Jump to content

கவிதைகள்


Recommended Posts

கவிதைகள்

இசை - ஓவியங்கள்: செந்தில்

 

46p1.jpg

சிறுமீ

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சமீபத்தில் சமைந்த
ஒருத்தியின்
சமைப்புடன்
விளையாடிப் பார்க்கிறது
ஒரு தப்பட்டைக் குச்சி.


46p2.jpg

நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை

உன் குளத்துப் பொற்றாமரையாக
ஒரு கணம் இருக்கக் கேட்டேன்
ஒரே ஒரு கணம்தான்.
அதுவும் இல்லையென்றான நாளில்தான்
குழாயடியின் நீண்ட வரிசையில்
எல்லா குடங்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு
``ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்''
என்று கத்தினேன்.

ஈருருளி ஓட்டுனன் - கவிதை

கார்த்திக் திலகன் - ஓவியம்: செந்தில்

 

51p1.jpg

ண்பர்களின் சீழ்க்கை ஒலிகளில்
களைகட்டுகிறது மகிழுந்துப் பயணம்
திடீரென்று குறுக்கே பாய்கிறது
ஓர் ஈருருளி
நீண்ட க்ரீச் ஒலியோடு
சாமர்த்தியமாக நிறுத்தினேன் மகிழுந்தை
தமிழின் மிகத் தொன்மையான
கெட்டவார்த்தைகளால்
என்னை வசவு பாடுகிறான் ஈருருளி ஓட்டுனன்
மகிழ்வோடு புன்னகைத்தேன்
என்னை வசவு பாடவாவது
அவன் உயிருடன் இருக்கிறானே என்ற நிம்மதி எனக்கு
பயத்தின் குளிரில் வெடவெடவென
நடுங்கியது மகிழுந்து
போய்வா என் இனிய நண்பனே
உன் ஈருருளியின் பின்னிருக்கையில்தான்
உட்கார்ந்து வந்திருக்கிறது
எங்கள் அதிர்ஷ்டம்
பெருவிரலையும் ஆள்காட்டிவிரலையும் இணைத்து
நாவுக்கு அடியில் வைத்து
இப்போது நானெழுப்பும் சீழ்க்கை ஒலி
உனக்கே உனக்காகத்தான்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

காரம் நிமித்த இரவுகள் - கவிதை

ஸ்டாலின் சரவணன் - ஓவியம்: செந்தில்

 

52p1.jpg

ல்சர் புண்ணேறிய
பொத்தல் வயிறு குறித்து
அக்கறைப்பட்டு காது நீட்டும்
ஒரே ஓர் இரவு உணவக முதலாளியையும்
இன்னும் நான் கண்டடையவில்லை.

ஊரில் மல்லிகா சித்தி
அரைக்கும் தேங்காய் சட்னிக்கு
நாக்கை அறுத்துக்கொடுக்கும்
ருசியில் திளைத்தவன்.

இங்கு
ஏழே முக்காலுக்கு மேல்
உணவகம் செல்ல நேர்கையில்
வாளி அடித் தடவி
ஒரு இட்லி மட்டும்
லேசாக நனைகிறது.

`ஆம்லெட் ஒன்று’ என்றதும்
`பெப்பர் தூக்கலா?’ எனக் கேட்கும்
சிப்பந்தி சிறுவனிடம்
`பெப்பரே வேணாம்’ என்ற
பதில் கேட்டதும்
மேலும் கீழும் பார்க்கிறான்.

மாலைப் பொழுது
கடை வந்தடையும்
அத்தனை பறவைகளும்
கள்ளுண்டு வருவதாகவே எண்ணி
ஒரு கை காரம் தூக்கலான
சமையற்குறிப்புகளோடு
மிளகாய்களையே கண்களெனக்கொண்ட அவனை
தூரத்தில் பார்க்கையிலே
என் குலை நடுங்கும்.
மாதமோ கார்த்திகை என்பதால்
கடைமுதலாளி, மாஸ்டர் என
எல்லோரும் மாலை அணிந்து
நோன்புற்றிருக்கின்றனர்.

கடைசி மேசையிலிருந்து
மங்கலான குண்டு பல்பு
வெளிச்சத்தில்
கல்லாப்பெட்டியில் இருப்பவர் கழுத்தில் காற்றிலாடுவது
பெருங்குடல்போல் தெரிகிறது.

அதோ
அந்தச் சிப்பந்தி
கழுத்தில் அணிந்துள்ளான்
சிறுகுடலை.
பரோட்டா மாஸ்டர்
அழுத்திப் பிசைவது
என் கல்லீரலைத்தான்.

நெருங்கிவிட்டான்
வாளி நிறைய என் ரத்தத்தைச்
சுடச்சுடக் கொண்டுவரும்
ஒருவன்.

வந்ததும் கேட்கிறான்...
`குடல் ஒன்று
ஆர்டர் பண்ணட்டுமா சார்?’

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

புதிய காதலுக்கான எளிய தியானம்! - கவிதை

மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில்

 

80p1.jpg

ங்களால் எப்போதோ நேசிக்கப்பட்ட ஒருவரின் திருமண அழைப்பிதழைக் காணும்போது நீங்கள் ஏன் நிலைகுலைய வேண்டும்?
 
எப்போதோ நேசித்த ஒருவரை
எப்போதோ மறந்துபோய்விட்டீர்கள்
எப்போதோ இட்ட முத்தங்கள்
எப்போதோ உலர்ந்துவிட்டன
எப்போதோ சொன்ன சொற்கள்
எப்போதோ அர்த்தமிழந்துவிட்டன.
 
ஆனால் நீங்கள் எப்போதோ நேசித்த
ஒருவரின் திருமண அழைப்பிதழை
காண நேர்கையில்
நஞ்சின் ஒரு துளியை நாவில் அறிகிறீர்கள்
கண்ணீரின் ஒரு துளியை
அவசரமாக மறைக்கிறீர்கள்
ஏதோ ஒருவரை நீங்கள்
அப்போதுதான் இழந்ததுபோல
ஒரு சின்ன இருட்டில் போய்
சில நிமிடங்கள் அமர்ந்துவிடுகிறீர்கள்
அவர்கள் உங்களுக்கு
எப்போதோ இல்லாமல்போனவர்கள் என்பது உங்களுக்கு மறந்துவிடுகிறது.
 
எப்போதோ நம்மை நேசித்தவர்கள்
ஏன் நமக்கு அவர்களது
திருமண அழைப்பிதழை அனுப்புகிறார்கள்?
அந்த நாளில்
நாம் அங்கே வர வேண்டும் என்பதற்காக அல்ல
அதை நம் கையில் வாங்கும்போது
நமது கண்களை அவர்கள்
மானசிகமாகக் காண விரும்புகிறார்கள்
அந்தக் கணத்தில் அவர்கள்
ஒரு நியாயம் கேட்கவோ
ஒரு மன்னிப்பைக் கோரவோ விரும்புகிறார்கள்
ஒன்றை உங்களுக்கு நிரூபித்துக்காட்ட
விரும்புகிறார்கள்
நீங்கள் ஒன்றுமே நடக்காததுபோல
வண்ணத்தாளில் சுற்றப்பட்ட
பரிசோடு போய் நின்றால்
அவர்கள் மனமுடைந்துபோய்விடுவார்கள்
என்னால் நேசிக்கப்பட்டவர்களின்
எந்தத் திருமணத்துக்கும் நான் போனதில்லை
ஆனால், அந்தத் திருமண அழைப்பிதழ்களை
நான் எப்போதும் என் பையிலேயே வைத்திருப்பேன்
அவை எனக்கு நானே சிகிச்சை அளித்துக்கொள்ளும் மூலிகைகள்
என்னை நானே கடந்துசெல்லும்
சிறிய கப்பல்கள்
மேலும் நான் ஒரு புதிய காதலைத் தொடங்கும்போது
என்னைச் சமநிலைப்படுத்தும்
எளிய தியானங்கள் அவை.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சிதில மனம்... சில குறிப்புகள் - கவிதை

தர்மராஜ் பெரியசாமி, ஓவியம்: செந்தில்

 

1

மனம் ஒரு விசித்திர ஜந்து
சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்
அதை ஒருமுறை
தாவச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்
லொள்ள்ள்ள்ள்ள் எனக் குரைக்கும்.

p74a.jpg

2

நங்நங்கெனக் குளியலறைக் கதவை
நொறுக்கிக்கொண்டிருக்கும் நண்பா
கசங்கிய மனதைக் கழற்றி
அலசிக்கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் பொறு
மாட்டிக்கொண்டு வந்துவிடுகிறேன்.

3

அழுவதற்கான காரணங்கள் யாவும்
வற்றித் தீர்ந்துபோன பிறகு
முறுவலிக்கத் தொடங்கியிருந்த மனதிடம்
`நீ சிரிக்கையில் உன் முகம்
கொஞ்சமும் காணச் சகியவில்லை’ எனச் சொல்லிச் சென்றீர்கள்
உங்களை நினைத்துச் சிரிக்கவும்
நீங்கள் சொன்னதை நினைத்து விசும்பவும்
இப்போது காரணங்களிருக்கின்றன.

4

நினைவுகள் சரிந்து விழுந்து
எழத் திராணியற்று
முனகிக்கொண்டிருந்த மனதிடம்
ஓர் இருகுழல் துப்பாக்கி
முடிச்சிடப்பட்ட தூக்குக்கயிறு
பளபளக்கும் குறுவாள்
விஷமென எழுதப்பட்டக் குப்பி
நான்கில் எது வேண்டுமெனக் கேட்டேன்
ஒரு கணம் யோசித்த அது
நான்கையும் வாங்கி வைத்துக்கொண்டது.

5

உன் ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவன்
நான் ஒருவனே என்றது மனம்
அதற்குப் பிறகுதான் இரவோடு இரவாக
யாருக்கும் தெரியாமல்
அதன் கழுத்தை நெரித்து இரக்கமின்றிக்
கொல்லவேண்டிவந்தது.

http://www.vikatan.com

12ஏ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைகள்.... பகிர்வுக்கு நன்றி நவீனன் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

கதிர் கூறாய்வு - கவிதை

தய்.கந்தசாமி

 

p21.jpg

பிடுங்கி எறியப்பட்ட கதிரென
கிடந்தந்தச் சடலம்.

பாதித் திறந்துகிடந்த கண்களில்
பச்சையாய் உறைந்துகிடந்ததொரு கனவு.

கபாலத்தைத் திறக்க வெளியேறியது
வறண்டு வெடித்த
வயல்வெளியின் காங்கல்.

நெஞ்சுக்கூட்டினுள்ளே முளைத்துப் பிளந்த
இரண்டாய் வெடித்துக்கிடந்தது
இதயம்.

குருத்துப்புழு வாழ்ந்த
பருத்தியின் சூலறையாய்
வயிற்றுக்குழிக்குள்
முளைக்காத விதைகளென
பாதி செறிக்காத பருக்கைகள்.
வானையும் மண்ணையும்
சபித்துச் செத்த
அந்தக் கடைமடைக்காரனுக்கு
நீருக்கேங்கி நீண்ட
நெற்கதிரின் வேர்கள்போலவே இருந்தன
விரல்கள்.

http://www.vikatan.com

19ஏ..

Link to comment
Share on other sites

இரண்டே எறிதலை இழுத்துச் செல்லுதல்... - கவிதை

பச்சோந்தி, படம்: எம்.விஜயகுமார்

 

p48.jpg 

சீமை ஓடுகளில் செருகி
சிமென்ட் தரையில் குத்தி நிற்கிறது சூரியக் கம்பி.
அது நெற்றியில் குத்தி நடுமண்டைக்கு நகர்கையில்
பயண அசதியில் உறங்குகிறார் அப்பா.
புழுதி பூசிய கைகால்களோடு
வீடுவந்த மகள்
உறக்கத்தை உதறி அப்பாவை எழுப்புகிறாள்.
மல்லாக்கப் படுத்திருந்தவர்
வலப்பக்கமாக ஒருக்களிக்கையில்
வழிந்த வியர்வையை நாக்கால் வழித்து
மடக்மடக்கெனக் குடித்துக்கொள்கிறார்.
ஐந்து நாள்களாகத் திருகுக் குழாயடியில்
வெயில் நிரம்பிக்கிடக்கின்றன பிளாஸ்டிக் குடங்கள்.
அப்பாவின் இமைகளைத் திருகினாள்
கண்களுக்குள் தடக்தடக் ரயிலொன்று
தண்டவாள இருட்டை விரட்டியது.   
பின்பு உறக்கத்தை மடிக்கையில்
குப்புறக்கப் படுத்துக்கொள்கிறார்
முதுகெங்கும் கோரைப்பாயின் கோடுகள்.
உறக்கம் கலைந்ததும் அப்பாவின் கண்கள் தேடின 
மகளோ... விரல் சப்பியபடி
நீலப்போர்வையில் உறங்குகிறாள்.

சந்தைக்குச் சென்ற அப்பா
சிறுமலைப் பிரிவில் இரண்டு படி வேர்க்கடலை வாங்கிவந்தார்.
டிக்டாக்கைக் கடித்துத் தின்று
முந்திரிப்பருப்பில் பிறைநிலவைக் கொறித்துக்கொண்டிருந்தாள் மகள்.
பின்பு ஊருக்குக் கிளம்பிய அப்பாவிடம்
`ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற...
ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற?’ என்ற
கேள்வியில் அப்பாவைத் தொங்கவிடுகிறாள்.
`சரி... அப்பாவுக்கு டாட்டா சொல்லுமா...’ என்று
உடைந்த குரலில் அம்மா சொல்ல
மகளோ... உள்ளங்கையிலிருந்த
இரண்டு பச்சை வேர்க்கடலைகளில்
ஒன்றை அப்பாவின் நெஞ்சின்மீதும்
மற்றொன்றை வயிற்றின்மீதும் எறிந்தாள்.
முதல் எறிதலில் பொத்துக்கொண்ட மார்பையும் 
இரண்டாம் எறிதலில் பிய்த்துக்கொண்ட குடலையும் 
தரதரவென இழுத்துக்கொண்டு 
கடைசிப் பேருந்துக்கு ஓடுகிறார் அப்பா.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை விடவும் கனதியாயிருக்கிறது புகைப்படம்.....!

படத்தை வைத்துக் கொண்டுதான் கவிதை எழுதி இருப்பார் போல அபாரம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

துளி - கவிதை

சச்சின்

 

p81a.jpg

ச்சு முறிந்த இறுதி நாளில்
தான் வேறொரு கூடடையப்போவதாகச்
சொல்லி கதறியழும் உனக்கு
ஒரு துளி உப்புநீரைப் பரிசளிக்கிறேன்
அதை ஆவியாகாமல் சேமித்து வை
அது காயங்களுக்கு மருந்தாகும்
உன் வீட்டுச் செடிகளின் வேர்களுக்கு
மகிழ்ச்சி தரும் கணவனின் அன்பாகும்
குடல் செல்லும் உணவின் உமிழ்நீராகும்
கொட்டும் தேனீக்களின் கொடுக்கறுக்கும்
முத்தத்தின் வாசமாகும்
காவியக் கதைகள் சொல்லி
உயிர் வளர்க்கும்
மேலும் ஒருநாள்
உன் அடிவயிற்றில் பரவசமூட்டிய
அழகு சிசு அமுதருந்தும்போது
அதன் ஈறு பட்டு உன் உயிர் கூசும்
அப்போது... அப்போது
அதன் கண்களை உற்றுப்பார்
அதிலிருந்து ஒரு துளி உப்புநீர்
வழிந்துகொண்டிருக்கும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

குழந்தை உறங்கும் வீடு! - கவிதை

 

கவிதை: விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: செந்தில்

 

சின்னஞ்சிறு குழந்தை
உறங்கும் வீடு
தன் சத்தங்களை உறிஞ்சிக்கொள்கிறது.

கொதிக்கும் எண்ணெயில் விழுந்தும்
மெள்ள சோம்பல் முறிக்கின்றன
கடுகுகள்.

p46a.jpg

புடைவையால் மூடி
மிக்ஸியின் சத்தத்தைக்
குறைக்க முடியுமென நம்புகிறாள் அம்மா.

பாக்கிட்டியைத் தவிர்த்து
கொட்டைப்பாக்கை
வாயில் அதக்கி
ஊறவைக்கிறாள் பாட்டி.

மெட்டிவிரல்களைத் தூக்கியபடி
நடக்கப் பழகிவிட்டாள் அக்கா.

குளவிகள்
வழி மாற்றிச் செல்கின்றன

வியர்த்து
நெகிழ்வாகின்றன அப்பளங்கள்.

குரலெழுப்பாமல்
பால் வீச்சம் வீசி
கன்றை அழைக்கிறது பசு.

கூடம் கடந்து
பின்வாசல் தாண்டி
கொல்லைக் கடைசியில் நிற்கும்
தாயின் விக்கலொலிக்கு
விழிகளைத் திறந்துபார்க்கிறது
குழந்தை.

http://www.vikatan.com

26ஏ

Link to comment
Share on other sites

ஒரு அமரர் மீண்டும் அமரராகிறார்!

கவிதை: ஜெ.பிரான்சிஸ் கிருபா

 

72p1.jpg

ச்சிவெயிலில் நகரத்தின் தார்ச்சாலை
அப்பளமாக பொரிந்துகொண்டிருந்த
வேளையில்
சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்குக்காக
சாலையில் நின்றிருந்த அமரர் ஊர்தியில்
மயானம் நோக்கிப் பயணப்பட்டிருந்த
அமரர்
படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தபடி
ஆசுவாசமாய்
சுற்றும்முற்றும் தலையைச் சுழற்றி
ஒரு மேற்பார்வை மேற்கொண்டுவிட்டு
என்னைக் கண்டதும்
மென்மையாகப் புன்னகைத்தார்.

பதிலுக்கு நானும் அதிர்ச்சியோடு
புன்னகைப்பதா வேண்டாமா என்ற
குழப்பத்தில்
பார்வையைச் சட்டென
வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டேன்.

பாராமுகம் காட்டியபடியே இவர்
யாராக இருக்குமென்று
யோசிக்கலானேன்.

ஒரு சாயலில்
காலையில் தொலைக்காட்சிப்பெட்டியில்
பன்னிரண்டு ராசிகளுக்கும்
அருள் பொங்கும் முகம் மலர
அமர்த்தலான சிரிப்போடு
பலன்கள் சொன்ன ஜோசியரின்
பட்டையணிந்த முகம் போலிருந்தது.

மற்றொரு சாயலில்
சில வருடங்களுக்கு முன்பு
ஒரு ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில் அமர்ந்தபடி
இருநூறு கிலோமீட்டர் நீளத்துக்கு
அறுநூறு கிலோமீட்டர் வேகத்தில்
இடைவிடாமல் அரசியல் பேசி
நான் கொலைகாரனாய் மாறவிருந்த
ஸ்டேஷனுக்கு முந்திய ஸ்டேஷனில்
இறங்கிப்போனவரைப் போலுமிருந்தார்.
இன்னொரு கோணத்தில்
இயன்றவரை இயந்து
முடிந்த அளவு பணிந்து
குடும்பம் நடத்தியும்
துணிந்துபோய் குடும்ப நல கோர்ட்டில்
விவாகரத்து வேண்டி நின்ற
என் மனைவியின் தரப்பில் ஆஜராகி
வாதாடியபடியே நீதிபதியைக்
கோமாளியாக மாற்றிய
வழக்கறிஞரின் முகவெட்டும்
ஒத்துப்போனது.

இவர்களில் ஒருவர்தானா என்று
உறுதிசெய்யும்பொருட்டு மனதை
திடப்படுத்திக்கொண்டு
திரும்பிப் பார்த்தபோது
மஞ்சள் விளக்கு அணைந்தது
பச்சை விளக்கு எரிந்ததும்
படுக்கையில் மீண்டும்
படுத்துக்கொண்டார் அமரர்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

நம்மைப்போல்...

 

கவிதை: கே.ஸ்டாலின் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

79p1.jpg

ற்றைக்கு முன்தான்
உனது சாயலில்
எனையொருத்திக் கடந்தாள்.
எஞ்சிய எனது பயணத்தின்
வெளியெங்கும்
நிரம்பியது நின் நினைவு.

விடிந்த பொழுதின்
தொடு வானத்தில்
மேகங்களிடையே பிறையென
மிதந்துகொண்டிருப்பது
அழுக்கு நீங்கிய
உன் பெருவிரல் நகம்.

உறைந்த தார்ச்சாலையில்
காலைச்சூரியனின்
கரங்கள் பட்டு மின்னும்
கண்ணாடித்துண்டு
அவ்வப்போது
தோன்றி மறையும் உனது
தெற்றுப்பல்.

உதிர்ந்த காட்டுப்பூக்கள்
மணமெனப் பரப்புவது
உயிர்வரை ஊடுறுவும்
உன் தேகத்தின் வாசனை.

வழிப்போக்கர்களை
ஆதுரமாய்த் தழுவிக்கொள்ளும்
அடர் மரத்தின் பெருநிழலென்பது
என்றைக்கும் வற்றாத உனதன்பு.

கடந்து சென்றது
நிச்சயம் நீயாகவே இருப்பின்
எதிர்திசையில்
எனது சாயலில் நீயும்
எனைக் கண்டிருக்கலாம்
உனது வெளியெங்கும்
நினைவுகளால் நான் நிரம்ப
இன்று நாம் பயணித்தது
திறந்துகொண்ட இறந்தகாலப்
பாதையொன்றின் மீதெனலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வறண்ட தொண்டையிலிருந்து ஓர் ஒலி - கவிதை

கார்த்திக் முருகானந்தம், ஓவியம்: ஹாசிப்கான்

 

ருதமும் நெய்தலும் மணந்ததுபோல்
எங்கள் வயல்கள் கடலென மாறியிருந்தன.
வாய்க்கால் வழியோடும் மீன்களுக்கும் நண்டுகளுக்கும்
வயல்களில் சிச்சிறு வீடுகள் இருந்தன.

எங்கள் நிலங்களின் அறம்
அப்போது பச்சையாயிருந்தது.
சிறு குச்சிக்கொண்டு கீறினால்கூட
மண்ணின் ஈரம் ரத்தம்போல் சொதசொதக்கும்.

p42a.jpg

எங்கள் மாடுகள் பசியென்னும்
வார்த்தையைப் பழகியிருக்கவில்லை.
கலப்பையில் ஒட்டிய மண்
வெயிலில் உதிர்ந்ததில்லை.
விசிறிய விதைகளை
நிலங்கள் விழுங்கியதில்லை.
திறந்தவெளி கர்ப்பப்பைபோல்
நெற்குழந்தைகளைச் சுமந்திருந்தன.
அறுவடை என்பது
தொப்புள்கொடியறுத்தலென நம்பியிருந்தோம்.
ஏர்கள் எங்களை ஏய்த்ததில்லை.

நெகிழியில் தொடங்கி அரிசியில் வந்துநிற்கும்
தொழில்நுட்ப அரசியலில்தான்
நாங்கள் தொலைந்துவிட்டோம்.

மனித ஈரம் வற்ற வற்ற
மண்ணின் ஈரமும் வற்றிப்போயிற்று.
எங்கள் அம்மணங்கள் பார்த்து
நாடு சிரித்துக்கொண்டிருக்கிறது.

எங்கள் கலப்பைகளைக்
கறையான்கள் தங்கள் வயிற்றில்
செரித்துக்கொண்டிருக்கின்றன.

http://www.vikatan.com

26ஏ

Link to comment
Share on other sites

குறுக்குசால் - கவிதை

கவிதை: ஆதவன் தீட்சண்யா, படம்: எம்.விஜயகுமார்

 

நீங்களாகவே உங்கள் கோவணத்தை
உருவியெறிந்ததன் மூலம்
கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு
கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக
உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்

p99a.jpg

உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்
தன் பரிவாரத்தோடு
உப்பரிகை மாடத்திலிருந்து
மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு
துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை
உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்
மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள்

தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்துக்கு
விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை
வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்
விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து
தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்

பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்
மன்னரோடு
மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்
சூழும் இக்கொடுநெருப்பை அணைக்க
யாரும் வரப்போவதில்லை
பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே
சொந்தக்காலில் தப்பி வாருங்கள்

கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்
சொந்த ஊர் திரும்புங்கள்
பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்
பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்
நம் தேசியக்கொடியை
ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது
அது தேவைப்படும்.

 

http://www.vikatan.com/

3m

Link to comment
Share on other sites

மழைப்பாடல் - கவிதை

கவிதை: அய்யப்பமாதவன்

 

p74a.jpg

கொடும் வெம்மையில் நகரத்தின் ஒளிச்சிதறல்கள்
எரிக்கும் ஒளிக்கீற்றென மாற்றிவிடும் போலிருந்தது
பசுமையை மரங்களிலிருந்து கருணை துளியுமின்றி
எடுத்துப்போயிருந்தது ஆகாயச் சுடர்
நிலமெங்கும் சுனைகளை பாலைவன வடிவிற்கு
செய்திருந்தது கோடை
தாகமெடுத்த பறவைகள் சிதைந்துகிடந்த நதிகளில்
செத்த மீன்களிடையே நின்றிருந்தன
சூரியன் நிரம்பிய குடங்களுடன் நீர் தேடிய பெண்கள்
வறண்ட நாவுகளில் உழன்றுகொண்டிருந்தனர்
வயலெங்கும் முடிந்த அறுவடையின் மீந்த சருகுகள்
மழைக்கான பாடலைப் பாடுவதுபோலிருந்தது
ஈரமற்ற வெளியில் பிளந்திருந்த மண் பரப்பில்
நெற்பயிர்களின் கனவுகள் ஆழப் புதைந்திருந்தன
கட்டடங்கள் முளைத்த வெளியெங்கும் இறந்துவிட்ட
மரவுடல்கள் தழைக்க வழியற்றிருந்தன
தருக்களைக் கொன்றுவிட்டு கருமுகில்கள் திரளுமெனக்
காத்திருக்கிறது பைத்தியக்காரப் பேருலகு.

http://www.vikatan.com

3m

Link to comment
Share on other sites

நீரும் நீர்சார்ந்த இடமும்! - கவிதை

முத்துக்குமார் இருளப்பன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

84p1.jpg

டவர் காது திருகினால்
சூடான தண்ணீரும்
பெண்டிர் காது திருகினால்
குளிர்ந்த தண்ணீரும் தரும்
அதிசயத் தெருக்குழாய் அது

தாகம் தீர்க்க வந்த காக்கைக்கு
துள்ளலாக உதட்டு முத்தம் கொடுக்கிறது

நீண்டு செல்லும் குடங்களின் வரிசையில் புதியதாகத் தென்பட்ட
தண்ணீர்க் கேன்களைக் கருதி
பெண்டிர் இடுப்பு குறித்தான
கவலையில் மூழ்குகிறது

குடத்துக்கும் கேனுக்குமான
கொள்ளளவுக்காக
செல்லம்மா கிழவிக்கும் லதா சித்திக்குமான தலைமுடிச் சண்டையை WWE ஆட்டம் போல ரசிக்கிறது.

உபரிநீர் வழித்தடத்தை
துண்டுஓடு கொண்டு முருங்கைக்கு மடை மாற்றியத்தில் பெருமிதம் கொள்கிறது

மணல் திருடர்களின் ராஜங்கத்தில்
எம்-சாண்ட் கொழுக்கட்டை தின்று
லிட்டருக்குப் பத்து ரூபாய் கொடுக்க அர்த்தமாகிறது

சமீபத்திய காது திருகுதலில்
வந்த பெருமூச்சில்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்வுகளுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

யானை 2.0 - கவிதை

 
 

ஆத்மார்த்தி - ஓவியம்: செந்தில்

 

96p1.jpg

நெடுஞ்சாலையில்
ஒரு யானை மெதுவாக ஊர்ந்து வந்தது.
அதன் மேல் பாகன் உருவில்
ஒரு வைக்கோல் பொம்மை இருந்தது.
பொம்மையைப் பாகன் என்றே யானை நம்பிற்று.
அதற்குப் புரிகிறாற்போல அது பாகனல்ல பொம்மை என
யாராலும் அதனிடம் சொல்ல முடியவில்லை.
யானையின் உடல்மீது அவ்வப்போது
பொம்மைக் கரங்களோடு பிணைத்திருக்கும் அங்குசம் உரசுமாறு ஏற்பாடாகியிருந்தது.
அந்த நெடிய சாலையில் சந்திக்கிற ஒவ்வொருவர் முன்பும் நின்று துதிக்கையை நீட்டிக் காசு கேட்டது.
காசை என்ன செய்கிறது என்று அதைத் தருபவர் ஆவலாதியில் உற்று நோக்கினர்.
பொம்மையின் வலதுகரத்திற்குப் பதிலாக ஒரு எலக்ட்ரானிக் உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது.
காசு பத்திரமாக அதனுள் சேர்ப்பிக்கப்பட்டது.
யானை ஆசி வழங்கிவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தது.
`இதென்ன நியாயம்’ எனக் கேட்ட பக்தரிடம்
இப்படிச் சொன்னதாம் அசரீரிக் கடவுள்
“யானை என்று தன்னை அறியாத யானைக்குப் போதும் போதும்
வைக்கோல் பாகனும் முதுகில் உரசும் அங்குசமும்.”

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

மயக்கத்தின் ஆலோலம் - கவிதை

கவிதை: வெய்யில்

 

நீ நெற்றியில் இட்டிருக்கும்
வெண்புள்ளி - அது
ஒரு மானினுடையது, சினையாயிருக்கிறது
அதன் வயிற்று சிறு ரத்தத் துண்டம் நான்
புல்லின் நறுஇதழ்கள் நீ

p62a.jpg

கீழ் இமையில் நீ வளைத்திருக்கும்
கருமை
முரட்டுப் பன்றியின் வண்ணம்
அதன் நெஞ்சில் பாய்ந்திருக்கும் முள் நான்
சுற்றிலும் உன் ஞாபகத்தின் சீழ்

உன் நாசியின் சிறு பள்ளத்தில் குந்தியிருக்கும்
கல்லின் நீலம் - அது
நூற்றாண்டு ஆமையொன்றின் கனவாலானது
தொல்மீனின் எலும்புக்கூட்டுள் பூத்த
கடற்தாமரை நான் - அதைச்
சிதைத்து நடனமிடும் கொடுங்கயலின் வால் நீ

தலைசுற்றிக் கவிழ்ந்த அரளிப்பூவென
உன் இடுப்புப் பாவாடையின் பித்த மஞ்சள்
இன்னும் பிறக்காத
பிரபஞ்சத்தின் வானத்துக்கு உரியது - அதில்
இதய வடிவில் மிதந்து கனலும் எரிகற்கள் நான்
விழுங்கக் காத்திருக்கும் கருந்துளைகள்
என் உன் காமம்

உன் உதட்டுக்கு எழுதிய சிவப்பு
கருணை பெருகும் ஆந்தையின் செங்கண்கள்
கொடுங்கோலரசின் பலிபீட வண்ணம்
நானிப்போது
காட்டில் அழுகும் மிருக வாடை, தண்ணென்ற மழை
பிணந்தின்னிப் புள் உன் ப்ரியம்
தாபமோ சக்கரவாகம்

நீண்ட நம் கலவிப்பொழுதுகளின் கண்ணீரில் நீந்தி
முடிவற்ற உன் அடிவானத்துக்குத் துடுப்பு வலிக்கிறேன்
இது மயக்கத்தில் யாரோ பாடும் ஆலோலம்

ஆழியே.. அடிவானே... ஆலோலமே...

http://www.vikatan.com

10m

Link to comment
Share on other sites

வெயில் - கவிதை

கவிதை: இயற்கைசிவம், படம்: எம்.விஜயகுமார்

 

1.
மரத்தினடியில் முளைத்து
சாயங்காலம் வரையிலும்
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன
வெயில் எழுப்பிய
நிலத்தின் கண்கள்.

2.
இலைகள் றெக்கைகள்
ஒவ்வொன்றினடியிலும்
ஓடிவந்து பதுங்கிக்கொண்டது நிழல்.
தற்போது
மரத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது
வெயில்.

p96a.jpg

3.
ஆடி
அசைந்து
மிதந்து
பூமி சேர்ந்து
அத்தனையழகாய்
மரணத்தை வாழ்கிறது
சருகொன்று.

4.
குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து
வெயிலைப் பரிகசிக்கிறது
ஒரு குயிலிருள்
ஒரு காகயிருள்
ஒரு ரெட்டைவாலிருள்.

5.
மிகுந்த கணத்துடன்
பின்தொடரவேண்டியிருக்கிறது வெயிலுக்கு
ஒரு மூன்று சக்கர வண்டியின் பின்னே,
கைவிடப்பட்ட ஒரு முதியவளின் பின்னே,
சிக்னலில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருக்கும்
கால்களின் பின்னே.

6.
அப்படி ஓர் அடர்த்தியாய்ப்
பொழிந்த வெயிலை
அலைந்து திரிந்து சேகரித்து
அடுப்பினுள் மூட்டிய விறகில்
ஊதிவிடும் அம்மாவின் முத்தம்
ஒருபோதும்
காந்தியதில்லை எங்களுக்கு.

http://www.vikatan.com

10m

Link to comment
Share on other sites

 

கைவிடுதல்
6.jpg
உன்னைக் கைவிட வேண்டுமென்றால்
உன்னைப் பற்றிய இல்லாத ஓர் அவதூறை
நம்பியாக வேண்டும்
உன் தரப்பு நியாயத்தை சகட்டுமேனிக்கு
ஏளனப்படுத்த வேண்டும்
இன்னும் கீழ்த்தரமாய் இறங்கி
சில அத்தியாயங்கள் படைக்க வேண்டும்
என் மீதான நம்பகத்தன்மையை
உன்னிடமிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்
உன்னைக் கைவிடுதல் என்பது
அத்தனை எளிதான ஒன்றல்ல
ஆயினும் நான் உன்னிடமும்
நீ என்னிடமும்
மாயையைப் போலாகும் வரை விடுவதாயில்லை
கைவிடுதல் எனும் ஓர் அத்தியாயத்தை.

www.kungumam.co.

Link to comment
Share on other sites

மன இரைச்சல் - கவிதை

கவிதை: ராகவ்.மகேஷ், படம்: எம்.விஜயகுமார்

 

மூன்றாம் எண் நடைமேடையில்
குழந்தை இடுப்பில் வைத்து கனத்த பையைத்
தூக்காமல் தூக்கிச் செல்லும்
அவளைத் தெரிகிறதா?

p81a.jpg

அலைபேசித் தொடுதிரையைப்
பயத்தோடு பார்த்து பவ்யமாகப் பதிலளித்து
மௌனம் சுமக்கிறாள்

விடுமுறை வெயிலில் வியர்வைப் பிசுக்கோடு
அடம் செய்யும் குழந்தையை அடித்துவிடாமல்
பொறுமை பூக்கிறாள்

அம்மாவின் தயிர்சாதப் பொட்டலம்
வராத பசியை வரவழைத்துக்கொண்டிருக்க
பிஸ்கட் பாக்கெட் பிரித்து
குழந்தைக்கு நீட்டுகிறாள்

சோழன் விரைவு வண்டி
மூன்றாவது பிளாட்பாரத்தினுள் நுழைவதாக வரும் 
பெண்குரலை கவனத்தில் கொள்கிறாள்

ஆயுட்கால அவஸ்தையோடு 
மாதாந்தர அவஸ்தையும் சேர்ந்துகொள்ள
முன்பதிவற்ற பெட்டியைத் தேடியபடி நகர்கிறாள்

அவளது ஆழ்மனதின் இரைச்சலை
ரயில் பெரும் சத்தமாக மொழிபெயர்த்தபடி
வந்து நிற்கிறது!

http://www.vikatan.com

10m

Link to comment
Share on other sites

காந்தியம் - கவிதை

கவிதை: இசை

ஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில் 
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்....

p789a.jpg

உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்

http://www.vikatan.com

17m

Link to comment
Share on other sites

காலத்தில்

5.jpg
பெயரிட்டழைத்து தலைகுனிந்து தேடிய பின்
நீ தோளுக்குமேலே உயர்ந்து நிற்பது,
ஆடையகத்தில் சிறுமியுடையைத் தேர்ந்த பின்
நீ என் ஆடையை அணிந்து சென்றது,
அம்மாவென்ற மழலைக்
குரலொன்றில் திரும்பியபின்
நீ கல்லூரிக்குச் சென்றிருப்பது,
குழந்தைப்பாடல் ஒலிக்கச் செய்தபின்
நீ எட் ஷீரனை விரும்பிக் கேட்பது,
பூனைக்குட்டியின் காணொளியைக்
காண அழைத்தபின்
நீ டிராகனுடன்
வேற்றுக்கிரகம் பயணித்திருப்பது,
இப்படியே கரடிபொம்மையை
பரிசளித்த பின்,
சாக்லேட்டை பகிர்ந்துகொள்ள
விரும்பிய பின்,
உறக்கத்தில் அணைத்துக்கொள்ள
துளாவிய பின்
என வெவ்வேறு சமயங்களில்
சற்றே தாமதமாகவேனும் நினைவு வருகிறது
சேயாய் நீ பிறந்த அதே நாளில்
தாயாய்ப் பிறந்த எனைவிட்டு
கால மழையில் நீ மட்டும் வளர்ந்திருப்பது
எத்தனை முயற்சித்தும் நினைவு வருகிறதில்லை
அது எந்தத் துளியில் நிகழ்ந்ததென்பது.

www.kungumam.co

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அவ்வளவும் நாம் - கவிதை

 

மாரிசெல்வராஜ் - ஓவியம்: ஸ்யாம்

 

வ்வளவும் நாம்.
நான் யாரென்ற சிந்தனையில்
நானிருக்கும் போதெல்லாம்
அநேகமாக என் அப்பா
ஓர் ஆட்டுக்குட்டியோடுதான் விளையாடிக்கொண்டிருப்பார்
ஆட்டுக்குட்டியின் கேள்விகளை நான் கேட்பேன்
மேய்ப்பனின் பதில்களை அவர் சொல்வார்

அப்பா நாம் யார்
நாம் நொண்டிபெருமாளின் வாரிசுகள்
அப்பா அதற்குமுன் நாம் யார்
கிழவன் பரியேறும்பெருமாளின் வாரிசுகள்
அப்பா அதற்குமுன் நாம் யார்
சம்போரையன் ஐயரின் உழவர்கள்
அப்பா உழவனாவதற்கு முன் நாம் யாராக இருந்தோம்
உழவனாவதற்கு முன் நாம் நிலமாக இருந்தோம்
வயல் வரப்பு வாய்க்கால் பறவைக்கூட்டமெனவும் நாமே இருந்தோம்
காடாக இருந்த நினைவும் பல கனவுகளில் உண்டு
நதியாகக் கடல் வந்தடைந்த வழித்தடமும் பாடத்தில் உண்டு
மொத்தத்தில் நாம் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தோம்
போதுமா என் மகனே

80p1.jpg

இதுமட்டும்தானா அப்பா அப்படியெனில்
நாம் அரசனாக இருந்த நினைவில்லையா உனக்கு
வாள் வீரம் போர் மகுடம் கோபுரமென
செங்கோல் ஏந்தி நாம் வாழ்ந்த கதையில்லையா உன்னிடம்
அப்படியொரு கதை  நிச்சயமாய் இருந்திருக்கும்
மன்னித்துக்கொள் மகனே
பேராசைகளை பெருந்துரோகங்களை
ஆண்ட பெருமைகளை
அடக்கிய உயிர்களைச் சொல்லும் கதைகளை
நாம் நினைவில் வைத்துக்கொள்ளவே கூடாது மகனே
அப்படியெனில் அப்பா
நாம் அரசனாக இருந்தோமென்ற நினைவு உன் நெஞ்சை நிமிர்த்தவேயில்லையா
நிச்சயமாக இல்லை மகனே
நாம் எல்லாமுமாக இருந்தோமென்ற நினைவே என்னை
இந்த ஆட்டுக்குட்டியோடு விளையாடச் சொல்கிறது

சரி அப்பா
இந்த ஆட்டுக்குட்டிக்கு நாம் இப்போது யார்
எஜமானர்களாக இருக்கலாம்
தோல் வியாபாரிகளாக இருக்கலாம்
இறைச்சிக் கடைக்காரராக இருக்கலாம்
மேய்ப்பர்களாக இருக்கலாம்
சக வழிப்போக்கர்களாகவும் இருக்கலாம்
இன்னொரு ஆட்டுகுட்டியாகவும் இருக்கலாம்
ஆனால், சரியான பதில் நம்மிடத்தில் இல்லை மகனே
அது அந்த ஆட்டுகுட்டியின் கண்களில் இருக்கிறது
போதும் அப்பா இப்போது சொல்லுங்கள்
நான் யார்
நீ என் விதை
நீங்கள் இல்லாமல் நான் யார்
என் பயிர்களின் நிலம்
விளையாடாதீர்கள் அப்பா இன்னொருவருக்கு நாம் யார்
இன்னொருவருக்கு நாம் இன்னொருவர்
ஐயோ அப்பா
அவ்வளவுதானா நாம்
ஐயோ மகனே
அவ்வளவும் நாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.