Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 185
 
தமிழர்களுக்கான பெட்டி அடிப்பு
 
ஒரு இனம் விடுதலை பெற வேண்டுமானால் அது ஒற்றுமையாக பலமானதாக இலக்கை நோக்கி பயணிக்கணும் அதற்கு அதனுள் உள்ள பிரிவுகள், பிளவுகள் களையப்படணும்.
 
ஈழத்தமிழரைப்பொறுத்தவரை
அவன் எந்த மதத்துக்கு மாறினாலும் எந்த தேசத்துக்கு புலம் பெயர்ந்தாலும்
கொண்டு திரிபவை மதமும் அது சார்ந்த சாதியமும்.
 
இந்த சாதியத்தில் மேல் சாதி கீழ்ச்சாதி என்று கூட இல்லை
ஒன்றுக்கொன்று மேல் சாதி கீழ்ச்சாதி என வகுத்து
ஒன்றுடன் ஒன்று முரண்பட்டபடியே தான் உள்ளது.
அடுத்த தலைமுறை இதிலிருந்து விலக முயன்று திருமணங்களை தமக்குள் நடாத்தினாலும்
காலப்போக்கில் தாம் உயர்ந்து விட்டதாக கொலரைத்தூக்குவதையே காணமுடிகிறது.
 
அந்தளவுக்கு தமிழரை சூழ்ச்சியால் பிரிப்பதற்கான
இந்த சாதியத்தை முதன்மைப்படுத்தி
பெரும் தந்திரத்தை வகுத்தவர்கள் வென்றிருப்பதை காணலாம்.
 
இதை உணர்ந்தவர்கள்
தலைவர் பிரபாகரனைப்பின்பற்றி
அவரை பலப்படுத்தி
தாயகத்தில் இதனை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சி கூட
இதே வலையை வகுத்தவர்களால் முறியடிக்கப்பட்டபின்........
 
தமிழரைச்சுற்றி பெட்டி அடிக்கப்பட்டுள்ளதும்
அதனை உடைக்க முயல்பவர்கள் அழிக்கப்படுவதும் அல்லது தோல்வியடைவதும்
ஒரு புறம் நடக்க
அதிலிருந்து தப்ப முயல்பவர்களுக்கு ஒரு பாதை திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் விடுதலை என
அவர்கள் அந்த வளியே சென்று
மீண்டும் மதம் சாதி பிரதேசவாதம் என சகதிக்குள் மூழ்குவதை பார்க்கும் போது
இது தான் தமிழர்களுக்கு இன்றைய உலகம் விட்டு வைத்திருக்கும்
ஒரேயொரு வாழ்வியல் என்பது புலனாகிறது.
இப்படியே வாழ்ந்து விட்டு போகவேண்டியது தானா????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 186
 
நீங்க பணக்காறரா??
 
வருடம் முழுவதும் 7 நாளும் ஓய்வில்லாத வேலை.
அதனால் 8ம் மாதம் வந்தால் தொழிலை பூட்டிவிட்டு ஓவ்வெடுக்கச்செல்வது வழமை.
இந்தமுறை உறவின் திருமணம் மலேசியாவில் நடந்ததால் மலேசியா சிங்கப்பூரில் 3 கிழமை.
 
அதன் பின்னர் பிரான்சில் ஒரு கிராமத்தில் ஒரு கிழமை என ஓய்வு கழிந்தது.
 
ஒரு தம்பி கேட்டார் அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
நீங்க பணக்காறர் தானே என.
 
அவருக்கு நான் சொன்னது:
இந்த இடங்களுக்கு நீங்கள் போகாததால் இந்தக்கேள்வி உங்களிடமிருந்து வருகிறது.
நான் பரிசிலிருப்பதை விட இந்த இடங்களில் செலவு குறைவு.
 
பணக்காறரா என்றால் ஆமாம்.
 
இரவு சாப்பாட்டுக்கு ஒரு பத்து வகை மேசையிலிருக்கு.
அதில் இரண்டையோ மூன்றையோ சாப்பிட்டு விட்டு
அது செமிக்க கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வந்து படுக்கப்போகின்றேன்.
 
தரவு : உலகத்தில் அரைவாசி மக்கள் இரவு உணவின்றி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

சிறு திருத்தம்  அண்ணா

தலைவர்  ஒரு  போதும்  தன்னை  தலைவர்  என்று  சொன்னமில்லை

நாட்டை  ஆள்வேன்  என்றும் சொன்னதில்லை

நாட்டை அடைந்ததும்

அதை  தகுதியானவர்களிடம்  ஒப்படைத்துவிட்டு

துன்பப்பட்ட  மக்களோடு  ஒதுங்கி  விடுவேன்  என்று  தான்  சொன்னார்

அவர்  ஒரு  போராளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 188
 
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் லண்டன் வருகையும் எம்மவரும்...
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்பது
ஈழத்தமிழரின் போராட்டத்தை ஆதரிக்கும் ஏராளமான இளைஞர் கூட்டத்தை
தன்னகத்தே கொண்ட கட்சியாகும்.
இக்கட்சியின் தேர்தல் கால கூட்டுக்களால்
அதன் தலமை தற்பொழுது கொள்கைகளில் பேச்சுக்களில்
நழுவல் போக்கை கடைப்பிடிப்பது அதன் தொண்டர்களுக்கே தலையிடியாக உள்ளது.
 
அந்தவகையிலே திருமாவளவனின்
தற்பொழுதைய பேச்சுக்களையும் செயல்களையும்
தொடர்ந்து பார்த்து வருவோருக்கு
தலைவர் கூற்று சம்பந்தமான திருமாவளவனின் லண்டன் பேச்சு ஆச்சரியமானதல்ல.
அதுவும் தலைவரது எதிராளிகளால் அழைக்கப்பட்ட இடத்தில்
அவர்களுக்கு முன்னால் இதை தெரிவிப்பதே
ஒருவித அரசியல் ரௌடித்தனம் தான்.
 
நசுக்கிக்கொண்டிருந்த காங்கிரசின் ஆட்சியும்
அதற்கு முண்டு கொடுத்தபடி இருந்த திமுகவும்
கொஞ்சம் ஒதுக்கப்பட்டாலும் மூச்செடுத்து விடலாம் என்பது தான்
ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுதலாக இருந்தபோது இவரின் கதை.....????
 
ஆனால் அவரவர் உண்மை முகங்களை
மக்கள் முன்னால் அவரவரே காட்டும் காலப்பகுதி இது.
அதை மக்கள் உணரும் காலப்பகுதியிது.
காட்டிவிட்டு செல்கிறார்.
அவரது கட்சி தொண்டர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மற்றும்படி தடி எடுத்தவன் எல்லாம் சண்டித்தனம் செய்வது போல
அவரை கேவலப்படுத்துவதோ
அல்லது தமிழகத்திலுள்ள கட்சி சார்ந்த தொண்டர்களின் அடிதடிகளில்
ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாவதோ தூர நோக்கில் நல்லதல்ல
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 189
 
பிரபலமாகுதல்
 
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது
மணி கட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும் என்று.
 
எமது இனம் எம் கண்முன்னால் அழிக்கப்பட்ட போது
எம்மால் முடிந்தவரை வீதிக்கு வந்து குரல் கொடுத்தோம்.
ஆனால் எமது குரலுக்கு செவிசாய்த்தார்களா???
 
எம்மவரின் சொல் எடுபடணும் என்றால் நாம் பிரபலமாகணும்.
இன்றைய தமிழரின் நிலையில் இதை நாம் கவனிக்கணும் வளர்க்கணும்
 
அது படிப்பாக இருக்கலாம்
தொழிலாக இருக்கலாம்
பணமாக இருக்கலாம்
விளையாட்டாக இருக்கலாம்
கலையாகவும் இருக்கலாம்
 
அந்தவகையில்
அதை அடைய முயலும் எம்மவரை முடிந்தவரை ஆதரிப்பதும்
ஆதரவு தேடுவதும்
எமது கடமையாகும்.
 
அதனடிப்படையில்
Bigboss இல் அநேகரின் பாராட்டுக்களையும்
பல கோடி வாக்குகளையும் பெற்று
10 கிழமைக்கும் அதிகமாக
முதலிடத்திலிருக்கும் எமதூரவன் தர்சனையும்
லொஸ்லியாவையும் நாம் மேலும் ஊக்கப்படுத்தணும் வாக்களிக்கணும்.
அவர்களது குரலுக்கு மதிப்பை உண்டாக்கணும்.
 
எம்மவர் அனைவருக்கும் செய்தியை கொண்டு செல்ல
எம்மால் முடிந்ததை செய்யணும்
 
இதுவும் காலத்தின் தேவையே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 190

காணாமல் போகுதல்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (வெள்ளிக்கிழமை) என்பதால் இங்கு நடக்கும் ஒன்று கூடலுக்கு போகணும். கறுத்த சேட்டை எடுத்து வை என்றேன் மனைவியிடம். என்னப்பா 2 நாளா கால் நடக்க முடியல என்கிறீர்கள் ஒன்று கூடலில் நிற்கமுடியுமா என்றாள் மனைவி. முள்ளிவாய்க்காலில் என் இனம் பெற்ற வலியை நினைப்போம் என்றேன் நான்.

விடிய எழும்பும் போது கால் வலி இன்னும் அதிகமாகி விட்டது. மனைவிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கடைக்கு வந்து ஒரு 3 மணிக்கு அங்கு சென்றேன்.

ஒரு 10 பேர் நின்றார்கள். மனம் உடைந்து போனது. சரி வருவார்கள் என 5 மணிவரை நின்றேன் ஒரு 20 பேர் தான். அத்தனையும் 30 வருடங்களாக நான் பார்த்த முகங்கள்.

கேள்வி 1: இந்த 20 பேருக்கும் தான் நாட்டில் காணாமல் போன உறவுகள் இருந்தார்களா?

கேள்வி 2: 2009 இறுதிப்போரிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தமிழர்கள் சொல்வது பொய்யா? (அப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருந்தால் அவர்களது உறவுகள் தானும் வராதது ஏன்????)

தரவு 1: இதே சதுக்கத்தில் 2009 இறுதிப்போரின் போது கூடிய தமிழ் மக்களின் தொகை 45ஆயிரம் என பிரெஞ்சு காவல்த்துறையின் அறிக்கை கூறுகிறது.

தரவு2 : இறுதியாக வந்த அஜித்தின் திரைப்படத்தை பிரான்சில் தியேட்டரில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம்.

அப்போ நாம் முற்றாக காணாமல் போய் விட்டோமா??😢😢😢

 
 
L’image contient peut-être : 3 personnes, personnes debout et plein air
L’image contient peut-être : 3 personnes, personnes souriantes, plein air
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 191
 
பிரபலங்கள் உதிக்கும் சொற்களின் பாய்ச்சல் வலிமை.
 
அண்மையில் பிரபலமாகுதல் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
கொஞ்சம் எதிர்ப்பை தந்த பதிவு அது.
காரணம் என்ன அண்ணை
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுபவர்களால் கூட நன்மை வரும் என்கிறார் என்று.
 
இதோ நான் எழுதியதற்கு ஒரு சான்று.
 
அமெரிக்க சீரியல் உலகத்தில்
நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும்,
அடுத்த நகைச்சுவை தொடரில்
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.
 
மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில்
முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
17 வயதான இந்த யுவதி,
பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார்.
கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே,
இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.
 
இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார்.
 
ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில்,
லங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி.
ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
“இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு.
நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம்.
கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன்,
போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
 
போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.
 
 
குறிப்பு : நான் இங்கே கத்துவது எத்தனை பேரை சென்றடைந்தது (அதுவும் தமிழருக்குள் மட்டும்)
இவரது சொல் எத்தனை மில்லியன் மக்களை (எல்லா மொழியிலும்) சென்றடைந்தது.
இவரும் ஒரு சின்னத்திரை நடிகையே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 192
 
வாழ்க்கையின் வழியே பரிசுகள்
 
காலமும் வயதும் வாழ்வும் தனது வழிகளில் ஓடிக்கொண்டிருப்பதால் எதையும் எம்மால் கணித்துவிடமுடிவதில்லை.
 
என்ன செய்தோம் எப்படி வாழ்ந்தோம் வாழ்கின்றோம் என்பதும் எமது இந்த வாழ்வு சார்ந்து இந்த சமூகம் என்ன கணிப்பு வைத்திருக்கிறது என்பது பற்றியும் அறிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் வரும்.
 
எனக்கு வந்தபோது அதுவும் அடுத்த தலைமுறையிடமிருந்து....
 
எனது மகளின் திருமணத்துக்கு எனது மகனுடன் ஒன்றாக படித்து (Ecole d’ingénieurs) பாசாகி வெளியேறி தற்பொழுது சுவிசில் வேலை பார்த்து வரும் எனது மகனின் பிரெஞ்சுக்காற நண்பனும் வந்திருந்தார்.
 
திருமணத்தை முழுமையாக பார்த்தவர் நான் இருந்த இடத்துக்கு முன்னால் வந்து இருந்தபடி இரு கை கூப்பி எனக்கு வணக்கம் சொன்னார். நலம் விசாரித்து முடிய மீண்டும் இரு கை கூப்பி நீங்க ஒரு தங்கக்குடும்பத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்றார். நான் சிரித்தேன். உங்கள் முகத்தில் இந்த சிரிப்பை இன்று தான் காண்கின்றேன் என்றார்.
 
வேறென்ன வேண்டும் வாழ்வில்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 193
 
நாய்களின் விசுவாசம்
 
நாய்கள் எப்பொழுதும் வளர்ப்பவர்களுக்கே விசுவாசமானவை.
அதன் இனம் கூட அதற்கு எதிரி தான்.
 
இந்த விசுவாசத்துக்காக மனிதர்களால் உதாரணமாக கொள்ளப்படும் நாய்கள்
அதன் இனத்துக்கு எப்பொழுதும் எதிரானவை.
தனது விசுவாசத்தை காட்ட
அவை தன் இனத்தையே கடித்துக்குதறக்கூட ஒரு போதும் பின்னிற்பதில்லை.
 
 
நாய்களில் பல வகையுண்டு.
அதிலும் சில விசமனிதர்களால்
வஞ்சக நோக்கங்களோடு
கிரிக்கட் பந்தை எறிந்து பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்படும் நாய்கள்
தாம் மிக உயர்ந்த நாய்கள் என கெத்தாக பந்தா காட்டக்கூடியவை.
அந்த கெத்தை வைத்தே அதன் இனத்துக்கு சாவு மணி அடித்துவிடக்கூடியது.
 
ஆனால் இவற்றிற்கு புரியாத
ஆனால் காலம் கடந்து புரியும் ஒரு விடயம் என்னவெனில்
அவை கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் அளவு வரையே அவை செல்லமுடியும் என்பதும்
அந்த கயிற்றின் அளவை தீர்மானிப்பது அதன் எஐமானன் என்பதும்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 194
 
அப்பா அல்லது குடும்பத்தலைவன்
 
ஒவ்வொரு அப்பாக்களும் ஒவ்வொரு தூண்கள். தனது பிள்ளைகளை தன் தோளுக்கு மேல் வளர்க்கணும் என்பதும் தனக்கு முடியாத அந்த உயரத்துக்கு அவர்களை உயர்த்தும் போது அதில் சறுக்கல் வராமல் இருக்கணும் என்பதும் மாறுபட்ட மிகச்சிரமான பணிகள். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது??? அதிலும் பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கையில்??
 
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?
 
ஒரு தகப்பனை குடும்பத்தை தலை குனிய வைக்க பெண் பிள்ளைகளைத்தானே எமது சமூகம் தெரிவு செய்கிறது?
 
இந்த நிலையை மாற்ற நான் உட்பட எல்லோரும் முயல்கிறார்கள். ஆனாலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை?????
 
குடும்பத்தின் கௌரவமா அப்பாவா என்றால் அப்பா தோற்றுப்போய் பெண் குழந்தையை கண்ணீரில் விடுவது தானே தொடர்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?

இங்கே ஒரு தமிழ்க்குடும்பம்.
மூன்று ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பொம்புளைப்பிள்ளை.அந்த பொம்புளைப்பிள்ளையை தாய் தகப்பன் என இரண்டடுக்கு பாதுகாப்பில் வளர்த்தார்கள்.அதுமட்டுமல்லாமல் அந்த பொம்பிளைப்பிள்ளை வெளியில் போய்வரும் இடமெல்லாம் அண்ணன் தம்பிகளின் பாதுகாப்பும் பலமாக இருக்கும்.ஆனால் அந்த அண்ணன் தம்பிகளோ நீந்தாத குளங்கள் இல்லை.பூசாத சேறுகள் இல்லை.போடாத வேடங்களும் இல்லை.இத்தனைக்கும் அந்த பொம்புளைப்பிள்ளையை பூ போல் பாதுகாத்தார்கள்.பாதுகாப்பின் பலனாக பொம்புளைப்பிள்ளையை நேரகாலத்திற்கு ஒருவனின் கையில் பிடித்து கொடுத்தும் விட்டார்கள்.அந்த பொம்புளைப்பிள்ளையும்  கடவுளேயெண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்.

இதில் ஒரு விடயம் என்னவென்றால் அந்த பொம்புளைப்பிள்ளையின் மூத்த அண்ணாவிற்கு வயது 40தை தட்டப்போகின்றது.தம்பிமாருக்கு கலியாண வயது நடக்கின்றது.
அவர்களுக்கு பொம்புளை யாரும்/ எங்கும் கடல்லையே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 195
 
கோபுரங்கள்
 
இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல.
 
அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா?
 
சட்டம் பாதுகாப்பு நீதி
நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும்
மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா??
 
இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும்
ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா??
 
ஊழல் லஞ்சம் செலுத்தாமல்
ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா??
 
படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி
மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா??
 
மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும்
எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா??
 
 
இவை தான் வளர்ச்சி
உயர்ச்சி
 
அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 196

இன்று திலீபன்
இலட்சிய  வேட்கை  சுமந்து
பசியால் மடிந்த நாள்

கோரிக்கை காந்திக்குத்தான்
அதே காந்தீய வழியில்..

சுதந்திரம் பற்றி தெரிந்தவனுடன்
நாம் பேசியிருக்கணும்
சுதந்திரம்
கொடுக்கப்பட்டவனுடன் பேசியதே தவறு

இது புரிந்தபோது அவனில்லை
அவன் போனதுடன்
காந்தியமும் உலகில் இல்லை

அவனது தியாகமே
அதி உச்சம் இவ்வுலகில்

இனி திலீபன் மட்டுமே உலகில் இருப்பான்
இருக்கின்றான்

L’image contient peut-être : 1 personne, texte
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 196
 
வந்தோரை வாழ வைக்கும் தமிழக மக்கள்
 
தமிழகத்தின் போக்கை
அந்த மக்களின் வரலாற்றை பார்க்கும் போது
எனக்குள் எப்பொழுதும் எழும் கேள்வி
எவ்வாறு இவர்கள் வந்தவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்கிறார்கள்
தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்
அதுக்கும் மேலே சென்று தம்மை ஆளக்கூட அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி
பலமாக பல காலமாகவே எனக்குள் உண்டு.
அநேகமாக எம்மவர் பலருக்கும் இக்கேள்வி இருக்கக்கூடும்.
 
அண்மையில் TV நிகழ்ச்சி ஒன்றை பார்க்கின்ற போது
அதில் முதலிடத்திலுள்ள 5 பேரில்
3 வெளிநாட்டுத்தமிழர்கள் ஒருவர் பிற மாநிலம் ஒரே ஒரு தமிழ்நாட்டவர்.
 
அதிலும் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளரும் (தமிழக தமிழர்கள்) சொல்கிறார்கள்
வெளிநாட்டில் சிரமப்பட்ட கொடுமைகளை அனுபவித்த தமிழர்கள் தான் வெல்லணும் என்று.
 
சாதாரணமாக பார்க்கமுடியாத பெரும் மாநிட மனிதாபிமானம் இது. இதை மிக மிக பெரும் அறிவார்ந்த ஒரு இனத்தாலே மட்டுமே தான் சிந்திக்கமுடியும் செயற்படுத்த முடியும்.
 
இவ்வாறு தான் அவர்கள் MGR, கருணாநிதி, யெயலலிதா என இடமளித்தார்கள்.
ஆனால் அவர்கள்?????
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 197
 
ஆமா நாங்க தான் போட்டோம்
 
லட்சம் தடவை சொன்னோம் நாங்க செய்யலை என்று.
நம்பவும் இல்லை குற்றம் சாட்டி கைது செய்தவர்களை விடுதலை செய்யவுமில்லை.
30 வருட சிறை வேதனை வாழ்க்கையே தொலைந்து போய் பல வருசமாச்சு.
 
ஓரு தடவை ஒரேயொரு தடவை
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் என்பது மட்டும் எப்படி காதில விழுகுது???
 
தலைவரது செவ்வியில் இந்தக்கொலை பற்றிய கேள்விக்கு
மிக பக்குவமாக மிகவும் பொறுமையுடன்
ஒரு ஆயுதப்போரை நடாத்தும் தளபதியாக
அது ஒரு துன்பவியல் சம்பவம் என்றார்.
அடுத்த கேள்வி இதற்காக உங்களை கைது செய்வார்களாம் என்பதற்கு
சிரித்துக்கொண்டே நடப்பதை பேசுவோமா என்பார். அதில் எத்தனை அர்த்தங்கள்?
 
நான் சாதாரண பொது மகன்.
அந்தக்கொலை செய்யப்படவேண்டியதே.
செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் என்னவரே.
 
தொடர்ந்து என்னைக்கோபப்படுத்திக்கேட்டால்
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் இப்ப என்ன?? என்று தான் சொல்வேன்.
அது தான் உண்மையும் கூட.
இப்ப நாங்க சொல்வதை நீங்க கேட்கும் நிலை வந்திருப்பது மட்டும் தெரிகிறது.
நல்ல வளர்ச்சி தான்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 198
 
பெற்றவர்கள் என்போர்???
 
ஒரு பிள்ளைக்கு தாய் தகப்பனாவதென்பது பெரும் பாக்கியம் மட்டுமல்ல பெரும் பொறுப்பு.
 
அந்த பாக்கியத்தை உணர்பவர்கள் அதன் பொறுப்பை பெரும்பாலும் உணராததால் தான் அநேகமான பிள்ளைகள் தவறுகின்றன.
 
ஒரு பெற்றோரிடம் அன்பும் கண்டிப்பும் இருக்கணும். எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக்கூடாது அனுமதிக்கமுடியாது என்ற தெளிவு இருக்ணும்.
 
அந்தவகையில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அனுமதித்தும் தேவையற்றவற்றை ஒதுக்கியும் வைக்க முதலில் பெற்றோர் தெரிந்திருக்கணும்.
 
இது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்கள் பாவிக்கும் வீட்டில் மட்டுமல்ல வெளியிலிருக்கும் பொருட்கள் வரை பொருந்தும்.
 
எனது வீட்டில் ஆபத்தான மருந்துகளோ விசமான திரவங்களோ தேவைக்காக வாங்கிய அன்றே மிகுதி தூர எறியப்படும். அல்லது எனக்கு நித்திரை வராது.
வீட்டில் கண்ணாடியோ கோப்பையோ உடைந்துவிட்டால் அவை முழுமையாக துப்பரவாக்கி நான் நடந்து பார்க்கும்வரை பிள்ளைகள் அவர்களது ரூமுக்குள் வைத்து பூட்டப்படுவர்.
 
அப்படியாயின் எப்படி 300 அடி பள்ளத்தை வளவுக்குள் வைத்தபடி பிள்ளைகளை வெளியில் விடமுடிந்தது????
நான் அங்கிருந்தால் பெற்றவர்களுக்குத்தான் காதாவடியில் போட்டிருப்பேன்.
 
அப்புறம் மாநிலம் காப்பாற்றும் மத்தி வரும் என்ற எதிர்பார்ப்பு வேறு?? எப்ப இவர்கள் வந்தார்கள் காப்பாற்றினார்கள் நம்புவதற்கு?? வெள்ளப்பெருக்கில்??
கடலில் தத்தளித்தபோது??
சுனாமியின் போது???
 
பக்கத்து நாட்டில் 4 சறம் கட்டிய பெடியளைக்கொண்ட இயக்கம் சுனாமி இழப்பை 3 நாளில் சர்வதேச விதிகளுக்கமைய சுகாதாரத்தை பேணி பாதிக்கப்பட்ட மக்களை பேணி நிற்க இவர்கள்???
 
ஆனால் கேட்காமல் காசு கொடுப்பார்கள் அது ரசியாவாக இருப்பினும் பிள்ளையை பாதுகாக்கத்தெரியாத பெற்றோராக இருந்தாலும்??
என்ன ஒன்று பிள்ளையை தூக்கி எங்காவது போட்டுவிட்டு படம் எடுத்து முகநூலில் போட்டால் கோடீசுவரர் ஆகலாம் என்பது முறிக்கிவிடப்பட்டிருக்கு......😢😢😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 199
 
2 பேய்களுடன் ....
 
தமிழர்கள் 2 பேய்களில் ஒன்றைத்தானே தெரிவு செய்யணும் எனும் கூற்று அடிக்கடி சொல்லப்படுகிறது.
 
திரு சுமேந்திரனும் இதையே முன் வைத்திருக்கின்றார்.
 
நமக்கு இந்த அரசியல் எல்லாம் சரி வராது.
அது இருக்கும் நண்பர்களையும் பகைத்து
ஈழத்தமிழினத்தை சின்னாபின்னமாக்கி
மேலும் மேலும் பலவீனப்படுத்த மட்டுமே உதவமுடியும்.
 
ஆனாலும் சுமேந்திரன் சொன்ன போது தான் உறைத்தது.
 
தமிழருக்கும் இந்தப்பேய்க்கூட்டமைப்பை விட்டால்....???
 
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2019 at 3:07 PM, குமாரசாமி said:

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு , சொறில‌ங்கா அர‌சிய‌லை எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை தாத்தா , 
எல்லாம் பிராடுக‌ள் என்ற‌ சொல்லுக்கு த‌குதியான‌வ‌ர்க‌ள் ,

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில்  இருக்கும் போது தான் அந்த‌ நாட்டு அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என் பார்வை த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் மேல்  ?

உண்மையை சொல்ல‌ போனால் 
நேர்மையான‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ளை சிங்க‌ள‌வ‌ன் ச‌மாதான‌ கால‌த்திலே போட்டு த‌ள்ளிட்டான் , ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா தொட்டு இன்னும் ப‌ல‌ர் ?  இப்ப‌ இருக்கும் ஆட்க‌ள் தொப்பி பிர‌ட்டிய‌ல் /

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 200
 
இலங்கை ஐனாதிபதித்தேர்தல்??
 
ஏதாவது எழுதலாமே என்றால் முடியல. இது தான் என்று எவராலும் சொல்லமுடியல. இருக்கலாம் நடக்கலாம் வரலாம் தவிர்க்கலாம் முடியலாம் முடியாமல் போகலாம் நடப்பது தான் நடக்கலாம். இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்
 
ஒன்று படமெடுத்து ஆடிநிற்கும் பாம்பு இன்னொன்று பழி வாங்குவதற்காக பதுங்கி இருக்கும் பாம்பு. இரண்டுமே நச்சுப்பாம்புகள். அவற்றுடனேயே விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்தாக வேண்டியநிலையில் தமிழர்கள்.
 
தமிழர்களின் இன்றைய சூழ்நிலையில் எவரையும் சேர்க்காது விட்டாலும் எவரையும் பகைக்காது பார்த்துக்கொள்வதே இருப்பதையாவது பாதுகாக்க உதவும்.
 
அந்தவகையில் கூட்டமைப்பின் முடிவும் பிரச்சாரமும் பகையைத்தான் தீ மூட்டியுள்ளது. தமிழருக்கு அடிப்பவன் மட்டுமே சிங்கள தேசத்தில் வெல்லலாம் என்ற நிலை இருக்கும்வரை தமிழர்கள் இருந்தாலும் அடிதான் நின்றாலும் அடிதான் குனிந்தாலும் அடிதான்.
 
தன்னைத்தொலைத்த இனம், தனது வலிமை உணராத இனம், தனக்குள் வேற்றுமைகளை காணும் இனம் இப்படித்தான் வாழணும். வாழும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 201
 
நானும் சிறுபான்மை என்பது......???
 
பாடசாலை விடுமுறைகளுக்கு
அண்ணர் கொழும்பில் கடை வைத்திருந்ததால் கொழும்புக்கு செல்வது வழமை.
 
அப்படித்தான் 1977 இலும் சென்றிருந்தேன்.
அப்பொழுது எனக்கு 14 வயது.
கொம்பனித்தெருவிலுள்ள அண்ணருடைய மளிகைக்கடையில்
வேலை செய்யும் மைத்துணர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
அங்கு வந்த ஒரு சிங்கள இளைஞன்
தேங்காய் ஒன்றை எடுத்து தனது சாக்கில் போட்டதை பார்த்து விட்டேன்.
அதை அவனும் கவனித்துவிட்டான்.
 
மைத்துணரிடம் நான் சொல்ல
அவன் புறப்படத்தயாரானபோது மைத்துணர் தேங்காய்க்கு பணம் கேட்டார்.
 
அவன் என்னைத்துரத்தத்தொடங்கினான்.
அங்கு நின்றவர்கள் ஏன் எனது மைத்துணர் உட்பட அவனை தடுக்கவே இல்லை.
ஓடித்தான் தப்பினேன்.
 
அப்பொழுது தான் முதல் முதலாக உணர்ந்தேன்
நான் இந்த நாட்டில் சிறுபான்மையினன் என்பதை.
 
அந்த ஆண்டு நடந்த தேர்தலில்
எமது ஊரில் நடந்த கூட்டணியின் பிரச்சாரக்கூட்டத்தில்
முதன் முதலாக இரத்தப்பொட்டு வைத்து எனது கோபத்தை காட்டினேன்.
 
வரலாறு இப்படித்தான் எழுந்தது. பதியப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 202
 
தமிழரை வாட்டும் மூடுமந்திரம்??
 
எல்லாமே திட்டமிட்டபடி...??
மகிந்த ஐனாதிபதி
இடையில் புகுந்து மகிந்தவின் வளர்ப்பு மைத்திரி ஐனாதிபதி
மகிந்தவின் தம்பி கோத்தபாய ஐனாதிபதி
அடுத்தது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதமர் மகிந்த
இன்னொரு கால் நூற்றாண்டுக்கு ராஐபக்சக்களே ஆட்சி
 
இதை அறியாமல் உணராமல் தமிழர்களுக்கு வாழ்வில்லை
 
இனியாவது அடுத்த கட்டங்களை உணர்ந்து
ஆதரிக்காவிட்டாலும் தவிர்த்து செல்வதே வாழ வழி.
 
சிறுபான்மை இனம் என்பது முதலில் தன்னை தங்கவைக்கணும்.
இருப்பதையாவது காப்பாற்றணும்.
 
தமிழினம் இதைத்தான் கூட்டமைப்பினரிடமும் சரி
வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்கினேசுவரனிடமும் சரி எதிர்பார்த்தது.
ஆனால் அவர்கள் தத்தமது அரசியலை அல்லது
பிரபாகரனாலேயே முடியாது போன போராட்டத்தை செய்கிறார்களே தவிர.....????????????
 
ஆனால் எம்மவர்கள் எம்மவர் ஒருத்தர் எடுத்த முடிவை
மற்றவர் குளப்ப அல்லது
அதற்கு மாற்றாக செயற்படுத்தும் செயல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை
மக்களுக்கு தாம் செய்யவேண்டிய காலத்தின் பணி சார்ந்து சிந்திப்பதே இல்லையே...
இதிலிருந்து தமிழருக்கு விடிவு எப்பொழுது????
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.