Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 90
 
முகநூலும் நேரடி ஒளிபரப்பும்
 
தொழில் சம்பந்தமாக ஒருவருடன் ஒப்பந்தம் ஒன்று போடணும்.
இடைத்தரகர் ஒருவரை நியமித்து ஒப்பந்தம் எழுத முயன்றபோது
யாருக்கும் போகும் தரகுப்பணம் எம்மவருக்கு போகட்டுமே என எம்மவரை அமர்த்தியிருந்தேன்.
ஓம் என்றுவிட்டு போனவர் தான் பல வாரமாக இழுக்க ஆரம்பித்தார்.
தொலைபேசியிலும் பதிலில்லை.
நானெல்லாம் தண்ணீர் மாதிரி. 3 தரம் தான் பொறுமை.
 
இனி இவரை விடுத்து நேரடியாக ஒப்பந்தத்தை போடலாம் என்றாலும் இவர் சொந்தக்காரர்.
உறவில் விரிசல் வரக்கூடாது.
எனவே ஒப்பந்தம் போட நான் போகும் போது
இவர் அந்த இடத்தில் இல்லாமலிருக்கணும் என்ன செய்யலாம் என யோசித்தபடி இருக்கின்றேன்.
அதேநேரம்
அவர் அவ்விடத்திலிருந்து 100 கிலோ மீற்றருக்குப்பாலிருந்து முகநூலில் நேரடி ஒளிபரப்பு போட்டபடி இருந்தார்.
 
அந்த நேரம் எனக்கு போதுமே...
 
மாத்தி யோசி
இனி யாராவது நேரடி ஒளிபரப்பு போடுவீங்க...????
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 91

இன்று எனது அம்மாவின் 92வது பிறந்தநாள்.

இந்த உலகில் எம்மை முழுமையாக அறிந்தவர் புரிந்தவர் எவராக இருக்கும் என பார்த்தால்

நிச்சயமாக அது பெற்ற தாய்க்கே முதலிடம்.

எனது தாயார் எனது தம்பியின் வீட்டில் இருக்கிறார். அடிக்கடி பார்க்கப்போவதுண்டு.

அப்பொழுதெல்லாம் அங்கு சாப்பிடாமல் வருவதில்லை. அதை எனது உரிமை என நினைப்பவன் நான்.

அவ்வாறு நான் சாப்பிடும் போது தம்பியின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்கள் எனது கோப்பையில் தான் இருக்கும்.

மறுபடியும் பரிமாறுவதற்காக.

ஆனால் அவற்றையெல்லாம் மீறி அம்மா தான் இதுவரை முந்திவிடுகிறார்.

என்ன கோப்பை வெறுமையாக இருக்கு (ஆனால் கோப்பையில் அரைவாசி சாப்பாடு இருக்கும்)

கறி காணாமல் இருக்கு (கறி கனக்க இருக்கும்) என்பார்.

அவரும் என்னுடன் சாப்பிட்டால்

அவரது கோப்பையிலிருந்து விசேசமான சாப்பாடுகள் எனது கோப்பைக்கு மாறிவிடும்.

நாங்க அவருக்கு வடிவாக கொடுப்பம் தானே நீங்க சாப்பிடுங்கள் என்றாலும் கேட்கமாட்டார்.

போட்டுக்கொண்டே இருப்பார்.

தம்பியின் மனைவி சொன்னார் அத்தனை மக்களும் பேரப்பிள்ளைகளும் வந்து போகிறார்கள்

ஆனால் உங்களைக்கண்டால் தான் இப்படி என.

கதிர்காமத்தில் தவமிருந்து 5 பெண்களுக்கு பிறகு பிறந்தவனுக்கு ஊட்டி வளர்த்த 
தொட்டில் பழக்கம் அவருக்கு.

நூறுக்கு இன்னும் சில வருடங்கள் தான். வாழணும் தாயே. வாழ்த்தணும் எம்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அம்மாவுக்கு என்ட வாழ்த்தையும் சொல்லி விடுங்கள் அண்ணா...அம்மாவின் 100 வயசு பிறந்த நாளை யாழ் உறவுகளையும் கூப்பிட்டு சிறப்பிக்க வேண்டும்...அம்மா 100 வயது வரை வாழ ஆண்டவன் அருள் பாலிக்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நூறுக்கு இன்னும் சில வருடங்கள் தான். வாழணும் தாயே.

தாயை வாழ்த்த வயது  எனக்கில்லை.

கடவுளின் கிருபை அவருக்கு என்றும்  இருக்க வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அம்மா.
தேக ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 92
 
உப்பிட்டவரை...???
 
உலக கோப்பை காற்பந்தாட்டம் நடைபெற்றுவருகிறது.
 
லண்டனில் இருந்தபடி I Love England என்று படம் போட்டு முழக்கம் செய்பவர்களை பார்க்கும் போது
தமிழினம் நன்றி மறந்து நடக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என தோன்றுகிறது.
அத்தனை பேரும் பிரான்சிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் சென்றவர்கள்.
 
முகமோ அல்லது உறவோ தெரியாமல்
அகதியாக ஓடி வந்தவரை அரணைத்தது
சாப்பாடு போட்டது
அகதிப்பணம் கொடுத்தது
முதல் சம்பளம் கொடுத்தது
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதித்து விசா மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து கௌரவித்தது
 
இது அனைத்தையும் மறந்து
ஆங்கிலம் பேசுவது அறிவை அளக்கும் கருவி என
ஒல்லாந்தர் காலத்து அறிவியலை நம்பி
பாய்ந்து சென்றோரை நினைக்க....
 
சாபம் வேண்டாம் பிழைத்துப்போகட்டும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 92
 
உப்பிட்டவரை...???
 
உலக கோப்பை காற்பந்தாட்டம் நடைபெற்றுவருகிறது.
 
லண்டனில் இருந்தபடி I Love England என்று படம் போட்டு முழக்கம் செய்பவர்களை பார்க்கும் போது
தமிழினம் நன்றி மறந்து நடக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என தோன்றுகிறது.
அத்தனை பேரும் பிரான்சிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் சென்றவர்கள்.
 
முகமோ அல்லது உறவோ தெரியாமல்
அகதியாக ஓடி வந்தவரை அரணைத்தது
சாப்பாடு போட்டது
அகதிப்பணம் கொடுத்தது
முதல் சம்பளம் கொடுத்தது
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதித்து விசா மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து கௌரவித்தது
 
இது அனைத்தையும் மறந்து
ஆங்கிலம் பேசுவது அறிவை அளக்கும் கருவி என
ஒல்லாந்தர் காலத்து அறிவியலை நம்பி
பாய்ந்து சென்றோரை நினைக்க....
 
சாபம் வேண்டாம் பிழைத்துப்போகட்டும்...
 

அதே...அதேதான் இஞ்சையும்.....சிற்றிசன் எடுத்துப்போட்டு இஞ்சையிருந்து என்ன நாக்கூத்தையே வழிக்கிறது எண்டு நக்கலடிச்சுப்போட்டு லண்டனுக்கு ஓடினவையள்.....

பெட்டி படுக்கை சோபா அலுமாரி எண்டு எல்லாத்தையும் கட்டிக்கொண்டு போகேக்கை ஜேர்மன்காரனுக்கு நாசியள் எண்டு பட்டத்தையும் குடுத்துட்டு ஓடினவையள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 93

சீமானின் தமிழக அரசியலும் எம்மவர் அரசியலும்

சீமான் புலிகள் பற்றியும் அவர்களது செயல்முறைகள் பற்றியும் அதிகம் முரணாக பேசுகிறார்.

புலிகள் மீது வேறு விதமான சாயலை தூவுகிறார்

அதை தமிழகம் எங்கும் பரப்பகிறார்

இதனால் புலிகள் மீதான பார்வை மாறுகிறது

எனவே அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்தணும் என எம்மவர்கள் எழுதியும் அதை காவியும் வருகின்றனர்.

உண்மையில் இன்று சீமான் புலிகள் பற்றி பேசியதை தேடும் போது

சில விரும்பத்தகாத வார்த்தைகள் அதிகம் காணப்படுவதை

காவி மெருகூட்டியவர்கள்

இதே எம்மவர்கள்தான் என்பது தான் உண்மையும் எம்முன்னே நடப்பதுமாகும்.

அப்படிப்பார்த்தால் சீமானின் பேச்சை

சீமானை ஏன் நாம் தமிழரைவிட

அதிகமாக காவி அவற்றை பகிரங்கப்படுத்தி வலுச்சேர்த்த பெருமை எம்மவரையே சாரும்.

அப்படிப்பார்த்தால் சீமான் மீதான இவர்களின் குற்றச்சாட்டு இவர் மீதே வலுவாக பதிகிறது.

ஈழத்தமிழினத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்ட சில தம்பியிடம்

சீமானின் சில முரணான கருத்துக்கள் பற்றி எழுதி விளக்கம் கேட்டேன்.

பதில்: சீமான் செய்வது தமிழகத்துக்கான அரசியல்.

அது (எமக்கு) ஈழத்தவருக்கு புரியாதது.

புரிந்து கொள்ளவும் முடியாதது.


ஒரு கலைஞர் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு

எமது மண்ணில் உள்ளுராட்சி தேர்தலில் கூட வெல்லமுடியாது.

ஆனால் தமிழகத்தில் அவர்கள் தான் முதலமைச்சர்கள் என்றார்.

எனவே சீமானின் எமக்குத்தேவையற்ற

பொருந்தாத கருத்துக்களை

எம்மவர்கள் எம்மவர்களுக்குள் விதைப்பதை நிறுத்தினாலே போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 94
 
கதாநாயகர்களின் ஆட்டம்
 
ஒரு கதாநாயகனை நம்பி எடுக்கப்படும்
படமாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும்
அது மிக மிக ஆபத்தானதும்
கரணம் தப்பினால் மரணம் என்றவகையில் பொருத்தமற்றதாகவுமே இருக்கும்.
 
இன்று Messi ஆ?
France ஆ?
இன்னும் சில மணித்துணிகளில் தெரிந்து விடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

Messiஉம் Ronaldo வும் தங்கள் தங்கள் வீட்டுக்குள் போகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 95
 
கதாநாயகர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது
 
போன கிழமை கதாநாயகர்களின் கதை முடிவுக்கு வந்திருக்கிறது. Brésil யை தவிர.
எமக்கெல்லாம் இது விளையாட்டு.
ஆனால் Brésil போன்றவர்களுக்கு அது தான் வாழ்க்கை.
 
France க்கு சவால் விடக்கூடியவர்கள் அநேகமாக அகன்றுவிட்டுள்ள நிலையில்
நம்பிக்கை மேலும் வலுவாகிறது.
 
 
இன்னொரு சந்தோசமும் உண்டு.
 
சனிக்கிழமை போடப்பட்ட கோல்கள் 10
அதில் PSG (Paris saint Germain) வீரர்களால் போடப்பட்ட கோல்கள் 5.
 
இனி Brésil போடப்போவதும் Uruguay போடப்போவதும் நம்ம கணக்கில தானே...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 96
 
இன்று கரும்புலிகள் நாள்
 
காலையில் எழும்பும் போதே ஒருவித சோர்வு ஒட்டிக்கொள்ளும் இவர்களின் தியாகங்களுக்கும் ஏதுமற்று போனதே என.
 
ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
 
உலகில் வரலாறுகளில் இப்படியானவர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிவதில்லை
 
இவர்கள் எம் கண் முன்னே
திகதி குறித்து
இலக்கை தேடிச்சென்று மாண்டவர்கள்
எமக்கு தடையாக இருந்தவற்றை அகற்றிச்சென்றவர்கள்
 
உலக வரலாற்றில் இவை அதிசயம்
தமிழருக்கு இவர்கள் பொக்கிசங்கள்
 
 
தமிழ் உள்ளவரை
உங்கள் நினைவு இருக்கும் மாவீரரே.
 
ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
 
அதை காக்க பாதுகாக்க ஒன்றாகணும் தமிழர்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 97
 
சுமை அதிகமானாலும் சுகமே....
 
France அரை இறுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
France மிகவும் நிதானமாகவும் நாணயமாகவும் விளையாடி இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
 
தொடர்ந்து France அணி விளையாடிக்கொண்டிருந்தால் தொழில்கள் படுத்துவிடும்.
மக்கள் வெளியில் வரமாட்டார்கள்.
வீடுகளுக்குள் தஞ்மடைந்து கொள்வார்கள்.
வருமானம் என்று பார்த்தால் இது தனி நபர்களுக்கு சுமையை அதிகரிக்கச்செய்வது தான்.
 
ஆனாலும் பிரெஞ்சு மக்களின் நல்லது கெட்டதில் பங்கெடுக்கணும்.
அகதியாக ஓடிவந்த எம்மை தாங்கிய மண்ணல்லவா.
 
ஒரு நாட்டின் மகிமை அதை இழந்தவனுக்குத்தான் அதிகம் தெரியும்.
 
ALLEZ LES BLEUS !!!
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 98

பெற்றோரின் கனவுகள்

பிள்ளைகளின் படிப்பு சார்ந்து

ஒரு பெற்றோரின் கனவு ஆகக்கூடுதலாக போனால்

வைத்தியராக்குதல் அல்லது பொறியியலாளர் ஆக்குதல் தானே.

அதே நேரம் பெற்றோர்கள்

தமது பிள்ளைகளின் கல்வியை தீர்மானிப்பதை தற்போதைய உலகம் அனுமதிப்பதில்லை.

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆனால் எதற்கும் தயாராக்குதல் பெற்றோரது கடமை.

முயற்ச்சியே இல்லாத வாழ்வை பிள்ளைகளுக்கு நாம் முன் மொழிய முடியாதல்லவா.

அவ்வாறே எனது கடைசி மகள்

பிறந்ததிலிருந்தே வாசிப்பு வாசிப்பு வாசிப்பு.

புத்தகங்கள் வேண்டுமானால் அக்கா அண்ணன்மார் உட்பட உடனடியாகக்கிடைக்கும் அவளுக்கு.

புத்தகங்கள் மற்றும் வாசிப்பு மீது அலாதி பிரியம் அவளுக்கு.

அதன்படி நேற்று வந்த உயர்தர சித்தியில்

விஞ்ஞான பாடத்தில் (SVT) 19/20 எடுத்து வைத்தியப்படிப்புக்கு செல்கிறார்.

பிரான்சைப்பொறுத்தவரை வைத்தியப்படிப்பில்

முதலாவது வருடத்தில் தெரிவாகி வருவதென்பது மிகமிக கடினம்.

அதை தாண்டிவிட்டால் தான் உறுதிப்படுத்தமுடியும்.

வந்தால் மலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறேன்  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், மலையே வரட்டும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு... உங்கள் மகள்  நிச்சயம்  தனது, இலட்சியத்தில் வெற்றி பெறுவார். வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 99
 
செயல்
 
ஒரு செயலை லட்சம் எழுத்துக்கள் அல்லது பேச்சுக்கள் கூட சமனாக்கிவிட முடியாது.
 
அந்தவகையில்
என்னுடைய உறவுகள் நண்பர்கள் மற்றும் என்னுடன் தொடர்பிலுள்ளவர்கள் எவராயினும்
நான் அடிக்கடி சொல்லும் விடயம் ஏதாவது ஒரு அமைப்பில் செயற்படுங்கள் என்பது தான்.
புலிகளது காலத்தில் கூட நான் புலிகள் சார்ந்து இயங்கினாலும்
புலிகளுடன் சேர்ந்து இயங்குங்கள் என்று சொன்னதில்லை.
ஏதாவது ஒரு அமைப்பில் செயலில் இருக்கணும்.
 
அந்த செயல் என்பது
தாயகத்தின் விடுதலை அல்லது அபிவிருத்தி சார்ந்து இருந்தால் போதுமானது.
எமக்குள் வெவ்வேறான மாற்றுக்கருத்துக்கள் இருந்தபோதும்.
எனது ஊர் சார்ந்தும் அங்குள்ள அமைப்புக்கள் சார்ந்தும் எனது கருத்தும் வேண்டுகோளும் அது தான்
யார் குற்றியும் அரிசியானால் சரி என்பதே எனது எதிர்பார்ப்பு.
 
எனவே தாயகத்திலோ ஊரிலோ புலத்திலோ
ஏதாவது ஒரு அமைப்பில் அங்கத்தவராகி செயல்ப்பாட்டாளராக மாறுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.
அவ்வாறு மட்டுமே உங்களால்
உங்களது செயற்திறனை காட்டுவதுடன் மட்டுமன்றி
உங்களது கருத்துக்களுக்கும் உங்களது ஆலோசனைகளுக்கும்
அந்த அமைப்பை செவி சாய்க்க செய்யமுடியும். சீரமைக்க முடியும் (தவறுகள் இருந்தால்)
 
மற்றும்படி எந்த அமைப்பிலும் இல்லாது
வெறும் முகநூல் லைக் விரும்பிகளாக
மேடைப்பேச்சாளர்களாக வலம் வருவோர்
அல்லது உள்ள அமைப்புக்களுக்குள் வெளியிலிருந்து குற்றம் பிடிப்போர்
என்னைப்பொறுத்தவரை கையாலாகாதோர்.
 
எதையாவது செய்து மக்களுக்கு சோறு போட முயலும் போது
அதை தட்டிவிடும் எவரும் மனிதர்களாக இருக்கமுடியாது.
மன்னிக்க முடியாதவர்கள் அவர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 100

தொடர்ந்து சீரியசாக மட்டும் பேசப்படாது.

எங்கள் ஐனாதிபதிக்கு

வாரிசில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இன்றுடன் தொலைந்தது எனக்கு.

நன்றி உலகக்கோப்பை அமைப்பினருக்கு.

L’image contient peut-être : une personne ou plus
L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, personnes debout
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 101
 
பிரான்சும் இங்கிலாந்தும் - மொழிப்போர்
 
இரு நாடுகளுக்குமிடையிலான மொழிப்போர் என்பது
நீண்ட வரலாற்றைக்கொண்டது.
ஒருமுறை ஐரோப்பிய பயணம் வந்திருந்த
தமிழக பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதியிருந்தார்
இரு நாட்டுக்குமிடையே 1 மணித்தியால விமான பயணம் தான்.
ஆனால் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் பிரெஞ்சு மக்கள் பேச மாட்டார்கள். தெரியாது என்று.
சிறு வயதில் வாசித்த இதை நான் பிரான்சுக்கு வந்தபோது கண்டேன்.
 
ஆனால் காலங்களும் உலக மாற்றங்களும்
இன்று மாறுதல்களை ஊட்டிச்செல்கின்றன.
அதையும் பார்க்கின்றோம்.
 
இந்த இரு நாட்டவர்களும் மாறிவிட்டாலும்
இந்த இடையில் புகுந்தவர்கள்
அதிலும் எம்மவர்கள்
இதை தற்பொழுதும் அதி தீவிரத்தோடு காவித்திரிவதை
கடந்த உலகக்கோப்பை உதைபந்தாட்டத்தில் காண முடிந்தது.
 
எனக்கு இங்கிலாந்தின் மீது தீராத கோபமும் அடங்காத பகையுமுண்டு.
அது எனது இனத்தை அடிமைகளாக விற்றுச்சென்றது சார்ந்தது.
அதற்கு பரிகாரம் தேடாது மேலும் மேலும் சிங்களத்துக்கு உதவிகளும் காப்பாற்றுதல்களை செய்வதும் சார்ந்தது.
ஆனால் இவர்களுக்கு பிரெஞ்சின் மீது என்ன காட்டம் என்று புரியவில்லை.
எவர் வென்றாலும் பரவாயில்லை
ஆனால் பிரெஞ்சு தோற்கணும் என்பதே இங்கிலாந்திலுள்ள பலரின் நினைப்பாக இருந்தது.
அதில் ஒருத்தர் எழுதியிருந்தார் பிரெஞ்சுக்காரர்கள் வென்றாலும் ஆங்கிலத்தில் தான் அங்கு பேசவேண்டும் என்று.
இது மொழி வெறியன்று வேறேது.
தன்னையே அறியாதவர்கள்
 
இவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும்????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 102
 
தமிழகத்தில் இனி...?
 
சுப்பர் சிங்கரில் நாட்டுப்புறக்கலைஞர் செந்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
 
உண்மையில் குரல் வளம் மற்றும் இசைத்திறமை சார்ந்து பலர் இவரைவிட முன்னணியில் இருந்தபோதும் செந்திலே மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
 
இது தமிழகத்தின் இன்றைய மற்றும் அடுத்த கட்டநிலையை தெளிவாக சொல்லிநிற்கிறது.
 
தமிழகத்தில் தமிழனைத்தவிர எவரும் இனி வரமுடியாது என்பதே அது.
 
இந்தநிலையை இளைஞர்களே ஏற்படுத்தி வருகின்றனர் . சென்ற தலைமுறை முடிவுடன் தமிழக இளைஞர்கள் தேர்தல்களிலும் இதை வலுப்படுத்தி தமிழகத்தை தமிழன் ஆளும் நிலையை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.
 
இதற்கு நாம் சீமானுக்குத்தான் அதிகம் நன்றி சொல்லணும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 103
 
ஒரு மக்கள் அமைப்பு எவ்வாறு உருவாகணும் செயலாற்றணும்
 
தாயகத்திலோ ஊரிலோ புலத்திலோ
ஒரு மக்கள் சார்பான அமைப்பை உருவாக்கும் போது
அடித்தளத்தை எவ்வாறு உருவாக்குதல் என்பது மிக மிக முக்கியம்.
 
அதன்படி அதன் முதற்படியாக
1)அங்கத்தவரை சேர்த்தல்
2)பொதுக்கூட்டத்தை கூட்டி
நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்தல்
3)அந்த நிர்வாக்குழுவினால் அமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு வங்கி திறக்கப்படுதல்
4)அங்கத்தவர்களை சந்தாதாரர்களாக மாற்றுதல்
5)அதனைத்தொடர்ந்து
வணிகர்களை செல்வந்தர்களை உத்தியோகத்தவர்களை நிலையான மாத வருமானம் பெறும் ஊழியர்களை அணுகி
அவர்களது பங்களிப்புக்களை உறுதி செய்தல்
6)திட்டங்களை தயாரித்து மக்கள் முன் வைத்தல்
 
பொது வாழ்வில் என் அனுபவப்படி
இவையே ஒரு அமைப்பை உருவாக்கும் அடிப்படை நடவடிக்கைகள்.
இப்படி ஆரம்பிக்கப்படும் அமைப்புக்கள் தான்
மக்களது நம்பிக்கையையும் ஏனைய அமைப்புக்களின் அனுசரணையையும் பெறமுடியும்.
 
அந்தவகையில் தற்பொழுது எமது ஊரில்
புங்குடுதீவு பசுமைப்புரட்சி குழுமம் என்ற அமைப்பு
இந்த அடிப்படையில் தொடங்கி சரியாக பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
இதன் அடுத்த கட்டமாக
தம்மால் சேர்க்கப்படும் பணத்துக்கும் மேலாக
அவர்களது செயற்த்திட்டம் இருந்தால்
ஏனைய சகோதர அமைப்புக்களிடம் திட்டத்தை சமர்ப்பித்து
தேவையான மிகுதி பண உதவியை நாடலாம்.
நாடணும்.
அதுவே மண்ணை நேசிப்பவர்களின் அவாவும் செயலுமாகும்.
காத்திருக்கின்றோம். செயலால் ஒன்றிணைவோம்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 104
 
கனவுகள் மெய்ப்படும் ஆனால்...??
 
 
ஒருவருடைய கனவு அல்லது இலட்சியம் நிறைவேற
சில தலைமுறைகள் காத்திருக்கணும் என்பர்.
அந்தவகையில் சில கனவுகள் அடுத்த அடுத்த தலைமுறையில்
நனவாகியதை கண்டிருக்கின்றோம்
சில கனவுகள் நிறைவேறிய போது அது யாருடைய கனவு என்பதை அறியாமலிருப்போம்.
நான் அறிந்த கனவை அவன் இல்லாதபோதும் நினைவூட்டுவதற்காக இந்தப்பதிவு.
நமக்கு எழுதமுடியும் போது அல்லது உயிரோடிருக்கும் போது சிலவற்றை பதியணும் என்பதற்காகவே எழுதவந்தேன் நான்.
 
 
என்னோடு புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் படித்தவன் Krishnakumar.
அவனுக்கு பட்டப்பெயர் DMO என்பது.
தான் ஒரு நாள் வைத்தியராவேன் என அவன் கூறியதால் அப்பட்டப்பெயர் அவனுக்கு வந்தது.
சிலர் இதை வைத்து அவனை கேலி செய்தபோதும் அவன் அது பற்றி அலட்டிக்கொண்டதில்லை.
 
நேற்று ஒரு பதிவு பார்த்தேன்.
அதில் அவனது மருமகள் வைத்தியராகிய செய்தி வந்திருந்தது.
மாமாவின் கனவை மருமகள் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.
ஆனால் அவனது கனவு மருமகளால் அடையப்பெற்றுள்ளது. நன்றி தாயே.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.