Jump to content

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு


Recommended Posts

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

 
நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு
 

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தே நபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

http://uthayandaily.com/story/13666.html

Link to comment
Share on other sites

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

nallur.jpg

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா . இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்வாறு சரணடைந்த நபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் எனவும்  39 வயதான சிவராசா ஜெயந்தன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 1994ஆம் ஆண்டு 16 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துக்கொண்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

http://www.virakesari.lk/article/22303

Link to comment
Share on other sites

நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகம்! யாழ். பொலிஸில் சரணடைந்தவரின் பின்னணி என்ன?

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரிடம் சரணடைந்திருந்தார்.

பொலிஸாரினால் தீவிரமான தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

39 வயதான சிவராசா ஜயந்தன் என்ற பிரதான சந்தேகநபரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.

யாழ். நல்லூர் இவருடைய சொந்த இடம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் 1994ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார். அதன் பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகியிருந்தார்.

2012ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா ஜயந்தன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவ்வாறு பிணையிலுள்ள நிலையிலேயே அவர் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த நபருக்கு முதலாவது திருமணம் மண்கும்பான் என்ற இடத்திலும், இரண்டாவது திருமணம் புங்குடுதீவிலும் நடைபெற்றுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/security/01/153127?ref=home-feed

Link to comment
Share on other sites

சுடச்சொன்னார் சுட்டேன் சந்தேகநபர் வாக்குமூலம்

 
சுடச்சொன்னார் சுட்டேன் சந்தேகநபர் வாக்குமூலம்
 

நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது. இவ்வாறு இன்று காலை சரணடைந்த பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://uthayandaily.com/story/13723.html

Link to comment
Share on other sites

இவர் நீதிமன்றத்தில் சரணடையாது, போலீசில் சரணடைந்தது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், இது போலீசாரின் திட்டமிட்ட நாடகம் என்பதை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அவர் வழங்கியதாக கருதப்படும் வாக்குமூலம் சந்தேகங்களை உறுதிசெய்கிறது. இவர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்பது சோடிக்கப்பட்ட கதை என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

 நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.

 

Link to comment
Share on other sites

நல்லூர் சூட்டுச் சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

 
நல்லூர் சூட்டுச் சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்
 

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் யாழ். நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன்.

சந்தேக நபர் இன்று நீதிவானின் இல்லத்துக்குப் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டு, முற்படுத்தப்பட்டார். அதன்போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

 

http://uthayandaily.com/story/13862.html

Link to comment
Share on other sites

நல்லூர் சூட்டு சம்பவம் – சரணடைந்தவருக்கு விளக்கமறியல்

a-2-2.png


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யா.நீதவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவு இட்டுள்ளார்.

யாழ்.நீதவானின் வாசஸ்தலத்தில் குறித்த நபரை இன்று மாலை யாழ்.போலீசார் முற்படுத்திய  போது அவரை 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு இட்டார்.

இன்றைய தினம் குறித்த சந்தேக நபர் பதுங்கி இருந்த இடத்திற்கும் அவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அதேவேளை பொலிஸ் விசாரணையில் தன்னுடைய மச்சான் (ஏற்கனவே கைதான நபர்) பொலிசாரின் (நீதிபதியின் மெய்பாதுகாவலர் ) துப்பாக்கியை பறிக்க முடியுமா என சவால் விட்டார் எனவும் அதனாலையே பறித்ததாகவும் அதன் போது அது தவறுதலாக வெடித்து விட்டது  என வாக்கு மூலம் அளித்து இருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

a-1-1.png

http://globaltamilnews.net/archives/34186

Link to comment
Share on other sites

 

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் தடயங்களை காண்பிப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்...

Link to comment
Share on other sites

5 hours ago, hasan said:

 நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.

 

பார்த்த, அனுபவித்த சம்பவத்தை ஒருவர் விபரிக்கும் போது எப்படி பொய்யென உங்களால் கூற முடிகிறது. சுட்டவர் போதையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.(எங்களின் பத்திரிகை செய்திகளின் படி). அப்போ ஏன் மெய்பாதுகாவலரை சுட்டார்?? முன்பு கொழுவல் இருந்ததா மெய்பாதுகாவலருடன்?? 

பதட்டமான சூழல் சுட்டவருக்கு தானே இருந்தது. எனவே அவர் எதுவும் செய்திருக்கலாம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, hasan said:

 நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.

 

நீதிபதியின் வாக்குமூலத்தில்  துப்பாக்கியை லோட் பண்ணிய முறையே  ஒரு தேர்ந்த துப்பக்கிதாரியின் கைவண்ணம் என்று கூறியிருக்கிறார் 
ஆனால் சுட்டவர் அது தவறுதலாக வெடித்துள்ளது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் .
சுட்டவர் வாக்குமூலம் எங்கோ நொண்டுகிறதே . லோட் பண்ணியபின் எப்படி துப்பாக்கி தவறுதலாக வெடிக்கும் ....?
லோட் பண்ணுவதே துப்பாக்கியை வெடிக்கத்தானே ...?

Link to comment
Share on other sites

நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: சுவிஸ் குமாருக்கும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு?

 


நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: சுவிஸ் குமாருக்கும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு?
 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபராக அடையாளங்காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சரணடைந்த சந்தர்ப்பத்தில், யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் யாழ். நீதவான் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுப்புக்காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதென இன்றைய தினக்குரல் பத்திரிகை செய்தி வௌியிட்டிருந்தது.

இதன் காரணமாகவே நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதாக தினக்குரல் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியபோது அவர் அதனை மறுத்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் பிரேமச்சந்திர, உப பொலிஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் சிலாபம் குமாரகட்டுவ பிரதேசத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை (26) இடம்பெறவுள்ளன.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் இன்று காலை அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று பிற்பகல் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் பிரேமச்சந்திரவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/107960/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தது யாரோ அப்பாவி.. அவரின் மனைவி சொல்வது தான் உண்மை.

இது நீதிபதியை இலக்கு வைச்சு நடத்தட்ட அரச பயங்கரவாதத் தாக்குதல். அது தோல்வியில் முடிந்ததும்.. பல வகையில்.. அது நிகழ்ந்தது முதல் திசை திருப்பலில் சிங்கள காவற்படையும் அரசும் செயற்பட்டு வருகிறது. இதில மகிந்த ஆட்களின் பின்புலமும் இருக்க வாய்ப்புள்ளது.

ஏலவே யாழ் நீதிமன்றம் மீது ஒட்டுக்குழுக்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தி விட்டு முன்னாள் போராளிகள் மீது பழிபோட்டது போலத்தான் இதுவும். :rolleyes:

Link to comment
Share on other sites

நீதிபதி இளஞ்செழியன் விவகாரம் : பிரதான சந்தேகநபர் சரண்

p14-0de439773d9b25ef38ef705d0f7d95b34289b90b.jpg

 

8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­வலர் ஒரு­வரின் உயிரைப் பறித்து மற்­றொ­ரு­வ­ருக்கு காயத்தை ஏற்­ப­டுத்­திய துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் யாழ். பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்த நிலையில் நேற்று கைது செய்­யப்பட்டார்.

நேற்று காலை 7.00 மணி­ய­ளவில் 39 வய­து­டைய செல்­வ­ராசா ஜயந்தன் எனும் குறித்த சந்­தேக நபர் சர­ண­டைந்­த­தா­கவும் அத­னை­ய­டுத்து அவரைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இந் நிலையில் கைது செய்­யப்பட்ட சந்­தேக நப­ரிடம் யாழ். தலை­மை­யக

பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி காமினி ஹேவா­வித்­தா­ரன தலைமை­யி­லான சிறப்புக் குழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

நல்லூர் கோயில் பகு­தியில் நான் மது­போ­தையில் நின்­றி­ருந்தேன். அப்­போது எனது மச்சான் (ஏற்­க­னவே கைதாகி உள்­ளவர்), உந்தப் பொலிஸை (நீதி­ப­தியின் மெய்ப்­பா­து­கா­வலர்) உன்னால் சுட­மு­டி­யுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவ­ரது பிஸ்­டலை எடுத்தேன். அது சுடு­பட்டு விட்­டது என சந்­தேக நபர் விசா­ர­ணை­களின் போது பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவ­ரது வாக்கு மூலத்தில் உள்ள விட­யங்­களை உறுதி செய்ய தொடர்ந்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பில் 8 வரு­டங்­க­ளாக இணைந்து செயற்­பட்டு ஆயுத பயிற்சி பெற்­ற­வரே பிர­தான சந்­தேக நபர் என்­பது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் சரணடைந்துள்ள பிர­தான சந்­தேக நபர் ஏற்­க­னவே 2012 ஆம் ஆண்டு கோப்பாய் பகு­தியில் இடம்­பெற்ற படு கொலை ஒன்றின் சந்­தேக நபர் எனவும், அது தொடர்பில் அவர் பிணையில் இருந்து வரு­வதும் மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் சிறப்புக் குழுவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்த கொலை தொடர்பில் ஒவ்­வொரு மாதமும் அவர் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் கையொப்­பமி­டு­வதும், எற்­க­னவே கைது செய்­யப்பட்ட இரு­வரும் கூட அந்த கொலை தொடர்­பி­லான சந்­தேக நபர்­களே என்­பதும் விசா­ர­ணைகளில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

 இந்த நிலையில் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் மூன்று சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றன.

 பிர­தான சந்­தேக நபர் கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் சந்­தேக நபர் தொடர்பில் பல தக­வல்கள் பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

 குறித்த சந்­தேக நபர் 1996 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­துள்­ளதுடன் அங்கு ஆயுதப் பயிற்­சியைப் பெற்று 2004 ஆம் ஆண்டு வரை அந்த இயக்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­டுள்ளார். பின்னர் அந்த இய­கத்தில் இருந்து வில­கி­யுள்ள அவர் திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும், சந்­தேக நப­ருக்கு 6 பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. முதல் மனைவி மூலா­மாக நான்கு பிள்­ளை­களும் இரண்டாம் மனைவி ஊடாக இரு பிள்­ளை­களும் சந்­தேக நப­ருக்கு உள்­ள­தா­கவும் சந்­தேக நபர் தொழில் ரீதியில் பஸ் சார­தி­யாக செயற்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபரின் சகோ­தரர், உற­வுக்­கா­ரர்­க­ளான 42 வய­தான பால­சிங்கம் மகேந்­திர ராசா, 49 வய­து­டைய செல்­வ­ராசா மகேந்­திரன் ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் மற்றும் ஏனைய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய மேற்­படி தக­வல்­களை பொலிஸார் சேக­ரித்­துள்­ளனர்.

கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.10 மணி­ய­ளவில் நல்லூர் பகுதியில் இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் பதி­வா­கி­யி­ருந்­தது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-26#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.