Jump to content

4K என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

4K என்றால் என்ன?

ஒருவர் 'கேமரா வாங்க வேண்டும்' என்று நினைக்கும் நேரத்தில், நண்பர்கள் "மாப்பிள்ளை 4K கேமரா வாங்கு.. அதுதான் எதிர்காலம்" என்று போகிற போக்கில் தட்டிவிடுகிறார்கள். சொல்பவர்களுக்கு 'அது என்ன?' என்றே தெரியாமலிருக்கும், ஆனால் மற்றவர்களுக்கு ஜடியா சொல்வார்கள், இதனால் நம் கலைஞர்களிடையே ஒரு வித குழப்பம் நிலவுகிறது,

4K என்றால் என்ன..?, அதை எந்த சாஃப்ட்வேரில் எடிட் செய்வது..?, அதை எந்த ரூபத்தில் கஸ்டமர்களுக்கு கொடுப்பது..? போன்ற கேள்விகளை 4K பொருட்களை விற்கும் கம்பெனி பிரதிநிதிகளை கேளுங்கள், பதில் கிடைக்காது. அவர்களுக்கு விற்க மட்டுமே தெரியும்.

இது போன்று பல வியாபாரிகள் விற்கும் பொருளின் தொழில் நுட்பம் தெரியாமலே. அதை மிகைப்படுத்தி நம்மிடையே விற்கிறார்கள்.இது தான் நிதர்சனமான உண்மை.

4K பற்றி எழத வேண்டும் என்றால் நிறைய பக்கங்கள் வேண்டும்.

4K RESOLUTION 4096 X 2160 /24p (24 FRAMES) இது சினிமா சைஸ்
UHD (Ultra High Definition) 3840 X 2160 /50p ( 50 FRAME PROGRESSIVE )
2K RESOLUTION 2048 X 1536 /50p ( 50 FRAME PROGRESSIVE )

சாதாரண 4K கேமராக்களில் அவுட்புட் HDMI 1.4 VERSION மட்டுமே இருக்கும். இதை மிக்ஸிங் போர்ட்களில் உபயோகபடுத்த முடியாது. மிக்ஸிங் போர்ட்களில் உபயோகபடுத்தபடும் SDI- OUT உள்ள Sony PMW-F55 CineAlta 4K இந்த கேமராவின் விலை 20 லட்சம். 4K மிக்ஸிங் யூனிட் போடுவதற்கு ( 2 கேமரா சேர்த்து ) ஒரு கோடி வேண்டும்.

4K டி.வி. வாங்கும் போது கூட கவனமாக இருக்க வேண்டும்.காரணம் 4K என்று போட்டிருப்பார்கள், ஆனால் நாம் அதன் RESOLUTION 4096 X 2160 இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4K பைல்களை எந்த சாஃப்ட்வேரில் எடிட்செய்வது. EDIUS PRO 7.4 அல்லது ADOBE PREMIRER CC இவற்றில்தான் எடிட் செய்ய முடியும். ஆனால் மினிமம் சிஸ்டத்தின் விலை 3 லட்சம்.

சரி இதை கஸ்டமர்களுக்கு எப்படி கொடுப்பது, USB 3,0 PORTABLE HARD DISK இதில்தான் கொடுக்க முடியும். அதே நேரத்தில் கஸ்டமர்களின் 4K டி.வி.களில் USB 3,0 INPUT இருக்க வேண்டும்.அல்லது HDMI 2.0 OUT உள்ள HARD DISK MEDIA PLAYER வேண்டும். இதன் முலம் ப்ளே செய்ய வேண்டும் என்றால் டி.வி.களில் HDMI 2.0 INPUT இருக்க வேண்டும்.

சிலர் கேட்பார்கள் நான் 4K யில் எடுத்து அதை புளுரேயாக(BlueRay) கன்வெர்ட் செய்து கொடுக்கலாமே? என்பார்கள். இதனால் குவாலிட்டி கூடிவிடும் என்று நினைத்தால் அது நிஜம் அல்ல. இரண்டாவது 4K ஃபைலை எடிட் செய்ய சிஸ்டம் ஹெவியாக இருக்க வேண்டும். 4K கேமராக்களை வாங்க வேண்டாம் என்று சொல்லவிலை. 4K கேமராக்கள் முலம் HD யாகவும் எடுக்க முடியும்.

4K யில் எடுத்து 4K யில் கொடுப்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

Tamil Talkies

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

uhdtv.jpg

 

Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

பெரும்பான்மையோருக்கு அவை தெரிந்திருக்கும் அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள்  ‘அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள். 

சுருக்கமாக HDTV என்பது..
1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame)
1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame)
1440×1080i (approximately 1.6 megapixels per frame)
720p  - 1280×720p  (approximately 0.9 megapixels per frame)

[The letter "p" here stands for progressive scan while "i" indicates interlaced]

4K UHDTV என்பது ..
2160p -  3840 × 2160 (approximately 8.3 megapixels per frame)


8K UHDTV என்பது ..
4320p - 7680 × 4320 (approximately 33.2 megapixels per frame)
 

512px-UHDTV.svg.png


1080p HDTV ஐ போன்று பதினாறு மடங்கு (yes.. 16 times) அதிக பிக்சல்கள் கொண்டது 8K UHDTV என்கிறார்கள். ஏறக்குறைய ஒரு IMAX (15/70mm IMAX) படத்திற்கான தரம் கொண்டது என்கிறார்கள். ஒலியில்  22.2 surround sound அமைப்பு கொண்டதாம்.

4K UHDTV-ஐ  UHDTV1 என்றும்  8K UHDTV-ஐ UHDTV2 என்றும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.  நொடிக்கு 24, 25, 50, 60 ,120 ஃபிரேம்கள் மாறும் தகுதிக் கொண்டது.

ஜப்பானிய நிறுவனமான ‘NHK Science & Technology Research Laboratories’ 2003-இல் இதற்கான கேமராவை வடிவமைத்து இத்தொழில்நுட்பத்தை பரிந்துரைத்தது. பல கட்ட மாறுதலுக்குப்பிறகு  2007-இல் ‘UHDTV’-க்கான  ‘SMPTE’ தரம் நிர்ணயிக்கப்பட்டது. 2015 - 2020 ஆண்டுகளுக்குள்ளாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலும் சீனாவிலும் 2013-2014 -க்குள்ளாக வீடுகளுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

2006-இல் NHK நிறுவனம்  ‘450 inch’ (11.4m) தொலைக்காட்சித் திரையில் தங்களுடைய UHDTV விடியோவை திரையிட்டு காட்டிவிட்டார்கள். (பெரும்பான்மையாக நம் வீடுகளில் இருப்பது 21inch TV)  

Aptina Imaging, RAI, BSkyB, Sony, Samsung, Panasonic Corporation, Sharp Corporation, Toshiba போன்ற டிஜிட்டல் இமேஜிங் நிறுவனங்கள் 2008-இலிருந்து ‘UHDTV’ தொழில்நுட்பத்தில் ஈடுபடத்துவங்கிருக்கின்றன.

2011-இல் SHARP நிறுவனம் NHK-வுடன் இணைந்து ‘85inch LCD display’(7680 × 4320 pixels at 10 bits per pixel) அறிமுகப்படுத்தியது.

ஏப்ரல், 2012 -இல் NHK நிறுவனம் Panasonic-வுடன் இணைந்து ‘145inch (370 cm) display (7680 × 4320 at 60 fps)-வை அறிமுகப்படுத்திருக்கிறது. இது 33.2 million 0.417 mm square pixels தரம் கொண்டது.
 

8K_Camera.jpg


மே, 2012-இல்  NHK நிறுவனம் உலகின் முதல் ‘ultra-high definition shoulder-mount camera’-வை கொண்டுவந்தது. அதே மாதம் ‘33.2 megapixel video at 120 fps’ தரத்தில் இயங்கும் கேமராவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படுவதால் நொடிக்கு 120 ஃபிரேம்கள் என தரம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

2012, ஒலிம்பிக்கின் போது லண்டன் நகரத்தில் ‘15 meter wide screens’ அமைக்கப்பட்டு, போட்டிகளின் காட்சியை UHDTV பிம்பங்களாக திரையிடப்பட்டன. இச்சேவையை BBC நிறுவனம் அளித்திருக்கிறது.

மே, 2012 -இல் Sony நிறுவனம் உலகின் முதல்  ‘Consumer-Prosumer 4K 3D Projector’-ஐ அறிமுகப்படுத்திருக்கிறது.

ஆகஸ்ட், 2012-இல்  LG நிறுவனம் உலகின் முதல் ‘3D UHDTV / 4K system’ தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது.
 

Panasonic_TH-152UX1_003.jpglg-uhdtv.jpg
 

மேலும் பல தகவல்கள், தெரிவிக்கும் செய்தி யாதெனில்.. அடுத்த ஆண்டுக்குள்ளாக உலகின் பல நாடுகள் UHDTV ஒளிபரப்பிற்கு மாறிவிடுவார்கள். கொரியா போன்ற நாடுகளில் கூட இவை வந்துவிடும் எனத் தெரிகிறது. பல சேட்டலைட் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை HDTV-லிருந்து UHDTV-க்கு மாற்றத் தயாராகயிருக்கிறார்கள். சில தொலைக்காட்சிகள் நேரடியாக 8K UHDTV தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைக்கின்றன. தேவையற்ற இடைச்சொருகளாக 4K UHDTV தவிர்த்து விடுவதற்காக.

உலகின் கதை இப்படிப் போய் கொண்டிருக்க.. இங்கே இந்தியாவில் என்ன கிடைக்கிறது? என்பது நாம் அறிந்ததுதான்.

தொலைக்காட்சியே இப்படி என்றால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பங்கள் எங்கே போகும் என்பதைக் கற்பனை செய்துப்பாருங்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லா திரைப்படங்களும் 3D படங்களாக இருக்கும் மேலும் அவை IMAX படங்களாகவும் இருக்கும் என்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. திரையரங்கில் Projector-மூலம் திரையிடுவது போய், LCD Display-க்களாக மாறிவிடவும் சாத்தியமிருப்பதை இந்த  UHDTV தொழில்நுட்பம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

ஒளியுலகம்

 

4K துல்லிய ஒளியில் துபாய் நகரத்தை இங்கே காணலாம்..!

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.