Jump to content

ஓர் தீண்டலில் .. ஓர் தழுவலில் ... என்னுயிரை மீட்டுக் கொடு !!


Recommended Posts

உனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம்
காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது  

பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின்
திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் 

திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி 
நொடிக்குகொருமுறை நெருடுகிறேன்
குறுஞ்செய்தி
காணாது குன்றிப் போகிறேன்...

அருகலையில் ஐயம் கொண்டு
திசைவியை திருகிப் பார்க்கிறேன்..

என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே
அவற்றின்
இருப்பிடமே….!!

வீசும் தென்றலும்
விசும்பின் சாரலும்
உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது!!
ஆதவனின் கதிரொளிகளும்
உன்
எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது !!

என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய்
அவற்றை
போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்..!!

ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும்
அருகில்
இருந்தும் நீ அறியாதது ஏனோ !!

வான்மழையாய் உன்  பார்வைச்சாரல்களில்
என்னை  நனைத்து விடு!!

ஓர் தீண்டலில்
ஓர் தழுவலில் ...
என்னுயிரை மீட்டுக் கொடு !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கம் சுகமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கு கவிதையில்.... நன்றி ஆதித்ய இளம்பிறையன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/30/2017 at 2:10 AM, ஆதித்ய இளம்பிறையன் said:

ஓர் தீண்டலில்
ஓர் தழுவலில் ...
என்னுயிரை மீட்டுக் கொடு !!

 ஆஹா ஆஹா  அருமை 

Link to comment
Share on other sites

கருத்திட்ட சுவிக்கும், தனி ஒருவனுக்கும் நன்றிகள் பல... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்த இளம்பிறையன்..நீண்ட நாட்களின் பின்னர் கண்டது மிக்க மகிழ்ச்சி!

அதை விடவும்...நீங்கள் கவிதையுடன் வந்தது...இன்னும் மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

புங்கைதரு நிழலும்
யாழ் புங்கைதரு மொழியும் 
என்றும் இனிதே !!
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.