Jump to content

போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்!


Recommended Posts

போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்!

 பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட்  அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது.

பெயிண்ட்

 

கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் விண்டோஸ் 10 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காகக் கூடுதல் வசதிகளுடன் சில அப்டேட்களையும் அறிமுகப்படுத்தியது. இந்த விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்டில் கடந்த 32 வருடங்களாக உபயோகத்தில் இருந்த பெயின்ட் அப்ளிகேஷன் ப்ரோகிராமை நீக்கையுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ‘பெயின்ட்’, 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/96670-microsoft-windows-10-removed-paint-application-by-the-next-version.html

Link to comment
Share on other sites

விண்டோஸ் ஸ்டோரில் பெயின்ட் செயலி இலவசமாக கிடைக்கும்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் பயன்தரும் செயலியாக இருக்கும் பெயினட் விரைவில் எலிமினேட் செய்யப்பட இருந்த நிலையில், விண்டோஸ் ஸ்டோரில் இந்த செயலி இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
விண்டோஸ் ஸ்டோரில் பெயின்ட் செயலி இலவசமாக கிடைக்கும்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு
 
வாஷிங்டன்:
 
மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் வருங்கால அப்டேட்களில் இருந்து பெயின்ட் செயலி நீக்கப்படுவதாக தகவல் வெளியானது. இண்டர்நெட் முழுக்க எதிர்ப்பு அலைகளையும், வாடிக்கையாளர்கள் தங்களது வருத்தத்தை பதிவிட்டு வந்த நிலையில் பெயின்ட் செயலி விண்டோஸ் ஸ்டோரில் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
'எம்.எஸ். பெயின்ட் பிரியர்கள் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: உண்மையான ஆர்ட் செயலி எங்கும் செல்லவில்லை - விண்டோஸ் ஸ்டோரில் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும்.' என மைக்ரோசாப்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் உடன் பெயின்ட் 3D செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியும் தொடர்ந்து விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும், இதற்கு தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கப்படும். 
 
புதிய 3D அம்சங்களோடு மட்டுமில்லாமல், பெரும்பாலான எம்.எஸ். பெயின்ட் அம்சங்களும் புதிய செயலியில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் விரைவில் எதிர்பார்க்கப்படும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் 1985-ம் ஆண்டில் வெளியான எம்.எஸ். பெயின்ட் செயலி இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது.
 
பிரபலமான பெயின்ட் செயலி இமேஜ் எடிட்டிங் செய்ய அதிகம் ஒத்துழைக்காது என்றாலும் இந்த செயலி கொண்டு எளிமையான கட் மற்றும் பேஸ்ட் உள்ளிட்டவற்றை செய்ய முடியும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/26101044/1098560/Microsoft-Paint-is-not-dead-to-be-available-for-free.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.