Jump to content

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்


Recommended Posts

  • Replies 58
  • Created
  • Last Reply

நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட் கொண்டுவரும், நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 01

 

Link to comment
Share on other sites

‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா

 
 
‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்.மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினால் ‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா நல்லூரில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

மாநகர சபையின் ஆணையாளரும், சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ. வாகீசன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

மலரை மலரின் பதிப்பாசிரியரும், பத்திரிகை ஆசிரியருமான ந.விஜயசுந்தரம் வெளியிட்டு வைக்க தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் நிர்வாகச் செயலாளர் மலரின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

http://newuthayan.com/story/19671.html

Link to comment
Share on other sites

நல்லூர்த் திருவிழாவில் நாடகத் திருவிழா

 
நல்லூர்த் திருவிழாவில் நாடகத் திருவிழா
 

பக்­தர்­க­ளின் அரோ­கரா முழக்கம், கற்­பூ­ர­தீ­பத்­தின் கரும்­பு­கை­, தேங்­காய்ச்­சி­த­றல்­கள், வியா­பா­ரி­க­ளின் கூவி­ய­ழைக்­கும் குரல் கள், வண்­ண­வண்ண உடை­க­ளில் உலா­வ­ரு­கின்ற குழந்­தை­கள் என நல்­லூ­ரின் விழாக்­கோ­லம் ஒரு­பக்­கம் நிகழ்ந்­து­கொண்­டி­ ருக்­க வாத்­தி­யக்­க­ரு­வி­க­ளின் ஓசை, ­ வேட­உ­டை­கள், வண்­ண­வி­ளக்­கு­கள், ரசி­கர்­கள், ஆற்­று­கை­யா­ளர்­கள் என ஒரே மேடை­யில் குழந்­தை­கள் பெரி­ய­வர்­கள் என மற்­றொரு பக்­கம் குதூ­க­லித் துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

ஐந்து வரு­டங்­க­ளாக தொடர்ந்து இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் நல்­லூர் நாட­கத் திரு­விழா இந்த வரு­ட­மும் திரு­வி­ழாக்­கோ­லம் கொண்டு களை­கட்டி வரு­கின்­றது. நல்­லூர்த் திரு­வி­ழாவை பக்­தர்­கள் எப்­ப­டிக்­கொண்­டா­டு­கி­றார்­களோ அப்­ப­டித்­தான் நல்­லூர் நாட­கத் தி­ரு­வி­ழா­வை­யும் நாட­கத்­தின்­பால் ஈர்ப்புக்­கொண்ட ரசி­கர்­க­ளும், பெற்­றோர்­க­ளும், குழந்­தைக­ளும் ஒரு திரு­வி­ழா­ வைப் போல கொண்­டாடி வரு­ கின்­ற­னர். வரு­டா­வ­ரு­டம் நல்­லூர் திரு­விழா நடை­பெ­று­கின்ற அதே காலத்­தில் நல்­லூர் குறுக்­கு ­வீ­தி­யில் அமைந்­தி­ருக்­கின்ற செயல் திறன் அரங்க இயக்­க­தத்­தின் திறந்­த­வெளி பஞ்­ச­பூத அரங்­கில் தொடர்ந்து பத்து நாள்கள் பல்வேறு ­வ­கை­யான நாட­கங்­கள் மேடை­யேற்­றப்­பட்டு வரு­வது வழமை. அந்த அடிப்­ப­டை­யில் இந்­த­வ­ரு­ட­மும் கடந்த 09.08. 2017 அன்று தொடக்­கம் 18.08.2017 வரை­யான பத்து நாள்க­ளும் பல்­வே­று­வ­கை­யான நாட­கங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

சிறு­வர் நாட­கங்­கள் சமூ­க­நா­ட­கங்­கள், பாரம்­ப­ரி­யக்­கூத்து நாட­கங்­கள், வேட­முக நாட­கங்­கள், நகைச்­சுவை நாட­கங்­கள் என மேடை­யேற்­றப்­பட்டு வரு­கின்­றன. இரவு 7.15 மணி­தொ­டக்­கம் 09.30 வரை இடம்­பெற்று வரும் இந்த நா­ட­கத்தி ருவி­ழா­வில் ஆல­யப்­பக்­தர் கூட்­டம்­போல் நாட­கப்­பக்­தர் கூட்­டம் அலை­மோ­து­கின்­ற­தைக் காண­லாம்.

நாட­கங்­க­ளும் அவை பேசும்
கதை­க­ளும் : பஞ்­ச­வர்ண நரி­யார்

குழந்தை ம.சண்­மு­க­லிங்கத்தின் எழுத்­து­ரு­வில் உரு­வான பஞ்­ச­வர்ண நரி­யார் சிறு­வர் நாட­கம் கடந்த 30 வரு­டங்­க­ளை­யும் தாண்டி அதே பொலி­வு­டன் இன்­றும் சிறு­வர்­க­ளைக் கொள்­ளை­கொண்டு மகிழ்­வித்­துக்­கொண்­டி­ருக்­கும் ஓர் நாட­க­மாக பஞ்­ச­பூத அரங்­கில் மேடை­யேறி வரு­வது குறிப்­பி­டத்­தக்க ஒன்று. காட்­டி­லி­ருந்து வழி­மாறி நாட்­டுக்­குத் தப்­பி­வ­ரும் நரி ஒன்று வண்­ணம் மாறி மீண்­டும் காட்­டுக்­குச் சென்று தந்­தி­ரத்­தால் மற்ற மிரு­கங்­களை ஏமாற்றி அவற்­றுக்­குத் தலை­வ­னாகி மீண்­டும் தன் சாயம் வெளுத்­த­வு­டன் என்­ன­வா­கி­றார் என்­ப­தைக்­கூ­றும் தந்­தி­ரக் கதையை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ‘பஞ்­ச­வர்ண நரி­யார்’ நாட­கம் பெருத்த வர­வேற்­பு­டன் மேடை­யேறி வரு­கி­றது.

 

20729460_10155600697826730_2643087904446

ஏகாந்­தம்

போரின் சுழ­லுக்­குள் அகப்­பட்டு ஒவ்­வொரு விதத்­தி­லும் பாதிக்­கப்­பட்ட எமது வாழ்க்கை முறை­யில் கண்­டு­கொள்­ளப்­ப­டாத வலி­யின் ஒரு­ ­பக்­கத்­தைக் கூறு­கின்­றது ஏகாந்­தம் நாட­கம். போர்ச் சூழ்­நி­லை­யில் பல்­வேறு கார­ணங்­க­ளால் தமது பெற்­றோரை விட்டு தம்மை பாது­காத்­துக்­கொள்ள புலம் பெ­யர்ந்து சென்­ற­வர்­கள் தாம் குடி­யே­றிய நாடு­க­ளின் வாழ்க்கை முறைக்­குள் அகப்­பட்டு விடு­ப­ட­மு­டி­யாத ஓர்இ றுக்­கத்­துக்­குள் தள்­ளப்­பட இன்று தனி­மையில் விடப்­பட்ட அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளின் மன உணர்­வு­களை பேசு­கின்­றது ஏகாந்­தம்.

அரங்­கி­ய­லில் ஓர் முயற்­சி­யாக வேட­மு­கத்­தை­யும் நிழல்­பா­வை­யை­யும் இணைத்து கதை­சொல்­லப்­ப­டு­வது இந்த நாட­கத்­தின் மேலு­மொரு சிறப்­பெ­ன­லாம்.

கூடி விளை­யாடு பாப்பா

இது­வும் குழந்­தை­க­ளுக்­காக பெரி­ய­வர்­க­ளால் ஆற்­றுகை செய்­யப்­ப­டு­கின்ற ஓர் சிறு­வர் நாட­கம். மழைக்­காக வீட்­டின்
கூ­ரை­யொன்­றில் ஒதுங்­கி­யி­ருக்­கும் சேவ­லொன்றை தன்­னு­டைய இரை­யாக்­கிக் கொள்ள துடிக்­கும் நரி ஒன்­றிற்கு ஏற்­ப­டு­கின்ற விப­ரீ­தத்தை மிக அழ­காக குழந்­தை­கள் மொழி­யில் பேசு­கின்ற இந்த நா­ட­க­மும் சிறு­வர் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்­பைப்­பெற்று மேடை­யேறி வரு­கின்­றது.

சிங்­கப்­பூர் டொக்­டர்

பேரா­சி­ரி­யர் நந்­தி­யின் எழுத்­து­ரு­வில் உரு­வான ‘சிங்­கப்­பூர் டொக்­டர்’ நகைச்­சுவை நாட­கம் நீண்ட வரு­டங்­க­ளுக்­குப் பின்­னர் மீண்­டும் மேடை­யே­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. சிங்­கப்­பூர் மருத்துவமனை யில் தாதி­ய­ராக வேலை­செய்த இரு­வர் தாய்­நாட்­டுக்­குத் திரும்பி வந்து தம்மை மருத்துவர்களாகச் சித்­த­ரித்து மற்­ற­வர்­களை நம்­ப­வைத்து ஏமாற்றி கடை­யி­சி­யில் என்­ன­வா­கி­றார்­கள் என்­பதை நகைச்­சு­வை­யாக பேசும் இந்த நா­ட­கம் பார்­வை­யா­ளர் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்­பைப்­பெற்று மேடை­யேறி வரு­கின்­றது.

பொம்­ம­லாட்­டம்

எம்­மி­ட­மி­ருந்து தொலைந்து போன பொம்­ம­லாட்­டக் கலை­யை­யும் நிழல்­பா­வைக் கூத்­தை­யும் ஒன்­றி­ணைத்து ஓர் புதிய வகை ஆற்­றுகை வடி­வில் உரு­வாகி மேடை­யேற்­றப்­பட்­டு­வ­ரும் பொம்­ம­லாட்­டம் நாட­கம் சிறு­வர்­க­ளைக் கொள்­ளை­கொண்ட ஓர் ஆற்­றுகை வடி­வ­மாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. ‘பாட்டி’ எனும் பொம்­ம­லாட்ட நாட­கத்­தில் வடை­சுட்டு பிழைப்பை நடத்­தும் பாட்டி தன்­னு­டைய பேரக் கு­ழந்­தை­க­ளைக் காண ஊருக்­குச் செல்­லும் போது இடை­யில் காட்டு வழி­யில் எதிர்ப்­ப­டும் மிரு­கங்­க­ளிட­மி­ருந்து எப்­படி தந்­தி­ர­மாக தப்­பிக்­கின்­றாììர் என்­பதை மிகச் சுவா­ரஸ்­ய­மாக பேசும் இந்த நாட­கம் சிறு­வர்­க­ளுக்கு ஓர் புதிய அனுப­வத்தைக் கொடுத்­தி­ருந்­தமை சிறப்பு.

ஒரு மோட்­டார் சைக்­கி­ளும் ஒன்­பது பேரும் சிறு­வர்­க­ளுக்­காக சிறு­வர்­கள் ஆற்­று­கை­யில் உரு­வான ‘பசு­வும் புலி­யும்’ நாட­கம் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கவர்ந்­தி­ருந்­தமை குறிப்­பிட்­டுச்­சொல்­ல­வேண்­டிய ஒன்று.

தே.தேவா­னந்தின் எழுத்­து­ரு­வி­லும் நெறி­யாள்­கை­யி­லும் உரு­வான இந்­நா­ட­கம் சிறு­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கு­ இடை­யி­லான நெருக்­கத்­தை­யும் உணர்­வு­க­ளை­யும் மிக அழ­கா­கப் பேசி­யி­ருந்­தது. இன்­றைய அவ­சர உலக ஓட்­டத்­தில் எந்­திர கதி­யில் அனை­வ­ரும் ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

பெற்­றோர் குழந்­தை­க­ளைப் படிப்­பிப்­ப­தில் மாத்­தி­ரமே கவ­ன­மா­யி­ருப்­ப­தும் அவர்­க­ளின் சின்ன உல­ கைப் புரிந்து கொள்­ளா­மை­யை­ யும் அவர்­கள் தமக்­கான உலகை தொலைக்­காட்சி தொடர்­க­ளில் தோன்­றும் சாகச கதா­பாத்­தி­ரங்­க­ளோடு உரு­வாக்­கிக் கொள்­வ­தை­யும் அதி­லி­ருக்­கும் ஆபத்­துக்­க­ளை­யும் மிக பொறுப்­பு­ணர்­வோடு பெற்­றோ­ரி­டம் கொண்டு சேர்த்­த­தில் இந்த நாட­கம் கவ­னம் பெற்­றமை சிறப்பு.

 

2-2.jpg

அரிச்­சந்­திர மயான காண்­டம்

இவை­க­ளுக்கு மத்­தி­யில் பாரம்­ப­ரி­யக் கலை­யான கூத்­து­நா­ட­க­ மான அரிச்­சந்­திர மயான காண்­டம் இசை நாட­கத்­தினை நாட்­டார் வழக்­கி­யற் கழ­கம் வழங்­கி­யி­ருந்­தது. இன்று அரு­கிப்­போ­யும் அடுத்த தலை­மு­றை­யி­னரிடம் சென்று சேரா­ம­லும் போய்க்­கொண்­­டி­ருக்­கும் கூத்­திசை நாட­ கக் கலையை இன்­று­வ­ரை­யி­லும் தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்ற நாட்­டார் வழக்­கி­யற் கழ­கத்­தின் மயா­ன காண்­டம் கூத்­திசை நாட­கம் சிறு­வர் முதல் பெரி­ய­வர் வரை­யில் அனை­வ­ரை­யும் கவர்­த­ிருந்­தமை கவனிக்­கப்­ப­ட­ வேண்­டிய ஒன்றாகக் காணப்­பட்­டது.

 

20708403_10155604642166730_2397214652369

இது கூத்­தல்ல நிஜம்

போரின் பின்­னர் சிதைந்து போன பல குடும்­பங்­க­ளை­யும். அவர்­களை நோக்கி படை­யெ­டுத்து வரும் நிறு­வ­னங்­க­ளை­யும் பெண்­க­ளுக்­கெ­தி­ராக முன்­னெ­டுத்து வரும் வன் மு­றை­க­ளை­யும் கூத்­து­டன் இணைத்து சமூக நாட­க­மாக கொடுத்­தி­ருந்­தமை சிறப்­பான ஒன்று.

இவ்­வாறு பல்­வே­று­பட்ட பல நாட­கங்­களை திறந்­த­வெளி பஞ்­ச­பூத அரங்­கி­னில் தொடர்ந்து நிகழ்த்­தி­வ­ரும் செயல் திறன் அரங்க இயக்­கத்­தின் ஐந்­தா­வது நல்­லூர் நாட­கத் திரு­விழா இது என்­பது குறிப் பிடத்­தக்­கது. நிகழ்­வின் மூன்­றாம் நாள் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­ கொண்ட பேரா­சி­ரி­யர் மௌன­குரு தனது உரை­யில் ‘‘வித்­தி­யா­னந்­தன் கா.சிவத்­தம்­பி­ சண்­மு­க­லிங்­கம் நான் என பல­ரும் பெரும் பிர­யத் த­னங்­க­ளோடு அரங்­கி­ய­லில் மாற்­றங்­களைக் கொண்­டு­வரப் பாடு­பட்­டோம்.

அவை இப்­போது ஆறு­த­ளிக்­கக்­கூ­டிய ஓர் நிலைக்கு வந்­து­விட்­டதை காண்­கை­யில் பேரா­னந்­தம் கொள்­கி­றேன். உண்­மை­யில் நாங்­கள் அரங்­கின் மூலம் பல வியத்­தகு மாற்­றங்­களை நிகழ்த்­த­ லாம் ஆனால் நாம் முயல்­வ­ தில்லை. குழந்­தை­களை மகிழ்­வித்­தல் என்­பது ஒரு கடி­ன­மான கலை அதனை மிக எளி­தாக செய்­கின்­றது இந்த செயல்­தி­றன் அரங்க இயக்­கம். அடுத்த தடவை நானும் இந்த சிறு­வர்­க­ளுக்­காக எதை­யா­வது செய்ய வேண்­டும் அதனை செய்ய இந்த அரங்கு என்­னைத் தூண்­டு­ கின்­றது. உண்­மை ­யி­லேயே இது செயல் திற­னான ஓர் அரங்­கு­தான்’’ என பாராட்­டி­னார்.

வெறு ம் கோவில் திருவி­ழா­வோடு மாத்­தி­ரம் இந்தக் காலத்தை நிறுத்­திக்­கொள்­ளாது கிடைத்த மணித்­து­ளி­களை பொக்­கி­ச­மான மணித்து­ளி­க­ளாக மாற்­றி­வ­ரும் இந்த நல்­லூர் நாட­கத் திரு­விழா அனை­வ­
ரும் கொண் டாடப்ப­ட­வேண்­டிய ஒன்றே.

http://newuthayan.com/story/19775.html

Link to comment
Share on other sites

 

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 03

 

நல்லூர் கந்தசுவாமி கோவில்
20ம் திருவிழா(மாலை) கைலாசவாகனம் – 16.08.2017

Link to comment
Share on other sites

மாங்கனி உற்சவம் காணும் நல்லைக் கந்தன்

 
மாங்கனி உற்சவம் காணும் நல்லைக் கந்தன்
 

பழனி என்­பது முரு­க­னுக்­கு­ரிய ஆல­யங்­க­ளுள் முதன்­மை­யும் சிறப்­பும் வாய்ந்­தது. “பழநி” என்­பது பொதினி என்­றும் சங்க காலச் சொல்­லின் பால் இருந்து தோன்­றி­யது என­வும் ஆராய்­சி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.புராண நூல்­க­ளில் இதற்கு வேறு வகை­யான விளக்­கங்­கள் கூறப்­பெற்­றுள்­ளது.

மூலா­தா­ரம், சுவா­திட்­டா­னம், மணி­பூ­ர­கம், அநா­க­தம். விசுத்தி. ஆஞ்ஞை என்­னும் ஆறு ஆதா­ரங்­க­ளைக் குறிப்­ப­தா­கக் கூறப்­ப­டும் முரு­க­னின் ஆறு­படை வீடு­க­ளுள் பழனி மூன்­றா­வ­தா­கக் திகழ்­கின்­றது. இத­னைத் திரு­வா­வி­னன்­குடி என்­றும் குறிப்­பி­டு­வர்.

நூல் விளக்­கம்

ஆவி­யர் குடி­யில் தோன்­றிய வையா­விக் கோப்­பெ­ரும்­பே­கன் என்­னும் சங்­ங­கால வள்­ளல் வாழ்ந்த இட­மா­த­லால் இதற்கு “ஆவி­நன்­குடி” எனப்­பெ­யர் அமைந்­தது. திரு­ம­கள், காம­தேனு, சூரி­யன், நில­ம­கன், அக்­கினி என்­போர் வழி­பட்டு அருள் பெற்ற தல­மா­த­லால் இதற்­குத் திரு­வா­வி­னன்­குடி எனப் பெயர் வழங்­க­லா­யிற்று என்­பது இதற்­குப் புராண நூல்­கள் தரும் விளக்­கம் ஆகும்.

கந்­த­சு­வாமி எனும் திரு­வு­ரு­வம்

திரு ஆவி­னன்­குடி என்­னும் பண்­டைப் பெய­ரு­டைய பழனி என்­னும் பழம் பெரும் பதி­யில் எழுந்­த­ருளி விளங்­கும் பர­ம­னா­கிய ஆண்­ட­வ­னுக்கே பழனி ஆண்­ட­வர் என்று பெயர். அன்­பர்­கள் நினைத்து வழி­ப­டும் திரு­வு­ரு­ வங்­களை மேற்­கொண்டு அருள்­பு­ரி­யும் இயல்­பி­ன­னா­கிய முரு­கப் பெரு­மா­னுக்­குச் சிற்­ப­நூல்­க­ளில் பல­வ­கை­யான அழ­கிய திரு­வு­ரு­வங்­கள் கூறப்­பெற்­றுள்­ளன.

இந்­தத் திரு­வு­ரு­வங்­க­ளுள் கந்­த­சு­வாமி என்று ஒரு திரு­வு­ரு­வம் உண்டு. அதன்­வழி ஒரு முக­மும் இரண்டு கைக­ளும் உடை­ய­வ­ராய் வலக்­கை­யில் தண்­டா­யு­தம் ஏந்தி, இடக்­கையை இடுப்­பில் வைத்­துக் கொண்டு கோவ­ணம் உடுத்­திய நிலை­யில் செந்­தா­மரை மலர் போன்ற நிறத்­து­டன் நின்ற திருக்­கோ­லத்­தில் காட்சி கொடுத்து அடி­ய­வர்­க­ளுக்கு அருள்­வார்.

கந்­த­சு­வாமி எனப்­ப­டும் திரு­வு­ரு­வம் என்று நூல்­கள் குறிப்­பி­டும் இவரே பழ­னி­யாண்­ட­வர் என வழங்­கப்­ப­டு­ப­வர். கையில் ஞான­மா­கிய தண்­டா­யு­தம் ஏந்­தி­யி­ருத்­தல் பற்­றி­ய­தாய் இவ­ருக்கு ஞான தண்­டா­யுதபாணி என­ ஒரு சிறப்­புப் பெய­ரும் உண்டு. தண்­டா­யு­த­பா­ணி­யா­கிய கந்­த­சு­வா­மியை அடி­ய­வர்­கள் பழ­னி­யாண்­ட­வர் என்ற சிறப்­புப் பெயர்­கொண்டே போற்­றித் துதித்து வரு­கின்­ற­னர்.

பழ­னி­யாண்­ட­வர் திரு­வு­ரு­வம்

தன்­ன­லம் நீத்து மன்­பதை நலம் குறித்­துப் பற்­றற்ற தன்­மை­யு­டன் மனி­தன் வையத்­துள் வாழ்­வாங்கு வாழ்­தல் வேண்­டும் என்­னும் உய­ரிய உண்­மை­யையே பழ­னி­யாண்­ட­வர் திரு­வு­ரு­வம் நமக்­குப் பண்­புற விளக்கிக்­கொண்­ டுள்­ளது.

முரு­கப் பெரு­மான் குழந்­தை­க­ளுக்­குக் குழந்தை வேல­னா­க­வும், இளை­ஞர்­க­ளுக்­குப் பால சுப்­பி­ர­ம­ணி­ய­னாக­வும், கலை­ஞர்­க­ளுக்­குச் சண்­மு­க­நா­த­னா­க­வும், வீரர்­க­ளுக்­குத் தேவ­சே­னா­தி­ப­தி­யா­க­வும், மந்­திர உப­தே­சம் பெற விரும்பி மாண­வ­நி­லை­யில் வழி­ப­டும் அன்­பர்­க­ளுக்­குச் சுவா­மி­நா­த­னாக­வும், பற்­றற்ற தூய ஞானத்­து­ற­வற நிலை­யி­ன­ருக்­குப் பழ­னி­யாண்­ட­வ­ரா­க­வும்,பிற­வா­றும் விளங்கி அவ­ர­வர்க்கு உரிய நிலை­யில் பல்­வேறு வகை­யில் அரு­ளும் வண்­ணம் அறிந்து புரிந்து காத்து வரு­கின்­றான்.

இத்­த­கைய துறவு நெறிச் சிறப்பு,தவ வாழ்க்­கை­யின் மேன்மை ஆகி­ய­வற்­றைக் குன்­றின் மேலிட்ட விளக்­கென உல­குக்­கெல்­லாம் உணர்த்தி நிற்­கும் சிறப்­பு­டை­யதே பழனி ஆண்­ட­வர் திரு­வு­ரு­வம் என­லாம்.

எளி­மை­யோடு தித்­திக்­கும் அருள்

DSC01721.jpg

பழனி ஆண்­ட­வர் காட்­சிக்கு எளி­ய­வர். கரு­ணைக்கு இனி­ய­வர். குணம் என்­னும் குன்­றேறி நிற்­ப­வர். குழந்தை உள்­ளம் படைத்­த­வர். எளி­தா­க­வும், விரை­வா­க­வும் அருளை இனிது வழங்­கும் இயல்­பி­னர். அத­னா­லேயே அந்­தப் பெரு­மானை அடி­ய­வர் உல­கம் போற்­றித் துதித்து வழி­பட்டு மகிழ்ந்து வரு­கி­றது.

கலி­யு­கத்­துக்கு கண்­கண்ட தெய்­வம் என விளங்கி வரும் பழனி ஆண்­ட­வ­ரின் பெருமை எம்­மி­யல்­பால் பகர்­தற்கு எளி­யதோ..? ஞான தண்­டா­யுத பாணி­யாக விளங்­கும் அருள்­மிகு பழ­னி­யாண்­ட­வர் பெரு­மானை நாம் அன்­பு­டன் பணிந்து,வழி­பட்டு நலன்­கள் எல்­லாம் எய்தி உய்­வோ­மாக.

காப்பு

அட­லரு ணைத்­தி­ருக் கோப வட­வரு கிற்­சென்று கண்­டு­கொண் டேன்­வரு வார்­த­லை­யிற் தடப டெனப்­படு குட்­டு­டன் சர்க்­கரை மொக்­கி­ய­கைக் கட­தட கும்­பக் களிற்­றுக் கிளைய களிற்­றி­னையே.

நூல்

பேற்­றைத் தவஞ்­சற்று மில்­லாத என்­னைப்­ர­பஞ்­ச­மென்­னுஞ்
சேற்­றைக் கழிய வழி­விட்­டவா. செஞ் சடா­ட­வி­மேல் ஆற்­
றைப் பணியை யித­ழி­யைத் தும்­பையை அம்ப
கீற்­றைப்ப

அழித்­துப் பிறக்­க­வொட்டா அயில் வேலன் கவி­யை­யன்­பால்
எழுத்­துப் பிழை­ய­றக் கற்­கின்றி லீரெரி மூண்­ட­தென்ன
விழித்­துப் ப கழுத்­திற் சுருக்­கிட் டிழுக்­கு­மன் றோகவி கற்­கின்­றதே…..!

சூலம் பிடித்­தெம பாசஞ் சுழற்­றித் தொடர்ந்­து­வ­ருங்
காலன் தனக்­கொரு காலு­மஞ் சேன்­க­டல் மீதெ­ழுந்த
ஆலங் குடித்த பெரு­மான் குமா­ரன் அறு­மு­க­வன்
வேலுந் திருக்­கையு முண்டே நமக்­கொரு மெய்த்­து­ணையே…!

http://newuthayan.com/story/20452.html

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி

 
நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி
 
நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி

20914649_513456378994701_699818489526888

20842289_10155001937883380_8636874712577

20915175_10155001938058380_5967988027360

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

நல்லூரில் இலட்சக்கணக்கில் திரண்டனர் பக்தர்கள்

 
நல்லூரில் இலட்சக்கணக்கில் திரண்டனர் பக்தர்கள்
 

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.

20882288_1546184445438165_8586096099951420900956_1420407617994942_6934272286372520901295_1420407754661595_6121854996302320915522_1546184498771493_88274530759768

http://newuthayan.com/story/20920.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.