Jump to content

புதிய யாழ்.களம். சில சந்தேகங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  யாழ்.களம்   மாற்றங்களை  செய்து.... 
புதிய  சில முறைகள்  அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... :102_point_up_2:
ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது.

உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... 
ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது   ஏன் என்று அறிய விரும்புகின்றேன்.

Sukuthar க்குஎன்று பிங்க்  நிறத்திலும்,
Rajesh க்கு என்று பச்சை  நிறத்திலும்,
babuec 405 க்கு B என்று நாவல  நிறத்திலும் உள்ளதை  நீங்களும் அவதானித்து இருப்பீர்கள்.
பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை  அறியாவிட்டால்,  
இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு.  :grin:

 

59823005d6a05_.png.15dae49c6e1c75681e057432c37b1fb1.png

மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

களத்தில் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருப்பவர்களுக்கு பெயர்களின் முதல் எழுத்து சரியாகக் காண்பிக்கின்றது. தமிழில் வைத்திருப்பவர்களுக்கு சரியாக முறையில் காண்பிக்காது வெறும் பெட்டி மட்டுமே காண்பிக்கின்றது. இவை படங்களை இணைக்காதவர்களுக்கே காண்பிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளியிடும் முறை கலைக்கப்பட்டு ஐந்து விதமான பகுப்புகள் react_thanks.png react_haha.pngreact_confused.pngreact_sad.pngreact_like.png உள்ளதால் குழப்பங்கள்/மன வருத்தங்கள் வரும்போல் தெரிகிறதே!

உதாரணமாக குறிப்பிட்ட உறுப்பினருக்கு குழுவாக சேர்ந்து கும்மலாமென்றால்(by voting 'Sad' icon react_sad.png) அவருக்கு வருத்தமாக இருக்கும்தானே?

இந்த பொத்தானை மட்டும் மறைக்க இயலாதா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால மாற்றத்திற்கு ஏற்ப யாழ் களம்..  பரினமித்து வருவதன் தொடர்ச்சி. இன்னும் தொடரட்டும். tw_blush::213_tiger:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மோகன் said:

களத்தில் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருப்பவர்களுக்கு பெயர்களின் முதல் எழுத்து சரியாகக் காண்பிக்கின்றது. தமிழில் வைத்திருப்பவர்களுக்கு சரியாக முறையில் காண்பிக்காது வெறும் பெட்டி மட்டுமே காண்பிக்கின்றது. இவை படங்களை இணைக்காதவர்களுக்கே காண்பிக்கும்.

நன்றி... மோகன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள  Club பகுதி எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.
நாம் ஆரம்பித்த  அந்தப் பகுதியின்  உரிமையாளராக,  நாமே... இருப்பதில்,  பெருமையாக உள்ளது.
அதில்...  எழுதி பதிந்தவற்றில் திருத்தம்  (Edit) செய்வதற்கான வழி முறைகளை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை. 

முன்பிருந்த களத்தை  விட,  இப்போ.... வாக்கெடுப்பு (Poll) நடத்தும் முறையை  மிகவும் இலகுவாக அமைத்தமை அருமையானது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாம் ஆரம்பித்த  அந்தப் பகுதியின்  உரிமையாளராக,  நாமே... இருப்பதில்,  பெருமையாக உள்ளது.

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

1 hour ago, தமிழ் சிறி said:

அதில்...  எழுதி பதிந்தவற்றில் திருத்தம்  (Edit) செய்வதற்கான வழி முறைகளை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை.

இல்லை, திருத்தம் செய்யும் வசதி உள்ளதே..!

நேற்றிரவு முதல் இப்பகுதியில் பிரித்து மேய்ந்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...மானிடனே !

 

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

 

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

 

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

 

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

 

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

ஓ...மானிடனே !

 

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

 

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

 

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

 

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

 

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

மிகச் சரியாக சொல்லிவிட்டீர்கள் புங்கை. நானும் ஆமோதிக்கிறேன்......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஓ...மானிடனே !

 

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

 

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

 

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

 

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

 

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

பத்தொன்பதற்குள்ளயே நரை எட்டிப் பாக்குதோ புங்கையண்ணா..உங்களுக்கு இல்ல யாழுக்குத் தான் 19 தானே..எனக்கும் யாழ் மேல் பிரியம் மட்டுமே.?✔️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. சபாஷ் !!பல ஆங்கில முன்னோடி இணையதள வடிவமைப்பைவிடவும் எங்கள் யாழ்களம் கண்ணை கவரும் வகையில் இருக்கின்றது என்பது என்னுடைய அவதானிப்பு. :100_pray:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களம் களை கட்டியுள்ளது மெனக்கெட்ட அன்பர்கள் அனைவருக்கும்  மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 

படங்கள் நேராக இணைக்க முடியவில்லை என்ன காரணம் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

நாம்,  சொல்ல விளைந்த...  வார்ததைக்கு, சொற்கள்...   கிடைக்காமல்,  
மூளையை  கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த நேரத்தில்....
அழகிய சொற்களை தேர்ந்தெடுத்து   கவிதையாக.... பிரசவித்த.
புங்கையூரானின்,  திறமைக்கு..... பாராட்டுக்கள். :)

கவிதையின்,  முதல் பகுதியை.... மேற்கோள்  காட்டவில்லை. ஏனென்றால்...   
நாம்.... மட்டும், தனியாக இல்லை.... கன  ஆட்கள்,  இங்கு  இருக்கினம்... என்ற ஆறுதலை தந்தது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

இல்லை, திருத்தம் செய்யும் வசதி உள்ளதே..!

நேற்றிரவு முதல் இப்பகுதியில் பிரித்து மேய்ந்துவிட்டேன்

அந்த.. இராணுவ ரகசியத்தை, 
எங்களுக்கும்... சொல்லித் தாருங்களேன், வன்னியன் சார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அந்த.. இராணுவ ரகசியத்தை, 
எங்களுக்கும்... சொல்லித் தாருங்களேன், வன்னியன் சார். :grin:

 

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

 

one1f.jpg

6 minutes ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

படத்தில் சிறு திருத்தம்..

திரியின் தலைப்பை திருத்த "Edit this Forum" என்ற இடத்தில் சொடுக்கவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ராசவன்னியன் said:

 

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

 

one1f.jpg

படத்தில் சிறு திருத்தம்..

திரியின் தலைப்பை திருத்த "Edit this Forum" என்ற இடத்தில் சொடுக்கவும்..

மிக அருமையான விளக்கத்தை... படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்,  வன்னியன்.
இது,  எனக்கு மட்டுமல்ல.... பலருக்கும்,  நிச்சயம்  பிரயோசனப் படும் என நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

ராஜ வன்னியன், அண்ணை....
"நமக்கு... நாமே.. திட்டம்."  என்பது போல்..... 
எங்கடை...  "கொம்பனிக்கு"  நாங்களே.... பொறுப்பு  என்னும்  போது, 
ஏனோ... தானோ... என்று, எழுத முடியாமல்,
பல பக்கம்,  யோசிக்க வேண்டிய..... சிந்தனைகளும், மனதில்... மின்னல் போல், வந்து போகின்றது. உண்மை. :)

இப்படி... சின்ன,  "பெட்டிக்  கடை"  திறந்த, எமக்கு....
19 வருடமாக....  உலகத் தமிழர்களை  இணைத்து வந்த, யாழ். கள பொறுப்பாளர்கள்....
அனைவரையும்...மேய்க்க, எவ்வளவு கஸ்ரப்  பட்டு இருப்பார்கள். 
:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பதிவிடும்போது நிறம் தீ டடலில்   நிறம் தெளிவாக ( டார்க் ) வர என்ன செய்யவேண்டும் ..

.எனக்கு மங்கலாக இருக்கிறது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 பதிவிடும்போது நிறம் தீ டடலில்   நிறம் தெளிவாக ( டார்க் ) வர என்ன செய்யவேண்டும் ..

.எனக்கு மங்கலாக இருக்கிறது ..

கண்ணாடி போட வேண்டும்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

கண்ணாடி போட வேண்டும்:grin:

நிலாமதி அக்காவின், கேள்விக்கு...
இது.. தான்... பதிலா... நந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. ஏனைய இணையங்களுக்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல யாழ் இணையம் என்பதினை கவர்ச்சிகர இளமையான தோற்றம் தொட்டு நிற்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரிப்போட்"   பொத்தானை, காணவில்லை மோகன் அண்ணா. :)

ரகுநாதன்... போட்ட , தலைப்பிற்கு... இரண்டு பதில்களை எழுதினேன்.
இன்னும்.... அது,  வெளியிடப் படவில்லை.  காரணம் என்னவோ..... தெரியவில்லை.
ஆனால்.... "ரிப்போட்  பொத்தான்", காணாமல் போனது உண்மை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

"ரிப்போட்"   பொத்தானை, காணவில்லை மோகன் அண்ணா. :)

ரகுநாதன்... போட்ட , தலைப்பிற்கு... இரண்டு பதில்களை எழுதினேன்.
இன்னும்.... அது,  வெளியிடப் படவில்லை.  காரணம் என்னவோ..... தெரியவில்லை.
ஆனால்.... "ரிப்போட்  பொத்தான்", காணாமல் போனது உண்மை. :grin:

பேரன்புடையீர்,

முறைப்பாடு பொத்தான் உள்ளது..

தங்கள் மீது 'மாதிரி முறைப்பாடும்' :grin: எழுதி அதை அனுப்பாமல் அதன் பிரதியை இங்கே பதிகிறேன்..! :grin:

ஆனால் முறைப்பாடு பொத்தானை அழுத்தி அனுப்பினாலும், அது நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றடைகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

 

report.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.8.2017 at 1:41 PM, ராசவன்னியன் said:

பேரன்புடையீர்,

முறைப்பாடு பொத்தான் உள்ளது..

தங்கள் மீது 'மாதிரி முறைப்பாடும்' :grin: எழுதி அதை அனுப்பாமல் அதன் பிரதியை இங்கே பதிகிறேன்..! :grin:

ஆனால் முறைப்பாடு பொத்தானை அழுத்தி அனுப்பினாலும், அது நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றடைகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

 

report.png

நன்றி... மோகன் அண்ணா,  ராஜவன்னியன்.
முன்பு இடது பக்கம் இருந்த மாதிரி ஒரு நினைவு.
அதுதான்.. அந்தத் தெரிவை காணவில்லை என...  நினைத்து விட்டேன்.
சிரமத்திற்கு,  மன்னிக்கவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நாட்கள் வரை இருந்த திருத்த/அழகு படுத்தும் பொத்தான்களை (Format tools) இப்பொழுது காணோம்..!

Eg: Color palette, Alignment (Righ, Center, left) etc.

யாராவது மீட்டுக் கொணர்க..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.