாதுகாக்க உதவும்.
 
அந்தவகையில் கூட்டமைப்பின் முடிவும் பிரச்சாரமும் பகையைத்தான் தீ மூட்டியுள்ளது. தமிழருக்கு அடிப்பவன் மட்டுமே சிங்கள தேசத்தில் வெல்லலாம் என்ற நிலை இருக்கும்வரை தமிழர்கள் இருந்தாலும் அடிதான் நின்றாலும் அடிதான் குனிந்தாலும் அடிதான்.
 
தன்னைத்தொலைத்த இனம், தனது வலிமை உணராத இனம், தனக்குள் வேற்றுமைகளை காணும் இனம் இப்படித்தான் வாழணும். வாழும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 201
 
நானும் சிறுபான்மை என்பது......???
 
பாடசாலை விடுமுறைகளுக்கு
அண்ணர் கொழும்பில் கடை வைத்திருந்ததால் கொழும்புக்கு செல்வது வழமை.
 
அப்படித்தான் 1977 இலும் சென்றிருந்தேன்.
அப்பொழுது எனக்கு 14 வயது.
கொம்பனித்தெருவிலுள்ள அண்ணருடைய மளிகைக்கடையில்
வேலை செய்யும் மைத்துணர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
அங்கு வந்த ஒரு சிங்கள இளைஞன்
தேங்காய் ஒன்றை எடுத்து தனது சாக்கில் போட்டதை பார்த்து விட்டேன்.
அதை அவனும் கவனித்துவிட்டான்.
 
மைத்துணரிடம் நான் சொல்ல
அவன் புறப்படத்தயாரானபோது மைத்துணர் தேங்காய்க்கு பணம் கேட்டார்.
 
அவன் என்னைத்துரத்தத்தொடங்கினான்.
அங்கு நின்றவர்கள் ஏன் எனது மைத்துணர் உட்பட அவனை தடுக்கவே இல்லை.
ஓடித்தான் தப்பினேன்.
 
அப்பொழுது தான் முதல் முதலாக உணர்ந்தேன்
நான் இந்த நாட்டில் சிறுபான்மையினன் என்பதை.
 
அந்த ஆண்டு நடந்த தேர்தலில்
எமது ஊரில் நடந்த கூட்டணியின் பிரச்சாரக்கூட்டத்தில்
முதன் முதலாக இரத்தப்பொட்டு வைத்து எனது கோபத்தை காட்டினேன்.
 
வரலாறு இப்படித்தான் எழுந்தது. பதியப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 202
 
தமிழரை வாட்டும் மூடுமந்திரம்??
 
எல்லாமே திட்டமிட்டபடி...??
மகிந்த ஐனாதிபதி
இடையில் புகுந்து மகிந்தவின் வளர்ப்பு மைத்திரி ஐனாதிபதி
மகிந்தவின் தம்பி கோத்தபாய ஐனாதிபதி
அடுத்தது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதமர் மகிந்த
இன்னொரு கால் நூற்றாண்டுக்கு ராஐபக்சக்களே ஆட்சி
 
இதை அறியாமல் உணராமல் தமிழர்களுக்கு வாழ்வில்லை
 
இனியாவது அடுத்த கட்டங்களை உணர்ந்து
ஆதரிக்காவிட்டாலும் தவிர்த்து செல்வதே வாழ வழி.
 
சிறுபான்மை இனம் என்பது முதலில் தன்னை தங்கவைக்கணும்.
இருப்பதையாவது காப்பாற்றணும்.
 
தமிழினம் இதைத்தான் கூட்டமைப்பினரிடமும் சரி
வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்கினேசுவரனிடமும் சரி எதிர்பார்த்தது.
ஆனால் அவர்கள் தத்தமது அரசியலை அல்லது
பிரபாகரனாலேயே முடியாது போன போராட்டத்தை செய்கிறார்களே தவிர.....????????????
 
ஆனால் எம்மவர்கள் எம்மவர் ஒருத்தர் எடுத்த முடிவை
மற்றவர் குளப்ப அல்லது
அதற்கு மாற்றாக செயற்படுத்தும் செயல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை
மக்களுக்கு தாம் செய்யவேண்டிய காலத்தின் பணி சார்ந்து சிந்திப்பதே இல்லையே...
இதிலிருந்து தமிழருக்கு விடிவு எப்பொழுது????
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.