Jump to content

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்


Recommended Posts

நல்லூர் பெருந்திருவிழா நாளை – கொடிச் சீலை கொண்டுவரப்பட்டது

 
நல்லூர் பெருந்திருவிழா நாளை – கொடிச் சீலை கொண்டுவரப்பட்டது
 

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்து செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அடைந்தது.

செங்குந்தர் பரம்பரையைச் சேர்ந்தோர் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

FB_IMG_1501135894719.jpg

 

http://uthayandaily.com/story/14147.html

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

 

 

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

nallur.jpg

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

20289994_10207857833838485_1963614652_n.

நல்லூரிலுள்ள செங்குந்தர்  மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20403785_10207857833958488_2144331323_n.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதமொன்றின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

20403715_10207857833878486_412289788_n.j

ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

20403509_10207857833798484_1712284147_n.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20403368_10207857833758483_1204433137_n.

 

Tags

http://www.virakesari.lk/article/22379

Link to comment
Share on other sites

நல்லூர் கொடியேற்றம்
 

image_79cff7296a.jpg

எம்.றொசாந்த்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், இன்று (28) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 06 ஆம் திகதி மாலை  மஞ்சத்திருவிழாவும், 12 ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், மாலை கார்த்திகை உற்சவமும், 16 ஆம் திகதி சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், 17 ஆம் திகதி காலை கஜவல்லி - மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமானமும் (தங்கரதம்) உற்சவமும் 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 19 ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 20 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21 ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், 22 ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.

image_dd9d4fcdf0.jpgimage_ce80f4dd74.jpgimage_98ba02868c.jpgimage_590f84fd79.jpgimage_e51a758d1d.jpgimage_a9c4e42650.jpgimage_ff7df17106.jpg

 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நல்லூர்-கொடியேற்றம்/46-201421

Link to comment
Share on other sites

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்   இன்று (03.08.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி..

Link to comment
Share on other sites

பல்லாயிரம் பக்த அடியார்களின் அரோகரா திருவொலியுடன் திருமஞ்சம் ஏறிவந்தான் கந்தன்!

 
 
 
 
598729bd4fbc3-IBCTAMIL.jpg
598729bd66990-IBCTAMIL.jpg
 
 
 
 
598729bd27ba3-IBCTAMIL.jpg
598729bd4fbc3-IBCTAMIL.jpg
598729bd66990-IBCTAMIL.jpg
598729bd84934-IBCTAMIL.jpg

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் பத்தாம் நாள் திருமஞ்சத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூரானின் திருவிழாவில் தினம் தோறும் சிறப்புப் பூசைகள் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றன. இந்நாட்களில் கந்தனின் வெளி வீதியுலா தரிசனத்தை காண நாள் தோறும் பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் நல்லைக் கந்தனின் திருவருளைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான பக்த அடியார்கள் ஆலயத்தில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/nallur-thirumancham

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.