Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 185
 
தமிழர்களுக்கான பெட்டி அடிப்பு
 
ஒரு இனம் விடுதலை பெற வேண்டுமானால் அது ஒற்றுமையாக பலமானதாக இலக்கை நோக்கி பயணிக்கணும் அதற்கு அதனுள் உள்ள பிரிவுகள், பிளவுகள் களையப்படணும்.
 
ஈழத்தமிழரைப்பொறுத்தவரை
அவன் எந்த மதத்துக்கு மாறினாலும் எந்த தேசத்துக்கு புலம் பெயர்ந்தாலும்
கொண்டு திரிபவை மதமும் அது சார்ந்த சாதியமும்.
 
இந்த சாதியத்தில் மேல் சாதி கீழ்ச்சாதி என்று கூட இல்லை
ஒன்றுக்கொன்று மேல் சாதி கீழ்ச்சாதி என வகுத்து
ஒன்றுடன் ஒன்று முரண்பட்டபடியே தான் உள்ளது.
அடுத்த தலைமுறை இதிலிருந்து விலக முயன்று திருமணங்களை தமக்குள் நடாத்தினாலும்
காலப்போக்கில் தாம் உயர்ந்து விட்டதாக கொலரைத்தூக்குவதையே காணமுடிகிறது.
 
அந்தளவுக்கு தமிழரை சூழ்ச்சியால் பிரிப்பதற்கான
இந்த சாதியத்தை முதன்மைப்படுத்தி
பெரும் தந்திரத்தை வகுத்தவர்கள் வென்றிருப்பதை காணலாம்.
 
இதை உணர்ந்தவர்கள்
தலைவர் பிரபாகரனைப்பின்பற்றி
அவரை பலப்படுத்தி
தாயகத்தில் இதனை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சி கூட
இதே வலையை வகுத்தவர்களால் முறியடிக்கப்பட்டபின்........
 
தமிழரைச்சுற்றி பெட்டி அடிக்கப்பட்டுள்ளதும்
அதனை உடைக்க முயல்பவர்கள் அழிக்கப்படுவதும் அல்லது தோல்வியடைவதும்
ஒரு புறம் நடக்க
அதிலிருந்து தப்ப முயல்பவர்களுக்கு ஒரு பாதை திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் விடுதலை என
அவர்கள் அந்த வளியே சென்று
மீண்டும் மதம் சாதி பிரதேசவாதம் என சகதிக்குள் மூழ்குவதை பார்க்கும் போது
இது தான் தமிழர்களுக்கு இன்றைய உலகம் விட்டு வைத்திருக்கும்
ஒரேயொரு வாழ்வியல் என்பது புலனாகிறது.
இப்படியே வாழ்ந்து விட்டு போகவேண்டியது தானா????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 186
 
நீங்க பணக்காறரா??
 
வருடம் முழுவதும் 7 நாளும் ஓய்வில்லாத வேலை.
அதனால் 8ம் மாதம் வந்தால் தொழிலை பூட்டிவிட்டு ஓவ்வெடுக்கச்செல்வது வழமை.
இந்தமுறை உறவின் திருமணம் மலேசியாவில் நடந்ததால் மலேசியா சிங்கப்பூரில் 3 கிழமை.
 
அதன் பின்னர் பிரான்சில் ஒரு கிராமத்தில் ஒரு கிழமை என ஓய்வு கழிந்தது.
 
ஒரு தம்பி கேட்டார் அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
நீங்க பணக்காறர் தானே என.
 
அவருக்கு நான் சொன்னது:
இந்த இடங்களுக்கு நீங்கள் போகாததால் இந்தக்கேள்வி உங்களிடமிருந்து வருகிறது.
நான் பரிசிலிருப்பதை விட இந்த இடங்களில் செலவு குறைவு.
 
பணக்காறரா என்றால் ஆமாம்.
 
இரவு சாப்பாட்டுக்கு ஒரு பத்து வகை மேசையிலிருக்கு.
அதில் இரண்டையோ மூன்றையோ சாப்பிட்டு விட்டு
அது செமிக்க கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வந்து படுக்கப்போகின்றேன்.
 
தரவு : உலகத்தில் அரைவாசி மக்கள் இரவு உணவின்றி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

சிறு திருத்தம்  அண்ணா

தலைவர்  ஒரு  போதும்  தன்னை  தலைவர்  என்று  சொன்னமில்லை

நாட்டை  ஆள்வேன்  என்றும் சொன்னதில்லை

நாட்டை அடைந்ததும்

அதை  தகுதியானவர்களிடம்  ஒப்படைத்துவிட்டு

துன்பப்பட்ட  மக்களோடு  ஒதுங்கி  விடுவேன்  என்று  தான்  சொன்னார்

அவர்  ஒரு  போராளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 188
 
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் லண்டன் வருகையும் எம்மவரும்...
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்பது
ஈழத்தமிழரின் போராட்டத்தை ஆதரிக்கும் ஏராளமான இளைஞர் கூட்டத்தை
தன்னகத்தே கொண்ட கட்சியாகும்.
இக்கட்சியின் தேர்தல் கால கூட்டுக்களால்
அதன் தலமை தற்பொழுது கொள்கைகளில் பேச்சுக்களில்
நழுவல் போக்கை கடைப்பிடிப்பது அதன் தொண்டர்களுக்கே தலையிடியாக உள்ளது.
 
அந்தவகையிலே திருமாவளவனின்
தற்பொழுதைய பேச்சுக்களையும் செயல்களையும்
தொடர்ந்து பார்த்து வருவோருக்கு
தலைவர் கூற்று சம்பந்தமான திருமாவளவனின் லண்டன் பேச்சு ஆச்சரியமானதல்ல.
அதுவும் தலைவரது எதிராளிகளால் அழைக்கப்பட்ட இடத்தில்
அவர்களுக்கு முன்னால் இதை தெரிவிப்பதே
ஒருவித அரசியல் ரௌடித்தனம் தான்.
 
நசுக்கிக்கொண்டிருந்த காங்கிரசின் ஆட்சியும்
அதற்கு முண்டு கொடுத்தபடி இருந்த திமுகவும்
கொஞ்சம் ஒதுக்கப்பட்டாலும் மூச்செடுத்து விடலாம் என்பது தான்
ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுதலாக இருந்தபோது இவரின் கதை.....????
 
ஆனால் அவரவர் உண்மை முகங்களை
மக்கள் முன்னால் அவரவரே காட்டும் காலப்பகுதி இது.
அதை மக்கள் உணரும் காலப்பகுதியிது.
காட்டிவிட்டு செல்கிறார்.
அவரது கட்சி தொண்டர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மற்றும்படி தடி எடுத்தவன் எல்லாம் சண்டித்தனம் செய்வது போல
அவரை கேவலப்படுத்துவதோ
அல்லது தமிழகத்திலுள்ள கட்சி சார்ந்த தொண்டர்களின் அடிதடிகளில்
ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாவதோ தூர நோக்கில் நல்லதல்ல
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 189
 
பிரபலமாகுதல்
 
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது
மணி கட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும் என்று.
 
எமது இனம் எம் கண்முன்னால் அழிக்கப்பட்ட போது
எம்மால் முடிந்தவரை வீதிக்கு வந்து குரல் கொடுத்தோம்.
ஆனால் எமது குரலுக்கு செவிசாய்த்தார்களா???
 
எம்மவரின் சொல் எடுபடணும் என்றால் நாம் பிரபலமாகணும்.
இன்றைய தமிழரின் நிலையில் இதை நாம் கவனிக்கணும் வளர்க்கணும்
 
அது படிப்பாக இருக்கலாம்
தொழிலாக இருக்கலாம்
பணமாக இருக்கலாம்
விளையாட்டாக இருக்கலாம்
கலையாகவும் இருக்கலாம்
 
அந்தவகையில்
அதை அடைய முயலும் எம்மவரை முடிந்தவரை ஆதரிப்பதும்
ஆதரவு தேடுவதும்
எமது கடமையாகும்.
 
அதனடிப்படையில்
Bigboss இல் அநேகரின் பாராட்டுக்களையும்
பல கோடி வாக்குகளையும் பெற்று
10 கிழமைக்கும் அதிகமாக
முதலிடத்திலிருக்கும் எமதூரவன் தர்சனையும்
லொஸ்லியாவையும் நாம் மேலும் ஊக்கப்படுத்தணும் வாக்களிக்கணும்.
அவர்களது குரலுக்கு மதிப்பை உண்டாக்கணும்.
 
எம்மவர் அனைவருக்கும் செய்தியை கொண்டு செல்ல
எம்மால் முடிந்ததை செய்யணும்
 
இதுவும் காலத்தின் தேவையே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 190

காணாமல் போகுதல்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (வெள்ளிக்கிழமை) என்பதால் இங்கு நடக்கும் ஒன்று கூடலுக்கு போகணும். கறுத்த சேட்டை எடுத்து வை என்றேன் மனைவியிடம். என்னப்பா 2 நாளா கால் நடக்க முடியல என்கிறீர்கள் ஒன்று கூடலில் நிற்கமுடியுமா என்றாள் மனைவி. முள்ளிவாய்க்காலில் என் இனம் பெற்ற வலியை நினைப்போம் என்றேன் நான்.

விடிய எழும்பும் போது கால் வலி இன்னும் அதிகமாகி விட்டது. மனைவிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கடைக்கு வந்து ஒரு 3 மணிக்கு அங்கு சென்றேன்.

ஒரு 10 பேர் நின்றார்கள். மனம் உடைந்து போனது. சரி வருவார்கள் என 5 மணிவரை நின்றேன் ஒரு 20 பேர் தான். அத்தனையும் 30 வருடங்களாக நான் பார்த்த முகங்கள்.

கேள்வி 1: இந்த 20 பேருக்கும் தான் நாட்டில் காணாமல் போன உறவுகள் இருந்தார்களா?

கேள்வி 2: 2009 இறுதிப்போரிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தமிழர்கள் சொல்வது பொய்யா? (அப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருந்தால் அவர்களது உறவுகள் தானும் வராதது ஏன்????)

தரவு 1: இதே சதுக்கத்தில் 2009 இறுதிப்போரின் போது கூடிய தமிழ் மக்களின் தொகை 45ஆயிரம் என பிரெஞ்சு காவல்த்துறையின் அறிக்கை கூறுகிறது.

தரவு2 : இறுதியாக வந்த அஜித்தின் திரைப்படத்தை பிரான்சில் தியேட்டரில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம்.

அப்போ நாம் முற்றாக காணாமல் போய் விட்டோமா??😢😢😢

 
 
L’image contient peut-être : 3 personnes, personnes debout et plein air
L’image contient peut-être : 3 personnes, personnes souriantes, plein air
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 191
 
பிரபலங்கள் உதிக்கும் சொற்களின் பாய்ச்சல் வலிமை.
 
அண்மையில் பிரபலமாகுதல் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
கொஞ்சம் எதிர்ப்பை தந்த பதிவு அது.
காரணம் என்ன அண்ணை
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுபவர்களால் கூட நன்மை வரும் என்கிறார் என்று.
 
இதோ நான் எழுதியதற்கு ஒரு சான்று.
 
அமெரிக்க சீரியல் உலகத்தில்
நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும்,
அடுத்த நகைச்சுவை தொடரில்
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.
 
மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில்
முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
17 வயதான இந்த யுவதி,
பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார்.
கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே,
இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.
 
இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார்.
 
ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில்,
லங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி.
ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
“இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு.
நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம்.
கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன்,
போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
 
போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.
 
 
குறிப்பு : நான் இங்கே கத்துவது எத்தனை பேரை சென்றடைந்தது (அதுவும் தமிழருக்குள் மட்டும்)
இவரது சொல் எத்தனை மில்லியன் மக்களை (எல்லா மொழியிலும்) சென்றடைந்தது.
இவரும் ஒரு சின்னத்திரை நடிகையே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 192
 
வாழ்க்கையின் வழியே பரிசுகள்
 
காலமும் வயதும் வாழ்வும் தனது வழிகளில் ஓடிக்கொண்டிருப்பதால் எதையும் எம்மால் கணித்துவிடமுடிவதில்லை.
 
என்ன செய்தோம் எப்படி வாழ்ந்தோம் வாழ்கின்றோம் என்பதும் எமது இந்த வாழ்வு சார்ந்து இந்த சமூகம் என்ன கணிப்பு வைத்திருக்கிறது என்பது பற்றியும் அறிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் வரும்.
 
எனக்கு வந்தபோது அதுவும் அடுத்த தலைமுறையிடமிருந்து....
 
எனது மகளின் திருமணத்துக்கு எனது மகனுடன் ஒன்றாக படித்து (Ecole d’ingénieurs) பாசாகி வெளியேறி தற்பொழுது சுவிசில் வேலை பார்த்து வரும் எனது மகனின் பிரெஞ்சுக்காற நண்பனும் வந்திருந்தார்.
 
திருமணத்தை முழுமையாக பார்த்தவர் நான் இருந்த இடத்துக்கு முன்னால் வந்து இருந்தபடி இரு கை கூப்பி எனக்கு வணக்கம் சொன்னார். நலம் விசாரித்து முடிய மீண்டும் இரு கை கூப்பி நீங்க ஒரு தங்கக்குடும்பத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்றார். நான் சிரித்தேன். உங்கள் முகத்தில் இந்த சிரிப்பை இன்று தான் காண்கின்றேன் என்றார்.
 
வேறென்ன வேண்டும் வாழ்வில்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 193
 
நாய்களின் விசுவாசம்
 
நாய்கள் எப்பொழுதும் வளர்ப்பவர்களுக்கே விசுவாசமானவை.
அதன் இனம் கூட அதற்கு எதிரி தான்.
 
இந்த விசுவாசத்துக்காக மனிதர்களால் உதாரணமாக கொள்ளப்படும் நாய்கள்
அதன் இனத்துக்கு எப்பொழுதும் எதிரானவை.
தனது விசுவாசத்தை காட்ட
அவை தன் இனத்தையே கடித்துக்குதறக்கூட ஒரு போதும் பின்னிற்பதில்லை.
 
 
நாய்களில் பல வகையுண்டு.
அதிலும் சில விசமனிதர்களால்
வஞ்சக நோக்கங்களோடு
கிரிக்கட் பந்தை எறிந்து பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்படும் நாய்கள்
தாம் மிக உயர்ந்த நாய்கள் என கெத்தாக பந்தா காட்டக்கூடியவை.
அந்த கெத்தை வைத்தே அதன் இனத்துக்கு சாவு மணி அடித்துவிடக்கூடியது.
 
ஆனால் இவற்றிற்கு புரியாத
ஆனால் காலம் கடந்து புரியும் ஒரு விடயம் என்னவெனில்
அவை கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் அளவு வரையே அவை செல்லமுடியும் என்பதும்
அந்த கயிற்றின் அளவை தீர்மானிப்பது அதன் எஐமானன் என்பதும்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 194
 
அப்பா அல்லது குடும்பத்தலைவன்
 
ஒவ்வொரு அப்பாக்களும் ஒவ்வொரு தூண்கள். தனது பிள்ளைகளை தன் தோளுக்கு மேல் வளர்க்கணும் என்பதும் தனக்கு முடியாத அந்த உயரத்துக்கு அவர்களை உயர்த்தும் போது அதில் சறுக்கல் வராமல் இருக்கணும் என்பதும் மாறுபட்ட மிகச்சிரமான பணிகள். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது??? அதிலும் பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கையில்??
 
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?
 
ஒரு தகப்பனை குடும்பத்தை தலை குனிய வைக்க பெண் பிள்ளைகளைத்தானே எமது சமூகம் தெரிவு செய்கிறது?
 
இந்த நிலையை மாற்ற நான் உட்பட எல்லோரும் முயல்கிறார்கள். ஆனாலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை?????
 
குடும்பத்தின் கௌரவமா அப்பாவா என்றால் அப்பா தோற்றுப்போய் பெண் குழந்தையை கண்ணீரில் விடுவது தானே தொடர்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?

இங்கே ஒரு தமிழ்க்குடும்பம்.
மூன்று ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பொம்புளைப்பிள்ளை.அந்த பொம்புளைப்பிள்ளையை தாய் தகப்பன் என இரண்டடுக்கு பாதுகாப்பில் வளர்த்தார்கள்.அதுமட்டுமல்லாமல் அந்த பொம்பிளைப்பிள்ளை வெளியில் போய்வரும் இடமெல்லாம் அண்ணன் தம்பிகளின் பாதுகாப்பும் பலமாக இருக்கும்.ஆனால் அந்த அண்ணன் தம்பிகளோ நீந்தாத குளங்கள் இல்லை.பூசாத சேறுகள் இல்லை.போடாத வேடங்களும் இல்லை.இத்தனைக்கும் அந்த பொம்புளைப்பிள்ளையை பூ போல் பாதுகாத்தார்கள்.பாதுகாப்பின் பலனாக பொம்புளைப்பிள்ளையை நேரகாலத்திற்கு ஒருவனின் கையில் பிடித்து கொடுத்தும் விட்டார்கள்.அந்த பொம்புளைப்பிள்ளையும்  கடவுளேயெண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்.

இதில் ஒரு விடயம் என்னவென்றால் அந்த பொம்புளைப்பிள்ளையின் மூத்த அண்ணாவிற்கு வயது 40தை தட்டப்போகின்றது.தம்பிமாருக்கு கலியாண வயது நடக்கின்றது.
அவர்களுக்கு பொம்புளை யாரும்/ எங்கும் கடல்லையே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 195
 
கோபுரங்கள்
 
இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல.
 
அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா?
 
சட்டம் பாதுகாப்பு நீதி
நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும்
மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா??
 
இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும்
ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா??
 
ஊழல் லஞ்சம் செலுத்தாமல்
ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா??
 
படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி
மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா??
 
மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும்
எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா??
 
 
இவை தான் வளர்ச்சி
உயர்ச்சி
 
அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 196

இன்று திலீபன்
இலட்சிய  வேட்கை  சுமந்து
பசியால் மடிந்த நாள்

கோரிக்கை காந்திக்குத்தான்
அதே காந்தீய வழியில்..

சுதந்திரம் பற்றி தெரிந்தவனுடன்
நாம் பேசியிருக்கணும்
சுதந்திரம்
கொடுக்கப்பட்டவனுடன் பேசியதே தவறு

இது புரிந்தபோது அவனில்லை
அவன் போனதுடன்
காந்தியமும் உலகில் இல்லை

அவனது தியாகமே
அதி உச்சம் இவ்வுலகில்

இனி திலீபன் மட்டுமே உலகில் இருப்பான்
இருக்கின்றான்

L’image contient peut-être : 1 personne, texte
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 196
 
வந்தோரை வாழ வைக்கும் தமிழக மக்கள்
 
தமிழகத்தின் போக்கை
அந்த மக்களின் வரலாற்றை பார்க்கும் போது
எனக்குள் எப்பொழுதும் எழும் கேள்வி
எவ்வாறு இவர்கள் வந்தவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்கிறார்கள்
தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்
அதுக்கும் மேலே சென்று தம்மை ஆளக்கூட அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி
பலமாக பல காலமாகவே எனக்குள் உண்டு.
அநேகமாக எம்மவர் பலருக்கும் இக்கேள்வி இருக்கக்கூடும்.
 
அண்மையில் TV நிகழ்ச்சி ஒன்றை பார்க்கின்ற போது
அதில் முதலிடத்திலுள்ள 5 பேரில்
3 வெளிநாட்டுத்தமிழர்கள் ஒருவர் பிற மாநிலம் ஒரே ஒரு தமிழ்நாட்டவர்.
 
அதிலும் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளரும் (தமிழக தமிழர்கள்) சொல்கிறார்கள்
வெளிநாட்டில் சிரமப்பட்ட கொடுமைகளை அனுபவித்த தமிழர்கள் தான் வெல்லணும் என்று.
 
சாதாரணமாக பார்க்கமுடியாத பெரும் மாநிட மனிதாபிமானம் இது. இதை மிக மிக பெரும் அறிவார்ந்த ஒரு இனத்தாலே மட்டுமே தான் சிந்திக்கமுடியும் செயற்படுத்த முடியும்.
 
இவ்வாறு தான் அவர்கள் MGR, கருணாநிதி, யெயலலிதா என இடமளித்தார்கள்.
ஆனால் அவர்கள்?????
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 197
 
ஆமா நாங்க தான் போட்டோம்
 
லட்சம் தடவை சொன்னோம் நாங்க செய்யலை என்று.
நம்பவும் இல்லை குற்றம் சாட்டி கைது செய்தவர்களை விடுதலை செய்யவுமில்லை.
30 வருட சிறை வேதனை வாழ்க்கையே தொலைந்து போய் பல வருசமாச்சு.
 
ஓரு தடவை ஒரேயொரு தடவை
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் என்பது மட்டும் எப்படி காதில விழுகுது???
 
தலைவரது செவ்வியில் இந்தக்கொலை பற்றிய கேள்விக்கு
மிக பக்குவமாக மிகவும் பொறுமையுடன்
ஒரு ஆயுதப்போரை நடாத்தும் தளபதியாக
அது ஒரு துன்பவியல் சம்பவம் என்றார்.
அடுத்த கேள்வி இதற்காக உங்களை கைது செய்வார்களாம் என்பதற்கு
சிரித்துக்கொண்டே நடப்பதை பேசுவோமா என்பார். அதில் எத்தனை அர்த்தங்கள்?
 
நான் சாதாரண பொது மகன்.
அந்தக்கொலை செய்யப்படவேண்டியதே.
செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் என்னவரே.
 
தொடர்ந்து என்னைக்கோபப்படுத்திக்கேட்டால்
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் இப்ப என்ன?? என்று தான் சொல்வேன்.
அது தான் உண்மையும் கூட.
இப்ப நாங்க சொல்வதை நீங்க கேட்கும் நிலை வந்திருப்பது மட்டும் தெரிகிறது.
நல்ல வளர்ச்சி தான்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 198
 
பெற்றவர்கள் என்போர்???
 
ஒரு பிள்ளைக்கு தாய் தகப்பனாவதென்பது பெரும் பாக்கியம் மட்டுமல்ல பெரும் பொறுப்பு.
 
அந்த பாக்கியத்தை உணர்பவர்கள் அதன் பொறுப்பை பெரும்பாலும் உணராததால் தான் அநேகமான பிள்ளைகள் தவறுகின்றன.
 
ஒரு பெற்றோரிடம் அன்பும் கண்டிப்பும் இருக்கணும். எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக்கூடாது அனுமதிக்கமுடியாது என்ற தெளிவு இருக்ணும்.
 
அந்தவகையில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அனுமதித்தும் தேவையற்றவற்றை ஒதுக்கியும் வைக்க முதலில் பெற்றோர் தெரிந்திருக்கணும்.
 
இது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்கள் பாவிக்கும் வீட்டில் மட்டுமல்ல வெளியிலிருக்கும் பொருட்கள் வரை பொருந்தும்.
 
எனது வீட்டில் ஆபத்தான மருந்துகளோ விசமான திரவங்களோ தேவைக்காக வாங்கிய அன்றே மிகுதி தூர எறியப்படும். அல்லது எனக்கு நித்திரை வராது.
வீட்டில் கண்ணாடியோ கோப்பையோ உடைந்துவிட்டால் அவை முழுமையாக துப்பரவாக்கி நான் நடந்து பார்க்கும்வரை பிள்ளைகள் அவர்களது ரூமுக்குள் வைத்து பூட்டப்படுவர்.
 
அப்படியாயின் எப்படி 300 அடி பள்ளத்தை வளவுக்குள் வைத்தபடி பிள்ளைகளை வெளியில் விடமுடிந்தது????
நான் அங்கிருந்தால் பெற்றவர்களுக்குத்தான் காதாவடியில் போட்டிருப்பேன்.
 
அப்புறம் மாநிலம் காப்பாற்றும் மத்தி வரும் என்ற எதிர்பார்ப்பு வேறு?? எப்ப இவர்கள் வந்தார்கள் காப்பாற்றினார்கள் நம்புவதற்கு?? வெள்ளப்பெருக்கில்??
கடலில் தத்தளித்தபோது??
சுனாமியின் போது???
 
பக்கத்து நாட்டில் 4 சறம் கட்டிய பெடியளைக்கொண்ட இயக்கம் சுனாமி இழப்பை 3 நாளில் சர்வதேச விதிகளுக்கமைய சுகாதாரத்தை பேணி பாதிக்கப்பட்ட மக்களை பேணி நிற்க இவர்கள்???
 
ஆனால் கேட்காமல் காசு கொடுப்பார்கள் அது ரசியாவாக இருப்பினும் பிள்ளையை பாதுகாக்கத்தெரியாத பெற்றோராக இருந்தாலும்??
என்ன ஒன்று பிள்ளையை தூக்கி எங்காவது போட்டுவிட்டு படம் எடுத்து முகநூலில் போட்டால் கோடீசுவரர் ஆகலாம் என்பது முறிக்கிவிடப்பட்டிருக்கு......😢😢😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 199
 
2 பேய்களுடன் ....
 
தமிழர்கள் 2 பேய்களில் ஒன்றைத்தானே தெரிவு செய்யணும் எனும் கூற்று அடிக்கடி சொல்லப்படுகிறது.
 
திரு சுமேந்திரனும் இதையே முன் வைத்திருக்கின்றார்.
 
நமக்கு இந்த அரசியல் எல்லாம் சரி வராது.
அது இருக்கும் நண்பர்களையும் பகைத்து
ஈழத்தமிழினத்தை சின்னாபின்னமாக்கி
மேலும் மேலும் பலவீனப்படுத்த மட்டுமே உதவமுடியும்.
 
ஆனாலும் சுமேந்திரன் சொன்ன போது தான் உறைத்தது.
 
தமிழருக்கும் இந்தப்பேய்க்கூட்டமைப்பை விட்டால்....???
 
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2019 at 3:07 PM, குமாரசாமி said:

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு , சொறில‌ங்கா அர‌சிய‌லை எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை தாத்தா , 
எல்லாம் பிராடுக‌ள் என்ற‌ சொல்லுக்கு த‌குதியான‌வ‌ர்க‌ள் ,

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில்  இருக்கும் போது தான் அந்த‌ நாட்டு அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என் பார்வை த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் மேல்  ?

உண்மையை சொல்ல‌ போனால் 
நேர்மையான‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ளை சிங்க‌ள‌வ‌ன் ச‌மாதான‌ கால‌த்திலே போட்டு த‌ள்ளிட்டான் , ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா தொட்டு இன்னும் ப‌ல‌ர் ?  இப்ப‌ இருக்கும் ஆட்க‌ள் தொப்பி பிர‌ட்டிய‌ல் /

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 200
 
இலங்கை ஐனாதிபதித்தேர்தல்??
 
ஏதாவது எழுதலாமே என்றால் முடியல. இது தான் என்று எவராலும் சொல்லமுடியல. இருக்கலாம் நடக்கலாம் வரலாம் தவிர்க்கலாம் முடியலாம் முடியாமல் போகலாம் நடப்பது தான் நடக்கலாம். இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்
 
ஒன்று படமெடுத்து ஆடிநிற்கும் பாம்பு இன்னொன்று பழி வாங்குவதற்காக பதுங்கி இருக்கும் பாம்பு. இரண்டுமே நச்சுப்பாம்புகள். அவற்றுடனேயே விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்தாக வேண்டியநிலையில் தமிழர்கள்.
 
தமிழர்களின் இன்றைய சூழ்நிலையில் எவரையும் சேர்க்காது விட்டாலும் எவரையும் பகைக்காது பார்த்துக்கொள்வதே இருப்பதையாவது பாதுகாக்க உதவும்.
 
அந்தவகையில் கூட்டமைப்பின் முடிவும் பிரச்சாரமும் பகையைத்தான் தீ மூட்டியுள்ளது. தமிழருக்கு அடிப்பவன் மட்டுமே சிங்கள தேசத்தில் வெல்லலாம் என்ற நிலை இருக்கும்வரை தமிழர்கள் இருந்தாலும் அடிதான் நின்றாலும் அடிதான் குனிந்தாலும் அடிதான்.
 
தன்னைத்தொலைத்த இனம், தனது வலிமை உணராத இனம், தனக்குள் வேற்றுமைகளை காணும் இனம் இப்படித்தான் வாழணும். வாழும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 201
 
நானும் சிறுபான்மை என்பது......???
 
பாடசாலை விடுமுறைகளுக்கு
அண்ணர் கொழும்பில் கடை வைத்திருந்ததால் கொழும்புக்கு செல்வது வழமை.
 
அப்படித்தான் 1977 இலும் சென்றிருந்தேன்.
அப்பொழுது எனக்கு 14 வயது.
கொம்பனித்தெருவிலுள்ள அண்ணருடைய மளிகைக்கடையில்
வேலை செய்யும் மைத்துணர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
அங்கு வந்த ஒரு சிங்கள இளைஞன்
தேங்காய் ஒன்றை எடுத்து தனது சாக்கில் போட்டதை பார்த்து விட்டேன்.
அதை அவனும் கவனித்துவிட்டான்.
 
மைத்துணரிடம் நான் சொல்ல
அவன் புறப்படத்தயாரானபோது மைத்துணர் தேங்காய்க்கு பணம் கேட்டார்.
 
அவன் என்னைத்துரத்தத்தொடங்கினான்.
அங்கு நின்றவர்கள் ஏன் எனது மைத்துணர் உட்பட அவனை தடுக்கவே இல்லை.
ஓடித்தான் தப்பினேன்.
 
அப்பொழுது தான் முதல் முதலாக உணர்ந்தேன்
நான் இந்த நாட்டில் சிறுபான்மையினன் என்பதை.
 
அந்த ஆண்டு நடந்த தேர்தலில்
எமது ஊரில் நடந்த கூட்டணியின் பிரச்சாரக்கூட்டத்தில்
முதன் முதலாக இரத்தப்பொட்டு வைத்து எனது கோபத்தை காட்டினேன்.
 
வரலாறு இப்படித்தான் எழுந்தது. பதியப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 202
 
தமிழரை வாட்டும் மூடுமந்திரம்??
 
எல்லாமே திட்டமிட்டபடி...??
மகிந்த ஐனாதிபதி
இடையில் புகுந்து மகிந்தவின் வளர்ப்பு மைத்திரி ஐனாதிபதி
மகிந்தவின் தம்பி கோத்தபாய ஐனாதிபதி
அடுத்தது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதமர் மகிந்த
இன்னொரு கால் நூற்றாண்டுக்கு ராஐபக்சக்களே ஆட்சி
 
இதை அறியாமல் உணராமல் தமிழர்களுக்கு வாழ்வில்லை
 
இனியாவது அடுத்த கட்டங்களை உணர்ந்து
ஆதரிக்காவிட்டாலும் தவிர்த்து செல்வதே வாழ வழி.
 
சிறுபான்மை இனம் என்பது முதலில் தன்னை தங்கவைக்கணும்.
இருப்பதையாவது காப்பாற்றணும்.
 
தமிழினம் இதைத்தான் கூட்டமைப்பினரிடமும் சரி
வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்கினேசுவரனிடமும் சரி எதிர்பார்த்தது.
ஆனால் அவர்கள் தத்தமது அரசியலை அல்லது
பிரபாகரனாலேயே முடியாது போன போராட்டத்தை செய்கிறார்களே தவிர.....????????????
 
ஆனால் எம்மவர்கள் எம்மவர் ஒருத்தர் எடுத்த முடிவை
மற்றவர் குளப்ப அல்லது
அதற்கு மாற்றாக செயற்படுத்தும் செயல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை
மக்களுக்கு தாம் செய்யவேண்டிய காலத்தின் பணி சார்ந்து சிந்திப்பதே இல்லையே...
இதிலிருந்து தமிழருக்கு விடிவு எப்பொழுது????
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.